Author: admin

நினைவிருக்கிறதா?   திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

நினைவிருக்கிறதா? திராவிடக் கட்சிகளை வீழ்த்த யாகம் நடத்திய பா.ஜ.க.

‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஊர்தோறும் சுவர்களில் எழுதி, திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்று சூளுரைத்த பா.ஜ.க. தான் இப்போது அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் எடப்பாடி நல்லாட்சியையும் ‘தேசபக்த’ மோடி ஆட்சியையும் கொண்டு வருவோம் என்று பேசி வருகிறது. 2018 ஜனவரி 26, 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து இந்து சாம்ராஜ்யம் அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பார்ப்பன புரோகிதர்களை வைத்து யாகம் நடத்தியது பா.ஜ.க. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள ஏ.பி.டி. பள்ளி வளாகத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தகரப் பந்தல் அமைத்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 300 பார்ப்பனப் புரோகிதர்கள் வேதம் ஓத நடத்தப்பட்டது அந்த யாகம். இராமாயணத்தில் – இராமன் செய்த யாகத்துக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் யாகம்  இதுதான் என்றார்கள், யாகம் நடத்திய பா.ஜ.க.வினர், காஞ்சி இளைய சங்கராச்சாரி...

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!

இந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர் களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டுவரவேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத்துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார் ராம்தேவ் அமர வைக்கப்பட் டுள்ளார்.  ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது. சூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும்  நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன. முக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில்...

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. அறிவியல் – மோடி ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று  கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். நாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார். அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க...

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உரைக்குப் பின்  திராவிடர் விடுதலைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர்  இராவண கோபால், திண்டிவனம் நகர...

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “சமூகநீதிப் போரில் பெரியார்” என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களைப் பற்றியும் twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர்மணி “சமூகநீதிப் போரில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்கு பெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்...

தமிழகத்தின் அவமானச் சின்னம் எச்.ராஜா – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அவமானச் சின்னம் எச்.ராஜா – மு.க.ஸ்டாலின்

பெரியாரை அவமதிப்பு – மதப் பதட்டங்களை உருவாக்கும் வகையில் அடாவடித்தனமாக செயல்பட்டு வரும் எச். ராஜா, தமிழகத்தின் அவமானச் சின்னம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியா விலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரைத் தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ்ச் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை...

பி.எட். தேர்வு: ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் அநீதி

பி.எட். தேர்வு: ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாபெரும் அநீதி

பட்டதாரி ஆசிரியர் பயிற்சியான ‘பி.எட்.’ வகுப்பில் சேர்வதற்கான தகுதி தமிழ்நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ‘ஆசிரியருக்கான தேர்வு’க்கான மதிப்பெண் தகுதிகளை இப்போது திடீர் என மாற்றி அமைத்திருக்கிறது. திறந்த போட்டியினருக்கு 50 சதவீதம்; பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்த முஸ்லிம்களுக்கு 45 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 43 சதவீதம்; பட்டியலினப் பிரிவு, அருந்ததியினருக்கு 40 சதவீதம் என்று மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்த மதிப்பெண் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென்று அடிப்படை மதிப்பெண் தகுதியை முன்னறிவிப்பு ஏதுமின்றி விண்ணப்படிவங்களில் உயர்த்தி அறிவித்தது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்ற திடீர் அறிவிப்பால் ஏற்கெனவே இந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள்...

உலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல்காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்

உலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல்காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 25 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 உதவியாக வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் இராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். இது நிறைவேற்ற முடியாத திட்டம், அரசியலுக்கான அறிவிப்பு என்று பா.ஜ.க. விமர்சனம் செய்கிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன், இத்திட்டம் நிறைவேற்றக் கூடியதே என்று கூறுகிறார். இத்திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பல மாதங்களாகவே பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளி வந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு பொருளாதார ஆய்வாளர் தாமஸ் பிக்கட்டி இத்திட்டத்தை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்குத் தாம் உதவியதாக இப்போது கூறியிருக்கிறார். ‘தி பிரிண்ட்’ இணைய தள பத்திரிகை, கடந்த புதன்கிழமை இந்த செய்தியைத் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே இத் திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. பிக்கட்டி இத்திட்டத்துக்கு தனது அழுத்தமான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்தியாவில் படித்த ஆளும் வர்க்கம்...

இயக்குநர்கள் – படைப்பாளிகள்  103 பேர் கூட்டறிக்கை தேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும்  பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்!

இயக்குநர்கள் – படைப்பாளிகள் 103 பேர் கூட்டறிக்கை தேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்!

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் தயவுசெய்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்று, இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்கநர்கள், படைப்பாளிகள், 103 பேர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, விவசாயிகளைக் கண்டு கொள்ளாதது, நாட்டையே சில பெரும் முதலாளிகள் கையில் ஒப்படைத்தது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்களை ஒழிப்பது, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது, பொய்யான தகவல்களைப் பரப்புவது போன்ற பாஜகவின் நடவடிக்கைகள் நாட்டை மிக மோசமான ஆபத்தை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபீர் சிங் சவுத்ரி, சணல்குமார் சசிதரன், ஆஷிக் அபு, வெற்றி மாறன், ரஞ்சித், கோபி நயினார், லீனா மணி மேகலை, திவ்யபாரதி, அஜயன் பாலா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “நம்...

மோடி-அம்பானி-அதானி கூட்டு களவாணிகள்

மோடி அரசாங்கம் பெரும் கார்ப்பரேட்டு களுடன் சேர்ந்து கூட்டு களவாணி முதலாளித்துவம் அமலாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று! குறிப்பாக தனது வெளிநாடு பயணங்களின் பொழுது அதானிக்கும், அனில் அம்பானிக்கும் இலாபம் கொழிக்கும் பல ஒப்பந்தங்களை மோடி நேரடியாகவே உருவாக்கித் தந்தார். அதன் விவரங்கள்:   இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைக்கான ஆதாரங்கள்: புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ்கள் ‘பிரண்ட் லைன்’ னுளைஅயவேடைiபே ஐனேயை – ஹ குடிரச லுநயச சுரடந ‘தி வொயர்’ ‘தி பிரின்ட்’ ‘மோடி மாயை’ – சவுக்கு சங்கர் அ. மார்க்ஸ் இணைய கட்டுரைகள் எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ‘கேரவான்’ ஆங்கில நாளேடுகள் – இணையங்கள் நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்

பாதுகாப்புத் துறையிலும் படுதோல்விகள்

பிப் 19, 2019 – The HIndu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர் ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்: நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) எனும் இளைஞன் பாக் தீவிரவாதி அல்ல. அவன் உள்ளூர் காஷ்மீரி. பயன்படுத்தப்பட்ட வாகனமும் உள்ளூர் வாகனமே. காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் இந்திய அரசு, இராணுவம் ஆகியவற்றின் மீதான வெறுப்பு இன்று அதிகரித் துள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் இந்த அந்நியப் படல் அதிகரித்துள்ளது கவனத்துக்குரியது. காங்கிரஸ் ஆட்சியின்போது 2013ல் உள்ளூர் இளைஞர்களில் வெறும் 6 பேர்கள் மட்டுமே தீவிரவாதப் பாதையை நோக்கிச் சென்றனர். அடுத்த நான்காண்டுகளில், அதாவது 2018ல் இந்த எண்ணிக்கை 200 ஐ எட்டியது. நரேந்திர மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த இந்த நாலரை ஆண்டுகளில் தாக்குதல் நிறுத்த...

கவிஞர் பழனி பாரதி – பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா!

  விவசாயிகளுக்கு ‘வாய்க்கரிசி’ போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு ‘சவத்துணி’ நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு ‘நெற்றிக்காசு’ வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரைக் கொன்று கொன்று ‘மனிதக்கறி’ உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் ‘கோவணத்தைப் பிடுங்கி’ இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் புதிய இந்தியா மருத்துவமனைகளில் ‘மழலைகளின் மூச்சறுத்து’ வீடுகளில் ‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் புதிய இந்தியா மாநிலக் கல்வி உரிமை பறித்து சமூகநீதி புத்தகம் ‘கிழித்து’ உலக மூலதனத்துக்கு விசிறி விடுவதுதான் புதிய இந்தியா பெண்களின் ‘தீட்டுத்துணிக்கும்’ வரிவிதித்து பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் புதிய இந்தியா செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா. நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்

சிந்தனையாளர்கள் மீது பாய்ந்த அடக்குமுறைகள்

புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். பேஷ்வா அரசை எதிர்த்து தலித் படை ஒன்று வெற்றிபெற்றதைக் கொண்டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி சென்ற ஜூன் 2018இல் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்...

மோடியின் ஆணவமும் – ஜெட்லியின் திறமையின்மையும்

பொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார். தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன அருண்ஜேட்லிக்கு நிதித்துறை மட்டுமின்றி மேலும் மூன்று துறைகளின் பொறுப்பை (ஆக மொத்தம் 4 துறைகள்) அளித்த கடுப்பில் சின்ஹா இதை எல்லாம பேசியபோதும் அவர் வைத்த விமர்சனங்கள் முற்றிலும் சரியானவை. பொருளாதாரம் போன்ற முக்கியமான துறையின் அமைச்சருக்கு மேலும் இரண்டு மூன்று துறைகளின் பொறுப்பை அளிப்பது என்பதெல்லாம் மோடியின் எதேசாதிகாரத் தன்மைக்கு மட்டுமல்லாமல் திறமை இன்மைக்கும் சான்றாக அமைந்தது. மோடி அரசின் திறமை...

