Category: குடி அரசு 1930

நீலாவதிக்கும் 0

நீலாவதிக்கும்

நீலாவதி – ராம சுப்ரமணியம்                      திருமண அழைப்பு ஐயா:-  “குடி அரசு”, “திராவிடன்”, “குமரன்” பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி   மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம் ராம சுப்ரமணியத்திற்கும் பிரமோதூத ´ ம் புரட்டாசி µ 19-ம் (5-10-30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத் தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாக்ஷியளிக்க விழைகின்றோம். ஈரோடு                 ஈ. வெ. ராமசாமி 1-10-30                                                      ஈ. வெ. ரா. நாகம்மாள் குடி அரசு – அழைப்பு – 05.10.1930  

வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள் 0

வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள்

  லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்கமானது ஹிந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத்தொகைக் கணக்கு கொடுக்கும் போது) ஹிந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகா தென்பது அதன் கொள்கை. ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ்  கமிஷனரைக்  கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும் பாதவர்களை கூறும்படி வற்புறுத்தலாகாதெனக் கேட்டுக் கொண்ட தற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங் கத்தார் வைசிறாய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள  ஹிந்து சமூகத்தினரில்  பலர் ஹிந்து மதத்துக்கு  ஜாதி வித்தியாசம்  அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு  இந்து சமயத்தினர் முன்னேற் றமடைய முடியாமல் போய்விட்டதென்றும் உணர்ந்திருக்கின்றனர். இத்த கைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது....

கலெக்டர் கவனிப்பாரா? 0

கலெக்டர் கவனிப்பாரா?

  கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங் களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த்தாக்களை நிர்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடைக்காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை  எடுத்துக் கொள்ளுவதாகச் சொன்னதாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது. இது உண்மையானால் சர்க்காரிடத்தில்  பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களு டைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்கா ரால் செய்யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவதோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக் கும் படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசார முதலியவைகளுக்கு இடஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஒரு அறிக்கை வெளியிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.09.1930

நாஸ்திகம் 0

நாஸ்திகம்

  உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த் தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும் வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மௌல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப் படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும் புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது. இப்படியிருந்த போதிலும் என்றையதினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப் பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதம் ஏற்பட்டு வெகு காலமாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான...

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் 0

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்

  சகோதரிகளே! சகோதரர்களே!! இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஒரு அம்சமாகிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதென் னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டி யது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்து வமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் பட வேண்டியதில்லை. ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வரு கின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது...

தேர்தல் முடிவின் பலன் 0

தேர்தல் முடிவின் பலன்

  சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்ட சபையின் தேர்தல்களின் முடிவுகள் இந்த வாரத்தில் அநேகமாய் எல்லாம் வெளியாய் விட்டன. இதில் முக்கியமாய் நாம் மகிழ்ச்சி அடையத்தக்கது இரு விஷயங்க ளாகும். அதாவது தேசம், தேசியம், காங்கிரசு என்பவைகளின் பேரால் மக்களை ஏமாற்ற பலருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது ஒன்று. மற்றொன்று, பார்ப்பன சூட்சிக்கு செல்வாக்கில்லாமல் போய் விட்டதாகும். உதாரணமாக இதுவரை இந்திய சட்டசபைக்கு தமிழ்நாட்டி லிருந்து வெறும் அய்யங்கார்களே பெரும்பாலாய் போய்க் கொண்டிருப்பது வழக்கம். இவ்வருஷம் அது சற்று மாறிவிட்டது. அதாவது மதுரை இராம நாதபுரத்திற்கு திரு. சேஷயங்காருக்குப் பதிலாக திரு. ராஜாராம் பாண்டி யனும், சென்னைக்கு திரு. சீனிவாசய்யங்காருக்குப் பதிலாக திரு எ. இராம சாமி முதலியாரும், மலபார், தென் கன்னடத்திற்கு திரு. கே. வி. ரங்கசாமி அய்யங்காருக்குப் பதிலாக கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவும், சித்தூர், சென்னை வகையராவுக்கு துரைசாமி அய்யங்காருக்குப் பதிலாக திரு. இராம கிருஷ்ண ரெட்டியாரும் வந்திருப்பது குறிப்பிடத்...

நாகர்கோவிலில் சமதர்ம  சொற்பொழிவு 0

நாகர்கோவிலில் சமதர்ம  சொற்பொழிவு

  சகோதரிகளே! சகோதரர்களே! உலகத்தில் நமது நாட்டின் நிலை எப்படிப்பட்டதென்று நம்மில் அநேகருக்குத் தெரியாது. ஏனெனில் மற்ற நாடுகளின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று தெரிந்தால்தான் நமது நாட்டு நிலைமையின் தன்மை தெரியவரும். நமது நாட்டில் 100க்கு 90 பேர்களுக்கு கல்வி இல்லாமலும், அறிவு விருத்திக்கான ஆதாரமில்லாமலும், சமுதாய சம்மந்தமான விஷயங் களில் சுதந்திரமில்லாமலும் மத விஷயங்களில் மூடப் பழக்கங்களாலும், குருட்டு நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றபடியால் பெரும்பான்மையானவர்கள் உலக நிலையை அறிய சக்தியற்றவர்களாய் இருக்கின்றார்கள். உண்மையில் நடுநிலையிலிருந்து பார்ப்பீர்களானால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமக்கு மனித சுதந்திரம் மறுக்கப்பட்டு நாய், கழுதைகளிலும் கீழாக மதிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லலாம். (இந்த சமயத்தில் ஒருவர் சரித்திரத்தில் அப்படி இல்லை. சரித்திரம் படித்து விட்டு பிறகு பேசவேண்டும் என்று சொன்னார். அதற்கு பதிலாக திரு. இராமசாமி சொன்னதாவது.) நான் சரித்திரம் படிக்கவில்லையானாலும் என் அறிவுக்கும் கேள்விக் கும்...

பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம் 0

பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்

    சகோதரர்களே! இன்றைய கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் எல்லாம் நடந்தேறிவிட்டன. இனி இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது சில வார்த்தைகளையாவது நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதனால் சுகாதார விஷயத்தைப் பற்றி அதிகம் சொல்ல எனக்கு சுகாதார விஷயத்தில் போதிய ஞானம் இல்லா விட்டாலும், அனுபவத்தைக் கொண்டு ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன். சுகாதாரம் என்பது மக்களுக்கு மிகவும் அவசியமானவைகளில் ஒன்றாகும். அதற்காகத்தான் இப்போது அரசாங்கத்தாரின் முயற்சியாலும், மற்றும் சில அறிவாளிகளின் முயற்சியாலும் சில வருஷங்களாக நமது நாட்டில் இந்தமாதிரி சுகாதார வாரக் கொண்டாட்டமென்பதாக பலவிடங்களில் நடை பெற்று வருகின்றனவென்றாலும், உலகத்திலேயே நாகரீகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் எல்லாம் நமது நாடே சுகாதார விஷயத்தில் மிக்கக் கவலையீனமாகவும், கேவலமாகவுமிருந்து வருகின்றது. இவ் விஷயங்கள் வெளிநாடுகட்குச் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும், அனுஷ் டிப்பு முறைகளும் நேர் தலை கீழாக யிருக்கின்றன. அதாவது...

ராஜி முறிவு 0

ராஜி முறிவு

  தற்காலம் இந்திய நாட்டில் நடைபெறும் அரசியல் கிளர்ச்சி சம்மந்தமான சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகள் விஷயமாய் சர்க்காருக்கும், திரு. காந்தியாருக்கும் ராஜி செய்வதாக சில கனவான்கள் தோன்றி ஒரு மாத காலமாக மக்களின் கவனத்தை அதில் செலுத்தச் செய்து வந்தார்கள். ராஜி விஷயம் வெற்றி பெற்று விட்டால் அதன் பெருமை எங்கு தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று கருதி “ராஜிக்கு அஸ்தீவாரமானவர் மகாகனம் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி யவர்களே யாவார்கள்” என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் செய்தன. அது மாத்திரமல்லாமல் சென்னையிலிருந்து திரு. எ. ரங்கசாமி ஐயங்கார் தனக்கும் அதில் பங்கிருக்கட்டும் என்று போய் உள்ளே கலந்து அநேக அசோசியேடட் பிரஸ் செய்தியும் பிரீபிரஸ் செய்தியும் “நமது நிருபர்” செய்தியும் கலம் கலமாய் வெளியிட்டு பிரபலப்படுத்தினார். கடைசியில் நடந்த காரியம் ரூ. 1க்கு 16 அணாவாக இருந்தது ரூ. 1க்கு 192 பையாக ஆனதைத் தவிர வேறில்லை....

கேரள சீர்திருத்த மகாநாடு 0

கேரள சீர்திருத்த மகாநாடு

  சகோதரிகளே! சகோதரர்களே!! இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன். சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மாத்தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக் குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப் பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத் தான் திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன். இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர் தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லக்ஷியத்தின்படி பார்ப்போ மானால் சீர்திருத்தம்...

கோவை முனிசிபல் நிர்வாகம் 0

கோவை முனிசிபல் நிர்வாகம்

  கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929 – 30ம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ. 2, 74, 707-லிருந்து ரூ. 2, 96, 171க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிருவாணி தண்ணீர் சப்ளை வேலைத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ. 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1. 64 லட்சம் இருப்ப தாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபாலிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டியின் நிர்வாகம் இம்மாகாண மற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தின சபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப் பட்டிருக்கிறது. தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது...

தீண்டாதாரும் கல்வியும் 0

தீண்டாதாரும் கல்வியும்

  காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் உள்ள மக்களில் தீண்டா தார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடாதென்றும் அவர்களுக்குக் குளம், கிணறு, பள்ளிக்கூடம், தெரு முதலியவைகளில் எவ்விதத் தடங்கலுமிருக் கக் கூடாதென்றும் ஒரு பொதுஉத்திரவு பிறப்பித்திருப்பதுடன் காஷ்மீர சமஸ்தானத்தில் தீண்டாதார் என்பவருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்றும் தீர்மானித்திருப்பதுடன், அவர்கள் கல்வியில் பிற்போக்காய் இருப்பதை உத்தேசித்து எல்லோருக்கும் கல்வி ஏற்படும்படி செய்ய இது வரை கல்விக் காக உபகாரச் சம்பளம் முதலியவைகள் கொடுத்து வந்ததை இவ் வருஷம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வருவதாகவும் எல்லாவிதத்திலும் இதர பிரஜை களுக்குச் சமமாகவே அவர்களையும் பாவிக்க வேண்டு மென்றும் அரசாங்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதிகள் ஒவ்வொரு வரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இந்த உத்திரவிலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றியென்றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்திக்கு உபகாரத் தொகை யை...

தீண்டாமையும்  பார்ப்பன உபாத்தியாயர்களும் 0

தீண்டாமையும்  பார்ப்பன உபாத்தியாயர்களும்

  விருத்தாஜலம் தாலூகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப் பள்ளி கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்கு செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மந்தமாய் கவனித் திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்மந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம். குடி...

சமதர்மமும் நாஸ்திகமும் 0

சமதர்மமும் நாஸ்திகமும்

அன்புள்ள தலைவர் அவர்களே! சகோதரர்களே! இன்று திருச்சி மருத்துவகுல சங்கத்தாரால் எனக்குச் செய்த மரியா தைக்கும் வாசித்துக் கொடுத்த வரவேற்பு பத்திரத்திற்கும் நான் உண்மை யிலேயே அருகநல்லவனானாலும், உங்களுக்கு என்னிடமும் எனது சிறு தொண்டினிடமும், கொள்கையினிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பும், ஆர்வமும் இம்மாதிரி செய்யும் படி செய்தது என்று கருதிக் கொண்டு அவைகளுக்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய எனது நண்பர்களும் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதற்கு நான் அவர்களிடம் மிக்க நன்றி காட்டுகிறேன். அன்றியும் நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும், என்னைப் பலர் நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும், நான் நாஸ்தீகன் அல்லவென்றும் எனக்காக பரிந்து பேசினார்கள். அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச்...

தேர்தல்கள் 0

தேர்தல்கள்

  சென்னை சட்டசபைக்குத் தேர்தல் பிரசாரங்களும் ஓட்டுச் சேகரிப்பும் தமிழ் நாட்டில் நடைபெறுகின்றதானாலும் கிளர்ச்சி உண்டாக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு மும்முரமாய் இல்லை என்பது யாவரும் அறிந்த விஷயமாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் பொது ஜனங்களுக்கு இப்போதைய தேர்தலில் சிறிதும் உற்சாகம் இல்லாதிருப்பதேயாகும். ஏனெ னில் தேர்தல் கட்சிகளின் தத்துவமும் தேர்தலில் நிற்கும் அபேட்சகர்களும் பெரும்பாலும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கும் பெருமைக்கும் நிற்கின்றார் களே ஒழிய மற்றபடி அவற்றுள் உண்மையும், நாணயமும் பொது நல நோக் கமும் சிறிதும் இல்லை என்பதாக மக்கள் கருத நேரிட்டு விட்டதேயாகும். மற்றும் இரண்டாவதாக தேர்தலில் நிற்பவர்களில் 100க்கு 75 பேருக்கு மேலாகவே தங்கள் தங்கள் சாரும் கட்சித் தலைவர்களின் நன்மைக்காக அவர்களால் நிறுத்தப்படுபவர்கள் எனப்படுவது. மூன்றாவதாக, தேர்தலில் பிரசாரம் செய்யும் கூலிப் பிரசாரகர்களும் பெரிதும் தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சுயநலம் காரணமாக முக்கியமாய் இன்னின்னாருக்கு ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்யப்படு கின்றார்களே தவிர...

ஈரோடு                                                        நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 0

ஈரோடு                                                        நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

  அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே! இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில்  பேசிய மௌலானா மௌல்வி அ. க. அப்துல் அமீது சாயபு (பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மௌலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மௌலானா அவர்கள், மௌலானா அசாத் சோபானி அவர்களின்  உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த  மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது...

உண்மைப் பிரதிநிதிகள் 0

உண்மைப் பிரதிநிதிகள்

  ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியார் ¦³ “தேவஸ்தானத் திற்கு கட்டுப்பட்ட குளம், கிணறு, ரோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில் யாரும் எவ்விதத் தடையுமில்லாமல் செல்லலாம்” என்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமானதாக நிறைவேற்றி இருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மேற்படி “தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட எல்லா கோவில்களிலும் தேவதாசிகளின் ஊழியத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டும்” என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். இவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான விஷயம் அக் கமிட்டியார் செய்திருப்பதென்னவென்றால் அக்கமிட்டியாரை ஸ்ரீவில்லி புத்தூர் செங்குந்த வாலிப சங்கத்தாரும், ஜில்லா சுயமரியாதை சங்கத்தாரும் ஒரு விண்ணப்பத்தின் மூலம் அந்த “ஜில்லாக் கமிட்டியின் ஆதிக்கத் திற்குட்பட்ட எல்லாக் கோவில்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரவேச உரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட விண்ணப்பங்களை கமிட்டி கூட்டத்தில் யோசனைக் கொடுத்து ஆலோசித்து  அடியில் கண்ட விஷயங்களுக்கு பதில் தெரிவிக்கும்படி அக்கமிட்டிக்கு உட்பட்ட எல்லாக் கோவில்களின் டிரஸ்டிகளுக்கும் சுற்றுக் கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள்....

சத்திய மங்கலத்தில்                                                              திரு. நபிகள் பிறந்த நாள் 0

சத்திய மங்கலத்தில்                                                              திரு. நபிகள் பிறந்த நாள்

  அன்புள்ள சகோதரர்களே! பெரியோர்களே!! இஸ்லாமிய உலகத்திற்கு மிகவும் முக்கியமானதும், மக்களின் நன்மைக்காக உலகத்தில் தோன்றிய பெரியார்களில் மிக ஒப்பற்ற சிறந்த வருமான ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க இரண்டாம் தடவையாகவும் அழைத் தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக சென்ற ஆண்டிலும் என்னை அழைத்து தலைமை வகிக்கச் சொன்னீர்கள். நிற்க, இன்றைய நிலைமையில் நாம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக்கின்றோம் என்றாலும் இந்தியாவை இந்தியர் களே ஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியாதென்பதே எனது அபிப்பிராயம். நான் இப்படிச் சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம். இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக்கட்டை யாகவேதான் இருக்கிறது. மதத்தைவிட மோட்சத்தைவிட மக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான்...

கல்யாண விடுதலை 0

கல்யாண விடுதலை

  ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்சாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமை யாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலிய வைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யா ணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண் களை வஞ்சிக்கின்றோம். பொதுவாக கவனித்தால் நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத் திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமை யும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என் பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது. இக்கொடுமைகள் இனியும் இப்படியே...

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  அன்புள்ள சகோதரிகளே! சகோதரர்களே!! நான் இங்கு வந்தது முதல் இதுவரையிலும்  எனக்காக வென்று செய்யப்பட்ட ஆடம்பரங்களையும், ஊர்வலங்களையும் என்னைத் தலை வனாக பிரரேபிப்பதன் முகத்தான் என்னைப் பற்றி பலர் பேசிய புகழுரை களையும் எனக்காக என்று இப்போது வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரங் களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கவனித்துப் பார்த்ததில் நான் மிக்க வெட்கப்பட வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில்  எந்த மூட நம்பிக்கைகளையும், குருட்டு பக்தியையும் அடியோடு ஒழிக்க வேண் டுமென்று முயற்சி செய்கிறேனோ, அவற்றை அதை யொழிப்பதற்காகக் கூடிய  இந்த மகாநாட்டில் உங்களாலேயே என் விஷயத்தில்  உபயோகப் படுத்தப்படுவதை நான் பிரத்தியட்சமாகப் பார்க்கிறேன். இவற்றை அநு மதித்துக் கொண்டிருக்கிற நான் எந்த விதத்தில் இத் தொண்டில் வெற்றி யடைய முடியும்? அல்லது என்னைப் பொறுத்த அளவிலாவது அவற்றி லிருந்து  திருத்தமடைகிறேனென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே இம் மாதிரியான செய்கைகளை தயவுசெய்து அடியோடு இனி விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக்...

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கும்பகோணம் தாலூகா                 இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  அதுபோலவே இராமராஜியமும், இராமாயணத்திலுள்ளபடி உண்மை யாயிருக்குமானால், அது வெறும் ஜாதி வித்தியாசத்தையும், பார்ப்பன உயர்வையும் கற்பிக்கின்றதல்லாமல் வேறு என்ன நீதி அதனுள் அடங்கி யிருக்கின்றதென்பதை யோசித்துப்பாருங்கள். பெண் கொடுமை இராமாய ணத்தைப் போல் வேறெதிலும் காண்பது அரிது. உதாரணமாகத் தாட கையைக் கொன்றது; சூர்ப்பநகையை மூக்கையும், முலையையும் அறுத்தது; கைகேசியையும் கூனியையும் இழிவுபடுத்தியது முதலிய வைகளும், சீதை கர்ப்பமாக இருக்கும் போது அவளினது கர்ப்பத்தில் சந்தேகம் ஏற்பட்டதற் காக அவளைக் கொண்டுபோய் வனாந்திரத்தில் தனியே விட்டுவிட்டு வரச்செய்தானென்பதும் கடைசியாக அவள் உயிருடன் புதைக்கப்பட்டது மான காரியங்களிலிருந்து பெண்களின் உயிரை எவ்வளவு அலட்சியமாகக் கருதப்பட்டிருக்கிறதென்பது விளங்கவில்லையா? அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதான் தவஞ்செய்ததற்காக அவனை இராமன் கொன்றானென் றால் அதில் ஜாதி ஆணவம் விளங்கவில்லையா? மற்றும் தசரதன் அறுபத னாயிரம் பெண்சாதிகளோடு இருந்தா னென்பதிலிருந்து பெண்களை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறார் கள் என்பது விளங்கவில்லையா? மற்றும் பாதரட்சையை சிம்மாசனத்தில் வைத்து பரதன்...

ஆர். கே. ஷண்முகம் 0

ஆர். கே. ஷண்முகம்

  உயர்திருவாளர் கோவை ஆர். கே. ஷண்முகம் அவர்களை இந்தி யரில் அறியாதார் யாரும் இருக்க முடியாதென்றே கருதுகின்றோம். மேல் நாட்டவர்களும், அவரைப்பற்றி விசேஷமாக அறிந்திருப்பார்கள். சிறப்பாக தமிழ் நாட்டில் தெருவில் விளையாடும் குழந்தைகள் முதல் அரசர் வரை அவரைப் பற்றி நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். அன்றியும் சுயமரியாதை உலகத்திலும், சீர்திருத்த உலகத்திலும் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களைப் போலவே – சில விஷயங்களில் அவருக்கு மேலாகவே திரு. ஷண்முகம் அவர்கள் பெயரும் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக தங்கள் தங்கள் வீட்டு நபர்களைப் போலவே வழங்கப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. திரு. ஷண்முகம் அவர்கள் அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மை களும் ஒன்று போலவே அமையப் பெற்றவராவார். அப்பேர்ப் பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் என்கிற உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது என்பதை எடுத்துக்காட்ட வேண்டி யதில்லை....

மலாய் நாட்டு வக்கீல்களின்                     ‘தேசியம்’ 0

மலாய் நாட்டு வக்கீல்களின்                     ‘தேசியம்’

  மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும்  வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபனை சொன்னதாகவும் அவ் வாட்சேபனை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன்னார்களாம். அதற்கு பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாக்கிர கத்தில் ஈடுபட்டதால்  சிறை செல்ல நேரிட்டதென்றும்  மதராஸ் ஹைகோர்ட் டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிஸ்டர் என்றும் எடுத்துக் காட்டினாராம். இதற்காக கனம் ஜட்ஜி அந்த விண்ணப்பத்தை பைசல் செய்ய 2 µ வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த...

தேர்தல்                                                          -II 0

தேர்தல்                                                          -II

  சட்டசபை தேர்தல்களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோரும் ஏதாவது ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டே நியமனச் சீட்டுத் தாக்கல் செய்திருப்பார்கள். சிலர் ஜெயிக்கும் கட்சியை எதிர்பார்த்து எதில் வேண்டுமானாலும் சேருவதற்கு வசதி வைத்துக் கொண்டு நியமனச் சீட்டைத் தாக்கல் செய்திருப்பார்கள். பொதுவாக தேர்தல்களில் நிற்கப்படுபவர்களில் பெரும்பான்மை யோரின் யோக்கியதைகளையும் நாணயங்களையும் குறித்து முன் ஒரு தலையங்கத்தில் விவரமாய் கூறியிருக்கிறோம். கொள்கையும் நாணயமும் எப்படி இருந்தபோதிலும் தேர்தல் சமயங்களில் கட்சியின் பேரால் நிற்பவர் கள் தங்கள் கட்சிக்காக என்று கட்சியின் சார்பாய் பொதுமக்களின் மனதைக் கவரத்தக்க ஏதாவது சில கொள்கைகளை வெளியிடுவது என்பது எங்கும் நடைபெற்று வரும் வழக்கமாகும். அதுபோலவே இத்தேர்தலிலும் நமது மாகாண சட்ட சபைக்கு நிற்கும் இரண்டு முக்கிய கட்சியாரும் தங்கள் தங்கள் கொள்கைகள் என்பதாக சில விஷயங்களை அறிக்கையின் மூலம் வெளி யிட்டு விட்டார்கள். இவ்விரு கக்ஷி அறிக்கைக்...

மாயவரம் – சீயாழி                        மிராசுதாரர்கள் மகாநாடு 0

மாயவரம் – சீயாழி                        மிராசுதாரர்கள் மகாநாடு

  அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இன்றையதினம் இந்த பொதுக் கூட்டத்தில் தற்கால நிலைமையைப் பற்றி நானும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று இத்தாலூகா பிரபல மிராசுதாரர்களானவர்களால் அழைக்கப்பட்டு பேசக் கேட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றியுடையவனாக யிருக்கின்றேன். இதற்கு முன் இந்தக் கூட்டத்தில் பேசிய கனவான்களின் பேச்சை நீங்கள் கேட்டீர்கள். நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி அவர்கள் பேசியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் மனிதன் சட்ட மறுப்பு செய்யக் கூடாதென்பதையும், சட்டத்திற்கடங்க வேண்டியதென்பதையும் இராஜாவுக்கு பக்தியாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவ்விஷயத்தில் எனது கொள்கை உங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்தேயிருக்கலாம். சுயமரியாதை மகாநாட் டிலும் தீர்மானித்திருக்கின்றோம். அதாவது மனிதனுக்கு இராஜ பக்தியும், கடவுள் பக்தியும் கற்பிக்கப்படுவதானது மனிதனை அடிமைத் தனத்தி லாழ்த்தும் அறிகுறியேயாகும் என்பதாக வெகுநாளாகவே நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் இதிலிருந்து துரோகியாகவோ, துவேஷியாகவோ இருக்க வேண்டுமென்பதான பொருள் அதிலில்லை...

க த ர் 0

க த ர்

  கதர் பிரசாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம்பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்கா மசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி 1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும்  அரிசி ரூ. க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள். இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ. க்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது. 520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும். 10...

காந்தியார் 0

காந்தியார்

  திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது. ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டியதில்லை யென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத் தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத்தக்கது. திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர் களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளி நூல் வெள்ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிற மற்றபடி...

ராஜி 0

ராஜி

  திருவாளர்கள் ஜயக்கர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக் கும் கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள். இம் முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொதுஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப்படு கின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்கு சலிப்புத் தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசீய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது. சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை “தேசீய வாதிகள்” உணரத் தலைப் பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு...

மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம் 0

மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம்

  மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் “தமிழர் சீர் திருத்தக்காரர்கள் சங்கம்” என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத் தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின் றோம். இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர் பிரமுகர் கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராமசாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப் பிடத்தக்கதாகும். அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச்சிரம தர்மத் தையும், தீண்டாமையையும் ஒழித்தல். பெண்களுக்கு உரிமை அளித்தல். அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல். சிக்கன முறையைக் கைக் கொள்ளுதல். அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல். என்று சொன்னதிலிருந்து அவைகள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ் வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக் கும் எளிதில் விளங்கும். தவிரவும் “சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக் குடன் மறைந்து...

கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன்     வாசகசாலைத் திறப்பு விழா 0

கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன்     வாசகசாலைத் திறப்பு விழா

  பெருமை மிக்கத் தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர் களே!!! இந்த சிறிய ஊரில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருப்பது எனக்கு அதிசயமாயிருக்கிறது. நீங்கள் செய்த வரவேற்பு ஆடம்பரங்களுக்கும் நான் சிறிதும் தகுதியில்லை என்பதை யான் உணர்கிறேன். ஆனாலும் அவை களையெல்லாம் எனது கொள்கைக்கு நீங்கள் அளிக்கும் ஒரு நற்சாட்சிப் பத்திரமென்றே கருதுகிறேன். நீங்கள் இங்கு ஆரம்பித்திருக்கும் வாசக சாலையானது மிகவும் பாராட்டக்கூடியதாகும். நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், பூஜை, உற்சவம் நடத்து வதற்கும் நாசமாகிற பணங்களும், இடங்களும், நேரங்களும் இம்மாதிரி வாசக சாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறுமடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும். நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப் பதற்கு இரண்டு காரணம். ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது. மற்றொன்று மக்க ளுக்கு பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசகசாலையை...

சட்ட மறுப்பு இயக்கம் 0

சட்ட மறுப்பு இயக்கம்

  தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள் குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாள வியா சொல்ல ஆரம்பித்துவிட்டார். தேசீயப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதர ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம் பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாய் விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுக்கடை, பள்ளிக் கூட மரியல்களோ வென்றால் “தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால்” நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரண்யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களை கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல்...

சாரதா சட்டம் 0

சாரதா சட்டம்

சாரதா சட்டம் பிறந்து அமுலுக்கு வந்து 3µ ஆகி 4வது µ முடிவதற்குள்ளாகவே அதற்குப் பாலாரிஷ்டம் வந்து விட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் அச்சட்டத்தின் ஜீவ நாடியை அருத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனச்சாக்ஷியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்கு சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுக ளுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள். இந்த பிரேரேபனை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசய மொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து...

ஏன் பார்ப்பனர் கூடாது? 0

ஏன் பார்ப்பனர் கூடாது?

  பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்க்கக் கூடாது என்னும் விஷயம் தஞ்சாவூர் ஜில்லா பாபநாசம் தாலூகா போர்டு தேர்தலைப் பற்றிய இரகசியத்தை தெரிந்தால் அதன் உண்மை ஒருவாறு விளங்கும். பாபநாசம் தாலூகா போர்டுக்கு சுமார் 15 அங்கத்தினர்கள் உண்டு. இதில் பார்ப்பனர்கள் 3 பேர் பார்ப்பனரல்லாதார்  12 பேர்கள்.  இந்தப் பன்னி ரண்டு பேர்களில் 6 பேர் திரு. பன்னீர்செல்வம் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆறு பேர் திரு. வீரய்யா வாண்டையாரைச் சேர்ந்தவர்கள். இதில் எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவில்லாமல் முடியாத நிலைமையாகிவிட்டது. ஆக திரு. பன்னீர் செல்வம் கட்சியார் எப்படியாவது திரு. வீரய்ய வாண்டையார் ஜில்லா போர்டுக்குள் நுழை யாமல் இருந்தால் போதும் என்று கருதி பார்ப்பனர் இடம் ராஜி பேசப் புறப் பட்டு மூன்று பார்ப்பனரில் ஒருவருக்கு தாலூகா போர்டு தலைமை ஸ்தானம் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தங்கள் கட்சியாருக்கே இரண்டு ஜில்லா போர்டு...

சட்டசபை தேர்தல் 0

சட்டசபை தேர்தல்

  சட்டசபை தேர்தல்கள் வேலைகள் துவக்கமாகிவிட்டது. அபேக்ஷ கர்கள் ஆகஸ்ட் முதல் தேதியில் நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்தாக வேண்டும். செப்டம்பர் 9 தேதியில் தேர்தல் (எலக்ஷன்) ஆனதால் நியமனச் சீட்டு தாக்கல் செய்தவுடன் பிரசாரம் துவக்க வேண்டும். ஆதலால் அபேக்ஷ கர்களாய் நிற்பவர்களுக்கு இன்னம் சுமார் ஒன்னரை மாதங்களுக்கு ஓய்வு உரக்கம் இருக்காது. அது மாத்திரமல்லாமல் அவர்களிடம் நாணயமும் இருக்க முடியாது. அதோடு அவர்களுக்கு தங்கள் மனதிற்கும் வாக்குக்கும் செய்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்க முடியாது. யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து எந்த எந்த சமயத்திற்கு எதை எதைச் செய்தால் – சொன்னால் ஓட்டுக் கிடைக்குமோ அந்தபடியெல்லாம் நடந்தும் பேசியும் ஓட்டுச் சம்பாதிக்க வேண்டியதே அவர்களது எலக்ஷன் தர்மமாகும். ஏனென்றால் ஓட்டர்கள் பெரிதும் 100-க்கு 90 பேர்கள் மூடர்கள் ஆன தாலும், எஞ்சியுள்ள 100-க்கு 10ல் 7 பேர்கள் சுயநலக்காரர்கள் ஆனதாலும் மீதி 3 பேர்கள் தங்க ளால்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

