Category: பெரியார் முழக்கம்

தமிழகத்தில் புதிய பள்ளிக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் புதிய பள்ளிக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தமிழகத்தில் பள்ளிக்  கல்வித் துறைக்கான நிதியை ஒதுக் கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. அதில் புதிதாக பள்ளிகளை திறப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும், அனுமதி அளிக்காமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் 2019-20ஆம் ஆண்டிற் கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வாரிய கூட்டம் கடந்த மே மாதம் 16ஆம் தேதி  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்  தமிழகத்தின் சார்பில் பள்ளிக்  கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். அப்போது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை வழங்குவதற்கு 14417 என்ற கட்டணமில்லா எண்  செயல்படுத்தப் படுவது, கல்வித்  தகவல் மேலாண்மை மூலம் மாண வர்கள், பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, 2019-20ஆம் கல்வியாண்டில் ‘ஸ்மார்ட் கார்டு’ மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதை யும் எடுத்துரைத்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச்  சட்டத்தின் படி 33 சதவீத நடுநிலைப்  பள்ளிகளில் பாடத்திற்கான ஆசிரி யர்கள்...

விநாயகன் சிலை ஊர்வலங்களை காவல்துறையே நடத்துமாம்

விநாயகன் சிலை ஊர்வலங்களை காவல்துறையே நடத்துமாம்

தமிழ்நாட்டில் நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது என்பதை அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன. விநாயகன் சிலை ஊர்வலங்கள் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலங்களை நடத்தி வரும் இந்து அரசியல் அமைப்புகள் சட்டங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிரட்டல் ஊர்வலங்களாக விநாயகனைப் பயன்படுத்தி வந்தன. சட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறைக்கும் பெரும் சவாலாகவே இந்த அரசியல் ஊர்வலங்கள் மாறிய நிலையில் காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்தது. விநாயகன் சிலை ஊர்வலங்களின் சட்ட விரோத செயல்பாடுகளை முறைப்படுத்த சிலைகளை வைக்கும் ஒவ்வொருவரும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் மின்சாரத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடமிருந்து தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று...

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக்...

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும்  ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!

பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடை யாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி – குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி  மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர்...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே! தமிழ் நாட்டை வட நாடாக்காதே! நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம். எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு! பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது...

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

பார்ப்பனப் பேராசிரியரை கைது செய்: மதுரையில் காவல்துறையினரிடம் கழகம் மனு

மனிதர்களை நாயோடு ஒப்பிட்டு – மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உண்டு என்று அரசியலமைப்பு 14-க்கு எதிராக பேசிய  தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேங்கட கிருஷ்ணனை கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 3.8.2019 அன்று மாநகர  ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. உடன் தமிழ் புலிகள், மே 17, வனவேங்கைகள் பேரவை, அகில இந்திய மஜ்ஜித் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரையில் கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்

மதுரை திவிக சார்பில் காமராசர் பிறந்த நாளையொட்டி புதூர் பேருந்து நிலையத்தில் 9.8.19 அன்று மாலை “கல்வி உரிமை மீட்பு தெருமுனைக் கூட்டம்” மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முரளி (பி.யு.சி.எல்.), பேரறிவாளன் (பொதுச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி), கபீர்நகர் கார்த்தீ, (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), மெய்யப்பன் (மே 17), குமரன், (புரட்சிகர இளைஞர் முன்னணி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), ஆரோக்கிய மேரி, வழக்கறிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட தோழமை அமைப்பு தோழர்கள் சிறப்புரையாற்றினர்.  பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தானாக முன் வந்து நிதியளித்தனர். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்திற்கான புதிய வெளியீடுகள்

1)            பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2)            தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3)            பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4)            10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5)            ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். 6)            கருஞ்சட்டைக் கலைஞர் 7)            ‘வீர’ சாவர்க்கர் யார்?   பெரியார் முழக்கம் 15082019 இதழ்

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

நிர்மல்குமார் பிணையில் விடுதலை

மாட்டிறைச்சி குறித்து முகநூல் பதிவிட்டதற்காக இந்து முன்னணியினர் தந்த புகார் அடிப்படையில் கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் குமார், ஜூலை 27இல் செய்து செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கான உயர் பாதுகாப்புப் பிரிவு என்ற கொட்டடியில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டதோடு உணவு பெறும் நேரத்துக்கு மட்டும் வெளியே திறந்து விடப்பட்டார். பெரியார், அம்பேத்கர் நூல்களை உள்ளே படிப்பதற்குக் கொடுத்தபோது, ‘இது ஜாதித் தலைவர்கள் நூல்’ என்று சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆகஸ்டு 7ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிர்மல் கைதானவுடன் வழக்கறிஞர்கள் மலரவன், வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து சட்ட உதவிகளை செய்தனர். பி.யு.சி.எஸ். அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் பால முருகன் பிணை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டார். பெரியார் முழக்கம் 15082019 இதழ்

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

பெரியார் கருத்துகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் திருச்சி சிவா முழக்கம் ‘விதவை’ப் பெண்களைக் காக்க தனிச் சட்டம் கொண்டு வருக!

நாட்டில் “விதவைகள்” நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) தனி உறுப்பினர் தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நாளாகும். இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும். விதவைகள் நம் நாட்டில் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக,...

எஸ்.வி. சேகருக்கு ‘ஜு.வி.’ பதிலடி

எஸ்.வி. சேகருக்கு ‘ஜு.வி.’ பதிலடி

கேள்வி: ‘இடஒதுக்கீடு அடிப்படையில் 35 மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களை எப்படி 95 மதிப்பெண் எடுக்க வைப்பார்?’ என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளாரே? கழுகார் பதில் : இடஒதுக்கீடே இல்லாமல், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர்களில் எத்தனை பேர், மாணவர்களை 95 மதிப்பெண் எடுக்க வைக்கின்றனர்? பள்ளிக்கூடம் பக்கமே செல்லாமல் தேங்காய், மாங்காய் விற்கும் ஆசிரியர்களில், நூற்றுக்கு நூறு எடுத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்த ‘பொதுப் பிரிவினர்’ இல்லவே இல்லையா? தனியார் பள்ளிகள்தான் தரம் வாய்ந்தவை என்று போற்றப்படுகிறது. அத்தகைய பள்ளிகளில் பொதுப் பிரிவினரும் பணியாற்றுகிறார்கள். அந்தப் பள்ளிகளில் எல்லாம் நூற்றுக்கு நூறு வாங்கிக் கொண்டிருக்கிறார்களா? இடஒதுக்கீடு என்பதன் உண்மையை இன்னும் உணராதவர்கள்போல இங்கே பலரும் நடித்துக் கொண்டிருப்பது வேதனையே. இடஒதுக்கீடு ஒன்றும் பிச்சையல்ல… உரிமை. அதிகாரத்தைக் கையில் குவித்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தையே ஒடுக்கியும் நசுக்கியும் அடிமைகளாக வைத்திருந்தது....

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம்  திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர். சி. இலக்குவனார், கா....

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

நாத்திக சோதி குருவை, மாவட்ட தலைவர் ரூ. 20,000.00 வேல்முருகன், குருவை. ஒன்றிய செயலாளர் ரூ. 10,000.00 செல்வம், குருவை கிராம நிர்வாக அலுவலர் ரூ. 10,000.00 சரவணன், தரணி காட்டன் மில், காசிபாளையம் ரூ. 25,000.00 பழனிச்சாமி, மருந்தாளுநர், காசிபாளையம் ரூ. 25,000.00 இரா.காளியண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) ரூ. 25,000.00 மருத்துவர் நடராஜன், அசோக் கிருஷ்ணா மருத்துவமனை ரூ. 25,000.00 வேணுகோபால், மாவட்ட செயலாளர் ரூ. 25,000.00 வை. இராமன், குருவை ரூ. 25,000.00 குமார், கட்டிடப் பொறியாளர் ரூ. 25,000.00 கருப்புசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம், சத்தி ரூ. 25,000.00 பழனிச்சாமி, சித்தா மருந்தாளுநர் சத்தி ரூ. 25,000.00 பி.எல். சுந்தரம். முன்னாள் எம்.எல்.ஏ., சத்தி  ரூ. 23,000.00 இராமகிருஷ்ணன், தமிழன் ஸ்டிக்கர்ஸ், சத்தி ரூ. 22,500.00 பாலகிருஷ்ணன் குருசாமி நாயுடு சன்ஸ் ரூ. 22,500.00 இரவிக்குமார், வழக்குரைஞர் ரூ. 22,000.00 சத்தி முத்து தமிழ்நாடு...

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காமராசர் அரங்கில் ஆக. 12 அன்று திருக்குறள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஆரியத்துக்கு எதிரான தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று மாநாடு முரசறைந்தது. ‘தமிழர் மதம் குறள் மதம்; தமிழர் நெறி குறள் நெறி’ என்று பெரியார் முன் வைத்த பண்பாட்டு முழக்கத்தை முன்னெடுப்போம் என்று மாநாடு சூளுரைத்தது. மாநாடு காலை 9.30 மணியளவில் மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையோடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அருகே கூட்டமைப்பின் செயல்பாட் டாளர்கள் அறச்சுடரை ஏற்றினர். கோவை இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் பொழிலன், சோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், இரா. வினோத்குமார் உரையாற்றினர். முனைவர் இளங்குமரனார் மிகச் சிறப்பான தொடக்க உரையாற்றினார். பாவேந்தன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் – பெண்களும் ஆண்களும் பெரியார் சிந்தனைகளை முன் வைத்து உணர்ச்சிபூர்வமாகப்...

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

கழகக் கட்டமைப்பு நிதி (நயினார் பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்)

பா. சின்னமணி (பகுத்தறிவாளர்) ரூ.   2,000.00 க. மதியழகன்     ரூ.   2,000.00 க. இராமசாமி, செம்பாக்குறிச்சி  ரூ.   2,000.00 நாகராசன்   ரூ.   1,000.00 இராமச்சந்திரன், கீழ்க்குப்பம்     ரூ.   1,000.00 புலவர் கு. அண்டிரன்     ரூ.   500.00 கா. அசன்   ரூ.   500.00 ரமேசு (மளிகை)    ரூ.   500.00 அங்கமுத்து ஆசிரியர்    ரூ.   500.00 இரா. சரவணன்    ரூ.   500.00 சு. குழந்தைவேல்  ரூ.   500.00 தேனப்பன் (இரவி)  ரூ.   500.00 சி. நெடுஞ்செழியன் ரூ.   500.00 மைக்கேல் அலம்பளம்    ரூ.   250.00 தண்டபாணி ரூ.   100.00 கருங்குழி தோழர் வெற்றிவேல் வழியாக ந. வெற்றிவேல்    ரூ.   2,600.00 ந. அய்யம்பெருமாள்     ரூ.   2,500.00 சி. ஆசைத்தம்பி, கல்லக்குறிச்சி  ரூ.   2,000.00 மு. அல்லிமுத்து   ரூ.   1,000.00 த. செந்தில்குமார், நகைக்கடை   ரூ.   1,000.00 தகடூர் சம்பத் ரூ.   1,000.00 வி. திருமால் ரூ.   500.00 புலவர் சிலம்பூர்கிழான்   ரூ.   500.00 சி....

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக் கல்வி” என்கிற தலைப்புடன் மத்திய பாஜக வின் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் துண்டறிக்கைகள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டது. 29.07.2019 அன்று சென்னையில், இராணி மேரி, விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் மாணவர் கழகத் தோழர்கள் அருண், பிரவீன், தமிழ்தாசன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மாணவர் கழகத் தோழர்கள், ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கைகளை வழங்கினர். முதல் நாள் 30.07.2019 அன்று, மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பும், பேருந்து நிலையம் முன்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான 31.07.2019, நங்கவள்ளி பேருந்து நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும்...

காமராசர் பிறந்த நாள்:  மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

காமராசர் பிறந்த நாள்: மேட்டுபாளையத்தில் கழகம் ஒரு நாள் பரப்புரை

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த தெருமுனை கூட்டங்களின் நிறைவு நிகழ்வாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பரப்புரை இயக்கங்கள் நடைபெற்றது. 28 .07.2019 அன்று காலை எல்லம்மாள் தங்கும் விடுதி அருகில் நடந்த பரப்புரை நிகழ்விற்கு, மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமை ஏற்று நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோழர்கள் முகில் ராசு மற்றும் யாழ் வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்விற்கு அமுல்ராஜ் நன்றி கூறினார். மதியம்  மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வீட்டில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடந்த பரப்புரை கூட்டத்திற்கு  இராமசந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உரையாற்றினார்.  மடத்துக்குளம் மோகன், பொருளாளர் துரைசாமி மற்றும் யாழ் வெள்ளியங்கிரி சிறப்புரையாற்றினர்.  விஷ்ணுபிரசாத் நன்றியுரையாற்றினார். மாலை நிகழ்வில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த, சாலை...

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

இந்த காலத்தில லெ bசைவா-ன்றது எதையுமே சொல்லக் கூடாது மனுசன்ல எல்லாருமே சமம்னு ஒரு வார்த்த  சொல் லிட்டு போயிட்ரா. உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு கெடையாது. அப்டின்னு சொன்னா அதை ஒப்புக் கொள்ள முடியாது. சாஸ்திரம் அதை அங்கீகரிக்கவில்லை. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு உhயசயஉவநசளைவiஉள உண்டு. அப்டின்ரதை சாஸ்திரம், வேதம் சொல்லுகிறது. இதை நான் வெளிப்படையா சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டின்ரா! நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கோ, எனக்கு தெரியாது இது நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்த வெச்சிண்டு  ஒரு விசயத்த சொல்றேன்! நாம் உபயோகப்படுத்துகிற எல்லா பொருட்களிலும் பிறப்பு குணாதிசயத்தை (bசைவா உhயசயஉவநசளைவiஉள) நாம எதிர்பாக்ரோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், நம்முடைய மனிதனில் மட்டும் தான் எல்லாரும் சமம்னு வெளிய வாயால சொல்லிட்டு போயிட்ரோம். இப்ப நான் கேட்கிறேன்? எல்லாரும் சமம், ஒருவனுக்கு பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினாலே எல்லாரும் சமம்னு சொல்பவர்களிடம்...

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.அய்.ஏ.) வரம்பற்ற அதிகாரம் வழங்கி, சிறுபான்மையினர், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஜூலை 27, 2019 மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். “இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பார்ப்பன இந்துத்துவாவை எதிர்த்து களமாடும் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, மீ.த. பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் 08082019 இதழ்

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை மோடி ஆட்சி நீக்கி விட்டது. பார்ப்பன பண்டிட்டுகளுக்காக தனிமாநிலம் உருவாக்கி, காஷ்மீரை  இரண்டாகப் பிரித்து விட்டது. இந்தப் பின்னணியில் ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்து விட்டன.  இணைய மறுத்த அய்தராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லா மியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலைநீடித்தது. பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கெனவே...

ராஜாதாலே நினைவுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து, இந்து “புனித” நூல்களுக்கு தீயிட்ட போராளி

ராஜாதாலே நினைவுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து, இந்து “புனித” நூல்களுக்கு தீயிட்ட போராளி

  அம்பேத்கர் பூலே கருத்துகளை அடிப்படையாகக் கெண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘தலித் பேந்தர்’ (தலித் சிறுத்தைககள்) என்ற புரட்சிகர இளைஞர் இயக்கத்தைத்  தொடங்கியவர் களில் ஒருவரான ராஜாதாலே, கடந்த ஜூலை 16ஆம் தேதி தனது 78ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றை தமிழ்நாடு குடியரசு கட்சி, ஜூலை 30, 2019 அன்று சென்னை ‘இக்ஷா’ அரங்கில் நடத்தியது. தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “ராஜாதாலே, பெரியார் திடலில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் ராஜாதாலே மறைந்த அன்று, என்னுடன் தொடர்பு கொண்டு அவரது புரட்சிகர செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவில்...

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட  2,461 மாணவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள்  1,171 பேர்

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் 1,171 பேர்

கடந்த 2 ஆண்டுகளில் அய்அய்டி கல்வி நிறுவனங் களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி யுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது அய்அய்டி நிறுவ னங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியா வது பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களி லிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மாநிலங்களவையில் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாய் ரெட்டி அய்அய்டியில் மாண வர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் அய்அய்டியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 2,461 மாண வர்கள் தங்களின் படிப்பை பாதியில்...

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. “மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி  விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது அனைத்து இயக்கங்கள் கண்டனம்

மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும். அதன் பிறகு ஜாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும்...

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

நங்கவள்ளி கிருட்டிணன் இல்லத் திருமணவிழா

கழக செயல்பாட்டாளரும், சேலம் மாவட்ட அமைப்பாளருமான பொ.கிருட்டிணன்-கி.லலிதா இணையரின் மகள் கி.தமிழ்ச்செல்வி-ஏ.பிரபு ஆகியோரது இணையேற்பு விழா 13.07.2019 சனி பகல் 11 மணியளவில் வனவாசி ரங்கண்ணா திருமண மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பழ. ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மேச்சேரி தமிழரசன், நங்கவள்ளி அன்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவிற்கு கழகத் தோழர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 01082019 இதழ்

சோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்

சோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் ராஜகோபால், ஜூலை 18ஆம் தேதி இறந்தார். ஏழு வயதிலிருந்து உழைத்து உயர்ந்தவர் ராஜகோபால். ஆரம்ப காலத்தில் மெஸ் நடத்தியவர். ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகு, அவர்கள் பயன்படுத்திய இலைகளைப் பிரித்துப் பார்ப்பாராம். எந்த உணவு அய்ட்டத்தைச் சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்கள், எதை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பாராம். அதை வைத்து அடுத்த வேளைக்கான சாப்பாடு மெனுவை மாற்றியமைப்பார். இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தித்தான் ஓட்டல் தொழிலில் உச்சத்தை அடைந்தார் ராஜகோபால். ஓட்டல் தொழிலில் பார்ப்பனர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்த அவர் தொடங்கிய ‘சரவண பவன்’ ஓட்டல்கள் சென்னையில் பார்ப்பனர்கள் ஓட்டலுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. ‘சரவண பவன்’ அதன் கிளைகளை உலகம் முழுதும் கொண்டு சென்றது. பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாடு களில் ‘நாடார்...

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் – இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் – 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி – பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக்  கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள்...

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ...

அன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி!

அன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி!

ஆங்கில ‘இந்து’ ஏட்டின் ஞாயிறு மலரில் (ஜூலை 28, 2019) ருச்சின் ஜோஷி என்ற எழுத்தாளர், ‘ஜெர்மன் காட்டிய வழியில் இந்தியும் பயணிக்கிறதா’ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் ஜெர்மன் மொழி 1925லிருந்து 1945 வரை இனவெறி – இனப்படுகொலைகளோடு பிரிக்க முடியாத தொடர்புடைய மொழியாகவே உலக அளவில் கருதப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். “இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு ஜெர்மன் மொழி உலக அளவில் சிலகாலம் வெறுக்கப் பட்ட மொழியாகவே இருந்தது. தலைசிறந்த யூத எழுத்தாளர்கள், ஜெர்மானிய மொழியில் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தாலும்கூட 1925 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை கொடூரமான மக்கள் விரோத கருத்துகளான இனவெறி – இனப் படுகொலைகளை சுமந்து செல்லும் வாகனமாக ஜெர்மன் மொழி மாற்றப்பட்டதே, இந்த புறக் கணிப்புக்குக் காரணம். ஜெர்மன் கொடூரமான ஆபத்தான மனித வதை மொழியாகவே கருதப் பட்டது. அப்பாவி மக்களை இனப்படுகொலைக் குள்ளாக்கும் இராணுவ உத்தரவுகளுக்கான மொழியாக அது பார்க்கப்பட்டது....

75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது

75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன், கடந்த ஜூலை 24, 2019 அன்று ஆந்திர சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். ஆந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டம் இது. மாநிலத்தில் முதலீடு செய்வோருக்கு உதவக் கூடியதாகவும், நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகவும் இந்தச் சட்டம் இருக்கும் என்றும், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் எழுமானால் முதலீட்டாளர்களுடன் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். ஆந்திர மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஜி.ஜெயராமன், இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, இந்தச் சட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அரசு தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கும்  பொருந்தும் என்று கூறினார். வேலைக்கு உரிய தகுதியுடன் உள்ளூர் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி, சட்டத்திலிருந்து விதிவிலக்கு கேட்டால், அரசு தலையிட்டு இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை...

தகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது!

தகவல் அறியும் சட்டமும் நீர்த்துப் போகிறது!

மக்கள் உரிமைகளையும் மாநிலங்கள் உரிமைகளையும் பறித்து, ஒற்றை பாசிச ஆட்சியாக இந்தியாவை மாற்றி வரும் நடுவண் ஆட்சி – இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆட்சியாளர் ஊழல் – அதிகாரிகள் முறைகேடுகளை அம்பலப் படுத்துவதற்கு மக்களிடம் இருந்த வலிமையான ஆயுதத்தைப் பிடுங்கி விட்டது, நடுவண் ஆட்சி. தகவல் ஆணையர் என்ற பதவிக்கு தேர்தல் ஆணையத் தலைவர் பதவிக்கு நிகரான அரசியல் சட்ட உரிமை – ஊதியம் வழங்கப்பட்டு இருந்தது. மாநில தகவல் தரும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு நிகரான உரிமை – ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது மோடி ஆட்சி கொண்டு வந்த சட்டத்திருத்தம், இந்த சுயேட்சை அதிகாரத்தைப் பறித்து, இந்த ஆணையர்களுக்கான ஊதியத்தை அவ்வப்போது நடுவண் ஆட்சியே நிர்ணயிக்கும் என்று கூறுகிறது. ஏற்கனவே இருந்த சட்டப்படி தலைமை தகவல் ஆணையர் – மாநில தகவல் ஆணையர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில்...

ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி

ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சலகத்திலும் ‘அவாள்’ மோசடி

உயர்ஜாதி கட்ஆப் – 42; பட்டியல் பிரிவுக்கு 94.8 உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி ஆட்சி அமுல்படுத்திய பிறகு, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ எழுத்தர்  தேர்வுக்கு பார்ப்பனர் உயர்ஜாதியினர் 28.51 கட்ஆப் மதிப்பெண் எடுத்தாலே போதும் என்ற அதிர்ச்சியான தகவல் வெளி வந்தது. பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனப் பிரிவினரும் 61.25 ‘கட்ஆப்’ மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த சமூக அநீதியின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு பேரிடி செய்தி வெளி வந்திருக்கிறது. இது நடுவண் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சல் துறையில் கிளை அதிகாரிகள் என்ற பதவிகளுக்கான தேர்வு. தமிழ்நாட்டில் 4443 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் கேட்கப்பட்டு, 2019 ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளி வந்தது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி; ‘ப்ளஸ் டூ’ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனாலும் வழக்கமான குளறுபடிகள் அரங்கேறின. இணையதள வழியாக...

நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகம் கடிதம்

கொச்சி பார்ப்பன மாநாட்டில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். “அரசியல் சட்டத்தின்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்குவதாக உறுதியேற்று உயர் பொறுப்பிற்கு வந்துள்ள நீதிபதிகள் தங்களின் ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்கலாமா? அதுவும் பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள், உயர்வானவர்கள் என்று கூறி ஜாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே எதிரானது அல்லவா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. (கடிதத்தின் முழு விவரம் பின்னர்) பெரியார் முழக்கம் 01082019 இதழ்

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

‘பிராமணர்’ சங்க மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அக்ரஹாரங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வெறிப் பேச்சு

பா.ஜ.க. நடத்தும் ‘இராமராஜ்ய’ ஆட்சியில் பார்ப்பனர்கள் வெளிப்படை யாகவே வீதிக்கு வந்து ‘பிராமணர்களே’ உயர் பிறவிகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே ‘பிராமணர்கள்’ உயர் பிறவிகள் என்று பெருமைப் பேசி மார்தட்டக் கிளம்பி யிருக்கிறார்கள். கேரள மாநிலம் கொச்சி நகரில் ஜூலை 19 முதல் 21 வரை ‘தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு’ (Tamil Brahmins Global Meet) என்ற மாநாட்டை நடத்தி யுள்ளனர். ‘தமிழ் பிராமணர்கள்’ தமிழ்நாட்டில் இந்த மாநாட்டை நடத்தாமல் கேரளாவில் கொச்சியைத் தேர்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோரும், நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்ற பார்ப்பனரும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உலகம் முழுதும் உயர் பதவிகளைப் பெற்று சர்வதேச சக்திகளாக வலிமை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் டிரம்ப், அதிபரான பிறகு அந்த நாட்டில்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

வழக்கறிஞர் ஒ. சுந்தரம் வழியாக… வழக்கறிஞர் ஒ. சுந்தரம், சென்னை     ரூ. 5,000/- க. காளமேகம், சென்னை  ரூ. 5,000/- பழ. மணி, சென்னை      ரூ. 5,000/- வழக்கறிஞர் இரமேஷ், சென்னை ரூ. 3,000/- வழக்கறிஞர் துரை ரூ. 2,000/- ஞானம் இளங்கோவன், சென்னை ரூ. 2,000/- சுகவனம்    ரூ.  1,000/- ஆக மொத்தம்     ரூ. 23,000/- பெரியார் முழக்கம் 25072019 இதழ்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகள் சாக்ஷி மிஸ்ராவையும் (23). அவரது கணவரும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான அஜிதேஷ் குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார். “நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது” என்று உயர்நீதிமன்றத்தை நாடினர்.  உயர்நீதிமன்றத்தில் சாக்ஷி தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, அங்கிருந்த வழக்கறிஞர்களால், சாக்ஷியும், அவரது கணவர் அஜிதேஷூம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அதே நீதிமன்ற...

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

சித்தோடு கழகம் எடுத்த காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கல்வி வள்ளல் காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா கூட்டம் சித்தோடு நீலிக்கரட்டில் 17.07.2019 மாலை 6:30 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையிலும் புரட்சிகர இளைஞர் முன்னணி ரங்கசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தைப் பற்றி விளக்கி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சௌந்தர் உரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, காமராஜரின் கல்வி சாதனைகள் குறித்தும், பெரியாரும் காமராஜரும் இத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றியும் சிறப்புரையாற்றி னார். இறுதியாக அப்பகுதியைச் சார்ந்த வேல்மாறன் நன்றியுரை வழங்கினார். வந்திருந்த கழகத் தோழர்களுக்கு வேல்மாறன் மாட்டிறைச்சி உணவு வழங்கினார். பெரியார் முழக்கம் 25072019 இதழ்

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

இதுதான் பெரியார் மண்

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால்...

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி. சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார். இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம்...

அத்திவரதரின்  அடுத்த கதி….?

அத்திவரதரின் அடுத்த கதி….?

முதியோர், கர்ப்பிணிகள், உடல்நலிவுற் றோர்  மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ‘அத்தி வரதர் தரிசனத்துக்கு வரவேண்டாம்’ என்று தமிழக  அரசின் காஞ்சி மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அரசு செலவில் விளம்பரம் செய்திருக்கிறது. “அத்திவரதரை தரிசனம் செய்து விட்டதாலேயே உங்களைக் காப்பாற்றி விடமாட்டார். அவருக்கு சக்தி இருக்கிறது என்றெல்லாம் நம்பி வராதீர்கள்” என்ற வாசகங்களையும் விளம்பரத்தில் சேர்த்து அறிவித்திருந்தால் பொது மக்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும். பரவாயில்லை. எதற்கு வீண் வம்பு? பக்தர்களே, புரிந்து கொண்டால் சரி. இதுவரை கூட்ட நெரிசல்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆபத்துக்கு உதவிட அவசர மருத்துவ சிகிச்சை, ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. என்னுடைய சக்தியை இப்படி எல்லாம் கேலி செய்வதா என்று கோபத்தில் அத்திவரதர் எழுந்து ஓடிப்போய் குளத்தில் மீண்டும் விழுந்து விடப் போகிறாரா என்ன? அப்படியே ஓடினாலும் காவல்துறை விட்டு விடுமா? சரி; அத்திவரதர் இதுவரை...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

பா.ஜ.க. ஆட்சியில் சர்வம் சமஸ்கிருத மயமே!

பா.ஜ.க. ஆட்சியில் சர்வம் சமஸ்கிருத மயமே!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து திட்டங்களுக்குமே முழுக்க முழுக்க சமஸ்கிருத பெயர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. முக்கிய திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம், இந்தி என இரண்டிலும் பெயர் வைக்கப்படவில்லை. சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் அறிக்கையின் தலைப்பு : சங்கல்ப் பாரத், செசாகத் பாரத் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏற்கெனவே இருந்த புதிய திட்டங்களின் பெயர்கள் : பிரதான் மந்திரி கிசான் சம்மான் கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆவாஜ் யோஜனா, சடக் நிர்மார் யோஜனா, பிரதான் மந்திரி ஆஷா யோஜனா, பிரதான் மந்திரி கிரிஷி கின்சாயி யோஜனா, உதாமஷில் உத்தர்பூர்வ யோஜனா, பாரத் மாலா பரியோஜனா, பிரதான் மந்திரி ஷேரெம்யோகி மந்தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, ஸ்வாஸ்த் சுரக்ஷh யோசுனா, சம்மான் நிதி யோஜனா பெரியார் முழக்கம் 25072019 இதழ்

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

காமராசர் சாதனைகள் – பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர் திருப்பூரில் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயண எழுச்சி

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர். கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் – கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

ஈரோடு மாவட்டம் (தெற்கு) ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் ரூ. 25,000/- ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு   ரூ. 20,000/- வேணுமெஸ், மேட்டூர்    ரூ. 20,000/- தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்     ரூ. 15,000/- பவானிடெக்ஸ் பெரியார் தொழிற்சங்க உறுப்பினர்கள்     ரூ. 15,000/- காசிபாளையம் வேலுச்சாமி வழியாக  ரூ. 15,000/- டாக்டர் சக்திவேல் (சக்தி மருத்துவமனை)    ரூ. 10,000/- டாக்டர் சுதாகரன் (சுதா மருத்துவமனை)     ரூ. 10,000/- மா. சீனிவாசன் (தமிழ்நாடு பேக்கர்ஸ்) ரூ. 10,000/- பெரியசாமி, குன்னத்தூர்  ரூ. 10,000/- கொடிவேரி ஜெயக்குமார்  ரூ. 10,000/- பெரியார் முழக்கம் 18072019 இதழ்

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே! 14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்  படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது. பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு...

கோவையில் கழகம் நடத்திய  கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார். பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார். பெரியார் முழக்கம் 18072019 இதழ்

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

டாக்டர் அறிவுக்கரசி நன்கொடை

மேட்டூர் மார்டின்-விஜயலட்சுமி மகள் அறிவுக்கரசி, ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு டெல்லிக்கு தேர்வெழுத செல்லும்போது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.2,000/- நன்கொடை அளித்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 18072019 இதழ்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, தில்லிப் பல்கலைக்கழகம் மிகவும் அவசரகதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், தில்லிப் பல்கலைக் கழக நிர்வாகமானது, தற்போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டியுள்ளார். தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியி லிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கும் வரை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக...