Category: சேலம் மேற்கு

கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.

பயணம் வெற்றி: மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள் மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க  சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது.  6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள்  திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்  ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை  நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி  நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...

சுற்றுச்சூழல் போராளி பியூஸ் மானுஸ் ஆதரவாக கழகம் சுவரொட்டி

தமிழக அரசே சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மற்றும் இருவர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெறு பியூஸ் மானுஸ் அவர்களை சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய் சம்மந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய் இயற்கையை நாசப்படுத்தும் லாப வெளி பெருமுதலாளிகள், துணை நிற்கும் அரசு, அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம், இயற்கையை பாதுகாப்போம் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம்

சூழலியல் போராளி பியூஷ் கைதுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, ஏஎலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை நிறையில் தாக்கி சித்திரவதை நெய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர செயலாளர் பரமேஸ் உள்ளிட்டோர் சுமார் 300 பேர் கூடியிருந்தனர். சிறையில் பியூஷைச் சந்தித்துவந்திருந்த வழக்குரைஞர்...

சேலம் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் 08072016

8-7-2016  வெள்ளியன்று காலை 11-00 மணியளவில், மத்திய அரசு பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்தும், மக்களின் பேச்சு மொழியாய் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழியாக சேர்த்திருப்பதை நீக்கக் கோரியும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவுநர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட...

பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், இளம்பிள்ளை 13062016

13-06-2016 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே, பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல் முன்னிலை வகிக்க, இளம்பிள்ளை பகுதி தலைவர் சி.தனசேகர் தலைமை ஏற்றார். முருங்கப்பட்டி இரமேசு வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் வித்யாபதி, மோகன்ராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பகுத்தறிவு – ஜாதி ஒழிப்பு பாடல்களும், காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக இளம்பிள்ளை பகுதி துணைச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.  

பாலமலை மருத்துவ முகாம் 18052016

18.05.2016 அன்று பாலமலை பெரியாரியல் பயிற்சி முகாமையொட்டி இராமன்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்றது. திருமதி. விஜயா சரவணன் (பாலமலை ஊராட்சித் தலைவர்) தலைமையில் பூச்சியப்பன் (ஊர்ப்பட்டகாரர்), சதீசு (துணைத் தலைவர், பாலமலை ஊராட்சி), மாதப்பன் (ஊர்க் கவுண்டர்) ஆகியோரின் முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்டபொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பயனடைந்தார்கள். முகாமில் பங்குபெற்ற மருத்துவர்கள்: மருத்துவர் முரளி கிருஷ்ண பாரதி, மருத்துவர் வ.ப.வீரமணி, இவர்களுக்கு உதவியாக திருமதி சூர்யா, இரா.விஜயகுமார் தார்காடு, இலக்கம்பட்டி குமார் மற்றும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் செயல்பட்டனர். (முகாம் காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது)

காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர் !

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் பெரியாரியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடைபெற்றது.அந்த பயிரங்கத்தின் இடையே ஜாதிமறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது. குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் அவர்கள் மணி நடத்தி வைத்தார். மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காவலாண்டியூர் கிராமம்,கழகக் கட்டமைப்புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே‘காவல்’அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒருதனி சிறப்பு உண்டு. குடும்பத்தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராளமான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டியூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த சின்னத்துரை எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டியூர்’...

பாலமலை பெரியாரியல் பயிலரங்கம்

ஏராளமான புதிய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க,சிறப்புடன் நடைபெற்றது ! பல்வேறு தலைப்பிலான வகுப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 நாட்கள் நடைபெற்றது பயிலரங்கம் ! சேலம் மாவட்டம், காவலாண்டியூர், பாலமலையில் கடந்த 17.05.2016 மற்றும் 18.05.2016 அன்று சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கு நடைபெற்றது.120 தோழர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முதல் நாள் நிகழ்வாக 17.05.2016 அன்று காலை 10 மணிக்கு பயிலரங்கம் குறித்த அறிமுகத்துடன் பயிலரங்கு ஆரம்பமானது. காலை 11.00 மணிக்கு முதல் வகுப்பாக ”அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஜோதிடம்,சாஸ்திரங்களின் பொய்மைகள் குறித்து காணொலிக் காட்சியுடன் விரிவாக விளக்கினார். உயிர்கள் உருவாக்கம் குறித்த மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை பகிர்ந்த மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. தோழர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பைக் கவனித்தனர். மருத்துவர் எழிலன் அவர்களின்...

பெரியாரியியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இளம்பிள்ளை 13062016

பெரியாரியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாள் : ஜூன்  13/2016 நேரம் : மாலை 6-00 மணி இடம் : இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில்

பெரியாரியல் பயிற்சி வகுப்பு – இரண்டு நாட்கள் பாலமலை 17052016 மற்றும் 18052016

2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டம் காவலாண்டியூர் அருகில் பாலமலை முன்பதிவுக்கு மே 5 தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் 9750052191

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சேலம் மேற்கு

திராவிடர் விடுதலைக் கழக சேலம்  மேற்கு மாவட்ட சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளான இன்று 14.4.16 காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் கழக தோழர்கள் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு

01042016 வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் மறைந்த ‘மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு’ நடைபெற்றது. காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் க.ஈசுவரன் தலைமை ஏற்றார். காவலாண்டியூர் சித்துசாமி, கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.சுந்தரராசன் (அ.தி.மு.க), அஞ்சல் துறை சிக்கப்பசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், மா.வரதராசன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். மேலும் கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.பழனிசாமி, எல்.ஐ.சி. முகவர் ரகுபதி, தி.முக. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேவராசன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, கழக செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். இறுதியாக மறைந்த ‘மா.வரதராசன் அவர்களின் தகப்பனாரும், கழகத் தோழருமான மாரி (எ) மாரியப்பன்...

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

தடை தகர்ந்தது!

தடை தகர்ந்தது!

• வழக்கம்போல் சேலம் காவல்துறை மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் பிப்.17ஆம் தேதி அனுமதி மறுத்தது. உடனே உயர்நீதிமன்றத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் சார்பில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, மனுவை தாக்கல் செய்து வாதாடினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது. • மாநாட்டு அரங்கில் பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை தலைவர்களின் படங் களோடு பதாகைகளாக வைக்கப்பட் டிருந்தன. • சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் பதாகைகள் கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது. • மாநாட்டு அரங்கிற்கு வெளியே பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டியிருந்தனர். • காலை கருத்தரங்கில் நேரு அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்கக் கூடியவர்கள்” என்ற ‘பாட்ஜை’ சட்டைகளில் குத்தியிருந்தனர். • திறந்தவெளி...

திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் 19122015

Self Balancing Scooter Self Balancing Scooter Sale office 2010 key Windows 7 Genuine Product Keys windows 10 key sale windows 10 education Windows 10 Activation Product Keys office 2016 key windows 10 key office 2013 key windows 7 key Product key for window 7 ultimate 64 bit windows 10 home-key windows 10 update windows 7 installation office 2016 iso windows 10 install windows 7 service windows 7 iso Microsoft Office 2013 windows 7 SP1 iso  Windows 7 Ultimate Product Key 32bit and 64bit Genuine  |  Adobe Photoshop CS6 Crack And Keygen Full Download  |  How To Request a New Windows Product Key  |...

சேலம் மாநாடு சுவர் விளம்பரங்கள்

நாளை 19.12.2015 சேலத்தில் நடைபெறவுள்ள ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” க்காக தோழர்களின் சுவர் விளம்பரங்கள் சில.

காவல்துறையின் தடையை தகர்த்து சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு !”

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

திவிக கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி !

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”

மாவீரர் நாள் வீரவணக்கம்

இளமை சுகங்களை துறந்து, எதிர்கால சந்ததிகளக்காக, தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து, தம் இன்னுயிரை ஈகம் செய்த… மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்!   தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு, கொளத்தூர் மாலை 5 மணி, நவம்பர் 27

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் 0

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார். மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில்...

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி 0

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி

மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில்  9 நாள் எழுச்சிப் பரப்புரை 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில் 9 நாள் எழுச்சிப் பரப்புரை

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார். மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை...

0

சேலம் (மேற்கு) மாவட்ட கலந்துரையாடல்

சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது” 0

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....