Category: பெரியார் முழக்கம்

ட 170 கி.மீ மேல் பயணம்   ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா  ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு  மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

ட 170 கி.மீ மேல் பயணம் ட 45 க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா ட பெண் தோழர்கள் திரளாக பங்கேற்பு மேட்டூர் பகுதியைக் குலுக்கிய வாகனப் பேரணி

தந்தை பெரியார்  144ஆவது பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 17.09.2022 சனி காலை 10.00 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ் தலைமையில் தொடங்கியது. மேட்டூர் அருகே உள்ள கோனூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு பெண் தோழர்கள் மாலை அணிவிக்க கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேன்மொழி உறுதிமொழி கூற அனைத்து தோழர்களும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாலை அணிவிப்பு நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அர்த்தனாரீஸ்வன் (எ) சின்னு, பி.என்.பட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மேன் பொன்னுசாமி மற்றும் தி.மு.க.வைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். மாலை அணிவிக்கும் நிகழ்வில் சுசீந்திரன் – கிளாரா மேரியின் பெண் குழந்தைக்கு ஆதினி என்ற பெயர் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி மல்லிகுந்தம் பகுதிக்கு புறப்பட்டது.  மல்லிகுந்தம் பகுதியில்...

நன்கொடை

நன்கொடை

கழகத் தலைமை அலுவலகத்துக்கு இருக்கைகள் வாங்குவதற்கு பேராசிரியர் சரசுவதி ரூ.15,000/- நன்கொடையாக தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரனிடம் வழங்கினார். சென்னை மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பில் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.2000/-, சென்னை பொதுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கப்பட்டது. அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் மகள்கள், பண்பாளன், உசீதன் சார்பில் கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடையாக வழங்கப்பட்டது. தி.மு.க. தலைமைக் கழகப் பொதுக் குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 22092022 இதழ்

அம்மா உணவகத்துக்கு பெரியார் பெயர்:  சுப. வீரபாண்டியன் முதல்வருக்கு கோரிக்கை

அம்மா உணவகத்துக்கு பெரியார் பெயர்: சுப. வீரபாண்டியன் முதல்வருக்கு கோரிக்கை

பெரியார் உணவகம், சில நாள்களுக்கு முன்பு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள காரமடை என்னும் ஊரில், பெரியார் உணவகம் என்னும் பெயரில் ஓர் உணவகம் திறக்கப்பட்டது. உடனே இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து ஈவெரா பெயரில் எல்லாம் கடை திறக்கக் கூடாது. உடனே அதனை நீக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் அங்கு இல்லை. ஒரு பணியாளர் மட்டுமே இருந்திருக்கிறார். கடை உரிமையாளர் வந்ததும் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவர்கள் கேட்கவில்லை. மேலும் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து பெயர்ப் பலகையை உடைத்து இருக்கிறார்கள்.  கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அந்தப் பணியாளரையும் 36 தையல்கள் போடும் அளவுக்கு அடித்துத் தாக்கி இருக்கிறார்கள். மிகச் சரியான விடையை அதன் உரிமையாளர் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு பெயர்ப் பலகையை இடித்தால், அதே பெயரில் இன்னும்...

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்துத்துவா போக்கு: கொளத்தூர் மணி கண்டனம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொடர் இந்துத்துவப் போக்கினை இன்னொரு நிகழ்வு வழியாகவும் வெளிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டுவதும், அதற்கான எதிர்வினைகளைப் பற்றி சிந்திக்கக் கோருவதும் தான் இந்த அறிக்கையின் நோக்கமாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக 14.9.2022 அன்று ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில் அன்று அனைவரும் வாசிக்க வேண்டிய செய்திகளையும் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடங்குகிற போது திருமூலரின் ஒரு பாடலோடு தொடங்குகிறது. அந்தப் பாடலில் உள்ள பொருளைச் சொல்லி இருந்தாலும் பெரியாரின் தத்துவ பார்வையும், அறிவுக்கான தேடலும், சமூக விடுதலைக்கான அணுகுமுறையும் போர்க்குணம் மிக்க அறிவுத் தேடல் ஆகும் – என்ற செய்திகளுடன் முடிகிறது  முதல் பத்தி. ஏதேனும் ஒரு மேற்கோள் காட்டியாக வேண்டும் என்று விரும்பி...

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

தலையங்கம் தென்காசி-தீண்டாமையும் ‘சூத்திர’ இழிவும்

இந்து மதத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா புண்படுத்தி விட்டதாக பா.ஜ.க. பார்ப்பனர்கள் – சங் பரிவாரங்கள் கடும் கண்டனங்களை எழுப்பு கிறார்கள். ‘சூத்திரர்’ என்று இந்து மதமான ‘வேதமதம்’ இழிவுபடுத்துவதை ஆ.இராசா சுட்டிக்காட்டிப் பேசியது தான் குற்றமாகிவிட்டது. சூத்திரர் இழிவை எங்கள் மதம் ஏற்காது என்று அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை – ஜாதி வெறியர்களால் இப்போதும் ‘மதத்தின் – கடவுளின்’ கொள்கையாகவே சட்டவிரோதமாகப் பின்பற்றப்படு கிறது. தென்காசி அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இனக் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் விற்பதற்குக்கூட தடை செய்து ஊர்க் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். தீண்டாமை வெறியை மறைப்பதற்குக்கூட தயாராக இல்லை. இறுமாப்புடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் வழியாகத்...

