Category: குடிஅரசு 1925

கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள்  (ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)

கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் (ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)

நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம். அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத் தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது. முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான ( எலக்ஷன்கள் ) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல் கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிர°காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய்...

தாசர் தினம்

தாசர் தினம்

    தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு ஜுலை µ முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்திய டையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபக தினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக. கைம்மாறு யாது ? இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர் என்று கூறுதல் மிகையாகாது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப்...

நவரத்தினம்  – சித்திரபுத்திரன்

நவரத்தினம் – சித்திரபுத்திரன்

  சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோ தரரிடமாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார்  என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள். பிராமணர்களும், அவர்களைப்போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்ற எண்ணங்கொண்டே, கட்டாயப்படுத்தி மொட்டையடிப் பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார் கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில °திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக்கொண்டும், காஞ்சி புரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும் வரும் பட்டுப்புடவைகளைக் கட்டிக்கொண்டும் நான்கு பேர் நன்றாய் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். ஜ°டி° கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லாதி ருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக் கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப் படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்க...

திராவிட சங்கம்

திராவிட சங்கம்

திராவிட சங்கம்   நாகப்பட்டிணத்தில் திராவிட சங்கமென ஓர் சங்கம் நிறுவப்பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது.  ஆனால் முன்பு பிராமணரல்லாதார் சங்கமென்ற பெயருடன் இருந்த ஒரு சங்கத்தையே திராவிட சங்கமெனப் பெயர் மாற்றிப் புதிதாக நிர்வாக உத்தியோக°தர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  சங்கத் தின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.ஸி.சுப்பிரமணியஞ் செட்டியார் அவர்கள் கதரை ஆதரிக்க வேண்டுமென்றும், தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென ஸ்ரீமான் திருஞானசம்பந்தன் அவர்களும் பேசியிருப்பதாகத் தெரியவரு கிறது.  இப்படி வெரும் வாய் வார்த்தையுடனே நின்று விடுவதாயிருந்தால் இச்சங்கம் முன்பு இருந்த பெயருடனேயே இருந்து உத்தியோகத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  புதிதாக இவர்கள் பெயரை மாற்றிச் சங்கத்தை நிறுவியதற்கு ஏதாவது ஒரு காரணமாவது, நன்மையாவது அதில் ஏற்படவேண்டாமா? அப்படி ஏற்படவேண்டுமாயின் சங்கத்தின் அங்கத்தி னர்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டுமென்றும். சங்கத்தின் அங்கத்தினர்களாய் இருப்பவர்களுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்திருப்பார்களானால் புதுச்சங்கம் ஏற்படுத்தியது சரியென்று சொல்லலாம். காங்கிர° சம்பந்தப்பட்ட பிராமணர்...

குடி அரசு – தலையங்கம் 1925

குடி அரசு – தலையங்கம் 1925

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதீனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும், பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும்,  இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக் கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான்  முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து – மு°ஸீம் ஒற்றுமை அடி யோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவை களிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக்கொண்டே  வந்திருக்கின்றார். அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுமே அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக் கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்பொழுது தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள்...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

அசலாத        –        அகலாத அருந்தனமாய் –        அரிய செல்வமாய் அனுஷ்டானமாய்       –        ஒழுக்கம், வழக்கம், அனுஷ்டித்தல் –        கடைபிடித்தல், சடங்கு செய்தல் அபயாஸ்தம்   –        உள்ளங்கையை உயர்த்தி                                       ஆசீர்வதித்தல் ஆப்த   –        நம்பகமான ஆப்காரி இலாகா       –        மதுவரித்துறை ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு இட்டேரி        –        நில எல்லைகளில் செல்லும்                            குறுகிய வழி இதரர்கள்       –        மற்றவர்கள், பிறர் இலங்கிக்கொண்டு      –        விளங்கிக்கொண்டு உத்தாரணம்    –        முன்னேற்றம், ஏறுதல் உத்ரணித்தண்ணீர்      –        கரண்டித் தண்ணீர் கண்ணோக்கம் –        நோக்கம் சகோதரப்பாவம்        –        சகோதர மனப்பான்மை சந்தியா வந்தனம்       –        சூரியத் தோற்ற, மறைவு வேலை                              ...

பெரியார் கருத்துக்கருவூலம் மகத்தான தொகுப்புப்பணி

பெரியார் கருத்துக்கருவூலம் மகத்தான தொகுப்புப்பணி

பழைய “ குடிஅரசு ”, “பகுத்தறிவு”, “புரட்சி” ஆகியவற்றில் 1925 முதல் அய்யா அவர்கள் எழுதிய எழுத்துக்கள், பேச்சுக்கள், குறிப்புக்கள் ஆகியவற்றை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் அரிய பணி திருச்சியில் துவங்கியது. பகுத்தறிவுப் பேராசிரியர்களும், ஆசிரியர் அணி நண்பர்களும், பெரியார் நூற்றாண்டு வளாகக் கல்வி நிலையங்களின் செயலாளர் புலவர் கோ. இமயவரம்பனின் ஒத்துழைப்போடு இப்பணியை நடத்தினர். பெரியார் கருத்துக் கருவூலத் தொகுப்புப்பணியில் ஈடுபட்ட மானமிகு தோழர்கள். புலவர் கோ.இமயவரம்பன், பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வர் கோ. கலியராஜுலு, திருச்சி  பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன், பகுத்தறிவு ஆசிரியர் அணிச் செயலாளர் நண்பர் மெ. ஆரோக்கியசாமி, பேராசிரியர் செ.ஆ.வீரபாண்டியன், திருச்சி ந.வெற்றியழகன், புதுக்கோட்டை வீ.செல்லப்பன், தஞ்சை பெ.மருதவாணன், தஞ்சை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.இரத்தினகிரி, தஞ்சை  இரா. பாண்டியன், லால்குடி ப. ஆல்பர்ட் ஆகியோர் தலைமையில், சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து) கீழ்க் கண்ட தோழர்கள் உதவியாளர்களாகப் பொறுப்பேற்றுச் செம்மையான பணியாக...

பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பிராமணப் பத்திரிக்கைகளின் ஓலம்

பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பிராமணப் பத்திரிக்கைகளின் ஓலம்

சென்னையில் இம்மாதம் 20, 21-ந் தேதிகளில் நடைபெற்ற பிராமணரல்லாத 9-வது மகாநாட்டு நடவடிக்கைகளைப்பற்றி, “சுதேச மித்திரன்”, “°வராஜ்யா” முதலிய பிராமணப் பத்திரிகைகள் ஆத்திரம் பொறுக்காமல் வயிறு வயிறாய் அடித்துக்கொண்டு ஓலமிடுகின்றன. அவற்றில் சுதேசமித்திரன் பத்திரிகை “வசவு மகாநாடென்று” தலையங் கமிட்டு அடியிற் கண்ட ஒப்பாரியைச் சொல்லிக்கொண்டு அழுகின்றது.  அவற்றில் முக்கிய மான சிலவற்றைக் கீழே குறிப்பிட்டு அதற்குச் சமாதானம் எழுதுவோம். “இந்த மகாநாட்டிற்கு ஜனங்கள் அதிகமாக வரவில்லையே யென்று ஸ்ரீமான். டாக்டர். சி. நடேசமுதலியார் சொன்னதால், இம்மகாநாட்டிற்கு பிராமணரல்லாதார் ஆதரவு இல்லை” யென்பது. “சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாகத் திட்டினார்கள்” என்பது. “இந்த மாகாணத்திலும் பம்பாய் மாகாணத்திலும் ஜ°டி° கட்சி அதிகாரப் பதவியிலிருக்கின்றது, ஜனங்களுக்கு இவர்களால் என்ன செய்யப் பட்டிருக்கிறது” என்பது. “பம்பாய் மாகாணத்தில் மதுவிலக்கு விஷயமாய் ஜ°டி° கட்சி யாரின் ஒரு லக்ஷியத்தை அந்த கவர்ன்மெண்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்தியா கவர்ன்மெண்டார் அதை நிராகரித்துவிட்டனர்....

புது ஆண்டு சன்மானம்

புது ஆண்டு சன்மானம்

1926-ம் ஆண்டு பிறக்கப்போகிறது; வருடப் பிறப்பிற்காக “குடி அரசு” பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்? ஒன்றா, “குடி அரசு”க்கு அதன் நண்பர்கள் ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுங்கள் அல்லது நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான பிராமணப் பத்திரிக்கைகளின் ஒரு சந்தாதாரையாவது குறையுங்கள்.  இதை நீங்கள் செய்தால், “குடி அரசுக்கு” மாத்திரமல்லாமல், நாட்டுக்கும், பிராமணரல்லாத சமூகத்துக்கும் விடுதலை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர் களாவீர்கள். குடி அரசு – அறிவிப்பு – 27.12.1925

கோயமுத்தூரில் 17-ந்தேதி மாலை டவுண் ஹாலில் பொதுக் கூட்டம்

கோயமுத்தூரில் 17-ந்தேதி மாலை டவுண் ஹாலில் பொதுக் கூட்டம்

நமது நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைப் பற்றியும், காஞ்சீபுரம் மகாநாட்டு நடவடிக்கைகளைப் பற்றியும், நிர்மாணத் திட்டங்களைப்பற்றியும் எடுத்துச்சொல்லி வருகையில் அவர் முக்கியமாய்க் குறிப்பிட்டதாவது:- தற்சமயம் நமது தேசத்திலுள்ள பல கட்சிகளுக்கும் ராஜீய திட்டம் ஏறக்குறைய ஒன்றாகி விட்டது.  நிர்மாணத்திட்டத்தை நடத்திவைப்பதில், எந்தக் கட்சிக்காரராயிருந்த போதிலும், நிர்மாணத்திட்டம் நடத்துவதற்குப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.  காங்கிரசை ஒப்புக் கொள்ளாதவர் களும் காங்கிரசில் சேரப் பயப்படுபவர்களும் கூட நிர்மாணத்திட்டத்தை நடத்திக் கொண்டு போகலாம்.  காங்கிரஸில் சேர்ந்தால்தான் நிர்மாணத் திட்டத்தை நடத்தலாம், இல்லாவிட்டால் நடத்தமுடியாது என்னும் பயம் உங்களுக்கு வேண்டாம்.  மகாத்மாவின் நிர்மாணத்திட்டத்தை ஆதரிக்கக் கூடிய கட்சி எதுவாயிருந்தாலும் அவைகளெல்லாம் எனக்கு ஒன்றுதான்.  நிர்மாணத் திட்டமில்லாத எந்த ராஜீயக் கட்சியையும் தேசத்திற்கு அநுகூல மானதென்று சொல்லமாட்டேன்.  நிர்மாணத்திட்டத்தில்தான் தேசத்தின்  விடுதலை இருக்கிறது.  காங்கிரசிலும் நிர்மாணத்திட்டத்தின் ஆதிக்கமிருந்த தினால்தான் காங்கிரசிற்கும் மூலைமுடுக்குகளிலெல்லாம் மதிப்பு இருந்து கொண்டு வந்தது.  இப்போது நிர்மாணத் திட்டத்தின் ஆதிக்கம் ஒழிந்து, காங்கிரசினால் ஒரு...

கோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை °தாபனம் திறப்புவிழா

கோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை °தாபனம் திறப்புவிழா

தான் இக்கூட்டத்திற்கு வரக்கூடுமென்றாவது, இதில் பேச சந்தர்ப்பம் கிடைக்குமென்றாவது ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லையென்றும், திறப்பு விழாவிற்கு வந்தவனை திடீரென்று அழைத்ததிற்காகவும், இங்கு பேசும்படி கட்டளையிட்டதற்காகவும், அழைத்தவர்களுக்கும், அக்ராசனாதிபதிக்கும், வந்தனம் செய்வதாகவும், இக்கூட்டத்திலுள்ள பிரமுகர்களெல்லாம் பழைய ஆப்த  நண்பர்களென்றும், இவர்களில் அநேகம் பேர் நெருங்கிய பந்துக் களைப் போன்றவர்களென்றும், ராஜீய அபிப்பிராயங் காரணமாக இங்குள்ள அத்தனை பேரையும் நாலைந்து வருட காலமாக தீண்டாதவர் போல் நினைத்து, தான் ஒதுங்கியிருந்ததாகவும், இப்பிரிவினை ஏற்படுவதற்கு முன் கோயமுத்தூருக்கு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு சிநேகிதர் வீட்டிலும் நாலு நாள், ஐந்து நாள் தங்கி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், கொஞ்சக் காலமாக இவ்வூருக்கு வந்தால் பிராமணன் ஹோட்டலுக்காவது போய்ச் சாப்பிடுவதேயொழிய, இந்த அருமையான சிநேகிதர்கள் வீட்டுக்குப் போகாமல் கூட தான் அவ்வளவு ராஜீய பத்தியமாய் இருந்ததாகவும், இப்பொழுது காங்கிரசில் சுயராஜ்யகட்சி தோன்றியபின், இவ்வளவு நாள் கொடுமையான பத்தியமாயிருந்தது அவசியமில்லாத தென்று தோன்றும்படி செய்து விட்டதாகவும், ஜ°டி° கக்ஷியின் ஆரம்ப  ராஜீய...

கோயமுத்தூர் ஸ்ரீ.தியாகராய செட்டியார் முனிசிபல் ஆ°பத்திரி                                     திறப்பு விழா

கோயமுத்தூர் ஸ்ரீ.தியாகராய செட்டியார் முனிசிபல் ஆ°பத்திரி                                     திறப்பு விழா

நமது பெரியாரும் பூஜிக்கத்தகுந்தவருமான காலஞ்சென்ற ஸர்.பி. தியாகராய செட்டியாரவர்களின் பேரால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை ஸர்.பி.தியாகராய செட்டியாரவர்களின் திருநாள் சமயத்திலேயே திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்ததற்கு நான் பெருமையடைவதோடு, என் மனப்பூர்வமான நன்றியறிதலையும் செலுத்துகிறேன்.  பெரியோர்களுடைய திருநாளைக் கொண்டாடுவது நமக்குப் பூர்வீகமான வழக்கம். ஆனால், அப் பெரியார்களைப் பின்பற்றுவதில் நாம் கிரமமாய் நடந்து கொள்வதில்லை.  ஸ்ரீமான். தியாகராய செட்டியாருக்கு, அவருடைய தேச சேவைக்காக இந் நாட்டு மக்கள் எல்லோரும் கடமைப்பட்டிருந்த போதிலும், சிறப்பாக பிராமண ரல்லாதார் என்போர் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொல்லு வேன். தென்னாட்டில், பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குழைத்து, பிராமண ரல்லாதாரின் சுயமரியாதையை உணரும்படி செய்தவர், நமது தியாக ராயரே யாவார்.  அவர் கொஞ்சமும் சுயநலமில்லாமலும் அடிக்கடி மாறுபட்ட அபிப் ராயமில்லாமலும், விடா முயற்சியோடு உழைத்து வந்தவர்.  அப் பேர்ப் பட்ட வர் பேரால் இது போன்ற விஷயங்கள் மாத்திரமல்லாமல், இன்னுமநேக காரியங்கள் செய்யக்  கடமைப்பட்டிருக்கிறோம்.  அவருடைய பெருமை அவர்...

ஜமீன்தார்கள் வீட்டில் பிராமண எலிகள்

ஜமீன்தார்கள் வீட்டில் பிராமண எலிகள்

டில்லி ராஜாங்க சபைக்கு இவ்வருடம் நடந்த தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களிலொருவரான ஒரு பிராமணரல்லாத பிரபு கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பெரிய ஜமீன்தாரொருவருக்கு தனக்கு வோட் செய்யும்படி கேட்டு இரண்டு மூன்று கடிதங்கள் எழுதியிருந்தார்.  மற்றொரு பிராமண கனவானும் தனக்கு வோட் செய்ய வேண்டுமாய் ஒரு கடிதம் போட்டிருந்தார். தேர்தல் காலம் சமீபத்திலிருக்கும்போது  பிராமணரல்லாத கனவானுக்காக கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல யந்திரசாலையின் நிர்வாகி ஒருவர் வோட் கேட்பதற்கு ஜமீன்தாரிடம் நேரில் சென்று, விஷயத்தை எடுத்துச் சொன்னார்.  உடனே ஜமீன்தார் இதைப் பற்றி, தனக்குத் தகவலே தெரியாதே;  ஒரு பிராமணர்தான் கடிதம் எழுதியிருந் தார்;  அவருக்கு வோட் செய்வதாக நமது கும°தாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும°தாவான பிராமணர் தங்களுக்கு நான்கு வோட் இருக்கிறது;  ஒரு வோட் தாங்கள் சொன்னபடி பிராமணருக்குச் செய்துவிட்டாலும், மற்றும் ஒரு வோட் செட்டியாருக்கும் கொடுக்கலா மென் றார்.  உடனே வோட்டுக் கேட்கப்போன கனவான் தங்களுக்கும் இது விஷயத்தைப்பற்றி 2, 3 ...

சுயராஜ்யக் கக்ஷியின் பேராசையும் அதன் முயற்சியும்

சுயராஜ்யக் கக்ஷியின் பேராசையும் அதன் முயற்சியும்

“எச்சில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும், ஏய்த்து பலனடைவதானாலும் ஆசை தீர அடையவேண்டும்” என்று ஒரு பழமொழி யுண்டு, அதுபோலவே நமது சுயராஜ்யக் கட்சியார் ஆதியில் காங்கிரசை மீறிவிட்டு போனார்கள்; பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரசைக் கேட்டார்கள்.  பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடப்பதை பிறர் ஆnக்ஷபிக்கக்கூடாது என்றனர். பின்பு தங்களுக்கு வேண்டிய உதவியைக் காங்கிர°, தனது மன சாக்ஷிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும் என்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களும் ஒரு சரியான பாகமாயிருக்க வேண்டு மென்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களே முக்கிய°தர்களாக வேண்டும் என்று கேட்டனர்.  இவ்வளவும் அடைந்தார்கள்.  இப்போது தாங்களே காங்கிரசாகி விட வேண்டும்; தங்களுக்கு பதவிகளும், உத்தியோகமும், காங்கிரசே வாங்கி கொடுக்க வேண்டும்; அப்படி காங்கிர°காரரே எல்லா பதவியும், உத்தியோ கமும் சம்பாதித்து கொடுப்பதானாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது;  தங்கள் உத்திரவில்லாமல் காங்கிர°காரரும் அனுபவிக் கக் கூடாது;...

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார்

ஸ்ரீமான். முதலியார் தனது ‘நவசக்தி”யில் “எனது நிலை” என்ற தலைப்பிட்டு நமது “குடி அரசின்” 29 கேள்விகள் கொண்ட கட்டுரைக்கு மறுப்பு எழுதுவது போல் எழுதியிருக்கிறார்.  அதற்கு எமது குடி அரசிலும் எமது நிலை என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதக் கருதி, இவ்வாரம் “குடி அரசுக்கு” எனது நிலை ஸ்ரீமான் முதலியார் நிலை ஆகிய இருவர் நிலை முழுவதையும் விவகரிக்க இடம் போதானெக்கருதி இவ்வாரத்திய “குடி அரசு” பன்னிரன்டு பக்கத்தை, இதற்கென்றே பதினாறு பக்கமாக்கப்பட்டது.  வெளிப்படுத்த முடியாத பல இடங்களிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும், கடிதங்கள் வந்ததாலும், ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும், எனக்கும் பொது வான நண்பர்கள் சிலர் நேரில் வந்து 144 தடை உத்தரவு போட்டதாலும், கருதிய படி நடக்கமுடியவில்லை. ஆனாலும், ஸ்ரீமான். முதலியாரின் மறுப்பில் காணும், விஷயங்களை சுமார் 30 கூறுகளாய் பிரித்திருந்தாலும், இரண்டு ஒன்றை மாத்திரம் பொது ஜனங்களுக்கு விளக்க நண்பர்களின் அநுமதி பெற்று ஓர் சிறு குறிப்பை...

ஒத்துழையாமையே மருந்து

ஒத்துழையாமையே மருந்து

ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், நிர்மாணத் திட்டத்தில் ஒன்றாகிய மதுவிலக்குக்கு சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு வந்திருப்பதாக அவர் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி யிருக்கும் கட்டுரைகளிலிருந்து வாசகர்களுக்கு விளங்கியிருக்கும். அத் தோடு தீண்டாமை ஒழிப்பதற்கும், கோர்ட்டுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகக் கருதியிருப்பதாய் அவர் சென்ற சில தினங்களுக்கு முன் சித்தூர் ஜில்லா சப்டிவிஷனில் மாஜி°திரேட் கோர்ட்டில் ஓர் ஆதி திராவிட ஆலயப்பிரவேச வழக்கில் ஆஜராகி ஜெயம் பெற்றதன் மூல மாகவும் அறியலாம். இனி மகாத்மாவின் மூவகைப் பகிஷ்காரத்தில் முக்கிய மாயுள்ளது, சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது என்பதுதான். ஆனால் அது அநுபவத்தில் இப்போது அடியோடு  இல்லவே  இல்லை.  அதில் இப்போது நம்பிக்கை வரவேண்டிய அவசியமும் இல்லை. கோர்ட்டு, சட்டசபை ஆகிய இவ்விரண்டிலும் ஸ்ரீமான் ஆச்சாரியார் அவர் களுக்கு நம்பிக்கை வந்திருப்பது தற்கால நிலைமையில் அதிசயமுமல்ல, அது ஓர் வகையில் குற்றமுமல்லவென்றே சொல்லுவோம். ஆனால் காரியத்தில் இவையிரண்டும் தேசீய சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுமா...

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

  தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு  பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ் வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல. சரித்திர காலம் எப்படியிருந்தாலும்,   நம் கண்ணெதிராகவே சென்ற 10 வருடங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர்  நாயர் போன்றவர் களால் ஏற்படுத்தப்பட்ட, ஜ°டி° கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லா தாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் ஸ்ரீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமான சாக்ஷியம் சொல்லும்படி செய்தது மில்லாமல், ஜ°டி° கட்சியார் பிராமணரல்லாதவர்களுக்குப் பிரதிநிதி களல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச் செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட...

சென்னை தேர்தல் கலவரம்

சென்னை தேர்தல் கலவரம்

சென்னையில் நடந்த கார்ப்போரேஷன் தேர்தல்களின்போது, கலவரங்களும், பலாத்காரச் செய்கைகளும் நடந்ததாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் காணப்பட்டு வந்தன.  ஆனால் அவற்றின் உண்மையை ஜனங்கள் அறியாதபடி ஓர் கக்ஷியாரைப் பற்றியே குற்றமாய் நினைக்கும்படி சென்னை பிராமணப் பத்திரிக்கைகளும், சுயராஜ்யக் கக்ஷி பிராமணர்களும், சூழ்ச்சிப்பிரசாரம் செய்து வந்தனர்.  அதன்பின் இது சம்பந்தமாய் ஏற்பட்ட நீதி°தலத்தின் விசாரணையின் போக்கைக் கவனித்தவர்களுக்கு பலாத் காரத்துக்கும், குழப்பத்திற்கும் யார் பொறுப்பாளிகளாயிருந்தார்க ளென்பது விளங்கியிருக்கும்.  சுயராஜ்யக் கட்சியார் மீது, மற்ற கக்ஷியார் சென்னை பிரசிடென்ஸி மாஜி°திரேட் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த இரண்டு மூன்று விவகாரங்களின் முடிவினால் சுயராஜ்யக் கட்சியார்தான் அதற்குப் பொறுப் பாளிகளென்பதை விளக்கியிருக்கிறது. அதாவது:- கொஞ்ச நாளைக்கு முன் பைசலான ஒரு வழக்கில் சுயராஜ் யக் கட்சியார் ஒருவர் மற்றக் கட்சியாரைப் பிடித்துத் தள்ளியதும், திட்டியதும் ருஜுவானபோதிலும், தேர்தல்களில் இவைகளெல்லாம் நடப்பது சகஜந்தா னென தீர்ப்புச் சொல்லப்பட்டுவிட்டது. மற்றொன்றில், அடைத்து வைத்தது பற்றி விஷயங்கள் தெளிவான போதிலும், அதுவும் அவ்வளவு பெரிய...

கல்பாத்தி  ‘பிராமணர்களைவிட வெள்ளைக்காரரே மேல்’

கல்பாத்தி ‘பிராமணர்களைவிட வெள்ளைக்காரரே மேல்’

  கல்பாத்தியில் தீண்டாத வகுப்பாரென்று சொல்லப்படும் இந்து சகோதரர்களை அந்தத் தெருவில் நடக்கக்கூடாதென்று 144 தடை உத்திரவு பிறப்பித்தது பற்றி இச்செய்கைக்கு °தல அதிகாரிகள் பொறுப்பாளிகளல்ல வென்றும், சென்னை கவர்ன்மெண்டாரே இச்செய்கையின் பெரும் பாகத் திற்குப் பொறுப்பாளிகளென்றும், அதிலும் ஸ்ரீமான். ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் என்கிற ஓர் பிராமண கனவான் சட்ட இலாகாத் தலைவராயில்லாமலிருந்தால், இம்மாதிரி காரியங்கள் நிகழ்ந்திருக்காதென்றும், பொதுஜனங்கள் அபிப் பிராயப்பட்டிருந்த விஷயமானது, இப்போது அடியோடு பொய்யென்று சொல்வதற்கில்லாமல், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில் கேட்ட கேள்விகளினாலும், அதற்கு ஸர்.சி.பி. இராமசாமி அய்யர் அளித்த விடைகளினாலும் இருக்கிறது.  அதாவது:- பாலக்காடு மாஜி°திரேட் 144 உத்திரவு போடும்படி கவர்ன் மெண்டார் தூண்டவில்லையானால், கவர்ன் மெண்டுக்கும், பாலக்காடு மாஜி° திரேட்டுக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துக்களை காண்பிக்கமுடியுமா என்ற கேள்விக்கு, ஸர்.சி.பி. இராமசாமி ஐயர், அக்கடிதப் போக்குவரத்துகள் இரகசியமானபடியால் காட்ட முடியா தென்று பதிலிறுத்தியிருக்கிறார். பாலக்காடு மாஜி°திரேட் கல்பாத்தியில் இவ்விதமான உத்திரவு போட...

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

காஞ்சீபுரம் மகாநாட்டு விஷயத்தைப் பற்றி நமது பத்திரிக்கையில் “காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்” என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தோம்.  இனி, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்னும் தலைப்பின் கீழ் எழுத அவசியமேற்பட்டுப் போனதைப் பற்றி நாம் இதுவரையில் அடைந்திராத வருத்தத்தையும், கவலையையும் உண்மையிலேயே அடைகிறோம்.   ஆனா லும்,  கடமையைவிட்டு நழுவி அசத்தியத்தைத் தாண்டவமாடச் செய்ய மனம் ஒருப்படேனென்கிறது. சென்ற வாரம் ஸ்ரீமான். முதலியாரவர்கள் தன்னுடைய தலைமைப் பதவியை மனச்சாட்சிப்படி நடத்தினாரா? என்கிற விஷயத்தைப் பொது ஜனங் கள் அறிவதற்காக, பல விஷயங்களுக்கு, ஸ்ரீமான். முதலியாரைப் பதிலெழு தும்படி எழுதியிருந்தோம்.  அவற்றிற்கு நேர்முகமாகப் பதில் சொல்லாமல், இரண்டு, மூன்று விஷயங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிச் சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.  அவைகளில் பெரும்பான்மை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலவேயிருக்கிறது.  அதற்குப் பதில் ருஜுவோடு எழுத வேண்டியது நமது கடமையாய்ப் போய் விட்டதாதலால் பின்னால் அவற்றைப்பற்றி எழுதுவதோடு, ஸ்ரீமான். முதலியார் விடை அளிக்காமல் விட்டுவிட்ட விஷயங்களை,...

காங்கிர°

காங்கிர°

நமது நாட்டில் ராஜீய முன்னேற்றங்களுக்கும், சமுதாய முன்னேற் றங்களுக்கும், பொருளாதார முன்னேற்றங்களுக்கும், மகாத்மாவின் ஒத்துழை யாமை சம்பந்தப்படாததற்கு முன் உள்ள காங்கிர° காலங்களில், இவற்றிற்குத் தனித்தனியாக °தாபனங்களும், மகாநாடுகளும் நடந்து வந்தன. ஆனால் மகாத்மா அவர்கள் காங்கிரஸில் பிரவேசித்து காங்கிரஸின் மூலமாக ஒத்துழையாமையை வலியுறுத்தியபின், ராஜீய, சமுதாய, பொருளாதார விஷயங்களோடு மாத்திரமல்லாமல், இன்னும் அநேக நன்மைக்கான காரியங்களும் சேர்த்ததுதான் சுயராஜ்யமென்றும், அவ்வித சுயராஜ்யத்தை காங்கிர° மூலமாகவே அடையக்கூடிய நிலைமையில் கொள்கைகளும் திட்டங்களும் அமைத்து அவற்றிற்கனுகூலமான பல காரியங்கள் தேசத்தில் நடைபெற்று வந்தன. ஆனால், மகாத்மா அரசாங்கத்தாரால் சிறையிலடைப் பட்ட பின்பு, மகாத்மாவின் கொள்கைக்கும், திட்டங்களுக்கும் விரோதமா யிருந்து, அதை ஒழிக்கப்  பிரயத்தனப்பட்டுக்கொண்டு  சமயத்தை எதிர்பார்த்து, மகாத்மா கூடவே இருந்துவந்த சில பேர் மகாத்மா திட்டத்தை ஒழிக்க வெளிக்கிளம்பி பொதுச் சட்ட மறுப்புக்கு ஜனங்கள் தயாராய் இருக் கின்றார்களா? இல்லையாவென்பதைக் கண்டறிவதென்னும் சாக்கைக் கொண்டு ‘சிவில் டிசொபிடியன்°’ கமிட்டி என்ற சட்டமறுப்புக் கமிட்டி...

சுகோதயம் பத்திரிக்கை

சுகோதயம் பத்திரிக்கை

சுகோதயம் என்னும் தமிழ் வாராந்தரப் பத்திரிகை ஆரணியிலிருந்து ஸ்ரீமான். வி.என். ரெங்கசாமி ஐயங்காரவர்களை ஆசிரியராகக் கொண்டு சுமார் நான்கு வருட காலமாக தமிழ்நாட்டில் உலவி வருவது தமிழ் மக்கள் அறிந்த விஷயம். அப்பத்திரிக்கையின் ஆசிரியர் யாதொரு ஊதியமும் இல்லாமல் கௌரவ ஆசிரியராய் இருந்துகொண்டு குறைந்த சந்தாவாகிய வருடம். ரூ 2-8-0 வீதம் ஏழைகளும் படிக்கும்படியான கவலையின் பேரில், எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நடத்தி வந்திருப்பதைத் தமிழ் மக்கள் பாராட்டாமலிருக்க முடியாது. அதனுடைய ராஜீயக் கொள்கைகள் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பெரும்பான்மையான பத்திரிக்கைகள் போல் காற்றடித்த பக்கம் சாயாமல் ஒரே உறுதியாகவே இருந்துவந்தது மற்றுமோர் பாராட்டத்தக்க விஷயம். வகுப்பு விஷயங்களில் ஒருக்கால் நமக்கும் அதற்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தபோதிலும், ராஜீய விஷயங்களில் பெரும்பாலும் மகாத்மாவையும், சில சமயங்களில் தீவிர ஒத்துழையா தத்துவத்தையுமே அனுசரித்து வந்திருக்கிறது. அவ்விதப் பத்திரிக்கை இது சமயம் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு வழக்கில் இழுக்கப்பட்டு பத்திராதிபர்களின் உரிமைக்கும்,...

ஈரோடு முனிசிபாலிட்டி 

ஈரோடு முனிசிபாலிட்டி 

ஈரோடு முனிசிபல் சேர்மன் மீது சில கவுன்சிலர்கள் சென்ற மாதம் ஈரோடு முன்சீப் கோர்ட்டில், உண்மையில் நிறைவேறிய தீர்மானத்தை நிராகரித்து விட்டு , ஒழுங்கற்ற ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதாக தனது மினிட் புஸ்த்தகத்தில் சேர்மன் குறித்துக் கொண்டாரென்றும்  ஆதலால் அதை அமுலுக்குக் கொண்டுவரக்கூடாதென்றும், ஓர் தற்காலத்தடை உத்தரவு பெற்றதைப்பற்றி 15. 11. 25 “குடி அரசு” பத்திரிக்கையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். அவ்வழக்கு நாளது மாதம் 8 -ந்தேதி ஈரோடு டி.மு. கோர்ட்டில் மறுபடியும்  விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இது விஷயத்தில் பிரவேசிக்க முன்சீப் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை யென்றும், அக்ராசனாதிபதி என்ற ஹோதாவில் தான் செய்ததற்கு தானே தான் எஜமானென்றும், தன்னுடைய காரியத்தைச் சரியென்று நிரூபிக்க, சில கவுன் சிலர்களின்  பிரமாண வாக்கு மூலங்கள் ஆஜர் செய்யப்பட்டிருக்கின்ற தென்றும், பிரஸ்தாபத் தடை உத்திரவினால், சிங்காரவனத்தின் வேலைகள் தடைப்பட்டு  அதற்கென்று வாங்கி வைத்திருக்கும் செடிகளும், கொடிகளும் காய்ந்து வருகிறதென்றும், ஜில்லா கலெக்டரும் தனது காரியத்தைச்...

சுயராஜ்யக் கக்ஷிக்கு சாவுமணி

சுயராஜ்யக் கக்ஷிக்கு சாவுமணி

கவர்ன்மெண்டை முட்டுக் கட்டை போட்டு °தம்பிக்கச் செய்ய ஆரம்பித்த சுயராஜ்யக்கட்சி, கவர்ன்மெண்டுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுவிட்டு, தனக்கே முட்டுக்கட்டை போட்டுப் பிரசாரம் கூட செய்ய முடியாமல் தன்னையே °தம்பிக்கச் செய்து கொண்டது.  சுயராஜ்யக் கட்சி இந்த நிலைமைக்குத்தான் வருமென்று முன்னமேயே பலர் சொல்லிவந்தது உலகம் அறிந்ததே. ஆனாலும், ஆசை வெட்கமறியாது என்பது போல் பதவிகளும், உத்தியோகங்களும் பெற ஆசை கொண்ட வர்கள், உலகத்தார் முன்னிலையில் தங்கள் சுயமரியாதை எவ்விதம் மதிக்கப் படுகிறது என்பதையே லக்ஷியம் செய்யாமல், ஒன்றுகூடி பொய்ப் பிரசாரத் தையும், பாமர ஜனங்களின் அறியாமையையும் தங்களுக்கு ஆ°தியாக வைத்துக்கொண்டு, பதவி வேட்டையையும், உத்தியோக வேட்டையையும் அடைய ஆரம்பித்தார்கள்.  இதன் பலனால் தேசத்தின் ராஜீய வாழ்விலுள்ள கட்டுப்பாடும், கண்ணியமும், மதிப்பும் நீங்கி சுயநலங்கள் மலிந்து, சுயராஜ்யக் கட்சிக்குள்ளாகவே போட்டிகள் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெளிப் படுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று. சுயராஜ்யக் கட்சியார் பம்பாயில் கூடி ஒருவரையொருவர் வெளிப் படுத்தாமல் உத்தியோகம்...

கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா?

கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா?

சென்னை ஜ°டி° கக்ஷியைச் சேர்ந்த ஸ்ரீமான். தணிகாசலம் செட்டியாரவர்கள், சென்னை கார்ப்போரேஷனுக்குள் நியமனம் மூலியமாய் பிரவேசித்ததைக் கொல்லை வழியென்று சில பிராமணப் பத்திரிகைகள் கூக்குரலிடுகின்றன.  ஆயினும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.  சுயராஜ்யக் கட்சியாரும், அதன் தலைவர்களும் சாக்கடை வழியில் பிரவேசிக்கிறார்களே, இதை விட ஜ°டி° கக்ஷிக்காரருடைய நடவடிக்கை எப்படி மோசமாகும்? கோயமுத்தூர் ஜில்லா காங்கிர° கமிட்டித் தலைவரும், சுயராஜ்யக்கக்ஷித் தலைவருமான ஓர் பிராமணர், பிராமணருக்கு விரோதமான கக்ஷியென்றும், நாட்டிற்குப் பிற்போக்கான கக்ஷியென்றும், சர்க்கார் உத்தியோகத்துக்கும், சுயநலத்துக்கும் ஆசைப்பட்ட கக்ஷியென்றும், தன்னால் சொல்லப்படுகிற ஜ°டி° கக்ஷியின் ஆதிக்கத்திலிருக்கிற இலாகாக்களிலொன்றான, ஜில்லாபோர்டு அங்கத்தினர் °தானத்துக்கு. ஒத்துழையாமையையும் முட்டுக்கட்டையையும் ஆதரிக்கிற தத்துவங்களைக் கொண்டவர், பனகால் இராஜாவைக் கெஞ்சி அவரை ஏமாற்றி, ஜில்லா போர்டுமெம்பர் பதவி பெறுவது சாக்கடை வழியில் செல்லுவதா? அல்லவா? ஜ°டி° கக்ஷியாரின் கொள்கைப்படி °தல °தாபனங்களில் நியமனம் பெறுவது கடுகளவு அறிவு உள்ளவனும் ஒருக்காலும் கொல்லைவழியென்று சொல்லவே மாட்டான்.  ஒருக்கால் தேர்தலில் தோற்றுப்போய்...

