Category: பெரியார் முழக்கம் 2020

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மும்முனை சந்திப்பில்  08.01.2020 அன்று 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடந்தது. கார்மேகம்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கல்லை மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  குமார், அன்பு, துளசிராசா, வீரமணி, சங்கர், கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நாராயண குப்பம் இராசா உள்ளிட்ட முப்பதிற்கும் மேலான கழகத்  தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு…

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு…

பேரணிகளில் பிடித்துச்  செல்வதற்கு ஏதுவான திராவிடர் விடுதலைக் கழகக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9841653200 கொடி அளவு : 4 அடி உயரம் 1.5 அடி அகலம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஒரு கொடியின் விலை: ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்) பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

05.01.2020 அன்று காலை 11 மணியளவில்  கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில்  இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு  சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16012020 இதழ்

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு...

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார். “சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 12ஆவது சந்திப்பு 04.01.2020 அன்று  மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்’ நூலை ஆய்வு செய்து, இமானுவேல் துரையும், ‘ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வதந்திகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரனும் கருத்துரை வழங்கினர்.  CAA மற்றும் NRC குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  விரிவாக சிறப்புரையாற்றினார். இறுதியாக இசை இனியாழ் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்றார். சென்னையைச் சார்ந்த தோழர்கள் அறிவுமதி, ஆதவன், தமிழன்பன், வினோத் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

குடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

குடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை இந்திய நாட்டிற்கு தேவையற்ற வீணான முயிற்சிகள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 106 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வியாழக்கிழமை யன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில், இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்புக்கு உறுதியளித்த, அகில இந்திய மற்றும் மத்திய சேவைகளின் முன்னாள் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு நடத்தைக் குழுவான நாங்கள், ‘சிஏஏ-என்ஆர்சி- என்பிஆர்’ ஆகிய மூன்று பிரச்சனைகளும் ஒன்றோ டொன்று தொடர்புடையவை என்று உங்களுக்குத் தெரிவிப்பதை எங்களின் கடமையாக கருதுகிறோம். என்பிஆர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான விவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்த நடவடிக்கைகளை ஏன், உறுதியாக எதிர்க்க வேண்டும் என்பதையும் விளக்க விரும்புகிறோம். சிஏஏ விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடி தன்மை குறித்து, எங்களுக்குபெரும் அவநம்பிக்கை உள்ளது. அவை தார்மீக ரீதியாக மறுக்க முடியாதவை என்றும் நாங்கள் கருதுகிறோம்....

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

உ.பி. மாநிலத்தில் கோயில் ஒன்றில் ஒருவர் இராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் என்பதற்காக பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டது. ராமன் வேடம்போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்ற ‘தன்மான’ப் பிரச்சினைக்காக இவர்கள் எதிர்க்கவில்லை. வேடம் போட்டவர் ஒரு முஸ்லிம். நாடக நடிகர். நடிப்புத் தொழில் இல்லாதபோது குடும்பத்தைக் காப்பாற்ற ‘ராமன்’ வேடம் போட்டு பிச்சை எடுப்பது அவரது வழக்கமாம். ஒரு இஸ்லாமியர் பிச்சை எடுப்பதற்குக்கூட ராமன் வேடம் போடக் கூடாது என்கிறது ‘பஜ்ரங்தள். “கடவுள் வேடம் போட்டு பிச்சை எடுக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; இது இந்து நாடு; எங்கள் நாடு” என்று பொங்குகிறார்கள். ஆனால், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் ‘இந்து’க்கள்தான் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்...

கடவுளுக்கு மருத்துவ ‘செக்-அப்’

கடவுளுக்கு மருத்துவ ‘செக்-அப்’

உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கோயில்களிலுள்ள கடவுள்களுக்கு ‘ஷொட்டர்கள்’ போடப்பட்டுள்ளதாம். அர்ச்சனை மந்திரங்கள் ஷொட்டர்களுடன் உள்ள கடவுள்களுக்கு நடக்கிறதாம். கோடை காலத்தில் குளிர் சாதன வசதிகளை செய்ததாகவும், காற்று மாசுபாடு இருந்த காலத்தில் அதைத் தடுக்கும் கவசங்கள் அணிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடவுள் சிலைகளுக்கு உயிர் இருப்பதால் இந்த பாதுகாப்புகள் தேவைப்படுகிறது என்று ஒரு வேத பண்டிதர் சமாதானம் கூறுகிறார். கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அனைத்து உயிர்களையும் படைத்ததாக இவர்கள் கூறும் கடவுளின் உயிர், மனித உயிர்களைப் போன்றதுதானா என்று பகுத்தறிவாளர்கள் கேட்கவே செய்வார்கள். மனிதன் கடவுளை தன்னைப் போலவே கருதி தனது பண்புகளை கடவுள் மீது திணித்து விட்டான், ஜாதி உட்பட! எனவேதான் கடவுள் மனிதனின் கற்பனை என்று பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அச்சத்தின் காரணமாக கடவுள் என்ற கற்பனையை உருவாக்கிக் கொண் டான் என்பதால் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார்...

இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

இஸ்லாமியருக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

பா.ஜ.க. நடுவண் ஆட்சி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டங்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கருத்தியல் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவத்தை உருவாக்கித் தந்தவரும் அந்த அமைப்புக்கு தலைமை யேற்று வழி நடத்தியவருமான சித்பவன் பார்ப்பனர் வலியுறுத்திய கருத்து தான் இந்த சட்டங் களுக்கான பின்னணி. “இந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் இந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; இந்து என்பது தான். இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அன்னியர்கள். அவர்கள் இந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் இந்து கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு  அடிபணிய வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மத அன்னியர்கள் தங்களுக்கான தனித்த அடை யாளங்களை இழந்துவிட வேண்டும். இந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் இந்துக்கள் அல்லாத வர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது என்று கோல்வாக்கர் – “நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை (We...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை மதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறுபோடவே, குடியுரிமைச் சட்டங்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: நாட்டில் இப்போது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிற பிரச்சனை, குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்சனை. இந்தப் பிரச்சனை குறித்து, இந்த திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்; இந்த சட்ட திருத்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே, இதனால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற பொய்யான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்று பாரதிய ஜனதா தரப்பில் வாதாடப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்த சட்டம் மதத்தின் அடிப்படை யில் நாட்டை பிளவுபடுத்துகிற மிகப்பெரிய ஆபத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது என்று வெகுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் என்று...

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா 16012020 திருப்பூர்

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா 16012020 திருப்பூர்

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் சார்பாக வீரபாண்டி பிரிவில் நடைபெறவிருக்கிறது… கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றவுள்ளார். நாள்: 16.01.2020 வியாழக் கிழமை நேரம்: மாலை 5 மணி பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

கோவை மாவட்டம் அன்னூர், நல்லி செட்டிப்பாளையத்தில் ஜன. 5, 2020 அன்று கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர்  வெள்ளிங்கிரி  தலைமையில்  திராவிடர் விடுதலைக் கழகக் கொடியை மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி திறந்து வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் மந்திரமா தந்திரமா செய்து விளக்கிக் காட்டினார். நல்லிசெட்டிபாளையம் மோகன் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் வழி மொழிந்தனர்.  அதனைத் தொடர்ந்து  விஷ்ணு, மோகன் குமார், பார்த்திபன், மனோ ரஞ்சினி, தேவ பிரகாஷ், வெற்றிவேல், கோகுல், நந்தகுமார், தினேஷ் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். மற்றும் மாவட்ட மாநில தோழமைக் கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் சாமியார்களின் பித்தலாட்டங்கள் குறித்து விளக்கியும், இந்த அமைப்பு ஏன்? எதற்காக? என்றும் விளக்கமாக கருத்துரையாற்றினர். புதிய தோழர்களை உருவாக்குதல் முதல் அனைத்து  நிகழ்ச்சிகளையும் களப்பணியாளர் விஷ்ணு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ...

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக 01.01.2020 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கை யாளர் சந்திப்பும் 02.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்த தோடு அதனைப் பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப் படையில் மக்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள் நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணனை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தைத் தூண்டும்...

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர். கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும் பெரியார்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு

குடியுரிமை சட்ட திருத்தம் (CAA)/தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனை தாக்குதலுக்கு எதிராக  இயக்கங்கள் தொடர் கின்றன. எனினும் மோடி அரசாங்கம்  தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டு மல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது. CAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையும் பறிபோகாது என மோடி அர சாங்கம் கூறுகிறது. CAA  என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA  பயணிக்க ஆட்சி யாளர்கள் திட்டமிடுகின்றனர். NRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே! NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான்...

‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்

‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்

பா.ஜ.க.வை எதிர்த் தால் – பார்ப்பனர்களை விமர்சித்தால் – எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ‘இந்திய எதிர்ப்பாளர் (anti-Indian) என்று வசைப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். திமிரும், பார்ப்பன ஆணவமும் கொழுத்து திரிகிறது இந்தக் கூட்டம். அதிகார மமதையில் ஊறி நிற்கும் ‘சங்கி’ பார்ப் பனர்கள், ‘இந்தியா’ என்பதையே ஏற்றுக் கொள்ளாத ‘தேச பக்த’ கும்பல், பா.ஜ.க.விலிருந்து சங்பரிவார் துணை அமைப்புகள் வரை ‘இந்தியா’ என்பதை ஏற் பதே இல்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘அவாள்’ கண்ணோட் டத்தில் ‘இந்தியா’ என்பது ‘தீட்டு’. இந்த கும்பல் இப்போதும் தத்துவத் தந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் கோல்வாக்கர் இந்தியா என்ற சொல்லையே பயன் படுத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார். அந்த அடிப்படை யிலேயே ‘இந்தியா’ என்ற சொற்றொடரும் அரசி யல் சட்டமும் அவர் களுக்கு கசக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனத்திலும் ‘இந்தியா’ என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்துவது கிடையாது. ஆர்.எஸ்....

சீனாவும் ஈரானும் ‘இந்து  தேசம்’ என்று உரிமை கோருகிறது ஆர்.எஸ்.எஸ்.

சீனாவும் ஈரானும் ‘இந்து தேசம்’ என்று உரிமை கோருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்து புராணங்களை வரலாறுகள் என்று ‘சங்கி’கள் பேசி வருவதை வரலாற்று அறிஞர்கள் நகைக்கிறார்கள். சுப்ரமணிய சாமி பார்ப்பனர் இப்போது இராமன் கோயில் பிரச்சினையை முன் வைத்து எழுதியுள்ள நூலில் இந்தியாவின் வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சுப்ரமணியசாமி எழுதியுள்ள இந்த ‘மடத்தனமான’ கருத்துகளை அவரது மூளையில் ஏற்றி வைத்தது, கோல்வாக்கரின் சிந்தனைதான். பாகிஸ்தான், பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான், சீனாவும் இந்துக்களுக்கான நாடு என்று எழுதியதோடு அதற்கு சான்றாக புராணங் களையே வரலாறுகளாக்குகிறார், கோல்வாக்கர். அதையே சு. சாமியும் இப்போது பேசுகிறார். கோல்வாக்கர் எழுதுகிறார்: “நமது தாய்நாடு எவ்வளவு தூரம் பரந்து, விரிந்து கிடக்கிறது என்பதைத்தான் நமது புராணங்களும் இதிகாசங்களும் சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய ஆப்கானிஸ்தான், நமது பழைய உபகானஸ்தான்; மகாபாரதத்தில் வரும் சால்யா, ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்தவரே. நவீன காபூலும், காந்தாரமும் அன்றைக்கு ‘காந்தார தேசமாக’ இருந்ததுதான். அந்த நாட்டை (ஆப்கானிஸ்தான்)ச் சார்ந்தவர் தான், கவுரவர்களின் தாயாகிய காந்தாரி....

பா.ஜ.க. நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத் தான்

பா.ஜ.க. நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத் தான்

இந்துக்களுக்கான நாடு ஒற்றை நாடாக இருக்க வேண்டும்; மாநிலங்களாக பிரியக் கூடாது என்பதே “சங்கி”களின் கொள்கை. இந்த உண்மைகளை எல்லாம் வெளியே பேசாமல் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சி இந்தக் கொள்கை யின் அடிப்படையில்தான் ‘மாநிலங்களின்’ உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டு வருகிறது. ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே வரி விதிப்பு, ஒரே ரேஷன் கார்டு என்ற மாநில அதிகாரங் களைப் பறிக்கும் நடவடிக்கை களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய கொள்கை இருக்கிறது. ட    மாநிலங்களின் மொழி வழிப் பிரிவினையை ஆதரித்து காங்கிரஸ் தீர்மானம் போட்டபோது பா.ஜ.க.வின் மூதாதையரான இந்து மகாசபை மாநிலங்கள் பிரிவினையை கடுமையாகக் கண்டித்து தீர்மானம் போட்டது. ட    “இதனால் மாநிலங்களுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் கிடைத்து விடுகிறது. கூட்டாட்சி முறை வந்து விட்டால் ஏராளமான அரசியல் கட்சிகள் வந்துவிடும். அதனால் தகராறுகள் ஏற்படும். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக ஆகி விடும். அதனால் இந்தப் பழமை...

‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம் : குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு

‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம் : குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு

குஜராத் சட்டப் பேரவைத் தலைவரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான இராஜேந்திர திரிவேதி எனும் பார்ப்பனர், ‘பிராமணர்களின் மரபணு, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது” என்று பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கும் உரிமை ‘பிராமணருக்கு’ மட்டுமே உண்டு என்றும், அது பிராமணர்களின் பிறப்புரிமை என்றும் பேசியிருக்கிறார்.  குஜராத் காந்தி நகரில் ‘பிராமண வணிக சம்மேளனம்’ நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற ஒன்பது பேரில் 8 பேர் ‘பிராமணர்கள்’ என்றும் பெருமையுடன் பேசினார். தலித் மக்களின் அடையாளமாகவும், அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவராகவும் இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்கியதே ஒரு ‘பிராமணர்’ தான். அவர்தான் அம்பேத்கருக்குப் பின்புலமாக நின்று, அவரை உயர்த்திவிட்டவர் என்றும், ‘பிராமணர்கள்’ எப்போதுமே அடுத்தவர்களை வளர்த்து விடுபவர்கள் என்றும் திரிவேதி கூறினார். பி.என். ராவ் தான் சட்டங்களை எழுதியவர் என்றும் இந்தப் பெருமை அவருக்கே உரியது என்றும் அம்பேத்கரே ஒப்புக் கொண்டதாக...

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்து, ‘இந்துத்துவ பார்ப்பனிய’ கும்பல், மாணவர் களையும் பேராசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களுடன் குறி வைத்து தாக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர் தலைவர்களையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த  மூர்க்கத்தனமான தாக்குதலில் 34 மாணவர்கள் படுகாயத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். விரல்கள் உடைந்து, கடுமையான தலைக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை செய்தால் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிரான சாட்சியமாகிவிடும் என்று மனசாட்சியே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் அரசு  அதிகார மிரட்டலுக்கு பணிந்து செயல்பட்டிருக்கிறது. மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் ஜெகதேஷ் குமார், மாணவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றத்துக்காக பதவி விலக வேண்டும் என்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன. “வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தியபோது என்னை குறி வைத்து...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

அகில இந்திய மற்றும் தமிழ்நாடு அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் பதக்கம் வென்றவர் களுக்கு திவிக சார்பில் நினைவு பரிசுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வழங்கினர். அகில இந்திய போட்டியில் அஸ்வின் – வெண்கலம், பிரவீன் – வெள்ளி, மகேஷ் – வெள்ளி, ராஜ் – வெண்கலம், சரண் – வெண்கலம், மாணிக்கம் – வெண்கலம், கார்த்திக் – வெண்கலம் வென்றனர். தமிழ்நாடு அளவிலான போட்டியில் மாணிக்கம் தங்கப் பதக்கத்தையும், கார்த்திக் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  நிகழ்வில் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 100 சந்தா மற்றும் மாத ஏடான நிமிர்வோமிற்கான 20 சந்தா தொகைகளை கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் மயிலை பகுதி சார்பாக தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 19122019 இதழ்

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வு – சந்திப்பு – டிசம்பர் 11ஆம் தேதி தியாகராயர் நகர் சபரி உணவகத்தில்  நடந்தது. கழகத் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் பங்கேற்று – அன்பு தனசேகரின் துடிப்பு மிக்க கொள்கை செயல்பாடு களையும் – துணைவியார் லதா, அனைத்து குடும்பப் பொறுப்புகளையேற்று செயல்பட்டு வருவதையும் பாராட்டினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர் அன்பு தனசேகர் பல ஆண்டுகாலமாக பெரியாரிய கொள்கைகளை பரப்புவதிலும் இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்று செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அன்பு தனசேகர் -லதா, அன்பு மகள்கள் தமிழ்ச் செல்வி, இளவேனில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப் பட்டது. பெரியார் முழக்கம் 02012020 இதழ்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

சேலம் மேட்டூரில் 2019 மே 25 ஆம் தேதி  நடைபெற்ற நாத்திகர் பேரணி விழாவில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ 1,11,400 கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டது. அதில் குமாரபாளையம் பகுதியில் நிதி அளித்தவர்கள் விவரம்: குமாரபாளையம் மாதுராசு   ரூ. 5000 ஆ.சுப்பிரமணி, கல்லிபாளையம்    ரூ. 5000 மோகன் கிருட்டிணவேணி   ரூ. 5000 பா.செல்வராஜ்   ரூ. 5000 T.சேகர், ஏஜென்சி பவானி   ரூ. 5000 மு.சாமிநாதன் சந்திரா ரூ. 5000 உதயம் ஆப்டிக்கல்ஸ்     ரூ. 1500 ஸ்ரீராம் கார்மென்ட்ஸ்      ரூ. 2000 லோகேஸ் கங்கா      ரூ. 1000 மாயாவி, காளிப்பட்டி   ரூ. 1000 M.G நாத், பவானி     ரூ. 1000 கௌதம், G L லூம்ஸ்                 ரூ. 2000 EB AD சீனிவாசன்     ரூ. 1000 செல்வராஜ்      ரூ. 2000 திராவிடமணி கௌதம்      ரூ. 1000 மோகன்   ரூ. 1000 காந்தகுரு...

கழக ஏடுகளுக்கு சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்

கழக ஏடுகளுக்கு சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு உறுப்பினர் பட்டியலுடன் சென்னை மாவட்டக் கழக சார்பில் ரூ.30,000/-த்தை கழகப் பொதுச் செயலாளரிடம் வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ராஜி வழங்கினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழக ஏடுகளின் சந்தாத் தொகையாக ரூ.20,000/- வழங்கினார். கோவை மாவட்டக் கழக சார்பில் நிர்மல் குமார் ரூ.23,900/- வழங்கினார். இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார் ரூ.12,000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் NRC மற்றும் CAA  திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த்  (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.  தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர்.  தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை),  அஸ்லாம் (தமிழக மக்கள்  ஜனநாயக கட்சி)  ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக  கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள்...

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

கழக செயலவை யில் கழகக் கட்டமைப்பு நிதி யாக ரூ.35,000/- தர்மபுரி மாவட்டத் தலைவர் வேணுகோபால், அமைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் கழகத் தலைவர், பொதுச் செய லாளரிடம் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 02012020 இதழ்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா. பாலசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழகம் க. அன்பழகன், திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி ஷேக். இப்ராஹிம், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் நாவலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’ என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஆ. ஜீவா,...

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் : பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கிறார்

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் : பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கிறார்

இன்று நாடு எதிர்கொள்ளும் நிலையானது, ‘ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல’என்று மத்திய அரசின்முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரிக்கை செய்துள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன், பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய அலுவலக முன்னாள்தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து கட்டுரை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அதில், “வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கிறது” என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே, ‘இந்தியாவில் நிலவுவது சாதாரணமான பொருளாதார மந்த நிலை அல்ல!’ என்று மீண்டும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரவிந்த் சுப்பிரமணியன், பேட்டி அளித்துள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது: 2011 மற்றும் 2016-க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவிகித புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளன. ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களின் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள்-...

தலையங்கம் பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?

தலையங்கம் பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?

பா.ஜ.க. – சங் பரிவாரங்கள் சில மாயைகளை பொது மக்கள் சிந்தனையில் திணித்து வைத்துள்ளனர். அந்த மாயை களைத் தகர்த்து மக்களிடம் உண்மையான விளக்கங்களை நாம் புரிய வைக்க வேண்டும். இந்தியாவில் இந்துக்கள் பெரும் பான்மையாக வாழ்கிறார்கள். அப்படி யானால்  நமது நாடு இந்துக்கள் நாடு தானே என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. இது நேர்மையற்ற வாதம். ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.  இந்தியாவில் இருப்பது அத்தகைய ஜனநாயகத் தேர்தல் முறை. இது தேர்தலுக்கான ஒரு வழிமுறையே தவிர, ஜனநாயகத்துக்கான  அடையாளம் அல்ல. ஜனநாயகம் என்பது நாட்டில் எது பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதற்கான ஆட்சி நடத்த வேண்டும் என்பது அல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றபோது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான் பெரும்பான்மை. எனவே எல்லோரையும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக வைத்திருப்பதே சுதந்திர இந்தியாவின் இலட்சியம் என்று கூற முடியுமா? மருத்துவ வசதியற்றவர்களும், வேலை இல்லாதவர் களுமே அப்போது...

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்தகால செயல்பாடுகள் – பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...