இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3) புரோகித ஆதிக்கத்தின் மாறாதப் போக்கை உணர்ந்து அஞ்சாது கட்டுடைத்தவர் பெரியார் பூபாலன்
பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார். புராணப் புரட்டு – பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின. மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச்செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (ஞடிவேகைநஒ ஊடயளள) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணரமுடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத் துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம். இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல...
