Author: admin

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை! 0

தலையங்கம்-மனிதனுக்கு கீழோ-மேலோ எந்த ஜாதியும் இல்லை!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது 0

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது

நீதித் துறை ஜாதிய மயமாகியிருக்கிறது என்று பெரியார் நீதிமன்றத்திலே வாக்குமூலம் அளித்தார். ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’யாக செயல்படும் நீதித் துறையால் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களில் தலித், ஆதிவாசிகளே அதிகம் என்பதை விளக்கி, ‘தமிழ்’ இந்து நாளேட்டில் 23.7.2015 அன்று சமஸ் எழுதிய கட்டுரை இது. ஆட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப் படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள்! – 1957இல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை. ‘இந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள்’ என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறி பார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய...

0

நீடாமங்கலம் சுப்பிரமனியம் சந்திப்பு

திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீடாமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள செய்தியறிந்து 26-7-2015 அன்று காலை அவர்து இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். அவருடன் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் இரா. காளிதாஸ், கோவில்வெண்ணி தோழர் செந்தமிழன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

0

கிருட்டிணகிரி – காமராசர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருஷ்ணகிரி கொத்தபேட்டா நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோருவதை...

0

மன்னார்குடி காவேரிப் பாதுகாப்பு கருத்தரங்கம்

25-7-2015 சனிக்கிழமை அன்று மாலை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக மன்னார்குடி சிட்டி ஹாலைல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமனின் தலைமையில் காவேரிப் படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாரன், தமிழர் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர். சுந்தரராசன், கூடங்குளம் அணுவுலைப் போராட்டக் குழு முகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

0

முனைவர் பொன்னியின் செல்வம் சந்திப்பு.

26-7-2015 அன்று காலை 11 மணியளவில், பெரியாரியல் சிந்தனையாளரும், அழுத்தமான திராவிட இயக்கப் பற்றாளரும், ஏரளமான விருதுகள், பரிசுகள் பெற்ற சிறந்த பாவலருமான முனைவர் பொன்னியின் செல்வன் அவர்களை தஞ்சாவூர், அம்மன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். குடிஅரசு இதழின் உள்ளடக்க தொகுப்பு பற்றியும், அவரது இலக்கியப் பணிகள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினர். அவருடன் பெரியாரியல் சிந்தனையாளர்கள் தஞ்சை பசு.கவுதமன், குப்பு.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர். முனைவர் பொன்னியின் செல்வன் அவர்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ இதழின் 2-5-1925 இதழில் இருந்து இறுதி இதழான 5-11-1949 வரையிலான அனைத்து இதழ்களிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள், அதன் ஆசிரியர், வந்துள்ள பக்கம், என்ன செய்தி குறித்து என்ற விவரங்களை நான்காண்டு காலம் கடுமையாக உழைத்து தொகுத்த பெரும்பணியைச் செய்த மாண்பாளர் ஆவார்.

0

“பெரியாரியல் பேரொளி” தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்ட கால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “ பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின்...

0

மரணதண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்க – பொது செயலாளர் விடுதலை இராஜேந்திரன் கோரிக்கை

”யாகூப் மேனனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்து தண்டனை குறைப்பு வழங்க வேண்டும்.” – திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளி நாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேனன் தானாக முன் வந்து தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை என தானாகவே முன் வந்தவருக்கு விசாரணியின் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் யாகூப் மேனனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக தற்போது அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பிக்கொண்டுள்ள நிலையிலும்,பல நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்துவிட்ட நிலையிலும் மனித...

0

கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும்!

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத் தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்தின்போது இந்தியா வாக் கெடுப்பைப் புறக்கணித்து, பாலஸ்தீனர் களுக்கு துரோகம் செய்துள்ளது. அதே துரோகத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசை வற்புறுத்துகிறோம். அய்.நா. சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் நடக்கும் கையெழுத்து இயக்கங்களை கழகத் தோழர்கள் தீவிரப்படுத்திட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

0

தலைமை அறிக்கை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் !

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும். ஜூலை 29 – ஈரோடு (தெற்கு – ஈரோடு ( வடக்கு ; ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்; ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு – சேலம் ( கிழக்கு ; ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்; ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி; ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்; ஆகஸ்டு 13 – நாகை...

0

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை!

செம்மரக் கடத்தல் தொடர்பாக – ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்குவதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் ம்காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார் 0

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார்

உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய ‘குடி அரசு’ பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம். இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள். எப்படி என்றால், ‘தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்’ என்பதாகக் கேட்டார்களாம். மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம். ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் முறையில் திரு. காந்தியவர்கள்...

தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 0

தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும். ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 –...

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள் 0

தலையங்கம்-‘புண்ணிய’ முழுக்குகளில் பலியாகும் அப்பாவி உயிர்கள்

மதத்தை மக்களிடம் நிலைநிறுத்துவதற்கு மதவாதிகள் உருவாக்கிய சடங்குகள், அதன் மீது திணிக்கப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் சிந்தனைகளை முடக்கிப் போட்டு விட்டன. இந்த நம்பிக்கைகள்தான் மக்களை விழாக்களில் இலட்சக்கணக்கில் கூடுவதற்கு தூண்டுகின்றன. பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லாதபோது அப்பாவி பக்தர்கள் உயிர்ப்பலியாகி விடுகிறார்கள். காதைக் கிழிக்கும் அளவுக்கு மதங்களையும் அதன் மீதான அரசியலையும் நீட்டி முழங்கிக் கொண்டிருப்பவர்கள், மத உணர்வில் வீழ்ந்துபட்ட பக்தர்கள் இப்படி உயிர்ப்பலியாகும் போது வாயை இறுக மூடிக் கொண்டுவிடுகிறார்கள். மதத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, அப்பாவி மக்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகிவிட்டது.ஆந்திராவில் கோதாவரியாற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் முழுக்குப் போட வந்த மக்களில் 29 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர செய்தி அண்மையில் வெளி வந்திருக்கிறது. இந்த ‘புண்ணிய முழுக்குப்போடும் விழாவுக்கு கட்டுக்கடங்காத வகையில் கூட்டத்தைக் கூட்டச் செய்ததில் சாமியார்களுக்கு ஜோதிடர்களுக்கு...

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! 0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. – செயலவைத் தீர்மானம் பெரியார் முழக்கம் 23072015 இதழ்

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்! 0

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!

தர்மபுரி செயலவையில் ஜாதி எதிர்ப்பு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி பரப்புரை இயக்கத்தைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. தீர்மான விவரம்: தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத் துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராளமயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத் தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது.தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கப்படு கின்றன. பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது....

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள் 0

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட – மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது.தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது.ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்...

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை 0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக்கூட்டம்

கழகத்தின் செயலவைக்கூட்டம் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆரம்ப உரை நிகழ்த்திய கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் தோழர்கள் பேசவேண்டிய கருத்துக்கள்,இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேசினார். தொடர்ந்து கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை செயலவையின் முன் வைத்தனர். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளையும், எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளையும் தோழர்கள் எடுத்துரைத்தனர். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் செயலவையில்...

0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழக செயலவை தீர்மானங்கள் !

19.07.2015 அன்று தர்மபுரியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. தீர்மானம் எண் 2 : காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்! தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள்...

0

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். ஈரோடு இரத்தினசாமி – அமைப்புச் செயலாளர் திருப்பூர் துரைசாமி – பொருளாளர் பால். பிரபாகரன் – பரப்புரை செயலாளர் கோபி. இராம.இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர் தபசி. குமரன் – தலைமைக் கழகச் செயலாளர்

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

அசைவ உணவுக்கு அனுமதித்து பூஜைகளை தடை செய்யும் அய்.அய்.டி.கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகின்றன.- ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு அப்ப, அய்.அய்.டி.களை இந்து அறநிலையத் துறை அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்து, ஓர் அவசர சட்டம் போட்டுடுங்க. கோயில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை எதிர்த்து இராம. கோபாலன் போராட்டம். – செய்தி புரோகிதர்கள் ‘தட்சணை’ வாங்குவதையும் இதுல சேர்த்துக்குங்க… பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.- பா.ஜ.க. தலைவர் தமிழிசை இது என்ன பிரமாதம்! நாளைக்கே அன்புமணிதான் முதல்வர்ன்னு அறிவியுங்கள்; ஓடி வந்துடுவாங்க. முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கட்சிகள், பிற அமைப்புகள் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. – செய்தி ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான ‘ராஷ்டிரிய மஞ்சின்’ நடத்திய நோன்பு திறப்பில் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்றார்களே, அநேகமாக அந்த நிகழ்ச்சியில்தான் இப்படிப் பேசியிருப்பாங்கபோல! உப்பிலியப்பன் கோயிலில் உரிய மரியாதை தரவில்லை என்று தரிசனம் செய்யாமல் வெளியேறிய வானமாமலை ஜீயரிடம் அதிகாரிகள் மன்னிப்பு....

0

Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor Lorem ipsum dolor

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம்

”திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்கு கழக தலைமையின் அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு, வணக்கம், எதிர்வரும் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம். – கையொப்பம்- கொளத்தூர் மணி, (தலைவர்) விடுதலை ராசேந்திரன்,(பொதுச்செயலாளர்)

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து எழும்பூர் இக்சாவில் கூட்டம்

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம், சென்னை, சார்பாக எழும்பூர் இக்சாவில் 13.07.2015 அன்று மாலை 5 மணியளவில் அரங்க கூட்டம் நடைபெற்றது. பேரசிரியர் வீ.அரசு, தோழர் செல்வி, கவின் மலர், தோழர் தியாகு, கழகப் பொது செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவாக தோழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

0

வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்ம்

ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்கு 13.07.2015 திங்கட்கிழமை அன்று மாலை 05.30 மணியளவில் ஈரோடு,பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்க தோழர் கண.குறிஞ்சி அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். இக்கண்டன கருத்தரங்கில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் தோழர்.முத்தரசன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி. தோழர்.இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை. தோழர்.குமரேசன்,தீக்கதிர் நாளிதழ் உள்ளிட்ட தோழமைக் கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டு ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கழகத்தின் சார்பில் கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! 03-07-15 திருச்சி மாவட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தின் சாா்பாக கோகுல்ராஜ் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியோர் – புதிய தமிழகம் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளா் வாழையூா் குணா.மாவட்டச் செயலாளா் அய்யப்பன்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் தமிழாதன்.எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநிலப் பேச்சாளர் சம்சுதீன். பெரியார் பெருந்தொண்டர் திருச்சி எஸ்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் திவிக தோழர் ஆரோக்கியசாமி. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – திருச்சி விஜி, திவிக, திவிக மாவட்ட செயலாளர் கந்தவேல்குமார், திவிக மாவட்ட அமைப்பாளர்கள் புதியவன்.மனோகரன்.குணா.திருவரங்க பகுதி செயலாளர் அசோக்.வழக்கறிஞா் சந்துரு.பழனி. பாரத்.சரத்,முருகானந்தம்.குளித்தலை சத்யா, கரூர் மோகன் தாஸ் மற்றும் கழக தோழா்கள் கலந்துக் கொண்டனா். நன்றியுரை தோழர் சந்துரு, வழக்கறிஞர்

0

இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும். 2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக...

0

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு! நாள் : 01.07.2015 புதன்கிழமை காலை 11 மணி. இடம் : காவல்துறை தலைமை அலுவலகம், காமராஜர் சாலை,மெரீனா கடற்கரை அருகில்,சென்னை.4 தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதீய வன்கொடுமை,ஜாதி வெறிப் படுகொலைகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினர் வாழும் மாவட்டங்களில் அதே ஜாதியை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும், நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நேர்மையாகவும்,விரைவாகவும் நடக்கும் பொருட்டு வழக்கை சி..பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.)அவர்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாளை 01.07.2015 அன்று காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 7299230363 தோழர் உமாபதி மாவட்ட செயலாளர்,சென்னை.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த ஓவியர் சந்திரசேகர் (எ) சேகர் கடந்த 1.7.2015 அன்று உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் முடிவெய்தினார். இவருக்கு வயது (54). மேட்டூரில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு, வளர்ந்து வந்த நிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கழகம் வளர்வதற்கு இவரின் சுவரெழுத்தும், தட்டி விளம்பரமும் முழு வீச்சாக அன்று இருந்தது. குறிப்பாக கடவுள் கதைகள், வேதங்களில் வரும் கடவுள் தொடர்பான கடவுள் கதைகளுக்கேற்ப கார்ட்டூன்கள் வரைவதில் திறமையானவர். அந்த காலகட்டங்களில் இவர் வரையும் கடவுள் கார்ட்டூன்கள் அடங்கிய தட்டி பிரச்சாரம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பரபரப்பை உண்டாக்கும். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், தமிழ் பிரபா, தமிழ் நிலா என்ற இரு மகள்களும் உண்டு. கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கழகச் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

