தமிழ் மொழியில் ஊடுருவி நிற்கும் ஆண் ஆதிக்கம்

தமிழ் இலக்கியங்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்களுக்கான காரணங் களில் ஒன்று அதில் அடங்கியுள்ள ஆணாதிக்க கருத்துகள் தான், பெண் களுக்கு ‘விதவை’ என்ற சொல் லிருக்கும் போது ஆண்களுக்கு ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லை என்று கேட்டார் பெரியார். தமிழ் மொழி சொற்கள் பயன்பாட்டில் ஆண் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

‘கவிஞன் என்பவன்’, ‘எழுத்தாளன் என்பவன்’, ‘நடிகன் என்பவன்’, ‘உழைப்பாளி என்பவன்’, ‘புரட்சி யாளன் என்பவன்’ என்றெல்லாம் தொடங்கும் ஏராளமான வாக்கியங் களை நமது அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் தினசரி நாம் எதிர்கொண்டுவருகிறோம். இந்த வாக்கியங்களை ஒரு பெண் படிக்கும் போது அவருக்கு என்ன தோன்றும்? ‘ஓஹோ, கவிதை, எழுத்து, நடிப்பு, உழைப்பு, புரட்சி என்று அனைத்தும் ஆண்களால்தான் செய்யப்படு கின்றனவோ?’ என்ற கேள்விதானே எழும். இதெல்லாம் பரவாயில்லை. இந்த வாக்கியங்களைவிட அதிகமாக நாம் தினசரி எதிர்கொள்வது, ‘மனிதன் என்பவன்’, ‘மனிதன் இருக்கின்றானே’ ரீதியிலான வாக்கியங்கள்தான். அப்படி யென்றால் பெண்கள் மனித குலத்தில் சேர்த்தி இல்லையோ? மனித குலம் என்றாலே அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் இயல்பாக நடந்துவரும் விஷயம் அல்லவா? இதை யாரிடம் சென்று முறையிடுவது? ‘படைத்தவனிடமா?’ அங்கும் ஆண்தானே உருவகிக்கப்பட் டிருக்கிறார்? ‘அவனிடம்’ போனால் என்ன நியாயம் கிடைக்கும்?

இந்தக் கேள்விகளெல்லாம் தமிழில் சிறுபத்திரிகைகளில் பெண்ணுரிமை யைப் பற்றி எழுதுபவர்களின் வட்டத்தைத் தாண்டி நாம் அதிகம் எதிர்கொள்ளாதவை. மேலைநாடு களிலோ இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே இந்தக் கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப் பட்டு, அவற்றை அந்தச் சமூகங்களும் எதிர்கொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணவும் முயன்றுவருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் ‘வரலாறு’ என்று பொருள் படும் ‘ஹிஸ்டரி’ (ழளைவடிசல) என்ற ஆங்கிலச் சொல்லின் மீதே பெண்ணியவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லில் இருக்கும் ‘ஹிஸ்’ (ழளை- அவனுடைய) என்ற பதமே ஆண் வாடை அடிப்பதாக இருக்கிறது என்று அதற்கு மாற்றாக ‘ஹெர் ஸ்டோரி’ (ழநச ழளைவடிசல- அவள் சரிதை) என்ற வார்த்தையை உருவாக்கினார் கள். ‘ஹிஸ்டரி’ என்ற சொல்லுக்கும் ‘ஹிஸ்’ என்ற சொல்லுக்கும் வேர்ச் சொல் அளவில் எந்தத் தொடர்பு மில்லை. ஆனால், காலம்காலமாக வரலாறு எழுதப்பட்டுவந்திருக்கும் விதமே அதை ‘ஆண் வரலாறு’ என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக் கிறது. பெண்கள் அதிகம் வரலாறு எழுதவில்லை, வரலாறு படைக்க வில்லை என்பது இதற்கு பதிலாக சொல்லப்படுகிறது.

உண்மை அதுவல்ல, வரலாறு எழுதவோ படைக்கவோ பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தான் உண்மையான வரலாறு.

மொழி என்பது நம் உணர்வு, மனநிலை, இயல்பு, விருப்பு வெறுப்பு என்று நம்மிடம் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். சமூகம், வரலாறு என்று எல்லாமே இப்படி ஆண்களை மையப் படுத்தியதாக இருக்கும்போது மொழி யில் மட்டும் அந்த ஆதிக்கம் இல்லா மல் இருக்குமா? அதன் விளைவுதான் ‘ஹிஸ்டரி’ ‘ஹிஸ் ஸ்டோரி’ (அவன் சரிதை) என்று ஆனது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆண் மொழியைப் பற்றி ஆங்கிலத்தில் பெரும் விவாதம் உருவானது. அதன் விளைவாக ஆண்களை மையப் படுத்திச் சொல்லப்படும் சொற்களுக் கும் வழக்குகளுக்கும் மாற்றாக வேறு சொற்களும் வழக்குகளும் பரிந் துரைக்கப்பட்டன. ஒருவர் ஆணா, பெண்ணா என்று குறிப்பிடப்படாத தெரியாத சூழலிலும் வழக்கமாக ஆங்கிலத்தில் ‘ஹீ’ (ழந-அவன்), ‘ஹிஸ்’ (ழளை-அவனுடைய) என்ற சொற்களை யே பயன்படுத்துவார்கள். எடுத்துக் காட்டாக, ஒரு வாக்கியம்: ‘ளுடிஅநடிநே hயள டநகவ hளை bடிடிம நொiனே.’ (‘யாரோ ஒருத்தன் தன்னுடைய புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டான்’ என்பது இதன் அர்த்தம்). புத்தகத்துக்கு உரிமையாளர் ஆணா பெண்ணா என்று தெரியா மலேயே அது ஒரு ஆணுடையது என்ற பொருளில் மேற்கண்ட வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. இந்த வாக்கியத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக மாற்றிச் சொல்வதே தற்போதைய வழக்கம்:  ‘ளுடிஅநடிநே hயள டநகவ வாநசை bடிடிம நொiனே.’ (யாரோ ஒருத்தர் தனது புத்தகத்தை விட்டுச் சென்றுவிட்டார்). இதுபோல் சொற்களும் இருபாலருக் கும் பொதுவாக மாற்றப்பட்டு வரு கின்றன. (ஆண்) தலைவர் என்ற பொருள்படும் ‘சேர்மேன்’ (ஊhயசைஅயn) என்ற சொல்லுக்குப் பதிலாக இருபாலருக்கும் பொருந்தக்கூடிய, ‘தலைவர்’ என்ற பொருள்படும் ‘சேர்பர்ஸன்’ (ஊhயசையீநசளடிn) என்ற சொல் தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கிறது. இதுபோல் நிறைய சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுப் பொதுவழக்கில் இருக்கின்றன. மொழி யில் ஆண் ஆதிக்கத்தை நீக்கி இரு பாலருக்கும் பொதுவான பயன்பாடு களை ஆங்கில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எப்போதோ நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டன. புகழ்பெற்ற ஆங்கில மொழி நடைக் கையேடுகள், ஆங்கில அகராதிகள் போன்றவற்றிலும் இந்த வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.

தமிழ் என்று வரும்போதோ அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் இரண்டையுமே நவீனத்துவம் இன்னும் தீண்டவில்லையோ என்றே தோன்றுகிறது. வெகுமக்கள், ஊடகங் கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதும் சிறு பத்திரிகைகளிலும் ‘ஆண் மொழி’ அதிகமாக இருப்பதை உணர முடி கிறது. அதன் அடையாளம்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட, ‘எழுத்தாளன் என்பவன், ‘கலைஞன் என்பவன்’ என்பது போன்ற சொற்றொடர்கள்.

தமிழ் மொழி ‘குடிமகள்’ என்ற சொல்லுக்காக முதல்வர் ஜெயலலிதா 2வுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘சிட்டிசன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘குடிமகன்’ என்ற சொல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால் பெண்கள் அமைச்சர் பதவி போன்றவற்றை ஏற்கும்போது ‘இந்தியக் குடிமகனான நான்…’ என்று சொல்லியே பதவியேற்க வேண்டியிருப்பது பெரும் சங்கடம் என்று சொல்லி, 2003-ம் ஆண்டு ‘குடிமகள்’ என்ற சொல்லை அவர் புழக்கத்தில் கொண்டுவந்தார்.

ஒரு பெண்ணின் மீது பாலியல் ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க ‘கற்பழிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொல் லில் உள்ள ‘கற்பு’ விவாதத்துக்குரியது என்பதாலும், பெண்கள் மட்டுமன்றி, சிறுவர்கள், திருநங்கைகள், ஆண்கள் போன்றோரும் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் குறிக்க ‘கற்பழிப்பு’ என்ற சொல் பயன்படாது என்பதா லும் அந்தச் சொல்லைப் பயன்படுத்து வது தவறு. அதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

அறிவுவெளியிலும் ஆண்மொழி ஆதிக்கம் செலுத்துவதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. புத்தகம், சிந்தனை, கலை என்றாலே அது ஆண்கள் தொடர்பான விஷயம்போல் வாசகன், எழுத்தாளன் போன்ற ‘ன்’ விகுதியில் முடியும் சொற்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்விலும் ‘அப்பா சொன்னார், அப்பா வந்தாங்க’ என்றும் ‘அம்மா சொன்னாள், அம்மா வந்தாள்’ என்றும்தான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அப்பா மரியாதைக்கு உரியவர், அம்மா அப்படி யல்ல!

பேச்சு வழக்கு என்பது இயல்பை, அப்போதைக்கு என்ன தோன்று கிறதோ அதைப் பேசுவது. ஆகவே, பேச்சு வழக்கில் ஆண் மைய சமூகத்தின் ஆண் மொழி இயல்பாகவே வெளிப் படும். எழுத்து மொழி என்று வரும் போது அது ஒரு வகையில் ஆவணப் பதிவாகிவிடுகிறது. ஆகவே, மேற் பூச்சுக்காக வேண்டியாவது ஒருவர் தனது பாரபட்சம், ஆதிக்க உணர்வு போன்றவற்றை எழுத்தில் நீக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்படி இருந்தும் நம்முள் ஆழமாக இருக்கும் ஆணாதிக்கம் நம்மையறியா மலேயே நுட்பமான வழிமுறைகளில் வெளிப்பட்டுவிடுகிறது. சிறுபத்திரிகை களிலிருந்து வெகுஜன ஊடகங்கள் வரை இதுபோன்ற ஆண்மொழியை நீக்கிப் பொதுமொழியை நோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது.

நன்றி: ‘தி இந்து’ ஏப். 10

பெரியார் முழக்கம் 21042016 இதழ்

You may also like...