சாதியைக் கட்டியழுதால்… நாதியற்றுப் போவோம் நாம்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்

முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்!

சாதி ஆணவக் கொலைகளுக்கு

முடிவுகட்டுவோம் முடிவுகட்டுவோம்!

உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்!

எல்லோரும் நிகரென்று

உரக்கச் சொல்வோம்!

தமிழக அரசே! துணை போகாதே!

தமிழக அரசே! தமிழக அரசே!

சாதி ஆணவக் கொலைக்கு எதிராய்

தனிசட்டம் இயற்றிடு!

கைதுசெய் கைதுசெய்!

கொலை செய்த கூலிப்படையை

உடனடியாக கைதுசெய்!

அமைச்சர்களே, அமைச்சர்களே

ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு

ஊர்வம்புப் பேசிக்கொண்டு

ஊர்வலம் போவதற்கா

அமைச்சர் பதவி உங்களுக்கு?

தமிழர்களே! தமிழர்களே!

சாதியைக் கட்டியழுதால்

நாதியற்று போவோம் நாம்!

பெற்றெடுத்த மகளையும்

மணம்முடித்த மருமகனையும்

மகள் வயிற்றுப் பிள்ளையையும்

கொல்லச் சொல்லும் சாதிவெறி!

சாதிவெறி போதையது!

தாயுணர்ச்சிக் கொன்றுவிடும்

தந்தையுணர்ச்சிக் கொன்றுவிடும்

மாந்தநேயம் கொன்றுவிடும்!

பழக்கமாம்! வழக்கமாம்!

வழக்கறிஞர் வேலையும்

மருத்துவப் படிப்பும்

எந்த சாதிப் பழக்கமய்யா!

பாட்டன் முப்பாட்டன்

பட்டப் படிப்பு படிச்சானா?

இடஒதுக்கீடு வாங்கிக்கிட்டு

அரசு வேலைக்குப் போனானா?

எல்லாமே மாறும்போது

மணமுறைதான் மாறாதா?

மந்திரிப்பதவி வாங்கிகிட்டு

யார்யாரோ சொத்துசேர்க்க

சாதிமயிரத் தூக்கிக்கிட்டு

தலைமேல சுமக்கணுமா?

மானம் போச்சு என்றுசொல்லி

மல்லுகட்டும் ஊர்க்காரன்

நீ பெத்த மகளுக்கு

சோறூட்டி வளர்த்தானா?

சாதிய ஆணவத்தால்

நிறையாது! நிறையாது!

உன்வயிறு நிறையாது!

சாதிய ஆணவத்தால்

உன் மனசு குளிராது!

தமிழர்களே தமிழர்களே!

சாதியைக் கட்டியழுதால்

நாதியற்றுப் போவோம் நாம்!

பெரியார் முழக்கம் 22112018 இதழ்

 

You may also like...