மீண்டும் மீண்டும் கொட்டு வாங்கும் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதற்கு எதிராகவும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுப்பதை எதிர்த்தும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழ்நாடு அரசு அனுப்பிய 12 மசோதாக்களும் சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறதா? எதனால் ஒப்புதல் அளிக்கவில்லை” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, “‘துணைவேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிட்டு அதனை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். எனவே வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்” என்றனர். அப்போது...