தேவர்கள் அய்ந்து கண்டங்களில் இல்லாதது ஏன்?

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்கு கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர் கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்கள் வரம் ஏதும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டா னார்கள் ? எப்படி உண்டானார்கள் ? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள் ? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.

அதுபோலவே, தேவர்கள் யார் ? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள் ? ஏன் வந்தார்கள் ? உலகிற்கு அவர்களால் என்ன பயன் என்பதற்கு ஆதாரமும் கிடையாது.

இவர்கள் எல்லாம் இமயமலைக்கு இப்புறம்தான் அதாவது, ‘இந்தியக் கண்டம்’ என்னும் பிரதேசத்தில் இருந்தார்களே ஒழிய, மற்றபடி இந்தியாவிற்கு அப்பாற்பட்ட மற்ற அய்ந்து கண்டங் களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்ததாகவோ சரியான தகவல்களைக் காணோம்.

குடிஅரசு – 20.09.1947

பெரியார் முழக்கம் 21012021 இதழ்

You may also like...