Category: குடி அரசு 1930

“மதத்திற்கு வக்காலத்து”

“மதத்திற்கு வக்காலத்து”

  நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட்டத்தார் அனைவரும் நமது இயக்கத்தை மறைமுக மாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத் தின் ஒரு உரோமங்கூட அசைக்கப் படவில்லை என்பதை நாம் பல தடவை களில் எடுத்துக்காட்டியிருக்கின்றோம்.  இதற்கு மாறாக இவ்வியக்கம் ஒவ் வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிற தென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும். மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன...

விருதுநகர் ஆண்டு விழா

விருதுநகர் ஆண்டு விழா

ஈ. வெ. இராமசாமியும் வல்லத்தரசும் 1000 பேர் ஊர்வலம் தலைவரவர்களே! வாலிபதோழர்களே! மற்றும் பல சங்கத்தினர்களே! இன்று இந்த ஆண்டுவிழாவுக்காக வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற் புக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆடம்பர வரவேற்பும் உபசாரப் பத்திரங்களும் எவ்வளவு உணர்ச்சியுடையதானாலும் கிளாச்சியாய் இருந்தாலும் ஏதோ ஒரு அளவுக்கு இயக்க பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டுவதற்கும் மக்கள் கவனத்தை இழுப்பதற்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்படுவதாய் இருந்தாலும் இப்போது வரவர எனக்கு இவைகள் ஒரு சடங்கு முறை போலவே தோன்றுகின்றன. இந்தப்படி வாயில் சொல்லிக் கொண்டே நானும் இந்த காரியங்களுக்கு உடன் பட்டுக் கொண்டே வருகின் றேன் என்றும் இவை அனாவசியம் என்றோ தவறு என்றோ பட்டவுடன் நிருத்திவிட வேண்டியதே கிரமமாகும் என்றும் சொல்வதில் குறை இருப்ப தாக நினைக்கவில்லை. ஆனால் இப்போது நிறுத்தப்படுவது சிலருக்கு அதிருப்தியாகவும், சிலருக்கு விஷமம் செய்யஇடம் கொடுப்பதாகவும் இருக்கக்கூடும்...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அசூயை        –        பொறாமை அபேக்ஷித்தல் –        விரும்புதல் அமிதம்        –        அளவுக்கு அதிகமாக அத்தாக்ஷி      –        உறுதியான சான்று அபுரூமாக      –        அபூர்வமாக, அரிதாக அநித்தியம்     –        நிலையற்றது அவிழ்தம்      –        மருந்து, ஒளடதம் ஆகுர்தி         –        உருவம், உடல் ஆக்கினை      –        கட்டளை, ஆணை ஆவாகனம்     –        எழுந்தருளுமாறு மந்திரத்தால்                                  தெய்வத்தை வேண்டி அழைத்தல் ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு இத்தியாதி      –        இவை போன்ற கடாக்ஷம்       –        கடைக்கண் கிருத்துருவம்   –        வஞ்சனை சகோதரம்      –        குலம் சம்சயம்        –        அய்யம், சந்தேகம் சம்ரக்ஷணை   –        காப்பாற்றுகை சவதமாக...

சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை

சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை

  திருவாங்கூர் ராஜியத்தில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் வரும் வழியில் சாஸ்த்தா கோவில் என்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்த சாமிக்கு அந்த பக்கத்திய ஜனங்கள் தாங்கள் உத்தேசித்த காரியம் நிறை வேறினால் வெங்காய வெடி வேட்டுகள் இத்தனை போடுகிறேன் என்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம். மோட்டார் பஸ்காரரும் அந்தப் பக்கம் பஸ் போகும் போதெல்லாம் வண்டியை நிருத்தி வெடி வேட்டுப் போட்டுச் செல் வது வழக்கம். இந்த வேண்டுதலையை நிறைவேற்றும் விதம் எப்படி என் றால் ரோட்டுக்கும் கோவிலுக்கும் சுமார் 100, 150 அடி இருக்கும். ரோட்டு கோவிலை விட கொஞ்சம் மேடானது. இந்தக் கோவில் பூசாரிகளில் இருவர் ரோட்டில் மோட்டார் பஸ் செல்லுகின்ற பக்கம் வந்து நின்று கொண்டு ஒவ் வொரூ பஸ் பிரயாணியையும் பார்த்து சாஸ்த்தா வெடி, சாஸ்த்தா வெடிகள் என்று கேழ்ப்பார். பிரயாணிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வேண்டு தலைக்கு தகுந்தபடி ஒன்று இரண்டு ஐந்து...

சுயமரியாதைத் தலைவர்

சுயமரியாதைத் தலைவர்

  சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர் திரு. று.ஞ.ஹ. சௌந்திர பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை க்ஷண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரண மாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த ஸ்தானத்தை ஒரு போதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத்தலுக் காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியாதை யுடனும் யாருடைய தயவு தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார். முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் அதிகாரத்தையும், சலுகையையும் பிரயோகித்து வந்தார். பணக்காரர்கள் குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது ஜாதித்திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரியமாய்...

காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை வாலிபர்களுக்கு விருந்து

காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை வாலிபர்களுக்கு விருந்து

ருஷிய பொது உடமைக் கட்சிக்காரர் அன்னிய தேசப் பிரசாரத்திற் கென்று ஒரு இலாக்கா வைத்து தங்கள் கொள்கைகளை உலகமெல்லாம் பரப்ப உத்தேசித்து அந்தந்த நாட்டுக்குத் தகுந்தபடி திட்டங்கள் ஏற்படுத்தி, அதை அந்தந்த நாட்டில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றார்கள். அந்த முறையில் இந்தியாவிற்கு என்று அவர்கள் வகுக்கப்பட்ட திட்டங்கள், லண்டன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்ததின் சுருக்கம் சென்னை “இந்து” பத்திரிகையில் லண்டன் நிருபரால் தந்தியடிக்கப்பட்டு அப் பத்திரிகையில் பிரசுரமானதின் கருத்தை மொழி பெயர்த்து மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அது வாலிபர்களுக்கு ஒரு விருந்தாகும், அதில் சில இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானதென்று காணப்படா விடினும் காங்கிரசையும் இன்றைய இயக்கத்தையும், அதன் இயக்கத் தலைவர்களையும் பற்றிக் கூறியிருக்கும் குறைகளில் பெரும்பான்மை நமது அபிப்பிராயமும் ஆகும் என்பதோடு அதையே நாமும் பல தடவை எழுதி வந்திருக்கின்றோம். திட்டத்திலும் பெரும்பான்மை நாம் எழுதி வந்தவை களாகும். பொது ஜனங்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி களைக் கெடுத்து தொழிலாளர்களுக்கும்...

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்  தலைவிரி தாண்டவம்

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்  தலைவிரி தாண்டவம்

  மதுரை சேர்மென் திரு. ஆர். எஸ். நாயுடு அவர்கள் மதுரை முனிசிபல் கவுன்சிலில் ஏற்பட்ட கக்ஷி பிரதி கக்ஷியினால் தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்படியிருந்தும் அதை லக்ஷியம் செய்யாமல் எதிர்கக்ஷி கவுன்சிலர்கள் 19 பேர் கூடியிருந்து ஏகமனதாக அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். இவரின் கை மிகவும் சுத்தமானது என்றாலும் கக்ஷி பிரதிகக்ஷி அதை கவனிக்க முடி யாமல் செய்து விட்டது. இப்போது திரு. துளசிராம் பி.ஏ., பி.எல். அவர்கள் ஏக மனதாய் மதுரை முனிசிபல் சேர்மெனாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு  µ 900 ரூபா சம்பளமும் 100 ரூ. அல்லவன்சும் உண்டு. திண்டுக்கல் சேர்மென் திரு. சோலை நாடார் அவர்களும் கக்ஷி பிரதி கக்ஷி காரணமாக தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவரும் மிக்க பரிசுத்தமும் நாணயமும் உடையவர். நம்பிக்கையில்லாத தீர்மானச் சட்டம் ஏற்பட்டு கொஞ்ச காலமே ஆனதால் அது...

பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்

பெ. சி. சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்

  றாமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டிக்குக் காலியான ஒரு ஸ்தானத் திற்கு நாடார் கனவான் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று பொது ஜனங்கள் விரும்பியதும், மேற்படி தேவஸ்தானக் கமிட்டி தலைவர் சுயமரியாதை வீரர் திரு. எஸ். ராமசந்திரன் அவர்கள் கண்டிப்பாய் ஒரு நாடார் கனவானையே நியமிக்க வேண்டுமென்று தேவஸ்தானப் போர்டை வற்புறுத்தி நாடார் குல  மித்திரன் பத்திராதிபர் திரு. சு. ஆ. முத்து நாடார் அவர்கள் பெயரை எடுத்துக் காட்டி இருந்ததும் நேயர்கள் அறிவார்கள். ஆனால் திரு. முத்து நாடார் அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் இல்லாததால் போர்ட் இலாக்கா மந்திரி அவர்கள் வேறு ஒரு நாடார் கனவான் பெயரை சிபார்சு செய்யும்படி கமிட்டித் தலைவர் திரு. ராமச்சந்திரன் அவர்களை கேட்டிருந்ததற்கு ஒப்ப அவர் விருதுநகர் பாத்திர வியாபாரம் திரு. பெ. சி. சிதம்பர நாடார் பெயரை தெரிவிக்கவே இலாக்கா மந்திரி அவர்கள் திரு. சிதம்பர நாடார் அவர்களை நியமித்திருப்பதாய் தெரிய நாம் மிகுதியும்...

கல்யாண ரத்து தீர்மானம்

கல்யாண ரத்து தீர்மானம்

ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாகரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரிய வருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப் பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும் கூட இந்த சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளை காதினால் கேள்க்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி  அடிமையாய் கிடந்து வந்து பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிரருக்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் “கடவுள்” போலவே பாவிக்க வேண்டு மென்றும், கணவன் குஷ்ட்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய்,...

ஆஸ்திகர்களே எது நல்லது?

ஆஸ்திகர்களே எது நல்லது?

கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா? அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும்  அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா? குடி அரசு – கேள்விகள் – 21.12.1930  

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உர்ச்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார். இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின்றாறோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உர்ச்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக ஸ்ரீரங்கத்திற்கும், திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர் பக்தர்களுக்கு வினியோகிப்பார்களோ தெரியவில்லை. குடி அரசு – செய்தி விளக்கம் – 21.12.1930

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப் படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத்தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே. இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம். கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு “நான்” பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு. அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை...

மந்திரிகள் நிலை

மந்திரிகள் நிலை

– சித்திரபுத்திரன் இனி எந்த மந்திரியும் சுயமரியாதைக்காரர்கள் தயவால் தான் வாழ முடியும், ஏனெனில் அவர்களிடமிருந்த இரண்டு முக்கியமான அதிகாரங்கள் ஒழிந்து விட்டன. என்னவெனில், நாமினேஷன் அதிகாரம், 2. உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம் இந்த இரண்டு அதிகாரமும் சாதாரணமாக ஒரு………………. இருந்தால் கூட மக்களில் பணக்காரரும், பிரபுவும், ஜமீன்தாரர்களும், ராஜாக்களும், மிராஸ் தாரர்களும், வியாபாரிகளும், பண்ணைகளும், பிரசிடென்டுகளும், சேர்மென் களும், ஹ க்ஷ ஊ னு படித்த வாலிபர்களும், மந்திரிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு தாசானுதாசனாகக் கும்பிடு போட்டுக் கொண்டு அவர்களது மூக்கு சளியை யும், கண் பீழையையும் வர்ணித்து சித்திரக் கவி பாடி பஜனை செய்து கொண்டு வலம் வருவார்கள். ஆனால், இப்பொழுதோ மேற்கண்ட அதாவது நாமினேஷன் அதிகாரமும் உத்தியோகம் கொடுக்கும் அதிகாரமும் “ முண்டச்சிகள் கெர்ப்பம் கரைவது போல்” நாளுக்கு நாள் கரைந்து கொண்டே போய் கடைசி யாக உதிரக் கட்டியாக மாறி ஒன்றுமில்லாமல் போய் விட்டது. ஆதலால்...

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே சித்திரபுத்திரன்

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே சித்திரபுத்திரன்

இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது, எல்லா மதங்களும் செத்துப் போய் விட்டன. செத்தப் பிணங்களே சடங்கு ரூபமாகவும், வேஷ ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியை கொடுத்துக் கொண்டு வருகின்றன. உண்மையில் எந்த மதஸ்தனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை, நடந்து கொள்ள முடிவதுமில்லை. உதாரணமாக பௌத்தர்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமானவர்கள், இந்துக்கள் என்பவர்கள் சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனை காண முடிகின்றதா? முதலாவதாக வேஷத்திலும், சடங்கி லுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் 100க்கு ஒன்று வீதம் கூட நிர்ணயமாய் நடக்கவோ, ஆசைப் படவோ கூட முடிகின்றவர் காணப்படுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தன், தன் “மதத்தைக் காப்பாற்ற வேண்டும்” “ மதத்திற்கு ஆபத்து ”  என்று சொல்லிக் கொண்டு...

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

ஸ்தல ஸ்தாபனங்களில் நாமினேஷன் எடுபட்டதானது ஏழைகளுக்கு மிகவும் நன்மையானதாகும். கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாகி எலக்ஷன் காலாவதியும் குறைந்து அடிக்கடி எலக்ஷன் நடப்பதாயிருந்தால் இன்னமும் நல்லதென்றே ஏழைகள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் எலக்ஷன் வரும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற ஆசைதான். எலக்ஷனில் நிற்பவர்களும் ஓட்டுக் கேள்க்கும் போது ஓட்டர்களை கெஞ்சுவதும், பார்ப்பதும் தவிர மற்ற காலங்களில் ஓட்டர்களை கவனிப்ப தேயில்லை. நமது எலக்ஷன்களால் அனேக பெரிய குடும்பங்கள் கெட்டுப் போய் இன்சால்வெண்டு  கூட ஆகியிருக்கின்றன. அநேக குடும்பங்கள் கடனில் மூழ்கியிருக்கின்றன. எங்கள் ஜில்லாவில் ஒரு தாலூக்காவில் தாலூகா போர்ட் எலக்ஷனினாலேயே அத்தாலூக்கா பணக்காரர்களில் சுமார் 20, 30 குடும்பங்கள் வரையில் சுமார் 15 ஆயிரம் முதல் ஒண்ணரை லக்ஷ ரூபாய் வரையில் கடன்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். இந்தப் போட்டிக்காரர்களுக்குள்ளும் இந்த மாதிரி எலக்ஷனுக்கு செலவு செய்து பதவி பெற்றவர்களுக்குள்ளும் நூத்துக்கு 4, 5 பேர்களுக்குக் கூட ஸ்தல நிர்வாக விஷயம் சரியாய் தெரிந்து பொருப்புடன்...

ஜாதி முறை

ஜாதி முறை

ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப் பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார்  இந்திய கவர்ன்மெண் டுக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்பதென்ன வென்றால், “ஜாதி வித்தியாசம் ஒழிபட வேண்டுமென்னும் விஷயத்தில் கவர்ன் மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற்கில்லை. ஆன போதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள்கையை உண்மையாய் அடி...

மு. ஞ. மு. மேனனுக்கு ஜே!

மு. ஞ. மு. மேனனுக்கு ஜே!

பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம் உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத்  தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகியாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லாவற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு ஸ்தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர். அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுமுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத் தில் தமது சமுகமான நாயர் சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மா னித்து மற்றும் சில பாரிஸ்டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தி யாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால்  6 மாதம் காவலில்  வைக்கப்...

யந்திரங்கள்

யந்திரங்கள்

“மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம்  செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க  வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும். ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையை குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட்சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற...

இது சொன்னது சுயமரியாதைக்காரரா?

இது சொன்னது சுயமரியாதைக்காரரா?

