Category: திருப்பூர்

திருப்பூர் பயிலரங்கம் 03042016 நிழற்படங்கள்

அறிவாசான் தந்தை பெரியார் கற்றுக் கொண்டே இருந்தார். கற்றுக் கொண்டதை மக்கள் மொழியில் மக்களிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார். பெரியார் தொண்டர்களும் கற்றுக் கொண்டும் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.  

ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் இணையரை சந்தித்து ஆறுதல்

நேற்று 04.03.2016 திங்கள் அன்று ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் இணையர் கவுசல்யா அவர்களைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் சந்தித்து ஆறுதலும்,தைரியமும் கூறினர். உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் எனும் ஊரில், கொல்லப்பட்ட தனது கணவர் சங்கர் அவர்களின் வீட்டில் வாழ்ந்து வரும் கவுசல்யா அவர்களைத் தோழர்கள் சந்தித்தனர். தலை,கைகள் மற்றும் உடல் முழுவதும் ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார் கவுசல்யா. சங்கர் வீட்டில் கவுசல்யா வாழக்கூடாது எனும் ஒரே நோக்கத்தில் ஜாதிவெறியர்கள் சங்கரைப் படுகொலை செய்து கவுசல்யாவை கொடூரமாகத் தாக்கினார்களோ அவர்களின் நோக்கத்திற்கு எதிராக நெஞ்சுரத்துடன் சற்றும் அஞ்சாமல் அதே சங்கர் வீட்டில் மனதைரியத்துடன் திரும்ப வந்து வாழ்கிறார் கவுசல்யா. இனி ‘நான் சங்கர் வீட்டில்தான் வாழ்வேன்’...

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் !

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் ! திருப்பூரைச் சேர்ந்த ”சக்திகாமாட்சி – ஆனந்த் இணையர்” தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர்.ஆனந்த் ”இந்துமுண்ணனி”யின் தீவிர உறுப்பினர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கழக தோழர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இணையருக்கு மிரட்டல் விடுத்தும் இவர்களை பிரிக்காமல் விடமாட்டோம் எனவும் 70க்கும் மேற்பட்டோர் இவர்களை பல்வேறு ஊர்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் சக்தி காமாட்சியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்ததை அடுத்து இணையர்கள் காவல்நிலையத்திற்கு நேரில் ஆஜராகி தன் தரப்பை விளக்க...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை திருப்பூர் 16032016 – நிழற்படங்கள்

திருப்பூரில், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது. • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும். • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த...

ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் புகார்

முகநூலில் ஜாதிவெறிப் படுகொலைகளுக்கு ஆதரவாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்து ஜாதி கலவரங்களை  தூண்டும் ஜாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தலைமையில் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி,தோழர் அகிலன்,தோழர் தனபால் உள்ளிட்ட தோழர்கள் திருப்பூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – திருப்பூர் புகைப்படங்கள்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார். பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்! என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

”தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா.” மற்றும் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா திருப்பூரில்

திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”தமிழ் புத்தாண்டு,பொங்கல் விழா.” மற்றும் இரண்டாம் ஆண்டு விளையாட்டுவிழா. நாள் : 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை. இடம் : திருவள்ளுவர் தெரு,இராயபுரம் மேற்கு,திருப்பூர் – 1. ”காலை முதல் மாலை வரை விளையாட்டுப் போட்டிகள்” மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்கள். மாலை 7 மணிக்கு ”பொதுகூட்டம் .” தலைமை : தோழர் கருணாநிதி. வரவேற்புரை : தோழர் நீதி ராசன். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை : தோழர் மா.ஜெகதீசன்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணம் ! திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கழக தோழர்களால் கடலூருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு ஏற்கனவே அங்கு கிராம பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு வழங்க்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள்,பொருளுதவி செய்தவர்கள் விவரம் : சந்திரசேகர் சி எம் டி கார்மெண்ட்ஸ் —அரிசி 100 கிலோ அருண்,சதிசு மற்றும் நண்பர்கள் ப்ளூ ஜே மென்ஸ் பௌட்டிக் — 300 சப்பாத்தி; 280 தண்ணீர் குவளை; 200 பிஸ்கட் பாக்கட். சிவகுமார் ஈரோ லுக் ஸ்டிக்கர்ஸ் – 25 கிலோ அரிசி; 50 நாப்கின்ஸ் அபிநயா, சவிதா, மனோஜ், அக்சதா, பாரதி விழி தற்காப்பு பயிற்சி கூடம் சூலூர்—- பிஸ்கட் 2 பெட்டிகள்(2௦௦ பாக்கட்); துணிகள் ; 50 கிலோ அரிசி. முத்துச்சாமி...

பல்லடத்தில் பெரியார் பிறந்தநாள் – ஊர்வலம், கொடியேற்று விழா !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா ! பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் : 1)தெற்குப்பாளையம் 2)மணி மண்டபம். 3)வடுகபாளையம் 4)அனுப்பட்டி 5)லட்சுமி மில். 6)செட்டிபாளையம் பிரிவு. 7)மாணிக்காபுரம் சாலை. 8)N.G.R..ரோடு. 9)காவல்நிலையம் எதிரில் 10)பேருந்து நிலையம். பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம்...

திருப்பூர் S.P அலுவலகத்தில் நடந்த ஆயுத பூஜையை தடுத்து நிறுத்தி பார்ப்பானை துரத்திய தோழர்கள்

திருப்பூர் S.P. அலுவகத்திற்கு நேற்று மாலை கொடியேற்றுவிழா அனுமதிக் கடிதம் கொடுக்க திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தோழர்களுடன் சென்றிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பான் ஒருவனை காவல்துறை அலுவலகத்திற்குள் அழைத்துச்செல்வதை கண்ட தோழர் முகில்ராசு அவர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த பார்ப்பான் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நேற்றைக்கு முந்தினம்தான் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவகங்களில் மதவழிபாடு செய்வது தமிழக அரசாணைக்கு எதிரான செயல் எனவே அரசாணைக்கெதிரான செயலை செய்யக்கூடாது என திராவிடர் விடுதலைக் கழகம சார்பில் திருப்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதனையும் மீறி காவல்துறை அரசாணைக் கெதிராகவும், இந்திய மதசார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் செயல்பட்ட திருப்பூர் S.P. அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்த ஆயுத பூஜைக்கு தோழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தோழர்...

‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! – திருப்பூர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று காலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் ‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு’ என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,தோழர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக தோழர்கள் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தின் பிரச்சார பயணம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம், எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” எனும் முழக்கத்தோடு திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணம் 09.10.2015 காலை 11 மணிக்கு ஆரம்பமானது. தமிழகம் முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தற்போது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த பிரச்சார பயணம் மக்களை நேரில் சந்தித்து ஜாதீய கொடுமைகள் குறித்தும்,அடுத்த தலைமுறைக்கான வேலையின்மை குறித்தும்,இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறுவகையான கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. நேற்று ஊத்துக்குளியில் துவங்கிய திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணத்தில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கலைக்குழுவின் தோழர் சங்கீதா அவர்கள் கொள்கை பாடல்களை பாடி நிகழ்சியை துவங்கினார்.திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் அறிமுக உரையாற்றினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துக்களையும் கூறி தன்”மந்திரமா?தந்திரமா?நிகழ்சியை தோழர் காவை...

திருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா !

திருப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது. 04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் ராயபுரத்தில் துவங்கிய இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.ஊர்வலத்தின் துவக்க உரையை தோழர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்தினார்.பறையிசை முழங்க ராயபுரம் பகுதி கழக கொடியை மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார். வாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம்,மாஸ்கோ நகர்,கன்னகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி,திருவள்ளுவர் நகர்,ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டி புரம், பெரியார் காலணி, அம்மாபாளையம், ஆத்துப்பாளையம்,போயம்பாளையம்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம் பாளையம், முருகம்பாளையம்,வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில்...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

திருப்பூரில் மகளிர் நாள் விழா ! 0

திருப்பூரில் மகளிர் நாள் விழா !

திருப்பூரில், தமிழ் நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் தின விழா 08.03.2015 அன்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், மங்கலம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ”மாதவிடாய்” மற்றும் ”தீவரைவு” ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. பின்பு நடை பெற்ற கருத்தரங்கத்தில் ”மாத விடாய் காலத்தில் உணவு” எனும் தலைப்பில் இயற்கை மருத்துவர் பெரியார் செல்வி, ”மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் ரஞ்சிதா கருத்துரை வழங்கினர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிய மணியரசி, கபடி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் இடம் பெற்ற மைதிலி ஆகியோருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கும்...