Category: குடிஅரசு 1925

மலையாளச் சம்பிரதாயம்   – சித்திரபுத்திரன்

மலையாளச் சம்பிரதாயம்  – சித்திரபுத்திரன்

  “கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்றவாண்டில் கிடைத்தது.  ஆங்கு நான் கண்டும் கேட்டவைகளில் சில வற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். வவவ நீர் நில வளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை முதலியனவும் மரவள்ளிக் கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு.  வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய் கிறது.  இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும்.  ஆண்களும், பெண்களும் அதி சௌந்திரியமுள்ளவர்கள். நகரங் களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு விட்டு விசாலமாகவே இருக்கின்றன. வவவ மலையாளிகள் மிகச் சிக்கனமுள்ளவர்கள்.  ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை.  ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும்.  பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை.  அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே.  தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத்...

உலகம் போற்றும் மகாத்மா

உலகம் போற்றும் மகாத்மா

அரசியல் விஷயத்தில் பேதம் கொண்ட சிலர் காந்தியடிகளுக்கு செல்வாக்குக் குறைந்து வருகின்றதெனக்கூறி வருகின்றனர். இக்கூற்று ஆதாரமற்றது. காந்தியடிகளின் அன்பரும், சீடருமாகிய  பூஜ்யர் ஆண்டுரூ° ஒரு பத்திரிகையில் இந்திய சட்டசபையின் அங்கத்தினர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள் போன்று தற்கால நாகரீகத் தில் மயக்க முற்றுள்ளார்கள். பாமர ஜனங்களே, காந்தியடிகளின் உண்மை உபதே சத்தை அறிந்து நிர்மாண வேலையில் திளைத்து நிற்கின்றனர் என வரைந்துள்ளார். இதை உண்மையென்று எவரும் கூறுவர். மேனாட்டு நாகரீகத் தில் மயக்க முற்று நிற்கும் அரசியல்தந்திரிகளுக்கு,எம்பெருமானின் திட்டம் கூடாதுதான். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமே. நம் நாட்டைப் போன்றே சீன தேசத்தில் இதுகாலை வாடும் எளிய மக்கள் மகாத் மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். உலகில் சுதந்திரமற்று வாடும் நாடுகள் எல்லாம் காந்திய டிகளைத் துணைக்குக் கூவுகின்றன. எல்லாச் சுதந்திரம் பெற்ற மேல்நாட்டி னரும் காந்தியை ஏசுநாதர் எனப் போற்றிப் புகழ்கின்றனர். இந்நிலையில் அப் பெரியாருக்கு மதிப்புக் குறைந்து வருகின்றதெனக்...

சீனர்களின் கதி

சீனர்களின் கதி

நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சீனர்களின் நிலை வரவரத் தாழ்மை யுற்று வருகின்றது. இந்தியர்களைக் காட்டிலும் கீழ்நிலை அடைந்து வருகின் றார்கள். தங்கள் நாட்டில் சுதந்திரமில்லாது அந்நியர்களால் மிருகங்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலையைக் கூறுங்கால் உள்ளம் துடிக்கின்றது. என்று முதலாளிகளின் எதேச்சாதிகாரம் உலகினின்றும் ஒழியுமோ அன்றே உலகிற்கு விடுதலை. ஏழைகள் புத்துயிர் பெற்று இன் புறுவார்கள். ஜப்பான் உட்பட இருபது அந்நிய நாட்டினர் சீனத் தேசத்தினின் றும் மூலப்பொருள்களை சுரண்டுவதில் குந்தகம் ஏற்படுமோ? என்கிற பயத்தால் சீன மக்களைப் பல அட்டூழியங்களுக்கு ஆட்படுத்தி வருகின்ற னர். அக்கொடுமைகளைச் சொல்லவேண்டுவதில்லை. சீனத் தொழிலாளர் களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டைக் காட்டிலும் சீன தேசத்தில் அதிகம் உரிமை பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், சீனர்கள் ஆட்படும் கொடுமைகளை அறியாது, அவற்றைக் களையவும் வழி தேட ஆற்றல் இல்லாத பர்க்கன் ஹெத் பிரபு சீன மாணவர்கள் மீது பாய்கிறார். ஏழை மாணவர்கள் கொடுமை செய்கின்றனரா?...

இதற்குப் பெயரென்ன ?

இதற்குப் பெயரென்ன ?

சுயராஜ்யக் கட்சியார் காங்கிர° ஒத்துழையாமையைக் கைவிட்ட போதிலும் தாங்கள் ஒத்துழையாமையை விடப்போவதில்லையென்றும், மிதவாதக்  கட்சியும் ஜ°டி° கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகவும், ஒத்துழையாதாருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும், தேர்தல் சமயங் களில் மேடைமீது நின்று பேசி பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறார் கள். சுயராஜ்யக் கட்சியின் எல்லா இந்தியத் தலைவ ரான மோதிலால்நேரு அவர்கள் திடீரென்று  சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவக் கமிட்டியில் அங்கத்தினர் வேலையை ஒப்புக்கொண்டார். இதற்கு மாதக்கணக்கான சம்பளம் வராவிட்டாலும் தினக்கணக்கான சம்பளம் உண்டு. தினம் 100, 200 வீதம் சர்க்காரார் கொடுப்பார்கள். ‘மட்டிமன்’ கமிட்டியில் அங்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி சர்க்காரார் சொன்னபோதும்,  தங்கள் அபிப்பிராயத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்டபோதும், அங்கம் பெற முடியாதென்றும், சர்க்கார் கமிட்டியின் முன் சாட்சியம் சொல்ல முடியா தென்றும் சொன்னவர் அதற் குள்ளாக சர்க்காரிடத்தில் என்ன நல்ல யோக்கிய தையைக் கண்டுவிட்டார்? சர்க்காரோடு ஒத்துழைத்து கமிட்டியில் அங்கம் பெற்று சர்க்கார் அதிகாரி களோடு ஊர்...

லஞ்சம்

லஞ்சம்

நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழி வாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு  வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவது தான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும் அரசாங்க நீதிமன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங் களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதி பதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லு கின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர்....

நான்கு சித்திரங்கள்

நான்கு சித்திரங்கள்

ஒரு தமிழ் நாட்டுப் பெண் நாட்டியமாடுவது போலவும் ஒரு தமிழ் நாட்டு…………….ன் ஆட்டுவிப்பது போலவும் சித்திரம் எழுதி, இங்கிலாந்தில் தேசியக் கூத்து என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு சுயராஜ்யக்கட்சி காரியதரிசியாய் இருந்த ஒருவர் இங்கிலாந்துக்கு தேசிய பிரசாரத்திற்கு போவதாகச் சொன்னதையும், அவர் போகும்போது ஒரு நாட்டியப் பெண்ணும் கூடப் போயிருக்கிறது என்று சொல்வதையும் குறிக்கிறது போல் இருக்கிறது. மற்றொன்று ஒருவர் ஒரு மாளிகையில் அன்னிய உடையுடன் ஒரு கையில் சிகரெட்டும் மற்றொரு கையில் பிராந்திக் கோப்பையும் பக்கத்தில் ஒரு சாராயக் குப்பியும் அருகில் ஒரு பொட்லரும் இருக்க அதுசமயம் மகாத்மா உள்ளே வர உடனே வேலைக்காரனைக் கூப்பிட்டு மீட்டிங்குக்குப் போக வேண்டும், மீட்டிங்குக்கு உடுத்துவதான கதர் உடை கொண்டுவா என்று சொல்வது போல் ஒரு சித்திரம்  மகாத்மாவின் புது சிஷ்யர்களின் பெருமை யைக் காட்டுவதுபோல் வரையப்பட்டிருக்கிறதுபோல் இருக்கிறது. இது கல்கத்தாவில் மகாத்மாவின் பிரயத்தனத்தால் மேயர் ஆன ஸ்ரீமான் சென்குப்தா அவர்களின் தன்மையைக்...

அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி

அகில இந்திய தேசபந்து ஞாபக நிதி

தேசபந்து தாசர் இரவு பகலாய்ச் செய்யவேண்டுமெனக் கருதி வந்த கிராம நிர்மாண வேலை செய்யும்பொருட்டு இந்நிதி வசூலிக்க காந்தி அடிகள், பண்டித மதிலால் நேரு, சரோஜனி தேவியார், ஜம்னாலால் பஜாஜ், பி.ஸி.ரே, சௌகத் அலி, ஜவஹரிலால் நேரு முதலிய அரிய தலைவர்கள் ஓர் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள்.  இந்நிதியைப் பிரசாரத்திற்குச் செலவு செய்யப்படப் போவதில்லை.  படித்தவர்களை கிராமங்களுக்கு அனுப்பி அங்கு அவர்கள் கிராம நிர்மாண வேலைகள் செய்வதற்கே செலவு செய்யப்படும்.  தாசர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தார்ஜிலிங்கில் “எனது நோய் குணப்பட்டவுடன் கிராமங்களில் இராட்டினங்களைப் பரவச் செய்வதற்கே வேண்டிய முயற்சி செய்யப்போகிறேன்” என்று காந்தி அடிகளிடம் கூறி னாராம்.  உணவில்லாது வாடும் மக்களைக் காப்பதற்கு இந்நிதி வேண்டு வது மிகவும் அவசியமாகும்.  இக்கிராம நிர்மாண வேலையே நமக்குச் சுதந்த ரத்தை அளிக்கக்கூடியது.  நகரங்கள் என்னும் பேய்களின் நாகரீகம் என்னும் மாயை ஒழித்து மக்கள் எல்லோரும் கிராம வாழ்வு வாழ்ந்து, பண்டைக்...

சா°திரியாரின் தேசாபிமானம்

சா°திரியாரின் தேசாபிமானம்

திரு.வி.எ°.சீனிவாச சா°திரியாரை அறியாத இந்தியர் இரார் என்பது உறுதி.  நமது தேசாபிமானிகளில் ஒருவராக அவரும் விளங்கி வருகின்றார்.  ஆங்கிலேயர் இதுவரையிலும் இந்தியர்களுக்கு அளித்த பட்டங்களில் உயரிய பட்டத்தைப் பெற்றவராவர்.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர் அவர் தமது தேசாபிமானத்தின் ஆழத்தை இந்தியருக்கு அளந்து காட்டியிருக்கிறார்.  நாட்டின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிச் சிறந்த தேசாபிமானிகளின் அபிப்பிராயங்களை அறிய வேண்டி ‘பம்பாய் கிரானி கல்’ பத்திரிகை சில கேள்விகளை விடுத்திருக்கிறது.  அக்கேள்வி களுக்குப் பதில் அளித்த பெரியார்களில் நமது சா°திரியாரும் ஒருவர்.  அக் கேள்வி களில் ஒன்று பின்வருமாறு:- “அந்நிய நாட்டு ஆடை அணிவதை விட்டு விடத் தாங்கள் தயாராக இருக்கிறீர்களா? தாங்கள் அந்நிய ஆடையை உபயோகித்துக் கொண்டு  வரின், சுதேசி இயக்கம் முன்னேற்றமடைய அதை விட்டுவிட ஒருப்படுகிறீர்களா?”  இக்கேள்விக்கு ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நமது சா°திரியார் பதில் கூறிவிட்டார்.  என்னே இவரது தேசாபிமானம்! என்னே ஏழை இந்திய மக்களிடத்து இவருக்குள்ள பேரன்பு!...

ஸ்ரீ சிவம் மறைந்தார்

ஸ்ரீ சிவம் மறைந்தார்

சென்ற இரண்டு மூன்று வாரங்களாக மறைந்திருந்த துக்கம் நம்மை மீண்டும் சூழ்ந்து விட்டது.  இது, தேசத்தின் பிற்கால வாழ்வில் மேலும், மேலும் சலிப்பிற்கே இடம் கொடுத்து வருகின்றது.  சின்னாட்களுக்கு முன்பாக ஸ்ரீ ஜத் சுப்பிரமணிய சிவனார் மதுரையில் நோய்வாய்ப்பட்டு மிக வருந்துகிறார் எனப் பத்திரிகைகளில் பார்த்தோம்.  கொடிய கூற்றுவன் இவ்வளவு விரைவில் நமது அரிய தேச பக்தரைக் கொள்ளை கொள்வான் எனக் கனவினும் கருதவில்லை.  நமது சிவனார் பழைய தேச பக்த வீரர்களில் ஒருவர்.  1907ம் ஆண்டில் நமது நாட்டிடை ஏற்பட்ட சுதேசியக் கிளர்ச்சியின் பொழுதே முக்கியமானவராக நின்று தொண்டாற்றியதன் பலனாய் ஸ்ரீமான்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளை, குருதாதய்யர் முதலிய நண்பர்களுடன் ஆறு வருட தண்டனை அடைந்து சிறையில் பட்ட கடினங்கட்கு ஓர் அளவில்லை.  அப்பொழுது அவரைக் கொண்ட நோய்தான் இதுகாலை அவரை வீழ்த்தியது.  அக்காலத்தில் சிறை என்றால் எவ்வளவு இழிவும் பயமும் என்பது யாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.  அப்படி யிருந்தும்  சிறையினின்றும்...

காவேரி அணை

காவேரி அணை

ஈரோட்டிற்கு முப்பத்தேழு மைல் தூரத்தில் மேட்டூர் என்னும் கிராமத் திற்கு அருகில் ஓடும் காவேரிநதியின் இருகரைகளிலும் இரண்டு பெரிய மலைச்சரிவுகள் இருக்கின்றன. அவ்விரு சரிவுகளுக்கு இடையில் ஓடும் காவேரிநதியின் பிரவாக ஜலத்தை இச்சரிவுகளை ஆதாரமாகக்கொண்டு அணை கட்டி நிறுத்திவிட்டால், வேடைகாலத்திற்கு நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று சுமார் 50, 60 வருஷ காலமாக சென்னை அரசாங்கத்தாருக்கு நிபுணர்களால் யோசனை சொல்லப்பட்டு வந்தது. அந்த யோசனையின் மேல் சுமார் 25 வருடத்திற்கு முன்பாக ஸ்ரீமான் பி.வி.மாணிக்க நாயக்கர் முதலிய இஞ்சினியர்களால் இந்த அணைக்குத் திட்டம் போடப்பட்டிருந்தும் நாளது வரையிலும் வேலைத் துவக்கப்படாமல் இப்பொழுதுதான் வேலைத் துவக்கத்திற்கு ஏற்பாடாக, சென்னை கவர்னர் அவர்களால் மேட்டூரில் சூலை 20 தேதி அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது. இவ்வேலைக்கு 6 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வேலை முடிய குறைந்தது பத்து வருஷம் ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த அணையின் நீளம் ஆறாயிரம் அடி.  நீர்தேக்கத்தின் பரப்பு சுமார் இருபது சதுரமைல். இதன்...

குரோதன வருஷத்தின் பலன்

குரோதன வருஷத்தின் பலன்

இவ்வருஷம் சங்கராந்தி வியாபாரிகளின் மேலும், லேவாதேவிக் காரர்கள் மேலும், ஜாதி ஆணவத்தின் மேலும் வந்திருக்கிறது போல் காணப் படுகிறது. ஏனெனில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று லட்சக்கணக்கான துகைக்குச் சில வியாபாரிகளும், 25 லட்சம், 50 லட்சம், 75 லட்சம் என்று பத்து லட்சக்கணக்கான துகைக்கு லேவாதேவி செய்யும் சில நாட்டுக்கோட்டை செட்டிமார் முதலியவர்களும் தீவாளி ஆகிவருவதாகவும், பார்ப்பது தோஷம், தெருவில் நடப்பது தோஷம் என்கின்ற ஆணவத் தத்துவங்கள் அழிந்து வருவதாகவும், இன்னும் அடியுடன் அழியப் பொதுமக்கள் உணர்ச்சியுடன் முயர்ச்சி செய்வதாகவும் பத்திரிகைகளில் பார்த்துவருகிறோம். குடி  அரசு – செய்திக் குறிப்பு –  26.07.1925      

ஈரோடு முனிசிபல் நிர்வாகம்  – பழைய கறுப்பன் 

ஈரோடு முனிசிபல் நிர்வாகம் – பழைய கறுப்பன் 

  நான் யார் ? பழைய கறுப்பன் என்பவர் யார்? என்று அநேகர் என்னையே கேட்டார்கள். அவ்வப்பொழுது என் மனதில் தோன்றின பதிலை அவரவர் களுக்குச் சொன்னேன். சிலருக்கு திருப்தி, சிலருக்கு அதிருப்தி. உலகத்தில் எல்லாருக்கும் நல்லவனாய், எல்லாரையும் திருப்தி செய்ய நினைப்பது முடியாத காரியம். அவ்வித முயற்சி “கிழவனும், மகனும், கழுதையும்” என்ற கதையாய்த்தான் முடியும். ஆகையினால் அதிருப்தியினால் நான் கவலைப்படவேயில்லை. ஆனால் இந்தக் கேள்வியில் அடங்கிக் கிடக்கிற ஒரு உண்மையை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும். விஷயம் முக்கி யமா? விஷயகர்த்தா முக்கியமா? என்பதுதான். விஷயகர்த்தா முக்கியத் தினால்தான் இந்தக் கேள்வி பிறந்தது என்று  அறிந்தேன். விஷயகர்த்தாவைக் குறித்துதான்  விஷயம் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நமது ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனப் பான்மைதான் நம்மையும் நமது நாட்டையும் தற்கால கதிக்குக் கொண்டுவந்து விட்டது. நான் யாராயிருந்தாலென்ன? சொன்னதெல்லாம் சரியென்று தோன் றினால் அந்தக்...

சுதேசமித்திரனின்  மதுவிலக்குப் பிரசாரம்

சுதேசமித்திரனின்  மதுவிலக்குப் பிரசாரம்

  சென்ற 22.7.25 ல் வெளியான சுதேசமித்திரன் மதுவிலக்கு விஷய மாகச் “சென்னை பிஷப்பின் யோசனை” என்று மகுடமிட்டு எழுதிய குறிப்பைக் காண எமக்கு பெரும் நகைப்பு உண்டாயிற்று. கட்டாயப்படுத்திக் கட்குடியைத் தடுக்க முடியாதெனப் பல்லாயிரக்கணக்கான கிறி°தவ சகோத ரர்களை முக்திக்குச் செலுத்தும் உபதேசியாகிய ³ பிஷப் கூறியது சுதேச மித்திரனுக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டி விட்டது. சுதேசமித்திரனின் இக்கோபக்குறிப்பு எமக்கு வெறுஞ் சிரிப்பையே விளைவித்தது. “கண்ணாடி வீட்டில் வசிப்பவன் பிறன் வீட்டின் மேல் கல் எறிதல் கூடாது”என்ற சிறிய அறிவும் சுதேசமித்திரனுக்கு இல்லாமற் போனது எமக்குப் பெருத்த ஆச்சரியம். அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய எழுத்துகளில் ‘புட்டி’ படத்துடன் “எக்°ஷாஷ்” பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரஞ் செய்து பொருள் சம்பாதித்துவரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதி விட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத் தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரசாரம்...

தெய்வ வரி

தெய்வ வரி

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை.  அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல் லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி  நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, °தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி...

ஊழியன்

ஊழியன்

காரைக்குடியினின்றும் வாரந்தோறும் வெளியாகும் “தனவைசிய ஊழியன்’’ தனது சிறிய தொண்டை விடுத்து உலகிற்கெல்லாம் தொண்டு செய்தல் வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு இவ்வாரம் “ஊழியன்” என்ற பெரிய பெயர் தாங்கி வெளிப்போந்துள்ளான். “தனவைசிய ஊழியன்” முதலில் தன் சமூகத்திற்கு அதிக ஊழியம் புரிந்து வந்தானாயினும் எம்பெருமான் அறவாழி அந்தணன் காந்தி அடிகளின் ஒற்றுழையா இயக்கம் அத் தனவைசிய நாட்டின்கண் பரவி, அச்சமூகத்தினர்க்குச் சுதந்தர உணர்ச்சி யைக் கொடுத்தவன் தனவைசிய ஊழியனே. அதுவும் ஈராண்டுகளாகத் தன் சமூகத்தைவிடத் தேசமே பெரிதெனக்கொண்டு கதர், தீண்டாமை ஒழித்தல் முதலிய தொண்டுகளில் தனது கவனத்தை இடைவிடாது செலுத்தி வருகின்றான். ஊழியனின் ஆசிரியரைப்பற்றி யாம் அதிகம் கூறவேண்டு வதில்லை. நமது அன்பர் திருவாளர் ராய. சொக்கலிங்கன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சி மிக்குடையார். காந்தி அடிகளிடத்தில் அளவற்ற பற்றுடையார்.  “காந்தி பிள்ளைத்தமிழ்” என்ற ஓர் நூலும் ஆக்கியுள்ளார். சீரிய ஒழுக்க முடையார். இளம்வயது உடையவர். சுமார் நான்கு ஆண்டுகளாக இப் பத்திரிகையின்...

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை

திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை   ராஜ்யத்தின் விஸ்தீரணம் சதுர மைல் –        7,625 அதிலுள்ள கிராமங்கள்                                 –        3,897 இவற்றின் பட்டணங்கள்                              –        38 பட்டணங்களிலுள்ள வீடுகள்                     –        72,011 கிராம வீடுகள்                                                    –        681,816 ஜனத்தொகை மொத்தம்          ...

தேர்தல்களின் யோக்கியதையும் புதுச்சட்டத்தின் பலனும்

தேர்தல்களின் யோக்கியதையும் புதுச்சட்டத்தின் பலனும்

தேர்தல் சம்பந்தமான ஆட்சேபனை விண்ணப்பங்கள் கொஞ்சகாலத் திற்கு முன் நிர்வாக அதிகாரிகளாகிய கலெக்டர், அரசாங்க முனிசிபல் நிர்வாக அங்கத்தினர் இவர்களுக்குள்ளாகவே முடிவு பெறக்கூடிய தாகவிருந்தது. ஆனால் இப்படி நடப்பதில் தாட்சண்யங்களும், விருப்பு வெறுப்புகளும், சப்ளைகளும் சில்லரை அதிகாரிகளை விலைக்கு வாங்கப் படக்கூடியது களும் நியாயத்தைக் கெடுத்துவிடுகின்றனவென்கிற அனுபோகங்கள் ஏற்பட்டு, இந்த அதிகாரங்களை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து பிடுங்கி நீதிபதிகளுக்குக் கொடுக்கவேண்டுமென்று பொதுஜனங்களில் சிலர் வாதாடி னார்கள். அவைகளில் ஒன்றுதான் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தன் முனிசிபல் சேர்மன் பதவியையும், ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் வகித்துவந்த பதவிகளையும் ராஜீனாமாச் செய்தது. முனிசிபல் புதுச் சட்டம் இயற்றும்போது இவற்றைக் கவனித்து. தேர்தல் சம்பந்தமான ஆnக்ஷபனைகள் இனிமேல் நீதிபதிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமென்று சட்டமும் செய்தார்கள். இந்த சட்டம் செய்யப்பட்ட பிறகு விலங்கைத் தறித்துக் குட்டையில் போட்டதுபோல் ஆகிவிட்டது. நீதி ஸ்தலத்திற்குப் போகிற விஷயத்தில் நிர்வாகஸ்தர்களிடம் அனுபவிக்கிற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்ட தென்று சொல்வதற்கு...

சென்னைத் தேர்தல்

சென்னைத் தேர்தல்

சென்னையில் இப்பொழுது நடந்துவரும் தேர்தல் பிரசாரங்களின் யோக்கியதையைப் பார்த்தால் புதுச்சேரி தேர்தலுக்கு சமமாய் வந்துவிடும் போல் இருக்கிறது.  கூட்டங்களில் ஒரு கட்சியார் மற்றொரு கட்சியார் மீது காலிகளைவிட்டுக் கல்லெறியச் செய்வதும், நூற்றுக்கணக்கான போக்கிரி களை விட்டுக் கூட்டத்தைக் கலைப்பதும் போன்ற  காரியங்கள் நடைபெறுவ தாய் இரண்டு கட்சிப் பத்திரிகைகளிலும் பார்த்து வருகிறோம். யார் கலகத் திற்குக் காரணம்? யார் தூண்டுதலின் மேல் இம்மாதிரியான காரியங்கள் நடக்கின்றன என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராவிடினும் இம்மாதிரியான காரியங்கள் நடந்தன என்பதைப்பற்றிச் சந்தேகங் கொள்ள இடமில்லை. “குருட்டுக் கோமுட்டிக்கடையில் திருடாதவன் பாவி” என்பது போல், சரியான கல்வி அறிவும், நன்மை தீமைகளை அறிய ஆற்றலும் இல்லாத ஜனங்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டு மாயின் கையில் பலத்தவன்தான் காரியத்தை அடைவான். எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கின்றதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தியிருக்கின்றதோ எவனுக்குப் பொய்ப் பிரசாரம் செய்ய சௌகரியமிருக்...

லஞ்சம்

லஞ்சம்

சமீபத்தில் கோயமுத்தூரில் காட்டிலாகா கல்லூரியில் தேறிய மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்புக் கொண்டாட்டத்தில் காட்டிலாகா தலைமை அதிகாரியான மி°டர் டயர்மன் என்பவர் பின்வரும் புத்திமதியை மாணவர்களுக்குக் கூறினாராம்:- “நான் உங்களுக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். காட்டிலாகாவில் குறைந்த  சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தி யோக°தர்கள் மட்டுமல்லாமல், பெரிய உத்தியோக° தர்களும் யோக்கிய மற்ற செயல்களைப் புரிகின்றனர் என்று சொல்லு வதற்காக வருந்துகிறேன். ஒரு  ரேஞ்சர்  தனது  கீழுள்ளவர்கள் வீட் டில் இலவசமாகப் பல மாதங்கள் உணவு உட்கொண்டதுமன்றி, அவர் களுக்குக் கிடைக்கும் அல்ப சம்பளத் திலிருந்து மாதா  மாதம் சிறு தொகையும் வசூல் செய்தும் வந்தார். உயர்தர உத்தியோக°தர்கள் இவ்விதமான இழிந்த நிலையில் இருக்கையில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தியோக°தர்களைக் குறை கூறுவதில் பயன் உண்டா? ஜனங்கள் நம் இலாகாவைப்பற்றி பேசுவதற்குக்கூட வெட்கப்படுகிறார்கள் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இப் பொழுது புதிதாகப் பரீட்சை கொடுத்துப்போகும் நீங்களே இம்...

ஒவ்வொரு மாகாணத்திலும் தேவ°தான சட்டம் தேவை   – சித்திரபுத்திரன்

ஒவ்வொரு மாகாணத்திலும் தேவ°தான சட்டம் தேவை  – சித்திரபுத்திரன்

  ஜ°டி° கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டுவந்த சென்னை இந்து தேவ°தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரியங்கள் நடந்து வருகின்றன என்பது நேயர்கள் அறிந்த விஷயம். திருப்பதி தேவ°தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதாக பனகால் ராஜா சமீப காலத்தில் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டதைக் கேட்டதும், இச்சட்டத்தின் விரோதிகள் அவர் மேல் சீறி விழ ஆரம்பித்துவிட்டார்கள். 63 -வது சட்டம் இப்படிச் சொல்லுகிறது, 76-வது சட்டம் அப்படிச் சொல்லவில்லை என்றவாறு சிற்சில பத்திரிகைகளின் நிரூபங்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டிருக்கின்றன. சர்வகலாசாலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், முதலில் திருப்பதி கோயில் கோபுரத்தையும் ஏழுமலைப் படிகளையும் ஏன் பழுது பார்க்கவில்லையென்ற கேள்விகளை இதுசமயத்தில் சிலர் கிளப்பி விடுவது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த விதண்டாவாதக்காரர்கள் இவ்வளவு நாள்...

* தமிழர் கூட்டம்

* தமிழர் கூட்டம்

30.4.25 தேதியில் திருச்சிராப்பள்ளி ஜில்லா காங்கிர° கமிட்டி கூட்டத்தில் திருவாளர் மு.கா. வி°வநாதம் செட்டியார் அவர்கள் அக்கிரா சனத்தின் கீழ் சேரன் மாதேவி குருகுலத்தை சீர்திருத்த பிராமணரல்லாதாரின் மகாநாடு நடைபெற்றது.  அடியில் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின : ( க ) சேரமாதேவி குருகுலத்துக்குப் பணவுதவி செய்தது ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களை நம்பியேயாதலால், ஐயரவர்கள் பணங் கொடுத்தவர்களைக் கூட்டி ராஜினாமாக் கொடுக்க வேண்டியது நியாயமா யிருக்க, அவ்வாறு செய்யாமல் அங்கு வேலை செய்பவரிடம் தமது தலைமை °தான ராஜினாமாவைக் கொடுத்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது. ( உ ) ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவே சிறிதும் அதிகாரமில்லாத சிலர் அதனை ஏற்றுக்கொண்ட தோடும்  அமையாது குருகுலக் கிளர்ச்சிக்கே பெருங் காரணமாயிருந்த ஸ்ரீ மகாதேவய்யரவர்களைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்ததை இக்கூட்டம் பலமாகக் கண்டிக்கிறது. ( ங ) குருகுல நடைமுறையானது நேரான வழியில் நடை பெற வில்லையா தலால், அதனைத்  திறம்பட ...

குருகுலம்

குருகுலம்

  குருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப்பற்றி நான் தெளிவாய்க் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கின்றேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப்பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவர கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன். குருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜுலு நாயுடு  பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தி யிருக்கிறேன். (சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச்சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன்.) குருகுலத்திற்கு தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடமும், அவர்கள் குருகுலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும் படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் அவர்கள் நான்...

பர்க்கன்ஹெத் பிரபுவின் பரீட்சை

பர்க்கன்ஹெத் பிரபுவின் பரீட்சை

இந்தியா மந்திரி பர்க்கன் ஹெத் பிரபு “உங்களுக்குக் கொடுத்த சீர்திருத்தத்தை ஒழுங்காக நடத்தவில்லை. இனியாவது இரட்டை ஆட்சியை ஒழுங்குடன் நடத்துவீர்களாயின் 1929 ம் வருஷத்திற்கு முன்னர் சீர்திருத்தம் கொடுக்கலாமா என யோசிப்பேன்” என்று கூறிய உரைகளைக் கண்டு இந்திய அரசியல்வாதிகள் என்போரும் இந்திய அரசியல் பத்திரிகைகள் என்பவை களும் கண்ணீர்விட்டுக் கரைகின்றதை நோக்குழி பாஞ்சால வீரர்களான டயர், ஓட்வியர் போன்றார் மனதும் இளகிவிடும். ஆயினும், யாம் அதைப்பற்றிச் சிறிதும் கவலை உறக்  காரணத்தைக் கண்டிலம். பர்க்கன் ஹெத் பிரபு கழறுவது போன்று மாண்ட் – போர்டு சீர்திருத்தம் என்னும் சர்வகலா சாலையில்  யாம் மாணாக்கராய் ஒருபொழுதும் இருந்ததில்லை. மழைக்கும் சற்று நேரம் அக்கலாசாலைக்குச் சென்று ஒண்டியிருந்தோமில்லை. சீர்திருத்தப் பரீட்சை கொடுத்து நற்சாட்சிப்பத்திரம் பெறவும் எமது மனம் ஒருப்படவில்லை. அச்சர்வ கலாச்சாலையில் கற்ற மாணாக்கர்களும் அதன் பரீட்சைக்குச் சென்ற வித்தியார்த்திகளுமே தங்கள் பரீட்சையில் பர்க்கன் ஹெத் பிரபு கழித்து விட்டாரே என அழவேண்டுமே...

ஈரோடு நகரசபை நிர்வாகம்  – பழைய கறுப்பன் 

ஈரோடு நகரசபை நிர்வாகம் – பழைய கறுப்பன் 

  ஈரோடு நகரசபையின் அமைப்பும், நிர்வாகமும் மிகவும் சீர்கேடான நிலைமையில் இருக்கின்றன. தற்போது உள்ள நகரசபையின் நிர்வாகத் திறனைக் காண்போர் ஒவ்வொருவரின் உள்ளத்தினும் நகரமாந்தரின் நலத்திற்காக நகர சபையா? நகர சபைக்காக நகர மாந்தரா? நகரசபை நிர்வாகி களுக்காக நகரசபையும், நகர மாந்தர்களுமா? என்ற எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நகரசபையின் அமைப்பைப் பற்றியும், நிர்வாகத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். அவைகளை நன்கு ஆலோசித்து தக்கது செய்ய வேண்டியது ஈரோடு நகர மாந்தர்களின் கடன். தத்துப்பிள்ளைகள் தலைவரானார்கள் நகரசபையின் தலைவர் ஒரு வக்கீல், உபதலைவர் ஒரு  டாக்டர். இவ்விருவர்களும் சில வருஷங்களுக்கு முன் தங்களுடைய தொழிலை முன்னிட்டு பிறந்த ஊர்களை விட்டு  விட்டு  இவ்வூரில் குடி ஏறினவர்கள். ஆகவே இவர்கள்  ஈரோட்டார் அல்ல. ஆனால், பிற ஊரார் வேறு ஊரில் சில வருஷங்கள் வசித்தால் தாம் அண்டின ஊரின் தத்துப்பிள்ளைகள் ஆய் விடுகின்றனர் என்ற விதி...

தமிழர் கதி

தமிழர் கதி

வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட மும் தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சை காலமாகும். வைக்கம்  சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஓர் வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது. குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு  ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாதென்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டது?  இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த...

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் -சித்திரபுத்திரன்

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் -சித்திரபுத்திரன்

லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக் குக் காட்டி செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். “இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் – ஒழித்து விட்டோம்” என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள் தலையெழுத்து என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை ஒழித்து அரசாங்கத்தை அழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். மந்திரி களை ஒழித்துவிட்டால் அரசாங்கத்தாருக்கு லாபமேயன்றி நஷ்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப் போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின் னதென்று...

நிர்மாண திட்டம்

நிர்மாண திட்டம்

அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாண திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்ல வென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர் களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக் கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன...

இந்தியத் தொழிலாளர் – ஒரு தொழிலாளி

இந்தியத் தொழிலாளர் – ஒரு தொழிலாளி

தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடையவனாகவிருக்கிறேன். பொதுவாய் நமது நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர்களைக் குறிக்கின்ற தேயன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலா ளன் என்றால் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத்தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உப கருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அதுபோல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வ°துவும் அதற்கு உப கருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆகமாட் டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத் திலும்...

சென்னை முனிசிபல் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை – சித்திரபுத்திரன்

சென்னை முனிசிபல் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை – சித்திரபுத்திரன்

சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத் தின் மேல் மகாத்மா பெயரையும் காங்கிர° பெயரையும் சுயராஜ்ய கட்சியின் பெயரையும் சொல்லிக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். அதோடு மாத்திரம் நில்லாமல் தாங்கள் யோக்கியமான கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு எதிரிடையாய் நிற்கும் அபேட்சகர்கள் யோக்கியப் பொருப்பில்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சிப் பிரசாரம் செய்து, ஒரு கட்சியார் பேரில் வெறுப்புண்டாக்கவும் பாடுபடுகிறார் கள். முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை. இப் பொழுது பெயருக்கு முனிசிபல் விவாதத்தில் பிர°தாபிக்கப்படும் கட்சிகள் இரண்டேதான். ஒன்று பிராமணரல்லாதார் கட்சி என்று சொல்லப்படும் ஜ°டி°கட்சி; மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவ்விரு கட்சிகளும் ஒன்றை யொன்று தூற்றிக்கொண்டு பலமான பிரசாரங்கள் நடத்தி வருகின்றன. இரு கட்சியின் தத்துவங்களும் தேசத்திற்கு விடுதலை உண்டாக்காது. தற்கால நிலையில் கட்சிப் பேர்கள் சொல்லிக் கொள்வதாலேயே ஜனங்கள் ஏமாறக்கூடாது. சென்ற...

அரவிந்தருக்கு அழைப்பு

அரவிந்தருக்கு அழைப்பு

தேசபந்து தாசர் காலஞ் சென்றதும் ஸ்ரீ பாபு அரவிந்தரை, தாசரின் தலைமைப்பதவி யேற்றுக்கொண்டு தேசத்தை நடத்தும்படி பலர் வேண்டு வதாய்த் தெரிகின்றது. அரவிந்த கோஷர் தலைமை வகித்து தேசத்தை நடத்துவதற்கு மிகவும் தகுதியுள்ளவர் என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆனால் காந்தியடிகள் உழுது செய்னேத்தி செய்து வைத்திருக்கும் நிலத்தில் அரவிந்தரின் விளை முளைப்பது கடினம். அரவிந்தர் வருவாராயின் இந்தியா முழுவதும் மறுபடியும் ஓர் முறை உழுது அவரது விதைக்கேற்றவாறு பண் படுத்தவேண்டும். காந்தியடிகளின் திட்டம் முற்றிலும் பயனற்றதாகி காந்தி யடிகளே இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்றதல்ல என விலகிவிட்டால் மாத்திரம், அரவிந்தர் முதலியோர் தாராளமாக வரலாம். வந்துதான் ஆக வேண்டும். இப்பொழுது அரவிந்தர், காந்தியடிகள் இருவரும் தேசத்தை நடத்துவார்களாயின், பசுவையும், புலியையும் ஓர் வண்டியில் கட்டி ஓட்டுவது போல் தான் ஆகும். காந்தியடிகளே அரவிந்தரை அழைக்கிறாரெனின் அது ஒரு கோமாளி வேடமன்றி வேறல்ல. குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.06.1925

சர்மா சாய்ந்தார்

சர்மா சாய்ந்தார்

தமிழ்நாட்டு அருந்தவப்புதல்வர் ஸ்ரீமான் கிருஷ்ணசாமி சர்மா இம்மாதம் 24 – ந் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்குக் காஞ்சியிலுள்ள தமது இல்லத்தில் காய்ச்சலினால் இறந்துவிட்டாரென்ற செய்தியைக்கேட்க ஆற் றொணாத் துயர்க்கடலில் மூழ்கினோம். தேசம் தற்பொழுதுள்ள நிலைமையில் பாரதத்தாயின் உண்மை மக்கள் ஒவ்வொருவராக மடிந்து வருவது நாட்டின் தீவினையேயன்றி வேறல்ல. நமது சர்மா அவர்கள் ஏனைய தேசபக்தர்களைப் போன்று தனது வாழ்நாளில் வேறு ஒரு தொழிலிலிருந்து தேசசேவைக்குக் குதித்தவரன்று. மாணவராக இருக்கும்பொழுதே தேச சுதந்திரத்தில் நாட்டம் உடையவராய் தமது வாலிபகாலத்திற்கு முன்பே தியாகத்தின் வாயிலாய்ச் சிறைவாசம் ஏற்றார். சிறைச்சாலைக் கைதிகளை இக்காலத்தைப் போலல்லாது கொடுமையாகவும், இழிவாகவும் நடத்திவந்த காலமாகிய 1908 -ம் ஆண்டி லேயே மாதக்கணக்கில்லாமல் வருடக்கணக்காய் தண்டனை அடைந்தார். சிறையினின்றும் வெளிவந்ததும் மீண்டும் தேசத்தொண்டிலேயே ஈடுபட்டு ழைத்ததனால் யுத்த காலமாகிய 1917 – ம் ஆண்டில் ஒருவருட காலம் வாய்ப் பூட்டப்பட்டிருந்தார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்ததின் பயனாக...

சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்துசமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும், நிலைநாட்ட வேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமஸ் தானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர் ஓராண்டாக நடைபெற்று வருகிறது ; இன்னும் வெற்றிபெறவில்லை. ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச் சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒருகாலை இன்பமூட்டியும், மற்றொரு காலை துன்பமூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங் கவலையில் ஆழ்த்தி விட்டன என்பதே எமது கருத்து. மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாற்றானும் இல்லையென்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும் பேறு – ஒரு பெண்ணரசிக்கு...

காரைக்குடி ஜில்லா                      முதலாவது அரசியல் மகாநாடு  தீண்டாமை

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு தீண்டாமை

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப்பெயர்கள் இருப் பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சிய மாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது. பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன் மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாம்சம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங் கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளு டனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப் பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக் கவோ வழி...

காரைக்குடி ஜில்லா                           முதலாவது  அரசியல்  மகாநாடு  தீண்டாமை

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சா°திரம் என்று சொல்லு வதும். சிலர் °மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லு வதும், சிலர் பழக்கவழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வரு ணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக் கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாச்சிரமமானது பிராமணன், க்ஷத்திரியன், வைசி யன். சூத்திரன், பஞ்சமன் என ஐந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக் கின்றனவென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு°மிருதி என்றும்...

வைக்கம்

வைக்கம்

வைக்கம் நிலைமையைப்பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றிச் செல்லலாமென்று மகாராணியார் கட்டளைப் பிறப்பித்துவிட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால், அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் “தீண்டாதார்” செல்வதற்கு மட்டுமே கட்டளைப் பிறப்பிக்க சமஸ் தான அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும், மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்குக் கிடைக்காமலே போய்விடு மோவென ஐயுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளி வாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத் தையும், அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவரவேண்டும். குடி அரசு – குறிப்புரை – 21.06.1925

தாசர் தினம்

தாசர் தினம்

தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு ஜுலை µ முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்திய டையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபக தினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக. கைம்மாறு யாது ? இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர் என்று கூறுதல் மிகையாகாது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப் பிறகு இந்தியர்...

தியாகமூர்த்தியின் இறுதித் தியாகம் 0

தியாகமூர்த்தியின் இறுதித் தியாகம்

பாரத தேவியின் மணிவயிறு வாய்த்த துணிவுடை வீரமைந்தன் – தாய்த்திருநாட்டின் தவப்பேறு – வங்கநாட்டுச் சிங்கம் – உலகில் தியாகம் அனைத்தும் ஒரு வடிவு எடுத்தாலன்ன விளங்கிய விழுமியோன் – இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வள்ளல் – தேசபந்து சித்தரஞ்சன் தாஸர் ஆருயிர் அன்னையாம் பாரதியைப் பரிதவிக்க விட்டு வானுலகு ஏகின கொடுஞ் செய்தி இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து வெந்துயர்க் கடலில் வீழ்த்திவிட்டது. இடிமுழக்கம் கேட்ட நாகமே போன்று கொடுங்காலன் இடி கேட்டு இந்தியமக்கள் நவிலொணா நடுக்கத் திற்காளாயினர். இந்திய நாட்டின் – இந்திய மக்களின் வல்வினைதான் இருந்த வாறு என்னே! நம தருமைத் தாய்த்திருநாட்டிற்கு இஃதோர் எண்ணுதற்கரிய பெருஞ் சோதனைக் காலம் போலும்! கொடுங் கூற்றுவனின் கூத்தினைக் கண்டு தமிழ் நாடும், தமிழ் மக்களும் துயருழந்து வாடுங்காலையில், தனது வண்மையைக் காட்டுவான் விரும்பி அக்கொடியோன் வங்க நாடுற்றனன் போலும். வங்க நாட்டுச்சிங்கத்தின் வீர முழக்கம் ஓய்ந்துவிட்டது;...

துக்கம் கொண்டாடும் வகை 0

துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என் போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சி யில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்துப் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானா லும் சம்பாதிக்கலாம் ஒரு அய்யரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜுலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள். இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜுலு நாயுடும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப் பார்கள்? டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்து பார்க்கட்டும். இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர் கட்சியிலிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு...

புறப்பாடு வரி  – சித்திரபுத்திரன் 0

புறப்பாடு வரி – சித்திரபுத்திரன்

சென்ற வாரத்திற்கு முந்திய ‘குடி அரசு’ இதழில் நாடக வரியைப் பற்றி எழுதியிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடி விட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றமாகிப் போவதை உத்தேசித்து இவ்வூர் அதிகார வர்க்கமும் பிரபுக் கூட்டமும் மற்றொரு வரியை ஜனங்கள் தலையில் சுமத்தினார்கள். இச்சிறிய ஓர் காரியத்திற்காக இந்நகரத்தில் சுமார் ஐநூறு ரூபாய் வரை வசூல் செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். காரியத்தின் யோக்கியதையையும் அவசியத் தையும் அறிந்து மனப்பூர்வமாய் பொருள் உதவிய கனவான்கள் வெகு சிலரே இருப்பர். ஏனையோர் பிரபுத்துவத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயந்து உதவியவர்களே என்பதில் ஐயமில்லை. நாடக வரி வசூலான காலத்தில் நாமும் நாடகத்திற்குச் சென்றி ருந்தோம். நமது சமீபத்தில் ஒரு பக்கம் ஒரு வியாபாரியும் மற்றோர் பக்கம் கிராம அதிகாரி ஒருவரும் வீற்றிருந்தனர். வியாபாரி நம்மை நோக்கி தாங்க ளும் வந்துவிட்டீர்களே,...

தமிழ்நாடு 0

தமிழ்நாடு

ஒத்துழையா இயக்கம் காந்தியடிகளால் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் தமிழ்நாடுதான் அவ்வியக்கத்திற்கு முதன்முதலாக ஆதரவளித்தது. எண்ணிக்கைக்குக் கிடைக்காத ஏதோ சிலர் தேச முன்னேற் றத்திற்கல்லாது வேறு பல காரணங்களைக் கொண்டு பின் வாங்கியிருந்த போழ்தினும் தமிழ்மக்கள் சாதி, வகுப்பு வித்தியாசமின்றி ஒத்துழையாமை யின் திட்டங்களில் உடல், பொருள், ஆவி மூன்றையும் சிறிதும் மதியாது தியாகமே கடவுள், தியாகமே வீட்டைப் பெறுவிப்பது, தியாகமே உலகம் என நினைத்து எல்லாவற்றையும் துறந்த துறவிகள் போன்று தொண்டாற்றி வந்ததை உலகம் நன்கு அறியும். பெருந்தலைவர்களெனப்படுவோராகிய தாஸர், நேரு, அலி சோதரர், லஜபதிராய், அஜ்மல்கான் முதலிய பெரியோர் களெல்லாம் ஒத்துழையாமைக்கு மாறுதலாக நின்ற காலத்திலும் வணங்கா முடி மன்னனாய் நின்று ஒத்துழையாமையின் தத்துவத்தை அழியவிடாமல் நிலையிலிருத்திவந்ததும் உலகம் அறிந்ததே. அந்நிலையிலிருந்த தமிழ்நாடு, சாதி இருமாப்பிலும், சாதிச்சண்டையிலும், பட்ட வேட்டையிலும், ஓட்டு வேட்டையிலும், உத்தியோக வேட்டையிலும் ஆழ்ந்து கிடக்கக் காரணம் யாது? அதுகாலை தலைமையாக நின்றவர்கள் இதுகாலை மறைந்து...

வைக்கம் சத்தியாக்கிரகம் 0

வைக்கம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரை வில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதாவது அச் சம°தானத்துத் திவானான ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணபிள்ளையவர்களை சம°தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாக தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம். “இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டியதென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சம°தான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமை யை சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்ததால் கலகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாதவர்கள் அந்த ர°தாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்றபொழுது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம்...

கதர் 0

கதர்

நாலாவது தீர்மானம் கதரைப் பற்றியது. நமது ஜனங்களுக்குக் கதருக்கும், தேசவிடுதலையாகிய சுயராஜ்யத்திற்கும் என்ன சம்பந்த மென்பதே தெரியாது. சுயராஜ்ய மென்றால் என்ன என்பதைப் பற்றி நமக்குள் பெரிய அபிப்பிராய பேதமாயிருக்கிறது. நம்மில் படித்தவர்கள் சுயராஜ்ய மானது நம்மை ஆள்வோர்களால் சீமையிலிருந்து அனுப்பப்படுமெனக் கருதுகிறார்கள். நம்மை ஆளுகிறவர்கள் யாரென்பதை நாம் நன்றாய் கவனிக்க வேண்டும். அநேகர் போலீசாரும் கலெக்டரும்தான் நம்மை ஆளுகிறவர்களென்று கருதுகிறார்கள். சிலர் கவர்னரும், நிர்வாகசபை மெம் பர்களும், மந்திரிகளுமென்று கருதுகிறார்கள். வேறுசிலர் வைஸிராயும், பார்லிமெண்டும், இந்திய மந்திரியுமென்று கருதுகிறார்கள். இவர்களில் யாரும், சுதாவாய் நம்மை ஆளுகிறதில்லை, பின்னையாரென்று கேட்பீர்கள்; ஐரோப்பாவிலுள்ள வர்த்தகக் கூட்டத்தார் அரசாட்சி என்கிற பெயரால் நம் நாட்டில் செய்யும் வர்த்தகத்தைத்தான் நாம் அரசாங்கம் என்று கருதி வருகிறோம். ஒரு வியாபாரி எப்படி அயலூரிலுள்ள தன்னுடைய வியாபாரத்திற்குத் தன்னூரிலிருந்து ஒரு ஏஜண்டை அனுப்பிக் காரியம் பார்க்கச் செய்கிறானோ, அதுபோலவே ஐரோப்பிய வியாபாரிகள் இந்திய வியாபாரத்திற்கு வைஸிராய் என்ற பெயரால்...

காரைக்குடி ஜில்லா முதலாவது  அரசியல்  மகாநாடு 0

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரர்களே ! நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னு டைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆவலைத் திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. இன்று முடிவு பெற்ற தீர்மானங்களைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லி இக்கூட்டத்தைக் கலைப்பதற்கு நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். முதலாவது தீர்மானம் நமது பெரியார் சென்னை ஸ்ரீமான் பி.தியாக ராயரின் மரணத்திற்கு அனுதாபம் காட்டிச் செய்த தீர்மானமாகும். அதைப் பற்றி உங்களுக்கு அதிகமாய் யான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய தன்னலத் தியாகத்தையும், அவர் தமது சமூகத்திற்காகச் செய்த தொண்டையும் போற்றாதாரில்லை. அவருடைய ராஜீய அபிப்பிராயங்களில் நமக்கும் அவருக்கும் வடகோடி தென்கோடி யென வித்தியாசமிருந்த போதிலும், வரவர அவர்களும் சுயராஜ்யம் அவசியமென்றும், சீக்கிரத்தில் வேண்டுமென்கிற நிலைமையில் வந்துவிட்டார்கள்....

இந்துக்களின் கொடிய வழக்கம் 0

இந்துக்களின் கொடிய வழக்கம்

இம்மாதம் வெளியான ‘மாடர்ன் ரிவ்யு’ எனும் மாதச் சஞ்சிகையில் கோரமான ஒரு பெண் கொலையைப் பற்றிக் கீழ்காணும் விவரங்கள் காணப் படுகின்றன. அவை வருமாறு ;- “பத்துவயதுள்ள லீலாவதியெனும் பெயருள்ள தனது மனைவியைக் கொன்றதாக ஜோகேந்திரநாத்கான் என்பவன் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிபதி பேஜ் என்பவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டான். இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண் ணுக்கும், ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்துவந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச்செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி µ 9 ² மாமனார் வீட்டுக்கு வந்தான். அடுத்த ஐந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சின்னாட் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்கிசைந்து அவன் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும் மனைவியும் ஒரே அறையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளிரவு, புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப்...

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு 0

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரிகளே ! சகோதரர்களே ! காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த – அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும் அக்கிராசனம் வகிக்கும் கவுரவங் களையும் எனக்கே அளித்திருந்து, மறுபடியும் நடக்கும் இந்த மகாநாட்டு அக்கிராசன கவுரவத்தையும் எனக்கே அளித்திருப்பதைக் கொண்டு என்னிடம் தங்களுக்கு இருக்கும் அன்பைப்பற்றி நான் பெருமை பாராட்டிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. தேசத்தில் ஒற்றுமைக் கெட்டு, ஊக்கம் குன்றி, விடுதலை மறந்து, சுயநலம் மேலிட்டு தலைவிரித்தாடும் இந்தச் சந்தர்ப்பங்களில் மகாநாடுகள் நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். அதிலும் செல்வந்தர்களும், கஷ்டமென்பதே இன்னதென்றறியக்கூடாத சீமான்களும் நிறைந்துள்ள இப்பேர்ப்பட்ட குபேர பட்டணங்களில் மகாநாடுகள் நடத்த நண்பர்கள் ஏற்படுவதும், அப்படி ஏதாவது ஒன்று இரண்டு தேசபக்தர்கள் நடத்தினாலும் பொதுஜனங்கள் அதில் கலந்து மகாநாட்டைப் பலனுண்டாக்கும்படி யாக்கு வதும் மிகவும்...

* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம் 0

* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம்

இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்ற தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும் இக்கொள்கையை தேசீய இயக்கத்தில் ஈடு பட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக் கப் பட்டது. இக்கொள்கையை சேரன்மாதேவி குருகுலத்தில் அனுஷ்டானத் தில் கொண்டுவரவேண்டிய முயற்சிகளைச் செய்ய கீழ்கண்ட சப் கமிட்டியை இக்கமிட்டியார் ஏற்படுத்துகிறார்கள், ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஈரோடு. எஸ். ராமநாதன், மாயவரம். அ. வெ. தியாகராஜா, தேவகோட்டை குடி அரசு – 17.05.1925 – பக்கம்.11

திருச்சி தீர்மானம் 0

திருச்சி தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் கூடிச்செய்த ‘பிறப்பினால் மனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது’ என்ற *தீர்மானத்தைப் பற்றியும் அதைக் குறித்துச் சிலர் செய்த ராஜீனாமாவைப்பற்றியும், “நவசக்தி” பத்திரிகையில் மேற்படி தீர்மானத்தைப்பற்றி எழுதியிருந்த தலையங்கத் தைப்பற்றியும், இவ்வாரம் நமது பத்திரிகையில் வெளியிடவேண்டி எச்சரிக்கை என்ற தலைப்பின் கீழ் ஓர் குறிப்பு எழுதிவைத்திருந்தோம். ஆனால், நேற்று பத்திரிகைகளில் டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்கத்தா வினின்றும் அனுப்பிய தந்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் சமூகவாழ் விலும், குருகுலத்திலும் (மனிதர்கள் தங்களுக்குள்) பிறப்பினால் வித்தியாசம் பாராட்டக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் நிறைவேற்றிய தீர் மானத்தையும், அதன்மேல் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் எழுப்பிய ஆட்சேபனைகளையும் காந்தியடிகள் நன்கு பார்த்து அத்தீர்மானம் ஒழுங்கா னதுதானென்றும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அக்கமிட்டி அதிகாரமுள்ள தென்றும் சொல்லியதாகக் கண்டிருக்கிறது. இதைவிட நமது குறிப்பு இவர்களின் மனமாற்றத்திற்கு அதிக உதவிசெய்யாதெனக் கருதி நமது குறிப்பை நிறுத்திக் கொண்டோம். குடி அரசு – குறிப்புரை –...

ஈரோட்டில் நாடக வரி 0

ஈரோட்டில் நாடக வரி

கடந்த இரண்டு நாட்களிலும் ஈரோடு அதிகார வர்க்க உலகில் ஒரே பரபரப்பு. எல்லாம் ஓட்டமும் நடையுந்தான் ! மேலதிகாரி முதல் அடியிலுள்ள தோட்டி வரையிலும் வெயிலென்று பாராமலும், வியர்வை ஒழுகுவதைக் கவனியாமலும், ஓடித் திரிந்த வண்ணமாகவே இருந்தனர். ஈரோட்டில் இடிதான் விழுந்துவிட்டதோ? பெரும் புயல்காற்று கொடுமைகள் பல இழைத்ததோ? என்ன விபத்து நிகழ்ந்ததோ? என்று நேயர்கள் ஐயுற வேண்டும். நமது அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்தோர் இங்ஙனம் நினையார். ஒரு நாடகக் கூட்டத்தார் எமது அதிகார தெய்வங்களை இவ்வளவு ஆட்டமும் ஆட்டிவைத்துவிட்டனர் ! நாடக புருஷர்கள் யாரென்று எண்ணு கிறீர்கள்? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்களே! இவ்வூர் நாடக சாலை யில் நேற்றிரவு ‘புத்ரோத்ம ராமன்’ என்ற நாடகம் நடத்தினார்கள். மாப் பிள்ளைகளைப்போல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். மயிலாப்பூரில் நிருவப்பட்டிருக்கும் ‘இராமகிருஷ்ண மாணவர்’ இல்லத்திற்குப் பொருள் சேர்க்கவே இந்நாடகம் நடைபெற்றதாம் ! அநுமதிச்சீட்டு (டிக்கட்) ஒன்றின் ‘விலை’ ரூபா பத்துதான் !! ஒரு நாடகக்...

நமது அரசியல் நிலை  III 0

நமது அரசியல் நிலை III

காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைபற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடை பெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு இராஜ தந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசி யல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள் தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலர்களின் உள்ளங் கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையராய் உழைத்து வந்தனர். தன்னம் பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர். சுயராஜ்யம் ஆங்கிலர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிர° மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு “எமக்கு இன்ன குறை உளது,...

நமது அரசியல் நிலை II 0

நமது அரசியல் நிலை II

இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப் பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஒடுக்கப்பட்டவுடன், தேச விடுதலை யொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமை யுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங்களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பாராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்துவிட்டது. சாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவா ராயினர். ‘எனது கடமை’, ‘எனது கடமை’ என்றதற்குப் பதிலாக ‘எனது உரிமை’, ‘எனது உரிமை’ என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு சாதியினரும் தமது சாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து நிற்கின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு...