Category: திவிக

கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்தில் கழகத் தலைவர் 09112017

சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா,கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார். கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த களைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலூக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்திவந்துள்ளார். இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துசென்றும் புகார் கூஊரியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலுய்ம், கடிதத்திலும், வாட்ஸ் அப்...

மக்கள் தளபதி பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலை போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப்பட்டவருமான பள்ளீகொண்டா  கிருஷ்ணசாமி அவர்கள் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அடுத்து அவரால் நிறுவப்பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிப் பள்ளீயாய் அவரது பெயரன் தோழர் மகேஷ் அவர்களால் தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டினார். மேலும் படங்களுக்கு 

தோழர் சுகுமார் படத்திறப்பு விழா 27112017 மேட்டூர்

மேட்டூர் R.S. பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சுகுமார் அவர்கள் 13.11.2017 மாலை 05.30 மணிக்கு உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார் தோழரின் இறுதி நிகழ்வு 14.11.2017 மாலை 3.00 மணிக்கு மேட்டூர் R.S.பகுதியில் உள்ள N.S.K நகரில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. தோழரின் படத்திறப்பு 27112017 அன்று அவரின் இல்லத்தில் கழகத் தலைவரால் திறந்து வைக்கப்படும்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் அம்புரோஸ் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறியாளர்.அம்புரோஸ், சாலை விபத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் அக்டோபர் 27ஆம் தேதி காலை புதுக்கோட்டையிலுள்ள அவர் இல்லம் அருகில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம், குமரி மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் நீதியரசர், முன்னாள் மாவட்ட தலைவர் சூசையப்பா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் பால்வண்ணன், மாவட்ட அமைப்பாளர் அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழ்செல்வம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலாமணி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர், ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் அருந்ததியராசு, நெல்லை கலைக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் தென்மண்டல செயலாளர் சே.சு.தமிழ் இனியன்,...

ஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாகக் குரல் தந்த ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கருத்தரங்கம் ஒன்றை ஆதித் தமிழர் பேரவை ஈரோட்டில் அக்.18ஆம் தேதி ‘தீபாவளி’ நாளில் நடத்தியது. ‘தீபாவளி’யை தமிழர்கள் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் வேண்டுகோள் விடுத்தது. சாதிவெறி, மதவெறி, ஆதிக்க தலித் வெறி, அடிப்படை மதவெறி, ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை சிதைவு, மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று, ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல்...

பெரியார் தொண்டரின் நேர்மை

தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் உள்ள 5.75 இலட்சம் பணத்தை இரயில்வே நிர்வாகத் திடம் பொய்யாமொழி என்ற கூலித் தொழிலாளி ஒப்படைத்தார். அவரின் செயலை இரயில்வே நிர்வாகம் பாராட்டியிருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ஆம் தேதி சேலம் விரைவு இரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 இலட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எழும்பூர் இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார். 10.75 இலட்சரூபாயில் 5.75 இலட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், இரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது வேறு ஒரு மர்மநபர் ஒருவர்...

அம்பேத்கர் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6-00 மணியளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர் பெரியார் நினவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியத் தோழர் அருணிடம் பயிற்சிபெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குறைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் ”இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க’” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத்தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரக்கசின் படத்தை, பள்ளீகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன் ஜீ அவர்களல் திறந்துவைக்கப் பட்டது. ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர்...

தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம்,சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், ஏற்காடு தோழர் பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழா முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ.இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண்டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். மேலும் படங்களுக்கு  

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

கருத்தரங்கம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் ! ஜோயல் பிரகாஷ் நினைவரங்கில்……….. நாள் : 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4.30 மணி. இடம் : அம்பேத்கர் திருமண மண்டபம், (S.B.I..வங்கி அருகில்), குடியாத்தம். ”அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி’அவர்களும், ”பெரியாரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘பேராசியர் புரட்சிமணி’ (தலைவர்,நீலப்புலிகள் இயக்கம்) அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள். கழக நிர்வாகிகளும்,தோழமை அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் – சுயமாக வரைந்த ஓவியம். வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில்...

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம் மதுரை 10112017

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம். நாளை மதுரையில்.. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்கள். நாள் : 10.11.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

தோழர் பாரூக் குடும்ப நிதி

தோழர் பாரூக் குடும்ப நிதி

சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு பெருமாள்பிரபாகரன் அவர்கள் பாரூக் குடும்ப நிதியாக 10.000 பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்கள்

தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017

#செய்துவிட்டது_கேரளம் #அறிவித்து_விட்டது_கர்நாடகம் #தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா? ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி. அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத...

வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

திவிக தலைவர் தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் முன்னாள் உதவியாளர், அன்பிற்கினிய தோழர்.கோகுலின் வாழ்க்கை இணையேற்பு அழைப்பிதழ்

திருப்பூரை உலுக்கிய பெரியார் பிறந்தாள் வாகன பேரணி

கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இரயில்நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவும் 02/10/2017 அன்று காலை 10 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர். காலையில் இரயில்நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது. அதன் பின் கழக கொடியசைத்து தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வாகன ஊர்வலத்தை தொடங்கி...

வடமாநிலத்துக்கு போகிறதாம்  கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

வடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது. சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி...

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ! ஈரோடு 18102017

ஆதித்தமிழர் பேரவை சார்பில்…. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தலைமை : தோழர் அதியமான், நிறுவனத்தலைவர்,ஆதித்தமிழர் பேரவை. நாள் : 18.10.2017 புதன்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : மாநகராட்சி மண்டபம், ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக  தோழர்களை சந்திக்கிறார்கள் !

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்டபயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’,‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம் : 26.10.2017 – காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு – கோபி 27.10.2017 – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017 – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017 – காலை 10.00 -நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர்...

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா சித்தோடு 01102017

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா மிக எழுச்சியாடு நடைபெற்றது.    இக்கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில், தோழர் யாழ் எழிலன் முன்னிலையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் கமலக் கண்ணன் நன்றியுரை கூறினார்.   கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்;   சித்தோடு தோழர்கள்  பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.            ...

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” 05102017

விழுப்புரத்தில் ”தமிழர் உரிமை மீட்பு மாநாடு” விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு.. நாள் : 05.10.2017 வியாழக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : நயனார்பாளையம்,தந்தை பெரியார் பள்ளி முன்பு. சிறப்புரை ; தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றவர்கள் கைது சென்னை 02102017

காந்தி தேசத்தந்தை என்று இந்திய அரசு அறிவித்தாலும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியின் காவல்துறைக்கு காந்தி ஒரு பயங்கரவாதி ஆகிவிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு – காந்தியைக் கொன்ற மதவெறி சக்திகளை எதிர்த்து முழக்கமிட்டு, மாலையிட வந்த இளைஞர்களை காவல்துறை தடுத்து கைது செய்து விட்டது. “தேசத்தந்தைக்கு இதை விட வேறு சிறந்த மரியாதையை எப்படி காட்ட முடியும்?” நாட்டின் “சுதந்திர” த்திற்கு பிறகு காந்தி சிலைக்கு அவர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க தடைவிதித்த ஒரே மாநிலம் “தமிழ்நாடு” என்ற கின்னஸ் சாதனையை தமிழக காவல்துறை உருவாக்கியிருக்கிறது. இப்படி ‘தேசபக்தியுடன்’ முடிவெடுத்த காவல்துறையினருக்கு ‘சுதந்திரதின’ விழாவிலோ, ‘குடியரசு தின’ விழாவிலோ சிறந்த சேவைக்கான வீர விருதை வழங்கி இந்தியாவின் தேசபக்தியை உலகத்துக்குக் காட்டிக் கொள்ளலாம். “காந்திக்கு ஜே” காந்தியை அவமதித்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் டபுள் “ஜே”

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரை 04102017

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரையில் மதவெறி RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி தமிழ் புலிகள் கட்சி ஆதித்தமிழர் பேரவை ஆதித்தமிழர் கட்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளந்தமிழகம் புரட்சிகர இளைஞர் கழகம் சிபிஎம்எல் உள்ளிட்ட அமைப்பு தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட ஆனையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம். நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம். : மாலை 5.00 மணி. இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம். பொதுக் கூட்டம் : நேரம் : மாலை 6.00 மணி. இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். வே.மதிமாறன், எழுத்தாளர் கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று மனூ – திருச்செங்கோடு 28092017

அரசு அலுவலகங்களில் மதப் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 28092017  நாமக்கல் மாவட்டம் சார்பாக, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மணு அளிக்கப்பட்டது  

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 26092017

அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடுவதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட திவிக கண்டன ஆர்ப்பாட்டம் 26.09.2017 புதன் மாலை 5 மணியளவில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தோழர்களை  கைதுசெய்து சத்திரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில்  15 தோழர்கள் கலந்துகொண்டனர்.. கைதான தோழர்கள் ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) சண்முகப்பிரியன் (மாவட்ட செயலாளர்) குமார் (மாவட்ட அமைப்பாளர்) திருமுருகன் (மாநகரத் தலைவர்) சத்தியராஜ் சித்தோடு கிருஷ்ணன் ரங்கம்பாளையம் எழிலன் சித்தோடு.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை செய்ய வலியுறுத்தி கண்டன் ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27092017

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர். சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் தோழர் சி. கோவிந்தராஜ் தலைமை செயற்குழு உறுப்பின் தோழர் அ.சக்திவேல், தோழர் இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் , இந்நிகழ்வில் மேட்டூர் ,ஆர் எஸ் , கேவேரி கிராஸ் , நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் தோழர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார்.

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது கோவை 26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது.. குறிப்பு: அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு...

சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது. போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இரு சக்கர வாகன ஊர்வலம் / கொடியேற்றம் 02102017 திருப்பூர்

தந்தை பெரியார் 139வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா 02102017 காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடியசைத்து பெரியார் சிலை முன்பு துவக்கி வைக்கிறார்.

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

ஈரோடு தெற்கு – சித்தோடு தெருமுனைக்கூட்டம் 01102017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வருகின்ற 01.10.2017 ஞாயிறு மாலை 7 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமை : கிருஷ்ண மூர்த்தி(ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்) சிறப்புரை: வீரா கார்த்தி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) கோபி வேலுச்சாமி (தலைமைக் கழக பேச்சாளர்) காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே எனும் மேஜிக் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது..

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் வாகன பேரணி / கொடியேற்றம் திருப்பூர் 02102017

திருப்பூர் மாவட்டம் மாநகரம் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொடியேற்று விழா மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடத்துவது சம்மந்தமாக 24092017 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் நடந்தது. அதில் 02.10.2017 அன்று நடத்த முடிவு செய்து விழா ஏற்பாடுகளை கவனிக்க முடிவெடுக்கப் பட்டது.

கழகம் களமிறங்கியது – அரசு பள்ளியில் கணபதி ஹோமம் – ஈரோடு 25092017

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு “கணபதி ஹோமம்” .. திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிப்பு.. கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மங்கையர்க்கரசி கணபதி ஹோமம் நடத்துவதாக அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் அவர்கள் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.. நிகழ்வில், இரத்தினசாமி,ராம.இளங்கோவன்,சண்முகப்பிரியன்,சிவக்குமார்,வேணுகோபால்,குமார், சத்தியராசு, சி.என்.சி சிவக்குமார், விஜயசங்கர் ஆகியோர் கலந்து...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் 139 –வது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியை சார்ந்த அபிராமிக்கும், சாதிமறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியிட்டு செயலாளர் இராம.இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு நடந்த எளிமையான நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்காண ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக்கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கீழ்வானி இந்திராநகரில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அந்தியூர் ஒன்றியம் கீழ்வானி இந்திராநகரில் அமைக்கப்பட்டு இருந்த கழக கொடிகம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கழக துண்டறிக்கைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் ஆசிரியர் மற்றும் கிளை கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூக நீதி சமத்துவ தெரு முனைக் கூட்டம் சென்னை பரப்புரை பயணக்குழு

23/09/2017   காலை 10.00 மணி   பூந்தமல்லி காலை 11.30 மணி   போரூர் மாலை 03.00 மணி இராமபுரம் மாலை 05.00 மணி  ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை   24/09/2017    காலை 10.00 மணி மேடவாக்கம் காலை 11.30 மணி   பள்ளிக்கரனை மாலை 03.00 மணி   மடிப்பாக்கம் மாலை 05.00 மணி    வேளச்சேரி   25/09/2017  காலை 10.00 மணி    வெட்டுவாங்கேணி காலை 11.30 மணி   பாலவாக்கம் மாலை 03.00 மணி   திருவான்மியூர் குளம் மாலை 05.00 மணி லெட்சுமிபுரம், திருவான்மியூர் (காந்தி சிலை)   26/09/2017    காலை 10.00 மணி அடையாறு (பி.எஸ்.என்.எல் ) காலை 11.30 மணி        டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு மாலை 03.00 மணி    திருவல்லிக்கேணி     வாகன பதிவு எண் TN 48 R 9999  Swaraj Mastha...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 17092017 கடலூர்

இந்த சமுக விடுதலைக்கான ஒரே போராளி எங்கள் அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர்  தோழர் நட.பாரதிதாசன் தலைமையில், தோழர் நட. பாபு அம்பேத்கார் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் சே.சுரேந்தர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன், ஆகியோருடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், போனா, மற்றும் எழுதுபொருட்கள், மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.!!!!! நட.பாரதி தாசன் கடலூர் மாவட்ட செயலாளர்!