Author: admin

ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை

ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை

பொன் இராமச்சந்திரன் என்ற பெரியார் பற்றாளர், கழகத் தலைவருக்கு எழுதிய கடிதம் இது: பேரன்பிற்குரிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கழகத்தின் பகுத்தறிவுப் பரப்புரை பணிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன். பகுத்தறிவாளர்களின் கூட்டங்கள் அரங்கங்களின் அடைபட்டுப் போன அவலமான நிலையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டங்கள் வீதிகளில் நடப்பது போற்றத்தக்கது. மக்களிடம் பகுத்தறிவு  கருத்துக்கள் சென்றடைய வீதிக் கூட்டங்களே பயன்படும். நம்மவர்களின் ஊடகங்கள் – நாள், கிழமை, திங்களிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் – எல்லாம் வெட்கமில்லாமலும், வெட்கத்துடனும் பார்ப்பனர்களையும் மிஞ்சி மூடத்தனத்தைப் பரப்புகின்றன. காரணம், இனப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப் பற்றுகளைவிட பணப்பற்று மிகுந்து விட்டது. என்ன செய்வது? பெரும் பொருளும், மனவலிவும், துணிவும், சலியாத உழைப்பும் மிக்க இன்னொரு பெரியார் எப்போது வருவார் என மனம் ஏங்குகிறது. உங்களைப் போன்றவர்களின் மனத் துணிவும், இனமொழி நாட்டுப் பற்றும்,  பகுத்தறிவுப் பணியும் தான் நம் தமிழர்களைக்...

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்

ஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம்

கடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி களத் தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகின்றன. புலனாய்வு நிகழ்ச்சி களின் சாயலில், ‘நடந்தது என்ன’ என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமு தாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப் படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையா காது. மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் இப்போதைக்கு கொஞ்சமேனும் பேய், பிசாசு என்பனவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூடநம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள். இந்தத் தந்திரத்தைக் கையாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேய் எப்படி வந்தது, பிசாசு எப்படிச் சென்றது என கதையளந்து இவர் களாகவே காட்சிகளைச் சித்தரித்து மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பேய் பிசாசெல்லாம்...

இந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு!

இந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்த கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த 11 ஆண்டும் எந்த நொடியில்தூக்கு வரப்போகிறதோ என்று மரணத் துடிப்புடன் தான் அவர்கள் காலத்தைக் கடத்தியிருப்பார்கள். இதுவே பெரிய தண்டனை. இதற்குப் பிறகும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாமா என்று மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விக்கு உள்துறை அமைச்சகம், ஒரு விசித்திரமான பதிலை வழங்கியுள்ளது.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் கடந்த 6 ஆம் தேதி பதில் மனுவை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. 11 ஆண்டு காலம் கருணை மனுவை கிடப்பில் போட்டது கொடூரமான செயல்  அல்ல; மாறாக இவ்வளவு காலமும் அவர்கள் உயிர் காப்பாற்றப்படுகிறதே என்று நிம்மதியோடு கழித்திருப்பார்கள் என்கிறது உள்துறை அமைச்சகம். ஆக 11 ஆண்டுகாலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து, இவர்களை நிம்மதியாக வாழ விடலாம் என்ற நல்ல நோக்கத்தோடுதான்...

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல. 1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து...

முல்லைப் பெரியாறு: வரலாற்றுப் பின்னணி

முல்லைப் பெரியாறு: வரலாற்றுப் பின்னணி

முல்லைப் பெரியாறு அணையின் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி: முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆசியா கண்டத்திலேயே ஒரு நதியை – வேறொரு பக்கம் – விவசாய நிலங்களை நோக்கி திருப்புவதற்காக கட்டப்பட்ட முதல் அணை இது தான். தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில், சிவகிரி என்ற சிகரப் பகுதியில் தோன்றுகிறது பெரியாறு. வழியில், 6 சிறிய ஆறுகளை இணைத்துக் கொண்டு கேரளாவில் முன்னூறு கி.மீ. தூரம் ஓடி  கொச்சி அருகே அரபிக் கடலில் கலக்கிறது. கேரளாவில் மட்டும் 244 கி.மீ. தூரம் பயணிக்கிறது. கேரளாவின் மின் தேவைகளில் 74 சதவீதம் பெரியாறு நீரின் பயன்பாட்டிலிருந்தே பெறப்படு கிறது. சிவகிரியில் தோன்றும் பெரியாறு, 48 கி.மீ. தொலைவில் கடந்ததும் முல்லை என்ற இன்னொரு ஆற்றோடு இணைகிறது. மொத்தம் ஏழு நதிகளும் இணைந்து மழைக் காலங்களில் பெரும் வெள்ளத்தோடு அரபிக் கடலில் கலக்கிறது. இது குறித்து ஆய்வு செய்த...

