மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து காவலாளர்களிடம் விவாதம் செய்தனர். அவர்களை நமது தோழர்களும் வீடியோ படம் எடுத்தனர்.

திருப்பூர் அணி 4 நாள் பயணத்தில் கலந்து கொண்ட தோழர்கள்: துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யப்பன்-திருப்பூர், சங்கீதா, பார்வதி, மூர்த்தி, பெரியார் முத்து, பாலு, நிர்மல்குமார், உக்கடம் கிருஷ்ணன்,  முத்து, மடத்துகுளம் மோகன்,  அகிலன், இராசசிங்கம், சரஸ்வதி, கதிர்வேல் ஆனை மலை, சூலூர் பாபு,

கனல் மதி, பல்லடம் சண்முகம், கார்த்தி பொங்கலூர், மயில்சாமி, இராசாமணி, முனியப்பன் சூலூர், பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, ஆனந்த் ஆனைமலை, சபரி, கிரி, விவேக், அன்னூர் விஷ்ணுபிரசாத், மனோரஞ்சனி, பல்லடம் மணிகண்டன், தேன் மொழி,  முகில்ராசு, இணையம் விசயகுமார்.

பெரியார் முழக்கம் 03102019 இதழ்

You may also like...