Category: சிறப்பு கட்டுரை

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

விநாயகர் சிலை ஊர்வலம் மத ஊர்வலம் அல்ல!

‘விநாயகர் சதுர்த்தி’ என்பது இந்துக்களின் பண்டிகை. பஞ்சாங்கத்தின்படி அது ஆக.25இல் நம்பிக்கையுள்ளவர்களால் வீடுகளில் கொண்டாடப்படுகிறது. அது மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கான மத உரிமை. அறிவியல் பார்வையில் சிந்திப்போர் இந்த பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. இது பகுத்தறிவாளர்களுக்கான உரிமை. பிரச்சினை எங்கே துவங்குகிறது? வீட்டுக்குள் பக்தர்கள் கொண்டாடும் பண்டிகையை வீதிகளுக்குக் கொண்டு வந்து மதத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஏனைய மதத்தினரை மத நம்பிக்கை இல்லாதோரை எதிரிகளாக சித்தரித்து கலவரத்தையும் பதட்டங்களையும் உருவாக்கும்போதுதான், ‘மதம்’ அரசியலாக்கப்படுகிறது. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று முழங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அரசியல் அமைப்புகள் தங்களுக்குள் ‘ஒற்றுமையை’ உருவாக்க முடியாமல் சிலைகளை அமைப்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறுகளையும் சமூகப் பதட்டத்தையும் உருவாக்கி விடுகிறார்கள். இப்போது சிலைகளை அமைக்கும் ‘இந்து அரசியல்’ அமைப்புகள் எவை? பா.ஜ.க.வின் ஊது குழல்கள். இவர்கள்தான் நமது ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி உரிமையைப் பறிக்கும் நீட்...

கழகத் தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிலவற்றின் புகைப்பட தொகுப்பு. புகைப்படங்களை காண சுட்டிகளை சொடுக்கவும்   மே 17 தோழர்களுக்காக அறிவுரைக் குழுமம் சென்னை 29062017 மஞ்சள் நாடகம் சென்னை 30062017 ஆதி தமிழர் கட்சியின் ‘நடுகல்’ ஏடு வெளியீடு சென்னை 30062017   காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை 15072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017 பேரா. ஜெயராமன் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை 18072017 காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 21072017 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 30ஆம் ஆண்டு கருத்தரங்கம் சென்னை 29072017   பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது சென்னை 06082017 தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017   நாகராஜ் – அசுவிதா இணையேற்பு திருப்பூர் 10092017 தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா 16092017 கணியூர்,...

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

மாநாட்டின் தீர்மானங்கள் ‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: காவல்துறையில் தனிப் பிரிவு :  தீர்மானம் : 1 – ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும்...

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது. அதன் முக்கிய பகுதிகள் : மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக்...

தமிழக மருத்துவ சேவையை  முடக்கும் ‘நீட்’

தமிழக மருத்துவ சேவையை முடக்கும் ‘நீட்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் உருவாக்கிய கல்வி அமைப்பு. அந்த அமைப்பை நாம் பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து பறித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்தளித்தோம். பிரிட்டிஷ்காரர் நாட்டை ஆண்டபோது பிரிட்டிஷார் வழங்கிய நமக்கான சொற்ப அதிகாரங்களோடு மாகாண சபையை நமது முன்னோர்களான நீதிக் கட்சியினர் வழியாக ஆட்சி செய்தோம். 1928ஆம் ஆண்டிலேயே நாம் இந்த கல்வி வேலைவாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். “சுதந்திர”த்துக்குப் பிறகு காமராசர் ஆட்சி யில் சமூகநீதி இலவசக் கல்வி மடை திறந்த வெள்ளம்போல் பரவியது. தொடர்ந்து அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சி யிலும் நாம் நமக்கான இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையைக் கொண்டே முன்னேறினோம். அதனால்தான் மண்டல் பரிந்துரையை அமுலாக்கி, மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதன் காரணமாகவே பிரதமர்...

