தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு
சென்னை : எது திராவிடம்? எது சனாதனம்? முதல் தெருமுனைக் கூட்டம், ஜுலை 10, மாலை 5 மணிக்கு மடிப்பாக்கத்தில் நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டாவது கூட்டம் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மூன்றாவது கூட்டம் 11.07.2023 அன்று மாலை 5 மணிக்கு நங்கநல்லூரில் எட்வின் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் பறை இசைக்க கூட்டம் தொடங்கியது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்த...