Category: பெரியார் முழக்கம் 2019

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிய காந்தி, ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இளம் வயதிலிருந்தே மீறி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை காந்தி பிறந்த ஜாதி தடை செய்திருந்தாலும், காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். அவரது சொந்த ஜாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். “ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் போவதாக – ஜாதித் தலைவர்கள் கூறினாலும், அப்படி விலக்கினாலும் எனது வெளி நாட்டுப் பயணத்தைத் தடுக்க முடியாது” என்றார் காந்தி. பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny).” அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி...

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் (சூத்திரர் தவிர) மேலே உள்ள மூன்று வர்ணப் பிரிவினரும் பூணூல் போடும் உரிமை பெற்றவர்கள். காந்தியும் இளம் வயதில் அதற்குரிய சடங்குகள் நடத்தப்பட்டு ‘பூணூல்’ போடப்பட்டவர்தான். இது குறித்து தனது சுயசரிதையில் “நானும் பூணூல் போட் டிருந்தேன். அந்தப் பூணூல் தொலைந்து போனபோது அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் வரவில்லை. ஆனால் புதிய பூணூலை அணிவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும் (But I know that I did not go for a fresh one). காந்தியின் குடும்பம் வைசியர் பிரிவு. கழுத்தில் துளசி மாலை அணிவது கட்டாயம். “நான் இங்கிலாந்து போக முடிவு செய்தவுடன், துளசி மாலையை கழற்றிவிட்டேன்”. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் துளசி மாலையை அணியும் பழக்கத்தை காந்தி கைவிட்டு விட்டார். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150  ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

காந்தி 150 ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங் கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார்.  அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி என்னை யாரும் – எனது கருத்துகளிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. (The Vedas could not supply that need). “எனக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த...

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் – இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்: ‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple)...

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு: “இப்போது நடந்து முடிந்துள்ள இத் திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் (The rule should be on the part of the Ashramam to discountenance marriage between the parties of the some caste and to encourage those...

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் – மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரி லுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதி யினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். “தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் – ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு உட்ஜாதியில் திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார்....

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்று அரசாணை உள்ளது. எனவே அந்த அரசாணையை அரசு அதிகாரிகள் முறையாக காப்பாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  5.10.2019  அன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  கழகத் தோழர்கள்  நிர்மல், வெங்கட், கிருஷ்ணன், இயல் ஆகியோர் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

மதத்தின் பெயரால் நடத்தப்படும் கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி திரைத் துறை, கலைத் துறையைச் சார்ந்த 42பேர் மோடிக்கு கடிதம் எழுதியதால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் ‘தேச பக்தர்கள்’ எப்படி பேச வேண்டும்? இப்படித்தான்! டிசம்பர் 31, 2021க்குள் இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜேஸ்வர் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் “இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களையும் ஒழித்து விடுவோம்; இது நாங்கள் எடுத்துள்ள உறுதி” என்றும் அவர் பேசியுள்ளார். மேற்கு உ.பி.யில் வாழும் இவர் தொடர்ந்து இனவெறுப்பு இன அழிப்புக் கருத்துகளைப் பேசி வருபவர். ‘லவ் ஜிகாத்’ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் இவரைத் தான், மீண்டும் “தாய் மதம் திரும்புதல்” என்ற இயக்கத்துக்கு  ஆர்.எஸ்.எஸ். தலைவராக நியமித்தது. ‘தர்ம ஜக்ரான் சமிதி’ என்ற அமைப்பின்...

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும்  7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சுமார் 400 நாட்கள் ஓடிவிட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சரவைக்கு  அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக்கிய பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு அது. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடன்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது. தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தன்னிச்சையாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட அனுமதித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கான உரிமைஅமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஆளுநரின் முடிவை நிறுத்தியது. அதற்குப் பிறகு தி.மு.க. அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது ஆளுநர் பாத்திமா பீவி அதற்கு ஒப்புதல் வழங்கினாரே தவிர, தற்போது ஆளுநர் செய்ததுபோல் கிடப்பில் போடவில்லை. காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் 617 சிறைவாசிகளை விடுதலை செய்ய...

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை...

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், சுஊ பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர் சுளு, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று...

