தலையங்கம் அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடுவண் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் ‘எம்.டெக்’ எனும் மேல் பட்டப் படிப்புக்கான இரண்டு வகுப்புகளை பா.ஜ.க. ஆட்சி மூடிவிட முடிவு செய்துவிட்டது. காரணம், நிதிப் பற்றாக் குறையல்ல; நிர்வாகக் காரணம் அல்ல; அல்லது இந்தப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற காரணம் அல்ல. இடஒதுக்கீடு என்ற கொள்கையைக் காரணம் காட்டி இந்த வகுப்புகளை நிறுத்தி வைத்திருப்பதுதான் கொடுமை. குழந்தை யாருக்கு சொந்தம் என்று இரண்டு பெண்களிடையே ஏற்பட்ட மோதலில் குழந்தையை வெட்டி இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுங்கள் என்று ஒரு பெண் கோரிக்கை வைத்ததாக ஒரு கதை உண்டு. உண்மையான தாயாக பெற்ற மகளின் மீது பாசம் கொண்டவராக இருந்திருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். குழந்தையை இரண்டாக வெட்டி பங்கு போடச் சொன்ன பெண்ணின் மனநிலைக்கும் நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்த முடிவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கல்விச் சொத்து....