  இந்தியாவில் முதல் முதலாக அரசியல் கிளர்ச்சி உண்டாக்கப் பட்டதின் உத்தேசமே, இந்திய ஆட்சி உத்தியோகம் முழுவதும் ஆங்கிலே யர் கையிலே இருப்பதால் இந்தியர்களுக்கும் இந்திய அரசாட்சியில் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டேதான் ஏற்படுத்தப்பட்டது என்பது எல்லா அரசியல்வாதிகளாலும் ஒப்பு கொள்ளப்பட்ட உண்மையாகும். யாராவது ஆnக்ஷபிப்பதாயிருந்தால் 45¦´த்திய அரசியல் ஸ்தாபனங்கள் என்பவைகளின் தீர்மானங்களைப் பார்த்தால் நன்றாய் தெரிய வரும். இப்படி அவர்கள் கேள்க்க வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதென்றால் ஆங்கில அரசாட்சியின் பயனாக  இந்திய மக்களுக்கு சற்று கல்வி, அன்னிய நாட்டு வர்த்தமானம் முதலியவை கள் மூலம் அரசியல் விஷயங்கள்  அறிய வசதி ஏற்பட்டதேயாகும். ஆகவே அவர்களது ஆசையானது அரசாட்சி உத்தியோகங்களில் புகுந்து அதை அடைவதற்கு அரசியல் ஸ்தாபனம் என்பதை ஏற்படுத்திக் கொண்டு அதன்  மூலமாய் தங்களுக்கு இன்ன இன்ன உத்தியோகங்களில் உரிமை கொடுக்க வேண்டுமென்றும், பிறகு அதில்  இத்தனை இத்தனை ஸ்தானங்கள் தங்களுக்கே (இந்தியர்களுக்கே) வேண்டுமென்றும்...

விருதுநகரில்,  உண்மைச் சுயமரியாதை திருமணம் 0

விருதுநகரில்,  உண்மைச் சுயமரியாதை திருமணம்

  தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையா யிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும். நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரிய தென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்கு கிடைக்கக் கூடியதென்றும் கருதி இருக்கிறோம். அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சை யெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை  உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம். நம்மை மகாராஜனாகவும் nக்ஷமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய  ஆசீர்வாதம் யோக்கிய முடையதும் உண்மை யுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மி டம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்த மற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகி விடாது. வேண்டு மானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம். ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை...

ஒரு யோசனை 0

ஒரு யோசனை

  சென்ற மே மாதம் 25 தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் “ஒரு யோசனை” யென்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் துகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக இருப் பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி  வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய  ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டி ருந்தோம். அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங்களில் சுமார் பத்துப் பேர் களேதான் அதற்குச் சம்மதம் கொடுத்திருக்கிறார்கள். சுமார் முன்னூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப் பற்றி கவலையில்லை யென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள்  கண்டிப்பாகப் பக்கங்களைக் குறைக் கக் கூடாதென்றும், சௌகரியப்பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித் திருக்கிறார்கள். ஆகவே வாசகர்களின் பெரும்பான்மையோர்களுடைய அபிப்பிராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடி அரசு பத்திரிகையில்...

சோதிடம் 0

சோதிடம்

  இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல் வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்கு துன்பம் சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டி சாத்தான், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை ஸ்வாதீனப் படுத்தல், முன் ஜன்மம் பின் ஜன்மம் உண்டெனல் இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும், எதிரிகளின் கேட்டிற்கு என்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பி ராயம்  முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க் கின்றோம். சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி,  கோயில் குருக்கள் ஆகிய மூவரும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அப்பிராமணர்   –        பார்ப்பனர் அல்லாதார் அப்புக் கட்டல் –        சப்பைக்கட்டு பேச்சு கிருத்திரம்      –        வஞ்சனை, பொய் குச்சுக்காரிகள் –        விலை மகளிர் சர்வ தயாபரத்துவம்    –        மிக்க அருளுடைய சுவாதந்திரியம் –        சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை தாக சாந்தி     –        நீர் வேட்கையைப் போக்குதல் தாஷ்டீகம்      –        உடல் நலம், உடல் உறுதி துராசாரம்      –        அறநெறிக்கு எதிராக நிர்தாட்சண்யம்         –        இரக்கமின்மை பிதுராஜ்ஜித    –        தந்தை வழி சொத்து, முன்னோர் சொத்து போஷகர்       –        புரவலர், காப்பாளர் மூர்த்தண்ணியமாக     –        ஊக்க மிகுதி யாதாஸ்து      –        அறிக்கை, குறிப்பு விநயமாக      –        பணிவாக, அவையடக்கமாக விரோதபாவம்  –        எதிர்ப்பு மனப்பான்மை க்ஷணம்...

பார்ப்பனரல்லாதார் கட்சி 0

பார்ப்பனரல்லாதார் கட்சி

பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை மூன்று காரணங் களே சொல்லப்படுகின்றன. அவை ஒன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி ஒரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டுமானால் அது எந்த வகுப்பாரையும் தள்ளிவைத்த கட்சியா யிருக்கக் கூடாது என்பது. மற்றொன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கும் உத்தேசத்துடன் ஏற்படுத்திய கட்சியானதால் எல்லா வகுப்பாருக் கும் அதில் இடம் இருக்கவேண்டு மென்பது. வேறு ஒன்று பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளா விட்டால் அக் கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாம் போய் விடுவார்கள். பிறகு கட்சிக்குத் தலைவர் களே இருக்கமாட்டார்கள்; இதனால் கட்சியே செத்துப் போய்விடும் என்பது. ஆகிய இம்மூன்று காரணங்களே இப்போது பார்ப்பனரல்லாதார் கட்சியின் முக்கிய தலைவர்களாய் பாவிக்கப்பட்டு வந்த கனவான்களால் சொல்லப்பட்ட சொல்லி வருகின்ற காரணங்களாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய காரியம் என்னவென்றால் மேற்கண்ட மூன்று காரணங்களும் உண்மையானவைகளா? அல்லது சுயநலத்தை உத்தேசித்து பொதுமக்களை...

சைமன் ரிப்போர்ட்டு 0

சைமன் ரிப்போர்ட்டு

சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வெளியாகி விட்டது. இதன்பேரில் ஏதாவது ஒரு அபிப்பிராயம் தெரிவிக்காதவர்களை பொது ஜனங்கள் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ கருதுவதில்லை. அன்றியும் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ ஆக வேண்டும் என்கின்ற ஆசை இருப்பவர்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அபிப்பிராயங்கள் சொல்லுவதன் மூலமே தங்கள் ஆசை நிறைவேறும் என்று கருதுவதும் சகஜம். இவை ஒரு புறம் நிற்கப் பொது காரியங்களில் உழன்று கொண்டு இருப்பவர்கள் யாராவது இம்மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லாவிட்டால் அவர்களை பயங்காளி என்று சொல்லுவதும் வழக்கம். சுவற்று மேல் பூனை போலிருந்து வாழ வேண்டுமென்கின்றவர்களான, தங்களுக்கென்று யாதொரு கொள்கையுமில்லாத சிலர் சற்று சங்கடமான நிலைமையில் யாதொரு அபிப்பிராயமும் சொல்லாமல் நழுவவிடுவதும் சகஜம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை நாம் எந்த காரணத்தைக் கொண்டா வது  ஏதாவது சொல்லித்தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அந்தப்படி இப்போது ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லுவதில் சைமன் கமிஷனை உபயோகமற்றது என்று ஒரே வார்த்தை...

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா தெய்வம் 0

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா தெய்வம்

இனி அடுத்தாற்போல் திரு. கையாலக்கேல் அவர்கள் பேசிய கடவுள் என்னும் விஷயத்தைப் பற்றி இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டியது அவசியமாகும். திரு. கையாலக்கேல் அவர்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசியதில் இந்து மதக் கடவுள்களை எடுத்துக் கொண்டு அவைகளின் உருவங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியும், குணங்களைப் பற்றியும், குடும்பங்களைப் பற்றியும், ஒரு கடவுளுக்கும் மற்றொரு கடவுளுக்குமுள்ள சொந்தங்களைப் பற்றியும், அதன் பூசை உத்சவம் முதலியவைகளைப் பற்றியும், அதைச் செய்கிற தரகர்களின் யோக்கியதையைப் பற்றியும், செய்விக்கிற பக்தர்களின் மனோ பாவத்தைப் பற்றியும் வெகு விபரமாகவும், ஆரம்பமுதல் கடைசிவரை நீங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படியாக அவ்வளவு வேடிக்கையாகவும் பரிகாசமாகவும் பேசினார். அது அவ்வளவையும் விநய மாகவே எடுத்துக் கொண்டு பார்ப்போமானாலும், அவர் சொன்னவற்றுள் ஏதாவது ஒன்றை ஆட்சேபிக்கவோ மறுக்கவோ இடம் இருந்ததா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். திரு. கையாலக்கேல் அவர்கள்...

சைமன் கமிஷன் யாதாஸ்து 0

சைமன் கமிஷன் யாதாஸ்து

சைமன் கமிஷன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்பட வில்லை. அன்றியும் அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப் பட வில்லை. ஏனெனில் அதெல்லாம் உத்தியோகமும் பதவியும் அனுபவிக் கக் கருதி அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப் பவர்களுக்கே விட்டு விடுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிஷன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை விஷயத்திலும் முகமதியர்களும், கிருஸ்தவர்களும் “இந்து”க்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும் பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி யும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதார்கள், பெண்கள், கிருஸ்துவர் கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமே தான் கமிஷனின் சிபார்சை அறிந்து...

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு  சாவுமணி 0

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு  சாவுமணி

தென்னாட்டில் வெகுகாலமாக பார்ப்பனராதிக்கத்தினால் உத்தியோக விஷயத்திலும் சமூக விஷயத்திலும் கஷ்டமனுபவித்து வந்த பார்ப்பன ரல்லாதார்களில் சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 10, 13 வருஷங்களுக்கு முன்பாக தென் இந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்னும் பேரால் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு சமூக சமத்துவத் தையும் உத்தியோக வகுப்புவாரி பிரநிதித்துவத்தையும் முக்கிய கொள்கை யாய் வைத்து பார்ப்பனர்களை அந்த ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வ தில்லை என்கின்ற விதிகளையும் ஏற்படுத்தி பார்ப்பனரல்லாத பொது ஜனங்க ளின் ஆதரவையும் பெற்று “ஜஸ்டிஸ்” என்கின்ற ஒரு ஆங்கில பத்திரிகை யையும் “திராவிடன்” என்கின்ற ஒரு தமிழ் பத்திரிகையும் அந்த ஸ்தாபனத் தின் சார்பாக நடத்தி, காங்கிரசின் பேராலும் தேசீயத்தின் பேராலும் பார்ப்பனர் களும் அவர்கள் தாசர்களும் செய்துவந்த தொல்லைகளை எல்லாம் சமாளித்து அறிவாளி மக்களிடத்திலும் அரசாங்கத்தினிடத்திலும் ஒத்துழைத் ததின் பயனால் நாட்டில் அந்த ஸ்தாபனத்திற்கும் பத்திரிகைகளுக்கும் பெரும் பான்மையான பார்ப்பனரல்லாத மக்களின் சரியான...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. “கண்ணுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் எட்டாததும், வாயினால் விவரிக்க முடியாததுமாக ஒன்று உண்டு. அது தான் கடவுள்” என்று சொல்லு வார்களானால் அவர்கள் தான் பகுத்தறிவற்றவர்கள் ஆவார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் சொல்லுவதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாயிருப் பதை அறிகிறார்களில்லை. 2. தான் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரமும் மன்னிப்பும் கிடைப் பதற்காகவும், அடுத்த ஜன்மத்தில் சுகமடைவதற்காகவும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் பக்தி செலுத்துகின்றவர்களும் சமயச் சின்னங்கள் அணிபவர்களும் திருடர்கள் அல்லது மூடர்களே ஆவார்கள். 3. “மோட்சத்திற்காக நாமம், விபூதி தரித்து தாரகம், பஞ்சாட்சரம் ஜெபிப்பவர்களும், சுயேச்சையாக கதர் உடுத்தி, கதர்க் குல்லாய் போட்டுக் கொண்டு இராட்டினம், தக்ளி, நூல் நூற்பவர்களும் ஒரேவிதமான மூட நம்பிக்கையின் பாற்பட்டவர்களும், சுய அறிவற்ற செம்மறியாட்டுக் கூட்டத் தில் சேர்ந்தவர்களுமேயாவார்கள்”. 4. “கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன...

சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை 0

சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் சுய ஆட்சி:- என்ன சுயமரியாதை! உன்னை ஒரு வாரமாகக் கண்ணி லேயே காண முடியவில்லை. எங்கு போய் விட்டாய்? சுயமரியாதை:- ஓ! சுய ஆட்சியே! நான் ஈரோட்டுக்குப் போயிருந் தேன். சு. ஆ:- ஈரோட்டில் ஒரு வாரமாக என்ன வேலை உனக்கு? சு. ம:- ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்ததல்லவா? அதற்காக ஒரு வாரம் முன்னேயே போய் மகாநாட்டு வேலையில் கலந்து கொண்டு என்னால் கூடியதைச் செய்து கொண்டிருந்தேன். சு. ஆ:- ஆமா! ஆமா!! நான் கூட கேள்விப் பட்டேன். சுயமரியாதை மகாநாடு நிரம்ப நன்றாய் நடந்ததாகவும் மூன்று நான்கு ஆயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்ததாகவும், பெண்களும், ஆண்களும், ஆதி திராவிடர்களும் கூட ஏராளமாய் வந்திருந்ததாகவும் கேள்விப் பட்டேன். சு. ம:- ஆதி திராவிடர்கள் வந்திருந்தது மாத்திரம்தானா நீ கண்டாய்? சமையல் பரிமாறினதில் கூட ஆதி திராவிடர்கள் கலந்திருந்தார்கள். மற்றொரு சமையல் இடத்தில் 2, 3 ஆதி திராவிடர்களும்...

சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள் 0

சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்

நமது இயக்கம் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உயர்வு தாழ்வை வெறுக்கிறது. ஆலய உருவ வழிபாட்டை வெறுக்கிறது; மனிதனை மனிதன் மதத்தின்பேராலும், கடவுளின் பேராலும், சமயத்தின் பேராலும், சடங்குகளின் பேராலும் அடிமைப்படுத்துவதையும் ஏமாற்றிப் பிழைப்பதையும் வெறுக் கிறது. இவ்வளவும் இந்து மதத்தால் நேரிட்ட தீமை என்று கருதி மதத்திலும் சாஸ்திரங்களிலும் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தி வருகிறது. மனிதனை மனிதன் எவ்வழியிலும் ஏமாற்றி பிழைக்கக்கூடாது. இதுவே நமது இயக்கத் தின் முக்கிய கொள்கை. இவைகளை வருணாசிரம தருமிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும் நன்கு படித்தவர்களும் உலக ஞானம் உள்ளவர்களும் ஒருவாறு ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். ஆயினும் இவர்களும் காரியத்தில் காட்ட அஞ்சுகிறார்கள், மனிதனுக்கு பிறப்பு, இறப்பு, கலியாணம் முதலியவைகளில் சடங்கு அவசியமா என்பதை நாம் சிந்திப்பதே கிடையாது. சடங்கு செய்ய வேண்டியது அவசியமானால் யார் செய்தாலும் நமக்கு ஒன்று தான். பிராமணன் நம்மால் பிழைப்பதுமன்றி நம்மை இழிவாகக்கருதி நடத்துகிறான் என்று நாம் சொல்லலாம். இதே மாதிரி...

திருடர் அல்லாவிட்டால் மூடர் 0

திருடர் அல்லாவிட்டால் மூடர்

திருநெல்வேலி ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 7, 8, 9, 10 தேதிகளில் திருநெல்வேலியில் வெகுசிறப்பாய் நடந்தேறியது. அம்மகாநாடு அங்கு கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டவுடன் திருநெல் வேலி நெல்லையப்பர் சாமி கோவிலில் மாஜி தாசில்தார் திருவாளர் எம். வி. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் ஆஸ்திக மகாநாடு என்ப தாக ஒன்றைக் கூட்டி “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பத்திரிகையில் ‘திரு டர்க்கழகு திருநீரடித்தல்’ என்று எழுதியிருப்பதால் இது சைவ உலகத்தை அவமானப்படுத்தினதாகும். ஆகவே சுயமரியாதை மகாநாட்டுக்கு சகோதரர் கள் யாரும் போகக்கூடாது” என்று முடிவு செய்து பல கனவான்கள் கையொப் பமுமிட்டுத் துண்டு பிரசுரமும் வழங்கி இருந்தார்கள். அப்படி யிருந்தும் மகாநாட்டுக்கு ஏராளமான சைவர்கள் வந்திருந்ததோடு மகா நாட்டை ஒரு சைவப் பெரியாரும் தேவஸ்தான டிரஸ்டியும் போலீஸ் டிப்டி சூப்ரண் டெண்டெண்டாகயிருந்து பென்ஷன் பெற்றவருமான உயர்திரு. ராவ்சாகிப் கற்பக விநாயகம் பிள்ளை அவர்களே மகாநாட்டை திறந்து வைத்து திரு.ஈ. வெ....

திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி  சுயமரியாதை இயக்கம் 0

திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்

தலைவர் அவர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! முதலாவதாக இக்கூட்டத்திற்கு ஒரு மணிநேரம் தாமதப்பட்டு வந்ததற்கு வருந்துகிறேன். காரணம் நமது சிதம்பரனார் அவர்களுக்கு சற்று உடல் நலிவு ஏற்பட்டு அவருக்குக் காயலா 103 டிகிரி இருந்தபடியினால் கொஞ்சநேரம் அவருக்காக காத்திருக்கும்படி நேரிட்டது. அதனாலேயே தான் நீங்கள் மாலையில் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலத்தைக் கூட நான் ஒப்புக் கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆகையால் அதற்காகவும் எனது வருத்தத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். அன்றியும் திரு. சிதம் பரனார் அவர்களுக்கும் – திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் ஈரோட் டில் சுயமரியாதை கலப்பு “விதவை” திருமணம் நடைபெற்றதை முன்னிட் டும் அவர் இந்த ஊர் பாடசாலைக்கு மாற்றப்பட்டதை முன்னிட்டும், அவர்கள் இருவரும் இந்த ஊருக்கு வரும் போது நானும் எனது மனைவியாரும் கூடவே வரவேண்டுமென்று இவ்வூர் நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்ட திற்கிணங்க இங்கு வந்தோம். ஆயினும் வந்த சமயத்தில் திரு. சிதம்பரனா ருக்குக் காயலா...

மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு 0

மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு

“குடி அரசு” ம் சுயமரியாதை இயக்கமும் ஏற்பட்டது முதல் தமிழ் நாட்டில், பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு என்றும் வருணாச்சிரம தரும மகாநாடு என்றும், ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும், சநாதந தர்ம மகாநாடு என்றும், ஆஸ்திக மகாநாடு என்றும் இந்து மத தர்மமகாநாடு என்றும் இப்படி பல்வேறு பெயர்களால் அடிக்கடி மகாநாடுகளைக் கூட்டுவதும் இந்து மதம், வேதம், சாஸ்திரம், புராணம், ஸ்மிருதி, இதிகாசம், மோட்சம், நரகம் என்பவைகளைப் பற்றிப் பேசி நிலைநிறுத்தித் தங்களை மிக்க உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்று தாங்களே நினைத்துக்கொண்டு, தங்களுக்கு தனி மரியா தையும் தனி சுதந்திரமும் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களையெல்லாம் குறை கூறிக் கொண்டும், அவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆத்திரமும் பொறாமையுங் கொண்டு அதற்குத் தடைகளைக் கற்பிப்பதும் ஆகிய காரியங்கள் செய்து வருவதோடு, ஸர்க்காரையும் தங்களிஷ்டப்படி நடக்க வேண்டுமென்றும், அதற்கு விரோதமாய் நடந்தால் ஸர்க்காருக்கு விரோதிகளாய் உள்ளவர்க...