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து...

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம் என்பது வெறும் ஆன்மீக வாதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக சமூகத்தில் நிலவிய பிற்போக்கு கருத்துகளை, குறிப்பாக வர்ணா சிரமத்தை-கருத்து முதல்வாதம் வலுவாக தூக்கிப் பிடித்தது. வர்ணாசிரமத்தை -சமூகத்தின் பிரிக்க முடியாத அம்ச மாக நிலைநாட்டிட கருத்து முதல்வாதமும் ஏற்றத்தாழ்வான சமூகக் கோட்பாடுகளை முன்வைத்த சட்டக் கோட்பாடுக ளான மனுஸ்மிருதியும் அர்த்தசாஸ்திரமும் ஒன்றுக் கொன்று துணை போயின. அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது. இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான்...

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டத்தை விளக்கி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் செப். 30 அன்று காலை முதல் இரவு வரை சென்னையில் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. ஓட்டேரி, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டங்களுக்கு முறையே தட்சிணாமூர்த்தி, சங்கிதா, இராஜி, ப. அருள், மனோகர், கரு. அண்ணாமலை தலைமை தாங்கினர். இரா. உமாபதி, அய்யனார், சுகுமார் கூட்டங்களில் உரையாற்றினர். நாத்திகன் பாடல்களைப் பாடினார். 22 தோழர்கள் பயணக் குழுவில் இடம் பெற்றனர். துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 03102019 இதழ்

உ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்

உ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்

உத்திரப் பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனை யில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் கஃபீல்கான் குற்றமற்றவர் என துறை ரீதியாக விசாரணை நடத்திய குழு அறிக்கை அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சுமார் 80-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் பலியானதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் குழந்தைகளக் காப்பாற்ற தனது சொந்த பணத்தில் வெளியிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றி நற்பெயர் எடுத்த குழந்தைகள் மருத்துவர் கஃபீல்கான் ஆளும் பாஜக அரசால் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால்,...

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

28.9.2019 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக் கோட்டையை அடுத்த சிகரபள்ளி குமார் தோட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி  முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களை மாவட்டக் கழகச் செயலாளர் குமார் வர வேற்றுப் பேசினார். வாஞ்சிநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர் தொடர்ந்து அலேசீபம் பழனி, நீலகிரி கிருஷ்ணன், உத்தனப்பள்ளி முனிராஜ், தாசனபுரம் சுப்பு, யூபுரம் மல்லேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும், கழக செயல்பாட்டு திட்டங் களையும் குறித்து கருத்துக்களை முன் வைத்தனர். அவரைத் தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி கழகத்தின் நிலைப் பாடுகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுச்சியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும், பெரியாரியல் கொள்கைகளை விளக்கியும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை எடுத்துக் கூறியும்...

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ – ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா? மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசினாலே ‘தேச விரோதிகள்’ – ‘ஆன்டி இண்டியன்’ என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ஓலமிடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மட்டுமே ‘தேச பக்தி’ கொண்ட அமைப்பு என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற ‘தேசபக்த’ நெருப்பில் புடம் போட்டு வந்தவர்கள் என்று பூணூலை உருவுகிறார்கள். உண்மையில் இவர்கள் பேசுகிற தேசபக்தி என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் தேசியக் கொடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பதுதான். சரி, அந்த அளவுகோலின்படியாவது இவர்கள் தேச பக்தர்கள் தானா? இல்லை என்பதே இதற்கான பதில். இது குறித்து ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ‘டான்’ இதழில் எழுதிய கட்டுரையை ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு (செப். 29,...

‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ – ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது

‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ – ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது

நீட் தேர்வு – தகுதிக்கான தேர்வு என்றது மோடி ஆட்சி. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் கிடப்பில் போட்டார்கள். அனிதா உள்ளிட்ட மருத்துவராகும் கனவோடு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மூன்று சகோதரி களின் உயிரை ‘நீட்’ பறித்தது. நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் நடந்தன. தவறான விடைகளைத் தந்து பிறகு சலுகை மதிப்பெண் வழங்கினார்கள். வடநாட்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள் தில்லுமுல்லு களை செய்து குறுக்கு வழி களில் தேர்ச்சி பெறும் மோசடி வித்தைகளை அரங் கேற்றுவதற்கு ‘நீட்’ பயன் பட்டது; பயன்படுகிறது. தமிழ்நாட்டிலருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக் கினார்கள். உடன் சென்ற தமிழ்நாடு பெற்றோர் சிலரும் வெளி மாநிலங்களிலே மாரடைப்பால் பிண மானார்கள். நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவச் செல்வங் களை உள்ளாடை வரை ‘சோதனை’ செய்து அவமதித்...

