விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!
‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது. அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை. பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள். இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட்...