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று  மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர். தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை  நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 24 அர்ச்சகர்களும் பணி ஏற்று...

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர். பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார். அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச்...

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா?  ‘ஆன்மீக’ மண்ணா?

தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா? ‘ஆன்மீக’ மண்ணா?

பெரியார் தமிழ்நாட்டில் தோற்றுப் போய் விட்டார்; மக்கள் ஆன்மீகம் நோக்கி திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் பரப்பப்பட்டு வருகிறது. ‘பெரியார் மண்’, ‘ஆன்மீகம்’ என்பதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு வரையறுப்பது? இந்த கேள்விகளுக்கான விடையில் தான் தெளிவு பெற முடியும். ஆன்மீகம் என்பது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு சிந்தனைப் போக்கு.  அது வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இல்லை. ஆனால், ‘ஆன்மீகம்’ என்பதை பார்ப்பனியம் தனக்கான முகமூடிக் கவசமாக்கிக் கொண்டு தன்னை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. வைதீக வேத மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், யாகங்கள், சடங்குகளை, உயிர்ப் பலிகளைக் கேள்வி கேட்ட திராவிடர்களை அழித்தொழிக்க வரலாறு நெடுக சூழ்ச்சிகளை படுகொலைகளை நடத்தியதோடு அதற்கு அவதாரம், புராணம், இதிகாச கற்பனைகளை உருவாக்கி, வெகுமக்களை நம்ப வைத்தனர். உருவ வழிபாடு வழக்கம் இல்லாத அவர்கள் பிற்காலத்தில் கோயில் களையும் சிலை வழிபாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து...

30ரூ பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு

30ரூ பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு தற்போது பெண்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் பின்பற்றப்படும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. தற்போது அரசு தேர்வாணையம் பின்பற்றப்படும் நடைமுறை சட்டத்திற்கு புறம்பானது என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது. இட ஒதுக்கீட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று Horizontal Reservation என்று கூறப்படுகிறது. Oc, bc, mbc, sc, st இந்தப் பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு தர அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்த அடிப்படையில் தான் முதலில் இட ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதில், தமிழ்நாட்டில் அமலில் உள்ள பெண்களுக்கான 30ரூ கோட்டா நிரம்பி விட்டால் பிறகு Vertical Reservation என்று சொல்லப்படுகிற பெண்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் பெண்களை நிரப்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் 30ரூ பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்து விட்டு அதற்குப்...

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டு வதாக அமைந்துள்ளன. சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது. சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர் களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங் கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின்...

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திராவிட மாடல் பயிற்சி பாசறையில் கொளத்தூர் மணி தொடர் உரை

திமுக இளைஞர் அணி சார்பில் “திராவிட மாடல் பயிற்சிப்பாசறை” தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பாசறையில் திராவிட இயக்க வரலாறு , மாநில சுயாட்சி ஆகிய இரண்டு தலைப்புகளில் திராவிட இயக்கத் தலைவர்கள், ஆய்வாளர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்க வரலாறு, தலைப்பில் 12.08.2022 அன்று கோவையில் சூலூர், கிணத்துக் கடவு, 17.08.2022 அன்று திண்டிவனத்திலும், 03.09.2022 அன்று திருச்சி துறையூர், மணச்ச நல்லூரிலும் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு, இரண்யா தலைமை வகிக்கிறார். கிருத்திகா வரவேற்று பேச வுள்ளார். தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின்பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். புதுவை விடுதலை கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்வு கள் நடக்கும். இறுதியாக இசை இனியாள் நன்றி கூறுவார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக் கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஆதம் மார்கெட், அய்ஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வீதி வீதியாக கடை வசூல் சென்னை கழகத் தோழர் களால் தூண்டறிக்கை கொடுக்கப்பட்டு கடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. வணிகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட் டுள்ளது.  தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகரில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்   30.08.2022 செவ்வாய் மாலை மாஸ்கோ நகரில் உள்ள மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக நிர்வாகிகள் மாதவன், முத்து,  அய்யப்பன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று கழகத்தின் சார்பில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு தோழர்கள் திரளாக கலந்து கொள்வது எனவும் செப்டம்பர் 18 ஞாயிற்றுகிழமை அன்று கீழ்கண்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 1) ராயபுரம், 2) மாஸ்கோ நகர், 3) ரங்கநாதபுரம், 4) பெரியார் காலனி, 5) அம்மாபாளையம், 6) ஆத்துப்பாளையம், 7)அனுப்பர்பாளையம், 8) சந்தைப்பேட்டை, 9) குளத்துப்பாளையம், 10) வீரபாண்டி பிரிவு.   பெரியார் முழக்கம்...

