Category: பெரியார் முழக்கம் 2019

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட் டிருந்தது. சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன. இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து)  தனியார் நடத்துபவை. ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக்...

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக்களம்

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா? இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப்...

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடு களை எதிர்த்து 1998இல்...

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் – மார்க்சிஸ்ட் கட்சியின் தடுமாற்றங்கள்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம் வயது பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவின் மீது அளித்த தீர்ப்பில்  நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஏற்கனவே அளித்த தீர்ப்பு வழியாகப் பெண்கள் கோயிலுக்குப் போக உரிமை கிடைத்தது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை இப்போது மாற்றியுள்ளனர். இறுதி விசாரணையின் தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை என்றும் இப்போதும் உச்சநீதிமன்றம் (பெரும்பான்மை தீர்ப்பு) தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால்  கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதித்ததுதான் என்று கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி நடத்திய உயர்மட்டக் குழு கூட்டத்தில் பெண்ணுரிமை கண்ணோட்டத்தோடு கோயிலுக்கு வந்த பெண்களுக்கு அரசு...

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு...

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தி தீர்ப்பு : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்விகள்

அயோத்தியில் இராமன் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக் குறித்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி எழுப்பி உள்ள கேள்விகள் ‘தி டெலிகிராப்’ ஏட்டில் வெளி வந்துள்ளது. “அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததைச் சிறுபான்மை யினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும். 1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும்,  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவரவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காக்கும் உரிமை உண்டு. அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை...

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு டிசம்பர் 22இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணிக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தி பெரும் வெற்றி பெற்றோம். தொடர்ந்து தமிழ்நாடு ‘காவி’கள் மண் அல்ல என்பதை  உணர்த்தவே நீலச்சட்டைப் பேரணி! திருச்சிப் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததைப் போல் – அந்த எண்ணிக்கையையும் மிஞ்சக் கூடிய அளவில் நீல சட்டைப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும்! ஜாதி எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்புக்கு அம்பேத்கரும்-பெரியாரும் நமக்கு இரு கண்கள்; அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கர், தனது அறிவு ஆற்றல் சட்டப் புலமையால் சமூக நீதி என்ற இடஒதுக்கீடு தத்துவத்தை சட்டத்தின் வழியாக நிலைநிறுத்தினார். பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்து விட்டவரும்...

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

இலங்கை தேர்தலில் சிங்கள பெரும் பான்மையே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சேயின் சகோதரர் இவர். இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக அவரது தம்பி நிறுத்தப்பட்டார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய இராணுவம் அங்கே அமைதிப் படை என்ற பெயரில் சென்றபோது இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டவர் அப்போது ஜெயவர்த்தனேயைத் தொடர்ந்து அதிபரான பிரேமதாசா. பிரேமதாசா விடுதலைப் புலிகள் ஒப்பந்தம் ஒன்றும் அப்போது உருவானது. சில மாதங்களில் பிரேமதாசா குண்டு வெடிப்பில் பலியானார். இலங்கையில் இப்போது ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து,...

இயக்குநர் அருண்மொழி காலமானார்

இயக்குநர் அருண்மொழி காலமானார்

நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி (49) மாரடைப்பால் 9.11.2019 அன்று முடிவெய்தினார். பூனாவில் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர் அருண்மொழி. சென்னை திரும்பியவுடன் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் ருத்ரய்யாவிடம் இணை இயக்குநராகப் பணி யாற்றினார். பின்னர் ‘ஏழாவது மனிதன்’ (1982) படத்தில் இயக்குநர் ஹரிஹரனிடம் பணி யாற்றினார். அப்படத்துக்கு வசனமும் எழுதினார். அதன் பின்னர் அவரே, நாசர், கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ‘காணிநிலம்’ (1987) ‘ஏர்முனை’ (1992) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் அருண்மொழியின் திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் அயல்நாடுகளில் திரையிடப்பட்டன. அருண்மொழி, நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிகத் திரைப்பட இயக்குநராக செயல்பட மனமின்றி இயங்கி வந்தார். எனினும் திரைப்படத் துறைக்கு ஆர்வத்தோடு வரும் இளைஞர்கள் பலருக்கும் திரைப்படத்தைச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார். தாமிரபரணி மாஞ்சோலை...

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

பி.எஸ்.கிருஷ்ணன் முடிவெய்தினார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தியது ஆகிய பணிகளில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் டெல்லியில் முடிவெய்தினார். அவருக்கு வயது 86. கேரளாவில் 1932 டிசம்பர் 30ஆம் தேதி பிறந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். 1956இல் அய்.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வான அவர், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். எஸ்.சி. பிரிவினருக்கு சிறப்புக்கூறு திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர். 1990இல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மத்திய அரசின் கொள்கை உருவாக்க குழுக்களில் பொறுப்பாளராக பணியாற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். ‘நீதிபதி கிருஷ்ணய்யர் விருது’ உள்ளிட்ட பல...

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில்  பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார்....

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை

அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர்...

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

பார்ப்பன ‘தினமலர்’ கூறுகிறது இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது

இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்கும் அதுஅதிகாரத்தைக் கைப்பற்று வதற்கும் உதவியது என்று ‘தினமலர்’ நாளேடு எழுதியுள்ளது. அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.க.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரச்சாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி உருவாக்கிய இயக்கம், ‘கோவில் கட்ட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.க.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ.க., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்: 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை...

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா?

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அ றிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன) பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை...

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா?

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது. இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது  சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்...

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

வில்வித்தையில் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டு

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தமிழரசி-கொளத்தூர் குமார் ஆகியோரின் மகன் இனியன், காவலாண்டியூர் கலைச்செல்வி- விஜயகுமார்  ஆகியோரின் மகன் வளவன், அக்டோபர் 5, 6 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) நடத்திய மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அழைத்துப் பாராட்டினார். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா. பெரியார் முழக்கம் 07112019 இதழ்

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

வணிக நிறுவன விளம்பரப் பலகைகளில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரும் இயக்கம் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் முடிவு

திராவிடர் விடுதலைக் கழக  கல்லக்குறிச்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 02.11.2019 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சங்கராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்ட துணை செயலாளர் மு.நாகராசு, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் வீ. முருகன், ந. வெற்றிவேல், அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து சமுதாய (குமுகாய) மக்களும் நுகர்வோராக வணிகம் செய்கின்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையில் எழுதப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றக்கோரி மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு  சாதி பெயர் எழுதப் பட்டுள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம்  சாதி பெயரை அகற்றக்கோரி வேண்டுகோள் வைப்பது என்று மாவட்ட கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையிலிருந்து...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்...

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?

பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு. ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது. திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

பேராசிரியர் நா. வானமாமலையின் மாணவரும், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாடு போன்ற துறைகளில் பெரும் பங்காற்றி வருபவருமான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் (ஆ.சி.) அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (னு.டுவை.) வழங்கப்பட்டது. 22.10.2019ஆம் நாள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர் ஆ.சி.க்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. தமிழியல் ஆய்வுப் புலத்தில் 50 ஆண்டு கால அயராத பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தேர்ந்த களஆய்வு, பரந்தபட்ட நூலறிவு, அறிஞர்களுடன் நடத்தும் விவாதங்கள், உழைக்கும் மக்கள் சார்பு ஆகியவை அவருடைய தனித்தன்மை. எந்த விருதையும் அவர் தேடிச் சென்றதில்லை. அவருக்கு கல்விப்புலம் சார்ந்த இவ்விருதினை வழங்குவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துக் கொண்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.  பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஆ. சிவசுப்பிரமணியன் 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் தமிழியல்...

கழக ஏட்டிற்கு நன்கொடை

கழக ஏட்டிற்கு நன்கொடை

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் – தமிழன்பு இணையர் தங்கள் மகள் இளந்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக கழகத்தின் வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு  ரூ.1500/- நன்கொடை அளித்துள்ளனர். பெரியார் முழக்கம் 07112019 இதழ்

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

திருவள்ளுவர் – ‘இந்து’வா?

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். திருவள்ளுவருக்கு ‘காவி அடையாளம்’ தந்து ஒரு பா.ஜ.க. பிரமுகர் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த சிலை அவமதிப்பு நடந்திருக்கிறது. திருவள்ளுவர் ஓர் இந்து என்றும், திருக்குறள் இந்து மத நூல் என்றும் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருகிறார்கள். திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; இறந்து போன சந்திரசேகரேந்திர சரசுவதி என்ற காஞ்சி மூத்த சங்கராச்சாரி என்ன கூறுகிறார்? “அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை  அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித் தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை… வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள் விஷ்ணு சாமியே அல்ல, சிவன்தான் சாமி, விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்....

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

அயோத்தி தீர்ப்பு: என்ன நடக்கப் போகிறது?

உச்சநீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் எவருக்கு உரிமை உடையது என்பது குறித்து தீர்ப்பை வழங்க இருக்கிறது. தீர்ப்பு வருவதால் நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகாமல் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் நடக்கின்றன. தமிழக முதல்வரை அழைத்தும் ஆளுநர் பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டாட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்று சங்பரிவாரங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் நடத்திய இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அயோத்திப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதன் கடந்தகால வரலாறுகள் ஓர் உண்மையை உணர்த்துகின்றன. நீதி – சட்டம் என்ற அமைப்புகளை முடக்கி ‘கும்பல் வன்முறைகளே’ தீர்மான சக்திகளாக செயல்பட்டிருக்கின்றன. 1949ஆம் ஆண்டு நள்ளிரவில் பாபர் மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, இராமன், சீதை பொம்மைகளை மசூதிக்குள் போட்டு மசூதி சுவரில் இராமன் உருவத்தை படமாக வரைந்தார்கள். அப்போதே அத்துமீறி நுழைந்த குற்றத்தின் கீழ்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி – திரிபுவாதிகளுக்கு பதில் திருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்

யாரெல்லாம் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள் என சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு பாடும் பார்ப்பனர்கள் எல்லாம்  ஜாதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். பெரியார் குறளை எதிர்த்தார் என்று திரிபுவாதம் பேசும் பா.ஜ.க. – சங் பரிவாரங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை சரியான பதில் அளித்திருக்கிறது. வள்ளுவர் – ஓர் இந்து; திருக்குறள் – ஓர் இந்து மத நூல் என்று இப்போது பா.ஜ.க.வினர் பேசுவதற்கு முன்பாகவே அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை: பெரியாரை தமிழின விரோதி, தமிழ் மொழி விரோதி, தமிழ் இலக்கிய விரோதி என்று ஒரு கூட்டம் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிற வேளையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டைப் பற்றி, அதனுடைய விளக்கக் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 1949இல் பொங்கலை ஒட்டி நடந்த 2 நாள் திருக்குறள்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா? அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை ! பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின்...

நீலச் சட்டைப் பேரணி  டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

நீலச் சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் தேதி மாற்றம்

கோவையில், புரட்சியாளர்  அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்க உள்ள  நீலச்சட்டைப் பேரணிக்கும், சாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைக்கப்படும் தலைவர்களின்  நாள் ஒதுக்கல் போன்ற சில காரணங்களால்,  கோவை நீலச்சட்டைப் பேரணி டிசம்பர் 22ஆம் நாள் என இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 2019, டிசம்பர் 22 என மாற்றிப் பதிவிடுமாறும், பயண ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 31102019 இதழ்

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

வழிபாடுகளில் மக்கள் தீவிரம் காட்டவில்லை சங்ககால தமிழர் வாழ்வை உறுதிப்படுத்துகிறது கீழடி ஆய்வு

கீழடியிலும் சிந்துவெளியிலும் விளையாட்டுப் பொருள்கள் அதிகம் கிடைத்துள்ளன கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து  பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசினார். அவரது பேட்டியிலிருந்து: கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட் டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004இல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரிய வில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது....

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும். ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான  மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை...

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 16.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் ஓ.டி முருகன் கோவில் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா –  திருக்குறள் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ,  தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர், சௌ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இல.குமார் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அ.சி.சின்னப்பத் தமிழர் (தமிழ்வழிக் கல்வி இயக்கம்), ஆவடி நாகராசன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சிவ செந்தமிழ்வாணன் (தமிழ் தேசக் குடியரசு இயக்கம்), க.சூரியா (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), என்.கே.மூர்த்தி (டாக்டர் கலைஞர் பத்திரிக்கையாளர் சங்கம்), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக பூ.இராமலிங்கம், (திராவிடர் கழகம்) ...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி சீமான் கைதட்டலுக்காகப் பேசுகிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து, ஜூனியர் விகடனுக்கு 19.10.2019 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி. “ஆமாம், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய இராணுவத்தை அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சுதான் தமிழக… ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங் களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்....

