Category: திவிக

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் 10022018

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவிகளின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளித்து விழா நடத்துவதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மதியம் 2.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 10.02.2018 சனிக்கிழமை. நேரம் : மதியம் 2.00 மணி. இடம் : கருப்பூர்,சேலம். சகோதரி நிவேதிதை 150 ரதயாத்திரை – 2018 எனும் பெயரில் மதவெறி காவிகள் கல்வி நிலையங்களில் நுழைவதை அனுமதிக்கலாமா?ஏற்கனவே விவேகனந்தர் பெயரை வைத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குள் நுழைந்த இந்துத்துவவாதிகள் இப்போது விவேகானந்தரின் சீடர் நிவேதிதா பெயரை கையில் எடுத்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்க்கு மற்ற மதத்தவருக்கு இப்படி வாய்ப்புகளை இவர்கள் வழங்குவார்களா? கல்வி நிலையமா?காவி நிலையமா?அதுவும் தந்தை பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ரதயாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜ.கவின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் போன்ற காவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.மத சார்பின்மையை...

கொளத்தூர் நோக்கி புனித யாத்திரை சென்ற திருப்பூர் மாவட்ட கழகம்

கொளத்தூரில் 3/2/18 அன்று நடக்கவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” என்ற கருத்தரங்கை காவல்துறை தடை விதித்த காரணத்தால் கழக தலைவர் “ஶ்ரீமத் சடகோவ இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பில் ஆன்மீக உபன்யாசம் செய்ய திட்டமிட்டார் அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட திவிக “சோடா பாட்டில் புகழ்” ஜீயரின் அருள்வாக்கை கேட்க புனித யாத்திரையை அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பினர் வண்டியில் யாத்திரையின் நோக்கத்தை குறிக்கும் வகையில் பேனர் கட்டி, பெரியார் பிஞ்சுகள் நாமம், செந்தூரம் இட்டு கையில் ஜீயரின் வன்முறை பேச்சை குறிக்கும் வகையில் காவி நிற முக்கோண கொடியில் சோடா பாட்டில் ஜீயர் பெயரோடு கொடியில் அச்சிட்டு யாத்திரை கிளம்பினர் ஆண்டாளின் பக்தர்களாக கொளத்தூரில் முன்வரிசையில் அமர்ந்து வேத உபன்யாசங்களையும் ஆன்மீக சொற்பொழிவையும் கண்டு கேட்டு ஆண்டாளின் திருவருளை பெற்றனர் நிகழ்வில் மதியம் கோமாதா பிரியாணி பூஜை செய்து உண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பினர்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் திருவெற்றியூர் 10022018

திருவெற்றியூர் பெரியார் நகரில் … வரும் சனியன்று ( 10 : 02 : 2018 ) மாலை 5 : 30 மணியளவில் …. ” வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” விளக்கப் பொதுக்கூட்டம் பெரியாரின் உழைப்பால் பலன்பெற்ற சிலர் புறக்கணித்தாலும், பலர் தான் பெற்ற பலன் உணர்ந்து கிள்ளியாவது தருகிறார்கள் . ஆனால் இன்னமும் விடியல் கிடைக்காமல் வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட வீதிக்கடை மக்கள் … தலைவன் பெரியாரின் கூட்டம் என்றவுடன் அள்ளித் தருகிறது. அவர்களின் கண்களில் தேங்கி நிற்கும் விடியல் வேட்கைக்கு இந்த கருஞ்சட்டை கூட்டம் பணி செய்து கிடப்பதையே பதிலாய் தரும் … மக்களிடையே நாம் செய்தியோடு நிற்கையில் தான் உணர்கிறோம் . எங்கள் மகத்தான தலைவர் பெரியாரின் உழைப்பையும், அது நமக்கு பெற்றுத் தரும் மரியாதையும், நம்பிக்கையையும். வாருங்கள் தோழர்களே … சூழ்ந்து வரும் மத இருளை, பெரியார் ஒளி கொண்டு விலக்குவோம் … திராவிடர்...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி_மறுப்பு_இணையோருக்கு_பாராட்டு_விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக #பேராசிரியர்_சரசுவதி #எழுத்தாளர்_மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. #ஆணவக்_கொலைகள்_சாகட்டும்…. #ஜாதி_மறுப்பு_திருமணங்கள்_வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவு அவசியம்

