Category: சிறப்பு கட்டுரை

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார்...

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி...

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?”  என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...

சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது. நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்: வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள். சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது. ஆனால் ஆங்கிலேயர்...

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தியும், இடஒதுக் கீட்டுக்கு எதிராக பார்ப்பனியம் கூக்குர லிடுவதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.இராசா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டில்லி பதிப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியல் இனப்பிரி வினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இவர்களில் பலரின் விருப்பம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யதையும் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக குவிந்து கொண்டிருக் கின்றன. சமூகத்தின் ‘மேல்தட்டு அறிவாளி’ப் பிரிவினருக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. சமூகநீதி என்ற கருத்தே அவர்களுக்கு கசப்புதான். இடஒதுக்கீட்டின் பயன்,...

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

“பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைகளை வலியுறுத்தும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார். திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்,...

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்! சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ளஅறிக்கை...

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

அய்.நா.வின் மனித உரிமைக் குழு அறிக்கை ஈழத்தில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. சிங்கள நீதிபதிகள், சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கியதே கலப்பு நீதிமன்றம். இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையை மட்டுமே ஏற்க முடியும் என்று பிடிவாதமாக மறுக்கிறது. கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இப்போது அய்.நா.வில் முன்மொழிய உள்ள தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று கூறிவிட்டது. உண்மையில் இலங்கை வரலாற்றில் இதுவரை அங்கே நடத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன. 1963-லிருந்து 2013 வரை இலங்கையில் ஏறத்தாழ 18 விசாரணை ஆணையங்களை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பானவை, எந்த ஒரு ஆணையமும் முறையாக செயல்படவில்லை. முதன்முதலாக 1963ஆம் ஆண்டு அன்றைய ‘சிலோன்’ ஆளுநராக இருந்த...

0

பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்!

செப்.17 – பெரியார் பிறந்த நாளில் விடுதலை இராசேந்திரன் எழுதி ‘தமிழ் இந்து’ வெளியிட்ட கட்டுரை. நாட்டின் விடுதலைக்கான போராட்டம். மக்களின் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும்; அதை காங்கிரஸ் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்குள்ளே போராடினார் பெரியார். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் துறைகளில் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதுதான் அவரது வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை. காங்கிரஸ் அதை மறுத்தபோது பெரியார் 1925இல் வெளியேறினார். 90 ஆண்டுகளுக்குப் பின் 2015 செப்டம்பரில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி – 50 சதவீத கட்சிப் பதவிகளை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு உறுதி செய்வதாக தீர்மானித்திருப்பது – வரலாற்றின் திருப்பம் மட்டுமல்ல. பெரியார், காலத்தே எவ்வளவு முந்தியிருந்தார் என்பதையும் காட்டுகிறது. சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான ஜாதி அமைப்புதான், அவரது முதன்மையான இலக்கு. ஜாதியமைப்புக்கு கருத்தியலை வழங்கி, அதை சாஸ்திரம், மதம், கடவுள் பெயரால்...

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி 0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்தது கழகத்தின் போராட்டம் வெற்றி

கடந்த சூன் மாதம் 24 தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள தொட்டிபாளையம் இரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்நிலையில் கோகுல்ராஜுடன் கல்லூரியில் படித்த சுவாதி என்ற இளம்பெண்ணும், கோகுல்ராஜின் தாயாரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கோகுல்ராஜும், கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலையில் இருவரும் திருச் செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென் றுள்ளனர். அவர்கள் வழி பாடெல்லாம் முடித்துவிட்டு கோயிலைவிட்டு வெளியேறும் போது தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அவர்கள் இருவரையும் அழைத்து மிரட்டி சுவாதியை கீழே அனுப்பிவிட்டு கோகுல்ராஜை...

கோழைகளின் மிரட்டலுக்கு  அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி 0

கோழைகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி

“எங்கள் உயிரைப் பறித்தாலும், பகுத்தறிவு கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று பகுத்தறிவாளர்கள் உறுதியுடன் பதிலடி தந்தள்ளனர். கருநாடக மாநிலத்தின் தலைசிறந்த சிந்தனை யாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், முன்னாள் துணைவேந்தர் எம்.எம். கல்புர்கி, தார்வாரில் அவரது இல்லத்தில் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப் பட்டவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே புவித் ஷெட்டி என்ற பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஒரு மதவெறியன், “இந்து மதத்தை எதிர்த்தால் அதற்கு இதுதான் தண்டனை. இனி அடுத்த இலக்கு – மைசூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கே.எஸ்.பகவான்” என்று ‘டிவிட்டர்’ தளத்தில் பதிவேற்றினான். அந்த ஆசாமியை கைது செய்து, கருநாடக சிறையில் அடைத்த அதே நாளில், நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது. இந்த மிரட்டலுக்கு கே.எஸ். பகவான் அளித்த பேட்டி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுகளில் வெளி வந்திருக்கிறது. “அந்த இளைஞர் தவறாக வழி நடத்தப்படுகிறார். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அவரை சரியாக வழி நடத்தவில்லை....

ஆக. 30 – சர்வதேச ‘காணாமல் போனோர் நாள்’! – ஈழத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் கதி என்ன? 0

ஆக. 30 – சர்வதேச ‘காணாமல் போனோர் நாள்’! – ஈழத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் கதி என்ன?

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் (International Day of the Disappeard) வருடந் தோறும் ஆகஸ்டு 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச் சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போக செய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் போதல்’ என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள். அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது. எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது. உலகெங்கும்...

0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

சிறப்புக் கட்டுரை –  மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி 0

சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்”  பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை...

0

சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த...

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது 0

சிறப்பு கட்டுரை-பெரியார் கேட்ட கேள்வி நீடிக்கிறது

நீதித் துறை ஜாதிய மயமாகியிருக்கிறது என்று பெரியார் நீதிமன்றத்திலே வாக்குமூலம் அளித்தார். ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’யாக செயல்படும் நீதித் துறையால் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களில் தலித், ஆதிவாசிகளே அதிகம் என்பதை விளக்கி, ‘தமிழ்’ இந்து நாளேட்டில் 23.7.2015 அன்று சமஸ் எழுதிய கட்டுரை இது. ஆட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப் படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள்! – 1957இல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை. ‘இந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள்’ என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறி பார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய...

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன் 0

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன்

‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனை களுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடை போட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க் சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா? ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் – “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் – அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது...

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மக்களிடையே சமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருக்கிறதா என்பதே முக்கிய கேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூக சமுத்துவம் தான் – பெரியாரின் இலட்சியம். பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்ற கொள்கையின் அடிநாதமே அனைத்து சமூகப் பிரிவினரையும் சமப்படுத்துவது தான். இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு,வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள். இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து – செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதேபோல்...