இந்திய தேசியத்தின் முகமூடியைத் கிழித்து புதுவையில் நாள் முழுதும் பரப்புரை

இந்திய தேசியத்தின் முகமூடியைத் கிழித்து புதுவையில் நாள் முழுதும் பரப்புரை

கூடங்குளம் அணுஉலை: மின்சாரம் தயாரிக்கவா? அணுகுண்டு தயாரிக்கவா? அல்லது தமிழர்களைச் சாவு கொடுக்கவா? முல்லைப் பெரியாறு : மலை யாளிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! தமிழர்களின் முதன்மை எதிரியே இந்திய அரசு தான்! – எனும் கருத்துக்களை விளக்கிப் பரப்புரைப் பயணம் 22.12.2011 அன்று புதுச்சேரி மாநிலப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடை பெற்றது. பரப்புரைப் பயணம் காலை ஒன்பது மணியளவில் புதுவை அண்ணா சிலையருகே துவங்கியது. பரப்புரைப் பயணத்தின்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் திறந்தால் ஏற்படும் தீமைகளையும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சிக்கும் மலையாளி களின் அடாவடித்தனத்தைக் கண்டிக் காத உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வக்கற்ற இந்தியாவைக் கண்டித்து கருத்துரை வழங்கப் பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் ஈருருளியில் வந்து பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள் ஆவர். பரப்புரைப் பயணத்தின்போது முல்லைப் பெரியாறு உரிமையை மீட்டெடுத்தல்...

பார்ப்பனருக்கு தனி மின்சார சுடுகாடா? கோவையில் கழகம் களம் இறங்குகிறது

பார்ப்பனருக்கு தனி மின்சார சுடுகாடா? கோவையில் கழகம் களம் இறங்குகிறது

‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் தமிழகம் முழுதும் இனிப்புக் கடைகளை நடத்தி வரும் பார்ப்பன நிறுவனம், வணிகத்தோடு பார்ப்பனியத்தை பரப்புவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. கோவையில் இந்த பார்ப்பன நிறுவனம் ஒரு வாரம் முழுதும் “எப்போ வருவார்?” என்ற தலைப்பில் “கடவுள்” வருகையை முன் வைத்து மதப் பிரச்சாரர்களை அழைத்து பார்ப்பனியத்தைப் பரப்பி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் ‘எப்போதும் வர மாட்டார்’ என்ற தலைப்பில் கோவை பெரியார் திராவிடர் கழகம், ‘பகுத்தறிவு திருவிழா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 8.1.2012 அன்ற மாலை கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தலைமை தாங்கினார். ‘ஆண்டவன் அறிவியலைப் பரப்ப வர மாட்டார்’ என்ற தலைப்பில் சிற்பி ராசனும், ‘பெண்ணடிமையை ஒழிக்க வர மாட்டார்’ என்ற தலைப்பில் பேராசிரியர் டி. உருக்கு மணியும், ‘சாதி தீண்டாமையை ஒழிக்க முன் வரமாட்டார்’ என்ற...

குமரி மாவட்டத்தில் கழக செயல்பாடுகள்

குமரி மாவட்டத்தில் கழக செயல்பாடுகள்

பெரியாரின் 38 ஆவது நினைவு நாளை யொட்டி கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பில் நாகர்கோவில் ஒழுகின சேரியிலுள்ள பெரியார் உருவ சிலைக்கு வழக் கறிஞர் வே.சதா தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இந்நிகழ்வில் தோழர்கள் கோட்டாறு சூசை, சுரேஷ், விஜய், கணபதி, ஜெபகுமார், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், லால், பிரான்சிஸ், தலித் மக்கள் உரிமைகள் அறக்கட்டளை மாநில தலைவர் நீதி அரசர், வினீஸ் ஜெகன், பக்தசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 13.1.2012 அன்று கோட்டாரில் குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமைசெயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால் பிரபாகரன் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் வே.சதா, கோட்டார் சூசை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.சேவியர் மார்த்தாண்டம், நீதியரசர் பக்தசீலன், பிலிஸ்து, சூசையப்பா, விஜய், கணபதி சுரேஷ், சுபாஷ், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தலைவர் –...

வழக்கறிஞர்  துரைசாமி அம்பலப்படுத்துகிறார் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (1)

வழக்கறிஞர் துரைசாமி அம்பலப்படுத்துகிறார் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (1)

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடியவா பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப் பட்டதை, வெளியே கொண்டு வரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளி வரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது. கேள்வி : ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்காக, நீங்கள் வாதாடியவர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் உறுதி செய்யப்பட்டுஅனுபவித்து வரும்போது இவ்வளவு காலத்துக்குப் பிறகு ராஜீவ் கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சதித் திட்டம் இருப்பதாகவும், அந்த சதி அவர்களுக்குள்ளேயே உருவானது என்றும், நூல் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, என்ன ஆதாரம்? பதில் : ராஜீவ் கொலைக்கான சதி காங்கிரஸ் அணிக்குள்தான்...

