மத விழாவின் பெயரால் நடைபெறும் அத்துமீறல்கள் … சென்னை திவிக மனு

விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல் நீரை அசுத்தப்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிபொருள் கலவையை கொண்டு தயார் செய்வது மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது . ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்பே தடைச்செய்ய வேண்டும் .

சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து சட்டப்படி குற்றமாகும் . பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை நீக்க வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.

செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கையை மனுவாக முன் வைக்கிறோம்.

இந்த கோரிக்கைகளை அந்தந்த துறையின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு,  24082016 (புதன்கிழமை ) காலை 11:00 மணியளவில் சென்னை மாநகர காவல்துறை கண்காணிப்பு ஆய்வாளரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட சார்பாக மனுவாக தரப்பட உள்ளது .

சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும்.

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்

You may also like...