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்

  09.10.2019 அன்று ஜாதி  ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை யொட்டி  பரமக்குடி யிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செய லாளர் சந்திர போஸ் ஆகியோர் காலை 10:30 மணிக்கு புகழஞ்சலி செலுத்தினர். உடன் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், மேலூர் பொறுப்பாளர் சத்யமூர்த்தி, ஆய்வு மாணவர் மாளவிகா, பொன்னான்டி உள்ளிட்ட மதுரை மாவட்டக் கழகத்  தோழர்கள் மற்றும் தியாகி இமானுவேல் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு  தியாகி இமானுவேல் பேரவை மானாமதுரையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஜாதி ஒழிப்பு கருத்தரங்’கிற்கு  தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், கழகத் தலைவர் கொளத்தூர்...

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

‘குரூப் 2’ தேர்வுகளில் உருவாக்கிய தமிழக அரசு மாற்றம் சரியா?

கிராமப்புற மாணவர்களை பயற்சிக் கல்லூரி நோக்கி துரத்துகிறது ‘குரூப் 2’ தேர்வுக்கு தமிழ் வினாத்தாள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வினாத்தாள் நீக்கப்பட்டாலும் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு இடம் பெற்றுள்ளது என்றும் ஆழமான தமிழ் அறிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் விளக்கம் தந்துள்ளது. சரி… புதிய பாடத் திட்டம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது…? மொழித் தாளுக்கு என்று தனியே கேள்வித் தாள் இருக்கப் போவது இல்லை. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளுக்குமே இந்த நிலைதான். ஆனால், தமிழ் தெரியாதவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று தேர்வாணையம் கூறுகிறது. இது, ஒருபக்க உண்மை மட்டுமே. தமிழ் மொழித் தாளில் நன்றாக எழுதினால், தேர்ச்சி பெறுவது எளிது என்கிற தற் போதைய நடைமுறை இனி இருக்காது. இனி தமிழில் அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெற முடியாது இதனால் அதிகம்...

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

மோடி ஆட்சி – கருத்தாளர்களையும் ஒடுக்குகிறது ஓராண்டு காலம் சிறையில் வாடும் புரட்சிகர சிந்தனையாளர்கள்

புரட்சிகர சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை நகர்ப்புற தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி ஓராண்டு காலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது மோடி ஆட்சி. ஹிட்லர் ஆட்சியில் நடந்த அதே அடக்குமுறைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன. “புனே அருகே பீமா-கோரேகான் பகுதியில் மாவோயிஸ்ட்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புலனாய்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரதமரைக் கொலை செய்யும் முயற்சி யில் பங்கிருக்கிறது,” இப்படி சொல்கிறது காவல் துறை. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ் உள்ளிட்ட 9 செயல் பாட்டாளர்கள், கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். பேஷ்வா பார்ப்பனர்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட...

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

மதிப்புரை தன் வரலாறு மட்டுமல்ல; இயக்க வரலாற்றையும் பேசும் நூல்

கொங்கு மண்டலத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்த தூண்களில் ஒருவரான மு. கண்ணப்பன் வரலாறு நூலாக வெளி வந்திருக்கிறது. 39 தலைப்புகளில் ஏராளமான தகவல்களைத் திரட்டி சுவைபட எழுதியிருக்கிறார், நூலாசிரியர் வழக்கறிஞர் ஒ. சுந்தரம். மு. கண்ணப்பன், இயக்கத்தில் மாணவப் பருவத்திலே இணைத்துக் கொண்டு 23 வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவராகி, 1953லேயே இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மாணவர்களைத் திரட்டிப் போராடி பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 1956ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, ‘தி.மு.க. தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டுமா?’ என்று நடத்திய வாக்கெடுப்பில், போட்டியிடக் கூடாது என்று வாக்களித்த 4203 தோழர்களில் மு. கண்ணப்பனும் ஒருவர்.  ‘ஓட்டுக்காக இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று, தான் கருதியதாக மு. கண்ணப்பன் கூறுகிறார். 1962இல் அண்ணா அறிவித்த விலைவாசி உயர்வு எதிர்ப்புக்கான மறியலில் பங்கேற்று, 4 மாத...

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

டெல்லியில் ஒரு வாரம் யாகமாம் இந்திய கலாச்சாரம் வேத கலாச்சாரமாம்

புதுடில்லியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து, அக்.9 முதல் ‘சதுர்வேதா சாவர்க்கர் மகாயக்ஞா’ என்ற யாகம் நடத்தியுள்ளனர். நான்கு வேதங்களைப் பரப்புவதற்கு இந்திய நாகரிகம் வேத நாகரிகமே என்பதை உணர்த்தவும், வீட்டு நிகழ்வுகளில் வேத சடங்குகளைப் பின்பற்ற வைக்கவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித் துள்ளது. மத்திய அமைச்சர் இதில் பங்கேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்ற பாரம்பரிய  அமைப்பு, வேதகலாச்சார அடிப்படையிலான இந்து தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களை உறுப்பினராக சேர்க்க ஆர்.எஸ்.எஸ். மறுத்து வருவதோடு அதன் துணை அமைப்புகள் எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதப் பெயரையே சூட்டியுள்ளது. 1939ஆம் ஆண்டு வரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்து வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிறகு இதை பார்ப்பனர்களின் “தெய்வீக மொழி”யான சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை...

டிசம்பர் 22 – கோவையில்  நீலச் சட்டைப் பேரணி

டிசம்பர் 22 – கோவையில் நீலச் சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 22 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20.10.2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க,  உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம். கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் டிச 15 இல் இருந்து டிச 22 ஆக மாற்றப்பட்டுள்ளது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

மாநிலங்களுக்கான நிதி உரிமை: நடுவண் ஆட்சி பறிக்கிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு – ஒரே சந்தை – ஒரே வரி’ என்பதை படிப்படியாக செயல்படுத்தியது போலவே, ‘ஒரே நாடு – ஒரே ஆட்சி’ என்ற நிலைக்கும் திட்டமிடுகிறதோ என்று தோன்றுகிறது. அதாவது, மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே மக்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவே இருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை நீர்த்துப் போக திட்டமிடுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் மத்திய அரசு நினைத்தால்தான் முடியும் என்று நம்பவைக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. இந்தியா கூட்டுறவு- கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சந்தை, மக்கள் தொகை என தனித்துவமாக விளங்கிவருகின்றன. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையானதை மாநில அரசுகள்தான் நிர்வகிக்கவும் தீர்மானிக்கவும் முடியும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், எல்லா வற்றையும் மத்தியில் இருந்தே கட்டுப்படுத்தவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிடுகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 15ஆவது...

தேசத் துரோக வழக்கு:  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி கண்டனம்

தேசத் துரோக வழக்கு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: தனி மனிதர்கள் மீது மதத்தின் பெயரால் கும்பலாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காந்தியாரைக் கொன்ற கோட்சேயை புகழ்ந்து தென்னாட்டுக் கோட்சே என்று எச்.இராஜாவிற்கு சுவரொட்டி அடிக்கப்படுகிறது. எது தேசதுரோகம் என்று தெரியாத நிலை உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரிகம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத் தொல்லியல் துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம் பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7...

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

கற்றலும் கற்பித்தலும் இனிமையான மகிழ்வூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும் என்று நாம் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுமே ‘தேர்வு’ என்ற ஒற்றைச் சொல்லால் முறியடிக்கப்பட்டு விடுகிறது –  பேராசிரியர் யஷ்பால் (யஷ்பால் குழு அறிக்கை, 1993 – முன்னுரை) ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. (தற்போது 3 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு எனக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்). இந்த அறிவிப்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உலகில் எங்குமே இல்லாத பேரிடரை நமது மண்ணில் செயற்கையாக உருவாக்கும் பின்விளைவைக் கொண்டது. பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எனும் ஒரே தேர்வை முன்பு ஆங்கிலேய அரசு வைத்திருந்தது. அதை முடித்தால் கல்லூரி (பி.யூ.சி.) போய்விடலாம். ‘கோத்தாரி கல்விக் குழு’ பி.யூ.சி.யை மேல்நிலை வகுப்பாக்கிப் பள்ளிக் கல்வியில் இணைத்தபோது பிளஸ் 2 தேர்வு உருவானது. இப்படியாக, பள்ளியில் இரண்டு பொதுத்...

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி)நேரலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக தனியார்அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் என அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அப்படியிருந்தும், அண்மையில் சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடி பங்கேற்றபட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தொடக்க நாள்,விஜயதசமி நிகழ்ச்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே. சிங் ஆகியோரும், கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந் தினராகவும் கலந்து...

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு  அவமானம்!

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு அவமானம்!

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டம் கருத்து உரிமையைப் பறிக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் வைகோ மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்தது. கலைஞர்கள், ஆய்வாளர்கள் என்று 49 பேர் பிரதமருக்கு, கும்பல் கொலையைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கடிதம் எழுதிய ஆளுமைகள் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால், பழமையான அந்தக் காலனிய சட்டத்தின் மீது மறுபடியும் வெளிச்சம் விழுந்திருக்கிறது. தேசத் துரோகச் சட்டமானது அரசியல், கலாச்சார ரீதியான எதிர்ப்பை ஒடுக்கு வதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நுழைக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கையை அல்லது வெறுப்பைப் பரப்புவதைக் குற்றமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தி, பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. வைகோவுக்கு எதிராக மட்டுமல்ல, சமீப காலம் வரை அது தொடர்ச்சியாகப் பலர் மீது...

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

குஜராத் மாநிலம் சபர்மதியில் 1917 முதல் இயங்கிவரும் காந்தி ஆசிரமத்தை, குஜராத் பாஜக அரசு கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இது ஆசிரமத்தை சீர்குலைக்கும் செயல் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், ஆசிரமம் அமைந்துள்ள 32 ஏக்கர் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சூறையாடும் திட்டமும் இதன் பின்னணியில் இருப்பதாக காந்தியவாதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடந்த 1917-ஆம் ஆண்டு, குஜராத்மாநிலம் சபர்மதியில் அமைக்கப்பட்டது,சபர்மதி ஆசிரமம் ஆகும். இது அன்றையகாலத்தில் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. மயானம் மற்றும் சிறைச்சாலைக்கு இடையிலான தரிசு நிலத்தில், அமைக்கப்பட்டிருந்த இந்த ஆசிரமத்தில், மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை வசித்து வந்தார். காந்தியின் படுகொலைக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில், ஒரு மேல்நிலைப்பள்ளி, தலித் பெண்கள் தங்கும் விடுதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. குஜராத் காந்தி கிராமத்யோக் சார்பில்கதர்த் துணிகள் உள்ளிட்ட பல்வேறுகைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன்,...

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...

ஓம் ‘ரபேல்’ நமஹ!

ஓம் ‘ரபேல்’ நமஹ!

பிரான்ஸ் துறைமுக நகரான போர்டோவில் பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் விஜயதசமி. முதல் ரபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் எப்படி பெற்றுக் கொண்டார்? விமான டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வைத்தாராம். இந்தி மொழியில் ‘ஓம்’ என்று விமானத்தில் எழுதி பூஜை செய்திருக்கிறார். “உள்ளே இருக்கிற 250 ‘ஸ்பேர்பார்ட்ஸ்’ல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம் பழத்திலேயடா, ஓடப் போவுது?” என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் கேட்பார். பிரான்ஸ் தேசத்தில் விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் இந்தக் காட்சியைப் பார்த்து திக்குமுக்காடியிருப்பார்கள். தேங்காய், பூ, எலுமிச்சை எல்லாம் ரபேல் போர் விமானத்தைவிட சக்தி வாய்ந்ததா? இது என்ன புதிய கதை என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். சரசுவதி பூஜையின்போது குழந்தைகள் பாட நூல்களை வைத்து பூஜை செய்யச் சொல்லுவார்கள்....

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 8.10.2019 அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் கீழ் நாஞ்சில் நாடு பகுதியிலுள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. குடந்தைப் பகுதியில் கழகத்தில் இணைந்த தோழர்கள் தரங்கம்பாடி நன்னிலம் பகுதி மற்றும் மயிலாடுதுறைத்  தோழர்கள் ஆதரவாளர்கள் 68 பேர் கலந்து கொண்டனர். பெரியார் யுவராஜ் கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் இளைய ராஜா பயிற்சி முகாம் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  தஞ்சை தோழர் பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் அணுகுமுறை பெரியார் இயக்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து  வகுப்புகள் எடுத்தனர். பயிற்சியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்கமாக பதில் அளித்தனர். மாலை 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்தது. மயிலாடுதுறை...

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக்கிடக்கிறார்கள் தொழிலாளர்கள். ‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’ மேற்கு...

நன்கொடை

நன்கொடை

கழகத் தோழர் பெரியார் யுவராஜ்-லீலாவதி, ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு மணவிழா மயிலாடுதுறையில் செப்.22 2019இல் நடந்தது. மண விழா மகிழ்வாக, மணமக்கள் கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.5000 நன் கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102019 இதழ்