சுப்ரமணிய சாமியின் துரோகக் குரல்

சுப்ரமணிய சாமியின் துரோகக் குரல்

சர்வதேச அரசியல் தரகரும், பச்சைப் பார்ப்பனிய வெறியாளருமான சுப்ரமணியசாமி, முல்லைப் பெரியாறு  பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை முன் வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு நீர் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் என்று அவர் பேசியதாக செய்திகள் வெளி வந்துள்ளன. ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ பேராசிரியராக இருந்த அவரை அண்மையில் அப்பல்கலை, அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டது. அவரது இந்துமத வெறி கருத்துகளே இதற்குக் காரணம். டெல்லியிலிருந்துவெளிவரும் ‘டி.என்.ஏ.’ என்ற ஆங்கில நாளேட்டில் சுப்ரமணிய சாமி கட்டுரை ஒன்றை எழுதினார். “இந்துக்கள் அல்லதவர்கள், தங்களது முன்னோர்களது பாரம்பர்யத்தை அங்கீகரித்து ஏற்க வேண்டும்; அவ்வாறு முன்னோர் பாரம்பர்ய மரபுகளை ஏற்காதவர்கள் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய 300 பள்ளிவாசல்களை இடிக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து எவரும் மதம் மாறக் கூடாது. ஆனால், பிற மதத்திலிருந்து இந்து மதத்துக்கு வருவோரை ஊக்குவிக்க வேண்டும்” என்றெல்லாம் அக்கட்டுரையில் தனது ஆர்.எஸ்.எஸ். வெறியை எழுதிக் காட்டினார்....

முல்லைப் பெரியாறு உரிமை: மலையாளிகள் ஆதிக்கத்தை விளக்கி கழக மாணவரணி பரப்புரைப் பயணம்

முல்லைப் பெரியாறு உரிமை: மலையாளிகள் ஆதிக்கத்தை விளக்கி கழக மாணவரணி பரப்புரைப் பயணம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு தமிழர் உரிமை பரப்புரைப் பயணம் நடைபெற்று வருகிறது. 2012 சனவரி 7 சனி மாலை 6 மணிக்கு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் தலைமை யில் பயணம் தொடங்கியது. கோவை மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு சிறப்புரை யாற்றினார். நடராஜ் மருத்துவமனை, கா.க.சாவடி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பரப்புரையில் ம.தி.மு.க. சார்பில் மணி, டில்லிபாபு, கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் பாலமுரளி, பிரதாப், நாகராசு, விக்னேசு, சிலம்பரசன், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சனவரி 8 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைப் பெரியாறு பற்றிய செய்திகளை மாணவர்கள் சிலம்பரசன், வெ. பிரபாக ரன் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதை யடுத்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் வெள்ள மடை நாகராசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி,...

முல்லைப் பெரியாறு: பார்ப்பனர்களின் துரோகக் குரல்

முல்லைப் பெரியாறு: பார்ப்பனர்களின் துரோகக் குரல்

தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ‘இந்து’ குழுமும் வழக்கம் போல தற்போது முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத் திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் “1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும், முல்லைப் பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக் கூடாது, அந்த தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத் துறையின் தலைமைச் செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப் போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில்அச்சுதானந்தன் நடத்திய...

போர்க் குற்றத்திலிருந்து  இராசபக்சேயை காப்பாற்ற இந்தியா நடத்தும் நாடகம்

போர்க் குற்றத்திலிருந்து இராசபக்சேயை காப்பாற்ற இந்தியா நடத்தும் நாடகம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று போர்க் குற்றவாளி ராஜபக்சேயுடன் பொங்கல் விழா கொண்டாடி, தமிழர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, திட்டங்களை அறிவித்துள்ளார். போரில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கி, ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைததுள்ளார். இனப்படுகொலையாளரான ராஜபக்சே மிகச் சிறந்த பண்பாளர் என்றும், தம்முடன் விருந்து உண்பதற்காகவே பல மணி நேரம் காத்திருந்ததாகவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். எஸ்.எம். கிருஷ்ணாவின் பயணத்தினால் தமிழர்கள்  பிரச்னை தீர்ந்து விட்டதாகவும், இனி தமிழக மீனவர்கள் படுகொலை நிறுத்தப்பட்டு விடும் என்றும் தமிழக காங்கிரசார் பேசத் தொடங்கி யுள்ளனர். ஆனால், அவர் பயணம் மேற்கொண்ட அடுத்த சில நாட்களிலேயே இராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எஸ்.எம். கிருஷ்ணாவைத் தொடர்ந்து இந்திய அதிகார மய்யத்தின் தூதராக செயல்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன? இத்தகைய நாடகங்களை அவசர அவசரமாக அரங்கேற்றுவதற்கான...

சேலம் மேற்கு மாவட்டத்தில் கழகம் எழுச்சி

சேலம் மேற்கு மாவட்டத்தில் கழகம் எழுச்சி

தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் கழக சார்பில் நடந்தன. மேட்டூர் : ஈழத் தமிழர் பிரச் சினை, முல்லைப் பெரியாறு, கூடங் குளம் அணுமின் நிலையம் ஆகிய பிரச்சினைகளில் தமிழர்களின் வாழ் வுரிமைகளை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசு, மற்றும் கேரள அரசைக் கண்டித்து மேட்டூரில் 11.12.2011 சனி மாலை 4 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட் டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட செயலாளர் சூரியகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப் பாளர்கள் நங்கவள்ளி அன்பு, டைகர் பாலன் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை யும், கேரள அரசையும் கண்டித்து கண்டன ஒலி முழக்கங்கள்...

அடையாறு அரங்கநாதன், ஆவடி மனோகரன் படத் திறப்பு

அடையாறு அரங்கநாதன், ஆவடி மனோகரன் படத் திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை சார்பில் பெரியார் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. 8.1.2012 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் மதுரை மருத்துவர் அ.சவுந்தரபாணடியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலவர் இல.மா.தமிழ்நாவன் வரவேற்புரையாற்றினார். தந்தைபெரியாரின் படத்தை குடந்தை வழக்கறிஞர் பாலகுரு, ஆவடி மனோகரன் படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ரா. சிகாமணியும், அடையாறு கோ. அரங்கநாதன் படத்தை புதுகை க. இராசேந்திரனும் திறந்து வைதது உரை நிகழ்த்தினர். பேராசிரியர் சரசுவதி இராசேந்திரன், ‘பெரியாரும்-பெண்ணுரிமையும்’ என்னும் தலைப்பில் அரிய ஆய்வுரை நிகழ்த்தினார். ஆவடி மனோகரன், குடும்பத்திற்கு மருத்துவர் அ. சவுந்தர பாண்டியன் வழங்கிய ரூ.5000, நிதியை அன்னாரது துணைவியாரும், மகனும் பெற்றுக்கொண்டனர். 1960களில் கூட்டுறவு முறையில் வெளிவந்த திராவிடர் கழக ஆதரவு ஏடான ‘சுயமரியாதை’ இதழின் ஆசிரியர் மா.அருள்முகம் (வயது 82) நன்றி கூறினார்.   பெரியார் முழக்கம் 02022012 இதழ்

வழக்கறிஞர்  துரைசாமி அம்பலப்படுத்துகிறார் சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் (2)

வழக்கறிஞர் துரைசாமி அம்பலப்படுத்துகிறார் சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் (2)

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடியவா பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப் பட்டதை, வெளியே கொண்டு வரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளி வரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது. கேள்வி : சிவராசன் போபால் நகரத்துக்குப் போனார் என்றும், ‘கூயழு’க்கு ரூ.1.71 கோடி தந்ததாக வும் உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன ‘கூயழு’? பதில்: எனக்கும் தெரியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிவராசன் நாட்குறிப்பில், 1991 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதியிட்ட நாளில் இவ்வாறு சிவராசனால் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் தர வேண்டியது ரூ.45,000 என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. (இந்த...

சேத்துப்பட்டில் செங்கொடி நினைவு கல்வெட்டு

சேத்துப்பட்டில் செங்கொடி நினைவு கல்வெட்டு

15.1.2012 ஞாயிறு மாலை சேத்துப் பட்டில் ஆ.வ.வேலு ஒருங்கிணைப்பில் கா.சி.வாசன் தலைமையில் சேத்துப்பட்டு பகுதி கழகத் தோழர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் கழக துணைத் தலைவர் ஆனூர் கோ. செகதீசன், சாகுல் அமீது (நாம் தமிழர் கட்சி), ஹாஜா கனி (தமுமுக), வழக்கறிஞர்கள் புகழேந்தி, வடிவாம்பாள், கயல் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் களின் கலை நிகழ்ச்சியும் தேனிசை செல்லப்பா இன எழுச்சி இசை நிகழ்வும் நடைபெற்றன. தோழர் செங்கொடி நினைவுக் கல்வெட்டினை தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்தார். வடசென்னை, தென் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். சேத்துப்பட்டு பகுதி கழகத்தின் சார்பாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ரூ.3000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022012 இதழ்

காகபுதூர் கிராமத்தில்  தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

காகபுதூர் கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

தமிழர் கலை இலக்கிய மன்றம் எனும் பெயரில் ஆண்டுதோறும் பொது மக்களை இணைத்துப் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர் காகபுதூர் கிளைக் கழகத் தோழர்கள். இந்தாண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற விழா ஊர் முழுவதும் களை கட்டியது. திருவள்ளுவர், மறைமலையடிகள், கர்னல் பென்னிக்குக், புரட்சிக் கவிஞர் ஆகியோரது படத் திறப்பு நிகழ்ச்சி, கூட்டுப் பொங்கல், சமர்ப்பா குமரனின் எழுச்சி இசை நிகழ்ச்சி, மாணவர் கருத்தரங்கு, பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், குடந்தை சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி, மாணவர்கள் கலை நிகழ்ச்சி, கருத்துப் பட்டறை, முல்லைப் பெரியாறு திரைப்படம் என மூன்று நாட்களும் விழாக் கோலம் பூண்டிருந்தது காகபுதூர் கிராமம். காணும் பொங்கலன்று நடைபெற்ற நிறைவு நாளன்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி கருத்துரையாற்றினார். மக்களை...

இந்தியாவில் நடப்பது – மதத்துக்கான அரசு!

இந்தியாவில் நடப்பது – மதத்துக்கான அரசு!

இஸ்லாம் மதத்தை விமர்சித்து நூல் எழுதியதற்காகவே சாலமன் ருஷ்டி, மதப் பயங்கரவாதிகளின் கோபத்துக்கு உள்ளானார். 20 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘சாத்தானின் வேதங்கள்’ என்ற நூலுக்கு முஸ்லீம் மதவாதிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்கவிருந்த அவர், விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டார். அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறை வழியாக ஒரு  பொய்க் கதையை உருவாக்கி தடுத்து விட்டார். உ.பி.யில் நடைபெறவிருக்கும் தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இப்படி ஒரு கபட நாடகத்தை காங்கிரசார் ஆடியிருப்பதாக ஊட கங்கள் குற்றம்சாட்டுகின்றன. மதங்களை விமர் சிக்கவே கூடாது என்ற மதவெறியை பகுத்தறி வாளர்களும், கருத்துரிமையை மதிப்போரும் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாக ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்த கட்டுரை ஒன்று இந்தியா – மதச்சார்பு நாடாக படிப்படியாக மாறி...

சாதனை மகளிருக்கு கழகம் பாராட்டு விருது

சாதனை மகளிருக்கு கழகம் பாராட்டு விருது

திருச்சி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மார்ச் 10ஆம் நாள் உலக மகளிர் நாளும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழாவும் திருச்சி ரவி மினி அரங்கில் சிறப்புடன் நடந்தன. டார்வின்தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார். விழாவில் வழக்கறிஞர் பானுமதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றி சாதனை மகளிருக்கு விருதுகளை வழங்கினர். விருது பெற்ற மகளிர் விவரம்: ச. பெட்ரிசியாமேரி – இவரது கணவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், மேரி துணிவுடன் முடிதிருத்தும் தொழிலில் தானே இறங்கினார். ஆண்கள் குழந்தைகளுக்கான முடிதிருத்தத்தை துணிவுடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடத்தி வருகிறார். க. இராஜேசுவரி : இரசாயனம் இல்லாத மூலிகைப் பொருள்கள் உற்பத்தி செய்யும்...

இனம் கூடி சேர்ந்து எழுக!

இனம் கூடி சேர்ந்து எழுக!

(மகுடம் இசை முழக்கத்தின் நிறைவு காட்சியாக கலைஞர்கள் வல்லிசையோடு குழுவினர் பாடிய எழுச்சிப் பாடல்) இடிகொண்ட மேகமாய் இசைதந்த வேகமாய்1 இனம்கூடி சேர்ந்து எழுக விடிகின்ற பொழுதுக்கு வென்றநம் வரலாற்றை விரிவாகச் சொல்லித் தருக! உயிருக்குள் ஒளியாகி உணர்வுக்குள் மொழியாகி உலகாள வந்த தமிழே! ஒருபோதும் அடங்காது ஒடுங்காது ஓயாது உன்னோடு நான்கொண்ட உறவே! (இடிகொண்ட) அன்பெங்கள் அறமாக அறிவெங்கள் வரமாக அகற்றுவோம் சாதி நோயை! ஆணுக்கு பெண்சமம் என்பதே நீதியாய் ஆக்குவோம் புதியபாதை! (இடிகொண்ட) எழில்கொண்ட வரலாறு இலக்குகள்  தெளிவோடு இலக்கண இலக்கியங்கள்! இழக்காமல் இன்றைக்கும் எம்மோடு வளர்கின்ற இசைக்கலை வாத்தியங்கள்! (இடிகொண்ட) அழியாத வாழ்வியல் அகத்திணை புறத்திணை அறம்கூறும் நல்ல நூல்கள்! அவ்வையும் கம்பனும் திருமூலர் வள்ளுவன் அடையாளம் தந்த பேர்கள்! (இடிகொண்ட) களம்கண்டு நின்றாலும் கரைதாண்டிச் சென்றாலும் கரையாத எங்கள் உணர்வு! கலையாக மொழியாக காற்றோடு இசையாக கலந்தேஎம் உயிர்வாழும் உறவு! (இடிகொண்ட) கோபங்கள் குறையாமல் கொடுத்ததை...

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன்...

மீனவர் படுகொலைக்கு இலங்கை  நாடாளுமன்றத்தில் கண்டனம்

மீனவர் படுகொலைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிஜ்ஜோ என்ற மீனவர்  உயிரிழந்ததோடு ஜெரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார். இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய  அதேநேரம் இலங்கையின்  அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்  மத்தியில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாகியுள்ளதோடு இலங்கை  நாடாளுமன்றத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இலங்கை  நாடாளுமன்றத்திலே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒரு நாட்டின் எல்லையை  தாண்டிய குற்றத்துக்காக ஒருவரை படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்தபோது மீனவர் கடற்படையால் சுடப்பட்டுள்ளார், சர்வதேச கடல் எல்லையை யார் தாண்டி வந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர சுட்டுத் தான் கொல்ல வேண்டும் என்பது பரிகாரம் அல்ல...

பொய் வழக்கிலிருந்து கழகத் தோழர்கள் விடுதலை !

பொய் வழக்கிலிருந்து கழகத் தோழர்கள் விடுதலை !

திருப்பூர் மாஸ்கோ நகர் பல்வேறு தரப்பட்ட உழைக்கும் மக்கள், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி மக்களை குற்றப்பரம்பரையினர் போல் பாவிக்கும் திருப்பூர் மாவட்ட காவல்துறை, நடவடிக்கை எனும் பெயரில் திடீரென சோதனைகள் செய்வது,பொய் வழக்குகள் போடுவது என தொடர்ச்சியாக பொது மக்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது. முதன்முறையாக காவல்துறை போட்ட பொய் வழக்கை நீதிமன்றத்தில் தகர்த்துள்ளது திராவிடர் விடுதலைக்கழகம். மாஸ்கோ நகர் பகுதியில் இருந்து கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஜாதிவெறி, மத வெறியர்களுக்கு எதிராக துணிச்சலுடன் களச் செயல்பாடுகளில் இயங்கிவந்த தோழர்கள் மாதவன், நாகராசு ஆகியோர் மீது 2015 ஆம் ஆண்டு காவல்துறை துணையுடன் மத, ஜாதி வெறியர்கள் பொய் வழக்கை பதிவு செய்தார்கள். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்டு  26 நாட்கள் சிறையில் அடைத் தார்கள். அப்போது இக் கைதைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு 05.03.2017...

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணம் திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு தலைமையில் நடை பெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதி செயலாளர் இரா.கோபிநாதன், கழகத் தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை இணை யர்கள் கழகத் தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த், மாநகர தலைவர் தனபால், அமைப்பாளர் முத்து, ஜெயா, நசீர், பாலு சந்தர் கணேசன்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெரியார் முழக்கம் 16032017 இதழ்

டெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்!

டெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்!

பா.ஜ.க.வின் ஆட்சி டெல்லியில் பல்கலை வளாகங்களில் பார்ப்பன ‘இந்துத்துவா’வை திணித்து வருகிறது. ‘இந்துத்துவா’வை ஏற்க மறுக்கும் மதச் சார்பின்மை சமூகநீதி கருத்துடைய மாணவர்களின் கருத்துரிமைகளை மறுத்து அவர்கள் மீது வன்முறை தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மதவெறி கொள்கைகளை எதிர்த்ததற்காக பழி வாங்கப்பட்ட ரோகித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்து, அப்சல்குரு முறைகேடாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அவரது நினைவு நாள் நிகழ்வை நடத்திய கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இப்போது அதே ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ‘பிஎச்.டி.’ ஆய்வு நடத்தும் சேலத்தைச் சார்ந்த தமிழ்நாட்டு மாணவர் முத்துகிருட்டிணன், பார்ப்பன இந்துத்துவ அடக்குமுறையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மடிந்துள்ளார்....

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும்...

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் கிளை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி கேஆர்  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் தலைமையேற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.தோழர் வேணுகோபால், தோழர் இராம .இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்ற,தலைமைக்கழக பேச்சாளர் தோழர் சாக்கோட்டை.மு.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.  அனைவருக்கும் தோழர் திலிபன் அவர்கள் நன்றி கூறினார்.தோழர்கள் அனைவருக்கும் கிளை கழகத்தின் சார்பில் இரவு அசைவ உணவு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. நிகழ்வில் மாநில, மாவட்ட கழகத்தோழர்கள் பெரும்பாலோனர் கலந்து கொண்டணர்.      பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பு இஸ்லாமிய மத வெறியர்களால்...

தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...

தோழர் ஃபாரூக் படுகொலை

இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது. மறைந்த பழனிபாபா அவர்கள்‘’நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மார்க்கத்தால் இசுலாமியன்’’ என பிரகடனப்படுத்தினார். சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் இந்து மத நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாத எம் உறவுகளுக்கும் எதிரான காவி மதவெறி பாசிசமே எமது முதன்மை எதிரி. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பன சனாதன வேத மதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மதம். பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் உழைத்தது சம உரிமையை மறுக்கும் வேதமதத்திற்கு எதிராகத் தான். தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார். பெரியாரின் நாத்திகத்தின் முதன்மை நோக்கம் “ஜாதி ஒழிப்பே”. பெரியார் அறிவியல் நோக்கில் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தவர் அல்லர்....

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்

தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.  

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?

பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய் மதவெறி மலத்திற்கு நீ மனிதம் பேசியதற்கா மரணம் பூசியிருக்கிறார்கள் மலம் தின்னிகள் … பாரூக் பெயருக்காக சிறையை தந்த மதமே கொள்கைக்காக மரணம் தந்ததும் நீயோ … நீ கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய் மனிதமற்ற மதங்களுக்கு புதிதில்லை மக்களின் கழுத்தறுப்பது … மதங்கள் அன்பை போதிக்கின்றன கைமாறாய் பாரூக் போன்ற மனிதங்களை தின்று … பாரூக் உன் குடும்பம் அழுகை நிறுத்தும் நேரம் காத்திருக்கிறோம் எங்கள் கையாலாகாத்தனத்தை சொல்லி அழ … இரா. செந்தில் குமார்

தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 17032017

17032017 மாலை, தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை தோழா் ஃபரூக் அவா்களை படுகொலை செய்த கொலைகாரர்களை உடனடியாக கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17. 03. 2017 வெள்ளி நேரம் : மாலை 4:00 மணிக்கு,, இடம்: சென்னை, அண்ணா சாலை, சிம்சன் பொியாா் சிலை அருகில். தலைமை : தோழர் உமாபதி, மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் . அனைத்து தோழா்களும் வரவும். திராவிடர் விடுதலைக் கழகம். சென்னை மாவட்டம் பேச:7299230363

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி நிகழ்வு சேலம் 16032017

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செய்லாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், நேற்று மாலை 6-30 மணிக்குடெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்களும் அவரது குழுவினருடன் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்துகிருட்டிணனன் உடல் இன்று ( 16-3-2017 )  காலை 6-00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட செய்லாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8-00 மணிக்கே மாணவர் முத்துகிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் தின விழா கோவை 19032017

தமிழ்நாடு அறிவியல் மன்றம் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மகளிர் தின விழா 📎கவியரங்கம் 📎ஆய்வரங்கம் 📎கலை நிகழ்ச்சிகள் 📎கருத்தரங்கம் சிறப்பரை- தோழர் கிரேஷ்பாணு தோழர் கொளத்தூர் மணி 19/03/2017 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்- அண்ணாமலை அரங்கம், இரயில் நிலையம் எதிரில் , சாந்தி திரையரங்கம் அருகில் .. கோவை. அனைவரும் வருக.

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு கழக தலைவர் நேரில் ஆறுதல் சேலம் 15032017

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு கழக தலைவர் நேரில் ஆறுதல் சேலம் 15032017

ஜாதியத்தால் (தற்)கொலைக்கு ஆளான சேலத்தை சார்ந்த டெல்லி ஜெ.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்தாரை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் 15032017 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 16032017 காலை 10 மணியளவில் மாணவரின் உடல் அடக்கம் செய்ய இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்கிறார். தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். செய்தி பரமேஷ்குமார்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் ஆதரவு !

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 04.03.2017 அன்று நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்து கழகத்தின் ஆதரவினை தெரிவித்து உரையாற்றினார். மேலும் நெடு வாசல் கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றையும், அருகில் அமைக்கப்பட்டுள்ள ரசாயணக்கழிவு தேக்க தொட்டியையும் பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழ் நாட்டின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொன்ன மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனும் வேறொரு பெயரில் வந்து இதே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மண்ணிற்கு அடியில் செய்யப்படும் நீர் விரிசல் முறை ஏற்படுத்தும் பாதிப்புகளை விவரித்து எந்த வடிவத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது...

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் ! கழகத் தலைவர் அவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று ஆற்றிய உரை.(காணொளி) ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள ராணி வாணி மஹாலில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் கெளசல்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை மக்கள் விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.

என்னை கொல்லாமல் இருப்பதற்குக் காரணம்…

என்னை கொல்லாமல் இருப்பதற்குக் காரணம்…

இன்றைய தினம் இந்த மதுரை மாநகருக்கு எனது கொள்கை பிரச்சாரத்திற்காக வந்த என்னை இந்த மதுரை மாநகராட்சி மன்றத்தார் அழைத்து வரவேற்பளித்து பெருமைப்படுத்தியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ மக்களுக்காகத் தொண்டு செய்கிறவர்களை ஊக்குவிக்கவும்,பாராட்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது சாதாரணமானதேயாகும். என்னைப் போலொத்த பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு மாறாக தொண்டாற்றுகின்ற எனக்கு வரவேற்பு கொடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. புரட்சிகரமான கருத்து என்று சொல்லும்படியான பல மாறுதல் கருத்தை சொல்லி வருகிறேன். இது போன்று பெரும்பாலான, மிகப் பெரும்பாலான மக்களின் கருத்துகளை சொல்கிறவர்களை அதன்படி நடக்கிறவர்களை மக்கள் எதிர்ப்பது மட்டுமல்ல, கொலை செய்யப்படுவது இயற்கை. ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான மக்களின் கருத்துக்கு, நடத்தைக்கு மாறாக இருந்து வருகிறேன் என்றாலும் இதுவரை என்னை யாரும் கொலை செய்யவில்லை என்பதோடு இந்த நகர மக்கள் எனக்கு வரவேற்பளிக்கிறார்கள் என்றால் மக்கள் அவ்வளவு பண்பாடு பெற்றிருக்கிறார்கள் என்பது தவிர இதனால் எனக்கொன்றும்...

பிலிப்பைன்ஸ் மாவோயிச விடுதலைப் போராளி பேட்டி ஈழத் தமிழர் இனப்படுகொலை குற்றங்களை – மனித உரிமை மீறல் எனும் சிமிழுக்குள் அடைத்து விடக் கூடாது

பிலிப்பைன்ஸ் மாவோயிச விடுதலைப் போராளி பேட்டி ஈழத் தமிழர் இனப்படுகொலை குற்றங்களை – மனித உரிமை மீறல் எனும் சிமிழுக்குள் அடைத்து விடக் கூடாது

