Category: சிறப்பு கட்டுரை

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன். “உலகத்தின்...

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

தெலுங்கானாவில் தொழில் அதிபரின் மகள் அம்ருதா, பிரனாய் என்ற தலித் இளைஞரை காதலித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். அம்ருதாவுக்கு வயது21. பிரணாய்க்கு வயது 24. இவர்களின் குழந்தை அம்ருதாவின் வயிற்றில் வளருகிறது.  அம்ருதாவின் தந்தையான தொழில் அதிபர், கூலிப்படையை வைத்து பிரணாயை வெட்டிக் கொலை செய்து விட்டார். இதற்காகக் கூலிப் படைக்கு அவர் கொடுத்த பணம் ஒன்றரை கோடி ரூபாய். இணையர்  இருவருமே படித்தவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்தவர்கள். இளம் காதல் கணவனை இழந்து தவிக்கும் அம்ருதா, “எனது வயிற்றில் வளரும் குழந்தையை ஜாதி எதிர்ப்புப் போராளியாக வளர்ப்பேன். இனி நானும் ஒரு ஜாதி எதிர்ப்புப் போராளி” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதேபோல் ஜாதி வெறிக்கு தனது கணவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா, ஓடோடிச் சென்று அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அம்ருதாவுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றையும் எழுதி நேரில்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் பங்கேற்று நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1990களில் உலகமயமாக்கல் எனும் தாராளமயக் கொள்கையை அன்றைய நரசிம்மராவ் ஆட்சி இந்தியாவுக்குள் கதவு திறந்து விட்டது. அதன் பிறகு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அரசு ஒதுங்கிக் கொண்டு, தனியார் துறைகள் மேலாதிக்கம் பெறத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1996-2001ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கலைஞரின் செயல்திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெற்ற காலமாக இது, இன்றளவும் பேசப்படுகிறது. தனியார் துறை வேகமாக வளர்ந்து கல்வியை தனியார் மயமாக்கிய அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களை அதிகமாகத் தொடங்கினார் கலைஞர். 1989இல் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியிலும், 2000-த்தில் பெரியார் பெயரில்...

1971இல் சேலம் மாநாட்டில்  பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971இல் சேலம் மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971ஆம் ஆண்டு ஜன.23, 24ஆம் தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் முன்னிலையில் திராவிடர் கழகம் ஒரு புரட்சிகர தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘ஒருவரின் மனைவி மற்றொருவருடன் உடல் உறவு கொண்டால் – அதை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது’ என்ற அத்தீர்மானம் அப்போது பொது வெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன நாளேடுகள் திரித்து, ‘ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொண்டு போவது குற்றமல்ல’ என்று செய்தி வெளியிட்டன. இதை எதிர்த்து அந்த ஏடுகள் மீது திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் (சென்னை பெருநகர 5ஆவது நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பிறகும், மீண்டும் ஒரு முறை ‘இந்து’ நாளேடு, அதே போன்று ‘திரிபு’ செய்தியை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் அந்த ஏட்டின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ‘இந்து’ ஏடு...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3) இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3) இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. குடும்ப வாரிசுரிமை சட்டத்தில் பெண் களுக்கு பங்கு உண்டு என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாகக் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சி தான் என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். (சென்ற இதழ் தொடர்ச்சி) கலைஞரின் சிந்தனையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரத் தூண்டுதலைத் தந்தது. 1929இல் செங்கல்பட்டில் பெரியார் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் சட்டத்தை நிறைவேற்றி விட்டு கலைஞர் சொன்னார், செங்கல்பட்டு மாநாடு முடிந்து 60 ஆண்டு கழித்தல்லவா, இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்ற முடிந்திருக் கிறது!” என்றார். பின்னர் நாடு முழுதும் இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டதற்குக்கூட தூண்டுகோலாக இருந்தது, அன்றைய நடுவண் ஆட்சியில் தி.மு.க.வின் பங்கேற்பு தான். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களை முதன் முதலாக...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2) கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2) கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்ட தாவது: (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடுகள் வேண்டாமா?’ என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேட்ட போது, கலைஞர் இப்படி பதில் கூறினார். ‘அழுக்குத் துணிகளைத்தான் சலவைக்குப் போட வேண்டும். ஏற்கனவே சலவை செய்து அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளை சலவைக்குப்  போட வேண்டிய தேவையில்லை” என்றார். 1971இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்கள்’ நுழைவதற்கு இருந்த தடையை எதிர்த்து, கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிடப்பட்டு வந்தன. பெரியாரை சந்திக்க வந்த கலைஞர், ‘என்னுடைய ஆட்சி நடக்கும்போது, நீங்கள் போராடலாமா?’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள்...

செருப்புத் தூக்கும் மதவெறி!

செருப்புத் தூக்கும் மதவெறி!

சென்னை  அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது ஒரு ஆசாமி செருப்பு வீச, அருகே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடத்தி செருப்பு வீசிய நபரையும் அவரைத் தூண்டிவிட்ட எச்.ராஜாவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி. எஸ். இளங்கோவன் சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அளித்த பேட்டியில், ‘எச். ராஜாவின் தூண்டுதலினால் செருப்பு வீசிய ஆசாமியையும் ராஜாவையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையிலும் தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்த மதவெறிக் கும்பலை வன்மையாகக் கண்டித்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி அறிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கில்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்

கோப்புகள் வழியாக மட்டும் பிரச்சினைகளைப் பார்க்காதவர். சமூகநீதி தத்துவத்தில் அடங்கியிருந்த சமூகவியல் குறித்து கலைஞருக்கு அபாரமான புரிதல்  இருந்தது என்று விடுதலை இராசேந்திரன் விளக்கினார். தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால் மணியம்மையார் அரங்குக்கு மாற்றப் பட்டது. வெற்றி சங்கமித்ரா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அருள்மொழி, ‘கலைஞரின் இந்துத்துவ எதிர்ப்பு’க் குறித்தும், இராஜன் செல்லையா ‘கலைஞரின் கலை இலக்கிய ஆளுமை’ குறித்தும், பூவிழியன், ‘கலைஞரின் சமூகநீதிப் பயணம்’ குறித்தும், விடுதலை இராசேந்திரன், ‘கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்’ குறித்தும் பேசினர். தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன் நிறைவுரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்ட தாவது:...

ஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன?

ஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன?

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் அய்.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘யுனிசெப்’ அதிகாரியிடம் சென்னையில் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் உள்ளடக்கம். ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாம லடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில் (ஐஊஞஞநுனு) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வலுக் கட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப் பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின்...

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு....

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே  அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

‘நீட்’டின் மற்றொரு கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு தமிழ்நாடு  அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இடம் கிடைத்தவர்கள் இரண்டு பேர். ஆக 100 சதவீதம் அதிகரித்துவிட்டது என ‘புள்ளி விவரப் புலிகள்’ மார் தட்டலாம். ஆனால் எதார்த்தம் மிக மிக மோசம். தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த இடங்கள் 5660. இதில் அரசுப் பள்ளியில் படித்த பெரும் பொருட் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்கள் பெற்ற இடம் இவ்வளவுதான். ‘நீட்’ தேர்வு வருகைக்கு முன்பு 2016இல் 30 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பிடித்தனர். இப்போது தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்தப் பிறகே சி.பி.எஸ்.ஈ. அனுமதித்தது. அதிலும் 49 கேள்விகள் தவறானவை. மாணவர்கள் விடையளிக்க முடியாததால் சுமார்...

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

பார்ப்பன-மேல்சாதி இந்திய ஆளும் வர்க்கம் வன்னெஞ்சத்துடன், இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உயிருடன் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எழுவரின் விடுதலை, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் இழுத்தடிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இராசிவ் காந்தி 1991 மே 21 அன்று திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரான இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

பா.ஜ.க. தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கட்சியின் தேசிய மாவட்ட நிர்வாகிகள் பார்ப்பன-பனியா உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவினர்களிடமே இருக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்சாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளையும் இவர்கள் பின்பற்று கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. பாஜக உருவாகி 38 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அக்கட்சி பொறுப்பில் இன்றளவிலும் முன்னேறிய சமூகத்தினரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. குறைந்த அளவில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளவில்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் பொறுப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன கட்டமைப்பு குறித்த ஒரு...

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

28.12.1992 அன்று திருச்சி பெரியார் நினைவு நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் – குழந்தைகள் காப்பகக் கட்டிடத் திறப்பு விழாவில் நிகழ்த்திய உரை: பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர் என்றைக்கும் மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். மிகப் பெரிய தலைவர் பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்தச் சமூக அநீதியைக் கொடுமையைத் துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்; அதற்காகவே உழைத்தார். ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப் படுவதைவிடக் கொடுமையானதுதான்...

இந்திய அரசியலில்   அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

இந்திய அரசியலில் அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

வடநாட்டில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. பெரியாரியல்வாதிகளான  நமக்கு  எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் மட்டுமே தெரிகிறார். இந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தார். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப்...

மசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா? – ஏ.ஜி. நூராணி

மசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா? – ஏ.ஜி. நூராணி

காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட் டத்துக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சி குடியரசுத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறது. பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்ற காவி அமைப்புகள் காந்தியைத் தங்களின் ஆதரவாளராகக் காட்டுவதற்கு நிகழ்த்திய மோசடிகளை அம்பலப் படுத்துகிறது, இந்தக் கட்டுரை. காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங்பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக்  கொள்ள காந்திஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமான நடைமுறை. பிரிட்டனில் செயல்படும் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்னைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கும் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார் . இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1937 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ள தாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். காந்திஜியின் கருத்துக்கள்...

தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

“நாயக்கர் அடிக்கடி என்னைப் புகழ்ந்து  பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.  அதனால் பல பேர்கள் எனக்கு எதிரிகள் ஆகின்றனர் என்று நண்பர் திரு.வி.க.விடம் ஓமந்தூரார் கூறி அனுப்பினார்.” 1955ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழாவில் பெரியாரும் முதலமைச்சர் காமராசரும் ஒரே மேடையில்  பேசினார்கள். தமிழர் சமுதாயத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன் ‘சுயத்தை’யே இழந்து உழைத்தவர் பெரியார் என்பதை வெளிப்படுத்தும் ஆழமான உரையை காமராசர் பிறந்தநாளை யொட்டி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார் அதற்கு எனது நன்றி. திரு. காம ராசரிடம் நான்அன்பு கொண்டு, என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்துகொண்டு அவருக்குத்  தொல்லை கொடுத்து...

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் –  86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும்  நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

‘சி.பி.எஸ்.இ.’ – ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி

நீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப் பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவி களுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில்...

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

உலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’

பார்ப்பனர்கள் விளையாட்டாக மாறிவிட்ட ‘கிரிக்கெட்’ மட்டுமே இங்கு பிரபலமாக்கப்பட்டதால் கடும் உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரை ஒருவர் தொட்டு முட்டி மோதி விளையாடக் கூடிய ‘கால்பந்து’ விளையாட்டுகள் ‘புண்ணிய பூமி’யில் ‘சூத்திரர்’ விளையாட்டாகிவிட்டன. இரஷ்யாவில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியில் இந்தியாவில் ஒரு மாவட்டத்தைவிட சிறிய பரப்பளவு கொண்ட அய்ஸ்லாந்து, துனிஷியா, பனாமா, செனகல் போன்ற நாடுகள் எல்லாம் பங்கேற்கும்போது இந்தியா வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது. 2002இல் உலகப் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்றார்கள். 2010இல் உலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ‘டி சர்ட்டுகள்’ மட்டுமே தயாரிக்கப்பட்டன. இப்போது 2026இல் பங்கேற்கும் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புகள் ஏதேனும் நடக்கிறதா? எதுவுமே இல்லை. உள் நாட்டில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரிய அளவில் நடத்தப்படுவது இல்லை. ‘கால்பந்து’ கிளப் ஏதும் கிடையாது. பார்ப்பன உயர்ஜாதியினர் கடுமையாக உடல் சக்தியைப் பயன்படுத்தக் கூடிய இந்த விளையாட்டைவிட ஒருவருக்கொருவர் தொட வேண்டிய தேவை இல்லாமல்...

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும்.  அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை  இழிவு செய்கிறார்

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை இழிவு செய்கிறார்

இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி’. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது. ‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின. ஆமை...

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’

வரலாற்றில் இருட்டடிக்கப்பட்ட ‘பீமா கோரேகாவ் யுத்தம்’ ஆவணப் படமாகியுள்ளது ‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது…1927இல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை! அந்த வரலாறுதான் பீமா கோரேகாவ் யுத்தம்! மகாராஷ்டிர மாநிலத்தை பேஷ்வாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியில், மஹார் இனத்தவர்கள் சாதியரீதியான கொடுமைகள் பலவற்றைச் சந்தித்தனர். அப்போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்களின் ராணுவத்தில், மஹார் இன மக்கள் சேர, அவர்களுக்குச் சமூகத்தில் கொஞ்சம் மரியாதை கிடைக்கிறது. ஆனால், அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமேயான மரியாதையாக இருந்தது. இந்நிலையில், ஆங்கிலேயர்களுடன் இணைந்து, பேஷ்வாக்களை (மராட்டியப் பார்ப்பனர்) எதிர்த்தார்கள் மஹார் மக்கள். 1818-ம் ஆண்டில் பீமா கோரேகாவ் எனும் இடத்தில் தோராயமாக 25 ஆயிரம் பேஷ்வா வீரர்களை வெறுமனே 500 மஹார் இன...

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல; விடுதலை இயக்கம் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜூன் 16, 2018இல் வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இந்த அமைப்புக்கு நிதி திரட்டிய தாகவும், அதில் உறுப்பினர்களாக இருந்து சுவிஸ் நாட்டில் செயல்பட்ட தாகவும், திரட்டிய நிதியில் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டி 13 ஈழத் தமிழர்கள் மீது கடந்த ஜனவரி 2018இல் சுவிஸ் நாட்டில் வழக்குப் பதிவு செய்தது. விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் போர் நடவடிக்கை களை மேலும் தீவிரமாக்கவும், நீண்ட காலம் போர் நடப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் குற்றப் பத்திரிகை கூறியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் பெரும் பொருட் செலவில்...

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

சென்னை மாநாட்டில் கொளத்தூர் மணி பேச்சு ‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே!

ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக்காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது.  பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது.பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். தோழர்.சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் , கிருஷ்ணன், மனோஜ்,ராஜேந்திரன் ஆகியோருக்கு கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி பயணாடை அனிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக்கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,சரஸ்வதி,சித்ரா ஆகியோரை வாழ்த்தி...

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்

ஜாதி வெறி படுகொலை – தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில்  சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தரும் செய்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  வைரவேல், பள்ளிபாளையம்  முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர்  காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர்  முத்துக்குமார், காரைக்குடி  பெரியார் முத்து, வினோத் ராஜா, ...

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும்  காவி பயங்கரவாதிகள் –  செ.கார்கி

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள் – செ.கார்கி

இந்திய நீதித்துறைக்கு இது இருண்ட காலம். குஜராத் கலவரத்தில் இருந்து தொடங்கி கொலை வெறியாட்டம் நடத்திய காவி பயங்கரவாதிகள் அனைவருக்கும், மோடி பதவியேற்றதில் இருந்து, விடுதலை அளிக்கும் பணி வெகு விரைவாக நீதிமன்றத்தின் துணையுடன் நடந்து வருகின்றது. முன்னதாக குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மை வெளியே கசியவே மோடி சோராபுதீனை போலி மோதல் மூலம் கொல்ல வன்சாரா என்ற அதிகாரியை நியமித்தார். வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் கொன்றது மட்டும் அல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டுக் கொன்றார். இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி...

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

கழக மாநாட்டில் திருமுருகன் காந்தி பேச்சு காவிரி உரிமையில் வஞ்சிக்கப்படுகிறோம்

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு – நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.: நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட் டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண...

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘கச்சநத்தம்’ படுகொலை கண்டனக் கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு ஜாதியை ‘மறந்து’ அல்ல; ஜாதியை ‘மறுத்து’த் தமிழராக வேண்டும்

‘சமூக நல்லிணக்கம்’ என்ற போர்வையில் தமிழர் ஓர்மைப் பேசாமல் ஜாதி ஒழிப்புத் தளத்தில் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற் பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் சிவகங்கை கச்சநத்தம் ஜாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து கண்டனக் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மகாலில் ஜூன் 3, 2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல். திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணிப்  பொறுப்பாளர் சாமுவேல் ராஜ், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் அமீர், வெற்றி மாறன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், சீனு ராமசாமி, மீரா கதிரவன், வழக்கறிஞர் அருள்மொழி, நவீன், மதிவண்ணன், கிரேஸ் பானு, மருத்துவர் ஷாலினி, யாழன் ஆதி, பா. இரஞ்சித், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து: ஜாதியை எப்படி...

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.. நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட்டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதல்...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும். இதிலிருந்து...

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்: 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர். 15.7.1993 – இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். 1.8.1994 – தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. 16.1.1995 – மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது. 14.10.1996 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது. 20.8.1997 – ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட்...

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

சென்னை மாநாட்டில் பேரா. செயராமன் பேச்சு இந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி

ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. ஒரு பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கியிருக் கிறது. வரலாற்றிலே இவ்வளவு பெரிய பேராபத்தை தமிழகம் எப்போதாவது சந்தித்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாத் தளங் களிலும் தமிழகம், தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதுகுறித்துதான் இந்த மண்டல மாநாட்டிலே அறிவார்ந்த தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். அதிலே, தமிழகத்தின் நிலம் எப்படிப் பாழ்படுகிறது, வாழ முடியாத ஒரு பகுதியாக தமிழ்நாடு எப்படி மாற்றப்படுகிறது, இதனால் என்ன ஆகும் என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு மனித இனத்திற்கு வாழ்வதற்கு அடிப்படை யானது மண். மண்தான் மனித வாழ்வை வடிவமைக் கிறது. ஒரு...

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

அய்.ஏ.எஸ். – அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி

மாணவர்கள் யு.பி.எஸ்.சி. நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்… என பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தபிறகு அந்தந்த மாநிலங்களில் அந்தந்தத் துறைகளில் நியமிக்கப்படு கிறார்கள். அதாவது, தேர்வு எழுதிப் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் கிடைத்த உரிமையின் அடிப்படையில்  அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகிறார்கள். இந்த வழிமுறையின்படி, எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தேர்வு முடிந்த பிறகு அய்.ஏ.எஸ். அல்லது அய்.பி.எஸ். ஆகலாம். இதன் மூலம்தான் அட்டவணை சாதியினரும், (மிக அரிதாக)  பழங்குடியினரும் இந்த உயர் பதவிகளை எட்ட முடிகிறது. மோடி அரசு இப்போது இதில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டு, அதை...

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள்  – ஒரு தொகுப்பு  – ‘கீற்று’ நந்தன்

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள் – ஒரு தொகுப்பு – ‘கீற்று’ நந்தன்

உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ – பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா? இந்துத்துவா – பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல்...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

‘சி.பி.எஸ்.ஈ.’யின் அடாவடி; அட்டூழியங்கள்!

‘சி.பி.எஸ்.ஈ.’யின் அடாவடி; அட்டூழியங்கள்!

‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பனிய அமைப்பு, ‘நீட்’ தேர்வை அலங்கோலமாக – தான்தோன்றித்தனமாக நடத்தி முடித்திருக்கிறது. தமிழக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கடும் அவமானத்துக்கும் சொல்லொண்ணா துயரத்துக்கும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். மருத்துவராகும் கனவோடு இரவு பகலாக கடுமையாக உழைத்துப் படித்த நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மாணவ மாணவிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கிரிமினல் கைதிகள் சிறைச் சாலைகளில் அடைக்கப்படும்போது நடத்தப் படுவது போன்ற சோதனைகள் அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாடே இந்திய பார்ப்பனிய இந்துத்துவ  ஆட்சியால் தண்டிக்கப்படும் மாநிலமாக மாறியிருக்கிறது. நெஞ்சு பதறும் இந்தக் கொடுமைகள் குறித்து வந்த செய்திகளை இங்கே தொகுத்து தருகிறோம்: தமிழ்நாட்டைச் சார்ந்த 5000 மாணவ மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் என்ற வேறு மாநிலங்களில் போய் நீட் தேர்வை எழுத சி.பி.எஸ்.ஈ. உத்தரவிட்டது. நீட் தேர்வு குறித்த சி.பி.ஸ்.ஈ.யின் தகவல் அறிக்கை – பக்கம் 2 – முக்கிய குறிப்புகளின் கீழ் 6ஆவது அம்சம் மற்றும் 4ஆவது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர...

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”

பெரியாரிய களப் போராளி பத்ரிநாராயணன் படுகொலை செய்யப்பட்ட ஏப்.30ஆம் நாளில்  தன்மான தன்னுரிமை மீட்பு மாநாட்டை  ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல மாநாடாக இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் நடத்தியது. ஏப்.30, 2018 காலை பத்ரி அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நூற்றுக்கணக்கான தோழர்களுடன் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தோழர்கள் எடுத்த உறுதி மொழி: “பெரியார் இலட்சியப் பணியில் உயிர்ப் பலியாகிய பத்ரியின் நினைவு நாள் எங்களின் கொள்கை உணர்வுகளை புதுப்பிக்கும் நாள். கொள்கைத் தோழன் பத்ரியே… இராயப்பேட்டை பகுதியில் நீ பெரியாரின் கொள்கையை வலிமையாகப் பரப்பினாய்; திசை மாறி குழம்பி நின்ற இளைஞர்களை இயக்கமாக்கி நல்வழிப்படுத்தினாய்; தோழர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று அரவணைத்தாய்; இயக்கத்தில் பதவி என்பது...

தூக்குத் தண்டனை தீர்வு அல்ல!

தூக்குத் தண்டனை தீர்வு அல்ல!

12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கட்டாய பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்குகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றைக் குடியரசுத் தலைவர் பிறப்பித்திருக்கிறார். ஜம்முவில் கத்துவா பகுதியில் முஸ்லிம் நாடோடி சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயதுப் பெண், ஜம்மு பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) காவல்துறை ஒத்துழைப்புடன் கூட்டுப் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்த நிகழ்ச்சி, சர்வதேச அளவில் மோடி ஆட்சியின் மானத்தைக் கப்பலேற்றிவிட்டது. அதற்கு எதிர்வினையாக இந்த அவசர சட்டம் வெளி வந்திருக்கிறது. தூக்குத் தண்டனை என்ற தண்டனையே சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அய்.நா. உட்பட உலக நாடுகளிலிருந்து வலிமையான குரல் எழுப்பப்பட்டு வருகிறது. சட்டத்தில் தூக்குத் தண்டனை இருப்பதாலேயே குற்றங்கள் குறைந்து விடுவதில்லை என்பதையும் ஆய்வுகள் உணர்த்தி வருகின்றன. கத்துவாவில் ஆசிபா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டதை  பாலுறவு வன்முறை சம்பவமாக மட்டுமே குறுக்குவதே தவறான பார்வை. பா.ஜ.க....

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

  கர்நாடக அரசு லிங்காயத்து சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் இந்துக்கள் அல்ல என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. லிங்காயத்து சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. கர்நாடகத்தில் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களும் கன்னடக் கொடிக்கான போராட்டங்களும் விவாத மையங் களானதோடு 2018 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளினூடே கர்நாடகத்தையும் கைப்பற்றி விடலாம் என்ற பாஜகவின் கணக்குக்குப் பெரும் தடைகளாக இப்போது உருவெடுத்திருக்கின்றன இந்த இரு பிரச்சினைகளும். குறிப்பாக ‘லிங்காயத் தனி மதம்’ எனும் விவகாரம் இந்துத்துவ அரசியல் கணக்குகளுக்கும் நீண்ட காலச் சவாலாக மாறியிருக்கிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்களின் இயக்கம் (பக்தி இயக்கம்) சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அனைத்து அதிகாரங்களும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டம் அது. வசனக்காரர்களின் இயக்கம் அதைக் கேள்விக்கு உட்படுத்தியதோடு மட்டும் நில்லாமல்,...

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதும், அதன்பின் இது குறித்து நடந்த போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய பிராஜெக்ட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே. 2008-ல் சிஃபி வெளியிட்ட செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த ரித்திகா தோய சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலை யின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த மாணவர் தர மதிப்பீட்டு முறை (Grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக் களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள்...

பட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்

பட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்

வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததும் இதே அமர்வுதான்! பட்டியலினப் பாதுகாப்புச் சட்டத்தைத் தளர்வுறச் செய்த உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஏப்.12, 2018இல் சென்னையில் மருத்துவர் எழிலன் தலைமையில் இளைஞர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்த்திய உரை: பட்டியல் இன மக்களுக்கும் பழங்குடி யினருக்கும் ஒரே பாதுகாப்புக் கவசமாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது உச்சநீதிமன்றம். சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தைக் கூறி சட்டம் தந்த பாதுகாப்புப் பிரிவுகளை தகர்த்து, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வே சட்டத்தை மாற்றி எழுதிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றி எழுதிக் கொள்ள முடிகிறது. கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு துரோகத்தை...