விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (3) இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை
குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) உத்திர பிரதேசத்தின் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடு கிறவர்கள் எங்களின் ஒடுக்கு முறையைக் கண்டு அஞ்சி ஓட வேண்டும்’ என்று பதிவிடும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மோடி சொல்கிறார், குடியுரிமைப் பதிவேடு பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று. எதிர்ப்பு வந்த பின்பு இந்தக் கருத்தை கூறுகிறார். ஒரு நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் இதைவிட ஒரு தரம் தாழ்ந்தவராக இருக்க முடியாது. ஏனென்றால், அசாமில் இருந்து கொண்டு அமித்ஷா கூறுகிறார் இந்தியா...
