Category: திவிக

பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை போராட்டம் ! சென்னை 07102016

தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு

அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – குமாரபாளையம் 06102016

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தலைமை தோழர் கொளத்தூர் மணி நாள் 06102016 நேரம் மாலை 5 மணி முதல் இடம் நகர பேருந்து நிலையம் அருகில், குமாரபாளையம்   தோழர் பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமா தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம் நடைபெறும் தொடர்புக்கு 9944333855

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.  

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்! 2500க்கும் மேற்பட்டோர் கைது ! இந்து முன்னணியை தடைசெய் ! தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது ! 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,...

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா !

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்குகிறார். பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டி பேசுகிறார்கள். மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது நாள் : 02.10.2016. நேரம் : மதியம் 2.30 மணி. இடம்: திருமண மண்டபம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா, சேலம் – 5

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் 01102016

விருதுநகரில், திராவிடர் விடுதலைக் கழகம் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 01.10.2016, மாலை 5 மணி இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில்,விருதுநகர் . சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் . தோழர் பூ.சந்திரபோஸ், தியாகி இம்மானுவேல் பேரவை. மந்திரமா? தந்திரமா? – தோழர் துரை.தாமோதரன். விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல்மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி,டார்வின்தாசன்,புதிய தமிழகம் மாநில மாணவரணி...

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

தமிழ் ஈழத்திற்கு புதிய அரசியல் சட்டம் தயாராகிறது

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் சார்பில் ‘ஈழம் தொடரும் துயரமும்; நமது கடமையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த செப்.25 மாலை 6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்புடன் நடந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் தமிழினியன், முகேஷ் தங்கவேலு ஆகியோரை அறிமுகம் செய்தும் பேராசிரியர் சரசுவதி அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன், தியாகு, அருட் தந்தை குழந்தைசாமி, பேராசிரியர் அபுல்பாசல், பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் உரையாற்ற, நிறைவாக பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார். அருட்தந்தை குழந்தைசாமி ஒரு மாத காலம் தமிழர் பகுதி முழுதும் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார். அவர் மக்களின் துயரங்களை சிங்கள ஆக்கிரமிப்பு களை பகிர்ந்து கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில், தமிழ் ஈழத்துக்கான புதிய அரசியலமைப்பு, சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவலைதோழர் தியாகு அறிவித்தார். நிறை வுரையாற்றிய முன்னாள் அமைச்சர்...

விழுப்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

செப்டம்பர் 17இல் விழுப்புரம் மாவட்டம் கழக சார்பில் காலை 9 மணியளவில் சங்கராபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். காலை 11 மணியளவில் செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளிடையே தோழர்கள் ராஜேஷ், க.இராமர் ஆகியோர் உரையாற்றினர். செஞ்சி நான்கு முனை சாலையில் பெரியார் படத்திற்கு செஞ்சி கழகப் பொறுப்பாளர் கோ. சாக்ரடீசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை நகரத்தில் கழகத் தோழர் வழக்கறிஞர் சத்தியராஜ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் சிந்தனைகள் கொண்ட பெரிய பேனர் வைத்தும் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னெடுத்தார். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...

தலைநகரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் முற்றுகை!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது என்று கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பை ஏற்கக் கூடாது என்று கருநாடக காங்கிரஸ் ஆட்சியை மிரட்டி கலவரத்தை நடத்தி வருவது கருநாடக பா.ஜ.க.த்தான். கருநாடக முதல்வர் சித்தராமய்யா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க தாம் தயாராக இருந்தாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.தான்’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மாநில பா.ஜ.க. தலைவரான எடியூரப்பா போன்றோர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கருநாடகஅரசு ஏற்கக் கூடாது என்று கன்னட வெறியோடு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை முற்றுகையிட்டு தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டத்தை செப்.20 அன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின. திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க., தமிழ்ப் புலிகள் இயக்கம், மே 17, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்ப் புலிகள்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மந்தைவெளி 26092016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவும் நான்காம் ஆண்டு கால் பந்து பரிசளிப்பு நிகழ்வு இன்று 26.09.2016 சென்னை மாவட்ட மயிலை பகுதி சார்பாக சிறப்புடன் நடைப்பெற்றது. இதில் “விரட்டு” கலை குழுவின் கலை நிகழச்சியாக, பறையிசை, ஒயிலாட்டம், வீதி நாடகம் என வரிசையாக மாலை 6 .00. மணியளவில் தொடங்கி இரவு 10.30 மணிவரை நடைபெற்ற நிகழ்வின் இடையில் கழக வழக்கறிஞர் துரை அருண், திருமூர்த்தி, கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றிய பின் பரிசினை வழங்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார் செய்தி குகநந்தன்

இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 30092016

கோவையில் திட்டமிட்டு பொதுமக்கள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை(30.09.2016) திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தோழமை இயக்கங்களை இணைத்து மாலை 3 மணிக்கு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவசியம் பங்கேற்கவும்.

ஈரோடு வடக்கு திவிக – பெரியார் பிறந்தநாள் விழா 20092016

தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு கோபி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.09.2016 அன்று இருசக்கர வாகன பேரணி மற்றும் கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது. பேரணி சிறுவலூர் எலந்தகாடு பகுதியில் இருந்து துவங்கி சிறுவலூர், கொளப்பலூர், வேட்டைக்காரன்கோவில், மொடச்சூர், தாசம்பாளையம், கோபி கடைவீதி வழியாக காலேஜ் பிரிவு, ல.கள்ளிப்பட்டியில் நிறைவடைந்த்து. பேரணி சென்ற வழியில் அமைந்து இருந்த கழக கொடி கம்பங்களில் கழக தோழர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்பும், துண்டறிக்கைகளும் வழங்கினார்கள். பேரணியில் முன்புறம் டிரம்ஸ் வண்டியும் நடுவில் முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தோழர்கள் கழக கொடியுடனும்,கடைசியாக நான்கு சக்கர வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. பேரணியில் அறுபதுக்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலையில் தோழர்களுக்கு தேனீர் ஏறபாட்டினை கொளப்பலூர் கிளை...

கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம் திருப்பூர் 25092016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம். நாள் : 25.09.2016. ஞாயிறு. நேரம் : காலை 8 மணி ஊர்வலம் தொடங்குமிடம்: இராயபுரம், திருப்பூர் பொதுக் கூட்டம் ! நேரம் : மாலை 6.00 மணி இடம்: வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . சிறப்புரை : தோழர் கோபி வேலுச்சாமி. தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்சி இடம் பெறும்.

சுயமரியாதை கால்பந்து கழகம் பரிசளிப்பு விழா சொன்னை 26092016

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி சார்பாக சுய மரியாதை கால்பந்து கழகம் நடத்தும் நான்காம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டி . நாள் : 25.09.2016 ஞாயிறு. நேரம் : காலை 7.30 மணி. இடம்: செயின்ட் மேரீஸ் சாலை, குருபுரம் விளையாட்டு திடல், அபிராமபுரம். சென்னை.18   வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம். நாள் : 26.09.2016 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி. இடம்: செயின்ட் மேரீஸ் பாலம்,விசாலட்சி தோட்டம்,மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்,மைலாப்பூர், சென்னை.18 . கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள்.

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா

பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.   கொளத்தூரில் :...

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதா 2016 யை எதிர்த்து திருநங்கையர்கள் சமிதி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி, விடுதலை சிறுத்தைக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் திருநங்கை தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம்: ஈழம்… தொடரும் துயரமும்; நமது கடமையும்!

நாள் 25-09-2016 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை. தலைமை: பேராசிரியர் சரசுவதி, கருத்தாளர்கள்: பேராசிரியர் மணிவண்ணன், அருட்தந்தை குழந்தைசாமி, விடுதலை இராசேந்திரன், தியாகு. சிறப்புரை: மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன். நன்றியுரை: த.தமிழினியன் நிகழ்ச்சித்தொகுப்பு: முகேஷ் தங்கவேல் நிகழ்ச்சி ஏற்பாடு: நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் தொடர்புக்கு: +91 9444145803, +91 9751524004 தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தமிழின எதிரி R.S.S. அலுவலகம் முற்றுகை சென்னை 20092016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய தமிழின எதிரி “ஆர்.எஸ்.எஸ்”சை கண்டித்து கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாள்கள், தோழர்கள் 500 பேர் கைது! இன்று 20.09.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் ன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தலைமை அலுவலகம் முற்றுகை. கைது செய்யப்பட்ட அரங்கில் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களின் எழுச்சியான புரட்சிகர கலை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன    

தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்  20092016 மாலை 4 மணி இடம்  பேராவூரணி அண்ணா சிலை அருகில்   தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253

தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிப்பு

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளான 17092016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட அமைப்பாளர் பால் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபாகரன், திலீபன், அறிவழகன், செ.செல்லதுரை, செ.பால்துரை, கோஆ குமார், இ.குமாரசிங் மற்றும் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரை வாழ்த்தியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக தூத்துக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

பெரியார் 138 பிறந்தநாள் விழா கோபி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி களின் சார்பாக பேரணி நடைபெற்றது.பேரணி கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக அய்யா சிலைக்கு வந்தடைந்த்து. அய்யா சிலைக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில. கலந்து கொண்ட அனைவரும் பெரியாரியல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் அய்யாவுடைய கருத்துக்களை  வலியுறுத்தி ஒவ்வொரு அமைப்பின் பொறுப்பாளர்களும் உரையாற்றிய பின் பொதுமக்கள் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் திக,திவிக, தபெதிக,திமுக, மதிமுக, நாம்தமிழர்,விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி,காந்தி மன்றம், தமிழ்வட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் செய்தி தோழர்நிவாசு மனோகரன்

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில்… நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில்… நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில்… நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர்...

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,நகரத் தலைவர் பிரகாசு,நகர செயலாளர் சரவணன்,நகர பொருளாளர் கோபி ,நகர இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் மற்றும் குப்புசாமி, சங்கர்,தம்பிதுரை, தங்கராஜ், வேணுகோபால்,பிரகாசு,பாலண்,சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

குமரி மாவட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் அறிவுலகத் தலைவர் தந்தை பெரியாரின் 138 வது பிறந்த நாள் விழா குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் தோழர். மஞ்சுகுமார் வரவேற்புரையாற்றினார்.செயலாளர்.தோழர்.தமிழ் மதி ’பெரியாரியல் பற்றி கருத்துரையாற்றினார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெ.தொ.க தலைவர்.நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.  

கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.” கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். நாள் : 18.09.2016 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: நல்லாயன் திருமண மண்டபம், டவுன் ஹால், கோவை.

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம். 17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி தலைமை : இரா.காளிதாசு மாவட்டசெயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். சேரன்குளம் சு.செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் …………………………………………………… சிறப்புரை ………………… தஞ்சை விடுதலைவேந்தன் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை கழக பேச்சாளர் திராவிடர் விடுதலைக் கழகம்… ………………………………………………………… திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

நுகும்பல் தோழர்கள் ஜானகி – இளையராஜா இணை ஏற்பு விழா காஞ்சி – 04092016

தமிழ்நாடு மாணவர் இயக்கத் ( CP ML மக்கள் விடுதலை மாணவர்  அமைப்பு ) தலைவர் தோழர் இளையராஜா திருமணம். விழுப்புரம் மாவட்டம், நுகும்பல், போரூரில் 4-9-2016 அன்று மாலை 7-00 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்திவைத்தார். தோழர்கள் மீ.தா.பாண்டியன், சி பி எம் எல் மக்கள் விடுதலைப்  பொதுச்செயலாளர் பாலன், திருநங்கை பானு, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எழுத்தாளர் பிரேமா ரேவதி, தமிழ்த்தேச குடியசு கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

சடங்குகளை மறுத்து பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் ஆணுக்கும் தாலி அணிவித்து சீர்திருத்த திருமணம்.. தோழர் நிரஞ்சன்குமார்

5-9-2016 அன்று காலை, சென்னை, பழையவண்ணாரப்பேட்டை, ஏழாயிரம் பண்ணை நாடார்கள் திருமண மண்டபத்தில் ஈழத்தின் புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனரும், பெரியாரியல் சிந்தனையாளரும் மக்கள் மன்றத்  தோழர் நிரஞ்சன் -தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினித்துறைப் பொறியாளர்  இராசலட்சுமி ஆகியோரின் ஜாதிமறுப்பு, தாலிமறுப்பு வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா இயக்குனர் களஞ்சியம் தலைமையில் சென்னையில் நடந்தேறியது. மணமக்கள் இருவரும் உறுதி மொழிக் கூறியும், இருவரும் ஒருவருக்கு மற்றவர் தங்க  சங்கிலியையும்,மாலையையும் அணிவித்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர். விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாக் கட்சித் தலைவர், மக்கள் மன்றம் மகேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் மன்றத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். புகைப்படங்கள் ணை

ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாள் 09092016 வெள்ளி மாலை 3 மணி இடம் சேப்பாக்கம் சென்னை தோழர் கொளத்தூர் மணி உரை தொடர்புக்கு 7200439952

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதந்திர கலந்துரையாடல் கூட்டம் 04092016 ஞாயிறு அன்று கோபியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவானி ஒன்றிய பொறுப்பாளர் வினோத் தலைமை ஏற்க மாநில வெளீயிட்டு செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாள் அன்று கோபியின் அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்துவது எனவும்,  செப்டம்பர் 20 ஆம் தேதி கோபி ஒன்றியம் முழுதும் இருசக்கர வாகன ஊர்வலம் மூலம் கழக கொடிகம்பங்களில் கொடி ஏற்றுவது எனவும், தொடர்ந்து மற்ற ஒன்றியங்களில் அச்சம் போக்கும் அறிவியல் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த  நம் கழக ஆதரவாளர் பரசுராம் அவர்களின் தந்தையார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கழக பொறுப்பாளர்கள், தமிழ் நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள்,...

விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர்  துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...