Category: சிறப்பு கட்டுரை

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை  இராசேந்திரன்

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை இராசேந்திரன்

சென்ற இதழ் தொடர்ச்சி ¨           வள்ளலார் பிறந்த ஜாதியைக் கூறி இழிவு செய்தனர். ¨           சிதம்பரம் பேரம்பலத்தில் நடந்த கூட்டத்தில் காரசார மோதல். ¨           மான நட்ட வழக்கை அருட்பா-மருட்பா என்று தவறாக சித்தரித்தார் ம.பொ.சி. ¨           ‘வேதம்’ என்ற சொல்லையே எதிர்த்த வள்ளலார்.   நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களைக் கடுமையாக சாடும் திருமந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர் அவர், ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளி யிட்டார். அருட்பா மருட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை...

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

தமிழ்நாட்டில் பாஜக ஆட் சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத் துறையை ஒழிப்பது தான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணா மலை கூறியுள்ளார். இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பது என்ற பேச்சு, கோவில் சொத்துக்களை தனிநபர்கள் கொள்ளை யடிக்கவே உதவி செய்யும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து ஆன்மீகப் பேச்சாளரும் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான சுகி சிவம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார்.  சித்தப்பா பெண்ணை எப்படி கல்யாணம் முடிப்பது என்று ஒருவன் கேட்டால் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ, அவ்வளவு குழந் தைத்தனமானது பாஜக அண்ணா மலையின் பேச்சு. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்று அவர் கூறுவது கற் பனையின் உச்சம். பாண்டிச்சேரி கூட்டணி அரசில் யார் இருக்கிறார்கள்? அங்குள்ள திருநள்ளாறு கோவில் யார் கட்டுப் பாட்டில் உள்ளது? முதல்வர்...

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை  இராசேந்திரன்

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை இராசேந்திரன்

¨           கடைசி 10 ஆண்டுகளில் மதங்கள் அனைத்தை யும் வேண்டாம் என்றார். ¨           ‘திருவருட்பா’ என்று தனது தொகுப்புக்கு  பெயர் சூட்டியது வள்ளலார் இல்லை. ¨           வள்ளலாரின் அய்ந்து திருமுறைகளையும் வெளியிட ஆர்வம் காட்டிய பலரும் 6ஆம் திருமுறையை வெளியிட விருப்பம் காட்டவில்லை; சைவப் பற்றே காரணம். ¨           வள்ளலாரே தனது 6ஆம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்ற ம.பொ.சி.யின் கருத்து உண்மைக்கு மாறானது. ¨           தில்லை தீட்சதர்கள் அர்ச்சகர்களாக முடியாது; அவர்கள் சிவதீட்சைப் பெற்றவர்கள் அல்ல என்று கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர். சைவத்தில் பற்று வைத்து பிறகு சிந்தனை வளர்ச்சிப் போக்கில் சைவத்தின் மனித சமத்துவ எதிர்ப்புக் கருத்துக்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியதுதான் வள்ளலாரின் தனித்துவம். அவர் சுய மத மறுப்பாளர். சைவத்துடனேயே அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது. “நாம் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம்...

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி மலைக் கோயிலில் 17 ஆண்டு களுக்குப் பிறகு தமிழில் குடமுழுக்கு நடந்து முடிந்திருக்கிறது. சொல்லப் போனால் பழனி மலை கோயில் என்பது பார்ப்பன ரல்லாத பண்டாரங்களின் கட்டுப்பாட்டில் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கோயில் தான். மதுரையை திருமலை நாயக்கன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்த போது அவனது படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனி மலை கோயிலுக்கு வழிபடச் சென்றார். அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் வழிபாடு நடத்துவதைப் பார்த்து அவர் மனம் கொதித்துப் போனார். அவர்களிடம் இருந்து திருநீறை வாங்கிக் கொள்வதற்கு அவர் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கி இனி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று உத்தரவிட்டார். இப்படித்தான் வழக்கமாக ஆகம விதிப்படி பண்டாரங்கள் வழிபாடு நடத்தி வந்த கோயிலில், ஆகமங்களை மீறி பார்ப்பனர்கள் திணிக்கப்பட்டார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக...

‘பஞ்ச பூதங்கள்’ தான் உயிரை இயக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரானது

‘பஞ்ச பூதங்கள்’ தான் உயிரை இயக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரானது

மனித உடல் – நெருப்பு, காற்று, நீர், பூமி, வானம் எனும் பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைப்பால் உருவானது என்றும் உயிர் பிரிந்து மரணம் நிகழும்போது இந்த அய்ந்தும் தனித்தனியே பிரிந்து விடுகிறது என்றும் ஒரு கூற்று நம்பப்படுகிறது. நீண்டகால இந்த நம்பிக்கை அறிவியலுக்கு உடன்பட்டதா? இல்லை. பிரான்ஸ் நாட்டின் இரசாயனத்துறை ஆராய்ச்சியாளர் அன்டோனி லெவோய்சியர் (யவேடிiநே டுயஎடிளைநைச) நிரூபித்த அறிவியல் ஆய்வின்படி நெருப்பு எரிதல் என்பது ஒரு இரசாயன நிகழ்வு. காற்று என்பது வாயுக்களின் (ழுயளநள) கலவை. நீர் என்பது, அய்ட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டது. எனவே நெருப்பு, காற்று, நீர் தனி படிமங்கள் அல்ல. அதேபோல பூமியும், வானமும் தனியான படிமங்கள் (நடநஅநவேள) அல்ல. அறிவியல் கலைக் களஞ்சியம் ‘படிமம்’ என்றால் (நடநஅநவள) என்னவென்று விளக்குகிறது. ஒரே வகையான அளவைக் கொண்டதே படிமம். பிரபஞ்சத்தில் அடிப்படையே படிமங்கள் தான். அதை மேலும் எளிமையாகப் பிளக்க முடியாது. உலகில் 109 படிமங்கள்...

அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவது ஏன்?  ம.கி. எட்வின் பிரபாகரன்

அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவது ஏன்? ம.கி. எட்வின் பிரபாகரன்

ஆராய்ச்சியாளர்களில் 33.3% பெண்கள் இருக்கின்ற போதும், தேசிய அறிவியல் கூடங்களில் (NSAs) 12% பெண்கள் மட்டுமே உள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் 1:4 விகிதத்தில் தான் பெண்களும் ஆண்களும் உள்ளனர். ஒருங்கிணைந்த அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் & கணிதத் துறைகளிலும் (STEM) பெண்களின் எண்ணிக்கை குறைவே! யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, உலகளவில் STEM துறைகளில் 29.3% பெண்களே உள்ளனர். ஐ.நா. சபையின் பிப்ரவரி 2020 தகவல்களின்படி, (1901 – 2019) வரை நோபல் பரிசைப் பெற்றவர்கள் 900 பேர்; அவர்களில் வெறும் 53 பேர் மட்டுமே பெண்கள். STEM துறைகளில் கற்கும் மாணவர்களில் 35% பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் ஆண்களும் பெண்களும் சம பங்களிப்பை வழங்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று உலகத்தார் எவ்வளவோ முயன்று பார்த்த பின்பும் இன்னும் அந்த இலக்கை நாம் அடைய வில்லை. அறிவியல் துறையும் இதற்கு விதி விலக்கல்ல. விஞ்ஞானத் துறையில் பாலினச்...

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர் ரவிக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை, பழமொழி ஒன்றை கிராமத்தில் கூறுவார்கள், ஆற்றின் மீது கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போய் விட்டானாம் ஒருவன், அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு ஜனவரி ஏழாம் தேதி ஒப்புதல் அளித்து விட்டு சபைக்கு உரையாற்ற வருகின்ற போது அதில் அவருக்கு கசக்கின்ற வார்த்தைகளை உச்சரிக்கவே மறுத்து விட்டார். ஆளுநரின் செயலை தமிழக சட்டமன்றம் ஏற்காத நிலையில் அவரே வெளி நடப்பு செய்து விட்டார். அதுவும் ‘தேசிய கீதத்தை’ப் புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளார். அவருக்கு ஒவ்வாமையாக அமைந்து போன, அவர் வெறுக்கின்ற வார்த்தைகள் என்ன தெரியுமா? திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் இத்தனைக்கும் மேலாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், இவை அனைத்தும் உச்சரிப்பதற்கு அவர் வாய் மறுத்து விட்டது. உரையில் அடங்கியிருக்கிற இந்த சொற் றொடர்களை அவர்...

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி – தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர் களாகவும் ஏற்றிடும் நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். ஆரிய கலாச்சாரத்தினைப் பரப்பியவர் ‘எசமானர்’ நிலைப் பெற்றனர். வழிவழி வந்த உயர்ந்த பண்பாட்டில் நிலைப் பெற்றிருந்த தமிழர் – கற்பனையாக பிறவி இழி மக்கள் ஆக்கப்பட்டு மீளா அடிமைகளாயினர். அதனால் தான் பிறிதொரு இனத்துடன் வரலாற்றுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் – அதைத் தொடர்ந்து வளர்ந்திருக்க வேண்டிய இன உணர்வும்-மொழிப் பற்றும்- மங்கி, மறைந்து தேய்ந்து போயிருப்பதைக் காண்கிறோம். “வைதீக மத வழிபற்று” ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது. வருணாசிரம – மனுதர்ம நெறி தமிழர் களை ஒன்று பட முடியாத அளவுக்கு...

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல் நாட்டு மக்களும், சீனா, ஜப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் – தென்னாட்டுத் திராவிட மக்கள் – கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர். பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு, அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழன் சிறப்பு கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் ‘திருக்குறள்’...

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது. 22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர். தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர்....

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

போலி ஆதாரங்கள் மூலம் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பது அம்பல மாகிவிட்ட பிறகும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் சிறையில் அடைத்து வைப்பது எவ்வித நியாயமும் அற்றது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் திட்டமிட்டு ஹேக்கர் களால் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் திணிக்கப்பட்டது அமெரிக்க நிறு வனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகி யுள்ளது. 1818 ஜனவரி 1ஆம் தேதி மராட் டியத்தில் உள்ள பீமா கோரே கானில் பிரிட்டிசாருக்கும் பேஷ்வா பார்ப்பனர்களுக்கும் இடையே போர் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆதரவோடு பேஷ்வா பார்ப்பனர்களைக் கிழக்கிந்திய கம்பெனி வீழ்த்தி போரில் வெற்றி பெற்றது. போரில் உயிர் நீத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 49 பேரின் நினைவாக பீமா கோரே கானில் நினைவுத்தூண் அமைக்கப் பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதன் 200 ஆவது...

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன்  தமிழில் ர. பிரகாசு

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன் தமிழில் ர. பிரகாசு

ஜாதிய சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான அடிப்படையில் முதன்மையாகக் களையப்பட வேண்டியது ஜாதி அமைப்பு; பொருளாதாரம், அதற்கு துணை சேர்க்கும் காரணி தான் என்பதே பெரியாரியலின் அடிப்படை. ஜாதியைவிட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விட்டால் ஜாதியப் பாகுபாடுகள் பலவீனமாகி விடும் என்பது இடதுசாரிகளின் பார்வை. இப்போது சமூகக் கல்வி ரீதியான இடஒதுக்கீட்டில் முதன்மைக் காரணியாகக் கருதப்படும் ஜாதியைப் புறந்தள்ளி பொருளாதாரத்தை அளவுகோலாக மற்றும் முயற்சியே 10 சதவீத உயர்ஜாதி இடஒதுக்கீடு. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கே ஜாதி அடிப்படையாக இருக்கிறது என்பதை ஆய்வு ரீதியாக நிறுவுகிறார், முனைவர் கலையரசன் – இக்கட்டுரையில். நாட்டின் சொத்து ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பிரிவில் பகிர்ந்து கிடக்காமல், உயர்ஜாதி யினரிடம் அதிகமாகவும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினரிடம் குறைவாகவும் குவிந்திருப்பதைத் தரவுகளுடன் நிறுவுகிறார். ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ வாசகர்களுக்கு ஆழமான இந்தக் கட்டுரையைத் தமிழில் தருகிறோம். இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை பாழ்பட்டு விட்டது, நாட்டின்...

