பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே
நிலவுடைமைக்கு எதிரான போராட்டத்தின் வழியாகவே ஜாதியமைப்பை தகர்க்க முடியும் என்று மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நில உரிமையை ஜாதியமைப்பே கட்டமைத்திருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலை பொருளியல் பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் கூறினார். தமிழகத்தில் ஜாதிக்கும் நிலவுரிமைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியவர் ஜெரோம். சென்னை திருவான்மியூரில் பனுவல் நூலக அரங்கில் ‘புதிய தமிழ் ஆய்வுகள்’ என்ற அமைப்பின் நிகழ்வில் ஆக°டு 21ஆம் தேதி மாலை அவர் இது குறித்து விரிவான ஆய்வுரையை முன் வைத்தார். ஒருவரிடம் நிலம் இல்லை என்பதற்கான காரணமாக அவரது வறுமை சொல்லப்படுகிறது. அது உண்மையானால், பார்ப்பனர், வேளாளர் ஜாதி சமூகம் மட்டுமே நிலவுடைமை யாளர்களாக எப்படி மாற முடிந்தது? உண்மையில் வறுமை காரணமாக நில உரிமை கிடைக்காமல் போக வில்லை. நிலஉரிமை மறுக்கப்பட்டதால்தான் பார்ப்பன-வெள்ளாளர் அல்லாத மக்கள் குறிப்பாக...
