Category: பெரியார் முழக்கம் 2018

நன்கொடை

நன்கொடை

விருதுநகர் கழகச் செயற்பாட் டாளர் கு. கணேசமூர்த்தி-திருச்சி தே. சுதாதேவி ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வு ஜன. 21, 2018 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் திருச்சியில் நடந்தது. மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.3000/- நன்கொடை வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் வட்டம் தொழுவந்தங்கல் கிராமத் தில் வீ. முருகன்-நா.பஞ்சவர்ணம் ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வை 11.11.2018 ஞாயிறு அன்று மாவட்ட செயலாளர் இராமர் நடத்தி வைத்தார். கழகத் தோழர்கள் மண விழாவில் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது. (நன்கொடையினை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – ஆர்) பெரியார் முழக்கம் 22112018 இதழ்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (7) தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (7) தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி (6) அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன். ”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய் மொழியான தமிழை கைவிட்டுவிட்டு சமஸ் கிருதத்தை கற்றுக்கொண்டனர். ஆனால் தென்னிந் தியாவில் இருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்களது தாய்மொழியாகப் பேணிக் காத்து வந்தனர். இந்த வேறுபாட்டை மனதில் கொண் டால் திராவிட என்ற பெயரை ஏன் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப்...

பட்டியலிடுகிறார் கேரள முதல்வர் சடங்குகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

பட்டியலிடுகிறார் கேரள முதல்வர் சடங்குகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து – ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள்தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குரு தேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது. நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைப்பாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்… உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்…? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல…நமது சிவனைத்தான் நாம் பிரதிஷ்டித் துள்ளோம்” அங்கு சடங்கு...

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்! சாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்! உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்! எல்லோரும் நிகரென்று உரக்கச் சொல்வோம்! தமிழக அரசே! துணை போகாதே! தமிழக அரசே! தமிழக அரசே! சாதி ஆணவக் கொலைக்கு எதிராய் தனிசட்டம் இயற்றிடு! கைதுசெய் கைதுசெய்! கொலை செய்த கூலிப்படையை உடனடியாக கைதுசெய்! அமைச்சர்களே, அமைச்சர்களே ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு ஊர்வம்புப் பேசிக்கொண்டு ஊர்வலம் போவதற்கா அமைச்சர் பதவி உங்களுக்கு? தமிழர்களே! தமிழர்களே! சாதியைக் கட்டியழுதால் நாதியற்று போவோம் நாம்! பெற்றெடுத்த மகளையும் மணம்முடித்த மருமகனையும் மகள் வயிற்றுப் பிள்ளையையும் கொல்லச் சொல்லும் சாதிவெறி! சாதிவெறி போதையது! தாயுணர்ச்சிக் கொன்றுவிடும் தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும் மாந்தநேயம் கொன்றுவிடும்! பழக்கமாம்! வழக்கமாம்! வழக்கறிஞர் வேலையும் மருத்துவப் படிப்பும் எந்த சாதிப் பழக்கமய்யா! பாட்டன் முப்பாட்டன் பட்டப் படிப்பு படிச்சானா? இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு அரசு வேலைக்குப் போனானா? எல்லாமே மாறும்போது மணமுறைதான் மாறாதா? மந்திரிப்பதவி வாங்கிகிட்டு...

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

நந்தீஷ்-சுவாதியின் கொடூரமான ஜாதிவெறி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (நவம்.19, 2018) சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக்க கழகம், இளந்தமிழகம் ஒருங்கிணைத்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு தரப்பட்ட அறிக்கை விவரம்: கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல்

தலைமைக் கழக அறிவிப்பு அன்பு தோழர்களுக்கு வணக்கம். 14.10.2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற கழகச் செயலவையின் தீர்மானங்களை நினைவூட்டுகிறோம். அவற்றின்  நிறைவேற்றம், முன்னேற்றம், கீழ்க்கண்ட செயல் திட்டங்கள் குறித்து ஆயவும், கலந்துரையாடவும் முதற்கட்ட பயணம் ஒன்றினை திட்டமிட் டுள்ளோம். இப்பயணத்தில் கழகத்தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் – 2018 பட்டியல் 21.11.2018 – புதன் காலை – ஈரோடு வடக்கு – மாலை – ஈரோடு தெற்கு; 22.11.2018 – வியாழன் காலை – நாமக்கல் – மாலை – திருப்பூர்; 23.11.2018 – வெள்ளி காலை – கோவை மாநகர்  – மாலை கோவை புறநகர் (ஆனைமலை); 24.11.2018 – சனி காலை – திண்டுக்கல் (பழனி) -மாலை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர் (திருச்சி); 30.11.2018 – வெள்ளி காலை – சேலம் கிழக்கு- மாலை – சேலம்...