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

20.9.2019 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்வு – ஒரே கல்வி – ஒரே குடும்ப அட்டை – ஒரே பண்பாடு என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழி என்ற ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் நடுவண் ஆட்சி, இந்தியை ஒற்றை அடை யாளமாகத் திணிக்கத் தொடங்கி விட்டது. இந்தி எதிர்ப்பில் களம் பல கண்ட தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஒன்றுபட்டு எதிர்த்து வருவது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதாகும். அதுபோலவே இறை நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளிலும்,  அவர்கள் நடத்தும் வழிபாடுகளிரும் ஒற்றை இந்து பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் என்று இம்மாநாடு இறை நம்பிக்கைக் கொண்ட பார்ப்பனரல்லாதாரை கேட்டுக் கொள்கிறது. குழந்தைகளுக்கு...

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்துக்கு துணை போகிறார்: மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்துக்கு துணை போகிறார்: மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

சுமார் 50,000 பேர் கலந்துகொண்ட பேரணி இந்திய பிரதமர் மோடி அவர்களை டெக்ஸஸ் மாகாணத்தில் “Howdy Modi” (நலமா மோடி) என்ற நிகழ்ச்சியில் பாராட்டி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றை பாஸ்டன் நகர மேயர் மார்ட்டின் வால்ஷ் நடத்தினார். பலரும் தம் கருத்துக்களை பகிர்ந்த அந்த அரங்கில் கீழ்க்கண்ட கருத்து ஒரு டெமோக்ரடிக் கட்சி உறுப்பினரால் முழங்கப்பட்டது. காணொளியில் வெளி வந்த அவரது உரையின் சில பகுதிகள். “கடந்த மாதம், டெக்சாஸின் எல்-பாஸோ நகரில் ஒரு வெள்ளை நிற வெறி பயங்கரவாதி 22 பேரைக் சுட்டுக் கொன்றான். தன் செயலுக்குக் காரணமாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது, நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்று தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டான். நியூசிலாந்தில் கோர தாண்டவமாடிய மனிதனோ, 2011இல் நார்வே நாட்டில் 77 பேர் கொல்லப்பட்ட செய்திதான் இந்த படுகொலை செய்ய தன்னைத்...

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அனைவருக்குமான கல்வி, சமத்துவத்துக்கான கல்வி பற்றிப் பேசியது எல்லாம் போதும்; சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அதையே பேச வேண்டுமா? அதைவிட தரமான கல்விதான் இப்போது முக்கியம் என்கிறது – புதிய கல்விக் கொள்கை. போதுமான மாணவர்கள் வராத பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு பள்ளிகளுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இராஜகோபா லாச்சாரி பள்ளிகளை மூடிய அதே காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கிறது, இந்தக் கல்விக் கொள்கை. 5ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு நடத்த வேண்டுமாம்; தேர்ச்சி பெறும் வரை அதே வகுப்பில் குழந்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமாம்; இந்தத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்; இப்படிக் கூறுகிறது, இந்தக் கல்விக் கொள்கை. 1953இல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுவர்கள், பிற்பகலில் அரை நேரம் அவரவர் பெற்றோர் செய்த குலத் தொழிலை செய்ய உத்தவிட்டார் இராஜ கோபாலாச்சாரி. 5ஆம் வகுப்போடு மாணவர்களைப் பள்ளியிலிருந்து...

