திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணம் திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு தலைமையில் நடை பெற்றது.

இத்திருமணத்திற்கு அதிமுக பகுதி செயலாளர் இரா.கோபிநாதன், கழகத் தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை இணை யர்கள் கழகத் தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

குட்டி பிரசாந்த், மாநகர தலைவர் தனபால், அமைப்பாளர் முத்து, ஜெயா, நசீர், பாலு சந்தர் கணேசன்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பெரியார் முழக்கம் 16032017 இதழ்

You may also like...