அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருப்பூர்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அறிஞர் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாள் விழா ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு 14042016 காலை 10 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நடைபெற்றவுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது.
கவிஞர் கனல்மதி அவர்கள் ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை கூற கூடியிருந்த தோழர்கள் திரும்பசொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி, மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளைசாமி,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள்,குழந்தைகள் ஆகியோர் 30 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்சியின்போது இன்று பிறந்த நாள் காணும் கழக தோழர் சங்கீதா -தனபால் இணையரின் மகள் யாழினி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணல் சிலை அருகிலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.தோழர்கள் அனைவரும் பெரியார் பிஞ்சு யாழினிக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
IMG_20160414_100323 IMG_20160414_100753 IMG_20160414_100809 IMG_20160414_100943 IMG_20160414_101126

You may also like...