சேத்துப்பட்டில் செங்கொடி நினைவு கல்வெட்டு

15.1.2012 ஞாயிறு மாலை சேத்துப் பட்டில் ஆ.வ.வேலு ஒருங்கிணைப்பில் கா.சி.வாசன் தலைமையில் சேத்துப்பட்டு பகுதி கழகத் தோழர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் கழக துணைத் தலைவர் ஆனூர் கோ. செகதீசன், சாகுல் அமீது (நாம் தமிழர் கட்சி), ஹாஜா கனி (தமுமுக), வழக்கறிஞர்கள் புகழேந்தி, வடிவாம்பாள், கயல் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் களின் கலை நிகழ்ச்சியும் தேனிசை செல்லப்பா இன எழுச்சி இசை நிகழ்வும் நடைபெற்றன. தோழர் செங்கொடி நினைவுக் கல்வெட்டினை தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி திறந்து வைத்தார்.

வடசென்னை, தென் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். சேத்துப்பட்டு பகுதி கழகத்தின் சார்பாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ரூ.3000 நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 02022012 இதழ்

You may also like...