எப்போதும் கருஞ்சட்டையுடன் காட்சியளிக்கும் உழைக்கும் தோழர் மதுரை கைவண்டி கருப்பு (75), 12.7.2015 அன்று காலை முடிவெய்தினார். திராவிடர் கழகத்தில் தொடங்கி, திராவிடர் விடுதலைக் கழகம் வரை பெரியார் தொண்டராகவே வாழ்ந்தவர். அவர் பொள்ளாச்சியில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சுமை இழுக்கும் கைவண்டியுடன் உழைத்ததால் கைவண்டி கருப்பு என்று பெரியாரால் அழைக்கப்பட்டவர். கழக நிகழ்ச்சிகளில் தமது துணைவியாரோடு பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் மதுரை மஞ்சள்மேடு குடியிருப்பில் தனது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன் 0

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன்

‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனை களுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடை போட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க் சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா? ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் – “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் – அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது...

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

இந்து ‘கலாச்சாரம்’ திணித்த பெண்ணடிமை பண்பாடுகளில் ஒன்று வயதுவந்துவிட்ட பெண்களுக்காக நடத்தப்படும்‘பூப்பெய்தும்’ விழா என்பதாகும். ஒரு பெண் வயதுக்குரிய பருவத்தை எட்டுவது, இயல்பாக ஏற்படும் உடலியல் மாற்றம். இதை ஏன் ஊருக்கு அறிவிக்கும் விழாக்களாக நடத்த வேண்டும்? இதேபோல் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் நடத்து வது இல்லை? சென்னையில் பல பகுதிகளில் இதற்காக பெண்ணின் படத்தோடு விளம்பரப் பதாகைகள்கூட வைக்கப்படுகின்றன. புவனேசுவரி என்ற மென்பொருள் பொறியாளர், தனது மகள் பூப்பெய்தும் விழாவை சடங்குகளாக மாற்றாமல், அறிவியல் நிகழ்வாக மாற்றி நடத்தியிருக்கிறார். மகப்பேறு மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர், உளவியல் மருத்துவர் களை அழைத்து, அறிவியல் விளக்கம் தரும் நிகழ்ச்சியாக அதை மாற்றியமைத்துள்ளார். “எனக்கு இது போன்று நிகழ்ந்தபோது என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் உளரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து என் அய்யங்களுக்கு எவரும் விடை தரவில்லை. இந்த நிலை என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதாகவே, இளம் பெண்களும்,...

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்து, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளே மத்திய காங்கிரஸ் ஆட்சி, அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை வாங்கியது. வழக்கு மாநிலம் தொடர்பானது என்பதால் கலந்தாலோசனைக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.மத்திய அரசோ கலந்தாலோசனை என்றாலே மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்று வாதிடுகிறது. இரண்டும் ஒன்று என்றால், இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளை சட்டம் உள்ளடக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியை தோழர் தியாகு எழுப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ஜூலை 18இல் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கு குறித்த விளக்கங்களை முன் வைக்கிறது இந்த கட்டுரை. திருப்பெரும்புதூரில் கடந்த 1991 மே 21ஆம் நாள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், இது தொடர்பான கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததும், உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்து, மூவருக்குத்...

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மக்களிடையே சமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருக்கிறதா என்பதே முக்கிய கேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூக சமுத்துவம் தான் – பெரியாரின் இலட்சியம். பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்ற கொள்கையின் அடிநாதமே அனைத்து சமூகப் பிரிவினரையும் சமப்படுத்துவது தான். இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு,வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள். இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து – செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதேபோல்...

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்த ஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒரு பாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்த பவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தந்த...

0

தலைமை அறிக்கை

அன்பு தோழருக்கு, வணக்கம் எதிர்வரும் 19.07.2015 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், செயல்திட்டங்கள், கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்  மேலும், அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு, எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தில் பகுதி /ஒன்றிய, கிளைக் கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது, எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம் தலைமை கழகம்

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...