எங்கள் தத்துவ பிதாமகன் பெரியார் காட்டிய வழியில் எங்களை தனிநாடு கேட்கத் தள்ளி விடாதீர்கள்! எச்சரிக்கிறார் ஆ. இராசா
திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு 03.07.2022 அன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில், கருத்தரங்கில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ தலைப்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேச்சு. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் “மாநில சுயாட்சி” கொள்கைக்கு வந்து விட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருக்கக் கூடிய தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். அவர் இறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னால், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று ‘விடுதலை’யில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் கூறினார்: “இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும். இந்தியா வில் இருக்கும் வரை இந்து மதம் என்னை பஞ்சமனாக வைத்திருக்கும். அது மட்டுமில்லை இந்தியாவில் இருக்கும் வரை என்னுடைய தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது, உத்தியோகத்தில் பங்கு கிடைக்காது, எந்த ஏற்றமும்...