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது ஜூலை 2010இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில், இந்தக் கொலையின் மூளையாகச் செயல்பட்டவர் அமித் ஷா என்று குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே இவ்வழக்கின் புலனாய்வு நடந்து கொண்டிருந்தபோது,சாட்சிகளைக் கலைக்க அமித் ஷா மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணையை குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2012இல் இவ்வழக்கை மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றியது. மே 2014இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். ஓரிரு மாதங்களில் அமித் ஷா பா.ஜ.க. தலைவரானார். அதன் பின் இந்த வழக்கு தலைகீழ் மாற்றங்களைக் கண்டது. அமித் ஷா மீதான வழக்கை ஜேடி உத்பத் என்ற நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஒருமுறைகூட அமித் ஷா ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் எப்போதும் அமித் ஷாவுக்கு...

காலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை

மோடி ஆட்சி பல இலட்சம் காலியாக உள்ள பதவிகளை நிரப்பவே இல்லை. அரசு தந்த புள்ளி விவரங்களே இதை ஒப்புக் கொள்கின்றன. மருத்துவ சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (All India Institute of Medical Science), உயர் கல்வி நிறுவனங்களில் 4089 புதிய பதவிகள் உருவாக்க அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், போபால், புவனே சுவர், ஜோக்பூர், பாட்னா, ரெய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கழகங்களில் 20,221 பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பணி இடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சுகாதார நலத் துறை அறிக்கை கூறுகிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் விரிவுரையாளர்கள் உள்பட 17,092 பதவிகளை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நிரப்பப்பட்ட இடங்கள் 5606 மட்டும்தான். 2018 ஏப்ரலில் மனித வளத்...

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள்

தமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்களுக்கு வாரி கொடுத்ததை மறக்க முடியுமா? 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பேர் தமிழர் களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே. (6 சதவீதம்) பீகார் – இராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் தேர்வாணையத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்து தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்காரர்களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? – இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2014ஆம் ஆண்டு மத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் பெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே இரத்து செய்யப்பட்டது. அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை...

மத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சுகள்

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் மோடி அமைச்சர்களின் விஷம் கக்கும் பேச்சுகளின் ஒரு தொகுப்பு. மகேஷ் ஷர்மா 2015ஆம் ஆண்டில், இந்தியா டுடே தொலைக் காட்சியுடனான ஒரு நேர்காணலின் போது, மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிப் பேசும்போது, “முஸ்லிமாக இருந்தபோதும்” அவர் ஒரு “சிறந்த மனிதர்” என்றும், “தேசியவாதி” என்றும், “மனித நேயமுள்ளவர்” என்றும் சொன்னார். அப்பட்டமான இந்த இனவாதக் கருத்தைச் சொன்னபோதும் – அதுவும் இந்தியா மிகவும் நேசிக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்களில் ஒருவருக்கு எதிராகச் சொன்னபோதும் – பதவி நீக்கம் செய்யப் படுவது இருக்கட்டும், அரசில் இடம்பெற்றுள்ள மூத்த தலைவர்களால் அவர் கண்டிக்கப்படக்கூட இல்லை. அனந்த் குமார் ஹெக்டே 2016ஆம் ஆண்டில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான மத்திய அமைச்சர், அனந்த் குமார் ஹெக்டே, “உலகில் இஸ்லாம் இருக்கும் வரையில், தீவிரவாதம் இருக்கும். இஸ்லாம் மதத்தை...

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு....

சயின்ஸ் காங்கிரசா? சர்க்கஸ் கூடாராமா?

அறிவியலுக்கு எதிராக பிரதமர் மோடியிலிருந்து அவரது அமைச்சர்கள் சகாக்கள் வரை உளறிக் கொட்டிய நகைச்சுவை வெடிகள் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தின. அறிவியலாளர்கள் அதிர்ந்து போனார்கள். அரசு அமைப்பான ‘சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாட் டிலேயே பேசப்பட்ட இந்த உளறல்களைக் கண்டு ஆத்திரமடைந்த நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன், இனி இத்தகைய மாநாட்டில் பங்கேற்கவே போவதில்லை. சயின்ஸ் காங்கிரசில் சர்க்கஸ் காட்டுகிறார்கள் என்று கூறினார். பம்பாயில் கூடிய ‘அறிவியல் காங்கிரஸ்’ மாநாட்டில் பேசிய மோடி வேத காலத்திலே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நம்மிடமிருந்தது. அதற்கு சான்று விநாயகன். மனித உடலோடு யானைத் தலையை ஒட்ட வைத்து நடந்த சிகிச்சை அது என்றார். உலகம் முழுதும் பல பத்திரிகைகள் மோடியை கேலி செய்து கட்டுரைகளையும் கார்ட்டூன்களையும் வெளியிட்டன. வேத காலத்திலே கண்டம் விட்டு கண்டம் பாயும் போர் விமானங்கள் நம்மிடம் இருந்தன. இராவணன் 38 விமானத் தளங்களை வைத்திருந்தான். கவுரவர்கள்...

கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி

மாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங்களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி அரங்கேற்றியது. கடந்த 2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக் களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. இந்த திருத்தங்களில் ஒன்று – வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே...

ஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம்

ஊழல் அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரும் ஆயுதமாகத் திகழ்வது 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சி செயல்பட் டிருக்கிறது. ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆண்டு படித்தால் எவரும் பட்டம் பெறலாம். எத்தனை பேர் இப்படிப் பட்டம் பெற்றார்கள் என்ற தகவல் – தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே எளிதாகக் கிடைத்துதான் வந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஓர் அதிசயம் நடந்தது; அது என்ன தெரியுமா? 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதாக மோடி நாடாளுமன்றத்தில் போட்டி யிடுவதற்கான வேட்பு மனுவில் குறிப்பிட் டிருந்தார். அவர் 1978இல் பட்டம் வாங்கியது உண்மையா? என்பதை அறிய அந்த ஆண்டு டெல்லி...

தலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்

தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப்படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது. பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்கு பதிலாக 2014-15ஆம் ஆண்டுக்கு 8.79 சதவீதம்; 2015-16இல் 6.63 சதவீதமும், 2016-17இல் 7.06 சதவீதமும், 2016-17இல் 8.91 சதவீதமும், 2017-18இல் 6.55 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மிகக் குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியும்கூட பட்டியலினப் பிரிவினருக்கு நேரடியாகப் பயன்தரக் கூடிய திட்டங்களுக்கு செலவிடப்பட வில்லை. ஏற்கனவே அமுல்படுத்தி வரும் பட்டியல் இனப் பிரிவினருக்கான நல்வாழ்வுத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதியும் மோடி ஆட்சியில் கணிசமாக வெட்டப்பட்டது. தனித்தனியாக நேரடி பயன்தரக்கூடிய திட்டத்துக்கான...

இந்தியா இனி ‘இந்தி’யா?

2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரை களுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும் விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத் தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும்....

மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் யார்?

மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் மிகப் பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்  உயர்ஜாதி இந்துக்கள் தான். அது குறித்த சில விவரங்களைப் பார்ப்போம்: மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்துவர்களோ, தலித்துகளோ அல்ல. அத்தனை பேரும் ‘இந்து’க்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அதிகமாக தேர்தல் நிதி கொடுத்தவர்களும் இவர்கள்தான். இதோ மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பட்டியல்: ஆண்டுதோறும் 19,30,000 டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து உலக மாட்டிறைச்சி ஏற்றுமதி சந்தையில் 16 சதவீத இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் நிற்கிறது. அல்கபீர்  எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்: இந்தியாவிலேயே அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் அந்த கம்பெனியின் பெயர் மட்டும்தான் முஸ்லிம் அடையாளம். இதை நடத்தும் முதலாளி சதீஷ்சபேர்வால் என்ற இந்து. தெலுங்கானா மாநிலத்தில் ருத்ராக் எனும் கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் இவரது இறைச்சி...

‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்

பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு. கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர்...

அரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்!

மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான அய்.அய்.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர, தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக, குஜராத்தி மாநில மொழிக்கு மட்டும் தனிச் சலுகை அளித்து தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசின் வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களுக்கான உரிமைகளை பறிக்கும் கொல்லைப்புற முயற்சிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் கழகம் தமிழ்நாட்டுக்கான வேலை வாய்ப்புகளில் தமிழ் எழுதப் படிக்கவே தெரியாதவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு பெற்று இரண்டாண்டுகளில் தமிழ் கற்றால் போதும் என்று அறிவித்திருக்கிறது. இதற்காக விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நேபாளம், பூட்டான் ஆகிய வெளி நாட்டினரும் தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணைய அறிவிப்பு கூறுகிறது என்றால், தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் எதிர்காலம் எக்கேடு கெட்டால் என்ன என்றே ஆட்சியாளர்கள் கருதுகிறார்களா? ‘நீட்’ தேர்வின் வழியாக தமிழக உரிமைகள் பாதிக்கப்பட்டது போன்ற அதே செயல்பாடுகள் தேர்வாணைய அறிவிப்பிலும்...

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு புறந்தள்ளப்பட்டது

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்பட வில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை. 24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும்...

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இழந்த 4.7 கோடி பேர்: அதிர வைக்கும் தரவுகள்!

தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் இந்த ஆய்வானது 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.  இந்தத் தரவுகள் 2018ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலைவாய்ப்பு தொடர்பான இந்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிரவைத்துள்ளது. 1993-94ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் முதன்முறையாக வேலை செய்யும் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந் துள்ளதாக  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.  தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை (ஞநசiடினiஉ டுயbடிரச குடிசஉந ளுரசஎநல) குறித்த தரவுகளை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் ஆய்வு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம். 2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடியாகக்...

மக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு!

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 80 விழுக்காடு பணத்தை மதிப்பழிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் செல்லாதவையாக்கப்பட்டன. புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது சாமானியர்களுக்கும், நடுத்தர  குடும்பத்தினருக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம். சாதாரண மளிகைச் செலவுகளுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நாள் கணக்காக நிற்க வேண்டியிருந்தது. சிறு தொழில்கள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப் பட்டது. சிறு தொழில்களால் நிரம்பி வழியும் கோவை யும், திருப்பூரும் கடும் பாதிப்புக்குள்ளானது. இப்பகுதி களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலர் தொழிலை விட்டு வெளியேறி தினக்கூலிகளாக மாறினர். ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தவர்கள் உயிரிழந்த பரிதாபத்தையும் கண்டோம்.  விவசாயத் துறை பணமில்லாமல் தடுமாறியது....

சிறு தொழில்களை முடக்கியஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வர முயற்சித்தபோது அதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க.வும், மோடியும் பிறகு, அதிகாரத்துக்கு வந்த பிறகு தீவிரமாக அமுல்படுத்தினார்கள். அதனால் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்த பாதிப்புகளை சரி செய்வதாகக் கூறுகிறது. ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை ஜி.எஸ்.டி. வரியை அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம்....

கஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சிதைந்தது. மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். விவசாயிகளின் உற்பத்தி பாழானது. இந்தத் துயரிலிருந்து முழுமையாக மீண்டு வர டெல்டா மாவட்டங்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஆனது. உலக நாடுகளின் தலைவர் கூட தமிழக டெல்டா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த நாட்டின் பிரதமர் மோடியோ தமிழகத்தின் பக்கம் அப்போது எட்டிப்பார்க்கவும் இல்லை, ஆறுதல் சொல்லி ஒரு அறிக்கையும் விடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் பிரச்சாரத்துக்காக மதுரை, திருப்பூர், சென்னை மற்றும் திருநெல்வேலி என 4 முறை வந்துவிட்டார். இன்னும் 2ஆம் கட்ட பிரச்சாரத்துக்கும் தமிழகம் வர திட்டமிட் டிருக்கிறார். ஓட்டுக்கு கேட்க வரத் தெரிந்த மோடிக்கு, தமிழக மக்கள் துயரத்தில் இருந்த போது வரத்தான் மனம் இல்லை...

அனிதாவின் உயிர்பறித்த ‘நீட்’

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித்  தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த  மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு. 2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம். ‘ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண்...

மோடியின் வீண்விரயச் செலவுகள்

மோடியின் வீண்விரயச் செலவுகள்

அய்ந்தாண்டுகளில் (1825 நாட்களில்) மோடி மேற்கொண்ட பயண நாள் : வெளிநாட்டுப் பயணம் : 192 நாட்கள் உள்நாட்டுப் பயணம் : 389 நாட்கள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை – வெளிநாட்டுப் பயணம் ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை உள்நாடு / வெளிநாட்டுப் பயணம் பயணச் செலவு : ரூ.2021 கோடி வெளிநாட்டுப் பயணங்கள் பெரும்பான்மையாக – ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்றுள்ளார் (அப்போது இந்தியாவில் கடும் கோடை) வெளிநாட்டுப் பயணங்களில், உடன் வெளியுறவு அமைச்சர் செல்வதில்லை. மாறாக, அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் சென்றுள்ளார்கள். மோடி அரசின் ஊதாரித்தனமான விளம்பரம், பயணம், திட்டச் செலவுகள் 90000 கோடி புல்லட் விரைவு இரயில் 4800 கோடி விளம்பரச் செலவு 3600 கோடி சிவாஜி சிலை 2989 கோடி பட்டேல் சிலை 202 கோடி மோடி பயணச்செலவு 4200 கோடி கும்பமேளா செலவு 7304 கோடி கங்கையை சுத்தம் செய்த...

தன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்த மோடி

தேர்தல் ஆணையம் சி.பி.அய். – திட்டக்  குழு – உச்சநீதிமன்றம் என்ற அரசியல் சட்டம் அங்கீகரித்த தன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்தது மோடியின் ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சி – அவற்றின் அடையாளங்களை அழித்தது – தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது – இந்திய வரலாற்றில் இதற்கு முன் இதுபோன்ற சீர்குலைவு எப்போதும் நடந்தது இல்லை. திட்டக்குழு – நிதிஅயோக்காக மாற்றப்பட்டது இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களுக்கு அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கவும் அது குறித்து சுதந்திரமான விவாதங்கள் உரையாடல்களுக்கு வழி வகுக்கும் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். அரசின் தலையீடுஇல்லாத சுயேட்சை அமைப்பாக செயல்பட்டு வந்தது. மோடி பிரதமர் பதவியேற்று 2014ஆம் ஆண்டு அவரது ‘முதல் சுதந்திர நாள்’ உரையில் திட்டக்குழு ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய நிறுவனம்’ (National Institution for Transforming...

அய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்

மோடியின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனிய சர்வாதிகாரத்தையே கட்டவிழ்த்துவிட்டது. மீண்டும் வேதகாலம் திரும்பி விட்டதாகவே பார்ப்பனியம் பூரித்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கமும் – அதன் வழி வந்த ‘திராவிட அரசியலும்’ உருவாக்கிய உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. தமிழ்நாடா? வடநாடா? என்று வியக்க வைக்கும் நிலைக்கு அனைத்து துறைகளிலும் வடநாட்டார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் அதிகாரம் பெற்றவர்களாக்கப்பட்டனர். பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசக் கூடிய துணிவைப் பார்ப்பனர்கள் பெற்றனர். நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, வாழ்வுரிமையைக் குலைக்கும் நச்சுத் திட்டங்கள் திணிப்பு என்று அடுக்கடுக்கான படையெடுப்புகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தனது பொம்மலாட்ட ‘வலையத்துக்குள்’ கொண்டு வந்தது. ஆளும் கட்சியை உடைப்பது; இணைப்பது; மிரட்டுவது என அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தியது. கருத்துரிமைகள் நசுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமூக செயல்பாட்டாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக மதவெறி...

‘இராமனை’ எரித்தத் தீயம்மா…!

அன்பின் அடைக்கலமே தூய ஆற்றலின் பிறப்பிடமே மாதர் போற்றும் மங்கையரான மாசில்லாத மணியம்மையே மங்கையர் உலகமே நூற்றாண்டின் திலகமே மதித்திடும் பெண்மையே மணியான அம்மையே  – அன்பின் சிறுவயதிலே தொண்டுகள் செய்யும் தொண்டராகவே நீயானாய் சிறுபிள்ளையாக ஈவேராவை கண்போல் காத்துத் தாயானாய் ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டு எல்லோர் நலனும் நீ காத்தாய் எளிய உடையில் பவனி வந்துநீ பகுத்தறிவினிலே நீ பூத்தாய் – மங்கையர் உலகமே ஈவேராவின் ஆயுட்காலத்தை நீட்டித்தவளும் நீயம்மா நீடில்லாத தியாகச் சுடராய் ஈகை அளித்த தாயம்மா இராவணலீலா நிகழ்விலேயே இராமனை எரித்தத் தீயம்மா இராவும் பகலும் இயக்கப் பணியை இணைந்து செய்த மணியம்மா – மங்கையர் உலகமே சுயமரியாதைப் பிரச்சாரத்தை சுற்றிச் சுற்றி செய்தவளே அனைவரும் அர்ச்சக ராகஎண்ணியே மறியல் கிளர்ச்சி செய்தவளே இயக்க நூல்களை சுமந்து சென்று பல இதயத்தில் சேர்த்தவளே இந்த சமூகம் ஏற்றம்பெறவே எறும்பாய் உழைத்துக் காத்தவளே – மங்கையர் உலகமே...

வாசகர்களிடமிருந்து…

‘திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல்’ என்ற கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி சொல்ல வேண்டும். கால்டுவெல் குறித்து சுருக்கமாக அவரது ஆழமான கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரை. திராவிடம் என்பதே ஆரியக் குறியீட்டுச் சொல் தான் என்று பேசி வரும் சில தமிழ்த் தேசியர்களுக்கு வைரமுத்து கட்டுரையின் கீழ்க்கண்ட பகுதி சரியான பதிலைத் தருகிறது. “இலக்கிய இலக்கண புராண முற்கட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள் கட்ட, கால்டுவெல் மட்டுமதான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில்மெய்ப்பித்தார்” என்பது மிகச் சரியான விளக்கமாகும். – சந்தோஷ், சேலம் உயர்ஜாதியினருக்கு 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து இரா. மன்னர்மன்னன் கட்டுரை மிகச் சிறப்பு. “கடந்த 2017இல் நடைபெற்ற நீட் தேர்வுகளில் ஒரு பாடத்தில் 9 மதிப்பெண்ணுக்ககும் கீழான மதிப்பெண் பெற்ற சுமார்...

பெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்

பெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்

பெரியார் நீண்ட நெடுங்காலம் பண்பாட்டுத் தளத்திலேயே வேலை செய்தவர். அண்ணா ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் நோக்கி நகர்ந்தவர் என்பதால் அண்ணாவை விடவும் பெரியாரின் பெண்ணியப் பார்வை மிக அதிகமாகக் கவனம் பெறுகிறது. பெரியார் அளவுக்கான வெளி அண்ணாவுக்குக் கிடைக்கவில்லை என்றபோதும், கிடைத்த தளத்தில் பெண் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கத் தவறவில்லை. அக்டோபர் 10, 1950இல் இந்திய நல்லெண்ணத் தூதுக் குழு பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பின் போது தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராகவதாஸ், திராவிட நாட்டில் பார்ப்பனர்களின் நிலை  என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அண்ணா சொல்கிறார், “மனித உரிமையோடு வாழ்வார்கள்” என்று. அண்ணாவின் ஒட்டுமொத்த வாழ்வை ஒரே வரியில் அடக்க வேண்டுமானால் மேற்சொன்ன பதிலில் அடக்கலாம். தன்னளவில் முரண்பட்டு, காலமெல்லாம் தான் எதிர்த்துப் போராடும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்களும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்று நினைத்தவர் அவர். அவரது 50-வது ஆண்டு...

அண்ணா நேருக்குநேர் நடத்திய சொற்போர் ஆரிய இராமனை  ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்

அண்ணா நேருக்குநேர் நடத்திய சொற்போர் ஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்

1943, 1948ஆம் ஆண்டு “இராமாயணம், பெரியபுராணம் எரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?” எனும் தலைப்பில் நேருக்கு நேர் விவாதங்கள் நடந்தன என்ற வரலாறு – இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வாதத்தில் வென்று காட்டினார் அண்ணா. முதல் வாதப் போர் 9.2.1943 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் இந்து மத பரிபாலன வாரியத் தலைவர் என். இராமச்சந்திர செட்டியார் தலைமையில் நிகழ்ந்தது. “எரிக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில் அண்ணா மற்றும் ஈழத்தடிகளும், “எரிக்கக் கூடாது” என்ற தலைப்பில் ஆர்.பி. சேதுப் பிள்ளை மற்றும் சீனிவாசன் ஆகியோரும் வாதிட்டனர். அப்போது சட்டக் கல்லூரி, தமிழ்க் கழக அமைச்சராக இருந்து பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வேணுகோபால்தான் அன்று தலைவரை முன்மொழிந்து பேசியவர். தொடர்ந்து 14.3.1943இல் இதே தலைப்பில சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கர் பாடசாலை மண்டபத்தில் இதே விவாதப்போர் நடந்தது. இதில் அண்ணாவும் நாவலர் சோம சுந்தர பாரதியாரும்...

விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி 30.9.2018ஆம் நாளன்று திருச்செங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் தலைப்பில் ஆற்றியுள்ள உரை, நூல் வடிவம் பெற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. பெரியார் அவர்களின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்று, திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை இளைஞனாக உருவாகி, அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு. கழகத்தின் தொண்டனாக அரசியல் களம் புகுந்த கலைஞர் அவர்கள், தனது அறுபதாண்டு தொண்டறத்தை நிறைவு செய்து முடிவெய்தி யுள்ளதை நினைவுகூர்கிறது இந்த நூல். தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என அறிவித்துக் கொண்ட கலைஞர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதையும், அதனூடாக, திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுப் போக்கைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் இந்த உரையானது அமைந்துள்ளது. தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிணக்கு கொண்டு, அறிஞர் அண்ணா தலைமையில் கலைஞர்,...

இந்துத்துவ முழக்கம் தோற்கும்போது, போரை ஆயுதமாக்குவார்கள்! – எழுத்தாளர் அருந்ததிராய்

நீங்கள் புனைவுகளின் எல்லைக்குள் நிற்காமல் அரசியல் கட்டுரைகள் எழுதுவதால் தான் இந்தச் சிக்கலா? “இல்லை. ழுடின டிக ளஅயடட வாiபேள என்ற என் புத்தகத்திற்காக, ஒழுக்கத்தைக் கெடுக்கிறேன் என்று என் மீது பத்தாண்டுக்காலம் கிரிமினல் வழக்கு நடந்தது. நான்  அப்படி எதையும் திட்டமிடுவதில்லை. என்னுடைய அடுத்த நாவலில் காஷ்மீர் சிக்கலையும், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னை களையும் இணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புனைவின் எல்லைக்குள் தான் இது எளிதில் சாத்தியம். தலித்துகளையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிர்த்துக் கல்வி நிறுவனங்களுக்குள் “பிராமணிய” நடவடிக்கைகள் அதிகமாகும் இந்தச் சூழ்நிலையில், வெவ்வேறு புள்ளிகளாக இருக்கும் பிரச்னைகளை ஒப்பிட்டு இணைப்பதன் மூலம் புரிதல் மேம்படும் என நினைக்கிறேன். இரண்டு சாதிகளுக்கிடையிலோ, இரண்டு பழங்குடிகளுக்கு  இடையிலோ நடக்கிற சண்டையோ,  இந்துத்துவச் சக்திகள் தூண்டி விடும் சண்டையோ, வெறும் தண்ணீர் நெருக்கடியை மறைப்பதற்காகக்கூட இருக்கலாம். ஆகவே, புள்ளிகளை இணைத்துப் புரிந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கிறது எந்தப் பிரச்சினையையும்...

பெரியார் தொண்டை மட்டுமே முகர்ந்த பெண் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பெரியார் தொண்டை மட்டுமே முகர்ந்த பெண் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குந்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு கோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். “தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன்” என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம். அதுமட்டுமல்ல குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம் – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நம் புகழ் நாம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்....

பெரியார் காட்டிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்!

பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையார், – பெரியார் மறைவுக்குப் பிறகு, தலைவர் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் பெரியார் போட்டுத் தந்த பாதையில் சென்று முடிப்போம் என்று உறுதியேற்று கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்தனர். பெரியார் மரணத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் ‘திரும்பி வருகிறேன்’ என்று ‘விடுதலை’ ஏட்டில் விடுத்த அறிக்கை இது: என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும், என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து-விடுகிறேன். உடனே அய்யாவின் அந்தப் புன்னகை முகம் என் கண்முன் தோன்றி, “பைத்தியக்காரி, இவ்வளவுதானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்து எடுத்துச் சொல்விவந்த கருத்துகளை உன்னிடத் திலேயே காணமுடியவில்லையே! நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைப்பிடிப்பவளாய் இருக்கப் போகிறாயோ! சாதாரணப் பெண்களைப் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே!...

அன்னையார் வாழ்க்கைப் பாதை

1919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது. 1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது. 1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர். 1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ‘திராவிடர்...

ஊழலுக்கு அப்பாற்பட்டதா பா.ஜ.க.? அணிவகுக்கும் பட்டியல்கள்… ஆதாரங்களுடன்…

பா.ஜ.க., லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத உலக உத்தம கட்சி என உலகம் முழுக்க பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் கட்சியும், அவரும் ஊழலில் செய்தே திளைத்தவர்கள். பா.ஜ.க. செய்யும் ஊழலில் நாட்டின் பணம் மட்டுமல்ல, இந்த நாட்டின் சாமான்ய மக்களின் உயிரும் ஆயிரக்கணக்கில் பலியாயிருக்கிறது. அந்த ஊழல்களின் பட்டியல்களில் சில:   2003 – 40 ஏக்கர் நில மோசடி – மோடியின் குஜராத் ஊழல் : குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த போது வழங்கினார். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 2003ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பபட்டதோ அந்த பணியினை பத்தாண்டுகள் ஆகியும் தொடங்கக் கூடவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு 2008ஆம் ஆண்டில் 4.35 கோடி. ஆனால் இதில்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய 9ஆவது ஆய்வரங்கம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட 9ஆவது கூட்டம் மார்ச் 3, 2019 மாலை சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இலட்சுமணன் தலைமை தாங்க, இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அருண் – ‘சங்க காலத்தில் வைதிக ஊடுறுவல்’ எனும் தலைப்பிலும், சென்னைப் பல்கலைக் கழக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிரவீண்குமார், ‘பவுத்த தத்துவ சிந்தனையும்-கடவுள் மறுப்பும்’ என்ற தலைப்பிலும், கருந்தமிழன் கலைமதி, ‘உணர்வு-உரிமை-ஒழுக்கம்-பெரியாரியல் பார்வை’ என்னும் தலைப்பிலும், சங்கீதா, ‘பெண்களின் உரிமைகளை நோக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்’ என்ற தலைப்பிலும், நாத்திகன் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்கள்’ என்ற தலைப்பிலும், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘புல்வாமா தாக்குதல்களும் – காஷ்மீர் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பிலும், கழக தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ‘மத்திய அரசின் வேலை வாய்ப்புகளும்-மறுக்கப்படும் மாநில உரிமைகளும்’ என்ற தலைப்பிலும் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர்....

தமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா? ஒ. சுந்தரம்

மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் (Central Institute of Classical Tamil) சார்பாக, தமிழறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுக்கானத் தேர்வுக் குழுவில், உறுப்பினராக தொல்லியல் துறை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட திரு. நாகசாமியை நியமித்து இருப்பதான அறிவிப்பிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.   திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப் படுத்தி, திரிபுவாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி விருதுத் தேர்வுக் கமிட்டியில் நியமித்திருப்பதைக் கண்டிப்பதாகவும், ஒரு ஆய்வல்ல, பல்வேறு ஆய்வுகளைக் கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும் வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிப் பாரபட்சமின்றி செம்மொழி விருதுகளைத் தேர்வு செய்ய முடியும் என்றும், செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான...