பார்ப்பனிய பயங்கரவாத அமைப்புகளின் கதை – துரை
கலவரங்கள் படுகொலைகளுக்குப் பயிற்சி தரும் மதவெறிப் பள்ளிகள் மோடி ஆட்சியில் தங்குதடையின்றி செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எங்கேனும் குண்டு வெடிப்போ, மத கலவரமோ நடக்கும் போதெல்லாம் அவை தீவிரவாதச் செயல்கள் என்ற அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதில்லை. மாறாக எடுத்த எடுப்பிலே இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. குண்டு வெடிப்புகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது முழு உண்மை அல்ல. ஏனெனில் இந்தியாவில் நிகழும் பல்வேறு குண்டு வெடிப்பு, கலவரச் செயல்களில் பின்னணியில் இங்குள்ள சங்பரிவார அமைப்புகளின் பங்கு கணிசமான முறையில் உள்ளது என்பதே உண்மை. சற்றேறக்குறைய 600க்கும் அதிகமான அமைப்புகளாக, சமூகத்தின் பல்வேறு மட்டங் களிலும், கல்வி அமைப்புகளாக, கலாச்சார அமைப்புகளாக, ஆன்மிக அமைப்புகளாக இயங்கும் சங்பரிவாரங்கள் என்பவை இப்படியான வகுப்புவாதச் செயல்களை தொடர்ந்து நடத்தி வருவதில் இன்றளவும் முயன்று வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே...