அம்பேத்கருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். கபட நாடகம் எச்சரிக்கிறார், அருந்ததிராய்
அம்பேத்கர் படத்தை ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை அட்டைப்படமாக போடுவதும் அம்பேத்கர் சிலைகளை திறப்பதும், நயவஞ்சக மானது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எச்சரித்தார். சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை: அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கவுரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணி களைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டு கிறேன். வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த குறிக்கோளை எட்டு வதற்காக சக்கரங்கள் சுழன்று கொண்டே யிருக்கின்றன – பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும். பல்கலைக்கழக, பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன; வரலாறு மாற்றி எழுதப்படுகிறது (அது எழுதப்பட வேண்டும் ஆனால் இப்படி அல்ல), கற்றல்...