கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 19092019 இதழ்

You may also like...