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

பெரியார் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கமே ஆர்.எஸ்.எஸ். உருவாகத் தூண்டியது ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லை என்பதும் அப்பட்டமான பொய். இந்து மகாசபையிலும் காங்கிரசிலும் இரட்டை உறுப்பினராக இருக்க காங்கிரஸ் தடை விதித்தது. கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகத்தை நாம் படித்தால், இந்துத்துவா பற்றிய பார்வை நமக்கு சரியானதாக மாறும். தமிழ்நாட்டில் ஒரு கதை கூறுவார்கள், கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு பெரிய யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டு இது ‘தூண் போல இருக்கிறது’, ‘இது முறம் போல் இருக்கிறது’ என்று கூறுவார்கள். அதே...

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை (2) பெரியாரின் சுயமரியாதையும் வள்ளலாரின் ஜீவகாருண்யமும் ‘மனிதத்தை’யே பேசின

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை (2) பெரியாரின் சுயமரியாதையும் வள்ளலாரின் ஜீவகாருண்யமும் ‘மனிதத்தை’யே பேசின

அருட்பெருஞ்ஜோதி பாடலோடு வள்ளலாரின் கட்டுரைகளை மறைத்து விடுகிறார்கள். அந்தக் கட்டுரைகளில் சமயத் தெய்வங் களையும், ஜாதி ஆச்சாரங்களையும் எதிர்த்தவர் வள்ளலார். சென்னை மாவட்டக் கழகம் சார்பாக,    ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். வள்ளலார் முதலில் பாசுரங்களைப் பாடி வந்தவராகவே இருந்திருக்கிறார். வள்ளலாருக்கு  தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் பக்தி மரபைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர். இவர்கள் ஏற்படுத்தியது, தமிழ் பக்தி மரபுகளில் மிக முக்கியமான மரபு. இந்த மரபில் தான் வள்ளலார் ஊறியிருந்தார்....

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தி ஃபெடரல்.காம் (புதிய தலைமுறையின் ஆங்கில இணைய பதிப்பு) ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களை வளைக்கவும், உயர்ஜாதி இந்துக்களின் ஆதரவைப் பெறவும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2 முக்கியத் தீர்ப்புகள் பயன்படும் என்றே சொல்லலாம். ஒன்று, 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு, மற்றொன்று தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்ஜாதி ஏழை களுக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு. அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவுகள் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கொண்டு வரப்பட்ட போது தென்னிந்தியாவைத் தாண்டி எதிர்ப்புகள் மிகச்சொற்பமே. உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர்களில் நீதிபதி ஜே.பி.பார்திவாலாவும் ஒருவர். இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தீர்ப்பு ஒன்றில் சம்மந்தமே...

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

சைவமோ, வைணவமோ மக்களுக்குப் பசியாற்ற வேண்டும் என்று கூறியதே இல்லை. கிறிஸ்தவம் மக்கள் சேவையையே தனது கொள்கை யாக்கியது. வள்ளலார் அமைப்புக்குள்ளேயே அவருக்கு எதிராக நாச வேலைகள் நடந்தன. சென்னை மாவட்டக் கழகம் சார்பாக,    ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். அதில் ஒரு பகுதி: “சைவம், வைணவம் முதலிய சமயங் களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்”. வள்ளலார், மதம், சமயம் என்று இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். மதம் என்பது, வடமொழி மரபு சார்ந்த,...

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88%  தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

“தமிழர்களின் நிலையை எடுத்துக்கூற ஒரு பத்திரிக்கை கூட இல்லையே” என்று பெரியார் 1925இல் குடிஅரசு இதழைத் தொடங்கினார். தொடர்ந்து ரிவோல்ட், பகுத்தறிவு, புரட்சி, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களையும் பெரியார் தொடங்கி சமூக இழிவுகளை எளிய மக்களிடம் கடத்தினார். இந்திய ஒன்றியத்தில், அச்சு, தொலைக் காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் (ஆங்கிலம், இந்தி) 88% உயர் பதவிகளில், உயர் ஜாதியினர் மட்டுமே பதவியில் உள்ளனர்.  புள்ளி விவரங்களுடன் கட்டுரை அதை விளக்குகிறது கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் (அதாவது அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்களின்) தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில்தான் இருக்கின்றன. 2021-2022ஆம் ஆண்டின் நிலை இது. 2018-2019ஆம் ஆண்டின் நிலையிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்பாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” என்ற தலைப்பில் ஏப்ரல்...

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

“வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்” என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் ஆற்றிய உரை. இந்து என்ற பெயரில் பிறர் மீது தலைமையும், புனிதம் கொண்டவனாகவும் தன்னை காண்பிப் பதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார் களல்லவா ? அதைத் தான் நாம் மறுக்கின்றோம். வள்ளலார், அந்த பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கு வதற்காகவும், அதுமட்டுமில்லாமல் இந்த மூடத்தனங்கள் நிறைந்துள்ள சடங்குகளை தவிர்த்து ஒரு தெய்வ நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். ஒளி வழிபாடு என்றால் அறிவு வழிபாடு என்று பொருள். ஒளி அறிவைக் குறிக்கும். ஒளி உள்ள இடத்தில் இருள் விலகும். அறிவூட்டுவது ஒளி. இதைத்தான் வள்ளலார் கொண்டு வந்தார். அக்கினி வழிபாடு அல்ல. அது பிராமணர்க்கு உரியது, அழிவுக்குரியது. ஒளி வழிபாடு, அறிவு வழிபாடு; வள்ளலார் காட்டிய வழிபாடு. அப்படியென்றால் இந்த சிலை, கோவில் அனைத்தையும் கடந்து அவர் வருகிறாரல்லவா...