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுதும் 2000 விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 200 விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்து விட்டனர். பெரும் தொழில் நிறுவனங்கள் அரசு பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்வதற்கு ‘வராக் கடன்கள்; செயல்படாத சொத்துக்கள்’ என்று பெயர்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது பார்ப்பன அதிகாரவர்க்கம். கல்லூரி படிப்புக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத மாணவர்களின் படத்தை வங்கி விளம்பரப் பலகையில் ஒட்டி அவமானப்படுத்தும் பார்ப்பன வங்கி அதிகாரக் கும்பல், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பண முதலைகளின் பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வெளியிட மறுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கிகளில் ‘பெரும் பணத் திமிங்கிலங்கள்’ கடனாக வாங்கி, பட்டை நாமம் போட்ட தொகை...

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் மோடியின் பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் திணித்து வரும் இந்தி – இந்துத்துவா எதிர்ப்பை, தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் பா.ஜ.க.விடம் அடங்கிப் போய் சரணாகதி நிலையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர். மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மோடி ஆட்சியின் சட்டத்தை புறந்தள்ளிய கேரள அரசு, அந்த சட்டத்தை நீக்கி மாநிலத்துக்கு தனி சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. வீடுதோறும் மக்களை சந்தித்து இந்த சடங்கு கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். ‘குடும்ப பிரபோதன்’ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பிரணாய் விஜயன், இது மனுதர்ம திட்டம் என்று அறிவித்தார். மீண்டும் ‘திராவிட நாடு கோரிக்கை எழும்’ என்று கேரளாவில் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். இப்போது கருநாடக முதல்வர் சித்தராமய்யாவும் இந்திக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். கருநாடக அரசு மும்மொழித்...

சென்னை விழாவில் கொளத்தூர் மணி பேச்சு பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது. காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம்...

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் – திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை : காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற...

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

கோவை : 8.8.2017 – கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்) 9.8.2017 – குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்) 10.8.2017 – அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்) 11.8.2017 – கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்) 12.8.2017 – வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை) மேட்டூர் : 8.8.2017 – மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்) 9.8.2017 – கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்) 10.8.2017 – அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்) 11.8.2017 – ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்) 12.8.2017 – ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி) மயிலாடுதுறை : 8.8.2017 – மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்) 9.8.2017 – நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம்,...

மலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன?

மலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார். உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத் திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ. மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங் களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 – டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த...

இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் மலேசியாவில் பெரியாரியலைப் பரப்பிய இரு நாள் எழுச்சி மாநாடு

இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்ற முழக்கத்தை முன் வைத்து, உலகத் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2017 ஜுன் 24, 25 நாட்களில், மகா மாரியம்மன் மண்டபத்தில் ஆழமான கருத்துரைகள் – விரிவான விவாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சுமார் 10 கருத்துரையாளர்கள் பங்கேற்றனர். மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரியாரியலாளர் பெரு அ. தமிழ்மணி, இம்மாநாட்டுக்கான முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தார். 2012ம் ஆண்டு பகுத்தறிவாளர் மாநாட்டையும் இதே போல் அவர் நடத்தினார். அதற்குப்பிறகு திருக்குறள் மாநாட்டையும் நடத்தினார். உலக பகுத்தறிவாளர் மாநாட்டின்போது பினாங்கு துறைமுக நகரில் பெரியாரின் சிலை நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது. ஜுன் 24ம் தேதி காலை 10 மணியளவில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரு.அ.தமிழ் மணி தலைமையேற்று மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் ஜாதிவெறி அமைப்புகள் மலேசியாவிலும் நுழைந்து ஜாதி மாநாடுகள்...

குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும்  மோடி ஆட்சியில் தலித்  மக்களின் நிலை என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி, தலித் ஆதரவு நாடகம் நடத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படு கிறதா? மோடி அரசாங்கம் மத்தியில் மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரான, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கான முன்னுரிமை என்பது ‘பசு’விற்குக் கொடுப்பதைவிட குறைவேயாகும். ஆனால் தலித்துகள்,  பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து நாட்டிலுள்ள ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. 2014 பொதுத்தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் கடந்த மூன்றாண்டுகளில் அது அமல்படுத்தியுள்ளவற்றை யும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாஜகவின் மோசமான ஆட்சியை நன்கு புரிந்துகொள்ள முடியும், ‘பாஜக மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டிருக்கிறது’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், இந்த உறுதிமொழிக்கும் எதார்த்த நிலைக்கும் தொடர்பே கிடையாது....

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன....

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே! முதல்வர் வீடு முற்றுகை: 2000 பேர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வின் பினாமியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17.6.2017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர் களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாது காப்பு சட்டம், UAPA என அடக்கு முறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் தோழர்கள்...

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஜாதிய கலாச்சாரம் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

(தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பார்ப்பனியம் கட்டமைத்த ‘கீழ்மை- மேன்மை’ ஜாதி கலாச்சாரம் குறித்த விரிவான அலசல்) 1930களில் தமிழில் பேசும்படம் வந்த தருணம், தமிழ் அடிவர்க்க/கீழ்சாதி திரைப் பட பார்வையாளர்களுக்கு மாபெரும் உற் சாகத்தை எற்படுத்திய தருணமாகும். இந்தப் புதிய பொழுதுபோக்கு பற்றி அடித்தள மக்கள் உற்சாகமடைந்த அதே வேளையில் உயர்வர்க்க / மேல்சாதி மேட்டுக்குடியினர் பெரும் கவலைக் குள்ளானார்கள்.தொடக்கத்தில்இந்தகவலைக்கு அடித்தள மக்களின் ரசனைக் குறைவைக் காரணமாக்கி,உயர்கலாச்சாரம்,கீழ்கலாச்சாரம் என்ற போர்வையில் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மேட்டுக்குடியினர் முற்பட்டபோது, புதிய சிக்கல்கள் தோன்றின. உயர் கலாச்சாரம், கீழ்கலாச்சாரம் எனும் பிரிவைப் பாதுகாக்கும் கலாச்சார வரம்புகளையெல்லாம் ஆட்டி அசைத்து, மாற்றியமைக்கும் வலிமை திரைப் பட சாதனத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஏற்கெனவே நிலவிய கலாச்சார வரம்புகளை தகர்க்கவும், தனிமைப்படுத்தப் பட்டுக் காப்பாற்றப் பட்ட மேட்டுக்குடி சாமானிய கலாச்சார வழக்கங்களை மாற்றியமைக்கவும் சினிமாவுக்கு இருந்த ஆற்றலுக்குக் காரணம் அது இதுவரை அறிந்திராத, எதிர்பார்க்காத, விதங்களில் மேட்டுக்குடியையும்...

இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது. சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது. அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில்...

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலையை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களை, பாராளுமன்றம் மூலம் 2016 – ஜூலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். எனவே, வரும் 07.05.2017ஆம் தேதி நீட் தீர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்காக விண்ணப் பித்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் மூலம் மட்டுமே, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். அகில இந்திய தொகுப்பு இடங்கள் (All India Quota) . ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்கள். வெளிநாடு...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச்சார்ந்தவராகஇருத்தல் வேண்டும் என்றுசட்டம் கூறினாலும் சட்டம்...

உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர். பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர்...

கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார். “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: நாம் எந்த மொழிக்கும்  எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை...

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்பதாலா? அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப் பாடுகளை நிறைவு செய்ய முடியுமா? பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜேஎன்யூ மாணவர்களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத் திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத்துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரிகளாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசுகின்றார்கள். ஆனால்...

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்துவரும் உரிமைகளை மீட்போம்!

இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழி நடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம். ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை  ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு,  ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும், பதவிக்கு வரவும் ‘கீழ்ஜாதி’களுக்கு உரிமை இல்லை என திமிராட்டம் போட்டது. அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து, அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக, இட ஒதுக்கீடு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த சமூகநீதிதான் நமக்கான...

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. சமகால சமூக அரசியல் சூழலில் பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் பிரச்சினைகளை அணுகுவதிலும், மக்கள்  திரளைக்   கட்டமைப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை சுயவிமர்சனங் களோடு முன் வைக்கிறது இந்தப் பேட்டி. இந்திய தத்துவ மரபில் இலக்கியங்களில் புதைந்துள்ள முற்போக்கு கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். அந்தப் பார்வையில் விவாதங்களுக்கும் விமர்சனங் களுக்குமான அவசியத்தை வலியுறுத்து கிறார். திராவிடர் விடுதலைக் கழகம் சேலத்தில் நடத்திய வேத மரபு மறுப்பு மாநாடு, இந்த திசை வழியில் மேற்கொண்ட முன்முயற்சியாகும். உரத்த சிந்தனைகளுக்கு வழி திறந்து விடும் இந்த பேட்டியை அதன் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியத் தத்துவங்களுக்கு ஒரு சமகாலத் தன்மை உள்ளதா? அதாவது நமது சமகாலப் போராட்டங்...

குஜராத்தின் சாதி ஒழிப்பு இளம் போராளி மேவானி பேட்டி

 “பெரியார் போன்ற தீரர்களைப் பெற்றதற்கு பெருமைப்படவேண்டும்!” பெரியாரின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை சமூக நீதித் தளத்தில் ஒரு படி மேலேதான் நிறுத்தியுள்ளது. சாதி என்பது உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, உழைப்பாளர்களையும் பிளவுபடுத்துகிறது. ஜிக்னேஷ் மேவானி குஜராத் மக்களின் மனங்களில் ஆழ, அகல பதிந்துவிட்ட ஒரு பெயர். செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம், ‘மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்’ என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டிய எழுச்சியின் நாயகன். சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் சொற்பொழிவில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் அளித்த பேட்டி: குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தி யிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில்...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு – மாட்டுக்கறி

மாட்டுக்கறியே என் வாழ்க்கை மாட்டுக்கறியே என் கொண்டாட்டம் மாட்டுக்கறியே என் திருவிழா மாட்டுக்கறியே என் வாழ்வு மாட்டுக்கறியே என் உணவு நான் பிறந்து கண்விழித்தபோது உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே எனக்கு முதல் சுவாசம். கைகால்களை உதைத்து உதைத்து நான் வீறிட்டு அழுதபோது என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில் செருகியிருந்த எலும்புத் துண்டுகளே எனக்குக் கிலுகிலுப்பை. பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறே எனக்குத் தாய்ப்பால். கறியின்மீது கவிழ்ந்திருக்கும் மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து பனியென உருகும் ஊன்நெய்யில் சுட்டு எடுப்பதே என் பலகாரம். மாட்டுக்கறித் துண்டுகளை நீளவாக்கில் அரிந்தெடுத்து வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட முட்செடியின் நெருங்கிய கிளைகளில் பரப்பிவைத்து உலர்த்துகையில் கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே எனக்குப் பொழுதுபோக்கு. களிமண்ணால் தேய்த்துக் குளித்து ஆடையணிந்து வெளிச்செல்கையில் என்மீது வீசும் புலால் நாற்றமே எனக்கு நறுமணத் தைலம். . வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பு இறக்கத்தில்...

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?

அய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம் ‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும் இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும். ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு,...

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

கல்வி உரிமை மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன் மருத்துவர்களிடையே முழக்கம்!

தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ஆரம்ப சுகாதார மய்யங்களில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருவோருக்கு பணியில் இருக்கும்போதே உயர் பட்டப்படிப்புக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கும் கோட்டா முறையை அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.; இந்த கோட்டா முறை நீக்கப்பட்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் வரும் வாய்ப்புகள் குறைந்து விடுவதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்களின் சேவையும் கடும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே மருத்துவ சேவையின் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இந்த ஆபத்தை நீக்கிட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்.26 அன்று கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மருத்துவர் களிடையே பேசினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: மருத்துவ சேவையில் இந்தியாவுக்கே...

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற  சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

கடவுள் – மதம் குறித்து கருத்துகளை தெரிவிப்பதே சட்டவிரோதம் என்று கூப்பாடு போடும் ‘இந்துத்துவ’ சக்திகளுக்கு கடிவாளம் போடும் முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மதத்தைப் புண்படுத்தும் பேச்சு, செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 295(ஏ) பிரிவை மதவாதிகள் பாதுகாப்பு அரணாக முறை கேடாகப் பயன்படுத்துகிறார்கள். மகாபாரதத்தை நடிகர் கமலஹாசன் விமர்சித்தார் என்பதற்காக மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நீதிமன்றம் போகிறார்கள். பெண்கள் அடிமைச் சின்னமான தாலியை அகற்றும் நிகழ்ச்சி நடந்தால் மத உணர்வை புண்படுத்துவதாக வழக்கு தொடருகிறார்கள். மதத்தை, கடவுளை, அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் கருத்துரிமையையே இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி பறிக்கிறார்கள். எம்.எஸ். தோனி என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை ‘மகாவிஷ்ணு’வாக சித்தரித்து, ஒரு வர்த்தக பத்திரிகை 2013இல் அட்டைப்படம் போட்டிருந்தது. இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாக தோனி மீது ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. ...

இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...

ஃபாரூக் நினைவேந்தல்: உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்

மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளர் என்பதற்காக மார்ச் 16 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக். ஃபாரூக் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 16.4.2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் திரண் டிருந்தனர். 4.30 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பிய நிலையில் பலரும் நின்றுகொண்டே கருத்துகளைக் கேட்டனர். நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் செய்தி யாளர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார். பேட்டியில் – “இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நாங்கள் போராடினோம். இப்போது அந்தக் கோரிக்கையை காவல் துறை ஏற்று காவல்துறை இயக்குனர் ‘சி.பி.சி.ஐ.டி.’ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற் கிறோம். அதே  நேரத்தில் இந்த வழக்கின் பின்னணி –...

இப்படிக்கு ஃபாரூக் – தோழர் கண்மணி கவிதை

எரிபொருளு இல்லாம எங்கேயோ தவிக்கறன்னு, என்வீட்டப் பாக்காம, ஒன்னப்பாக்க வந்தேனே. பகுத்தறிவு அப்பாவோட பாசமாக வளர்ந்தபுள்ள, பாதியில தவிச்சுநிக்க என்னநீயும் கொன்னுபுட்ட. மதமெல்லாம் பொய்யுன்னு, மனிதம் மட்டும் மெய்யுன்னு, பகுத்தறிவு ஊட்டத்தானே பெரியாரின் பிள்ளையாக பூமியிலே வாழ்ந்தேனே. என் கழுத்த அறுக்கையிலே எங்கே என் அப்பான்னு, ஏங்கியழுமே புள்ளைங்கன்னு, ஏன்டா நீயும் மறந்துபுட்ட. கடவுள்தானே இல்லையின்ன, காதல் உண்டு எப்போதும். காவியமாய் வாழ்வதற்குள் காதல்செய்த துணைவியாளை., தவிக்கவிட்டு போறேனே. கடவுளிருக்குனு சொன்ன நீ, கருணைகூட இல்லாம., வயிற்றில்குத்தி துளையிட்டு கழுத்தறுத்து உயிரெடுத்த எந்தன் உயிர்நண்பனே!! இப்போதும் சொல்கிறேனே. மாண்டுபோய்விட்டாலும், மண்ணாகிச் சொல்கிறேனே. கடவுள் எங்கும் இல்லையே! மதத்தாலே நீயும்தா மிருகமாகிப்போனாயே, கடவுள்தா எல்லான்னு கருணையற்று கொன்னாயே. உனக்கும்இனி தோன்றுமே, உந்தன் சிறை வாழ்விலே, கடவுள் எங்கும் இல்லையே. சாவைக்கண்டு அஞ்சாமல், சாகநானும் தயாரானேன். தோள் கொடுக்க கூட்டம் உண்டு. தோழமை என்னும் உறவுண்டு. பகுத்தறிவு பால்குடுக்க, எம்புள்ளைக்கொரு பள்ளியுண்டு. தி.வி.க என்னுமொரு...

வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானா லும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

கோடைக்கால விடுமுறை  “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாள் : 10.5.2017 முதல் 14.5.2017 (5 நாட்கள்) இடம் : பெங்களுர் . குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம் குழந்தை 1க்கு : Rs.1500/= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) குறிப்பு : Rs1500/= செலுத்த இயலாதவர்கள் Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன்...

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும்...

தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...