Category: சென்னை

ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் புகார் மனு சென்னை 23032016

வாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு ‘தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும் , அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது , வேலை கொடுக்க கூடாது , சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி நடு தெருவில் நிறுத்த வேண்டும்’ என்று பேசியுள்ள M.R.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார்,மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் தோழர் பிரகாசு,தோழர் செந்தில் FDL,தோழர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை சென்னை 16032016 – நிழற்படங்கள்

சென்னையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்.காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 16.03.2016.புதன் கிழமை,காலை 10 மணி அளவில் ,சென்னை மயிலாப்பூர்,ஐ.ஜி.அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,பரிமளா,அம்பேத்கர் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் ஜெயமணி, எம்.ஆர்,எஸ் தொழிலாளர் சங்கத்தின் தோழர் சேகர், மரணதண்டனை எதிர்ப்புக்குழுவின் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 45 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்கள். முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன்,...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.

மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நடைபாதை ஆக்ரமிப்பை எதிர்த்து மனு

தனியார் பள்ளிக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை மேயர் அலுவகத்தில் மனு ! நேற்று 08.03.2016 அன்று மயிலாப்பூரில் மாநகராட்சியே மேற்கொள்ளும் நடைபாதை ஆக்ரமிப்பிற்கு எதிராக திவிக சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் சென்னை கழக தோழர்கள் மேயர் அலுவலகம் சென்று அந்த பணியை நிறுத்தக்கோரி மனு தந்தனர். கழக தோழர் செந்தில் அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

கெயில் குழாய் பதிப்பின் ஆபத்து குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு !

20-2-2016 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கெயில் குழாய் பதிப்பின் ஆபத்தை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன் மற்றும் கெயில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட தோழர் பொன்னம்மாள் தோழர் வசந்தாமணி ஆகியோர் பங்குபெற்றனர்.

முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்

20.2.2016 அன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக முதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. • சென்னையில் குதிரைப் பந்தயம், முதலாளிகளுக்கு கோல்ப் விளையாட பல ஏக்கர் அரசு நிலம். • சென்னையில் ஏழை எளிய குடிசை மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் இல்லையா? • தமிழக அரசே! ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! • வாழ்வாதாரத்தை பறிக்காதே! கல்வி வேலை வாய்ப்பை முடக்காதே! • குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடு! • உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பிடத்தை அமைத்து கொடு! • பார்ப்பன பனியா கும்பலுக்கு வெண்ணை! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுண்ணாம்பா?” – என்று முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப் போராட்டத்தில்...

சென்னை காதல் தின கொண்டாட்டத்தில் மதவாத கும்பலுக்கு பதில் அடி கொடுத்த கருப்பு சட்டைகள்

காதல் தினத்திற்கு தோழர்களுடன் ஏதோ பல நிகழ்ச்சிகள்லாம் திட்டமிட்டோம் ஆனால் நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது இந்து மக்கள் கட்சி. மெரினா உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடி காதலர் தினத்திற்காக தயார் செய்த பேனரை புடித்து கொண்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டும் வாழ்த்து தெரிவித்தும் நடந்து சென்றோம். எதிரே தவ்ஹித் ஜமாத் யை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் துண்டறிக்கை கொடுக்க அவர்களுக்கும் இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்து தெரிவித்தோம். கொஞ்ச தூரம் சென்ற பிறகு தோழர் நாத்திகன் எங்களிடம் வந்து கண்ணகி சிலை அருகே இந்து மக்கள் கட்சி ஏதோ ஆர்ப்பாட்டம் பன்றாங்களாம் கண்டிப்பா அங்கே இருக்கும் காதலர்க்கு தொந்தரவு கொடுப்பார்கள் நம்ப அங்கே போயிடலாம் திராவிடர் விடுதலை கழக தோழர்களும் இருப்பாங்கனு சொன்ன வுடனே நாங்க அங்க போயிட்டோம். அங்கே ஏற்கனவே தோழர் உமாபதி தலைமையில் திவிக...

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தோழர் திலீபன் மகேந்திரனை தாக்கிய புளியந்தோப்பு காவல்துறையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் 13022016 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் ! – OBC இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்ப்ப்பட்டுள்ளது. இதை முழுமையாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி 13.2.2016 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்ட்த்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட(OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இடஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவன்ங்களில்லும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர் IAS அகாடமியின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சிவில் சர்வீல் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ்வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர் சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கினார். நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமது கண்டன உரையில் இடஒதுக்கீட்டை...

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!

‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் ! (சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்) ‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’ இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை. நேரம் : மாலை 6 மணி. தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சென்னையில்

Self Balancing Scooter Self Balancing Scooter Sale office 2010 key Windows 7 Genuine Product Keys windows 10 key sale windows 10 education Windows 10 Activation Product Keys office 2016 key windows 10 key office 2013 key windows 7 key Product key for window 7 ultimate 64 bit windows 10 home-key windows 10 update windows 7 installation office 2016 iso windows 10 install windows 7 service windows 7 iso Microsoft Office 2013 windows 7 SP1 iso  Windows 7 Ultimate Product Key 32bit and 64bit Genuine  |  Adobe Photoshop CS6 Crack And Keygen Full Download  |  How To Request a New Windows Product Key  |...

குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தை காரணம் காட்டி சென்னையில் குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலர் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை நேரம் காலை 10 மணி நாள் 30122015

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து அயராது பணி புரியும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் நேற்றும் உழைக்கும் சாதாரண ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணியாற்றினார்கள். நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : அடையாறு பாலம்,மலர் நகர், ஓட்டேரி சத்யா நகர், மயிலாப்பூர் ரூதூர் புரம்,நாடான் தோட்டம். மேலும் உணவு தயாரிப்பில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சென்னையில் வெள்ள மீட்ப்புப்பணியில் கழக தோழர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களுக்கு பணிகளை செய்து வருகிறார்கள்.நேற்றும் கழக தோழர்கள் உணவு,உடை குடிநீர்,பிஸ்கட்டுகள்,மருந்து பொருட்களை மக்களுக்கு வழங்கினார்கள்.நேற்று 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் கழக தோழர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இடங்கள் : அமிஞ்சிக்கரை,டி.பி.சத்திரம், துரைப்பாக்கம்,கண்ணகி நகர், மயிலாப்பூர்,கணேச புரம், மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நேற்று சென்னை நிவாரண பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் : சப்பாத்தி – 500, ஜாம் – 200 பாக்கெட், பிஸ்கட் 2 பாக்ஸ்,

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் சென்னை திவிக

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் ! சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்கள் எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அந்தவகையில் 06.12.2015 அன்று கழக தோழர்கள் பணி செய்த இடங்கள், சூளைமேடு நமச்சிவாயபுரம், சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம், திருவல்லிக்கேணி செல்லம்மாள் தோட்டம், எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை,காமராஜர் சாலை, குறுக்குப்பேட்டை சத்தியமூர்த்தி வாணி நகர். நேற்று நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட பொருட்கள், தோழர் ராசய்யா தமிழன் அவர்களிடமிருந்து, தண்ணீர் பாட்டல் – 1000 பிஸ்கட் – 500 கட்டுகள், போர்வை – 100, மருந்துப்பொருட்கள் – 100. ஈரோடு மாவட்டம், எண்ணெய் – 60 லிட்டர்

தொடர்ந்து களத்தில் வெள்ள நிவாரணப்பணிகளில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இடைவிடாது தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். 04.12.2015 கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 05.12.2015 1000 பேருக்கான உணவை தோழர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மேலும் பிஸ்கட்,பிரட்,குடிநீர்,உடைகள்,போர்வை,நேப்கின்கள்,மருந்துப்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகளாக பெறப்பட்டு தோழர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி தோழர்களால் மழை நிவாரண பணிக்காக அனுப்பப்பட்ட பொருட்களின் விவரங்கள் : தஞ்சாவூர் மாவட்டம் : அரிசி மூட்டை – 35, மைதா – 1 மூட்டை, நேப்கின் – 1000, பிரிட்டானியா – 6 பெட்டி, சன் பிளவர் ஆயில் – 1 கேன், மளிகை சாமான் – 1 மூட்டை, கரூர் மாவட்டம் : தமிழர் முண்ணனி அமைப்பினர் அனுப்பிய பொருட்கள், நைட்டி,லுங்கி,போர்வைகள் அடங்கிய பண்டல்கள்...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...

தோழர் அம்பிகா வாழ்க்கைத்துணை ஏற்பு விழா – சென்னை 18102015

சென்னை மாவட்ட தோழர் க .அம்பிகா, செ.வினோத்குமார் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா இன்று 18.10.15 ஞாயிறு காலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள். கழக வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி, பேராசிரியர் சரஸ்வதி , வழக்கறிஞர் சாரநாத் விசிக மற்றும் பலர் வாழ்த்தினர்.

பூணூல் அறுப்பு வழக்கு,தோழர்கள் பிணையில் விடுதலை !

சென்னை மயிலாப்பூர்,திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்பனர்களின் பூணூல்களை அறுத்தாக கூறி 20.04.2015 அன்று ராவணன்,கோபி என்கிற கோபிநாத்,திவாகர்,நந்த குமார்,பிரவீன், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று (08.10.2015) அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இன்று(09.10.2015) காலை தோழர்கள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை.அருண் ஆகியோர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.

”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” – அசத்தும் வீதி நாடகம் – நக்கீரன் இதழ்.

திராவிடர் விடுதலைக் கழகம் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பிரச்சார பயணம் குறித்து நக்கீரன் 07102015 இதழில். கழக பொதுச்செயலாளர்,சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,திராவிடர் கலைக்குழுவின் தோழர் ஜோதிபிரபு ஆகியோர் பேட்டியுடன்

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா மயிலை கழகம் சார்பாக 27.9.2015 அன்று காலை 10 மணியளவில் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 3ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஜெ. அன்பழகன் (சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க.) துவக்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து 28.92015 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பார்க் அருகே நடைபெற்றது. ஆ. சிவா தலைமை வகிக்க, ஆ. பார்த்திபன், சி. பிரவீன் முன்னிலையில் இரா. மாரி முத்து வரவேற்புரையாற்ற சம்பூகன் குழு வினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நா. நாத்திகன், ஆனந்தகுமார், கோவை இசைமதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினர். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

0

விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்

விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். “மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத்...

0

மதக் கலவரத்தைத் தூண்டும் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலம்

செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை அய்ஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலிருந்து பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலம் புறப்படும். தலைமை : ஈரோடு இரத்தினசாமி (கழகப் பொருளாளர்) முன்னிலை: தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்)   ‘விநாயகன்’ ஊர்வலத்தை ஏன் எதிர்க்கிறோம்? ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா? விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் – மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் – மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா? ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப...

0

சென்னையில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது! 0

‘விநாயகனை’ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தாதே! எதிர் ஊர்வலம்: தோழர்கள் கைது!

விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அப்போது முதலமைச்சராக...

நீதிபதிகள் நியமனத்தில்  சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம் 0

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியைப் பறிக்காதே கழக சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி...

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு 0

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து எழும்பூர் இக்சாவில் கூட்டம்

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம், சென்னை, சார்பாக எழும்பூர் இக்சாவில் 13.07.2015 அன்று மாலை 5 மணியளவில் அரங்க கூட்டம் நடைபெற்றது. பேரசிரியர் வீ.அரசு, தோழர் செல்வி, கவின் மலர், தோழர் தியாகு, கழகப் பொது செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவாக தோழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

0

இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜ்

”திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது”- கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. கோகுல்ராஜ் கொலை’கவுரவக் கொலை’ என்ற பெயரில் ‘ஜாதி ஆணவக் கொலைச் சம்பவங்கள்’ தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவாகும். 2013ம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர் திவ்யா என்கிற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்க்காக அவர்களை ஜாதிவெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பிரித்தனர்.கடைசியில் இளவரசனின் பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல்ராஜ் அதே கதிக்கு ஆளாகி உள்ளார்.உயர் ஜாதி என சொல்லிக் கொள்ளும் கவுண்டர் ஜாதிப்பெண்ணை காதலித்ததால் அவர் ஜாதிவெறியர்களால் கடந்த 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.24ம் தேதி தலை துண்டிக்கப்பட்டுல்ள நிலையில் பள்ளிபாளையம் கிழக்கு தொட்டி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒருமாணவியோடு சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.கடைசியாக...

0

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை தலைவரிடம் மனு! நாள் : 01.07.2015 புதன்கிழமை காலை 11 மணி. இடம் : காவல்துறை தலைமை அலுவலகம், காமராஜர் சாலை,மெரீனா கடற்கரை அருகில்,சென்னை.4 தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதீய வன்கொடுமை,ஜாதி வெறிப் படுகொலைகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினர் வாழும் மாவட்டங்களில் அதே ஜாதியை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும், நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நேர்மையாகவும்,விரைவாகவும் நடக்கும் பொருட்டு வழக்கை சி..பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.)அவர்களிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாளை 01.07.2015 அன்று காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு : 7299230363 தோழர் உமாபதி மாவட்ட செயலாளர்,சென்னை.

0

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. 15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார். ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...