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக 30.01.2018 அன்று நடைபெற்ற “ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” #தமிழை_மறுக்கும்_வேதமரபுகள்கருத்தரங்கம் இராயப்பேட்டை, விஜய் திருமண மண்டபத்தில் தோழர்.அன்புதனசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார். தொடக்கமாக தோழர்.சுகுமார் (தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து தோழர்.வாலஜாவல்லவன் (மார்ச்சிய பெரியாரிய கட்சி) அவர்கள் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆண்டாள் பற்றிய தனது ஆய்வுகளையும், தமிழை மறுக்கும் வேதமரபுகள் பற்றியும், சங்கராச்சாரியின் வரலாறுகளையும் பல்வேறு கருத்துகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக முனைவர்.தோழர்.சுந்தரவள்ளி அவர்கள் பல்வேறு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார். இறுதியாக தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புத்தகத் திருவிழாவில் கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ புத்தக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா  ஜனவரி 25 முதல் பிப் 4 வரை நடக்கும் இந்நிகழ்வில்அரங்கு எண் 94இல்  திராவிடர் விடுதலைக் கழகப் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ – வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பங்கேற்கும் முதல் புத்தக திருவிழா இது என்பதோடு கழக வெளியீடுகள் மட்டுமின்றி பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்பு பிரதிகள், அங்குசம் பதிப்பகம் மற்றும் கலப்பை ஆகிய பதிப்பங்களிலிருந்தும் பல்வேறு சமூக சீர்திருத்த புத்தகங்களும் வாசகர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் மிகப் பெரிய ஆதரவு கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ இதழுக்கு இந்த புத்தக கண்காட்சியில் கிடைத்துள்ளது. 4 நாட்களுக்குள்...

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு  நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம் நாள்     :                 6.2.2018 வெள்ளிக்கிழமை நேரம்                   :                 மாலை 5.00 மணி இடம் :                 நெல்லுக்குத்தி மண்டபம் அருகில், திருச்செங்கோடு சிறப்புரை  : ஆசிரியர் சிவகாமி டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்) கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர்க் கழகம், நாமக்கல் மாவட்டம் பெரியார் முழக்கம் 02022018 இதழ்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சரத்பிரபு உடல் பிரத பரிசோதனை முடிந்து தில்லியிலிருந்து 18.1.2018 இரவு 11 மணிக்கு திருப்பூரில் அவரின் இல்லத்தை வந்தடைந்தது.  மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, வடசென்னை மாவட்ட  செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் 10 பேர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் காலை 7 மணிக்கு இடுவம்பாளையம் இடுகாடு சென்று இறுதியஞ்சலி செலுத்த திட்டமிட்டு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களோடு மருத்துவர் சரத்பிரபு அவர்களின் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலையே என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு இதன் மீதான மேற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தினர். தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, இளந்தமிழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு எட்டு மணிக்கு...

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

கழக சார்பில் திருப்பூரில் ஜன.14 அன்று காலை 8 மணி முதல் மாலை வரை, வீரபாண்டிப் பிரிவு பெரியார் திடலில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆடிட்டர் பழனிச்சாமி பொங்கல் வழங்கி தொடங்கி வைத்தார். 9 மணியளவில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமுதம் இரா. கணேசன் தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் பரிசளிப்பு விழா பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர். பங்கேற்றோர் : முகில்ராசு (மாவட்டத் தலைவர்), மு. ரவிச்சந்திரன் (மாவட்ட பொருளாளர்), சு. நீதிராசன் (மாவட்ட செயலாளர்), க. அகிலன் (மாவட்ட அமைப்பாளர்), வி. தனபால் (மாநகர தலைவர்), சி. மாதவன் (மாநகர செயலாளர், த.சங்கிதா (மாவட்ட அமைப்பாளர்), மா. இராம சாமி (தெற்கு பகுதி செயலாளர்), அ.க. கருணாநிதி (வடக்குப் பகுதி செயலாளர்), சு. முத்துக்குமார்...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : தோழர் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக பேராசிரியர்.சரசுவதி எழுத்தாளர்.மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. ஆணவக் கொலைகள் சாகட்டும்…. ஜாதி மறுப்பு திருமணங்கள் வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவுக்கு… தொடர்புக்கு : 7299230363/8056460580

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு செய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 26-01-2018 மாலை 4.00 மணி இடம்: மேட்டூர் பேருந்து நிலையம்      எதிரில், தலைமை: தோழர் கு.சூரியகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தி.வி.க. முன்னிலை: தோழர் செ.மார்ட்டின், மேட்டூர் நகர தலைவர் தோழர் காவை ஈசுவரன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கண்டன உரை: தோழர் அ.சக்திவேல், செயற்குழு உறுப்பினர் தி.வி.க. தோழர் டைகர் பாலன், மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம், சேலம் மேற்கு மாவட்டம்.

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு திருச்சி 25012018

இன்று (25.01.2018) பிற்பகல் 3 மணிக்கு திருச்சியில். ‘தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு !’ ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில்… கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நாள் : 25.01.2018 வியாழக்கிழமை. நேரம் : பிற்பகல் 3 மணி இடம் : டி.எம்.எஸ்.எஸ். அரங்கம்,ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகில்,தொடர்வண்டி சந்திப்பு,திருச்சி. தோழமை அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் ! நிகழ்ச்சி ஏற்பாடு : சி.பி.எம்.எல்.(மக்கள் விடுதலை).

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

திவிக சார்பில் நாளை உருவ பொம்மை எரிப்பு… தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத, தமிழை நீசபாஷை என்கிற பார்ப்பன கும்பலின் குட்டித்தலைவன் விஜயேந்திரன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது…! நேரம்:மாலை-4.00 மணி, இடம்:பள்ளிபாளையம். நாமக்கல் மாவட்டம்.   செய்தி – வைரவேல்

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

          காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் ! நாளை (25.01.2018) திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து…. #காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்… நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு… இடம்: பெரியார் சிலை எதிரில், சங்கர மடம், காஞ்சிபுரம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து.. தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு… #முற்றுகைப்_போராட்டம்… பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! சேலம் 28012018

‘பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! நாள் : 28.01.2018.ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 05.30 மணி. இடம் : ஹோட்டல் வசந்தம்,புதிய பேருந்து நிலையம் எதிரில்,சேலம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நூல் திறனாய்வுச் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

மக்களை திரட்டுவோம் மக்கள் விரோதிகளை விரட்டுவோம் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.1.18 காலை 11 மணி புதூர் பேருந்து நிலையம் திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை

ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும் “ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம். இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்) நாள்: 03022018 மாலை 6 மணி ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ? கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார். ” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் . இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது...

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

டெல்லியில் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறவனத்தின் சாதிய வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட…. திருப்பூர் சரத் பிரபுவுக்கு நீதிகேட்டு திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் வருகிற புதன்கிழமை (24-01-2018) ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கேட்டதற்கு காவல் துறை மறுப்பு. நிகழ்வின் சிறப்பு யாதெனில், சரத் பிரபு கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்… அவருக்கு நீதிகேட்க போகிறவர்கள் திராவிடர் விடுதலைக் கழகம். ஆதித்தமிழர் பேரவை. விடுதலைச் சிறுத்தைகள். மா.வைரவேல் மாவட்ட அமைப்பாளர். திவிக. விரைவில் நீதிமன்ற அனுமதியோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

மதவெறியை தூண்டும் எச் ராஜாவை கைது செய்யக்கோரி புகார் மனு பள்ளிபாளையம் 19012018

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி, மத ,கலவரங்களை தூண்டும் விதமாகவும் கவிஞர் வைரமுத்தை தரகுரைவாகபேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 19-01-2018

புகார் மனு, உருவ பொம்மை எரிப்பு – மதுரை திவிக

ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக “சேரி பிஹேவியர்” என்றும் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை தரம் தாழ்ந்தும் விமர்சித்த நித்யானந்த பீட பெண்களையும் அவர்களை தூண்டிவிடுகிற நித்யானந்தாவையும்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் தொடர்ச்சியாக மத கலவரங்களை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் திராவிடர் விடுதலைக் கழம் ஒருங்கிணைப்பில் மதுரை காவல் ஆணையாளரிடம் 19012018 புகார் அளிக்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் தமிழ்புலிகள் குறிஞ்சியர் விடுதலை பேரவை தபெதிக DYfi உள்ளிட்ட இயக்கங்கள் பங்கு பெற்றன இன்று 20012018  காலை 11 மணி அளவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் நித்யானந்தா, எச்.ராஜா ,நயினார் நாகேந்திரன் உருவ பொம்மை எரிப்பு . தலித் மக்களை இழிவு படுத்தியும் கலைஞர் ,திருமாவளவன் ,சீமான், கனிமொழி, ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கிற நித்யானந்தா...

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! 21012018

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு டெல்லியில் படுகொலையை (மர்ம மரணம்) கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெறுகிறது. நாள் : 21.01.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நேரம் : மாலை 3 மணி இடம் : மத்திய கைலாஸ், சென்னை. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணம் தொடர்கதையாகிவிட்டது. சென்ற ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் படித்த திருப்பூரை சேர்ந்த மருத்துவர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டு மருத்துவர் சரத் பிரபு. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், தொடரும் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டியும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து #தமிழ்நாடு_மாணவர்_கழகம்நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363/9688310621

தோழர் சுகாதேவி – கணேசமூர்த்தி வாழ்க்கை இணையேற்பு விழா ! விருதுநகர் 21012018

தோழர் சுகாதேவி – கணேசமூர்த்தி வாழ்க்கை இணையேற்பு விழா ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நடத்தி வைக்கிறார் ! நாள் : 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10 மணி. இடம் : அய்யனார் வதனா திருமண மண்டபம், பாண்டியன் நகர் விருதுநகர். வாழ்த்துரை : தோழர் சிவகாமி, தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள். —————————————————————– வரவேற்பு விழா ! நாள் : 23.01.2018 செவ்வாய்க்கிழமை, நேரம் : காலை 11 மணி. இடம் : பொனமலை அம்பேத்கர் இரயில்வே மண்டபம்,திருச்சி. வாழ்த்துரை : தோழர் உமாபதி,தோழர் அய்யனார் (கழக தலைமைக்குழு உறுப்பினர்கள்) மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்.

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் 22012018

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் படம் அகற்றப்பட்டத்தை கண்டித்து போராடிய மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள்,பகுஜன் சமாஜ் கட்சி,தமுமுக தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! நாள் : 22.01.2018 திங்கட்கிழமை நேரம் : காலை 10.00 மணி. இடம் : பெரியார் தூண் காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.

மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு – புத்தக வெளியீடு சென்னை 17012018

திவிக பொதுச்செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் வெளியிட தோழர் திருமுருகன் காந்தி பெற்றுக்கொள்ள இயக்கத்தோழர்கள் ஆதரவுடன் எளிமையான நூல் வெளியீடு விழா 17012018 அன்று ,”மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு” சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது எழுத்தாளர் – தோழர் அன்பு தனசேகர் மொத்த பக்கங்கள் – 40 நன்கொடை – 25

தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய சங் பரிவாரின் சதி வரலாறு – கன்னட மொழியில் வெளியீடு

கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய “சங் பரிவாரின் சதி வரலாறு” என்ற தமிழ் புத்தகம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, “சன்சுகாரா சங்க பரிவாரா” என்ற பெயரில் வருகிற 20.1.2018 அன்று சனிக்கிழமை பெங்களுரில் உள்ள கன்னட பவனில் இருக்கும் நயன சபாங்கணத்தில் : புத்தக வெளியிடு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடுபவர் : திரு B K ஹரிபிரசாத் , மக்களவை உறுப்பினர், புது தில்லி தலைமை: பேராசிரியர் DR. K மருளு சித்தப்பா, தலைவர், குவெம்பு பாக்ஷாபாரதி, கரு நாடக அரசு சிறப்பு விருந்தினர் : தோழர் விடுதலை இராஜேந்திரன் . மூல நூல்ஆசிரியர் புத்தகத்தை குறித்து பேசுபவர் : திரு அக்னி சிரிதர், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முன்னிலை : திரு கலைச்செல்வி, திரு அகஸ்தியன் மற்றும் திரு இரவீந்திரனாத் சிரிவர, சிரிவர வெளியீடு. தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம்...

திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 17012018

டெல்லியில் மருத்துவ மாணவர் சரத் பிரபு மர்ம மரணத்தை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17.01.2018 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணி இடம்: மாநகராட்சி அருகில்,திருப்பூர் டெல்லி UCMS மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்ததை கண்டித்தும், தொடர்ந்து தென் மாநில மாணவர்கள் டெல்லியில் கொல்லப்படுவதை கண்டித்தும், மாணவர் சரத் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுருத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

சேலம் மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் 07012018

07.01.18 அன்று காலை 11.00 மணிக்கு மேட்டூர் தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.சூரிய குமார் செயலாளர் சி.கோவிந்தரா சு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகம், தமிழக நீதிமன்ற தீர்ப்புகளின் அவல நிலை, இன்றைய சமூக அவலங்களில் நமது கடமைகள் நாம் ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்து கழகத் தலைவர் பேசினார். மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் கழக வளர்ச்சி செயல் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பறிபோகும் வேலைவாய்ப்புகள், மீட்கப்பட வேண்டிய நமது உரிமை கள் குறித்து துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவெடுக்ககப்பட்டது. கழகத் தலைவரிடம் பெரியார் முழக்கம் ஆன்டு சந்தா 500 சந்தாவும், அய்ந்தாண்டு சந்தா ஒன்றும்,...

18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா சென்னை 12012018

நித்திரையில் இருக்கும் தமிழா… சித்திரையல்ல உன் புத்தாண்டு… தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு… திருவல்லிக்கேணியில் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு…பொங்கல் விழா… வரும் 12.01.2018 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு…. வி.எம்.தெரு, இராயப்பேட்டையில்…. பரிசளிப்பு வாழ்த்துரை…. தோழர்.கோபி நயினார், ‘அறம்’ திரைப்பட இயக்குனர் திருநங்கை.தாரிகா பானு, சித்த மருத்துவ மாணவர் மு.குணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர்…நீயூஸ் 18 விடுதலை.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திவிக மருத்துவர்.சரவணன், மாநிலத் துணைத் தலைவர், மருத்துவர் அணி, திமுக ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர், திமுக ஆர்.என்.துரை, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர், திமுக எஸ்.எஸ்.பிரபு, ஒ.செ.மா.அ.செயலாளர், புரட்சி பாரதம் வாருங்கள் தோழர்களே இது நம்ம விழா… பொங்கல் விழாக் குழு திருவல்லிக்கேணி பகுதி தொடர்புக்கு : 7299230363

காதலர் தின விழா 14022018 சென்னை

ஜாதி மதம் ஒழிக்க! சமத்துவம் படைக்க!! காதல் செய்வீர்!!! ஜாதி எனும் பாறையை பிளக்க!! காதல் எனும் வெடியை தவிர வேறேதுமில்லை!!! ஆதலால் காதல் செய்வீர் !!!…. ஜாதி மறுப்பு இணையர்களே அணி திரள்வோம் #புரட்சியாளர்_அம்பேத்கர்_மணிமண்டபம் நோக்கி …. ஒரு உயிர் தனது உணர்வையும் அன்பையும் யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவும் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது …. தனது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர் உடையதே அன்றி … ஜாதிக்கோ மதத்திற்கோ இங்கு வேலை இல்லை ….. அவ்வாறு தடையாய் அமையும்பட்சத்தில் #ஜாதியின்_வேர்கள்_காதல்_எனும்_கேடயத்தால்_அழிக்கப்படும் …. நிகழ்வுகள் : பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சி பட்டிமன்றம் இணையர்களுக்கான போட்டிகள் நடைபெறும் …. முன்பதிவிற்கு : 8056460580 , 7299230363 திராவிடர் விடுதலை கழகம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழ் குறித்து வாசகர் வட்டம் (31.12.2017) மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்ற – மார்க்சிய  – பெரியாரிய ஆய்வாளர் க.காமராசன் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் குறித்து விரிவாகப் பேசினார். தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.01.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் காஞ்சிக்கோயில் நான்குமுனை சந்திப்பில் யாழ் எழிலன் தலைமையில் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது.   சவுந்தர் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சார்ந்த  வீரா கார்த்தி பேசத் துவங்கிய பத்து நிமிடங்களில், அங்கு வந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கொங்கு அமைப்பைச் சார்ந்த கும்பல் கலவரம் செய்து கூட்டத்தை முடக்கும் நோக்கில் பேசாதே பேசாதே இந்துவைப் பற்றி பேசாதே என்று கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.  தொடர்ந்து வீரா கார்த்தி நீட் தேர்வின் ஆபத்து குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் குறித்தும் மாட்டுக்கறி தடை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை குறித்து பேசினார் . பெரியார் இயக்கம் இது போன்ற எண்ணற்றத் தடைகளை சந்தித்த இயக்கம் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, இன்னும் மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிக்...

கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி

ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை: விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த  எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன். இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்! பெரியார் என்பவர்...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு  பெரியாரின் கனவாக இருந்த அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக (23-12-2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  க.இராமர், செ.வே.ராஜேஷ்,  பூ.ஆ. இளையரசன், க.மதியழகன், ந.அய்யனார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக இராஜேந்திரன், தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

சேலம் தலைமைச் செயலவையில் சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஜி.பி. கோவிந்தராஜ், கொளத்தூர் சூரி உறுதி கூறியவாறு, சேலம் மேற்கு மாவட்டக் கழகம்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 500 சந்தாக்களை உடனடியாக சேர்த்து அதற்கான கட்டணத்தையும் அனுப்பி வைத்துள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு எப்போதுமே கூடுதல் சந்தாக்களை சேகரித்து, ஏட்டின் உயிர்ப்புச் சக்தியாகத் திகழும் மேட்டூர் பகுதி மீண்டும் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இது முதற் கட்டம். தொடர்ந்து சந்தா சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என்று கழகப் பொறுப்பாளர் ஜி.பி.கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேட்டூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் இந்த செயல்பாட்டை ஏனைய மாவட்டக் கழகங்களும் செயல்படுத்துமா? பெரியார் முழக்கம் 11012018 இதழ்

ஜாதி ஆதிக்கவாதிகளின் இடையூருக்கிடையே நடைபெற்ற தெருமுனைக் கூட்டம் காஞ்சிக்கோயில் 07012018

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.01.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் காஞ்சிக்கோயில் நான்குமுனை சந்திப்பில் தோழர் யாழ் எழிலன் தலைமையில் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது.   தோழர் சவுந்தர் தொடக்கவுரையாற்ற, அதனை தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சார்ந்த தோழர் வீரா கார்த்தி பேசத் துவங்கிய பத்து நிமிடங்களில் , அங்கு வந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கொங்கு அமைப்பைச் சார்ந்த கும்பல் கலவரம் செய்து கூட்டத்தை முடக்கும் நோக்கில் பேசாதே பேசாதே இந்துவைப் பற்றி பேசாதே என்று கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது .  தொடர்ந்து வீரா கார்த்தி நீட் தேர்வின் ஆபத்து குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் குறித்தும் மாட்டுக்கறி தடை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை குறித்து பேசினார் . பெரியார் இயக்கம் இது போன்ற எண்ணற்ற தடைகளை சந்தித்த இயக்கம் இந்த சலசலப்பிற்கெல்லாம்...

இந்திய அளவிலான வில்வித்தை – கழக மாணவர்கள் சாதனை

மேட்டூர் 7 ஸ்டார் ஆர்ச்சரி கிளப் மாணவர்கள் சாதனை இந்திய ஊரக விளையாடுக் குழுமம் நடத்திய தேசிய (இந்திய) அளவிலான வில்வித்தைப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள கேள்காண் விளையாட்டரங்கில், 2017 டிசம்பர் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டு அணியை சார்பாக கலந்துகொண்ட, சேலம் மாவட்டம், காவலாண்டியூரைச் சேர்ந்த மாணவன் மா. இ.எழிலரசு 14 வயதுக்குட்பட்டோருக்கான ரீ கர்வ் வில் அம்பு பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் காவை இளவரசன் – மாதவி இணையரின் மகன் ஆவார். இந்தியன் ரவுண்ட் பிரிவில் க.ப.வளவன் இந்திய முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் கொளத்தூர் கபிலன் புகைப்பட நிலையம் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரின் மகன் ஆவார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் தோழர் கொளத்தூர் குமார் – தமிழரசி இணையரின் மகன்...

