குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை
குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நான்காம் ஆண்டு குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய திண்டுக்கல் காட்டுமடத்தில் உள்ள ஐ.சி.எம். ஹவுசில் நடை பெற்றது. திருப்பூர், கோவை,மேட்டூர், தஞ்சாவூர், நாகை,மதுரை, போன்ற மாவட்டங்களிலிருந்து 42 குழந்தைகள்கலந்து கொண்டனர்.19.05.2016 மாலையே பெரும்பாலான குழந்தைகள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். 20.5.2016 : முதல்நாள் காலை குழந்தைகளின் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது. மதுரை யாழினி நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். பயிலரங்க அறிமுகம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள், தனித் தன்மைகளை விளக்கி ஆசிரியர் சிவகாமி பயிலரங்கை அறிமுகம் செய்தார். பின்னர் குழந்தைகள் ஒருவர் மற்றொருவரைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக சுய அறிமுகம் வகுப்பு விளையாட்டு முறையில் நடத்தப்பட்டது. இவ்வகுப்பினை சந்திரமோகன் மற்றும் நீலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிற்பகல்...