வைக்கம்

வைக்கம் நிலைமையைப்பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றிச் செல்லலாமென்று மகாராணியார் கட்டளைப் பிறப்பித்துவிட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால், அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் “தீண்டாதார்” செல்வதற்கு மட்டுமே கட்டளைப் பிறப்பிக்க சமஸ் தான அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும், மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்குக் கிடைக்காமலே போய்விடு மோவென ஐயுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளி வாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத் தையும், அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவரவேண்டும்.
குடி அரசு – குறிப்புரை – 21.06.1925

You may also like...