Author: admin

கிரேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா ‘சமரச சன்மார்க்கம்’ 0

கிரேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா ‘சமரச சன்மார்க்கம்’

சகோதரிகளே! சகோதரர்களே!! சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத் தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என் கிறோமோ எது எது உண்மையான – இயற்கையான சமரச சன்மார்க்க மென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக் கப்பட்டிருக்கின்றது. இது நமதுநாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப்போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப் பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களா லோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக்...

சட்டசபையில் எனது அநுபவம் 0

சட்டசபையில் எனது அநுபவம்

சென்ற சில ஆண்டுகளில் மாதர் முற்போக்கு எவ்வளவு முன்னேறி யிருக்கிற தென்பதும் தங்கள் தற்கால நிலையறிந்து தங்கள் உரிமைகளைப் பெற எவ்வாறு முனைந்து நிற்கின்றனரென்பதற்கும் சமீபத்தில் நடைபெற்ற மாதர் மகாநாடுகளும், அவைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுமே போதிய சான்று கூறும். இந்தியாவிலேயே முதன் முதல் சட்டசபையில் ஸ்தானம் பெற்ற பெண் அங்கத்தினர் ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மையாரே யாகும். அதிலும் உபதலைவர் பதவி பெற்றது போற்றற்குறியதேயாகும். அம்மையார் அவர்கள் தனது சட்டசபை அநுபவத்தை ( ஆங்கிலத் தில் ) எழுதி பிரசுரித்துள்ள பிரதி ஒன்று வரப்பெற்றோம். இதில் தான் பதவி வகித்து வந்த காலத்தில் தான் கொண்டுபோன தீர்மானங்களின் விபரமும் அதையொட்டிய விவாதங்களும் சர்க்கார் தரப்பு பதிலும் அவை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட விபரமும் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது. தேவதாசி மசோதாவுக்கும் விபசார விடுதியொழிப்பு சட்டத்திற்கும் இருந்த எதிர்ப்புப் பல. அதன் முழு விபரங்கள் இதில் காணப்படுகின்றன. இதை முற்றும் படித்த வர்களுக்கு பெண்கள் தங்கள் உரிமைகளைப்...

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – சேலம் கிழக்கு தொடர் பரப்புரைக் கூட்டங்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொறுப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மனுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள...

மேல்நாட்டின் ஜோதியும்  கீழ்நாட்டின் பீதியும் 0

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக்கொண்டு – நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேசவேண்டு மென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்ல லாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம், கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்குகூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆnக்ஷபித்த...

திரு. சி. ராஜகோபாலாச்சாரி                          ஈ.வெ. இராமசாமி சந்திப்பு 0

திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஈ.வெ. இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் 29 தேதி காலையில் சென்னை யிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் கிரான்ட் டிரன்க் எக்ஸ்பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார் ; பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். திரு. ஈ.வெ. இராமசாமி 29 ² காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும் போது எதிரிலிருந்த கூட்டத்தை கவனிக்கும் போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண் டொரு வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந் திருந்த திரு. பட்டாபி சீதாராமையரையும் கண்டு மரியாதை செய்தார். அந்த சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையை யும் எல்லோருக்குமே ஞாபகப் படுத்தியது என்பதில் ஆnக்ஷபணை இல்லை....

ருஷ்யாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம் 0

ருஷ்யாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்

உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோ வுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில், “நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து, அவர் களுக்கு கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். எங்கள் தேசத் தில் கல்வி, கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. உங்களி டமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். தேகபலம், கல்வி இவை யில்லாத வர்களையும் உபயோகித்துக்கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த் தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தி யையும், நம்பிக்கையையும் உடையவர்களா யிருக்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாயிருக் கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்ற தென்று வைத்தி யர்கள் சொல்லுகிறார்கள்” என்று சொன்னார். இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இவைதவிர, மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது, “மதம், செல்வ நிலை, சமூகவாழ்வு ஆகிய விஷயங்களில் உங்க...

சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி 0

சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி

சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அது அற்ப ஆயுளாய் முடியுமென்றே முடிவுகட்டி இருந்தோம். அந்தப்படி ஒழிந்து விடுமென்று எதிர்பார்த்த காலத்திற்கு மேலாக சற்று காலம் கடத்திவரப் படுகின்றது. சட்டமறுப்புத் தன்மையை தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்ல முடியாதவர்களும் அதில் கலந்து கொள்ள சிறிதும் தைரியமில்லாத வர்களுமாய் இருந்த சில கூட்டாத்தாருக்கு சட்டமறுப்பு இயக்கம் நீடித்து இருப்பதால் வாயில் பேசி பெருமையும் திருப்தியும் அடைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த மாதிரி இனியும் கொஞ்சம் காலம் கடத்தும் நிலைமைக்கு சட்டமறுப்புக்காரர்களாவது வாய்ப்பேச்சு வீரர்களாவது சிறிதும் பொறுப்பாளிகளல்ல என்பதே நமது முடிவு. மற்றுயார் என்றால் சர்க்காராரே முக்கிய காரணஸ்தர்களா வார்கள். இந்தக்கிளர்ச்சி ஆரம்பித்த காலத்தில் அனேகமாய் இந்தியாதேசம் முழுவதும் அதற்கு எதிரிடையாய் இருந்த காலத்தில் பேசாமல் விட்டுவிட்டு பிறகும் கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்துக்கொள்ளாமல் அனாகரீகமான முறையில் முறட்டு பலத்தை பிரயோகித்ததால் இப்போது பாமர மக்களை மயங்கச்செய்து அதில் கவனம் செலுத்தும்படி செய்து வருகின்றது-நியாய, அனியாயங்களை...

பாலர் பரிபாலனம் 0

பாலர் பரிபாலனம்

சென்னை பண்டிதர் திரு.எஸ். ஆனந்தமவர்களால் எழுதப்பட்ட “பாலர் பரிபாலனம்” என்னும் புஸ்தகம் வரப்பெற்றோம். நமது நாட்டில் குழந்தை வளர்ப்பிலோ அல்லது அதன் போஷணையிலோ போதிய சிரத்தையும், கவனமும் காட்டப்படுவதில்லை யென்பதோடு அனேகருக்கு அதன் விபரமே தெரியாதென்று சொல்லவேண்டி இருக்கிறது. இதனா லேயே சிசு மரணமும், அகால மரணமும், பலவீனமும், ஊக்கமின்மையுமாகிய வைகள் மலிந்து அன்னிய நாட்டார் முன்னிலையில் இந்தியர்களை மாக் களாகக் கருதப்படும் படியாகச் செய்து வருகின்றது. இவை மாத்திரமல் லாமல் மக்களுக்கு நல்லொழுக்கமும் பகுத்தறிவும் கூட அடைவதற்கில் லாமல் இருந்துவரப் படுகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் பிள்ளை களை எப்படி பரிபாலிப்பதென்கிற விஷயத்தில் சிறிதும் அறிவும், ஆராய்ச் சியும் இல்லாததே காரணமென்பதைத் திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல வேண்டி யிருக்கின்றது. இத்தகைய பெருங்குறையை போக்க திரு. ஆனந்தமவர்கள் முயற்சித்து இப்புத்தகம் எழுத முன்வந்தது பேருதவியேயாகும். இதில் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவத்துன்பங்களும், காயலாவும், ஸ்நானம், உடை, ஆகாரம், தாதி, தொத்து வியாதியிலிருந்து காப்பாற்றுதல்,...

வட்ட மேஜை முடிவு 0

வட்ட மேஜை முடிவு

1920-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் வழங்கின போது அதிலும் முன்னேற்றமான சீர்திருத்தம் வழங்கும் விஷயத்தில் “ஒரு 10 வருஷ­காலம் பொறுத்து பிரிட்டிஷ் பார்லி மெண்டினால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதை இந்தியாவுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியரின் தேவையையும் தகுதியையும் விசாரித்தறிந்து அதற்குத்தகுந்ததான அரசியல் முன்னேற்றம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தபடியே 1929ல் ஒரு கமிட்டியை அதாவது சைமன் கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப்படி அனுப்பப்பட்ட கமிட்டியை காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் பகிஷ்காரம் செய்த தாய் காண்பித்தாலும் மற்றபடி இந்தியாவிலுள்ள எல்லாப் பொது ஸ்தாபனங் களும், சமூக சமய ஸ்தாபனங்களும், மேலும் இந்திய ஜனப்பிரதிநிதி களடங்கிய ஸ்தலஸ்தாபனங்களாகிய தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளும், அரசியல் நிர்வாக ஸ்தாபனங் களாகிய மாகாண சட்டசபை, இந்தியா சட்டசபையாகிய ஸ்தாபனங்களும் பெரிதும் வரவேற்று உபசரித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லி மேற்கொண்டு அளிக்கப்படும் சுதந்திரங் களை நிர்வகிக்கும்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப் படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன் தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்பட மாட்டானோ அந்த மதத்தை சார வேண்டி யது அவனது முதற்கடமையாகும். * * * ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான் “ கடவுள் அருளோ” “மோக்ஷமோ” கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும் பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயம். * * * மனுதர்ம சாஸ்திரத்தையும் அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அந்தக்கட வுளை ஒழித்து விட்டுத் தான் தாகசாந்தி செய்ய வேண்டும். * * * மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்து விட்டுத் தான் மனிதன்...

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது. கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள்...

சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு 0

சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு

தலைவர் அவர்களே! இளைஞர்களே ! சகோதரர்களே! 2 மணி நேரத் திற்கு முன் தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப்பற்றிய என்னுடைய பழய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாண வர்களும், இளைஞர்களுமாயிருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரி வித்துக் கொள்ளுகிறேன். நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம்? என்பதும் சமயக்கொள்கை என்றால் எந்த சமயம்? என்பதும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு...

காதல் 0

காதல்

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமை யாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படு கின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும். ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங் களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற...

“சித்திரபுத்திரன்” 0

“சித்திரபுத்திரன்”

ஆஸ்த்திகப் பெண்:- என்ன அய்யா நாஸ்த்திகரே, மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும் பெண்களை கடவுளே விவசாரிகளாய் பிரப் பித்து விட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். நாஸ்திகன்:- அம்மா, அப்படித் தாங்கள் சொல்லக் கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல் வதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆ.பெண்:- அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்லுகின் றீர்கள்? இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கி யதை? எல்லாப் பெண்களுமா விவசாரிகள்? நா:- ஆம் அம்மா, எல்லாருமே தான் “விவசாரிகள்”. இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. ஆ. பெண்:- என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரை யுமா...

இரண்டு வைத்தியர்கள் 0

இரண்டு வைத்தியர்கள்

– சித்திரபுத்திரன் பார்ப்பன ஆயுர்வேத வைத்தியருக்கும் பார்ப்பனரல்லாத சித்த வைத்தியருக்கும் சம்பாஷனை ஆ. வே. வை:- ஓய் சித்த வைத்தியரே; இந்த சட்ட சபைக்குள் திரு. முத்துலட்சுமி அம்மாள் போன பின்பு நமது வைத்தியத் தொழில்களுக் கெல்லாம் ஆபத்து வந்து விட்டது போல் இருக்கின்றதே. இதைப்பற்றி கேள்வி கேப்பாடு இல்லையா! சி. வை:- என்ன ஆபத்து? ஆ. வே. வை:-  என்ன ஆபத்தா! இவ்வளவுதான் சித்த வைத்தியத்தின் புத்தி. சி. வை:- சரி, ஆயுர்வேத வைத்தியர்களே மகா புத்திசாலிகளாய் இருக்கட்டும். அந்த அம்மாளால் என்ன ஆபத்து வந்துவிட்டது? ஆ. வே. வை:- பொட்டுக்கட்டக் கூடாதாம், தேவதாசிகள் கூடாதாம். இந்த இரண்டும் நின்றுபோய் விட்டால் நமது ஜீவனம் எப்படித்தான் நடக்கும். சி.வை:- அடேயப்பா இதுதானா பெரிய ஆபத்து. இதற்கும் நமக்கும் என்னய்யா சம்மந்தம். தாசிகள் இல்லாவிட்டால், கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குத்தான் ஜீவனம் கெட்டுப்போகும். ஏனென்றால் கோவி லுக்கு தாசிகள் வராவிட்டால் ஜனங்கள் கோயிலுக்குப்...

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள் 0

50 சதவீத சலுகையில் ‘தமிழ்க் குடிஅரசு’ வெளியீடுகள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாசகர்களின் நலன் கருதி, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும் தந்தை பெரியார் பிறந்த மாதமான 2015 செப்டம்பர் மாதம் முழுவதும் 50ரூ சலுகை விலையில் கொடுக்கப்படும். அஞ்சல் செலவு தனி. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும். – வாலாஜா வல்லவன் தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் எண்.4/11, சி.என் .கே.சந்து, சேப்பாக்கம், சென்னை-5. பேசி : 9444321902, 72992 14554 மின்னஞ்சல் : vallavankuil@gmail.com பெரியார் முழக்கம் 17092015 இதழ்

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம் 0

பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை தேசியம்

தமிழ்த் தேசியம் பேசுவோரிட மிருந்து பெரியார் பேசிய சுயமரியாதைக்கான தேசியம் வேறுபடும் புள்ளிகளை விரிவாக அலசுகிறது இக்கட்டுரை. பெரியார் தோன்றி 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க.வின் ஆட்சி நடந்து கொண் டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப் படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப் பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது அன்றாடச் செய்தியாகிக் கொண் டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு பெரியாரின் கருத்துகள் மாபெரும் கருவியாக இருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 2009 இல் ஈழப் போரில் ஏற்பட்ட தமிழினப் பேரழிவும் அதை தடுக்க முடியாமல் தமிழ்நாடு கையறு நிலையில் இருந்ததும் அமுங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பிவிட்டது. புதிய புதிய இயக் கங்கள், பேரியக்கங்கள், கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. இளந்தலை முறையொன்றும்...

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன் 0

பெரியாருக்கெல்லாம் பெரியார் சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன்

மறைந்த சுயமரியாதை சுடரொளி அணைக்கரை டேப் ஆ. தங்கராசன் அவர்கள் திராவிடர் கழக ஊர்வலங்களில் இராவணன் வேடமணிந்து, பெரியாரை வாழ்த்தி எழுப்பிய முழக்கங்கள் இவை. கழகத் தோழர்கள் ஊர்வலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு இதை வெளியிடுகிறோம். பார்ப்பன இன இறுமாப்பையும் அடக்கியே பார்த்தவ ரெமது பெரியார் – வாழ்க மடமையை நீக்கிநீ மனிதனாய் வாழதன் மானங்கொள் என்ற பெரியார் – வாழ்க மனிதனாய்ப் பிறந்தநீ மனிதர்க்கே உதவிடும் மார்க்கங்கா ணென்ற பெரியார் – வாழ்க அடிமையைப் போக்கிபொது உடமையைக் காணநீ ஆசைப்படு என்ற பெரியார் – வாழ்க நரகமும் மோட்சமும் தரகர்கள் பொய்க்கதை நம்பாதே என்ற பெரியார் – வாழ்க உடமையைப் பாழாக்கிக் கடவுளைக் காணநீ ஓடாதே என்ற பெரியார் – வாழ்க பெண்ணின விடுதலைக் கெண்ணியே உழைத்திட்ட பெரியாருக்கெல்லாம் பெரியார் – வாழ்க பிள்ளைபெறு மெந்திரம் இல்லையடா பெண்ணினம் பெருமையளி என்ற பெரியார் – வாழ்க விதவையெனுங் கொடுமையினால் பதறுதடா பெண்ணினம்...

“ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும்- பணியும்” நூல் வெளியீடு 0

“ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும்- பணியும்” நூல் வெளியீடு

‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ள என். இராமகிருட்டிணன் எழுதிய “ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்” நூல் வெளியீட்டு நிகழ்வு 16.9.2015 அன்று மாலை 6.30 மணியளவில் தேனாம்பேட்டை ‘பாரதி புத்தகாலயா’ அரங்கில் நடைபெற்றது. ஜி. செல்வா வரவேற்புரையாற்ற, ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் அ. குமரேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நூலை வெளியிட, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். உத்திரகுமார் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 24092015 இதழ்

சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய இடஒதுக்கீடு கருத்தரங்கம் 0

சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய இடஒதுக்கீடு கருத்தரங்கம்

2015, செப்.8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை ‘இக்ஷா’ அரங்கில் “இடஒதுக்கீடும்-பார்ப்பன சூழ்ச்சிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. எல்.அய்.சி. முற்போக்கு ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் அய்யனார் தலைமையில் அன்பு தனசேகரன் உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இடஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் பட்டேல்கள் நடத்தும் போராட்டத்தின் சூழ்ச்சிகளை விளக்கியும் அதைத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைக்கும் திசை திருப்பும் வாதங்களுக்கு பதிலளித்தும் ஒரு மணி நேரம் பேசினார். தோழர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.  மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 24092015 இதழ்

கழகத்தினருடன் தொல்.திருமா 0

கழகத்தினருடன் தொல்.திருமா

சென்னை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தோழர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்றனர். இராயப்பேட்டை பெரியார் பயிலகத்தில் மாலை அணிவிக்கப் பட்டது. அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று அண்ணாசாலை – தியாகராயர் நகர் – ஆலந்தூர் – பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.  அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் தோழர்களோடு கலந்து கொண்டார்.  பெசன்ட் நகரில் புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். கழகக் கொடி ஏற்றி கழகப் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். அங்கிருந்து வாகனப் பேரணி மந்தைவெளியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கிருந்து வடசென்னை நோக்கி வாகனப்  பேரணி புறப்பட்டது. புதுவண்ணையில் கழகக்...

வடக்கு மாகாண சட்டமன்ற – தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை முழுமையாக ஏற்போம் பன்னாட்டு விசாரணை மட்டுமே வேண்டும் 0

வடக்கு மாகாண சட்டமன்ற – தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை முழுமையாக ஏற்போம் பன்னாட்டு விசாரணை மட்டுமே வேண்டும்

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, இளந்தமிழகம் இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை துருக்கி நாட்டின் கோஸ் தீவில் போட்றம் கடற்கரையில் மூன்று வயதுச் சிறுவன் அயலன் சடலமாக ஒதுங்கிய நிழற்படம் ‘கரையொதுங்கிய மானிடம்’ என்ற தலைப்புடன் இணையத்தில் உலவி ஐரோப்பியர்களை உலுக்கிப் போட்டுள்ளது. அம்மக்கள் குற்றஞ்சுமந்த இதயத்துடன் ஏதிலியர் களை இருகை நீட்டி வரவேற்று அரவணைக்க முன்வந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 முடிய நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற அமர்வில் நடைமுறையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும்படியான கூறுகளுடன் ஒரு தீர்மானம் அம்மன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை புலனாய்வுக் குழுவையும், மார்த்தி அத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூ சிலாந்து), அசுமா சகாங்கீர் (பாகிஸ்தான்) ஆகிய மூவரடங்கிய அறிவுரைஞர் குழுவையும் அமைத்தார்....

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு 0

திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு

திருச்செங்கோட்டில்  கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களிடமும், இளைஞர் களிடமும் பெரியாரியலை சரியான புரிதலோடு எடுத்துச் செல்லும் நோக்குடன் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த மாதம்  06.08.2015 அன்று நடை பெற்ற நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருச்செங்கொடு பெரியார் மன்றத்தில் 13.09.2015, ஞாயிறன்று “தமிழ்நாடு-திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முன்பும் பின்பும்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் – திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலையையும், திராவிடர் இயக்க தோற்றத்தற்கு பின் தமிழகம் பெற்ற நலனையும் மிகவும் சிறப்பான முறையில் விளக்கி பயிற்சியளித்தார், இறுதியில் தோழர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட அமைப் பாளர் மா.வைரவேல், திருச்செங்கோடு நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய...

களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம் 0

களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம்

தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்க களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்துவிட்டு 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக் கிறேன். ஆனதால் இன்றைய விசயத்தைப் பற்றி நான் சரி வரப் பேச முடியா தென்றே கருதுகிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியா தென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் “இந்திய பொருளாதாரம்” என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்ட தல்ல என்றாலும் எந்தத் தலைப்பினாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத் தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததே யாகும். ஆனாலும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பேயாகும். இதன் மூலம் எனது சங்கதியை சொல்ல முடியா விட்டால் பின் எதின் மூலம் நான் சொல்லக்கூடும்? ஆனால் எனக்கிருக்கும் கஷ்ட மெல்லாம்...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

0

பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்!

செப்.17 – பெரியார் பிறந்த நாளில் விடுதலை இராசேந்திரன் எழுதி ‘தமிழ் இந்து’ வெளியிட்ட கட்டுரை. நாட்டின் விடுதலைக்கான போராட்டம். மக்களின் சமத்துவத்தையும் உறுதி செய்ய வேண்டும்; அதை காங்கிரஸ் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்குள்ளே போராடினார் பெரியார். கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் துறைகளில் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதுதான் அவரது வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை. காங்கிரஸ் அதை மறுத்தபோது பெரியார் 1925இல் வெளியேறினார். 90 ஆண்டுகளுக்குப் பின் 2015 செப்டம்பரில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி – 50 சதவீத கட்சிப் பதவிகளை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு உறுதி செய்வதாக தீர்மானித்திருப்பது – வரலாற்றின் திருப்பம் மட்டுமல்ல. பெரியார், காலத்தே எவ்வளவு முந்தியிருந்தார் என்பதையும் காட்டுகிறது. சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான ஜாதி அமைப்புதான், அவரது முதன்மையான இலக்கு. ஜாதியமைப்புக்கு கருத்தியலை வழங்கி, அதை சாஸ்திரம், மதம், கடவுள் பெயரால்...

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் 0

மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார். மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில்...

மௌலானா முகமதலி 0

மௌலானா முகமதலி

மௌலானா முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்கமாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லுபவர் களில் அவரும் ஒருவர். ஏழைமக்களை ஏமாற்றி பணக்காரர்களும் படித்த வர்களும் அனுபவிக்கும் போக்கியமாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போ துமே பிடிக்காது. தேசீயப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக் கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவே கிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்கமாட்டார். அவர் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகம் இருக்கின்றது. அதாவது, “நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன்” என்று சொன்னார். சாவது அதுவும்...

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு 0

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு

ஏற்காடு ஒன்றிய கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; வேலை வேண்டும் என்கின்ற பரப் புரை பயணம், ஏற்காட்டின் கிராமப் பகுதியான செம்மனத்தம் மற்றும் நாகலூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வு காலை 11 மணிக்கு அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் தொடங்கியது. பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து மா. தேவதாஸ், பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். அந்த கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்திருந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் நாம் இதுவரை கேட்டிராத பார்ப்பன எதிர்ப்புப் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நிகழ்வாக, நாகலூர் என்ற கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சந்தோஷ் தலைமையில் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியிலுள்ள சுய உதவிக் குழுவின் சுபம் அடார்னஸை சேர்ந்த நண்பர்கள் கழகத் தோழர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியும்,...

0

விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்

விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். “மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத்...

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது 0

ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது

நாகை மாவட்டம் குத்தாலம், வழுவூர் ஊராட்சி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயில் குளத்தில் நீர் எடுத்து கோயில் விழா நடத்த முயன்ற திருநாள்கொண்டச்சேரி தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சில ஆதிக்கசாதியினர் மீது சட்ட நடவடிக்கையும், தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், அனைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் 14.9.2015 அன்று மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் அன்பரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, நாஞ்சில் சங்கர், தமிழ் வேலன், இராஜராஜன், நடராஜ், ரமேஷ், இயற்கை, ஜாகிர், விஜய ராகவன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைதாயினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் உரிமை இயக்கம், சி.பி.ஐ.எம்.எல். விடுதலை,...

பன்னாட்டு விசாரணையை நோக்கி… 0

பன்னாட்டு விசாரணையை நோக்கி…

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் போர்க் குற்றங்கள்; மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்ததை உறுதி செய்துவிட்டது அய்.நா. மனித உரிமை ஆணையம். மனித உரிமைக் குழு தலைவர் சையத் உசேன் செப்.16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சட்டவிரோத கொலைகள், பாலியல் வன்முறைகள், போரில்லா பகுதி என்று அறிவித்த பகுதியில் மக்களை குறி வைத்து நடத்திய தாக்குதல், காணாமல் போனவர்கள், கைது செய்யப் பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் போன்ற கொடும் குற்றங்கள் நிகழ்ந்ததை உறுதி செய்கிறது அறிக்கை. “இந்த கொடூரமான குற்றங்கள் திட்டமிடப்பட்டவை. இவைகள் நடத்தப்பட்ட ஒரே மாதிரியான முறைகளைப் பார்க்கும்போது, இந்தக் குற்றங்கள் ஆங்காங்கே தனித்தனியாக நடந்ததாகக் கருத முடியாது. அரச அமைப்பே நடத்திய குற்றங்கள் (யடட யீடிiவே வடிறயசனள ளலளவநஅ ஊசiஅநள) என்று அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. சிங்களர்கள், சர்வதேச சட்ட நிபுணர்கள் கொண்ட கலப்பு நீதிமன்ற (hலசெனை உடிரசவள) விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்...

திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு “ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்’’ 0

திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு “ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்’’

“ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்தானம்” நிஜசிருங்கேரி க. நெ. 53. ( முகாம் புஷ்பவனம் ) “அஸ்மத் பிரிய முக்கிய சிஷ்யரான கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு கஷ்பா வெங்கிட்டசாமி நாயுடு குமாரர் ஸ்ரீமான் ராமசாமி நாயுடுவினுடைய சமஸ்த்த ஐஸ்வரிய ஆரோக்கிய அபிவிருத்தியின் பொருட்டு திரிகால அனுஷ்டானத்திலும் பகவத் பிரார்த்தனையுடன் ஆசிர்வதித்து எழுதி வைத்தனுப்பிய ஸ்ரீமுகம். இங்கே ஆர்காடென்னும் சடாரண்ண nக்ஷத் திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்திய ஸ்ரீ பரத்துவாஜ மஹாரிஷி ஆசிரத்தில் லோகத்தில் எல்லோருடைய nக்ஷமத் தைக் குறித்து தபஸ் செய்து கொண்டு இந்த மரியாதையை அனுப்பி யிருக்கிறோம். சம்பாதி – லோககுரு ஸ்தானமாகிய இதில் பரதகண்டத்திலுள்ள சனாதன தர்மத்தை கெடுக்காமலும் எல்லோருக்கும் nக்ஷமம் உண்டாகும் படிக்கும் பாரபக்ஷம் இல்லாமல் படிக்கும் சாஸ்திர எல்லைகள் கடவாமல் படிக்கும் பிபீலகாதி பிரம்மம் பரியந்தம் (எரும்பு முதல் பிரம்மாதிகளிலும்) எல்லாவற்றிலுமிருப்பது ஒரே பிரம்மமென்று எல்லோருக்கும் பிரம்மானந் தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம்...

0

மதக் கலவரத்தைத் தூண்டும் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலம்

செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை அய்ஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலிருந்து பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலம் புறப்படும். தலைமை : ஈரோடு இரத்தினசாமி (கழகப் பொருளாளர்) முன்னிலை: தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்)   ‘விநாயகன்’ ஊர்வலத்தை ஏன் எதிர்க்கிறோம்? ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா? விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் – மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் – மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா? ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப...

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர் 0

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர்

இன்று நமது நாட்டில் நடைபெற்று வரும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங் கள் சிறிதாவது நாணைய லட்சியத்தின் பேரிலோ, நாகரீக மக்களைக் கொண்ட நாடு என்ற தத்துவத் தன்மையிலோ நடைபெறுவதாகச் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம். சில இடங்களில் நாகரீகமாயும் நாணையமாயும் நடக்கின்றது, நடந்தது, நடக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் பெருவாரி யாக 100க்கு 75க்கு மேலாக நடைபெறும் நிர்வாகங்கள் பெரிதும் மோசனமானவைகளே யாகும். இதற்கு முழு பொறுப்பும் அவ்வவ்விடத் திய மக்கள் பேரிலேயோ, அல்லது ஸ்தாபன அங்கத்தினர்கள் மீதிலேயோ மாத்திரம் போடத்தகுந்தது அல்லவென்றும் சொல்லுவோம். இன்னமும் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுமானால் அநாகரீகமும் ஒழுக்கக் குறைவானதுமான ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குப் பெரிதும் அந்த இலாகா மாற்றப்பட்ட இலாகாவாக இருப் பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிப் பதவிக்கு படிகளாய் இருப்பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிகளைக் காப்பாற்றத்தக்க ஆதரவுகளாய் இருப்பது மான ஒரு முறை முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். மற்றும்...

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா 0

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய, கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும், வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும். சகோதரர்களே! சகோதரிகளே!! உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச் சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர் கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும்...

“ஸ்ரீமுகம்” 0

“ஸ்ரீமுகம்”

சிருங்கேரி மடாதிபதி உயர்திரு “ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள்” அவர்களிடமிருந்து நமக்கு வந்த “ஸ்ரீமுக;” அழைப்பை, இவ் விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம். திரு. மடாதிபதி அவர்கள் அந்த “ஸ்ரீ முகம்” நமக்கு அனுப்பியதற்காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதியும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும் நாம் நம் சார் பாகவும் நமது மனைவியாரின் சார்பாகவும் நமது மனப் பூர்த்தியான நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். நிற்க அந்த “ஸ்ரீமுக”த்தில் “சனாதன தர்மத்தை கெடுக்காமல்;” “கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து” “சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் “சில சுதந்திரங்கள் அளிக்கப்படும்” என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்ற படியால், நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது. ஆயினும் பொருப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும் பல...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

ஸ்தல ஸ்தாபன மசோதா 0

ஸ்தல ஸ்தாபன மசோதா

சென்னை சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மசோதா ஒன்று ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் கொண்டுவரப் பட்டதானது இவ்வாரம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அநேகமாக மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் சம்மதமும் கவர்னர் ஜனரல் அவர்கள் சம்மதமும் பெற்று இவ் வருஷத்திலேயே அமுலுக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். இந்த சட்டம் செய்யப்பட்டதின் மூலம் சில நன்மைகள் ஏற்படக் கூடும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும் பலன் கொடுக்கும் முக்கியமான நன்மைகள் எதுவும் பிரமாதமாய் ஏற்பட்டு விடும் என்பதாக நம்மால் நினைக்க முடியவில்லை. ஸ்தல சுயாட்சி போன்ற ஸ்தாபனங்களில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அச்சீர்திருத்தங்கள் மிகுதியும் அந்த ஸ்தாபனங் களின் நல்ல ஆட்சிக்கும் நாணயத்திற்கும் வரிப்பொருளை சரியானபடி செலவழிப்பதற்கும் உபயோகப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். இப்போது நமது நாட்டில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இந்த மூன்று குணங்களையும் காப்பாற்றும்படியான சக்தி இல்லை என்று பல தடவை அழுத்திச் சொல்லு வோம். அதுவும்...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி    சுயமரியாதைத் தலைவர்                                                             திரு. சௌந்திரபாண்டியன் அபிப்பிராயம் 0

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி சுயமரியாதைத் தலைவர் திரு. சௌந்திரபாண்டியன் அபிப்பிராயம்

“ஸ்தலஸ்தாபன சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மான விதி மிகவும் அவசியமாய் இருக்க வேண்டிய தொன்றாகும். அதை நான் நல்ல நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென்று கருதுவதோடு அதை எந்தக் காரணம் பற்றியும் எடுத்து விடக்கூடாது என்று கருதுகின்றேன். அதோடு ஒவ்வொரு ஜில்லா போர்டுக்கும் ஒவ்வொரு நிர்வாக அதிகாரி (எக்ஸ் கூட்டிங் ஆபீசர்) இருக்க வேண்டுமென்று எனக்கும் இச்சட்டம் செய்யும் பொழுது தோன்றியது போலவே இப்பொழுதும் தோன்றுகிறது. அவ்விதம் செய்யப்படுமானால் போர்டின் தலைவர்களுக்கு இப் பொழுது ஏற்படும் அநேக இயற்கைக் கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கி தாக்ஷண்ணியமில்லாமல் தனது கடமையைச் செய்ய இடமுண்டாகும். ஆகையால் சர்க்கார் இந்த ஏற்பாட்டைச் சீக்கிரம் அதாவது அடுத்த வரு ஷத்திலாவது செய்வார்களென்று நம்புகிறேன்” என்றும் தனது நிர்வாகத்தில் தனக்கும், மெம்பர்களுக்கும் நடந்து வந்த சம்மந்தத்தைப்பற்றி அவர் சொல்லும்போது, “இந்த இருபத்தைந்து மாத காலத்தில் றாமநாதபுரம் ஜில்லா போர்ட் நிர்வாக நடவடிக்கைகளில் இது வரையும் ஒரே ஒரு விஷயம். அதாவது...

பூரண சுயேச்சைப் புரட்டு – II 0

பூரண சுயேச்சைப் புரட்டு – II

1929 – ம் வருஷம் காங்கிரசானது “இந்திய தேசியப் போராட்டம்” என்பதின் இரகசியத்தை வெளியாக்கி விட்டது ஒரு புறமிருக்க இப்போது ஏதோ சத்தியாக்கிரகப் போர் சமீபத்தில் தொடுக்கப் போவதாக பெரிய ஆர்ப் பாட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வார்ப்பாட் டங்கள் காங்கிரசுக்கோ காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கோ ஒரு சிறிதும் சம்மந்த மில்லாமல் திரு காந்தி அண் கோ கம்பெனியாருக்கு கன்ட்றாக்ட்டு விடப் பட்டு விட்டதாய்த் தெரிகின்றது. இதன் கருத்து என்ன வென்றால் திரு. காந்தி யால் ஏதாவது வெற்றி (ஏற்படப்போவதில்லை உறுதி உறுதி) ஏற்படு மானால் உடனே அதை தேசிய வெற்றி என்று கொட்டை எழுத்தில் போட்டு பெருமை பாராட்டிக் கொள்ளவும் தோல்வி அடைந்தால் “முன்னமேயே தெரிந்து தான் அதன் பொருப்பை காங்கிர° ஏற்றுக் கொள்ளாமல் திரு. காந்தி யின் தலையில் போட்டு விட்டது” என்று சொல்லவும் இடம் வைத்துக் கொள்ள செய்த காரியமே யாகும். அன்றியும் மேற்படி சத்தியாக்கிரகத்தையோ சட்டம் மீறுவதையோ சர்க்கார்...

“தமிழ் நாடு” 0

“தமிழ் நாடு”

“தமிழ் நாடு” பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங்களுக்கும், திரு. கிருத்திவாசய்யர் நாம் குடி அரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதின வைகளில், தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத் திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்பதற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப் பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார் மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொரு வர்களுடைய மறுப்புகளோ எதிர்ப்புகளோ கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகி விட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலாமென்பதே நமது கருத்தாகும். ஆனால் ஒரு விஷயம் இப் போதே எழுத வேண்டியது அவசரமென தோன்றுகின்றது....

“சண்டமாருதம்”     ஆசிரியர் அ. பொன்னம்பலனார் 0

“சண்டமாருதம்” ஆசிரியர் அ. பொன்னம்பலனார்

கோட்டையூரிலிருந்து வெளிவரும் “சண்டமாருதம்” என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளி யிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கேற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதே யாகும். அதன் ஆசிரியரான திரு. அ. பொன்னலம்ப னாரைப்பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். என்னேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராக்ஷ மாலை பூண்டு தேவார திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல்களை கண்களில் நீர் ஒழுகத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசை யோடு பாடிப்பாடி சைவப் பிரசாரம் செய்தவர் – பூவாழூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர் களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப் பட்டவர் சுயமரியாதையில் திரும்பி “சண்டமாருதம்” போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே “சண்டமாருதம்” என்ற பத்திரிகையின்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறு ஜன்மம் எடுக்கப்படும்” என்றும் எழுதி வைத்ததே காரணமாகும். * * * எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கி யதை அற்றவனாவான். * * * புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்கு பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்துவிடுவார்கள்...

“புதுவை முரசு” 0

“புதுவை முரசு”

“புதுவை முரசு” என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவை (புதுச் சேரி)யில் இருந்து சில மாதங்களாக வெளிவருவது யாவருக்கும் தெரிந்த தாகும். அப்பத்திரிகை ஆரம்பித்ததின் னோக்கமே சுயமரியாதைக் கொள்கை களைப் பறப்பவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப் பட்டதாகும். அப்பத்திரிக்கைக்கு இப்போது திரு.எஸ். குருசாமி பி.ஏ., அவர்கள் ஆசிரியராய் இருக்கச் சம்மதித்து இருக்கின்றார். திரு. குருசாமியைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம், அவர் பல நாள் குடி அரசு ஆபீசி லும், ரிவோல்ட் பத்திரிகை பிரசுரத்தில் முக்கியஸ்தராகவும் இருந்து வந்தவர். சுயமரியாதை இயக்க கொள்கைகள் முழுவதும் நன்றாய் உணர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய உலக ஞானப் பாண்டித்தியம் உடையவர். இவ்வியக்கத்திற்கே தனது வாழ்நாளை பயன்படுத்த கவலை கொண்டுள்ள ஒரு உண்மைச் சுயமரியாதை வீரர். அவர் தனது சுயமரியாதை உணர்ச்சிக் கேற்ற துணைநலம் கொண்டவர். ஆகவே அப்படிப் பட்ட ஒருவரால் நடத்தப் படும் பத்திரிகை சுயமரியாதை உலகத்திற்கு...

ஓர் வேண்டுகோள் 0

ஓர் வேண்டுகோள்

50 வருஷத்திற்கு முன் சுயமரியாதை இயக்கம் சுமார் 40, 50 வருஷத்திற்கு முன் பதிப்பித்ததும், இந்து மத ஆச்சார ஆபாச தரிசினி என்ற பெயர் கொண்டதும், 762 பாடல்களை உடையதும். கிரௌவுன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக்கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம். ஏனெனில் அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மிக்க பழயதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும் சில பக்கங்கள் கிழிந்தும் சரிவரத் தெரியாமலும் இருப்பதால் கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கிறது. அப்புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன. ஈ.வெ.ரா. குடி அரசு – வேண்டுகோள் – 16.02.1930

“குடி அரசு” 0

“குடி அரசு”

சந்தாதாரர்களுக்கு ஓர் அறிவிப்பு “குடி அரசு” பத்திரிகை சந்தாதாரர்களால் தங்களுக்குப் பத்திரிகை சரியாய் வருவதில்லை என்பதாக தினம் ஏராளமான ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் பல பத்திரிகையின் மீதுள்ள வெறியி னாலும் (சில பணத்தை உத்தேசித்ததாகவும் இருக்கலாம்) பலவாராக பொருமை இழந்து எழுதப்பட்டவைகளாக காணப்படுகின்றன. பத்திரிகை சென்னைக்கு மாற்றப்பட்டதாலும் சென்னையில் ஏற்பட்ட பலவிதத் தொல் லையாலும் நாம் மலாய் நாட்டுக்கு போய் இருந்த காலையில் பத்திரிகை நிருவாகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் நடத்தையாலும் பத்திரிகைகள் 3 வாரம் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் நாம் சரியாய் அனுப்பிய காலங்களில் கூட தங்களுக்கு சரியாய் பத்திரிகை கிடைக்கவில்லை என்பதாக வரும் ஆவலா திகளே அநேகமாய் காணப்படுவதால் நாம் அவற்றிற்கு ஒரே பதில் தான் சொல்லக்கூடிய நிலையில் இருக்கின்றதற்கு வருந்துகின்றோம். அதாவது, நாம் வாரம் 9000 காப்பிகள் அச்சடித்ததற்கு காகித செலவும், அச்சடித்தவைகளை தபாலில் அனுப்பியதற்கு ஸ்டாம்பு செலவும், ரயிலில் பார்சலாய்...

சுயமரியாதை மாகாண மகாநாடு 0

சுயமரியாதை மாகாண மகாநாடு

சுயமரியாதை மாகாண மகாநாடு முதல் முதலாக சென்ற வருஷம் செங்கல்பட்டில் கூடியதும் அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி 4, 5 வருஷ கால மானாலும் அது ஒரு விதமாக அதாவது சாதகமாகவோ அன்றி பாதக மாகவோ எப்படியோ ஒரு விதத்தில் பொது மக்களின் கவனத்தை இழுத்து எங்கு பார்த்தாலும் இவ்வியக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் படியான நிலைமையை பெற்றுவிட்டது. மற்றும் இவ்வியக்கம் வேகமானது. இன்றையதினம் அரசியல் விஷயங்களிலும் மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் புகுந்து அவைகளையெல்லாம் சற்று ஆட்டி விட்டதோடு இதன் பேரால் பிழைத்து வந்தவர்களின் பிழைப்பில் மண் போடும்படியான நிலைமை ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவைகளுக்கு ருஜுவு வேண்டுமானால் நமது எதிரிகளின் வாக்கு மூலங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது சட்ட சபைகளில் திரு. முத்துரங்க முதலியார் போன்றவர்கள் மூலமாய் சுயமரியாதை இயக்க விஷயமாய் கேட்கும் கேள்விகளாலும்,...

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம் 0

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்

வட மாகாணத்தில் சுயராஜ்ஜியத்திற்காக என்று செய்யப்படும் சத்தி யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ஜிய சூட்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வருணாசிரம சுயராஜ்ஜிய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும், மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதி திராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்கமுடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்ப தாகவும் பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிருத்துபவர் களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக்காரர் ராஜ்ஜிய மாகிய “பட்டப்பகலில்” இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வருணாசிரம சுயராஜிய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 04.01.1931

சித்திரபுத்திரன் 0

சித்திரபுத்திரன்

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக் கும் தாலிகள் திருட்டுப்போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப்போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் அந்த விக்கிரகங்களில் அந்த தேர் வாகனங்களில் “புனிதத்தன்மை தெய்வத்தன்மை அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப் படுத்தும் தன்மை” முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்க ளிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா தயவு செய்து சொல்லுங்கள். இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வர னாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப்போன கடவுள்...