சித்திரபுத்திரன் “பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் – சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னி யாசம் கொள்ளு” என்று “நீதி நூல்கள்” முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுயமரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள் ஏறுமாறாய் இருக்கும் “விரதை”களை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணை கொள்ளு. சன்னியாசம் கொள் ளாதே என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்? குடி அரசு – விமர்சனம் – 14.12.1930

சுயமரியாதை தொண்டர்கள் மகாநாடு

சுயமரியாதை தொண்டர்கள் மகாநாடு

தமிழ்நாட்டு சுயமரியாதைத் தொண்டர்கள் விஷேச மகாநாடு என்னும் பேரால் இம்மாதம் முதல் தேதி கோயமுத்தூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான்கு தீர்மானங்கள் செய்ததாக நமக்கு செய்தி கிடைக்கின்ற விபரம் மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். இதற்கு முக்கியமாய் இருந்த கனவான்கள் மூவரும் அதாவது தலைமை வகித்த திரு. ஜே. எஸ். கண்ணப்பர் அவர்களும், வரவேற்பு கழகத் தலைவ ராயிருந்த கொங்குரபாளையம் பொன்னம்பலம் அவர்களும், காரியங்கள் பொறுப்பேற்று நடத்திய திரு. அய்யாமுத்து அவர்களும் உண்மைச் சுயமரியாதை வீரர்கள், தொண்டர்கள் என்பதில் ஆnக்ஷபனை இல்லை என்பதை நாம் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிலும் சில உண்மைத் தொண்டர்கள் இருந்திருப்பார்கள் என்பதையும் நாம் மறுக்க வரவில்லை. ஆனால் அவர்களை எல்லாம் இம்மகாநாடு கூட்ட நிர்பந்தப் படுத்தியது தற்காலம் நடைபெறும் அரசியல் இயக்க நடவடிக்கைகளும் உணர்ச்சிகளும் தான் என்று நாம் கருதியிருக்கும் அபிப்பிராயத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமல் இருக்க நாம் ஆசைப்படவில்லை. இதற்கு ஆதாரம் வேண்டுமானால்...

அறிவிப்பு

அறிவிப்பு

‘குடிஅரசு’ இது சமயம் 16 பக்கங்கள் கொண்டு வெளிவருவதால், பல அன்பர்களால் எழுதியனுப்பப்படும் நீண்ட கட்டுரைகள் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். வழக்கமாக எழுதிவரும் கட்டுரைகளே சில சமயங்களில் இடமின்மையால் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சமயம் வாய்க்கும் போது அவைகளை பிரசுரிக்க  உள்ளோம். அன்பர்கள் மன்னிப் பார்களாக. தவிர நமது பத்திரிகை ஒரு கொள்கை பிரசார பத்திரிகை            யாதலால் அதில் செய்திகளுக்கும், வர்த்தமானங்களுக்கும் இடம் ஒதுக்க முடிவதில்லை. ஆதலால் செய்திகள் போட முடியாமைக்கு வருந்துகிறோம். கொள்கை சம்பந்தமான செய்திகள் மிக மிக சுருக்கமாகவும், முக்கியமாகவும் இருந்தால் மாத்திரம் கவனிக்கக்கூடும் என்பதை வணக்கமாக தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ( ப – ர் . ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 07.12.1930

சிங்கப்பூர் கடிதம்

சிங்கப்பூர் கடிதம்

சென்ற வார இதழில் சிங்கப்பூரில் இருந்து தமிழ் மகன் எழுதிய ஒரு கடிதம் ஒன்று பிரசுரித்திருந்தது வாசகர்கள் படித்திருக்கக்கூடும். அதாவது சிங்கப்பூர் முன்னேற்றம் பத்திரிகையில் கண்ட விஷயங் களுக்காக மலாய் நாட்டிலுள்ள சில நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சங்கடப்பட்டு முன்னேற்றம் பத்திரிக்கையை குறை கூறுவதாகவும் அதன் மீது நடவடிக்கை நடத்த முயற்சிப்பதாகவும் அக்கடிதத்தில் இருந்து தெரிய வருகின்றது. நடவடிக்கை நடத்துவதில்  யாரும் எவ்வித ஆnக்ஷபணையும் சொல்வதில்லை. பத்திரிகாசிரியர்கள் எந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கு முன்னும் அதனால் ஏற்படக்கூடிய பலன்களுக்கெல்லாம் தயாராயிருந்து சந்தோஷமாய் வரவேற்கக் கூடியவர்களாகவே இருப்பார்களே தவிர, இம்மாதிரி சிறு மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்களாகவோ அல்லது தனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க மாட் டார்கள். ஆதலால் அதற்காக  நாம் ஒன்றும் சிபார்சுக்கு வரவில்லை. ஆனால் செல்வமும் செல்வாக்கும் உள்ளதும், தமிழ்நாட்டிற்கு பிரதானமான தென்பதுமான ஒரு சமூகம்  சமூக வாழ்வில் இவ்வளவு மோசமான நிலை யில் இருக்குமானால் தமிழ் மக்களின் அறிவிற்கும் மூட...

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

கோட்டை விட்டாய் விட்டது தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் முதல் தேதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் அபேட்சகராக நிற்க உத்தேசித்திருந்தவர்கள் திருவாளர்கள் வாண்டையார், சாமியப்ப முதலியார், நாடிமுத்துப்பிள்ளை, மருதவனம்பிள்ளை, இராஜப்பா போன்ற பார்ப்பன ரல்லாதார்களும் 1000, 2000, 3000, 5000 ஏக்கர் நஞ்சை பூமியும், 10 லக்ஷம் 20 லக்ஷம் சொத்தும் பெருமானமுடையவர்களான பிரபுக்களுமாவார்கள். இப்படியிருந்த போதிலும் இவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றங்களுக்கு என்று ஏற்பட்ட கிளர்ச்சியின் பயனாகவே மனிதர்கள் என்று வெளியானவர்கள். இந்தக் கனவான்கள் தாங்கள் தான் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்குப் பிரதிநிதியாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு பொது வாழ்வில்  இரங்கி பல கௌரவ ஸ்தானம் பெற்றவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் பார்ப்பனரல்லாதாரியக்கம், அதாவது சமதர்ம இயக்கத்தின் பெயரால் பதவி, பட்டம், அதிகாரம் சில விஷயங்களில் பணம் முதலியவைகளும் கூட்டுக் கொள்ளை போல் அடைந்தவர்கள். இப்படி யெல்லாம் இருந்தும் இவர்களுக்கு இந்தப் பதவிகள் கிடைத்தவுடன்...

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

  கரூர் முனிசிபல் சேர்மென் அவர்களே! வைஸ் சேர்மென் அவர்களே! முனிசிபல் கவுன்சிலர் அவர்களே!! கரூர் நகர மகாஜனங்களே!!! இன்று நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரிகைக்கும் மற்றும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற வரவேற்புக் கொண்டாட்டத்திற்கும் நான் சிறிதும் தகுதியுடையேன் அல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், நீங்கள் உங்களுடைய அபிமானத்தையும், ஆமோதிப்பையும் கொண்ட ஒரு தொண்டனுக்கு நீங்கள் காட்ட வேண்டிய ஒரு அதிகமான அன்பையும் மரியாதையுமே பொருத்தமற்ற என் விஷயத் தில் காட்டியிருக்கின்றீர்கள் என்றே நான் கருதுகிறேன். ஆக இந்த அன் பையும் மரியாதையும் எனக்கு என்றோ அல்லது எனது தொண்டுக்கென்றோ கருதாமல் எனது கொள்கைக்கென்றே கருதுகிறேன். இதற்கு உதாரணம் என்ன வெனில் உங்கள் உபசாரப் பத்திரத்தில் கண்டிருக்கும் வாக்கியங் களேயாகும். ஆகவே அதற்காக என் என்றும் மறவாத நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். கனவான்களே! இன்று இந்திய நாட்டின் பல பாகங்களிலும் தேச விடுதலையின் பேரால் ஒருவித கிளர்ச்சிகள்...

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள். இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளை போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டு வார்கள். இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுப் பொட்டணம், பருத்திவிதைப் பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள்போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய  சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லக்ஷம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக...

ஜாதி முறை

ஜாதி முறை

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே! முன் 16 – 10 – 30ம் தேதி குடி அரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு அந்த சாதிகளே தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் ³ சாதிக்கிரமத்தை அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப்...

கல்வியும் கல்வி மந்திரியும் 0

கல்வியும் கல்வி மந்திரியும்

  சென்னை அரசாங்க கல்வி மந்திரி திவான்பகதூர் கனம் குமாரசாமி ரெட்டியாரவர்கள் திருநெல்வேலியில் முனிசிபாலிடியாரால் வழங்கிய ஒரு உபசாரப்பத்திரத்திற்கு பதிலளிக்கும் போது பேசியிருப்பதில் காணப் படுவதாவது: – “இன்று தேசமிருக்கும் நிலையில் நமக்கு வேண்டியது ஆரம்பக் கல்வியேயாகும். உயர்தரக் கல்வியை நிறுத்தியாவது ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றியமையாதது. இந்தக் கவலைமீது இதுவரை கல்வி முறையில் சரியானபடி கவனம் செலுத்தப் படவில்லை. சரியான கொள்கையும் திட்டமும் ஏற்படுத்தாததே இதற்குக் காரணம். மக்களுக்கு வரவர அறியாமை அதிகரித்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததாகும். கல்வி விஷயத்திலாகும் வீண் பணச் செலவு அதிகம். செலவுக்குத் தகுந்த பலனில்லை. என்னுடைய உத்தியோக காலத்தில் கல்வி முறையை நேர்மையான வழியில் திருப்பி ஆரம்பக் கல்வியை நாட்டில் எல்லாப் பக்கமும் புகுத்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில் இல்லையென்று ஏற்பட்டால் அதுதான் கல்வி விஷயத்தில் நான் செய்த நல்ல காரியமாகும்” என்று பேசியிருக்கிறார். இதை நாம் மிகுதியும்...

“தேசீயக் கிளர்ச்சி”யும்  “சீர்திருத்த” முயற்சியும் 0

“தேசீயக் கிளர்ச்சி”யும்  “சீர்திருத்த” முயற்சியும்

  இன்று இந்திய மக்களில் பெரும்பான்மையோருடைய உணர்ச்சி களை காங்கிரஸ் ‘தேசீயக் கிளர்ச்சி’யும் வட்ட மேஜை மகாநாட்டு “சீர்திருத்த” முயற்சியுமே கவர்ந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் சிறை சென்றும் அடிபட்டும் செல்வமிழந்தும் கஷ்டப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஆnக்ஷபணையில்லை. சீர்திருத்தம் அளிக்கும் முயற்சியில் சர்க்கார் பெரும் துகைகளைச் செலவு செய்து பெரும் எதிர்ப்பு களைச் சமாளித்து கமிட்டி விசாரணைகள் நடத்துவதும், வ. மே. மகா நாடுகள் கூட்டி யோசிப்பதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவ ரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்விரண்டினுடைய முடிவு என்ன என்ப தும் அதனால் நாட்டுக்கு நன்மை என்ன என்பதும் அநேகமாக ஏற்கனவே நம்மால் முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயங்கள் தானே யொழிய வேறில்லை. அதாவது கிளர்ச்சியினால் அநேகர்கள் தேச பக்தர்களாகவும், தியாகி களாகவும் ஆகலாம். முயற்சியினால் பலருக்கு பெரிய பெரிய பட்டமும், பதவியும், உத்தியோகங்களும் கிடைக்கலாம். இதைத் தவிர நாம் எதிர் பார்க்கும் காரியம் கிடைக்குமென்று நம்புவதற்கில்லை....

விபசாரமே ஜாதிக்குக் காரணம் 0

விபசாரமே ஜாதிக்குக் காரணம்

  அடுத்து வருகிற சென்ஸஸ் கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிப் பெயரைக் கொடுக்கக் கூடாதென்பதாக லாகூர் ஜட்பட் டோரக் மண்டலத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும். மற்றும் இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற மக்களால் சொல்லப்படும் ஆதிதிராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லாராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இதைப் பற்றி நமது “குடிஅரசி”லும் அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு சுயமரியாதை மகாநாடு, பார்ப்பன ரல்லாதார் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப் பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதையநுசரித்தே அநேக கனவான் கள் ஜாதிக் குறிப்பைக்காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கும் தெரியும். ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒரு முகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது...

சித்திரபுத்திரன் 0

சித்திரபுத்திரன்

  கடவுள் கருணை இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு. பெக்கிங் (சீனா) 100000 கெய்ரோ       40000 காஷான்       40000 லிஸ்பன்       50000 மொராக்கோ    12000 தென் அமெரிக்கா       50000 அலப்போ       20000 தென் இத்தாலி 14000 மென்சோடா    12000 பெரு எக்வாடா         25000 கராகாடோ     37000 ஜப்பான்        30000 இந்தியா        20000 பிரான்சிஸ்கோ, சிசிலி  77000 மத்திய இத்தாலி        30000 கான்சு சினா    300000 ஜப்பான்        220000 சில்லரையாக பல இடங்களில்  100000 ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படி புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

  அரசியல்   அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.   ஈ. வெ. ரா.   அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. ஈ. வெ. ரா. கடவுள் அவசியம் அறிவும், ஆராய்ச்சியும், மன உறுதியும் அற்றவர்க்கே கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும். சோம்பேறிகளுக்கும், ஊரார் பிழைப் பில் உண்டு களித்திருப்பவர்களுக்கும் கடவுள் மிக மிக அவசிய மாகும். ஈ. வெ. ரா. குடி அரசு – துணுக்குகள் – 09.11.1930

கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம்    0

கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம்   

  – சித்திரபுத்திரன்   அர்ஜுனன்: – சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?   கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ் சயா! இதன் பொருள். அர்ஜுனன்: – ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக் கின்ற) விதவைகளுக்கு என்ன கதி? கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன். அர்ஜுனன்: –  ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவு ளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப் பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா? கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப் படவேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக்...

திரு. பன்னீர்செல்வம் 0

திரு. பன்னீர்செல்வம்

  உயர்திரு ராவ் பகதூர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாப னங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமான வர்களுக்குள் ஒருவராவர். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இதுவரையிலும் யாருமே பிரஸ்தாபித்தது கிடையாது. அவரைப்போல் பார்ப்பனரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும். அப்படிப்பட்டவரை சென்னை ஐகோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணையமற்றவர் என்றும், யோக் கியர் அல்லாதவர் என்றும் ஐக்கோர்டு ஜட்ஜ்ஜிகள் பேசியதாக பத்திரிகை களில் காணப்படுகின்றன. கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்மந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்று நாம் உறுதி யாய்ச் சொல்லுவோம். கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடி தான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில்...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள் 0

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்

  முக்கியமான வேண்டுகோள் இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கை யை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப் படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேரா வது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலை யும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும். அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20...

அரசியல் வியாபாரம் 0

அரசியல் வியாபாரம்

  டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப்போவதாகத் தெரிகின்றது. அதாவது, சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டந்தஸ்துக்கு குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப் படுவ தாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது. பலாத்காரமற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்யவேண்டுமென்று சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம். இதற்காக  ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக் கலாடவோ தேவையில்லையென்றும் சொல்லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் “தேசியப் பத்திரிகைகள்” என்பவைகள்...

இரண்டு கேஸ் விடுதலை 0

இரண்டு கேஸ் விடுதலை

  ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ் வழக்குகள் ஹைக்கோர்ட்டு அப்பீலில் இருந்தது நேயர்களுக்கு ஞாபக மிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப் பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு கேஸ்கள் விடுதலையாகி விட்டன. முதல் கேசு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாரு டைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரி கள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தினார்கள் என்ப தாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டி யிருக்கிறது. இரண்டாவது கேசாகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரமாகவே நடத்தப் பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜுமெண்ட்...

பொது உடைகள்-I 0

பொது உடைகள்-I

  இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந் திரமோ பெருவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளு வதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே லக்ஷியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்ப தைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தாரென்றும், ஒரே லக்ஷியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும் விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதை யறியலாம். ஆனால் நமது இந்தியாவைப் பற்றி பேசப் புறப்படுவோமேயானால் இது ஒரே சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே லக்ஷியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவானது பல மதங்களாய் பல ஜாதிகளாய் பிரிந்திருப்பதோடு பல உள்வகுப்புகளாகவும் பிரிந்திருப்பதல்லாமல் பாஷைகளிலும், உடை களிலும், நடை பாவனைகளிலும் பல...

மந்திரி மார்கள் 0

மந்திரி மார்கள்

  சென்னை மாகாணப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டபின் அமைக்கப் படவேண்டிய மந்திரிசபை அமைக்கப்பட்டாய் விட்டது. அதாவது திவான் பகதூர் க்ஷ. முனுசாமி நாயுடு அவர்கள் முதல் மந்திரியாகவும், திரு. ஞ. கூ. இராஜன் பாரிஸ்டர் அவர்கள் இரண்டாவது மந்திரி யாகவும், திவான் பகதூர் ளு. குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மூன்றாவது மந்திரியாகவும் நியமனம் பெற்றிருக்கின்றார்கள். இவர்களைப் பாராட்டி வரவேற்கு முன்பாக பழைய மந்திரிகளை அவர்களது அருமையான தொண்டுக்காகப் பாராட்டி வழியனுப்ப வேண்டி யது அறிவும் நடுநிலைமையுமுள்ளோர் முறையாகும். அந்தப்படி பாராட்டி வழியனுப்புவதில் சிறிது கூட மிகைப்படுத்தாமல் உண்மையை உள்ளபடி சொல்லுவதானாலும் இதில் போதிய இடம் கிடைக்க மாட்டாது என்றே கருதுகின்றோம். முதலாவதாக, அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதாவது இராஜிநாமா கொடுத்த மூன்று மந்திரிகளின் நாணய விஷயம் மிக பரிசுத்தமானது என்பது அவர்களுடைய எதிரிகள் கூட இதுவரை அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாததாலேயே நன்றாய் விளங்கும். இரண்டாவது, பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு...

சம்பளக் கொள்ளை  திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் 0

சம்பளக் கொள்ளை  திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார்

    கோவையில் கூடிய நடு வகுப்பு உத்தியோகஸ்தர்கள் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல். சி. அவர்கள் செய்த தலைமை உபன்யாசத்தில் கண்ட ஒரு விஷயத்தை நாம் பாராட்டுகின்றோம். அதாவது “உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் சம்பளத் தைக் குறைத்து குறைந்த சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை உயர்த்தி எல்லோருடைய சம்பளத்தையும் ஒருவிதமாய் நிர்ணயிக்கவேண்டும்” என்று பேசி இருக்கின்றதானது மிகுதியும் போற்றத்தக்கதாகும். குடிகளுக்கு வரிப்பளுவு அதிகமாயிருப்பதும் சர்க்கார் வேலையில் இருப்பவர்களில் அநேகருக்குச் சரியான ஜீவனத்திற்குப் போதாத சம்பளமிருப்பதற்குக் காரணம் சில உத்தியோகஸ்தர்களுக்கு ஏராளமான சம்பளங்களும் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான சவுகரியங்களும் ஏற்பட்டிருப்பதே யாகும். என்றைய தினம் அரசியல் புரட்டு நமது நாட்டில் தோன்றிற்றோ அன்று முதலே பெரிய பெரிய உத்தியோகமும் அவற்றிற்குக் கொள்ளை கொள்ளை யான சம்பளமும் அதிகப் பட்டுக்கொண்டும் உயர்த்திக்கொண்டுமே வந்திருக்கின்றது. இனியும் உயருகின்றது. இவை முதலான கொடுமைகளை யெல்லாம் யோசித்தே ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் எந்த...

சட்டசபைக்குப்  பார்ப்பனர்  செல்வதின் ஆபத்து 0

சட்டசபைக்குப்  பார்ப்பனர்  செல்வதின் ஆபத்து

  திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்க கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும் , கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில்  என்ன கூறியிருக்கிறதோ அதற்கு சிறிது கூட மாற்றம் செய்யச் சீர்திருத்த வாதிகளையாவது சர்க்காரையாவது சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காக கட்டுப்பாடான பிர சாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடிய வரை தான் சட்ட சபையில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்தப் பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசீயவாதிகளும்  அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன. நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுய ராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும்...

நாடார் முன்சீப்பு 0

நாடார் முன்சீப்பு

  சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத் தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத் திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர். இந் நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப்பட்டதன் மூலமே கிடைக்கப் பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காறாகவே தான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப் ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜி யாகவோ பிரிட்டீஸ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாடார் சமூகத்திற் கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறிஸ்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள். நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே...

குருசாமி – குஞ்சிதம் 0

குருசாமி – குஞ்சிதம்

  திருச்செல்வர்கள் எஸ். குருசாமி, எஸ். குஞ்சிதம் ஆகிய இருவர் களும் இவ்வருஷம் கடைசியாக நடந்த செப்டம்பர் மாதப் பரீட்சையில்      பி. ஏ. வகுப்பில் தேறியிருக்கிறார்கள். திருமணம் நடக்கும் போது திரு.  குரு சாமி பி. ஏ. வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் தேறியிருந்தார். திரு. குஞ்சிதம் மாணவியாயிருந்தார். திருமணம் நடந்து “சதிபதி”களாக வாழ்ந்து கொண்டே இருவரும் படித்து பரீட்சையில் தேறியிருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறோம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 26.10.1930  

விபசாரம் 0

விபசாரம்

  விபசாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தப்பட்டதற்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக அதாவது ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ வேசித் தொழிலிலிருப் பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்கால சாந்தியாய் தன்னைக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லப்படும் படியான அந்தக் குறிப்பிட்ட ஆண் மகனைத் தவிர மற்றொருவரிடமோ, பல பேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டிருப்பதற்கே, கணவனாலும் வைப்புக்கார னாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொது ஜனங்களாலும் சொல்லப் படுகின்ற, அதாவது ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும் பழி சுமத்துவதற்கும் உபயோகிக்கும் சொல்லாகும். ஆனால், அதே பெண்ணை அந்தக் கணவனோ வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தன் சம்மதத்தின் பேரில் கூட்டி விடுவானானால் அதை அவர்கள் விபசாரம் என்று சொல்லுவதில்லை. இந்த சங்கதி பொது ஜனங்களுக்குத் தெரிந்தாலும் கணவனைத்தான் அவர்களும் வசை கூறி குற்றம் சொல்லுவதே தவிர பெண்ணை விசேஷ மாக முன் சொல்லப்பட்ட...

பெண்கள் சொத்துரிமை  0

பெண்கள் சொத்துரிமை 

  இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம். 3, 4 வாரங்களுக்கு முன் நாம் “இனியாவது புத்திவருமா” என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர் கள் கவனித்திருக்கக் கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென் னையில் ஒய். எம்.சி.எ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கை யானது நமக்கு சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. அதாவது, பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புருத்திப் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் பேசி யிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில், மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாச மில்லை என்பதும், ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண் களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சொத்துக்கள் அநுபவிப்பதென்பது சர்வ...

சிவநேயர் சிறுமை 0

சிவநேயர் சிறுமை

  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்னும் நாட்டுக் கோட்டைச் செட்டி யார்மார்கள்  தென்னிந்தியாவிலுள்ள  மற்ற சமூகத்தார்களை விட செல்வ வான்களாவார்கள். எல்லோருமே வியாபார பழக்கமுள்ளவர்களாதலால் சற்று புத்திக்கூர்மையாயும்  இருக்கப்பட்டவர்களாவார்கள். அப்படிப்பட்ட சமூகத் தார் ஜாதி சமய விஷயத்தில் பிடிவாத குணமுடையவர்களாகவும், குருட்டு நம்பிக்கையும், மூடபக்தியும் உடையவர்களாகவும் இருந்து வருவ தால் அவர்களது செல்வங்கள் பெரிதும் கோடிக்கணக்காகப் பாழாக்கப் படுவது மல்லாமல் நாகரீக வளர்ச்சியில் மிகுதியும் பின்னடைந்தவர்க ளாகவே அநேகர் இருந்து வருகின்றார்கள். பல மக்களிடம் பழகும் சந்தர்ப் பங்களும், பல நாடுகள் சென்றுவரும்  சவுகரியங்களும் அவர்களுக்கு ஏராளமாயிருந்தும் மேல்கண்ட ஜாதி சமய விஷயத்தில் உள்ள பிடிவாத குணத்தால் உண்மையான நாகரீகத்தின் புறமும் செல்வத்தின் கிரமமான  செலவின் புறமும் சிறிது கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் கண்ணைக் கட்டி பரந்த காட்டுக்குள் விடப்பட்ட சுயேச்சைக்காரர்கள்போல் வகை தொகை தெரியாமல் செலவு செய்து கொண்டிருக்கவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். இந்த சமூகத்தார்களில் இப்படிப்பட்டவர்களே பெரும் பகுதியாய் இருந்து வருவதில் ...

மறுமணம் தவறல்ல 0

மறுமணம் தவறல்ல

  திருச்சியில் இம்மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நீலாவதி-  ராமசுப்பிரமணியம் திருமணத்தின் போது ஒரு கேள்வி பிறந்தது. அதாவது “ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?” என்று கூட்டத்தில் ஒருவர் எழுந்து கேட்டார். அதற்கு அப்போதே பதில் சொல்லப்பட்டதானாலும், இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவருக்குள்ளாகவே பலருக்கு அம்மாதிரி மறுமணம் செய்து கொள்வது  தவறு என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் இருப்பதாலும் பொது ஜனங்களிலும் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுவதாலும், இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை இவ்வாரம் தலையங்கமாக எழுதலாம் என்று கருதி தொடங்குகின்றோம். முதலாவது இந்தக் கேள்வியைப் பற்றிக் கவனிக்கும் முன்பு மணம் என்பது என்ன? என்பதை முதலில் விளக்கிக் கொள்ள வேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் சௌகரியத்திற்காக என்று செய்து கொள்ளப் படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகின்றோம். அதில் இருவர் களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப்...

கடவுளின் நடவடிக்கை 0

கடவுளின் நடவடிக்கை

  – சித்திரபுத்திரன் உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப் படுமானால் அவரை நடுநிலைமையுடையவரென்று சொல்லுவதைவிட பாரபக்ஷமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன. அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதைவிட கருணை யற்றவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ உதாரணங்கள் யிருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்வதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதை விட தீமையை செய்கின்றார் என்பதற்குப் போதிய...

திருச்சியில்  நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமணம் 0

திருச்சியில்  நீலாவதி – ராம சுப்ரமணியம் திருமணம்

  சகோதரிகளே! சகோதரர்களே!! இன்றைய தினம் நாம் நீலாவதி – ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்க மாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம் மாதிரிக் கல்யா ணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே  இருக்கின்றன. அறிவு கொண்டு உண்மை  நோக்கத்தோடு இவ்விருவரின் திருமணம்  நடை பெறப் போகின்றது. திருமணம்  நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளு மாறு மண மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். (மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாலையிட்டு மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்) இங்கு எல்லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற திருமணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடைமையுமாகும். இப் பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிற தென்றால், ஒரு பெண்ணையும் ஆணையும் பிடித்து இருவரின் சம்மத மில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண்ணா னவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி,...

இனியாவது புத்தி வருமா?                    பெண்களுக்கு சொத்துரிமை 0

இனியாவது புத்தி வருமா?                    பெண்களுக்கு சொத்துரிமை

  இந்திய நாட்டில் அநேகமாய் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும்  மனிதத்தன்மைக்கும் நியாயத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் அவற்றுள் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லவென்பதையும், மனிதத் தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும்  உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள மற்ற பெரும்பான்மை யான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றி தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்ஷி நிர்வாகம் செய்யவும்  தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால்  முக்கியமானதாகவும் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவது எதுவென்றால்  இந்திய மக்களிலேயே பல கோடி  ஜன சங்கியையுள்ள பல சமூகங்களை பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து அவர்களை பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும். இரண்டாவதானது எதுவென்றால்  பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும் ஆண்களுக்கு...

மந்திரிகள் 0

மந்திரிகள்

  அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத் தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி. முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக்கூடும். யார் யார் “தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக் கிறாரோ” என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் “பிரம்மா எழுதின சங்கதி” உத்தியோகம் போன பிறகுதான் தெரியும். எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக் காரர் என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனம் ஆன...