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது?

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது?

எம்.டி.எம்.ஏ.வில் என்ன நடக்கிறது? அவுட் லுக் தரும் ஆய்வு: ராஜீவ் கொலை விசாரணைக்காக 1998ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப் பட்ட – சி.பி.அய்யின் பல்நோக்கு விசாரணை ஆணையம் (எம்.டி.எம்.ஏ) முடங்கிக் கிடக்கிறது. கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண் டிருக்கும் – மக்கள் மறந்து போன இந்த விசாரணை அமைப்பு –  இம்மாதம் சி.பி.அய். அமைப் பில் உருவான குழப்பங்களின்போது  மீண்டும் செய்தியானது. சி.பி.அய் அமைப்பில் நடந்த அதிகார மாற்றங்களின்போது – அந்த அமைப்பில் இணை இயக்குநராக நான்காம் இடத்தில் இருந்த அருண் குமார் சர்மா – இந்த நிறுவனத்திற்கு அதிகாரியாகத் தூக்கியடிக்கப்பட்டார். நாட்டின் ஆகப் பெரும் புலனாய்வு அமைப்பின் உள் முரண்பாட்டால் ஏற்பட்ட சர்மாவின் நியமனம், எம்.டி.எம்.ஏ அமைப்பையே சந்தேகத்துக்குரிய தாக்கி உள்ளது. சி.பி.அய்.யில் திறமையானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. வேறு புலனாய்வு நிறுவனங் களைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றார்கள். ராஜீவ்...

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (6) திராவிடம்: ஈழத்து தமிழ் அறிஞர்களும் அம்பேத்கரும் தந்த விளக்கம் என்ன?

குழப்பவாதிகளுக்கு கொளத்தூர் மணி விளக்கம் (6) திராவிடம்: ஈழத்து தமிழ் அறிஞர்களும் அம்பேத்கரும் தந்த விளக்கம் என்ன?

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி 2005ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. ‘திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிவத்தம்பி ஒரு நூலை எழுதினார். இவர் நா.கைலாசபதி போன்ற மார்க்சிய சிந்தனை கொண்ட தமிழறிஞர் களின் தொடர்ச்சியாகவும், தமிழ் ஆளுமை யாகவும், அறிஞராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஆனால் இவரைத்தான் உலகத் தமிழ் மாநாட்டில் அனுமதிக்காமல் விமானத்திலேயே வைத்து அப்படியே அனுப்பினார் ஜெயலலிதா. அந்த நூலில் அவர் எழுதிய சில சொற்களை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். “தமிழ்நாட்டில் வாழும் பிராமணர் அல்லாத பாதிக் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் தங்களின் சமூக நிலைமையையும், தங்களின் அசைவு இயக்கத்தையும் வரையறை செய்த பிராமண கருத்து நிலை தம்மீது திணித் ததென அவர்கள் கண்ட மேலாண்மைக்கு...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 17.09.2018 அன்று (திங்கள்) காலை 10 மணியளவில், எடப்பாடி ரோடு காவேரி நகரில், நகரத் தலைவர் தண்டபாணி பெரியாரின் பிறந்தநாள் விழா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காவேரி நகரில் தோழர் பரிமளம் கொடியேற்றினார். பாலம் அருகில், பெரியாரின் பொன்மொழி வாசக பலகையை சஜீனா திறந்து வைத்தார், மீனாட்சி கொடியேற்றினார். பேருந்து நிலையத்தில்  கலைசெல்வி  பொன்மொழி வாசக பலகையை திறந்து வைத்தார்.   கலைவாணி கொடியை ஏற்றினார். அங்கு தோழர்களால் கடவுள் மறுப்பு பாடல் பாடப்பட்டது. பின் நகர காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், தந்தை பெரியாரின் வாசகங்கள் அடங்கிய அட்டை மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது. தண்டபாணி, செல்வி சைக்கிள் கடையின்  சின்ன நூலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை ரேணுகா திராவிடமணி திறந்து வைத்தார், இனிப்பு வழங்கப்பட்டது. அங்கு, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நகரில்  ரேணுகா...

கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து – சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூகசீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழி நடத்தப் பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று விவேகானந்தரால் விமர்சிக்கப் பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாகமுன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டா லும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த கால கட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு...

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

‘குடிஅரசு’ வழக்கு விசாரணை

முன்னாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (தற்போது திராவிடர் விடுதலைக் கழகம்) மற்றும் முன்னாள் பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் (தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் மீது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான  திரு. கி. வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காபிரைட் ஐ (உடியீலசiபாவ) மீறியதாக- அதாவது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே சொந்தமான பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை மற்றும் இதர தொகுப்புகள் , புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மீறி வெளியிட்டதற்காக ரூ. 15,00,000/- இழப்பீடு கேட்டு  2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில்  ஒன்றன்பின் ஒன்றாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திரு. கி. வீரமணி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுமல்லாமல், பெரியார் தன் எழுத்துகளுக்கு தனியாக காப்புரிமை கொண்டாடாததால் பெரியாரின் எழுத்தும் பேச்சும் , அவர் இறந்து 25 ஆண்டுகள் கழிந்ததும் அதே...

பார்ப்பன-பனியா சுரண்டலுக்கு எதிராக பெரியார் வழியில் ‘சூத்திர’ புரட்சி தொடங்க வேண்டும் ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா முழக்கம்

பார்ப்பன-பனியா சுரண்டலுக்கு எதிராக பெரியார் வழியில் ‘சூத்திர’ புரட்சி தொடங்க வேண்டும் ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா முழக்கம்

இந்தியா பார்ப்பனர்-பனியாக்கள் பிடியில் தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இது மேலும் வலிமை பெற்று விட்டது. பெரியார் தொடங்கி வைத்த ‘சூத்திரர்கள்’ புரட்சி நடந்தாக வேண்டும் என்று சமூக இயல் ஆய்வாளரும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளரும் பேராசிரியருமான காஞ்சா அய்லய்யா அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நடத்திய “கருத்துரிமை போற்றுதும் – எழுத்தாளர்கள் கலைஞர்களின் ஒன்றுகூடல்” – 2018 அக். 19 அன்று காமராசர் அரங்கில் காலை முதல் இரவு வரை நடந்தது. பேராசிரியர் காஞ்சா அய்லய்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பெரியாருக்கு வணக்கம்; அம்பேத்கருக்கு வணக்கம் என்று ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய அவர், இந்தியாவிலேயே மனுவாதி களுக்கு எதிராக சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி நிலையங்களைத் திறந்த சாவித்திரி பாய் புலே, பெரியார் அம்பேத்கர், மார்க்ஸ் படங்கள் இதுபோன்ற மாநாடுகளில் இடம் பெற வேண்டும் என்று பலத்த கரவொலிகளுக் கிடையே தெரிவித்தார். மோடியின் ‘தேசியம்’...

கழகத் தலைவர் பங்கேற்ற  எஸ்.டி.பி.அய். மாநாடு

கழகத் தலைவர் பங்கேற்ற எஸ்.டி.பி.அய். மாநாடு

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற எஸ்.டி.பி.அய்.  அமைப்பின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட் டின் காலை அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘நெருக்க டிக்குள்ளாகும் மத சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கு. இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில...

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது . புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ்...

புல்லட் இரயில் : கடன்சுமை  ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

புல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது…!

ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன்தொகையில் திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திட்டப்பணிகளே இன்னும் துவங்கப்படாத சூழலில் கடன்மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ‘இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம்’ என்றும் இத்திட்டத்தை அவர் அழைத்தார். மேலும், குஜராத் தேர்தலையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியா போன்ற...

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம்  (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் (5) விடுதலைப் புலிகளே தங்களை திராவிடர்கள் என்றே பதிவு செய்தனர்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி பெரும்பான்மை மக்களாகிய நம்மை, எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களாகிய பார்ப்பனர்களுடன் ஒப்பிட்டு நம்மைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்று கூறுவதா என்று கேட்ட பெரியார். சிதம்பரத்தில் ஒருமுறை பேசும்போது கூட பெரியார் கேட்டார். ”உங்களைப் பார்த்து ஈரோட்டவர் அல்லாதவர்களே (சூடிn நுசடினயைளே) என்று நான் பேச இயலுமா? ஈரோட்டிலிருந்து நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். நீங்கள் 10,000 பேர் இருப்பீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் இந்த ஊர். அதுபோலத்தான் எண்ணிக்கை யில் குறைவாக இருக்கிற பார்ப்பனர்களை ஒப்பிட்டு நம்மைக் குறிக்க பார்ப்பனர் அல்லாதவர் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” என்று பேசினார். அதற்கு மாற்றாக ஒரு உடன்பாட்டுச் சொல்லாக, எதிர்மறைச் சொல்லாக அல்லாமல், நேர்மறைச் சொல்லாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிடர் என்ற சொல்லை 1939ஆம் ஆண்டு...

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

வெறுப்பு அரசியலை வளர்க்கும் ‘குஜராத் மாடல்’

பீகார் – உத்திரப்பிரதேச இந்திக்காரர் களையே விரட்டி அடிக்கிறது, மோடியின் குஜராத். இவர்கள் ‘இந்து’ தேசத்தை உருவாக்கப் போகிறார்களாம். உண்மையில் ‘குஜராத்’ என்பது மோசமான உணர்ச்சியின்  உதாரணம்தான். பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜக வினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங் களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண் டிருக்கிறது. அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரண மாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குஜராத்தி லிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங் களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உண்மையில்...