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோயில். அதிக வருமானம் வரக்கூடிய கோயிலும் கூட! இந்தக் கோயிலில் 32 பார்ப்பன அர்ச்சகக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகளையும் சடங்குகளையும் நடத்தி வருகின்றன. 32 பார்ப்பன அர்ச்சகர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன? என்பது குறித்து தங்களிடம் எந்தப் பதிவேடுகளும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது பதில் அளித்துள்ளது. அருண்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைக் கேட்டார். இந்த 32 அர்ச்சகப் பார்ப்பனர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணைகளும் இல்லை. ஒரு அர்ச்சகர் முதுமை அடைந்து விட்டால் தனது குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு அவரே அர்ச்சகர் உரிமை வழங்கிவிடுகிறார். அர்ச்சகர் பதவி, பரம்பரை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட...

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

இந்தியாவுக்கு விசுவாசமின்றி அமெரிக்காவிடம் மட்டுமே தேசப்பற்று காட்டுவோம் என்று உறுதிப் பத்திரம் தந்து, அமெரிக்க குடிமக்களாகப் பதிவு செய்த பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிப் பிரிவினர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தினார்கள். மோடியின் பார்வையில் இவர்கள் ‘தேச விரோதிகள்’ என்றாலும் பார்ப்பனர்களாக இருப்பதால் தேசபக்தர்களாகி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்பி ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம். டிரம்ப் – மோடி பங்கேற்ற அமெரிக்காவின் ஹுஸ்டன், டெக்சாஸ் மாநிலங்களில் நடந்த பேரணி யில் (மக்கள் கூடுகை) 50,000 அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப், மோடியின் அரசியல் கொள்கை ஒரு பகுதி அமெரிக்க இந்தியர்களுக்கு உற்சாகம் தரலாம். ஆனால் பெரும் பான்மை மக்களுக்கு நெருக்கடியை உருவாக்குவ தோடு அவர்களுக்கிடையே சமூகத்தில் பிளவுகளை கூர்மைப்படுத்தும் ஆபத்தும் அடங்கியுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும் பான்மையான அமெரிக்க இந்தியர்கள் யார்? அமெரிக்காவின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அமெரிக்கக் குடிஉரிமைக்கு உரிமை...

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது. இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. – பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம் பெரியார் முழக்கம் 26092019 இதழ்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர். அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது....

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது. அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு...

காமராசர் நினைவு நாளான அக்.2இல்  புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

காமராசர் நினைவு நாளான அக்.2இல் புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் கழக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம். ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே, பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘சூத்திர பஞ்சம’ மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்குமான இலகுவான சமூகச் சூழலை உருவாக்கி சமூக நீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பி கல்வி அனைவருக்கும் பரவிடாது தடுக்கவே புதிய கல்விக் கொள்கை வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி – சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான ‘தரமான கல்வி’ பற்றி கவலைப்படவே இல்லை என்று...

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

சென்னை பல்கலைக் கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர். இந்த ஆண்டு தத்துவவியல் துறை யில் ‘பவுத்தம்’ தொடர்பான முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆவார். தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் “நீங்கள் முறை யாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தரவில்லை. அதனால் உங்களின் சேர்க்கையை இரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே பல்கலையில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். தன்னுடைய சேர்க்கை இரத்து செய்யப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்றும் கிருபா மோகன் கூறியுள்ளார். கிருபா மோகன் தற்போது...

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

மோடி அமைச்சரவையில் பல அறிவுக் கொழுந்துகள் இருக்கிறார்கள். டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாடே தவறு. மனிதர்களை குரங்குகள் என்று பேசலாமா என்று ஆவேசப்பட்டார் முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர். அவர் பெயர் சத்யபால் சிங். மகாராஷ்டிராவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். குரங்குகள் இழிவானவை என்று கூறும் இவர்கள்தான் அனுமானை கடவுளாக்கி ‘அனுமான் ஜெயந்தி’யும் கொண்டாடுகிறார்கள். மாற்றுக் கருத்து பேசுவோர் கூட்டங்களில் எல்லாம் கலவரம் செய்யவே சில கும்பல் தமிழ்நாட்டில் அலைந்து  கொண்டிருக்கிறது. அப்படி கலவரம் செய்யும்போது அவர்கள் போடுகிற முழக்கமே ‘ஜெய் அனுமான்; ஜெய்காளி’ என்பதுதான். இப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியுஷ்கோயல் என்பவர் ஒரு அசத்தலான அறிவியல் ஆராய்ச்சியை அவிழ்த்து விட்டிருக்கிறார். “நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு கூறப்படும் புள்ளி விவரக் கணக்குகளை நம்பி விடாதீர்கள். கணிதத்திற்கும் பொருளாதாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுபோல் கணிதத்துக்கும் அறிவியலுக்கும்கூட சம்பந்தம் இல்லை. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டின்...

