சுயமரியாதை – சமத்துவப் பரப்புரைப் பயணம் தலைமை : தோழர் கொளத்தூர் மணி
1932 ஆம் ஆண்டில் பெரியார் முன் வைத்தது சுயமரியாதை – சமதர்மத் திட்டம். இன்று அதே கோரிக்கைகளை திராவிடர் விடுதலைக் கழகம் சமுதாயத்தின் தேவை கருதி முன்னெடுக்கிறது. முதல் கட்டமாக 24.7.13 இல் மயிலாடுதுறையில் தொடங்கி 20 நாட்கள் 20 மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு, 12.8.13இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாளில் புதுச்சேரியில் நிறைவடைகிறது. சுயமரியாதை நோக்கில்… மக்களின் சுயமரியாதையை அவமதித்து அவர்களை பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தும் பார்ப்பனிய திருமணம், பார்ப்பனர்கள் திணித்த சடங்குகள், பார்ப்பன வழிபாட்டு முறைகள் முதலியவற்றை சுயமரியாதை உணர்வோடு புறந்தள்ள வேண்டும்! கோவில் கருவறையில் பார்ப்பனரல்லாதோர் பூஜை செய்தால் சாமி தீட்டாகிவிடும் என்ற கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்! ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும்! ஜாதி மறுப்பு இணையரின் குழந்iதைகளுக்கு ‘ஜாதியற்றோர்’ (சூடி ஊயளவந ணுரடிவய) ஒதுக்கீடு வழங்க வேண்டும்! ஜாதி – தீண்டாமைக் கொடுமைகள் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்த்து அகற்றப்பட...