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு ஈரோடு 07012018

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு… நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில், ஈரோட்டில் பெரியார் JCB என்ற இடத்தில் இன்று(07.01.2018) காலை 11 மணிக்கு தோழர் இனியவன் தலைமை வகிக்க, தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்) முன்னிலையில், மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. நிகழ்விற்கு, வெப்படை, பூந்துறை, மல்லசமுத்திரம், சென்னிமலை, திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் கலந்து கொண்டதால், மாணவர்களின் சமகால ப்ரச்சனைகளான, நீட் தேர்வு, TNPSC-ன் தமிழக மாணவர்களுக்கு எதிரான அறிவிப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி  தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் வைரவேல்(நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), தோழர் வேனுகோபால்(ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். அதன்பின், மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், முதல் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிகழ்விலும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக ஈரோடு மண்டலம் சார்பாக ஈரோட்டில் மாணவர்கள் மாநாடு நடத்துவது, என்ற...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் வரவு -செலவுகள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் வரவு -செலவுகள் மொத்த நன்கொடை வசூல்=225323  செலவுகள் காஞ்சி மக்கள் மன்றம் வகையில் 33000 மேடை ஒலிபெருக்கி 19500 டீசல் 2000 துண்டறிக்கை சுவரொட்டி. 8650 உணவு. 12300 மாநாட்டு அழைப்பாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதி செலவு 26600 நாற்காலி 3440 சுவர் விளம்பரம் 25000 பதாகைகள் 22500 நாட்காட்டி 1400 நன்கொடை ரசீது 1200 திருமண மாலை 200 வெளியூர் தோழர்கள் தங்க வீட்டு வாடகை 2000 வசூல் குழு  மற்றும் உணவு செலவு 8740.    போட்டோ-வீடுயோ 5000 இதர செலவுகள் 1360 கழக இதழ்களான நிமிர்வோம், புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக..40000 மாவட்ட வளர்ச்சி நதியாக 12433 ஆக மொத்தம் 225323      —————————–  ஈரோடு தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாடு சிறக்க நன்கொடை அளித்து உதவியவர்களின் பட்டியல் கமலக்கண்ணன்...

பெரியார் நினைவுநாள் கோவை 24122017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரின் 44வது நினைவுநாள் மிகச்சிறப்பாக மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உடன் விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் இணைந்து நினைவுநாள் நிகழ்வு நடந்தது..         – கோவை திவிக.

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 04012018

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்தும் பட்டு நகரம்பேரறிஞர் அண்ணா படத்தை தவிர்த்தும் மற்ற மத அடையாளங்கள் இடம் பெறாமல் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4/1/18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, தலைமை கழக உறுப்பினர் தோழர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறை சென்ற மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து...

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! 01012018

திருப்பூரில், தமிழ்நாடு மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் ! தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக திருப்பூர் பகுதி பொறுப்பாளர் தோழர் கனல்மதி அவர்கள் வீட்டில் 01.01.2018 அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி 2.30 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழக மாணவர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கின்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வு சட்டத்தை கல்லூரி மாணவன்களுக்கு விளக்கும் வகையில் துண்டறிக்கை பரப்புரை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தோழர்கள் தேன்மொழி,கனல்மதி, வைதீஸ்வரி,சபரி,விவேக் சமரன்,எழில்அரசி, மதுலதா,பிரசாந்த்,சுவேதா,மோகன்ராஜ்,பிரசாந்த், பாண்டிச்செல்வி,பிரபா,உகஸ்ரீ,முகிலன்,சுதன்,ராகுல் உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சிவகாமி,தோழர் முகில்ராசு, தோழர் மணிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதிய தோழர்கள் ஆர்த்தி,வினேத் இணையர் மதிய உணவு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம் 24122017

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம். தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 அன்று காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ்,அருளானந்தம், சுப்பிரமணி,ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர் மாணவர் கழக தோழர் அறிவுமதி,பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்