தலையங்கம் – தேசிய சுயநிர்ணய உரிமைக்கு கிடைத்த வெற்றி
ஸ்காட்லாந்து நாட்டில் நடத்திய வாக்கெடுப்பில் (செப். 18, 2014) அந்நாடு, பிரிட்டனுடன் இணைந்து நிற்பதற்கு ஆதரவாக 55 சதவீத மக்களும், தனி நாடாக வேண்டும் என்று 45 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு முறையை ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் பெரும்பான்மை மக்களின் முடிவே இறுதியானது. சில ஏடுகள் ‘பிரிவினை வாதம்’ தோற்றுப் போய்விட்டது என்று கொச்சைப்படுத்துகின்றன. உலகில் பல்வேறு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தும் போராட்டங்களுடன் முடிச்சுப் போட்டு, இனி எங்கும் பிரிவினையே கூடாது என்று தங்கள் நாட்டாமை தீர்ப்புகளை வழங்குகிறார்கள். உண்மையில், ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பு “தேசிய சுயநிர்ணய உரிமை” என்ற கொள்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி. தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ‘ஸ்காட்லாந்து’ மக்கள், முறையான வாக்கெடுப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முடிவு, பிரிந்து செல்வதாகவும் இருக்கலாம் அல்லது இணைந்திருப்பதாகவும் இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கே உண்டு! இதில் முக்கியமாக ஒரு கருத்தை சுட்ட வேண்டும். 650...