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

பாரதம் (இந்தியா) ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவாக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, 29.10.2022 அன்று சன் நியூஸ் “கேள்விக் களம்” நிகழ்வில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன் வைத்த கருத்துகள். தமிழ்நாட்டின் ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக அரசியலை பேசுபவராகத்தான் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் தமிழ்நாட்டுக் கருத்தியலுக்கு எதிரான மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசி வருகிறார். ‘சனாதன தர்மம்’ என்பதை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிப்பவராகத் தான் ஆளுநர் இருக்கிறார். இப்போது அந்த உரையிலும் சனாதன தர்மத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது, ‘வேதங்களையும், ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படியாகக் கொண்டு அமைக்கப்பட்டது’ என்பதை ‘சனாதன தர்மா’ என்ற நூலே விளக்குகிறது. இது காசி பல்கலைக் கழகத்தில் எழுதப்பட்ட நூல். ஆளுநர் தற்போது...

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்த ‘குடிஅரசு’ வழக்கைத் திரும்பப் பெற்றது

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்த ‘குடிஅரசு’ வழக்கைத் திரும்பப் பெற்றது

கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ வழக்கு 15 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தற்போது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக 1925 முதல் 1949 வரை பெரியார் நடத்தி வந்த குடிஅரசு பத்திரிக்கையில் உள்ள மற்றும் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுக்களும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்றும்  தங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை என்றும், கொளத்தூர் மணி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுக்களையும் புத்தகமாக வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ்வாறு வெளியிட முயற்சித்ததற்காக ரூ. 15 இலட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று அன்றைய பெரியார் திராவிடர் கழகத்...

அமீத்ஷா குழுவின் இந்தித் திணிப்பு முயற்சிகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது

அமீத்ஷா குழுவின் இந்தித் திணிப்பு முயற்சிகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது

நாடாளுமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.டி.டி. ஆச்சாரி – அமித்ஷா குழுவின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது என்பதை விளக்கி ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (அக்.21) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள இந்தித் திணிப்பு பரிந்துரைகளுக்கான அறிக்கையில் ஒன்றிய ஆட்சியின் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் கேந்திரா வித்யாலயாக்களில் இந்தி மட்டுமே பயிற்சி மொழி என்று கூறி ஆங்கிலத்தை அகற்றுகிறது. அரசியல் சட்டப்படி மாநில அரசுகள் இதை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. ஏனைய நாடாளுமன்றக் குழுவுக்கும் ஆட்சி மொழிக் குழுவுக்கும் வேறுபாடு உண்டு. இந்தக் குழு ஆட்சி மொழிச் சட்டம் 1963 -4ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற குழு. ஆட்சி மொழியான இந்திப் பயன்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு. குடியரசுத் தலைவரிடம் நேரடியாகக் குழு...

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், அக்டோபர் 22, மாலை சென்னை அன்பகத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். முன்னதாக வைதீக எதிர்ப்புப் புரட்சிகரப் பாடல் களுடன் பாடகர் கோவன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சி அரங்கை சூடேற்றியது. “இந்த அரங்கில் தலைசிறந்த ஆளுமைகள், துடிப்பு மிக்க இளைஞர்கள், பெண்கள் என்று அரங்கத்தில் கூடியிருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை யும் எழுச்சியும் உருவாகிறது” என்று  கோவன் குறிப்பிட்டார். மு.வெ. சத்தியவேல் முருகனார் ‘ஆகமங்களும் அர்ச்சகர்களும்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் வீ. அரசு, ‘வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் கருணானந்தன், ‘வள்ளலார் வைதீக எதிர்ப்பு’ எனும் தலைப்பிலும், நிறைவாக கொளத்தூர் மணி, ‘வள்ளாருக்குப் பிறகு பார்ப்பனியம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சபையில் உருவ வழிபாட்டைத் தொடங்கி,...

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

மாணவர்களின் கற்றல் திறன் படைப்பாற்றலை வளர்த்து எடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை  ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரும் அழைக்கப்பட வேண்டும். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி “தி ரெட் பலூன்” என்ற  பிரெஞ்சு திரைப்படம்  அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட்டது. 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த மௌனப் படம்  ஆஸ்கார் விருது பெற்ற ஒன்று.  1956ஆம் ஆண்டு வெளியானது. சென்னை பெசன்ட்நகர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அழைப்பை ஏற்று  நான் (விடுதலை இராசேந்திரன்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். “பள்ளி மாணவன் ஒருவனிடம் பலூன் ஒன்று கிடைக்கிறது. நூல் கயிற்றுடன் கிடைக்கும் அந்த பலூன் மீது அவனுக்கு உணர்வு பூர்வமான ஒரு  ஈர்ப்பு  உருவாகிறது. எங்குச் சென்றாலும் பலூனின் நூலை உயர்த்திப் பிடித்தவாறே செல்கிறான். பல்வேறு தடைகளை  எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான். பள்ளிப்...

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொடூரமாக நசுக்கி வருகிறது பாசிச ஒன்றிய ஆட்சி. அதில் ஒருவர்தான் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா. 90ரூ உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலிகளால் தான் அவரால் நகர முடியும். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி மகராஷ்டிரா சிறையிலே 7 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. அவருக்கான பிணை கோரி வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மகராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பம்பாய் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அறிவித்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிற கருத்து தான் மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். “மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவுதான் உடல் ஊனமுற்று இருந்தாலும்,...

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இந்தி மொழியிலும், பிற மாநிலங்களில் உள்ளூர் மொழியான தாய்மொழியிலும் பயிற்றுவிக்க வேண்டும். இந்தி மொழியை ஐநா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க...

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

  வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத் தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டாh. வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் – முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு. வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . ‘கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன...

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் மற்ற டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப் போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும். ஜாதியப் பெருமை பேசி ஜாதியக் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘மனுவாதிகள்’ கருத்துகளை அறிவியல் ரீதியாக தகர்த்து எறிந்துள்ள மரபணு ஆய்வாளருக்கு இப்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது; அவரது பெயர் சுவாந்தே பாபோ. மருத்துவப் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் ஆய்வாளர் சுவாந்தே பாபோ-விற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உலகில் இனத்தூய்மை வாதத்திற்கு இடமில்லை, இனக்கலப்பு இல்லாத ஒரு மனித இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நிரூபித்ததற்காக சுவாந்தே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுள்தான் உலகைப் படைத்தார், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்தார், மரம், செடி, கொடிகளை படைத்தார் என்பது உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மதங்களும் கூறியிருக்கும் கட்டுக்கதைகள். ஆனால் பால்வெளியில் ஒரு...

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

  மொரார்ஜி – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கோட்சே தம்பி கோபால் கோட்சே – தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார். காந்தி ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு பாராட்டினார் என்பது அப்பட்டமான பொய். காந்தி நினைவிடத்தில் வழிகாட்டியை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வேலையை விட்டு நீக்கியது ஏன்?   கோட்சே வாக்குமூலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்ற, தான் அந்த அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளான். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு தான் கோட்சே என்பதற்கான ஆதாரங்களை கீழே தருகிறோம். காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு! மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை,  ‘ளுவடிசல டிக அல டகைந’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், காந்தியாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்’ என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே.குர்ரான் எழுதிய ‘ஆடைவையவே ழiனேரளைஅ in ஐனேயைn யீடிடவைiஉள’ என்ற நூலில்...

வானொலியில் ஆறுமுறைப் பேசிய பெரியார்

வானொலியில் ஆறுமுறைப் பேசிய பெரியார்

பெரியார் வானொலியில் பேசினாரா என்று கேட்டால், காந்தி கொல்லப்பட்ட போது நிலவிய கொந்தளிப்பான சூழலில் பேசிய அமைதிப் பேச்சைத்தான் பெரும் பாலானோர் குறிப்பிடுவர்; அநேகமாக அதுதான் பெரியாரின் முதல் ஒலிபரப்பு. காந்தி மறைந்த மறுநாள் (31.1.1948) திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அப்பேச்சு ஒலி பரப்பப்பட்டது. அது 1939இல் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியால் ஒலிப்பதிவு செய்யப் பட்டதாகும். சென்னையில் 1924 ஜூலை 31 அன்று முறையான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கியது. இந்த ஒலிபரப்பைப் பெரியார் கேட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாம் முறை சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அது சிறை வாசத்தின் 15ஆம் நாள். அறிவியல் முன்னேற்ற நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் அடியை எடுத்துவைத்த நேரத்தில், அவர் கேரளத்தில் சமூகச் சமத்துவ முயற்சியில் ஓர் அடியை முன்வைத்தார். பெரியாரின் ஒலிபரப்புகள் அகில இந்திய வானொலி...

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டு வதாக அமைந்துள்ளன. சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது. சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர் களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங் கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின்...

பயிலரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார் ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் வரலாறு

பயிலரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார் ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் வரலாறு

*           இஸ்லாமியர்களின் தேச பக்தியை பாராட்டிய சாவர்க்கார், பிற்காலத்தில் தான் வெறுப்பு அரசியலை கையிலெடுத்தார். *           காங்கிரஸ்  சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அந்த பந்தலை எரிப்பேன் என்றார் திலகர். *           முஸ்லீம் லீக் தொடங்கியதற்குப் பிறகும் ஜின்னா காங்கிரசிலேயே இருந்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, “யார் எதிரிகள்” என்ற தலைப்பில் 31.07.2022 அன்று சென்னை அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில், ஆர்.எஸ்.எஸ் முன்னோடி பார்ப்பனர்களான திலகர், சாவர்க்கர், விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பார்ப்பனிய சனாதன வரலாறுகளை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: “யார் எதிரி?” என்பது தான் நிகழ்வின் தலைப்பு என்றார்கள். யார் எதிரி என்று சரியாக தீர்மானிக்காத இயக்கங்கள் தான் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்கங்கள் உண்மையான எதிரிகளை அதாவது பகை முரண்களை விட்டு விட்டு நட்பு முரண்களை எதிர்ப்பதை தமிழ் தேசியத்தின் பெயரால்...

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

ஒன்றிய ஆட்சி  – ஆட்சி சட்டங்களை விதிகளை மனு தர்மத்துக்கு ஏற்ப முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டின் உளவுக் கருவியான ‘பெகாசஸ்’ – இந்தியாவில் முக்கிய புள்ளிகளை உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கியது நினைவிருக்கலாம். இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்கா விலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இந்தியாவிலிருந்து வெளி வரும் ‘ஒயர்’ இணைய இதழ் 2021 ஜூலையில் இதை அம்பலப்படுத்தின. 50000 உளவு பார்க்கும் தொலைபேசி  எண்களும் வெளியிடப்பட்டன. பாரீசிலிருந்து இயங்கும் தகவல் காப்பகம் – ‘ஃபர்பிடன் ஸ்டோர்ஸ்’ (Forbidden Stores) மற்றும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் இந்தத் தகவல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டின. இஸ்ரேல் நாட்டின் சக்தி வாய்ந்த இந்த உளவுக் கருவியை அரசுகள் மட்டுமே வாங்க முடியும் என்று இஸ்ரேல் சட்டம் கூறுகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது இஸ்ரேலுடன் இந்தக் கருவிகளைப் பெற 2 பில்லியன்...

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று தான் குறளில் குறப்பிட் டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல் லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன. முதலில் மதத்தில் இருந்து தமிழை பிரிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக வட மொழியில் இருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஒரு மொழி என்பது எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிற அளவிற்கு இருக்க வேண்டும். மிக கடினப்பட்டு படிக்கின்றவாறு இருக்கக் கூடாது. அப்படி எளிமையாக கற்றுக் கொள்ளு மாறு இருந்தால் தான் ஒரு மொழி மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சியடையும். ஆங்கிலத் தில் வெறும் 26 எழுத்துதான் ஆனால் உலக அளவில் வளர்ச்சி அடைந்து சென்று விட்டது. ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. 247 எழுத்து உள்ள தமிழில்...

முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’

முகலாயர்களை அண்டிப் பிழைத்த உயர்ஜாதி ‘பார்ப்பனியம்’

500 ஆண்டுகளுக்கும் மேலான முகலாயர் ஆட்சியில் இந்துக்களை அழித்தொழிப்பு செய்தார்கள் அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார்கள் என்பதுதான் இந்துத்துவ ஆராய்ச்சி யாளர்களின் முதன்மை குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் இந்துக்களே பெரும் பான்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதிப் படுத்துகிறது. இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியைத் திணித்துவரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகவும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள். இரண்டிலும் உள்ள உண்மை என்பது குறித்து “ஃபிரன்ட்லைன்” இதழில் சாம்சுல் இஸ்லாம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க முதல்பகுதி கடந்த வார இதழில் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாவது மற்றும் நிறைவுப்பகுதி இதோ…...

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு

நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் 1 சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புக்காக 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பங்கள் வந்த  நிலையில், அதில், 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமனத்திற்கான பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஒன்றிய பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில்  ஒப்புக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசுத்துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணி நியமனங்கள் குறித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார். வெறும் 0.33 சதவீதம் இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த...

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

நாடாளுமன்ற நிலைக் குழு அம்பலப்படுத்துகிறது எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று நாடாளு மன்றக்குழுவின் விசாரணையில் அம்பல மாகியுள்ளது. இதனால் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொடர்ந்து தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்கள்.  எஸ்.சி மற்றும் எஸ்.டி, நலனுக்கான நாடாளு மன்றக்குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி இருக்கிறார். எய்ம்ஸ்சில் இடஒதுக்கீடு பின்பற்றப்படு வது பற்றிய ஆய்வின் முடிவில் இந்தக் குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்திலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். “எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் தோல்வியடையச் செய்துள் ளார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் தீவிரமான முயற்சிகளை அந்த  மாணவர்கள் மேற் கொண்டும் பாகுபாடு காரணமாக தோல்வி யடைந்துள்ளனர். எழுத்துத் தேர் வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகும்  செய்முறைத் தேர்வுகளில்...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்

பா.ஜ.க.வும் சங்கிகளும் இந்து பண்பாடு ஒழுக்கம் சார்ந்து செயல்படுகின்றனரா? ஜாதிக் குழுக்களை கட்சிக்குள் இழுக்கும் சதி. முறியடிக்க நாம் எத்தகைய எதிர் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்?   மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: (சென்ற இதழ் தொடர்ச்சி) தமிழ் நாட்டில் தமிழ் தெரியாமலேயே தேர்வாணைய தேர்வுகளை எழுத அனுமதித் தார், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம். தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில்  தேர்ச்சி பெற்றால் போதும் என்ற அரசாணை பிறப்பிக்கச் செய்தார். தமிழ் தெரியாத பலர், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளைப் பிடித்து விட்டனர். ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக அவர் பதவியேற்றக் காலத்தில் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் அவருக்கு எதனால் ஏற்பட்டது...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை பார்ப்பனிய மதவெறியை எப்படி சந்திக்கப் போகிறோம்?

தடைகளைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். மீண்டும் வளர்ந்தது எப்படி? முதன்மையான எதிரியை அடையாளம் காண்பதில் தெளிவான புரிதல் வேண்டும். ஒன்றிய ஆட்சியை எதிர்ப்பதற்கு தி.மு.க.வைத் தவிர வேறு வலிமையான அரசியல் கட்சி இல்லை. மார்ச் 20, 2022 அன்று தமிழ்த் தேச நடுவம் சார்பில் ‘பாவலரேறு தமிழ்க் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்ய வேண்டும் – ஏன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் சுருக்கம்: தமிழ்த் தேச நடுவத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்க என்ற முழக்கத் துடன் தோழர் பொழிலன், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது பார்ப்பனியத் துக்கான கருத்தாக்கம். அமைப்பை தடை செய்தாலும் அதன் பாசிச பார்ப்பனிய கருத்தாக்கத்தை எதிர்ப்பு இயக்கங்கள் வழியாகவே தடுத்து நிறுத்த முடியும். ஏற்கனவே அவசர நிலை காலத்திலும், காந்தி கொலையின் போதும், பாபர் மசூதி இடிப்பின் போதும் தடை...

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும்  ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

‘கருவறைத் தீட்டை’ நியாயப்படுத்தும் ஆகம விதிகளுக்குத் தடை போட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை...

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2)  அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் (2) அரசியல் சட்டத்தில் மாநில சுயாட்சி இடம் பெறாமல் போனது ஏன்?

அரசியல் சட்டத்தை சுயாட்சி அடிப்படையில் உருவாக்க விரும்பி யவர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தங்களது நிலையை தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டத்தில் மாநிலங்கள் உரிமைகளைத் தடுத்தது வரலாற்றுப் பின்னணியை விளக்கி ஆ. ராசா நிகழ்த்திய உரை. கடந்த இதழ் தொடர்ச்சி. 1974இல் கலைஞர் முதலமைச்சர். மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு, இராஜபாளையத்தில் திமுக மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. திமுகவின் தலைவராக, ஆட்சியின் தலைவராக கலைஞர் அங்கே போகிறார். போகிற வழியில் அவருடைய படம், முஜிபூர் ரகுமானுடைய படம் இரண்டு படத்தையும் வைத்து வருக வருக என்று சுவரொட்டி, பதாகைகள் வைத்தார்கள். உடனே கம்யூனிஸ்ட் கட்சி உட்பட காங்கிரசும் கூறினார்கள், கலைஞர் பிரிவினைவாதியாக மாறி விட்டார். ஏன் அண்ணா படம் அங்கே இல்லை? ஏன் பெரியார் படம் அங்கே இல்லை ? ஏன் அங்கே முஜிபூர் இரகுமான் படம் ? ஏனென்றால் முஜிபுர் ரகுமான் தான் கிழக்கு பாகிஸ்தானை பிரித்தவர்....

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம்  மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்?  நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா விளக்கம் மாநில சுயாட்சியை ஏற்ற காங்கிரஸ், பிறகு சுதந்திர இந்தியாவில் கைவிட்டது ஏன்? நாமக்கல்லில் ஜூலை 3இல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நிகழ்த்திய உரை:

ஒரு நீண்ட தலைப்பை ஒரு குறுகிய நேரத்தில் உரையாற்ற வேண்டும் என்ற நெருக்கடியோடு உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன். ஒரு அரை நூற்றாண்டாக “மாநில சுயாட்சி”யைப் பேசுகின்ற ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்த வேண்டும் ? ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய நாட்டின் பிரதமர் வந்தார்.  அவரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி பேச முடியுமா? என்று கூறுகிற அளவிற்கு நம்முடைய தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்றைக்கு பேசினார். அதன் சுருக்கம் இதுதான். “பிரதமர் அவர்களே தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் உங்களுக்கு மொத்த வருமானத்தில் 10ரூ தருகிறோம். வரி என்று எடுத்துக் கொண்டால் 6.5ரூ. ஆனால் நீங்கள் எங்களுக்கு தருவதோ வெறும் 1.5ரூ தான். இது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. என்று அன்றைக்கு பிரதமர் முன் பேச திராணி உள்ள ஒரே முதலமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டு, ...

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பா.ஜ.க. வேட்பாளரை பா.ம.க. ஆதரிப்பது சமூக நீதியா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரௌபதி முர்மு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண். இது சமூக நீதியின் வெளிப்பாடு என்று சிலர் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நேர்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதற்கு முன் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டவரும் தலித் தான். ஆனால் அவர் குடியரசுத் தலைவராக இருந்து சமூக நீதியைக் காப்பாற்றினாரா? சொல்லப் போனால் கோவிலுக்குள் செல்லக்கூட அவரை சனாதானம் அனுமதிக்கவில்லை என்பது தான் சோகமான வரலாறு. இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ள கருத்து மிகச் சரியானது, ஆழமானது. இந்தியாவில் அரசியல் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் படுகொலைக்குள்ளாக் கப்பட்டு, மதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற நேரத்தில், இதை எதிர்த்து நான் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன், அந்த போராட்டத்தின் ஒரு...

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி (2) குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து – மு. செந்திலதிபன்

கோவை காரமடையில் தேசியக் கல்வியையும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்தி லதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகம் : சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத் திற்கு ஆதரவாக 139 வாக்குகள் பதிவாகின. எதிராக 137 வாக்குகள் எதிராக விழுந்தன. 2 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜாஜி அரசு தோல்வி அடைந்தது. எனவே ராஜாஜி அரசு பதவி விலக வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன. அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி...

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஜாதியே! – முனைவர் கலையரசன்

ஜாதியின் மூன்று தடைகள் பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்துக்கு மூன்று அம்சங்கள் தடையாக இருக்கின்றன. ஒன்று நில உரிமைகளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள்; இது உற்பத்தியையும் பாதிக்கிறது. இரண்டாவது உயர்கல்வியை வரலாற்று ரீதியாக ஒரு பிரிவினர் மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கிடைத்து விடாமல் மறுத்து வருதல்; மூன்றாவது நவீன தொழில் மற்றும் அறிவியல் துறைகளில் நிகழும் ஜாதியப் பாகுபாடு; இப்போது ‘உயர் ஜாதி’ அறிவுஜீவி வர்க்கம் தங்களுக்கான ‘உறவுத் தொடர்புகளை’ வலிமையாக்கிக் கொண்டு மேற்குறிப்பிட்டத் துறைகளை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கிறது. – ‘கலையரசன்-ஏ’ கட்டுரையிலிருந்து இந்தியாவில் பொருளாதாரம், வேலை வாய்ப்பு களில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்வதில், ஜாதி தடையாக நிற்கிறது என்பதை விளக்கி ‘கூhந னுசயஎனையைn ஆடினநட’ புத்தகத்தை எழுதிய முனைவர் கலையரசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 23, 2022) ஓர் ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதார...

