Category: திவிக

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர்.செங்கொடியின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கழகதலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தார். புகைப்படங்களுக்கு  

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

பெரியார் கைத்தடி ஊர்வலம் சென்னை 31082017

திராவடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் கைத்தடி ஊர்வலம் இன்று உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்காத இந்து முண்ணனி இராமகோபாலனே விநாயகர் அரசியலுக்கு அழைக்காதே, எங்கள் நாடு தமிழ்நாடு இங்கு ஏதடா இந்து நாடு என்ற முழக்கத்துடன் சென்னை ஐஸ்அவுஸில் 31.8.17 மாலை 4.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஊர்வலம நடைப்பெற்றது. கழக தோழர்கள் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டு110 பேர் கைதானார்கள். அனைவரும் இராயப்பேட்டை பேகம்சாகிப் தெருவில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் காவலில் உள்ளனர். செய்தி குகநந்தன்

இணையேற்பு விழாவும் ! முற்போக்காளர்கள் கருத்துரைகளும் ! ஈரோடு 03092017

கழகத்தின் ஈரோடு மாவட்டச்செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் இல்ல இணையேற்பு விழா ! இணையர்கள் : தமிழ்ப்ரியன் ராஜநந்தினி நாள் : 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் 10 மணி வரை இடம் : கே.கே.எஸ்.கே.மஹால் திருமண மண்டபம், அசோக புரம்,ஈரோடு. கழகத்தலைவர்,கழகப் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கழக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும் – கருத்தரங்கம் மதுரை 01092017

நாளை (01.09.2017) மதுரையில், “கருத்தங்கம்” ‘நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும்’ ‘பறிபோகும் சமூக நீதி’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 01.09.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 5 மணி இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கழகம்.

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! சென்னை 31082017

பெரியார் கைத்தடி ஊர்வலம் ! நாள் : 31.08.2017 வியாழக்கிழமை, மாலை 3.00 மணிக்கு. இடம் : ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை-05. மக்கள் வாழ்வுரிமைகளை பறித்தவர்கள் நடத்தும்… விநாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. தலைமை : தோழர்.விடுதலை க.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். #வாழ்வுரிமைக்கான_போராட்டத்துக்கு_குரல்_கொடுப்போம். #வாருங்கள்_தோழர்களே.! #மதவெறியை_மாய்போம்.! #மனிதநேயம்_காப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இணையதள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி ஈரோடு 20082017

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் தோழர் இரத்தினசாமி ஈரோடு அவர்களின் ஒருங்கிணைப்பில் 20082017 அன்று சூரம்பட்டிவலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோழர் இரத்தினசாமி அவர்கள் இணையத்தில் செயல்படவேண்டிய முறைகள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பரிமளராசன் அவர்கள் தற்போதைய சூழலில் பெரியாரியியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளிடம் இருந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் முகநூலில் கழக தோழர்கள் எங்ஙணம் தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார் தோழர் விஜய்குமார் கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் திருச்செங்கோடு தோழர் பூபதி மீம்ஸ் பற்றியும் விளக்கினர் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தோழர் வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த பயிற்சி வகுப்பு...

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19.08.2017 மாலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். கூட்டத்தின் தொடக்கமாக கடவுள் மறுப்பு உரையை குகன் கூறினார். இதில், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது சமூகநீதி- சமத்துவ பரப்புரை பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகிற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் வினாயகர் சதுர்த்தி எப்படி இந்துமுன்னணி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் அவர்களின் சுயலாபத்துக்காக அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் பெயரால் ஒன்றுதிரட்டி மற்ற மதத்தவருக்கு எதிராக மாற்றும் போக்கினை எப்படி முறியடிப்பது. வீட்டில் வணங்க வேண்டிய இந்த வினாயகர் சிலையை எதற்காக தெருவில் கொண்டுவந்து இது எப்படி அரசியல் ஆக்கப்படுகிறது, இதன் உள்நோக்கம்...

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல்

18.6.2017 அன்று தூத்துக்குடி, டூவிபுரம் 2ஆம் தெருவில் உள்ள முத்து மகாலில் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்தரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில் நடைபெற்றது. கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் க. மதன், குழந்தைகள் படிப்பிற்கான தொகையினை வருடா வருடம் கொடுத்து வருவது போன்றுஇவ்வாண்டும் கொடுப்பது என்றும், அதற்கான தோழர்களின் பங்களிப்பை விருப்பம் உள்ளவர்கள் மாவட்டத் தலைவரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் சந்தாவை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் கோ. அ. குமார். மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள், பொருளாளர் பொறுப்புகளுக்கு பொறுப்பாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 24082017 இதழ்

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

மனிதன் கையால் மலம் அள்ளும் அவலம்; விழிப்புணர்வை ஏற்படுத்திய “மஞ்சள்” நாடக நிகழ்வு! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார் ! கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான...

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. கழகத்தலைவர் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினார் ! கழகப்பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் இந்தய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது...

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

  ஆதித்தமிழர் கட்சியின் “நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா 30.06.17 அன்று AICUF இல்லத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , மனுஷபுத்திரன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், மற்றும் ஜெபமாலை ராஜாஆகியோர் கலந்துகொண்டனர். நடுகல் மாத இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட தோழர் ஜெபமாலை ராஜா அவர்கள் பெற்றுக்​கொண்டார் புகைப்படங்களுக்கு

மணப்பாறையில் கழகப் பொதுக்கூட்டம் ! 10082017

கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, சமூகநீதி சமத்துவப் பரப்புரைப் பயணத்தின் மதுரை அணி சார்பாக, மணப்பாறையில் பெரியார் சிலை அருகில் 10.08.2017 மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காவை. இளவரசுவின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்வில் தோழர்.தனபால் தலைமை வகித்தார். தோழர்கள் அறிவுச்செல்வன்,விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் தோழர்.சீ.ரா ஆனந்தன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் தோழர். பாவலர் பசுலுதீன், ஆதிதிராவிடர் நலப்பேரவையின் தலைவர் தோழர்.மணிவண்ணன், மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் 90 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர்.தோழர் திருமால், CPI யின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன், திராவிடர் கழக நகரச் செயலாளர் CMS ரமேஷ், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர்.துரை.காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.. 90 வயது கடந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர் அய்யா திருமால் அவர்களுக்கு கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி நினைவுப்பரிசு...

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017. கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இழந்து வரும் உரிமைகளை மீட்போம் !தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் ! எனும் முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக 11.08.2017 அன்று மாலை 6 மணிக்கு சேலம் முருங்கப் பட்டி சந்தை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அமுதவர்சினி – சிவகுமார் இல்லற ஏற்பு விழா! சூலூர் 25082017

சூலூரில் 25082017 இல்லற ஏற்பு விழா ! ”அமுதவர்சினி – சிவகுமார்.”ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது . நாளை 25.8.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி, சூலூர், கே.எஸ்.வி.திருமண அரங்கில் கழகத்தலைவர் தலைமையிலும், பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரையுடன் நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தி – திருப்பூர் திவிக மனு 23082017

திருப்பூர்மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23082017 அன்று, விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்ச்சியில், காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் ஆணைகளை நிறைவேற்றி அவர்களின் கடமைகளை தவறாமல் செய்திட வலியுறுத்தி, மனுக்களை ஆணை நகல்களுடன் இணைத்து (அரசு அதிகாரிகளிடம்) திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துணைக் கண்காணிப்பாளர்,  காவல்ஆய்வாளர்,  மாநகராட்சி ஆணையாளர், போக்குவரத்து துறைஅதிகாரிகள், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் ஆகியோரிடம் வழங்கி தங்களது கடமையை தவறாமல் செய்யவும் இவற்றை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தோழர் துரைசாமி மாநிலப்பொருளாளர், தோழர் முகில்இராசு, திருப்பூர்மாவட்டதலைவர், தோழர் நீதிராசன் மாவட்டச்செயலாளர், தோழர் வீ. தனபால் திவிக மாநகரத்தலைவர், தோழர் மாதவன் மாநகரச்செயலாளர், தோழர் முத்து மாநகர அமைப்பாளர் மற்றும் தோழர் இராமசாமி திருப்பூர் தெற்கு பகுதிசெயலாளர் ஆகியோர் சேர்ந்து மனு வழங்கப்பட்டுள்ளது.

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

20082017 அன்று காலை 11-00 மணியளவில் தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ’நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது.. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம்,நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம் , கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர் புகைப்படங்களுக்கு

விநாயகர் சதுர்த்து நிகழ்ச்சியில் நீதிமன்ற,அரசு ஆணைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட கழகம் சார்பில் மனு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்.தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்) அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களுடன் இன்று (18.08.2017) காலை சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில்… வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வினாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.வினாயகர் சிலை தயாரிக்கும் இடங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பிளாஸ்டிக் ஆப் போரிஸ், இரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வினாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், சில மதவாத கும்பல்கள் வினாயகர் ஊர்வலங்களின் மூலம் மதநல்லொழுக்கத்திற்கு எதிராக செயல்படும் செயல்பாடுகளை தடுக்க காவல் ஆணையரை சந்தித்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை அலுவலகத்திலும், சென்னை மாசுகாட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் மனுவை அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

ஆகஸ்ட் 06 முதல் 12 வரை நடைபெற்று முடிந்த சமூக நீதி – சமத்துவ பரப்புரை பயணத்தை பற்றியும்…. மதவாத சக்திகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் கைத்தடி ஊர்வலம்…. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா… போன்றவைகளை பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நாளை (19.08.2017 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தொடர்புக்கு : 7299230363

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத் துவக்க விழா பொதுக்கூட்டம் சென்னை 06082017

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்.! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்.! தமிழகம் ழுழுவதும் “சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத்தின்” துவக்கப் பொதுக்கூட்டம்…. நாள் : 05.08.2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம் : கங்கையம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை. கருத்துரை: தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி கழகத் தலைவர், திவிக தோழர்.விடுதலை.க.இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக “விரட்டு” கலைக்குழுவின் வீதி நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெறும். “சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறியடித்து தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் வாரீர்….!”  

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி – மதுரை உண்ணாவிரதத்தில் தோழர் பால்.பிரபாகரன் எழுச்சியுரை

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக ஆக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார் செய்தி – வைரவேல் காணொளியை காண

இந்து மக்கள் கட்சியை தடை செய் – கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் 01082017

ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் இந்துமத வேடதாரி, பார்ப்பன அடிவருடி அர்ஜூன்சம்பத்தை கைது செய்… இந்து மக்கள் கட்சியை தடை செய்…  என்ற முழக்கத்தோடு கோவையில் 01082017 மாலை 5 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நேரு அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

01082017 மாலை 3 மணி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! நீதி மன்றங்களில் தமிழை் வழக்காடு மொழியாக்க வலியுருத்தி போராடி வரும் மதுரை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை செல்லும் வழிலேயே பாதியில் மறித்து ஜனநாயக உரிமைகளை மீறி கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் வழிபில் நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 9.30 மணிக்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாலை 3.00 மணிக்கு நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கழக தலைவரும், தோழர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழகத் தலைவர் கைது மதுரை 01082017

கொளத்தூர் மணி கைது… திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மதுரையில் நடைபெரும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்திற்கு சென்ற போது நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்…. தடை மீறி செல்ல விருந்த திராவிடர் விடுலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி காவல்துறையால் தடுத்து வைப்பு

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க கோரிப்ு லவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை திண்டுக்கல்லில் காவல் துறையினர் மதுரைக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? கருத்தரங்கம் சென்னை 29072017

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? #கருத்தரங்கம்…. நாள் : இன்று (29.07.2017)மாலை 5 மணிக்கு இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை -04 #கருத்தாளர்கள் : தோழர்.பண்ருட்டி.இராமச்சந்திரன் தோழர்.கொளத்தூர் மணி தோழர்.ஆழி.செந்தில்நாதன் தோழர்.செந்தில் தோழர்.ஜவாஹிருல்லா தோழர்.தியாகு தோழர்.T.S.S.மணி வாருங்கள் தோழர்களே.! ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர். அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள்...

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை பெயரை நீக்க முயற்சி

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை என்கிற பெயரை நீக்கி, ‘அம்மா மாளிகை’என்று மாற்ற முயற்சிக்கும் அதிமுகவின் சதி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தால் தற்காலிகமாக முறியடிப்பு செய்தி – வைரவேல்

சமூக நீதிப் பயணம் – சென்னை மாவட்டம் தயாராகிறது

23.07.2017 மாலை 6 மணிக்கு சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக யுவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் ஆகஸ்ட் 05, 2017 தொடக்க பொதுக்கூட்டம் முதல் ஆகஸ்ட் 12, 2017 மாலை திருசெங்கோட்டில் நடைபெறவிருக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் “சமூக நீதிப் பரப்புரை பயணம்” குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 28.07.2017 வடசென்னை, திருவேற்காடு பகுதியில் “வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், கடந்த 15.07.2017ல் நடைபெற்று முடிந்த காமராசர் விழா பற்றியும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்....

கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24072017

பல எதிர்ப்புகளை கடந்து கொட்டும் மழையில் கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24072017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீ.த.பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் வெ.கனியமுதன். துனை பொது செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன். பொதுச் செயலாளர். தமிழ் புலிகள் கட்சி பெரியார்.சரவணன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர். தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர்.பெரியார் திராவிடர் கழகம் சிதம்பரம். மாவட்ட செயலாளர். ஆதித்தமிழர் கட்சி தலித்.ராஜா ஆதித்தமிழர் பேரவை தாஹா. SDPI கட்சி மேலூர் தொகுதி தலைவர். இரணியன். பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர் பரமக்குடி கர்ணன் ,ரமேஸ் ,சகாயராஜ் ,கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்...

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வனவாசி, சேலம் 24072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். நாள் : 24.07. 2017 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : பேருந்து நிலையம்,வனவாசி, சேலம் மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். தலைவர்,திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் வே.மதிமாறன், எழுத்தாளர். தோழர் காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

திவிக சென்னை மயிலை பகுதி தோழர்களின் களப்பணிகள் 21072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதி தோழர்கள் இன்று காலை (21.07.2017) விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி தலைவர் தோழர்.இராவணன் அவர்களின் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி தோழர்கள் எடுத்துரைத்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைதரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்க கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர்...

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 23072017

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஆகஸ்ட் 06, 2017 முதல் ஆகஸ்ட் 12, 2017 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் “சமூக நீதி பரப்புரை பயணத்திற்கான” கலந்துரையாடல் கூட்டம் 23.07.2017 மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி – கருத்தரங்கம் சென்னை 22072017

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞரின் 94வது பிறந்தநாள் கருத்தரங்கம் இன்று 22.07.17 டி.ஜி.பி. திருமண மண்டபத்தில் (தாம்பரம்) மாலை 6.00 மணியளவில் தொடங்கியது. இதில் “மாட்டிறைச்சி உணவும், மனுதர்ம அரசியலும்” எனும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன், தலைமை தேர்தல் பணிக்குழுச் செயலாளர் அவர்களும் “நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி?” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் விடுதலை இராசேந்திரன் அவர்களும் பேசினார்கள். வாழ்த்துரை எஸ்.ஆர்.ராஜா சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார்.