Category: திவிக

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

உலக மகளிர் தின விழா ! ஈரோடு 08032017

உலக மகளிர் தின விழா ! நாள் : 08.03.2017 புதன்கிழமை இடம்: ஈரோடு மாநகரம். நேரம் : காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. அறிவுசார் வாழ்வியல் நிகழ்வுகளும், கருத்தரங்கம், தமிழர் கலை விழா பங்கு பெறுவோர் : மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் மத்திய அமைச்சர். பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் சிவில் உரிமைக் கழகம். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். ஒருங்கிணைப்பு, தோழர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக்கழகம்

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை இடமாற்றம் – கழகம் மனு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தார்.. சிலை இடமாற்றம் தொடர்பாக எந்தப் பணிகளாயினும் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எப்பணியையும் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர்.கண குறிஞ்சி, திமுக மாவட்டப் பிரதிநிதி தோழர்.பகீரதன் ஆகியோர் உடனிருந்தனர் செய்தி பசி திவிக

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க  

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...

அரியலூர் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 19022017

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…   ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்: சிறுமி நந்தினியின் கொலையை CBIக்கு மாற்று… இந்து முன்னணி அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜாதி வெறியன் ராஜசேகரை கைது செய்… ராஜசேகர் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்து… தலித் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து…

திருப்பூரில், அரியலூர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர்,மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்துமுண்ணனி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் பங்கெடுத்தனர்.ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண்குமார்,இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு,மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகரசெயலாளர் மாதவன்ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் சங்கீதா,கொளத்துப்பாளையம் ராமசாமி, முத்து,தனபால்,கருணாநிதி,அகிலன்,பரிமளராசன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ! நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு. இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில். மோடியே, ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள் கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு...

பெரியார் : இன்றும் என்றும் நூல்அறிமுக விழா புதுச்சேரி 11022017

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார்:இன்றும் என்றும்’ நூலறிமுக விழா புதுச்சேரி வணிக அவையில் 11-2-2017 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை புதுவை லோகு.அய்யப்பன் வரவேற்றார். விடியல் பதிப்பகத்தின் சார்பாக விஜயகுமார் நூல் வெளியீடும் அவசியம், முயற்சி குறித்து  எடுத்துரைத்தார். அடுத்து சூலூர்பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை கவுதமன் நூலை அறிமுகப்படுத்தி தெளிவான நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நூலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும் பிறரும் நூலின் படிகளைப் பெற்றுகளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாறினார். விழாவில் ஏறத்தாழ 200 படிகள் விற்பனையாகின.

ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! கோவை 13022017

13-2-2017, திங்கட்கிழமை மாலை 4-00 மணியளவில், கோவை வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, ஜாதி மதவாத ஆதிக்க கூட்டமைப்பின் சார்பில், பொள்ளாச்சி கா.க.புதூரில் ஜாதி,மதவாத ஆதிக்க சக்திகளால், பெரியார் திராவிடர் கழகம், சுயமரியாதை சமதர்ம இயக்கர் தலைவர் தோழர் கா.சு. நாகராசந்தாக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை பிற்பகல் 3-00 மணிவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த ஆனைமலை காவல்துறையினர் தப்ப விட்டதற்கு உரிய நடவக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆத்தி தமிழர்- பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், எஸ்.டி.பி.ஐ., சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சமுத்துவ முன்னணி வழக்குரைஞர் கார்க்கி, வழக்குரைஞர்முருகேசன், முருகர் சேனை சிவசாமித் தமிழன், தமிழ்க் கல்வி இயக்கம் சின்னப்பா தமிழர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திராவிடர் கழக இளைஞர் அணி சிற்றரசு, புதுவை பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தலைவர் தீனா,  கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்,...

கழகத்தின் போராட்ட எதிரொலி, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே வெற்றி

இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற பெயரில் இன்று 18022017 ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள இருந்தார்கள். மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, காலை 10 மணிக்கு பரிமளம் மகால் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையில் விழாவிற்கு எதிராய் மனு அளித்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள். கழகத்தின் முயற்சிக்கு வெற்றி

பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்.. குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி மா பா மணிகண்டன் உரிமை

கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லம் திறப்பு விழா மேட்டூர் 12022017

12-2-2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செய்லாளர் தோழர் ஸி.கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப்பட்டன. இந்நிகழ்விலும் தோழர் கோவிந்தராசுவும் அவரது மகள் அருள்மொழியும் கழகப் பாடல்கள் பாடப்பட்டன. அந்நிகழ்வில் இல்ல உரிமையாளர் கீதாவி அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும் கலந்துகொண்டனர்

பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15022017 ஈரோடு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன்  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15,02,2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்ற, தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோரதுவாழ்த்துரையை தொடர்ந்து……..             கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தினர்.          பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ...

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017

வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் 06022017

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆத்தூரில்….. அரியலூர் சிறுமி நந்தினி வன்கொடுமை கொலையை கணடித்தும் இந்து முன்னனியியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கொலையாளிகள் அனைவரையம் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். பங்கேற்றோர்… குடியுரிமை மக்கள் கழகம். பெண்கள் இணைப்புக் குழு. மார்க்சிய லெனினிஸ்ட். திராவிடர் கழகம். விடுதலை சிறுத்தைகள் கட்சி. திராவிடர் விடுதலைக் கழகம்.ஆத்தூர். செய்தி கணபதி

பொள்ளாச்சி திவிக ஆர்ப்பாட்டம் 06022017

பொள்ளாச்சி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரியாலூர் தழித்சிறுமி நந்தினியை பாலியல் செய்து கொலைசெய்த இந்து முண்ணனி காமுகனை கடுமையான தண்டனைச்சட்டம் இயற்றி நந்தினிக்கு நீதிகிடைக்கவேண்டும் எனறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .    

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...

நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

முகில் ராசு – மாவட்டத் தலைவர். நீதிராசன் – மாவட்டச் செயலாளர். அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் . தனபால் – மாநகரத் தலைவர் மாதவன் – மாநகரச் செயலாளர். முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள். கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர். ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் . 11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022017 இதழ்

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு  பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர்...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017

ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்...

திருப்பூரில் பொங்கல், தைப்புத்தாண்டு விழா ! 22012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை 8 ஆம் ஆண்டு திராவிடர் பெருவிழாவாக பொங்கல்,தைப்புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 22.01.2017 அன்று காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,உரி அடித்தல்,குழு விளையாட்டுப்போட்டிகள் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவினரின் ஜாதி ஒழிப்புப் பறையிசை நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.பின் காலை நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,வெற்றிக்கோப்பை,நாள்காட்டி ஆகியன வழங்கப்பட்டன. இவ்விழா அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பைப்பெற்றது. விழாவினை தோழர் அகிலன்,மாதவன்,நாகராசு,கணபதி, பிரவீன்குமார், நீதிராசன்,கருணாநிதி,தனபால்,ராஜசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கழக பொருளாளர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி,மாவட்டத்தலைவர் முகில்ராசு,பாண்டியநாதன்,முத்துலட்சுமி,சங்கீதா,முத்து,பிரேம் குமார்,தனகோபால்,பல்லடம் சண்முகம்,மணி ஆகியோர் கலந்துகொண்டனர். உணவு ஏற்பாட்டினை மாதவன் குடும்பத்தினர்,அகிலன் குடும்பத்தினர்,கோமதி குடும்பத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். தோழர்...

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு… தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். இடம்:அண்ணாசிலை பின்புறம். பேருந்து நிறுத்தம். அரியலூர். நாள் :04.02.2017.சனிக்கிழமை. நேரம்:காலை.10.00மணிக்கு.

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669

மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017

31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! 29012017

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……. நாள் : 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை.மாலை 6.00 மணி. இடம் : பேருந்து நிலையம் அருகில்,நங்கவள்ளி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் சிவகாமி, அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்

கொளத்தூரில் முப்பெரும் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 138 வது பிறந்த நாள் விழா ! பெரியார் படிப்பகம் திறப்பு ! தமிழர் திருநாள் ! நாள் : 28.01.2017 சனிக்கிழமை. இடம் : பேருந்து நிலையம்,கொளத்தூர். படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுபவர் : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.