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

அன்று குலக் கல்வி; இன்று தேசியக் கல்வி குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன? மு. செந்திலதிபன்

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை காங்கிரசுக்குள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், செங்கல்வராயன், பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஜி.டி. நாயுடு, ஜெ.சி. குமரப்பா எதிர்த்தனர். ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் ம.பொ.சி.யும் ஆதரித்தனர். கோவை காரமடையில் தேசியக் கல்வியை யும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை. இராஜகோபாலாச்சாரி – தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். 10 வயதில் தந்தை தொழிலை தானே கற்றுக் கொள்ள தள்ளப்படுவார்கள். அதற்கு அரசே குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். எப்போது? 10 வயதில் அப்பன் தொழிலை பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தையே புதிய கல்விக் கொள்கையில்...

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

முனைவர் ஜெயரஞ்சன் கேள்வி திராவிட மாடலை எதிர்ப்பவர்கள் ஆரிய மாடலை ஆதரிக்கிறோம் என்று கூறத் தயாரா?

இந்தியாவிலே மாநில அரசு குடிநீர் வாரியம் தொடங்கியது கலைஞர் ஆட்சியில் தன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வருமான இலக்கு இல்லாமல் அனைவருக்கும் ரேஷன் கார்டு திட்டங்களை அமுலாக்கியதும் தமிழ்நாடு தான் – என்றார் முனைவர் ஜெயரஞ்சன். திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி: அடுத்ததாக நீர்ப் பாசனத்தை எடுத்துக் கொண்டால், குடிநீராக இருக்கட்டும்; பாசனத் திற்கான நீராக இருக்கட்டும்; இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் தொடங்குகிறார். ஏனென்றால், அன்று குடிநீர் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருந்ததோ, ஆழ்குழாய் கிணறுகளின் மூலமாக டாங்குகளில் தண்ணீர் ஏற்றி, எல்லோருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்தார். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், எல்லா ஊர்களிலும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருக்காது. சில ஊர்களில்...

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக சனாதனப் பெருமைப் பேசுகிறார், ஆளுநர் ரவி!

மோடி அமைக்கத் துடிக்கும் இந்து ராஜ்யத்தின் தூதுவராக தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி, சனாதனப் பெருமையைப் பேசுவதோடு, இந்தியா இந்துக்களின் நாடு என்று அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் குலைத்து வருகிறார். ஆளுநர் பேச்சு அறிவியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. அவரது பேச்சுக்கு மறுப்பு: ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கியதே நமது தேசம் என்கிறார் ஆளுநர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பு இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. மன்னர்கள்தான் பேரரசுகளாக சிற்றரசுகளாக ஆட்சி செய்து வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் உருவாக்கியது ‘இந்தியா’. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களை விரட்டி இந்தியாவுடன் சேர்த்தார்கள். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. சுதந்திர இந்தியா தனக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது. அந்த சட்டப்படி பதவிக்கு வந்தவரே ஆளுநர். ரிஷிகளும், முனிவர்களும் எந்த தேசத்தை உருவாக்கினார்கள்? அவர்கள் உருவாக்கியதாகப் புராணங்களில் எழுதப்பட்டுள்ள கற்பனைகளை வரலாறுகளாக திரிக்கலாமா? இப்போது ஆளுநர்,...

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசர் திராவிட மாடலின் முன்னோடி

காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

விரிவான தகவல்களுடன் முனைவர் ஜெயரஞ்சன் உரை கிராமப்புற விவசாயிகளை நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்து மீட்க – கலைஞர் நிறைவேற்றிய சாதனை சட்டங்கள்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடக்க விழா 5.6.2022 அன்று கலைஞர் அரங்கில் நடந்ததது. திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பங்கேற்று ஆற்றிய உரை: 1967இல் ஆட்சிக்கு வந்த பிறகு நமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தது. சமூகநீதி இயக்கம் எதற்காகப் போராடியதோ, அதை எல்லாம் செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஆனால், அண்ணா முதலமைச்சராக இருந்தது ஒன்றரை ஆண்டுகள்தான். அவர் மறைந்த பிறகு, அந்த அரும்பணியும், அந்த அரிய வாய்ப்பும் டாக்டர் கலைஞரிடம் வந்து சேர்ந்தது. 1976 ஆம் ஆண்டுவரை அவர் செய்த காரியம் இருக்கிறதே, தமிழ்ச் சமுதாயத்தையும், தமிழ்ப் பொருளாதாரத்தையும், தமிழக அரசியல் செயல் படுகின்ற விதத்தை எந்த அளவிற்கு மாற்றியமைத் திருக்கின்றார் என்பதைப் பார்த்தால், வியப்பாக இருக்கும். தமிழகத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்பது ஜனநாயகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குப் பொருள் என்னவென்று சொன்னால், நிலம் என்பது ஒரு சிலரிடம் மட்டும்தான்...

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளே குடும்ப வன்முறைக்குத் தீர்வாகும் முனைவர் எஸ். ஆனந்தி

பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி மற்றும் அதிகாரப்படுத்துதலுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்தாலும்  குடும்ப வன்முறையில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணங்களை ஆராய்ந்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆனந்தி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 4) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கட்டுரை யின் சுருக்கமான கருத்தை தமிழில் தருகிறோம். குடும்ப வன்முறைக்கு  பட்டியலிட்டுள்ள காரணங்கள்: கட்டாயத் திருமணம் : கட்டாயத் திருமணத்துக்கு பெண்கள் உள்ளாக்கப் படுவது ஒரு காரணம். நவீன குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சரி கட்ட பெண்கள் உழைப்பு ஊதியமில்லாமல் கட்டாயத் திருமண முறையில் சுரண்டப்படு கிறது. 20 முதல் 22 சதவீத பெண்களே திருமணத்துக்குப் பிறகு ஊதியம் பெறும் வேலைக்குப் போகிறார்கள். 60 சதவீத படித்த பெண்கள் குடும்பத்தைக் கவனிக்க வேலைக்குப் போகாமல் ஆணாதிக்கமும் ஜாதிக் கட்டமைப்பும் கொண்ட குடும்ப அமைப்புக்குள் ஆண்களின்...