கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்
பாஜகவுக்கு எதிரான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, புதிய சட்டத்திருத்தம் (IT Act 2021 – 3[1][b][v]) ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. பத்திரிக்கைத் தகவல் பணியகமோ (PIB), ஒன்றிய அரசால் அங்கீகரிக் கப்பட்ட வேறொரு நிறுவனமோ, ஒரு செய்தியை போலி செய்தி என்று அறிவித்து விட்டால், அந்தச் செய்தி எந்த ஒரு இணைய ஊடகத்திலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண் டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இதனை மின்ன ணுவியல் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ளது. எந்த ஒரு ஒழுங்கு முறை அதிகாரமும் இல்லாத PIBயிடம், உண்மை சரிபார்ப்பு & கட்டுப்பாட்டு பொறுப்பை ஒன்றிய அரசு வழங்க விருக்கும் செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசின் கொள்கைகள், திட்டங் கள், முன்னெடுப்புகள் & சாதனை கள் தொடர்பான செய்திகளை, அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் வழங்குவது தான், பத்திரிக்கைத் தகவல் பணியகத்தின் வேலையாக இருந்து வருகிறது....