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

மேட்டூர் கழக முயற்சி வெற்றி: திடீர் விநாயகர் சிலை அகற்றப்பட்டது

இந்து முன்னணியினரால் மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிராக நீதிமன்றம், அரசு உத்தரவுகளை மீறி திடீரென வைக்கப்பட்ட வினாயகர் சிலை மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முயற்சியால் அகற்றப்பட்டது 29.08.2022 காலை 11.00 மணியளவில் இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் மேட்டூர் நகர இந்து முன்னணித் தலைவர் தமிழ்ச் செல்வன் சேர்ந்து மேட்டூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் முறையாக அனுமதி எதுவும் பெறாமல் திடீரென ஒரு வினாயகர் சிலையை வைத்தனர். நீதிமன்ற உத்தரவுகள்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியும், சுற்றுச் சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயன கலவையால் செய்யப்பட்ட அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் வைக்கப்பட் டிருந்தது. தகவல் அறிந்து மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின், மேட்டூர் காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் இச்செய்திகளை கூறி இதனால்  சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்....

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 4.09.2022  ஞாயிறு காலை 10 மணியளவில் கோபியில் நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. அலிங்கியம் பகுதி செந்தில்குமார் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர்  வேணுகோபால், கழகத்தின் வெளீயீட்டு செயலாளர் இராம இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப் பட்டது. செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியரின் 144 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும், அதன் இறுதியில் நிறைவுவிழா பொதுகூட்டம் சத்தி அல்லது நம்பியூரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின்  ஒன்றிய,நகர ,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

உ.பி.பார்ப்பன சீர்திருத்தவாதி சச்சிதானந்தின் வரலாற்றுப் பதிவுகள் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய ஜாதிக் கொடுமைகள்

உ.பி.பார்ப்பன சீர்திருத்தவாதி சச்சிதானந்தின் வரலாற்றுப் பதிவுகள் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய ஜாதிக் கொடுமைகள்

சென்னை கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத  மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருமே இணைந்து டென்னிஸ் விளையாடினர். ஆசிரியர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். விளையாட்டின்போது கீழ் ஜாதி மாணவர்களுடன் பார்ப்பன மாணவர்கள் கை குலுக்கிக் கொண்ட பின்னர் மறாக்காமல் கை கழுவிக் கொள்வர். பார்ப்பன மாணவர்கள் உணவு உண்ணும்போது அங்கு கீழ் ஜாதி மாணவர்கள் வந்துவிட்டால், அந்த உணவை நாய் தீண்டியதைப் போல கருதி, உண்ணுவதை நிறுத்திவிட்டு எழுந்துவிடுவார்கள். சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கான சூழலையும், தலைவிரித்தாடிய பார்ப்பன ஜாதிய ஆதிக்க வெறியையும் அக்காலத்தில் சென்னையில் தங்கிப் படித்த உ.பி. பார்ப்பன சீர்திருத்த சிந்தனையாளர் சச்சிதானந்த் நூலாக பதிவு செய்துள்ளார். பார்ப்பனிய கொடுமைகளை தோலுரித்த பார்ப்பனர்-அக்யேயாவின் நினைவுப் பக்கங் களில் இருந்து சில குறிப்புகள்: சச்சிதானந்த ஹீரானந்த் வாத்சுயாயன் கவிஞர், பத்திரிகையாளர், புதின எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். 1911ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாபி பிராமண...

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

பெரியார் பிறந்தநாள்; சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம்!

அது என்ன ‘சனாதனம்’? வர்ணாஸ்ரம தர்மத்தின் மற்றொரு பெயர் தான் அது! மனு சாஸ்திரம், இறந்து போன மூத்த சங்கராச்சாரி, இந்துக்களின் புனித நூல்கள் எல்லாம் இதைத் தான் கூறுகின்றன. பிறப்பால் ஒருவன் ‘பிராமணன்’ –  அவனுக்கு அடிமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்கள், பஞ்சமர்கள்  மற்றும்  பெண்கள். இது பிரம்மாவே கூறியது என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த சனாதனம், இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி என்று அதிகார பலத்துடன் தமிழர்களாகிய நம்மீது படை எடுத்து வருகிறது. மொழி, இன அடையாளங்களை ஒழிக்க, மாநிலங்களையே இல்லாது ஆக்க நடக்கும் முயற்சி – சனாதனம். நீட் தேர்வைத் திணிப்பது – சனாதனம். காசியை தலைநகராக்கி, மனுதர்மத்தை அரசியல்  சட்டமாக்கி இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமையைப் பறிப்போம் என்று சாமியார்கள் கூட்டம் வாரணாசியில் கூடி இந்துராஷ்டிரத்துக்கு புதிய அரசியல் சட்டத்தை அறிவித்திருக்கிறதே – அது சனாதனம். தமிழ்நாட்டிடமிருந்து ஒரு ரூபாயை வாங்கி 35...

ஜே.என்.யு. துணைவேந்தரின் சனாதன எதிர்ப்பு முழக்கம்

ஜே.என்.யு. துணைவேந்தரின் சனாதன எதிர்ப்பு முழக்கம்

பெண்கள் அனைவருமே ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்துகிறது மனுதர்மம் பெண்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துகிறது மனுதர்மம் என்றும் ஜாதி ஒழிப்பே  ஆரோக்கியமான சமூகம் என்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் கூறியுள்ளர். மானுடவியல் என்பது அறிவியல் பூர்வமானது. நமது கடவுள்களின் ஆதிமூலத்தை தேடிப் பார்த்தால், எந்த ஒரு கடவுளுமே பிராமணர் கிடையாது என்பது தெரிய வரும். சிவபெருமான் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். பாம்புடன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பவர்தான் சிவபெருமான். சிவபெருமானுக்கு ஆடை என்பது குறைவுதான். பிராமணர்கள் சுடுகாட்டில் அமருவார்கள் என நான் நினைக்கவில்லை. கடவுளர்களின் மானுடவியலை பார்த்தால் உயர்சாதி என்பதில் இருந்து எந்தக் கடவுளும் வந்தது இல்லை. லட்சுமி, சக்தி என அத்தனை கடவுள்களுமே உயர்சாதி  இல்லை. ஜெகநாதரை எடுத்துக் கொண்டால் அவரும் பழங்குடியாகவே இருக்க வேண்டும். இப்படியான நிலையில் ஏன் நாம் பாகுபாட்டுடன் இருக்கிறோம்? இது மனிதநேயமற்றது. மனுஸ்மிருதியானது அனைத்து...

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!

“ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்; அனைத்து கல்வி வேலை வாய்ப்பிலும் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு வீட்டில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை இருந்தால் பெண் கல்விக்கே முன்னுரிமைத் தரப்பட வேண்டும்; பெண்களுக்கு சொத்து – வாரிசுரிமையில் சம பங்கு தர வேண்டும்” – இப்படி பெண்களின் விடுதலைக்ககாகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார். கலைஞர் முதல்வராக வந்த பிறகு, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார். இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த சாதனை சரித்திரத்தைத் தொடருகிறார். 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு அவர்களின் உயர்க் கல்வி வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ பெண் விடுதலைக்கான பாதையில் மற்றொரு மைல் கல். தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம். நாட்டில்...

பயிலரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார் ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் வரலாறு

பயிலரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார் ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் வரலாறு

*           இஸ்லாமியர்களின் தேச பக்தியை பாராட்டிய சாவர்க்கார், பிற்காலத்தில் தான் வெறுப்பு அரசியலை கையிலெடுத்தார். *           காங்கிரஸ்  சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அந்த பந்தலை எரிப்பேன் என்றார் திலகர். *           முஸ்லீம் லீக் தொடங்கியதற்குப் பிறகும் ஜின்னா காங்கிரசிலேயே இருந்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக, “யார் எதிரிகள்” என்ற தலைப்பில் 31.07.2022 அன்று சென்னை அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் நடைபெற்ற பயிலரங்கில், ஆர்.எஸ்.எஸ் முன்னோடி பார்ப்பனர்களான திலகர், சாவர்க்கர், விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் பார்ப்பனிய சனாதன வரலாறுகளை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: “யார் எதிரி?” என்பது தான் நிகழ்வின் தலைப்பு என்றார்கள். யார் எதிரி என்று சரியாக தீர்மானிக்காத இயக்கங்கள் தான் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றன. சில இயக்கங்கள் உண்மையான எதிரிகளை அதாவது பகை முரண்களை விட்டு விட்டு நட்பு முரண்களை எதிர்ப்பதை தமிழ் தேசியத்தின் பெயரால்...

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து  கலந்துரையாடல்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து கலந்துரையாடல்

நிகழும் அரசியல் சூழல் குறித்த விவாதமும், முழக்கத்தில் வந்த கட்டுரைகளும் மற்றும் தற்போது சமூகத்தில் எழும் விவாதமாக இலவசம் தவறா? மற்றும் இவையெல்லாம் இலவசமா? என்றும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்கெடுப் பில் நிகழ்வு ஒருக்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்டது. (இந்திய ஒன்றிய பொருளாதாரம் குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இலவச என்று சொல்லக்கூடிய விலையில்லா பொருட்கள் மற்றும் மாநிலங்களைப் பற்றி வந்த தோழர்களின் பார்வையும் சமூக மாற்றத்தையும் கலந்தாலோசிக்கப்பட்டது.) பெரியார் முழக்கம் 01092022 இதழ்

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

சேலம் திராவிடர் கழகத் தோழர் பூபதி 7-8-2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ்  வளர்ச்சி நிதியாக ரூ.1,500/-அளித்தார். புதுவை, பெரியார் சிந்தனையாளர்கள் இயக்கத் தோழர் துரை. சிவாஜி, தனது மகள் இளம்பிறையின் மண விழா மகிழ்வாக ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 01092022 இதழ்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

கழகத்தில் புதிய தோழர்கள் இணைந்தனர்

27-08-2022, சனிக்கிழமை அன்று சிதம்பரம் ஹக்ஷசூ மஹாலில் புதிய தோழர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தில்  இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட தலைவர் அ.மதன்குமார் வரவேற்பு கூறினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் புதிய தோழர்களை வரவேற்று உரையாற்றினார், அதன்பின் புவனகிரி சதிஷ்குமார் -புவனகிரி, ரஞ்சித்குமார் -அம்பிகாபுரம், வெங்கடேஷ் – கந்தமங்கலம், அன்பரசன் – கோவிலாம்பூண்டி, பிரேம் – பூதவராயன் பேட்டை, சிவா – பூதவராயன் பேட்டை, ஆகாஷ் – கோழிப்பள்ளம், ஆகாஷ் – கருவேப்பிலங்குறிச்சி, இன்பராஜ் – பூதவராயன் பேட்டை, விக்கி – பூதவராயன்பேட்டை, நன்பரசன் – பூதவராயன் பேட்டை, ராஜேஷ் – கணகரப்பட்டு. உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத் தலைவரின் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி  புதிய தோழர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் அறிவழகன், கழகத்தின் கடலூர்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.08.22 புதன்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,கழக நிர்வாகிகள் தனபால், ராமசாமி மாணவர் கழகத்தின் மகிழவன், கழகத் தோழர்கள் அய்யப்பன் திலகவதி, மாரிமுத்து ஆகிய தோழர்கள் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்டம்: திராவிடர் விடுதலைக் கழகம் ண ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக, பிள்ளையார் சிலையை வைப்பதற்கும், கரைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  தமிழ் நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சிலை வைப்பவர்கள் அரசின் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்றும்  விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை...

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

“பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” – கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை.

தமிழனுக்கு மதமில்லை என்றார்; ஏனென்றால் மதம் என்பது தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு ஜாதியில்லை என்றார்,  ஏனென்றால் ஜாதி தமிழ் சொல் இல்லை. தமிழனுக்கு கடவுள் இல்லை என்றார்; ஏனென்றால் குறளிலோ, தொல்காப்பி யத்திலோ கடவுள் என்ற சொல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. கழகத்தின் சார்பில், களப்பணியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை. தமிழ் பாடல்களும் வட மொழியில் உள்ளன, ஆரிய கீர்த்தனைகளாகவே உள்ளன. அதையும் பெரியார் தமிழில் பாட வேண்டும் என்கிறார். இசை அரங்குகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்கிறார். பெரியார் உணர்வாளர் மாணவர் நகலக உரிமையாளர் ஆனா ரூனா என்ற...

திருக்குறள்

திருக்குறள்

இராமாயணம்-பாரதம்-கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்ட ஆரிய பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் திராவிடர்களை அதனின்று விடுவிக்க திராவிடப் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட நூல் திருக்குறள். ‘குடிஅரசு’ 13.11.1948 பெரியார் முழக்கம் 01092022 இதழ்  

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

ஜாதியை எதிர்த்த போராளி அய்யன்காளி

இன்று போற்றி புகழப்படும் “சனாதனம்” சமூகத்தின் சாதிக் கொடுமையின் ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு மாநிலத்திலும் சனாதானத்தை எதிர்த்து உருவாக்கிய சீர்திருத்தவாதிகள் தான் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கேரளாவில் பிறந்த அய்யன்காளி. 1892 இல் திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர், கேரளத்தை “மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் பைத்தியங்களின் குடியிருப்பு என்று சாடினார்” அந்த அளவிற்கு அங்கே மூடநம்பிக்கையும் சாதிக் கொடுமையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், இதர பகுதிகளிலும் தலை விரித்து ஆடியது. மக்கள் அதற்காகத்தான் வேத மதத்தைத்துறந்து விட்டு, வேறு மதத்திற்கு போனார்கள். மதமாற்றத்தை எதிர்த்து கூப்பாடு போடுகிறவர்கள் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கிடையே 1863 ஆகஸ்ட் 28 அன்று கேரள மாநிலத்தில் வெங்கனூர் என்னும் ஊரில் புலையர் சமூகத்தில் பிறந்தவர்தான் அய்யங்காளி. ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் அவர் போர்குரல் கொடுக்கும் சமூக போராளியாக இருந்தார். ஜாதியை எதிர்த்து அவர் சமராடினார். ஜாதி உயர்வினை...

தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?

தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?

தேச பக்திக்கு தாங்களே முழு உரிமையாளர்கள் என்று பாஜகவினர் நாடகம் போட்டார்கள். ஆனால், இவர்களின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதா ? வரலாறு என்ன ? ஒவ்வொன்றாக பார்ப்போம். 1)         காங்கிரஸ் கட்சி நடுவில் கை இராட்டினம் உடைய மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்டது. 1929 -இல் இலாகூரில் கூடிய காங்கிரஸ், “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கொண்டாடி, மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், “அதை ஏற்க முடியாது, அது இந்துக்களின் கொடி அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்தது. அதன் தலைவர் ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் “பஹவா ஜந்தா” என்ற காவிக் கொடியைத் தான் ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு 1930 ஜனவரி 21 இல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆதாரம் (ஹெட்கேவர் கடிதங்கள்.வெளியீடு அர்ச்சனா பிரகாசன், இந்தூர் 1981.பக்கம் 18) இந்த சுற்றறிக்கை...

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’

தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர்  போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர். வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான்....

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

ஒன்றிய ஆட்சி  – ஆட்சி சட்டங்களை விதிகளை மனு தர்மத்துக்கு ஏற்ப முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டின் உளவுக் கருவியான ‘பெகாசஸ்’ – இந்தியாவில் முக்கிய புள்ளிகளை உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கியது நினைவிருக்கலாம். இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்கா விலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இந்தியாவிலிருந்து வெளி வரும் ‘ஒயர்’ இணைய இதழ் 2021 ஜூலையில் இதை அம்பலப்படுத்தின. 50000 உளவு பார்க்கும் தொலைபேசி  எண்களும் வெளியிடப்பட்டன. பாரீசிலிருந்து இயங்கும் தகவல் காப்பகம் – ‘ஃபர்பிடன் ஸ்டோர்ஸ்’ (Forbidden Stores) மற்றும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் இந்தத் தகவல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டின. இஸ்ரேல் நாட்டின் சக்தி வாய்ந்த இந்த உளவுக் கருவியை அரசுகள் மட்டுமே வாங்க முடியும் என்று இஸ்ரேல் சட்டம் கூறுகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது இஸ்ரேலுடன் இந்தக் கருவிகளைப் பெற 2 பில்லியன்...

வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்

வடநாட்டு ஊடகத்தை வறுத்தெடுத்தார், தமிழக நிதி அமைச்சர்

வடநாட்டு ஊடகத்தை வறுத்து எடுத்திருக்கிறார், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டில் “இலவசங்கள்” என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கப்படுவதை இப்போது விவாதப் பொருளாக்கியுள்ளனர். பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார். இது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்ட போது, “எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு இவர்கள் என்ன பொருளாதார நிபுணர்களா ? பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்களா ? பி.எச்.டி பெற்றவர்களா ? எங்கள் பொருளாதாரத்தை நிர்ணயித்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு அறிவுரை கூற உலகத்தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய ஆட்சி ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் தருகிறது என்றால், ஒன்றிய ஆட்சி எங்களுக்கு 35 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் எங்களது நிதி நிலமை கட்டமைப்புகளை நாங்கள் சரி செய்து, மக்களுக்குத் தேவையான இலவசங்களை வழங்கி, பண வீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.  நான்...

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால்…

இட ஒதுக்கீடு இல்லாவிட்டால்…

இட ஒதுக்கீடு இல்லா விட்டால்… 45 மத்திய பல்கலைக் கழகங்களில்  45 துணை வேந்தர் இருக்காங்க…  அதில் பட்டியல் சாதியை சேர்ந்தவர் எத்தனை பேர்? ஒரே ஒருவர். பழங்குடி எத்தனை பேர்? ஒரே ஒருவர்.  ஓ.பி.சி எத்தனை பேர்? ஏழு பேர்.  அப்ப மீதமெல்லாம் முற்பட்ட சாதியினர்  36 பேர்.  சதவீதமாகப் பார்ப்போமா? எஸ்.சி – 2 ரூ; எஸ்.டி – 2 ரூ;  ஓ.பி.சி – 16 ரூ; முற்பட்ட சாதி – 80 ரூ;  (ஆதாரம் : எகனாமிக் டைம்ஸ் 08.08.2022 – நாடாளுமன்ற கேள்வி பதில் – கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்) இந்த கணக்கை சொன்னவுடன் ஒருவர் சொன்னார். துணை வேந்தர் பதவிக்கு தான் இட ஒதுக்கீடு இல்லையே! அது அநீதி என்று எப்படி சொல்ல முடியும்? என்றார். இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்ன அநீதி நடக்கும் என்பதற்குதான் இது என்றோம்.              அவரிடம்...

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்....

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பட்டியலிட்டார் பால் பிரபாகரன் (2) பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று தான் குறளில் குறப்பிட் டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல் லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன. முதலில் மதத்தில் இருந்து தமிழை பிரிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக வட மொழியில் இருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்கிறார் பெரியார். ஒரு மொழி என்பது எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிற அளவிற்கு இருக்க வேண்டும். மிக கடினப்பட்டு படிக்கின்றவாறு இருக்கக் கூடாது. அப்படி எளிமையாக கற்றுக் கொள்ளு மாறு இருந்தால் தான் ஒரு மொழி மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சியடையும். ஆங்கிலத் தில் வெறும் 26 எழுத்துதான் ஆனால் உலக அளவில் வளர்ச்சி அடைந்து சென்று விட்டது. ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. 247 எழுத்து உள்ள தமிழில்...

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

ஆகமம் மாற்றத்துக்கு உரியதே!

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவை யெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதாரமில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். ‘விடுதலை’ 29.11.1969   பெரியார் முழக்கம் 25082022 இதழ்

93ரூ நிர்வாக இயக்குனர்கள் ‘அவாள்களே’!

93ரூ நிர்வாக இயக்குனர்கள் ‘அவாள்களே’!

‘இலவசங்கள்’ குறித்து திரு புகழ் காந்தி ஓர் அருமையான கட்டுரையை ஆங்கில ‘இந்து’ (ஆக.20, 2022) வில் எழுதியிருக்கிறார். அதில் வரும் சில முக்கியமான விவரங்கள்: இந்தியாவின் மொத்த சொத்தில் 22ரூஐ மேல் தட்டில் இருக்கும் 1ரூவைத்திருக்கிறார்கள். அதே போல் 57ரூ சொத்துக்களை மேலடுக்கில் இருக்கும் 10ரூ பேர் வைத்திருக்கின்றனர். உயர் ஜாதிக் குடும்பங்கள் தேசிய வருமானத்தின் சராசரியை விட 47ரூ அதிகம் ஈட்டுகிறார்கள். பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களில் (bடியசன அநஅநெசள) 93ரூ உயர் ஜாதியினர். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 63ரூ நிர்வாகிகள் உயர் ஜாதியினர். தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி. இதனால் அரசுக்கு சென்ற வருடம் இழப்பு  1.84 லட்சம் கோடி. அடுத்த வருடம் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். இதன் பலன் பெரும்பாலும் உயர் ஜாதியினருக்குத்தான் (பார்ப்பனருக்குத்தான்). சரி, தமிழகத்தில் வழங்கப் படும் மூன்று...

8 ஆண்டுகளில் 23 பொதுத் துறைகளை விற்ற மோடி ஆட்சி

8 ஆண்டுகளில் 23 பொதுத் துறைகளை விற்ற மோடி ஆட்சி

தனது ஆட்சிக் காலத்தில் புதிதாக ஒரு பொதுத்துறையைக் கூட உருவாக்காத பிரதமர் என்றால் அது இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் எம்.பி.ரிபுன் போரா, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியிருந்தார். அதுமட்டு மல்லாமல், தனது 8 ஆண்டு ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்றுத் தீர்த்துவிட்டது என்றும் அதிர்ச்சி கரமான புள்ளிவிவரங்களை வெளி யிட்டிருந்தார். அவரின் அந்த புள்ளிவிவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்ட் ஆகி வருகின்றன. நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவை யொட்டி, பாஜக, சங்-பரிவாரக் கூட்டத் தினர் மட்டுமே தேசபக்தர்கள் என்பது போலவும், நாட்டின் 8 ஆண்டுகளில் பல மடங்கு முன்னேற்றி இருப்பதாகவும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங் களில் இளைஞர்கள் கடும் விமர்சனத்தை முன்னெடுத் துள்ளனர். பிப்ரவரி மாதம் ரிபுன் போரா பேசிய தகவல்களுடன், கூடுதல் புள்ளி விவரங்களை இணைத்து பதிலடி கொடுத்து வருகின்றனர். சுதந்திர...

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

தலையங்கம் ‘ஆகமம்’ மாற்றவே முடியாததா?

அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும்; அவர்கள் உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு முன் (ஆக. 14, 2021) தமிழக அரசு உரியப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர் 27 பேருக்கு அர்ச்சகர் நியமன ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு, அர்ச்சகர் பதவிக்கு வயது வரம்பு, உரிய பயிற்சி தேவை என்ற அரசு பிறப்பித்த விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ஆகம முறை பின்பற்றப்படாத கோயில்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியதோடு ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த ஆகமம் கூறும் முறையில் தான் வழிபாடு, சடங்குகள் மட்டுமல்ல; அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. எந்தெந்த ஆகம கோயில்களில் எந்த வகை ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவும் அமைத்து அதில் இருவர் பெயரையும் நீதிமன்றமே பரிந்துரைத் துள்ளது....

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி...

பெரியார் – அண்ணா – கலைஞர் நினைவிடங்களில் அர்ச்சகர்கள் தமிழ்ப் பாசுரம் பாடி மரியாதை

பெரியார் – அண்ணா – கலைஞர் நினைவிடங்களில் அர்ச்சகர்கள் தமிழ்ப் பாசுரம் பாடி மரியாதை

தமிழக முதல்வர் அனைத்து இந்துக்களும் பயிற்சி பெறக் கூடிய 9 பயிற்சிப் பள்ளிகளை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். உண்டு – உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படும்; ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3000/- உதவித் தொகை வழங்கப்படும்; சமயபுரத்தில் புதிய ஓதுவார் பயிற்சிப் பள்ளியையும் முதல்வர் திறந்து வைத்தார். அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக நியமித்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்த ஓராண்டு நினைவாக (ஆக. 14)  பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். தமிழில் அர்ச்சனைப் பாடல்களைப் பாடினர். இது குறித்து சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் விடுத்துள்ள அறிக்கை: இந்திய வரலாற்றில்  பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. பல்லாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் மகத்தானது. மன்னர்களின் ஆட்சிகளைவிட, சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத் திலும்...

தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு

தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு

தமிழ்நாட்டு கிராமங்களில் இன்னும் சாதிய ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சட்டங்கள் அங்கு நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் தலித் ஊராட்சிகளில் இன்னமும் சாதிய பாகுபாடுகள் காணப்பட்டு கொண்டே இருக்கின்றன, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு நல்ல வேலையை செய்து இருக்கிறது. 386 ஊராட்சிகளில் 26 கேள்விகளுடன் 400 பயிற்சி பெற்ற ஊழியர்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலித் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, ஊராட்சித் தலைவர்களுக்கு 42 வகையான தீண்டாமைகள் எப்படி திணிக்கப்படுகிறது, என்பதும் கண்டறிந்து அரசிடம் அறிக்கை ஒன்றை தந்தது. உடனடியாக தமிழக அரசினுடைய தலைமைச் செயலாளர் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும். இந்த சாதி பிரச்சினைகளுக்கு...

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திமிர் பேச்சு கண்ணனை கைது செய்: கழகம் ஆர்ப்பாட்டம்

திருவரங்கத்தில் உள்ள பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்யக் கோரி 10.08.2022  அன்று காலை 10.30 மணி அளவில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்குபெற்றன. கண்டன உரையாற்றியவர்கள்: 1. நாத்திகஜோதி –  ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர். 2. சித்திக்  – த.மு.மு.க; 3. சிந்தனைச் செல்வன் – தமிழ்ப் புலிகள் கட்சி; வீரகோவிந்தன் – ஆதித் தமிழர் பேரவை; 5. சலீம் – மனிதநேய மக்கள் கட்சி; வேங்கை பொன்னுசாமி – தமிழ்ப் புலிகள் கட்சி; 7. நிலவன் – நீரோடை; கண.குறிஞ்சி – ஞருஊடு; 9. திருப்பூர் துரைசாமி – பொருளாளர் தி.வி.க.; இராம.இளங்கோவன் – வெளியீட்டுச்...

குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்

குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் சந்திரசேகர். மக்கள் தொகையில் அவர் நிபுணத்துவம் பெற்ற அறிஞர். அவர் ஒருமுறை பெரியாரை நேரில் பேட்டி கண்டார். அப்போது பெரியார் அனைத்து வேலைவாய்ப்புகளும் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துவிட வேண்டுமென்று கூறினார். சந்திரசேகர் ஒரு கேள்வியை திருப்பி கேட்டார், அப்படியானால் ஆண்கள் அதை எதிர்க்க மாட்டார்களா ? இதற்கு பெரியார் தந்த பதில், “எப்படி எதிர்ப்பார்கள்? அவர்கள் வீட்டு மனைவிகளுக்கும் அவர்கள் வீட்டு சகோதரிகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கின்ற போது ஆண்கள் எப்படி எதிர்ப்பார்கள்” என்று பெரியார் கேட்டார். இது ஒரு ஒரிஜினலான சிந்தனை என்று சந்திரசேகர் பெரியாரைப் பாராட்டினார். இது ஒரு நிகழ்வு. 1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு வேலைவாய்ப்புகளில் 30ரூ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் 50ரூ கேட்டார் கலைஞர் 30ரூ பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

சுயமரியாதை

சுயமரியாதை

‘சுதந்திரம்’ , ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’ என்கின்ற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும், கொடுமைக்கும் ஆதாரமானவை தான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடையப் பாடுபட வேண்டுமானால், மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடுபட வேண்டும். குடி அரசு – 24.01.1926 இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுய மரியாதை’ என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வார்த்தையானது, நமது நண்பர்களிலேயே சிலர், ‘கொள்கைகளிலெல்லாம் நமக்குப் பிடிக்கின்றன. ஆனால், சுயமரியாதை என்ற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும். குடி அரசு – 01.06.1930   பெரியார் முழக்கம் 18082022 இதழ்

‘தினமலர்’ பூணூல் மலர் தான்!

‘தினமலர்’ பூணூல் மலர் தான்!

தினமலர் நாளேட்டை பொதுவாக ‘பூணூல்’ மலர் என்று பலரும் குறிப்பிடுவது வழக்கம். இது ஏதோ அந்த ஏட்டை அவமதிப்பது என்பது பொருள் ஆகாது; உண்மையிலேயே நாங்கள் பூணூல் மலர்தான் என்பதை அந்த ஏடும் ஒப்புக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆவணி அவிட்டம் என்கிற பூணூல் மாற்றும் சடங்கு நடக்கின்ற நாள். அந்த நாளில் கட்டுரை ஒன்றை தினமலர் நாளேடு வெளியிட்டிருக்கிறது, அதில் பூணூல் மாற்றுகின்ற சடங்கை பிராமணனாக இரு பிறப்பு எடுக்கின்ற சடங்கை நமது பிராமண சந்ததிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது பிராமணர்கள் ஆகிய நமது கடமை என்று வலியுறுத்தி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது. “இந்த நாளை காஞ்சி சங்கராச்சாரி கல்வித் திருநாள் என்கிறார். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு வேதம் கிடைத்த நன்னாள் தான் ஆவணி அவிட்டம். அந்த நாளில் தான் நாம் வேதத்தின்படி பூணூலை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். மாற்றுவதோடு காயத்ரி மந்திரத்தையும்...

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

தலையங்கம் சுதந்திரத் ‘தீண்டாமை’

ஊராட்சித் தவைர்களாக ‘தலித்’ பஞ்சாத்துகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜாதி வெறியர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இது குறித்து களஆய்வு நடத்தி, அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. ‘தலித்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது திணிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் குறித்து விரிவாக அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டு 20 தலித் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் ஜாதி வெறியர்களால் குடியரசு – சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், சுதந்திர நாள் அன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாhபில் கடிதம் எழுதினார். கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்...

பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உரை தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்

பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உரை தமிழை மதத்திலிருந்து பிரிக்கச் சொன்னார், பெரியார்

கழகத்தின் சார்பில், களப்பணி யாளர் களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 23-25 வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் “பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு” என்ற தலைப்பில் தமிழை மதத்திலிருந்து பிரித்தால் தான் மொழி தமிழரின் தன்மானத்துக்கு அடையாளமாக முடியும் என்று பெரியார் கூறியதை விளக்கி கழகப் பரப்புரை செய லாளர் பால் பிரபாகரன் ஆற்றிய உரை. பெரியார் என்று கூறினாலே, ‘தமிழுக்கு எதிரானவர்’ என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டே வருகிறது. முதலில் பெரியார் தமிழரே இல்லை. அவர் ஒரு கன்னடர். கன்னடர் எப்படி தமிழுக்கு தொண்டாற்ற முடியும் என்றும் விமர்சனங்களை வைக்கிறார்கள். பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறி விட்டார் என்று மணியரசன் போன்ற அறிவுஜீவிகளெல்லாம் கூறி வருகின்றனர். பெரியார் ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் ? தமிழர் கழகம் என்று வைத்திருந்தால் தமிழர் விடுதலை சாத்தியமாகியிருக்குமே என்றெல்லாம் இந்த அறிவுஜீவிகள் பேசுகிறார்கள்....