மநுநீதி கண்டமுறை  “உதைத்துக் கொன்றதற்கு ரூபாய் 200 அபராதம்”

மநுநீதி கண்டமுறை “உதைத்துக் கொன்றதற்கு ரூபாய் 200 அபராதம்”

  அஸாம் தேயிலைத்தோட்டத்தில், வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக்கொன்ற ஓர் ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததைக் கேட்க இந்தியர்கள் மனம் பதறுமென்பதில் ஆnக்ஷபனை யில்லை.  ஆனபோதிலும், இதுமுதல் தடவையல்ல.  இதற்கு முன் பல தடவை களில் இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருக் கிறோம். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பாக, செயில்காட் என்கிற இடத்தில் ஓர் இந்திய °திரீயை நிர்வாணமாய் இழுத்துக்கொண்டுபோய் இரத்தம் வரும் படியாகப் புணர்ந்த ஓர் ஐரோப்பிய சோல்ஜருக்கு, 25 ரூபாய் அபராதம் விதித்த மாஜி°திரேட் தீர்ப்பு எழுதுகையில், “ஓர் இந்திய °திரீயை, ஓர் ஐரோப்பியர் புணர்ந்ததை ஓர் பெரிய தப்பென்பதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இரத்தம் வரும்படி புணர்ந்ததற்காக அபராதம் விதிக்கும்படியிருக்கிறது.  ஆதலால் அதற்காக 25 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது நேயர்கள் ஞாபகத் திலிருக்கும். வெள்ளைக்காரருடையவும்,  அரசாங்கத்தாருடையவும், இதுபோன்ற செய்கைகள், மதிக்கத்தகுந்ததும், இந்து தர்மத்திற்கே ஆதார மானதுமான மநுதர்ம சா°திரத்தை நமக்கு...

சேலம் தியாகராய நிலையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும்

சேலம் தியாகராய நிலையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும்

சிறந்த தேசபக்தரும், உண்மை சமூகத் தொண்டருமான காலஞ்சென்ற ஸ்ரீமான். தியாகராய செட்டியாரின் ஞாபகார்த்தத்திற்காக ஏற்பட்ட தியாகராய நிலயம் என்னும் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் நான் அடைந்ததைப்பற்றி அளவிலாத மகிழ்ச்சி எய்துகிறேன்.  இக்காரியத்தைச் செய்ய எனக்குக் கட்டளையிட்ட ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களுடைய அன்பையும், விடாமுயற்சியையும் நான் பாராட்டுவதோடு, அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன்.  ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களின் குணாதிசயங்களை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவால் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ராஜீய விஷயத்தில் அவருக்கும், நமக்கும் அபிப்பிராயபேதமிருந்தாலும், அவருடைய அபிப்பிராயம் நமது அபிப்பிராயத்தில் குறுக்கிடுவதாயிருந்தாலும், அவரது உண்மைத் தத்துவத்தையும் ஊக்கத்தையும் நான் பாராட்டாமலிருக்க முடியாது. ஸ்ரீமான். தியாகராய செட்டியார் தென்னாட்டுக்கே பழுத்த தேசாபி மானி.  அவர் நமது சமூகத்துக்கு உண்மையாய்த் தொண்டு செய்தவர்.  பிராமணரல்லாதாருக்கு மறக்க முடியாத தலைவர்.  அவருடைய காரியங்க ளெல்லாம் கொஞ்சமும் சுயநலமற்றது.  ராஜீய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதங்களிருந்தாலும், சமூக முன்னேற்றத்தில் எங்களுடைய அபிப்பிராயம் ஒன்றாகவே இருந்து வந்தது.  சமூக விஷயத்தைப்...

காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்

காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்

  காஞ்சீ மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான். திரு.வி.கலியாணசுந்தர முதலியார், தமது ‘நவசக்தி’ பத்திரிகையில்  “மகாநாட்டுத் தலைவர் ஐயங்கார், ஆச்சாரியார் கைப்பிள்ளையாக நடந்தார் என்னும் உரைகளை ‘குடி அரசு’ பத்திரிகை திரும்ப வாங்கிக்கொள்வது அதன் பெருந்தகைமையைக் காப்பதாகும்.  ஒருவர் தனது மனச் சான்றுப்படி நடந்ததை மற்றொருவர் திரித்துத் தம் மனம் போனவாறு கூறுவது அறமாகா.  “குடி அரசு” ஆசிரியர்பால் எமக்கு நிரம்பிய அன்பு உண்டு.  அவ்வன்பு காரணமாகவே இவ்வாறு எழுதத் துணிந்தோம்” என்று எழுதியிருக்கிறார். ஆனால் ‘குடி அரசு’ அதன் பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதிலோ, சிறுந்தன்மை அடையாதிருப்பதிலோ கருத்துவைத்து அது தமிழ் நாட்டில் உலாவவில்லை.  பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அனேக சிறுந்தன்மைக் காரியம் செய்யவேண்டுமென்பது அதற்குத் தெரியும்.  பெருந்தன்மை வந்தாலும் சரி சிறுந்தன்மை வந்தாலும் சரி அல்லது குடி அரசே மறைந்து போவதாயிருந்தாலும் சரி உண்மையை – தன்  மனதுக்கு உண்மை என்று பட்டதை – எடுத்துச் சொல்லுவதுதான் அதன் தொண்டாக...

தியாகராயர் திருநாள்

தியாகராயர் திருநாள்

இம்மாதம் 16, 17, 18-ந்தேதி ஆகிய மூன்று நாட்களையும், காலஞ் சென்ற பெரியாரான ஸ்ரீமான். பி. தியாகராய செட்டியாரின் நினைவுக்குறிய திரு நாளாகக் கொண்டாடவேண்டுமென்று, கனம். பனகல் இராஜா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனைப் பற்றி “லோகோபகாரி” பத்திரிக்கை பின்வருமாறு எழுதுகிறது:- “ டிசம்பர் மாதம் 16,17,18-ந்தேதிகளை காலஞ்சென்ற பெரியாரான திரு. பி. தியாகராய செட்டியாரவர்களின் திருநாளாகக் கொண்டாட வேண்டு மென்று தீர்மானித்திருக்கிறார்கள். காலஞ்சென்ற பெரியாருக்கு ஞாபகச் சின்னம் ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும், அவர் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டுமென்றும், அதற்காக நன்கொடைகள் வசூலிக்க வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காலஞ்சென்ற தியாகராயர் நாட்டின் நல்வாழ்வு கருதியும், சிறப்பாகப் பிராமணரல்லாதாரின் பெரு வாழ்வு கருதியும், பெருந்தொண்டு செய்தாரென்பதை யாரும் மறக்கமுடி யாது. அவர் திரு நாளைத் தக்கதோர் முறையில் கொண்டாடவேண்டும். அவர் நினைவை மற்றவர்கள் எவ்வாறு கொண்டாடினும் கொண்டாடட்டும். தியாகராயர் பெயரால் நாட்டிலே தகுதியான பல இடங்களில், கதர் நெசவுச் சாலைகள் ஏற்படுத்தவேண்டுமென்று நாம் சொல்லுவோம்....

ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் 10 கற்பனைகள்

ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் 10 கற்பனைகள்

27-11-25 -ல் ஸ்ரீமான். ராஜகோபாலாச்சாரியார் “நவசக்தி” பத்திரி கைக்கு ஒரு வியாசம் எழுதியிருக்கிறார்.  அதை நவசக்தி பொய்மான் வேட்டை என்ற தலைப்பில் பிரசுரித்திருக்கிறது.  இது நீண்ட வியாசமா யிருப்பதால், அதில் உள்ள முக்கிய 10 விஷயங்களை மாத்திரம் எடுத்து ஆராய்வோம். “பல காரணங்களால் உயர் பதவியடைந்த ஒரு ஜாதியாரைக்கண்டு பொறாமை கொண்டு மற்ற ஜாதியாரைச் சேர்ந்த பெரியோர்கள் அவர்களைத் தூஷித்து அவர்களை ஒடுக்குவதாக கிளர்ச்சி செய்தால் ……நன்மை விளைவதாக தோற்றம் காட்டலாம்;  விரைவில் அப்பொய்த் தோற்றம் மறைந்துபோய் பழைய கதையாய் முடியும்”. “நாட்டிலுள்ள மற்ற சமூகங்களின் வெறுப்புக்கும் துவேஷத் திற்கும் பார்ப்பனர் ஆளாகும்படி தீவிர பிரசாரம் சிலர் செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியும், இதனால் உண்டாகும் துவேஷமும், நாட்டிற்கு கேடு விளைவிக்குமென்பதில் ஐயமில்லை”. “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் ஒரு ஜாதியாரேயல்லாமல் பல ஜாதியார்கள் அதிகார சபையில் இருப்பது மாத்திரம் அல்லாததோடு, பிராமணர்களை பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதும், மற்ற ஜாதியார்கள் பிராமணரல்லாதார்களைத்தான்...

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

“தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசீய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்மந்தமான சகல பதவிகளிலும் இந்து சமூகத்தில் பிராமணர் – பிராமணரல்லாதார், தீண்டாதார் என்போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத்தொகையை அனுசரித்து பிரதிநிதி °தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டுமாய் மாகாண மகாநாட்டை கேட்டுக் கொள்வதோடு இத்தீர்மானத்தை மாகாண மகாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியுருத்தும்படி தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை பிரேரேபித்துப் பேசியதாவது:- நாம் ஒவ்வொருவரும், சுயராஜ்யம் அடைய பாடுபடுவதாய் சொல்லு கிறோம், அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம்.  சுயராஜ் யம் கிடைத்தால் அது பொதுமக்கள் ராஜ்யமாயிருக்க வேண்டாமா? நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால், சுயராஜ்யமென்பது பிராமண ராஜ்யம்தான் என்னும் பயம், இப்போது மக்களிடை உண்டாகி வருகிறது.  பிரிட்டிஷ்ஆட்சி புரிகிற இக்காலத்திலேயே, மனிதர்களைத் தெருவில் நடக்கவிடக்கூடாது குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்கவிடக்கூடாது என்னும் பல கொடுமைகள் நடை பெறுகிறபோது ராஜ்ய அதிகாரம் ஒருவகுப்பார் கைக்கே வந்து விடுமானால் இனி என்ன  கொடுமைகள் செய்ய...

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

ஆதி முதற்கொண்டே சூழ்ச்சி

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது நேற்றா ? இன்றா? காஞ்சீபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. மகாநாட் டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால் அம் மகாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு காங்கிர° ராஜீய நாடகத்தில் பிராமணரல் லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு,  கலியாணசுந்திர முதலியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த் தோன்றும். இம் மூவர்கள் தான் காங்கிரஸில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை பிராமணரல்லாதார்  ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். தென்னிந்திய நல உரிமை கூட்டுறவு சங்கம் அதோடு மாத்திரமல்லாமல், காங்கிர° “ பிராமண ராஜ்யம் ” °தாபிக் கத்தகுந்த சாதனமென்றும் சுய ஆட்சி என்பது –  பிராமண ஆக்ஷிதானென் றும் கருதிய பெரியோர்களான  டாக்டர் டி.எம்.நாயர், ஸர்.பி. தியாகராய செட்டி யார் போன்ற தேசாபிமானமும், அநுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை...

வைக்கம் சத்தியாக்கிரக                          வெற்றிக் கொண்டாட்டம்

வைக்கம் சத்தியாக்கிரக                          வெற்றிக் கொண்டாட்டம்

“ எங்களுக்குச் ( தனக்கும் தனது மனைவிக்கும் ) செய்த  உபச்சாரத்திற் காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக  இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிட வில்லை ” . தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மா விற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக  ஆரம் பத்தில் பிராமணர்கள் கக்ஷியில் இருந்த அரசாங்கத்தார்,  இப்போது பிராமணர் களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது. சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத் திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாக் கிரகத்தின் உத்தேசம்...

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

காஞ்சீபுரம் பிராமணரல்லாதார் மகாநாடு

  இன்று தினம் பிராமணரல்லாதாராகிய நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம்.  இத்தகைய பெரிய மகாநாடு எதன் பொருட்டு கூட்டப் பட்ட தென்பது பற்றியும் இதில் என்னென்ன விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள இங்கு கூடியுள்ள பலரும் அவாக் கொண்டிருக்கக் கூடும்.  இம்மகாநாடு எந்த வகுப்பாரிடத்தும் அதிருப்தியாவது துவேஷமாவது காரணமாகக் கொண்டு கூட்டப்பட்டதன்று. தேசவிடுதலைக்காக ராஜீய விஷயத்தில் நமது நிலைமையைத் தெளிவாக்கி ஒரு திட்டம் நமக்கென அமைத்துக்கொள்வது நியாயமேயாம்.  நம்முடைய உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவதன் நிமித்தம், இத்தகைய மகாநாடுகள் கூட்டவேண்டியது அத்தியாவசிய மென் றேற்படுகின்றது.  இதுபோன்ற மகாநாடுகள் சென்ற ஐந்தாறு ஆண்டுகளாக மாகாண மகாநாடும் காங்கிரசும் கூடும்போது அவ்வவ்விடத்திலேயோ பிறிதோரிடத்திலேயோ கூட்டப்படுவது வழக்கமாய் வருகிறது.  இத்தகைய மகாநாடுகளில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுவது முதற் செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமானதாகிறது.  தேசத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது...

* முதலாவது தீர்மானம்

* முதலாவது தீர்மானம்

  பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிர° கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை கதராடை எப்போதும் கட்டாயமாய் உடுத்த வேண்டும் என்ற மாறுதலுடன் காங்கிர° உறுதி செய்யவேண்டுமாய் இம் மகாநாடு சிபார்சு செய்கிறது. இப்போது சுயராஜ்யக்கட்சியார் நடத்திவரும் ராஜீயத்திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாக காங்கிர° ராஜீய வேலைத்திட்டத்தை நடத்தி சட்டசபை தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும் இனி சுயராஜ் யக் கட்சி என்ற பெயரே வேண்டாமென்றும் இம்மகாநாடு கான்பூர் காங்கிர சுக்கு சிபார்சு செய்கிறது. என்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ளு. சீனிவாசய்யங்கார் பிரேரேபித்து பேசியதின் சுருக்கம். இத்தீர்மானமானது தமிழ்நாட்டிற்கே புதியது என்றும் அதனால்தான் தான் பிரேரேபிப்பதாயும் நமக்கு எதிரிகள் பலமாயிருப்பதால் காங்கிரசும், சுயராஜ்யக்கட்சியும் ஒன்றாகிவிடவேண்டும் என்றும் சுயராஜ்யக்கட்சி சட்ட சபை ஒத்துழையாமை செய்வதில்லை என்று சிலர் சொல்வதை கவனிக்கக் கூடாது என்றும் இதெல்லாம் நாம் சரிசெய்துகொள்ளக்கூடிய சிறு விஷயங் கள் என்றும் முட்டுக்கட்டை போடுவதுதான் சுயராஜ்யக்கட்சி கொள்கை யென்றும் வகுப்பு நன்மைகளைப் பற்றிக்கூட சுயராஜ்யக்கட்சியார்...

காஞ்சீபுரம் இராஜீய மகாநாடு

காஞ்சீபுரம் இராஜீய மகாநாடு

  ஸ்ரீமான். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அடியோடு அசல் தீர்மானத்தையே* எதிர்த்து பேசுகையில் தீர்மானமே ஜனங்களை ஏமாற்றுகிற மாதிரியில் எழுதியிருக்கிறதென்றும் பாட்னா தீர்மானம் என்ன என்பதும் சுயராஜ்யக்கட்சி திட்டம் என்ன என்பதும் இங்குள்ள அனேகருக்கே தெரியவில்லை என்றும் தெரியும்படி யாரும் எடுத்து சொல்லவில்லையென்றும் காங்கிரசின் பெயர் கெடாமலிருக்கவே சுயராஜ்யக்கட்சி திட்டத்தை காங்கிர° ஒப்புக்கொள்ள வில்லை யென்றும் காங்கிரசுக்காவது மகாத்மாவுக்காவது சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லையென்றும் டில்லி காகிநாடா முதலிய தீர்மானங்களாலும் மகாத்மாவின் சலுகையாலும் தாங்கள் வேண்டியளவு பிரசாரம் செய்ய சவுகரியமேற்படுத்திக்கொண்டதோடு வேறுயாரும் எதிர் பிரசாரம் செய்யக்கூடாதென்று மகாத்மாவிடம் சிபார்சு பெற்றுக்கொண்ட தாலும் மீறி எதிர் பிரசாரம் செய்பவர்களை சுயராஜ்யக் கட்சிக்காரரும் அவர்கள் பத்திரிக்கையும் தூற்றி வருவதாலும் அதற்கு பயந்து கொண்டு யாரும் வெளியில் வராமல் வெகுசிலரே துணிவாய் அதன் தந்திரங்களையும் தப்பிதங்களையும் எடுத்துச் சொல்வதாலும் பொது ஜனங்களுக்கு சுயராஜ்யக் கட்சி ரகசியம் ஒன்றுமே தெரிவதற்கில்லாமல் போய்விட்ட தென்றும் இதனால் ஜனங்களுக்கு சட்டசபை என்கிற...

காஞ்சீபுரம் மகாநாடுகள்

காஞ்சீபுரம் மகாநாடுகள்

காஞ்சீபுரத்தில், ராஜீய மகாநாடென்று ஒரு மகாநாடு கூடிக்  கலைந் தது. பெயர் ராஜீய மகாநாடென்று சொல்லிக்கொள்ளப் பட்டாலும்  அஃதொரு சூதாட்ட மகாநாடாகவே முடிந்தது. சூதாட்டமாட நன்கு தெரிந்த வர்கள் நல்ல லாபமடைந்தார்கள். அது தெரியாதவர்கள்  லாபமடையவில்லை. சூதாட்டத் தினால் சம்பாதித்த பொருள் எவ்வளவு காலம் நிற்குமென்பதையும் இச்சூதின் தன்மையை பொது ஜனங்கள் அறிந்து கொண்டால் பிறகு இவர்கள் யோக்கியதை என்னாகு மென்பதையும் இச்சூதாட்டக்காரர்கள் அறியாமல் போனது அவர்களுடைய பொல்லாத காலமேயல்லாமல் மற்றபடி யாருக்கும் ஒன்றும் நஷ்டமாய்ப் போய் விடவில்லை. தலைமை உபந்யாசங்கள் உபசரணைத் தலைவர் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் வாசித்த வரவேற்பு பிரசங்கம் அவரெழுதியதல்லவென்றும் அவர் கருத்தல்ல வென்றும் அவர் வாசிக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருந்தவர்களுக் கெல்லாம் நன்றாய் விளங்கியிருக்கும். எவரோ ஒரு பிராமணர் தன்னிஷ்டம் போல் பிராமணரல்லாதாரை நன்றாய் வைது எழுதி அவர் கையில் கொடுத்து அவரை வாசிக்கச் சொல்லி அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஐயோ பாவம்!   அவரை  வையும்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இதைப்பற்றி கொஞ்சகாலத்துக்கு முன்பு நமது 16-8-25 குடி அரசின் இதழில் சித்திரபுத்திரன் யெழுதிய ஒரு கட்டுரை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.  இன்று நடக்கப்போகும் காஞ்சி மகாநாட்டில் ஒரு தீர்மானம் வருவதாய்த் தெரிகிறபடியால் அதனவசியத்தைப்பற்றி வாசகர்கள் மறுபடியும் அதைப் பற்றி அறியுமாறு சில வாக்கியங்கள் எழுதுகிறோம்.  வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் என்பது ஒரு தேசத்தின் ஆட்சியின் பொது உரிமையும் அந்நாட்டின் குடிமக்களின்   உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் அடையவேண்டிய தென்பதுதான்.  இதன் அரசாங் கத்தாரும் குடி மக்களுக்கு சரியாய் வழங்குவதாய் 1840-ம் வருஷத்திலேயே ஒப்புக்கொண்டு (போர்டு °டாண்டிங் ஆர்டர் 125 -ன் மூலமாய்) வெளியிட்டுமிருக்கிறார்கள்.  ஆதலால் இந்தியர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் ஏற்பட்டதன் பிறகோ சீர்திருத்தங்கள் ஏற்பட்டதன் பிறகோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பேச்சு பிறந்ததல்ல.  ஆனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டால் யாருடைய செல்வாக்கும் போகங்களும் ஆதிக்கங்களும் குறைந்துவிடுமோ அவர்கள் வசமே அரசாங்கத்தின் ஆதிக்கமிருந்து அவர்களே அநுபவித்துக் கொண்டேவந்த தினால் வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது...

குமரனும் ஊழியனும்

குமரனும் ஊழியனும்

சுயராஜ்யக் கட்சியைப்பற்றி குமரன் தலையங்கத்திலுள்ள சில குறிப்புகள்:- “சுயராஜ்யக்கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத் தக்கதாயிருந்தும் நமது மாகாணத்தைப் பொருத்தமட்டில் அக்கட்சியானது நல்ல நிலையிலில்லை.  அது இங்கு வளர்ச்சியடைகிறதென்று கூறவும் முடியவில்லை.  இக்கட்சியானது சென்னைப் பத்திரிகைகளின் ஆரவாரத் தாலும், வாசாலகமாகப் பேசும் வல்லமையுள்ள சத்தியமூர்த்தி போன்றவர் களாலும், செல்வாக்கு பெற்ற இரண்டொரு பிராமணத் தலைவர்களாலுமே இயங்கி வருகின்றதென்று கூறுவார் கூற்றை மறுப்பது எளிதன்று. சென்னை மாகாண சுயராஜ்யக்கட்சியாரின் செல்வாக்கு பிராமண ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உபயோகப்படுத்தப் படுகிறதென்ற உரையும் பொய்யென்று மறுப்பதற்கில்லை.  இம்மாதிரியான நோக்கங்கள் அக்கட்சியின் முன்னணியில் நிற்பவர்களது உள்ளத்தில் பதிந்து கிடக்குமாயின் அக்கட்சி ஒரு நாளும் தமிழ்நாட்டில் வேரூன்றப் போவ தில்லை.  ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக்கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் எண்ணங் கொண்டு அரசியல் பேச  முன்வருகிறார்களென்பது உண்மை யானால் அத் தலைவர்களது செல்வாக்கை அடியோடு ஒழித்தற்கு முயலல் வேண்டும்....

தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி  பாலக்காட்டில் 144-க்கு யார் பொறுப்பாளி?

தீண்டாமைக்கு யார் பொறுப்பாளி பாலக்காட்டில் 144-க்கு யார் பொறுப்பாளி?

  தீண்டாமை யென்பது நமது நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றும், மனிதனுக்கு மனிதன் பார்த்தால், கிட்டவந்தால், பேசினால், தெருவில் நடந்தால், தொட்டால், கோவிலுக்குள் நுழைந்தால், சாமியைப் பார்த்தால், மத தத்துவ மென்னும் வேதத்தைப் படித்தால் பாவம் என்னும் முறைகளில் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.  இதன் பலனாய் 33 கோடி ஜனசமூகத்தில் 60, 70 லக்ஷம் ஜனங்கள் உயர்ந்தவர்களென்றும், பிராமணர்கள் என்றும் தங்களை சொல்லிக் கொண்டு மற்றவர்களை சூத்திரர்களென்றும் பஞ்சமர் களென்றும் மிலேச்சர்க ளென்றும் அழைப்பதோடு மிருகங்களுக்கும். பட்சிகளுக்கும் பூச்சிபுழுக்களுக்கும் உள்ள சுதந்திரங்கூட கொடுப்பதற் கில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.  ஒற்றுமையினாலும் அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுவதினாலும் கிரு°துவர்களும் மகமதியர்களும் பிராமணர்களாலும் அவர்களது தர்மமான சா°திரங்களாலும் மிலேச்சர்களென்று அழைக்கப் பட்டாலும் தெருவில் நடத்தல் முதலிய சில உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்.  இதைப் பொருத்தவரையிலும் கிரு°தவர்களும் மகம்மதியர்களும் நமது அரசாங்கத்தாருக்கு நன்றி செலுத்த...

தேவ°தான மசோதா

தேவ°தான மசோதா

சென்னை மாகாணத்தில் தேவ°தானங்களும், தர்ம °தாபனங்களும், இந்து மத °தாபனங்களும், மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்தும், அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி, வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும் அனுபவிக்கவும் – தேவ°தான ‘ட்ர°டி’ என்போர்களும், மடாதிபதி யென்போர்களும், சமயாச்சாரி என்போர்களும், லோககுரு என்போர்களும், மகந்துக்கள் என்போர்களும் சுயமாய்த் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் – கொலை, களவு, கள் குடி, விபசாரம் முதலிய பஞ்சமா பாதங்களுக்கு உபயோகப்படுத்தவும், சோம்பேறிகளுக்கும், விபசாரத்  தரகர்களுக்கும், பொங்கிப் போடவும், உபயோகப்படுத்திக் கொண்டு வருவதைத் தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து  வந்திருக் கிறார்களென்பதை  நாம்  கூறத்  தேவையில்லை. அதன் பலனாய், “காங்கிர° கான்பரன்°” என்று சொல்லப்படும் ராஜீய °தாபனங்களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ்வக் கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப் பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும் மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது...

சுயராஜ்யக் கட்சியும் அதன் தலைவர்களும்

சுயராஜ்யக் கட்சியும் அதன் தலைவர்களும்

  சுயராஜ்யக் கட்சியின் பொதுக்காரியதரிசியாகிய ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் இந்திய சட்டசபையின் மெம்பராயிருப்பதன் பயனாய் இந்தியா கவர்ன்மெண்டின் தயவைப் பெற்று தப்பான வழியில் தன் மகனுக்கு ஓர் பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டதையும், அரசாங்க கமிட்டிகளில் தான் மெம்பர் உத்தியோகம் பெற்றுக் கொண்டதையும் இதற்கு முன்பே “குடி அரசில்” குறிப்பிட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். சுயராஜ்யக் கட்சியின் பெருந்தலைவரான ஸ்ரீமான் பண்டித நேரு அவர்களும் இதே மாதிரியே சர்க்காரின் ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றிருப்பதையும், அதற்காகச் சர்க்காருக்கு யோசனை சொல்ல பல விஷயங்களை அறிந்து வர என்கிற சாக்கின் பேரில் சர்க்கார் செலவிலேயே சீமைக்கு போகப் போகிறாரென்பதும் வாசகர்கள் அறிந்ததே. இவை மாத்திரமல்லாமல் இன்னொரு ரகசியத்தையும் ஸ்ரீமான் விபின சந்திர பாலரவர்கள் வெளியாக்கி விட்டார். அதாவது பண்டித நேரு அவர்கள் சட்டசபை உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தவரும் அவருக்கு நெருங் கின கட்டுப்பட்ட பந்துவுமான  ஒருவர் ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரைப் போலவே தனது பதவியின்...

தமிழ் தினசரி பத்திரிகை

தமிழ் தினசரி பத்திரிகை

இப்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலராகிய ஆதித்தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமாயும் அவசரமாயும் வேண்டியது பொது நோக்குடைய ஒரு தமிழ் தினசரி பத்திரிகையே ஆகும். தமிழ்நாட்டில் தற் காலம் உலவிவரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மூன்று. அதாவது சுதேச மித்திரன், திராவிடன், சுயராஜ்யா ஆகிய இவைகளே. இவற்றில் சுதேச மித்திரன் முதலில் தோன்றியது. இதன் முக்கியக் கொள்கை பழய காங்கிர° கொள்கைகளைப் போல அரசாங்கத்தினிடம் இருந்து பதவிகளும் உத்தியோகமும் மக்கள் அடையக் கிளர்ச்சி செய்வதாயிருந்தது. இதின்படி பதவிகளும் உத்தியோகங்களும் கிடைக்க கிடைக்க அவையெல்லாம் தங்கள் சமூகமாகிய பிராமணர்களுக்கே கிடைக்கும்படியாகவும் பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் அறிவாளிகள் என்றும் மற்றும் பிராமண மதம்  ஆக்கம் பெறவும் உழைத்து வந்தது. இம்மட்டோடல்லாமல் வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும், பதவிகளும், அந்த°துகளும், கீர்த்திகளும் உண்டா வதைக் கூற்றுவன் போல் நின்று தடுத்துக் கொண்டேயும் வந்தது. இச்சூழ்ச்சி வெகுகாலமாய் பிராமணரல்லாதாருக்குத் தெரியாமல் இருந்துவிட்டதால் சகல பதவிகளும் அரசாங்க உத்தியோகங்களும், அந்த°தும்,...

ஈரோடு சேர்மனின் அடாத செய்கை

ஈரோடு சேர்மனின் அடாத செய்கை

ஈரோடு முனிசிபாலிட்டியின் பொது ஜனங்களின் வரிப்பணம் தாறுமாறாகச் செலவழிக்கப்பட்டு வருவதைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.  போதுமான அளவு ஜலதாரை கட்டாததனாலும் ஓடையில் விழுந்து தேங்கும் கசுமாலத் தண்ணீரை ஒழுங்காய் வெளிப்படுத்தாத காரணத்தாலும், அதிலிருந்து கொசுக்களும், விஷக்காற்றுகளும் உண்டாகி, ஊரெங்கும் பரவி, வீடுகள் தோறும் மலைக்காய்ச்சலாலும், குளிர் காய்ச்சலாலும் ஜனங்கள் அவ°தைப்படு வதைக் கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல், நமது முனிசிபல் சேர்மன் அவர் கள் சிங்கார வனத்தின் பெயரால் வரிப்பணத்தைக் கண்டபடி வாரி இறைப் பதைப் பற்றியும், துர்விநியோகப்படுத்திக் கொள்வதைப் பற்றியும், இதற்கு முன் குறிப்பிட்டிருக்கிறோம்.  சென்ற 10-ந் தேதி ஈரோடு முனிசிபாலிட்டியில் சிங்காரவனத்திற்காக இது வரையில் கவுன்சிலர்க ளுடைய அநுமதி பெற்றும், அநுமதி பெறாமலும் செலவு செய்திருக்கும் பணத்தைப் பரிசீலனை செய்வதற்காகவும், சேர்மன் கேட்கிறபடி யெல்லாம் மேற்கொண்டு பணம் கொடுக்கலாமா வென்பதைப் பற்றியும் யோசிக்கவும், 10-11-25-ல் சேர்மனால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருந்தது.  அந்த மீட்டிங்குக்கு அதிகப்படியான கவுன்சிலர்கள்...

சுயராஜ்யம்

சுயராஜ்யம்

சுயராஜ்யமென்னும் பதம் நமது நாட்டில் பெரும்பான்மையாய் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கே பயன்படுத்தப்பட்டு வருவதோடு, பாமர ஜனங்கள் அதை அறியாதபடி சுயகாரியப் புலிகளால் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சுயராஜ்யமென்பதைப் பலர் பலவாறாக  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடர்கள் தாங்கள் திருடுவதைப் பிறர் கவனியாமல் விட்டுவிடுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். சிறை யிலிருக்கும் கைதிகள் தங்களை வெளியில் விட்டு விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். குடிகாரர்கள் தாங்கள் தாராளமாகவும், விலை நயமாகவும்  வேண்டிய அளவு குடிக்க வசமுள்ளதாய் கலால் வரி எடுபட்டுப் போவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். பாமர  ஜனங்கள்  பலர் இந்தியாவை விட்டு வெள்ளைக்காரரை விரட்டி விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். ஏழைகள் ரூபாய் 1-க்கு 8 படி  அரிசி விற்பதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். தரித்திரர்கள் பணக்காரர் சொத்துக்களை யெல்லாம் பிடுங்கித் தங்களுக்குச் சரி சமானமாய்ப் பங்கிட்டுக் கொடுப்பது தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். இவையெல்லாம் அறியாமையால் நினைப்பதாக வைத்துக் கொண்டா லும் அறிந்தவர்கள்,...

சுதேசமித்திரனின்  சின்னபுத்தி

சுதேசமித்திரனின்  சின்னபுத்தி

நாளது 1925-ம் ´ அக்டோபர் µ 30-ம் ² சுதேசமித்திரன்  4-வது பக்கம் 3- வது பத்தியில் ‘ தர்ம சொத்திலிருந்து கக்ஷிப் பிரசாரமா’  “நாம் எதிர்பார்த்தபடி ஜரூராக காரியங்கள் நடக்கின்றன ”   என்ற வாசகத்தின் தொடர்ச்சியாக  “இந்துமத தர்ம சொத்து பரிபாலன சட்டம் ஜ°டி° கட்சி மந்திரி பிடிவாதமாக இயற்றியது” பரிசுத்தமான நோக்கமுடன் செய்யப் பட்டதாக சொல்லப்படுவதானது எலக்ஷனுக்கு ஓர் முக்கியக் கருவியாக செய்யப்பட்டிருக்கிறதென்று நிரம்பிய அனுபோகம் பெற்ற நிரூபர் சொல்லுகின்றார். அதன் உண்மையாதெனில் ³ சட்டப்படி நியமிக்கப்பட்ட கமிஷ னர்களில் ஒருவராகிய ஸ்ரீமான் பி.வி.நடராஜ முதலியார் அவர்கள் சில தினங் களுக்கு முன் கோயமுத்தூர் டவுன் ஹாலில் ஸ்ரீமான் ஆ.சம்பந்த முதலியார் க்ஷ.ஹ.,க்ஷ.டு. அவர்கள் தலைமையின் கீழ் சில பொது °தாபனங்களிலிருந்து கமிஷனர் அவர்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் காலத்தில் கமிஷனர்  ஸ்ரீமான் முதலியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சாரமாவன :- “இந்துமத தர்ம பரிபாலன சபைகளிலும்,...

காஞ்சீபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சீபுரம் தமிழர் மகாநாடுகள்

காஞ்சீபுரத்தில் 31 – வது ராஜீய மகாநாடு  நாளது நவம்பர் மாதம் 21,   22 -ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்கிராசனத் தின் கீழ் கூடும். அது சமயம் சர்வ கக்ஷியார்களும்  அடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்கு கொண்டு வரவும், ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந் தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின்  துன்பந்தான்  பிராமணரல்லாதாரின்  துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேற முடியும். தீண்டாமை...

காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர்

காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர்

ஓர் பிராமணர் காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அக்ராசனம் வகிக்க வேண்டு மென்று சில பிராமணர்களும், சில பிராமணப் பத்திரிக்கைகளும் அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட மற்றவர்களும் எவ்வளவோ சூழ்ச்சிகளும், தந்திரங்களும் ஒழுங்கீனமான முறைகளும் செய்தும் கடைசியாக ஓர் பிராமணரல்லாதாரே மகாநாட்டுக்கு அக்ராசனம் வகிக்கத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் போனதைப்பற்றி பிராமணரல்லாதார் இரண்டொருவர் தவிர மற்ற எல்லாரும் ஏகமனதாய் சந்தோஷப்படுவார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை.  அத்துடன் இதற்கு விரோதமாயிருந்த சிலர் வருத்தப்ப டுவார்களென்பதைப் பற்றியும் நாம் சொல்லத் தேவையில்லை.  தமிழ் நாட்டிலுள்ள மொத்தம் 13 ஜில்லாக்களில் 10 ஜில்லாக்களே வோட் செய்திருப்பதாய்த் தெரியவருகிறது.  இவற்றில் ஸ்ரீமான். வி.சக்கரைச் செட்டியாரை சென்னையும், ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையை திருச்சியும் தெரிந்தெடுத்தது.  பாக்கி 8 ஜில்லாக்களில் ஸ்ரீமான் முதலியாருக்கு 4 ஜில்லாக்களும், ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு 4 ஜில்லாக்களும் வோட் செய்திருப்பதாகத் தெரியவருகிறது.  ஸ்ரீமான் அய்யங்காருக்கு வோட் செய்த நாலு ஜில்லாக்களில் கும்பகோணமும் சேலமும் சேர்ந்துதான் நாலு ஜில்லாக்களானதாகத் தெரியவருகிறது.  கிரமப்படி இந்த...

தீண்டாமை  சென்னை மாகாண தீண்டாமை மகாநாடு

தீண்டாமை சென்னை மாகாண தீண்டாமை மகாநாடு

  சென்னையில் தீண்டாமை மகாநாடென்று ஓர் மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி கூடிற்று.  பல பெரியோர்களும், பல தீண்டாதார்களும் மற்றும் பலரும் விஜயம் செய்திருந்தார்கள்.  பல கனவான்கள், வெகு உக்ரமாகவும் பேசினார்கள்.  தீண்டாமையை விலக்கவேண்டுமென்று பல தீர்மானங்களும் செய்தார்கள்.  இவற்றினால் தீண்டாமை ஒழிந்து விடுமென்று, நாம் நம்புவதற்கில்லை.  இவ்வித மகாநாடு இதற்கு முன் ஆசாரத்திருத்த மகா நாடென்ற பெயரால் எவ்வளவோ நடந்திருக்கிறது.  எவ்வளவோ சா°திர ஆதாரங்களெல்லாம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.  எத்தனையோ தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கிறது.  இவற்றின் பலனாய் என்ன நடந்தது? தீண்டாமை என்னும் கொடுமை நம் நாட்டிலிருந்து நீங்கி மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்கிற உணர்ச்சி பரவி ஒத்து வாழ வேண்டுமானால், ஸ்ரீமான்கள். டி.வி.சேஷகிரி ஐயரும், டி.விஜயராகவாச்சாரியாரும், மகாதேவ சா°திரியாரும், பனகால் இராஜாவும், பாத்ரோவும் போன்றவர்கள் மீட்டிங்கு கூட்டி உபந்யாசம் செய்து தீர்மானங்கள் செய்துவிட்டுப் போவதினால், ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது.  அல்லாமலும், சட்டசபை முதலிய இடங்களில் போய் உட்கார்ந்து...

தமிழர் மகாநாடு

தமிழர் மகாநாடு

நமது நிலை இவ்வாண்டு  காஞ்சீபுரத்தில் நடக்கும் தமிழ்நாட்டு 31 – வது ராஜீய மகாநாடானது தென்னிந்தியத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூடுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் சுயராஜ்ய மென்பது சுயமரியாதையும்  சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன் படுமேயல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்யமென்பதும் பர ராஜ்ய மென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும் பாலும் சுயமரியாதையற்று சுயேச்சையற்று மிருகங்களுக்கும், பக்ஷிகளுக் கும், புழுக்களுக்கும், பூச்சிகளுக்குமுள்ள சுதந்திரமும், சுயாதீனமும் இன்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்கமுடியாது. இவர்களின் பொருட்டும்,தேச முழுவதிலுள்ள இவர் போன்றார் பொருட்டும் விடுத லையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஐந்து வருடங்களுக்கு முன்  துவக்கப்பட்ட ஒத்துழையா  இயக்கமானது பல்வேறு காரணங்களால் டெல்லி யில் ஆக்கங் குன்றி நாளுக்கு நாள் கருகி வந்து பாட்னாவில் வேருடன் களைந்தெறிந்தாகிவிட்டது. இதன் பலனாய் ஏற்பட்ட நிலைமையானது சுயேச்சையும் சுயமரியாதையும்  சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு அதிலும்...