ஈழத்தில் தமிழர்கள் தங்கள் இறை யாண்மைக்குப் போராடுவதற்கு முழு உரிமை படைத்தவர்கள். அது ஒன்றுதான் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கும் என்று பிலிப்பைன்சு நாட்டின் போராளியும், மார்க்சிய லெனினிய அறிஞருமான பேராசிரியர் ஜோஸ்பெரியா சிசன் கூறியுள்ளார். ‘தமிழ்நெட்’ இணையத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். 72 வயது மார்க்சிய-லெனினிய சிந்தனையாளரான சிசன், அமெரிக்க ஆதரவு பிலிப்பைன்ஸ் ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக போராடி வருகிறார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவார்த்தவாதிகளில் ஒருவரான இவர், அந்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர். மாவோயிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட அவரது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி 1968 இல் உருவானது. அடுத்த ஆண்டே ஒடுக்குமுறை பிலிப்பைன்ஸ் அரசுக்கு எதிராக ‘புதிய மக்கள் ராணுவம்’ என்ற ராணுவ அமைப்பை உருவாக்கினார். அந்த மக்கள் ராணுவம் பிலிப்பைன்சுக்கு எதிராக போராடி வருகிறது. இக்கட்சியின் முன்னணி அமைப்பாக பிற இடதுசாரி கட்சிகள், சர்ச் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘பிலிப்பைன்ஸ் தேசிய...

வடசென்னையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம்

வடசென்னையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம்

30.1.2012 அன்று வடசென்னை மாவட்ட கழக சார்பில் சென்னை அயன்புரம் பகுதியில் காந்தியார் படுகொலை செய்யப்பட்டது ஏன்? எதற்கு? எப்படி? என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அயன்புரம் பகுதி அமைப்பாளர் சி.மணிவண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் எ.கேசவன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் வி.ஜனார்த்தனன் வரவேற்புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி, மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் சு. குமார தேவன் ஆகி யோர் சிறப்புரை யாற்றினர். பரசு ராமன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகர்கள் அருள்தாஸ், நாத்திகன், கீர்த்தி ஆகி யோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். பெரியார் முழக்கம் 09022012 இதழ்

நம்பியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

நம்பியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரியும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயலும் கேரள அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கழகத்தின் நம்பியூர் ஒன்றியம் சார்பாக 1.1.2012 அன்று நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் செல்வக்குமார் தலைமையேற்க நம்பியூர் ஒன்றிய அமைப்பாளர் ரமேசு முன்னிலை வகித்தார். கழகத்தின் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் இரத்தினசாமி, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வெங்கட், n.த.மு.தி.க. நகர பொறுப்பாளர் அல்லாபிச்சை, எலத்தூர் பேரூர் கழக செயலாளர் கதிர்வேல், புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி இராமக்குட்டி, தலித் விடுதலைக்கட்சி மாவட்ட செயலாளர் முருகன் (எ) அப்துல்லா, உழவர் சிந்தனை பேரவை பரமேஸ்வரன் ஆகியோர் மத்திய காங்கிரசு அரசின் துரோகத்தையும் கேரள அரசின் விரோத போக்கினையும்...

பாரதிதாசன் பல்கலை பார்ப்பனியத்தைக் கண்டித்து  பிப்.10 இல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலை பார்ப்பனியத்தைக் கண்டித்து பிப்.10 இல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய துறையாக இயங்கி வரும் மகளிரியல் துறைக்கு பேராசிரியர் முனைவர் மணிமேகலை தலைவராக செயலாற்றி வருகிறார். இத் துறை மூலம் எண்ணற்ற மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு தரமான, முழுமையான தொழிற் பயிற்சிகளை வழங்கி வருகிறார். பயிற்சிகளோடு அவர்களை விட்டுவிடாமல் மகளிர் தொழில் முனைவோருக்கு அகில இந்திய அளவில் வணிக வாய்ப்புகளையும், சந்தைப்படுத்துதலையும் ஏற்படுத்திக் கொடுத்து பெண்கள் சுயமரியாதையாகவும், சுதந்திரமகவும் வாழ வழிவகை செய்து வருகிறார். தனது துறை சார்ந்த மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெரியாரியலைப் பரப்புவதில் அக்கறை செலுத்துகிறார். ஆய்வறிஞர் எஸ்.வி. இராஜதுரை இதே பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அதேபோல தமிழ்நாடு அரசு சார்பாகவே குடிஅரசு தொகுப்பு நூல்கள் வெளிவர தேவையான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த பெரியாரியலாளர் இராமர் இளங்கோ, பாரதிதாசன் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். எஸ்.வி. இராஜதுரை, இராமர் இளங்கோ, முனைவர் மணிமேகலை ஆகியோர்...

‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் உடுமலைப்பேட்டை 13032017

13032017 அன்று மாலை உடுமலைப்பேட்டையில் ‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் . கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்காக அண்ணல் அம்பேத்கர் பெரியார் செய்ததும்-  நாம் செய்ய வேண்டியதும்” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். நாள் : 13.03.2017 திங்கட் கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா திரையரங்கு பின்புறம், உடுமலைப்பேட்டை. ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணி திரள்வோம் வாரீர்! நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் வாசகர் வட்டம் . திருப்பூர் மாவட்டம்.

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

தமிழர்களை அழிப்பதையே ஒரே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் மார்ச் 14 காலை 10 மணி சென்னை   காவிரி நதி நீர் மறுப்பு பவானி, மேகதாது, பாலாறு தடுப்பணைகள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத் திணிப்பு தமிழக மீனவர்கள் படுகொலையில் கூட்டுச்சதி என்று தமிழர்களை அழிப்பதையே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் தமிழின விரோதி பாஜகவை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்