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன்  அரசு பின் வாங்கியது

தலையங்கம் ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் தங்களுடைய ஜாதியப் பெருமைக ளையும் ‘தீண்டாமை’ வெறுப்பு களையும் சேர்த்து சுமந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற ‘தலித்’ மக்களுக்கு எதிராக ‘தீண்டாமை’ மறைமுகமாக திணிக்கப்பட்டே வருகிறது. இதற்காகவே ‘ஜாதிக் கண்காணிப்பு’ என்ற அமைப்பு ஒன்று பல ஆண்டு களுக்கு முன்பே இலண்டனில் உருவாக்கப்பட்டது. ‘ஜாதிப் பாகுபாடு காட்டுவதும் இனபாகுபாடுதான்’ என்று வலியுறுத்திய இந்த அமைப்பு, ஜாதிப் பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறத்தி வந்தது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் ‘இந்து’ மதத்தின் பெயராலும் ‘கோயில் பாதுகாப்புக் குழு’ என்ற பெயராலும் சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்று அரசை நிர்ப்பந்தித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இது குறித்து விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வந்தன. ஜாதியப் பாகுபாடு இனப் பாகுபாடுதான்...

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

சபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது

“இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் இந்து மதத்துக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; பெண்ணுரிமையை ஏற்கிறோம்; ஆனால் பெண்களுக்கு சமத்துவத்தை மறுக்கும் மதங்களை எதிர்க்க மாட்டோம்” என்பதுதான் இங்கே பொதுவான முழக்கமாகவே இருந்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக சபரிமலை அய்யப்பன் கோயில் ‘தீட்டாகிறார்கள்’ என்ற காரணத்துக்காக பெண்களில் கோயில் வழிபாட்டு உரிமைக்குப் போடப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆனாலும் அய்யப்பன் கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்களான தந்திரிகள், கேரள அரசை மிரட்டி வருகிறார்கள். கேரள அரசு தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு போட்டால்தான் அரசு பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார்கள். ‘நாயர் சொசைட்டி’ என்ற உயர்ஜாதியினரின் அமைப்பும் பந்தளம் மன்னர் குடும்பமும் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியை மிரட்டுகிறது. கேரள காங்கிரஸ்காரர்களும் பா.ஜ.க.வின ரோடு கைகோர்த்துக் கொண்டு பெண்கள் உரிமைக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சும் பெண்களுக்கு எதிராகவே பேசுகிறது. பெண்களையே இன்னும் ‘சுயம்சேவக்குள்ளாக’ அங்கீகரிக்காமல் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராகத் தடை செய்து வைத்திருக்கும் அமைப்பிடமிருந்து...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட கோபி ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தமிழர் கல்வி உரிமை பரப்புரை பயணம் ஆகியன 30.09.2018 ஞாயிறு அன்று சிறுவலூரில் நடைபெற்றது. சிறுவலூர் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடிக்கம்பத்தில் கழக வழக்குரைஞர் தோழர் செகதீசன் கழகக் கொடி யினை ஏற்றி வைத்து பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். அப்பகுதியில் நம் தோழர்களுக்கு கோபி ஒன்றியத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தேனீர் வழங்கி நம் பயணம் தொடர வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து எலந்தக்காடு பகுதியில் தோழர் சுந்தரம், மூப்பன் சாலையில் நதியா, கிழக்கு தோட்டம் பிரிவில் கிருட்டிணசாமி, மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் பெரியார் பிஞ்சு அகிலன், கொளப்பலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார்...

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்: கழகத் தோழர்கள் கைது !