கழகத்தில் இணைந்தனர்

கழகத்தில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராம், மாதவன், சுரேஷ், விஜய், கரண், அசோக்ராஜ், சின்னப்பதாஸ், மாரியப்பன், மணிகண்டன், தமிழ், மணிசேகரன், தேவேந்திரன், அருண் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்துள்ளனர். கும்பகோணம் அம்மன்பேட்டை கிளை அமைப்பாளராக ராஜ்குமாரும், கும்பகோணம் நகர அமைப்புச் செயலாளராக அசோக்கும் கழகத்தால் தலைமை ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சாக்கோட்டை இளங்கோவன் முயற்சியில் இவர்கள் கழகத்தில் இணைந்துள்ளனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

எது “மோசமாக நடக்கக்கூடும்” என்று சொல்லப்பட்டதோ அது மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.   ஏதோ பகவத் கீதை வசனம் போல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். புகுஷிமா அணுவுலை இப்பூமிக்கு மோசமான ஆபத்தாக முடியும் என்று சொல்லப்பட்டு வந்தது, இப்போது உண்மையாகிவுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவின் மூன்று உலைகள் வெடித்து சிதறின. விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து உலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கின. வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரும், அணுக்கழிவுகளை சேமித்துவைக்கும் குளங்களில் இருந்த நீரும், அணுவுலைகளுக்குள் புகுந்த தண்ணீரும் என “அதிக கதிர்வீச்சு” கொண்ட நீர் 1000 தொட்டிகளில் சேமித்துவைக்கப்பட்டது. இதுதவிர நாளொன்றிற்கு சுமார் 500 டன் “குறைந்த கதிர்வீச்சு” கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேர்ந்து கொண்டிருந்தது.  தினம் தினம் கடலுக்குள் செல்லும் நீரை தடுப்பதற்காக கட்டப்பட்ட “பனிச்சுவர்” முழுமையாக வெற்றிபெறவில்லை, 500 டன் நீர் 100 டன்னாக குறைந்ததே தவிர முழுவதுமாக கட்டுப்படுத்தமுடியவில்லை....

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) பொதுத் தேர்வு முறையை சொல்கிறார்கள் அல்லவா, இப்போது 10 ம் வகுப்பு தேர்வுகளை யார் நடத்துகிறார்கள்? தமிழ்நாட்டில் அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது. இதில் போதுமான மதிப்பெண் வரவில்லையென்றால் ஒரு மாணவர் தனது தேர்வுத் தாளை மறு கூட்டலுக்கு அனுப்ப லாம். திருத்தியதையும் புகைப்படமாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஓரளவிற்கு தேர்வு முறை ஊழல் இல்லாமல் நடக்கிறது. பறக்கும் படை போன்றவை களும் தேர்வு நேரங்களில் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கொள்கை என்ன சொல்கிறதென்றால்?  மாநில தேர்வு முறை, மத்திய தேர்வு முறை மட்டுமில்லாமல் தனியார் கம்பெனிகளும் தேர்வு முறைக்கு விண்ணப்பித்து அனுமதியை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. மாநிலத்திலோ அல்லது மத்திய அரசிடமோ விண்ணப்பித்து அந்த உரிமத்தைப்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பேனா? மாட்டேனா? வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா? அப்படி இருந்தால் வரவேற்கலாம். Multi Discipline என்று சொல் கிறார்களே! அப்படி என்றால் என்ன? Tradition, Ethicsயை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே! எந்த Traditionயை கற்றுக் கொடுப்பது? அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம்? நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது? மூன்று வருடம் BSC Chemistry, BSC...

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

தலையில் அடிபட்டு, நினைவு தப்பி ‘கோமா’ நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கும் விபரீத வேலையில், மத்திய பாஜக அரசின் தலைமையிலான நாட்டின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு (கூhந ஐனேயைnஊடிரnஉடை டிக ஆநனiஉயட சுநளநயசஉh -ஐஊஆசு) ஈடுபட்டுள்ளது. இந்த விபரீதத் திட்டத்திற்கு ஆராய்ச்சி என்ற பெயரில், ஓராண்டு, ஈராண்டு அல்ல, கடந்த 3 ஆண்டுகளாக, மாதம் ரூ. 28 ஆயிரம் விகிதம் நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. அதுவும் ஏதோ ஒரு மருத்துவமனையில் அல்ல, நாட்டின் புகழ்பெற்ற தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்தான் இந்த அவலம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. ரிக் வேதத்தில் இடம்பெற்ற ‘மகாமிரித்யுன்ஜயா’ என்ற மந்திரத்தை ஓதுவதன் மூலம், நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று, டாக்டர் அசோக் குமார் என்பவர் கூறியுள்ளார். இதற்காக ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி, ஐசிஎம்ஆர் அமைப்பிடம் விண்ணப்பமும் அளித்துள்ளார். முதலில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இதற்காக விண்ணப்பித்தபோது, இது...

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

அரசின் அறநிலையத் துறை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட தில்லை நடராசன் கோயில் பார்ப்பன தீட்சதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சில காலம் இருந்தபோது வசூலான உண்டியல் தொகையில் நூறில் ஒரு சதவீதம்கூட இப்போது கணக்கில் வருவது இல்லை; தீட்சதர்கள் சுருட்டிக் கொண்டு விடுகிறார்கள். அரசு அதிகாரி மேற்பார்வையின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.  அவர்களுக்காக வாதாடியவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீட்சதப் பார்ப்பனர்கள் சரிகட்டி விட்டார்கள். அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு இந்த வழக்கில் உறுதியாக எதிர் வழக்காடாமல் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. தீட்சதர்களுக்கு வாதாடிய சுப்பிரமணிய சாமியும் எதிர்த்து வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும் கைகோர்த்தே நின்றார்கள். ‘தீட்சதர்கள் மானுடப் பிறவிகள் அல்ல; அவர்களின் மூதாதையர் வானுலகில் இருந்து...

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

1929லேயே இந்தியை எதிர்த்தார் பெரியார் ‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே  90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம்...

பெண்ணடிமைப் பண்பாடுகளை  பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெண்ணடிமைப் பண்பாடுகளை பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’வின் ‘பெண் இன்று’ வார சிறப்பு மலரில் பிருந்தா சீனிவாசன் எழுதிய கட்டுரை. பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட்களில் ஆண்டுக்கொரு முறை சடங்குக்காக மட்டும் நினைவுகூரப்பட வேண்டியவர் அல்ல பெரியார். ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு செயலிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். காரணம், சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்கமும் மேலோங்கியிருந்த காலத்திலேயே பெண்ணுரிமையைப் பேசியவர் அவர். அறிவிலும் சிந்தனையிலும் நாம் முன்னேறி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலேயே பெண்ணுரிமை குறித்துப் பேசுவது பாவச்செயல் போல் கருதப்படுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைச் சிந்தனையைப் பரப்பியதாலேயே அவர் பெரியாராக உயர்ந்துநிற்கிறார். பெண்களுக்கும் எதிரி : பண்பாடு, கலாச்சாரம் போன்றவை பெண்களை எப்படி காலங்கலாமாக அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றன என்பதைப் பொதுவெளியில் போட்டுடைத்தவர் அவர். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. ஆனால், எதைக் கண்டும் சளைக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். ஆண்களைச் சாராமல் தனித்து...

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

சென்னையில் பேனர் வைக்கத் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆளும் கட்சி யினருக்கு  அது பொருந்தாது. அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுத் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து வேளச்சேரி பகுதியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பொறியாளர் உயிர்ப் பலியாகிவிட்டார். ஸ்கூட்டரில் வந்த அந்தப் பெண் மீது பேனர் விழ, பெண் கீழே விழ, எப்போதும் ‘உயிர்க் கொல்லி’யாகப் பறக்கும் தண்ணீர்  லாரி,  அந்தப் பெண் மீது ஏறி உயிரிழந்து விட்டார். நெஞ்சை உலுக்கி விட்டது கொடூரமான இந்த இளம் பெண்ணின் மரணம். ‘பேனரை’ அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கு சீல் வைத்திருக்கிறது, தமிழகக் காவல் துறை. பேனரைத் தயாரித்துக் கொடுத்த அச்சக உரிமை யாளருக்கு அது சாலையில் சட்ட விரோதமாக வைக்கப்பட இருக்கிறது என்பது எப்படி தெரியும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. துணி பேனரை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரை தேடிப் பிடித்து கைது செய்யாமல் விட்டார்களே, என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்....

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார். மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். பெரியார் முழக்கம் 12092019 இதழ்

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது 5 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் போன்ற எட்டு முக்கிய தொழில் துறைகளில் 7.3 சதவீதம் இருந்த வளர்ச்சி இன்று 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டுமானத் துறை வளர்ச்சி விகிதம் ஒன்றரை ஆண்டு களில் காணாத சரிவை சந்தித் துள்ளது. ஒரே ஆண்டில் (2018லிருந்து 2019 க்குள்) வங்கி மோசடி நாற்பதாயிரம் கோடி ரூபாயிலிருந்து எழுபதாயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது (இது 2013இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்தது). சென்ற 5 ஆண்டுகளில் 5.56 இலட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. அதன் பிறகும் பெரிய தொகையில் கடன் பெற்று திருப்பித் தர முடியாதோர் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பொருளா தாரம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. வாகன உற்பத்தித் துறை மிகவும் சரிவை கண்டுள்ளது. விற்பனை...

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்முவில் நடக்கும் இராணுவ ஆட்சி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வீடுகளில் முடக்கி வைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது. பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட் டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப் பட்டவர்களாக இருந்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. செய்தித்தாள்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட் டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை...

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் பேசினார். பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து: ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் என்பது என்ன? இதை எப்படி செயல்படுத்தப்படும்? இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், உணவுப் பொருள் வழங்கலை எளிமையாக்குவது (ஞடிசவயbடைவைல) என்பதுதான். இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக் கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உரு வாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது. ‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங் களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன் படுத்தினார். அந்த மத...

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக் கணிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி குற்றம்சாட்டியுள்ளார். மூத்தோர் முன்னுரிமைப்படி இல்லாமல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகரை புறக்கணித்து, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதியான வி.ராமசுப்ரமணியத்தை (இவர் ஒரு பார்ப்பனர்) கொலிஜியம் பரிந்துரைத்தது ஏன் என்றும் நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஆகஸ்ட் 28இல் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், ரவீந்திர பட், வி. ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரே மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந் துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகளில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பானுமதி குற்றம் சாட்டியுள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 42ஆவது இடத்தில் உள்ளதாகவும், அதே சமயம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சுதாகர் 3ஆவது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்...

‘சந்திரயான்-2’:  அறிவியலும் மூடநம்பிக்கையும்

‘சந்திரயான்-2’: அறிவியலும் மூடநம்பிக்கையும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2, கடைசி நொடியில் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. ‘சந்திரயான்-2’இல் கலன், லேண்டர், ஆய்வு ஊர்தி என்ற மூன்று முக்கிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட லேண்டரின் தொடர்பு கடைசி நேரத்தில் துண்டித்து போனது. இப்போது அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். “திட்டம் முழுமையாக தோல்வி அடைய வில்லை; வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம்; விரைவில் லேண்டர் தொடர்பு மீட்கப்படும்” என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அறிவியலுக்கு பின்னடைவுகள் தற்காலிகம்தான்; அது எப்போதும் முன்னேறிச் செல்லும். ‘சந்திரனை’ கடவுள்கள் பட்டியலில்  சேர்த்துள்ள நாடு இது. சந்திரனைப் பாம்பு விழுங்குவதுதான் சந்திரகிரகணம் என்று நம்பி அன்று முழுக்குப் போட்டு ‘பாவத்தை’க் கழிக்கும் மூட நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் இந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தவே செய்கிறார்கள். ‘சந்திரயான்-2’ திட்டத்தை ஏழுமலையானிடமும், உடுப்பி...