திருப்பூரில் கடந்த 22.10.2018 திங்கள் கிழமை அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஒன்று வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட் டிருந்தார். அதில் என்ன பயிற்சி என்றோ, யார் நடத்துகிறார்கள் என்றோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டிருந்தது. 22.10.2018 அன்று காலை பயிற்சி வகுப்புக்குச் சென்ற சுமார் 600 ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வகுப்பை நடத்த வந்தவர்கள் “இதிகாச சங்காலன சமிதி” என்ற வடமொழிப் பெயருடனும் வரலாற்றுத் தொகுப்புப் பேரவை என்று தமிழிலும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். பயிற்சியை நடத்தி யவர்கள் சுப்பிரமணியம் மற்றும் டி.வி.ரங்கராஜன் ஆகியோர். இதனை ஒருங்கிணைத்தவர் இந்துத்துவ அமைப்பின்...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (4) நாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி இன்றைக்கும் ராமனை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. நாம் இராவணனை உயர்த்திப் பிடிக்கிற கூட்டம். இருவரும் கற்பனைக் கதாபாத்திரங் கள் என்பதில் நமக்கு எந்தக் கருத்து மாறு பாடும் இல்லை. அவர்கள் எழுதியபடியே பார்த்தாலும்கூட என்றுதான் நாம் சொல்லு கிறோமே தவிர, நாம் அதை நம்பிக்கொண்டு பேசவில்லை. கம்பர் ஒரு இடத்தில், ’இரக்கம் எனும் பொருளிலா அரக்கன்’ என்று இராவணனைப் பற்றி சொல்லியிருப்பார். இராமன்தான் தீயவன், இராவணன் அல்ல என்று நிறுவுவதற்காக நாடகம் ஒன்று நடந்தது. எல்லோரும் இறந்துபோன பிறகு வழக்கு நடக்கும் என்பதுபோல கற்பனையில் இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கும். நீதி தேவன் முன்னால் எல்லோரும் நிற்பார்கள். என்னை இரக்கமெனும் பொருளிலா அரக்கன் என்று கம்பர் சொல்லிவிட்டார் என்று கம்பர் மீது இராவணன்...

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தேவ-அசுரப் போராட்டமே தீபாவளி பண்டிகை – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில்...

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

தலையங்கம் வேலை வாய்ப்புகளைத் தடுக்கும் தென்னக தொடர்வண்டித் துறை

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்குவது இல்லை. அதன் காரணமாக இளையச் சமூகம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. படித்த இளைஞர்களே வேறு வழியின்றி கிரிமினல்களாக மாறும் நிலையை ஆட்சிகள்தான் உருவாக்கி வருகின்றன. உருவாகும் வேலை வாய்ப்புகளைக் கூட நிரந்தரப் பணிகளாக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக குறைந்த ஊதியத்தில் நியமிக்கவே மத்திய மாநில ஆட்சிகள் விரும்புகின்றன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தொடர்வண்டித் துறையில் 13 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் தென்னக தொடர்வண்டித் துறையில் மொத்தம் 1இலட்சத்து 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய மண்டலங்கள் அடங்கியுள்ள இப்பிரிவில் 15,000 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. தொடர்வண்டித் துறையில் சில மாதங்களுக்கு முன்பு, 90,000 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு விண்ணப்பங்கள் கோரியபோது, வந்த விண்ணப்பங்கள் 2 கோடியே 30 இலட்சம். அந்த...

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!

பட்டாசுகளுக்கு முழுமையான தடைஇல்லை என்றாலும் ‘தீபாவளி’ நாளில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். 6 மாதம் மற்றும் 14 மாத குழந்தைகள் சார்பில் அவர்களின் பெற்றோர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.இந்தப் பட்டாசு வெடிப்பால் உருவாகும் மாசு – அதனால் தங்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளால் உயிர் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே பட்டாசுகளுக்கே தடை போட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த தொழிலாளர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கமான ‘சி.அய்.டி.யு.’ சங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “காற்று...

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

திராவிடர் இயக்க எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இணையர் செ.தாமரைச் செல்வி 17.10.2018 மாலை முடிவெய்தினார்.  இராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்திற்கு 18.09.2018 கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் இல்லம் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினர். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா

17.09.2018 அன்று காலை 9 மணிக்கு 20 இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கொள்கை பாடல்களை ஒலிக்கச் செய்து ஊர்வலமாகச்  சென்று குருவ ரெட்டியூர் பகுதியிலுள்ள பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தி.க மற்றும் காவலாண்டியூர் பகுதி தி.வி.க. தோழர்கள் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறகு காலை சிற்றுண்டி குருவைப் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். காவலாண்டியூர் பகுதி தோழர்கள் சுமார் 50 பேர் ஊர்வலமாகச் சென்று மிளகாய் பொதை, கண்ணாமூச்சி, பாலமலை பிரிவு, செ.செ. காட்டுவளவு , செட்டியூர், மூலக்கடை பகுதிகளில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரைப் பற்றி  காவை ஈஸ்வரன் உரையாற்றினார். பிறகு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிமிர்வோம் மற்றும் கழக வெளியீடுகள் அடங்கிய தொகுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்ணாமூச்சி, செ.செ. காட்டுவளவு, காவலாண்டியூர், செட்டியூர்,...

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 7ஆவது சந்திப்பு தலைமை அலுவலகத்தில் 21.10.2018 மாலை 6 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கடந்த மார்ச், ஏப்ரல் மாத இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்கர் ‘டார்வினின் பரிணாமக் கோட்பாடு’ என்ற தலைப்பிலும், செந்தில்குமார் (குனுடு) ‘ஆர்.எஸ்.எஸ். பிடியில் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பிலும், ஜெயபிரகாஷ் ‘தமிழ் சினிமாவில் சாதிய ஊடுறுவல்கள்’ என்ற தலைப்பிலும் தங்களது பார்வையையும், கருத்துகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இமானுவேல் துரை ‘நிமிர்வோம் இதழைக் குறித்தும் அதன் தேவையை குறித்தும்’ பேசினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இதழ்களைக் குறித்து தோழர்களின் கருத்துகளுக்கும், வெளியிடப்படும் கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும் சிறப்பாக கருத்துரையாற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற “சீரடி சாய்பாபாவின் பின்னணி என்ன?” என்ற கட்டுரையைக் விளக்கியும் உரையாற்றினார்.  வாசகர் வட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (3) ‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்

திராவிட நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று அண்ணா கூறவில்லை; பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய கூட்டாட்சியை பேசினார். அம்பேத்கரும் இதே கருத்தைத்தான் கூறினார் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற வார தொடர்ச்சி தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உருவான பிறகுதான் வங்காளத்தில் இந்தி எதிர்ப்பு பேசப்பட்டது. மராட்டியத்தில் பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒற்றுமையில் ஒரே இந்தியா பேசிய பல தலைவர்கள் இந்தியை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். அம்பேத்கர் கூட இதைத்தான் பேசி யிருக்கிறார். தென்னிந்தியாவும், வட இந்தியாவும் வேறு என்று அம்பேத்கர் பேசுகிறார். ஆரம்பத்தில் அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது ஒன்றுபட்ட இந்தியாவைப் பற்றி அவர் பேசியிருக்கலாம். அந்த அரசியல் சட்டம் அவர் மட்டுமே எழுதியதல்ல. எல்லோரும் இணைந்து எழுதியது. அதை சட்ட சொற்களால்...

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

03.10.2018 அன்று மாலை 4.30 மணியளவில் செங்குன்றம் மார்கெட், முசாபர் பங்களா பகுதியில் பெரியார் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சுந்தரவள்ளி, பெரியார் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னுரை வழங்கிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி, “பெரியார் அவர்களோடு இசுலாமிய சமுதாய தலைவர்களும் மக்களும் முன்பு மிகவும் இணக்கமாக பயணித்ததை குறிப்பிட்டு தற்போது இசுலாமிய சமுதாயம் பெரியாரிடம் இருந்து சற்று விலகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடவுள் மறுப்பை மட்டுமே காரணம் காட்டி பெரியாரிடம் இருந்து இசுலாமிய சமுதாயம் தள்ளி இருக்கவேண்டியதில்லை பெரியாரிடம் கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் தங்கள் சமுதாயத்திற்கு நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “இன்றைய காலகட்டத்திற்கு பெரியாரின் மிக அவசியத் தேவையை தங்கள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும்” தோழர் அலீம் அல்புகாரி குறிப்பிட்டார். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

61 பேரை பலி கொண்ட ‘இராவணன் எரிப்பு’ தசரா நடத்தியவர்களை கைது செய்: பொது மக்கள் போராட்டம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் ‘இராவணனை’ எரிக்கும் தசரா விழா கொண்டாட்டத்தின்போது இரயில் தண்டவாளத்தில் நின்று விழாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் மீது இரயில் மோதி 61 பேர் பலியாகி விட்டார்கள். விழாவில் பட்டாசு வெடிப்பு சத்தத்தில் இரயில் வந்த சத்தம்  கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது ‘தசரா விழா’ கொண்டாட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் ஆவேசமாகப் போராடி வருகிறார்கள். தொடர்வண்டி ஓட்டுனரையும் கைது செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் படை வந்தபோது போலீசார் மீது மக்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினர். 61 பேரை சாகடித்த இந்த கொண்டாட்டத்தில் தொடர்வண்டி காவல்துறை எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கையை தயார் செய்துள்ளது. விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள். மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் விஜய் மதன் அவரது மகன் சவுராப் மதன்...

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

வைணவக் கோயிலான காஞ்சிபுரம் தேவ ராஜசாமி கோயிலில் தென்கலை அய்யங்கார் களுக்கும் வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. வடகலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘தமிழ் பிரபந்தங்களை’ பாடக் கூடாது என்கிறார்கள். தென்கலை அய்யங்கார்கள், ‘ஆச்சாரியா வேதாந்த தேசிகரின்’ தமிழ் பிரபந்தங்களைப் பாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ் பிரபந்தம் பாட அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ் பிரபந்தத்தைப் பாடலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்.22ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவர் தமிழ் பிரபந்தத்தை ஒரு நாள் மட்டும் பாடாமல், தொடர்ந்து பாடுவதால் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சரசுவதி பூஜை’ நாளன்று நீதிமன்றம் விடுமுறை. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் வீட்டிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

நாங்களும்கூட’ (Metoo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது. இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது.  பொதுப் புத்தியில் திணித்து வைத்தது – மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் – பெண்கள் குறித்த பார்வைகள் தான். எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா?  கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு என்பது எந்த விதமான ஜாதி,மதம்,இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுளின் படங்களோ அதற்கு வழிபாடோ நடத்தப்படக் கூடாது என்பது அரசாணை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி 17.10.2018 காலை கொளத்தூர் ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் காவல்நிலையம், கண்ணாமூச்சி தொடக்க கூட்டுறவு வங்கி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அரசு அலுவலகங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று அதற்கான அரசாணையை கொடுத்தனர். அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மீறி 17.10.2018 மாலை கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரான காவலாண்டியூர் சசிகுமார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தோழர்கள் சென்று கேட்டதற்கு அது அவரவர் விருப்பம் , யார்...

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட  வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

பா.ஜ.க. ஆட்சியில் சட்ட வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

நக்கீரன் எழுதிய கட்டுரைக்காக தமிழக ஆளுநர்மாளிகை, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது காவல்துறையில் நேரடியாக புகார் தந்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 124அய் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இந்த சட்டத்தில் பிணை கிடைக்காமல் தடுப்பதற்கும் பிடிவாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், ஆளுநர் இந்தக் கொடூர சட்டத்தைக் கையில் எடுத்தார். எழும்பூர் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டம் வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி சிறையிலடைக்க மறுத்து விட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பலரும் சட்ட வரம்புகளை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க...

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி...

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் கழகத் தலைமைக் குழு ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் அக்.13, 2018 பிற்பகல் 2 மணியளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு  அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். களப்பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றை 5 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு ஆகும் செலவை 10 கழகப் பொறுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுகளை விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழக ஏடுகளுக்கான சந்தா சேர்ப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கழகத் தோழர்களை கழகத் தலைவர் பொதுச்செயலாளர் சந்தித்து, கழக...

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் கழகச் செயலவையில்…

திருப்பூர் செயலவையில் பங்கேற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கருத்துகளை முன் வைத்தனர். செயலவைக் கூட்டங்களில் கழகத் தலைவருக்கு வணக்கம் கூறுவதற்கு பதிலாக நன்கொடை வழங்கி உரையைத் தொடர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்து, மடத்துக்குளம் மோகன் தலைவருக்கு ரூ.500/- வழங்கி உரையைத் தொடர்ந்தார். தோழர்கள் ஆர்வமாக வரவேற்றனர். சிலர் அதேபோல் ரூ.100, ரூ.200 என்று தலைவரிடம் வணக்கம் கூறி நன்கொடை வழங்கினர். மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. சாக்கோட்டை இளங்கோவன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடி தோழர்களை மகிழ்வித்தார். தலைமைக்குழு மற்றும் செயலவைக் கூட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கழகக் கட்டமைப்பு நிதி – கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பில் மாவட்டங்களின் பங்களிப்பைத் தோழர்கள் அறிவித்தனர். நிமிர்வோம் இதழுக்கு மாதம் 1000 நன்கொடை தருவதாக அறிவித்த ஆசிரியர் சிவகாமி, முதல் தவணையாக ரூ.5,000 வழங்கினார். சென்னை அன்பு தனசேகர் மாதம் ரூ.1000 வழங்குவதாக...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று...

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

கல்விக்கண் திறந்தது ‘சரசுவதி’யா? ‘காமராசரா’?

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வரு கின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக் கின்றன.  இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. பண்டிகைக் கொண்டாடும் நம்பிக்கை யாளர்களில் 60 சதவீதம்...

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்கரம் நடந்தது என்பது உண்மையா?

144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு. வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது. அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான். இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான். அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889இல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டித் தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய்ச் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி. 1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.  144 வருடங்களுக்கு...

பார்ப்பனிய பா.ஜ.க.  நடத்தும் ‘புஷ்கரம்’

பார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’

வேதகால பார்ப்பன ஒடுக்குமுறை கலாச் சாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க பார்ப் பனர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக் கிறார்கள். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் தாமிரபரணி மகா புஷ்கரம். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி, பிறகு விடுதலையான இறந்துபோன காஞ்சிபுரம் ஜெயேந்திரன், காவிரி புஷ்கரத்தை நடத்தினார். இப்போது தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே கடலில் கலக்கும் ஒரே நதியான தமிழர் பண்பாட்டோடு இணைந்து நிற்கும் தாமிர பரணிக்கு வேத முலாம் பூசி புஷ்கரம் நடத்துகிறார்கள். அது என்ன புஷ்கரம்? குருபகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசியான விருச்சிக இராசிக்கு ‘வீடு’ மாற்றுகிறானாம். முன்பணம் வாடகை இல்லாமல் வீடுகளை மாற்றிக் கொள்ளும் உரிமை இந்த இராசி பகவான்களுக்கு மட்டுமே உண்டு. தாமிரபரணி விருச்சிகராசிக்கான நதியாம். 144 ஆண்டு களுக்குப் பிறது இந்த விழா கொண்டாடப் படுவதால் இது மகாபுஷ்கரமாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது புஷ்கரமாம்.இந்த ‘மகா புஷ்கரத்’துக்கு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்...

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

சங்கர் மரணத்துக்கு செயலவை இரங்கல்

900 மாணவர்களை அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தவரும் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அகில இந்திய தேர்வுப் போட்டிகளுக்கு பயிற்சி அளித்தவரும் சமூக நீதி உணர்வோடு சமூக நீதிக்கான திறவுகோலாக தனது சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியை உருவாக்கிக் கட்டி வளர்த்தவருமான சங்கர், தனது இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. அவரது மறைவுக்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிய திருப்பூரில் கூடிய கழக செயலவை, 2 நிமிடம் மவுனம் காத்து மரியாதை செலுத்தியது. பெரியார் முழக்கம் 18102018 இதழ்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக;  ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

பெண்ணுரிமைப் போற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு வரவேற்பு; ஹைடிரோ கார்பன் திட்டங்களை நிறுத்துக; ஆளுநர் பதவியே தேவை இல்லை 7 பேர் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது திருப்பூர் செயலவையின் தீர்மானங்கள்

திருப்பூரில் அக்.13ஆம் தேதி கழக தலைமைக் குழு ஆலோசனையைத் தொடர்ந்து அடுத்த நாள் அக்.14ஆம் தேதி கழக செயலவை திருப்பூர் வாலிப்பாளையம் ‘டைய்யர்ஸ் அசோசியேஷன்’ அரங்கில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் தொடங்கி யது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் வரவேற்புரை யாற்றினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி செயலவையின் நோக்கங்களை விளக்கி அறிமுக உரையாற்றினார். 40 செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாலை 6 மணி வரை செயலவை நீடித்தது. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். செயலவை தீர்மானங்களை முன்மொழிந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்பு களை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது....

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது. முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு...

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

கடுவனூரில் கழகத் தலைவர் பங்கேற்ற கூட்டம்

1.10.2018 அன்று விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் கல்வி உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம், பாக்கம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக கடுவனூர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து பாக்கம் பொதுக் கூட்டம் மேடை வரை தோழர்கள் பறையிசையுடன் பேரணியாக வந்தனர். கடுவனூர் – பாக்கம் இரண்டு ஊர்களில் பெரியார் சிந்தனை பலகை திறப்பு, கல்வெட்டு திறந்து கழகக் கொடியையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, பொதுக் கூட்டம் கழகத் தோழர்களின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. பெரம்பலூர் தாமோதரன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற அறிவியல் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இரா. துளசிராஜா தலைமை வகித்தார். என்.மா. குமார், தே. இராமச்சந்திரன், மு. நாகராஜ், சா. நீதிபதி,  கே.வே. ராஜேஷ், சி. ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க ச.கு....

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது. அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம்  சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம்  கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது. கீழ்வானி பகுதியில்  வீரா கார்த்திக்,  இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் ...

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

உயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

மத்திய அரசு உயர்கல்வி தொடர்பாக விவாதத்திற்கு முன்வைத்துள்ள மசோதா முன்வரைவு முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழுவை அழித்தொழிக் கிறது. உயர்கல்விக்கு மானியம் வழங்கும் அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கையில் கொடுக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிற்குப் பதிலாக உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற புதிய அமைப்பை முன் மொழிகிறது. உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்று கூறும் மசோதா இந்நிறுவனங்கள் எந்த ஒழுங்காற்று முறையுமின்றி தம் விருப்பப்படி செயல்பட வழி வகுக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் அம்சங்களை கண்காணிக்கவும் பொதுவாக உயர்கல்வி பற்றியப் பரிந்துரைகளை அவ்வப்பொழுது தேவை கருதி உருவாக்கி அரசுக்கு அளிக்கவும் புதிதாக அமைக்கப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்திற்கு (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn) தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைவரையும் துணைத் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறை மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது....

கழக ஏட்டுக்கு 100 சந்தா;  கால்பந்து போட்டிகள்  மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார். முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி...