மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா கண் கலங்கி உட்கார்ந்து இருந்தார்.தம்பி வினோத் யாரையும் பார்க்காமல் தலை குனிந்து கொண்டே இருந்தார்.பவா செல்லத்துரை அண்ணன், இலக்கியம்,எழுத்து என்று எதோ இதுவரை நான் இயங்கி கொண்டு இருந்து இருக்கிறேன்.அவை எல்லாம் இந்த அனுபவத்திற்கு முன்பு எதுவும் இல்லை என்று உடைந்து போனார்.கொளத்தூர் மணி அண்ணன்,எழில் கரோலின் அக்கா,கல்பனா போன்றோர் துயரங்களை கட்டு படுத்தி கொண்டு இருந்தனர்.மருத்துவர் சதிஷ் என்ன நீதி வாங்கி கொடுத்தாலும் அவர்களுக்கான வாழக்கையை மீட்டு கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.அரங்கத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட மக்கள் துயரங்களோடு இருந்தனர்.ஆயினும் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையோடு பேசியது ஆறுதல்.என் மீதும் எமது எவிடென்ஸ் குழு மீதும் மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை குறித்து என்ன சொல்லுவது? எவிடென்ஸ் இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று எல்லாம் சிலர் பேசியபோது கண்கள் கலங்கிவிட்டது. எப்போதும் உங்களோடு வருவேன். உங்களோடு இருப்பேன் என்கிற ஆறுதலை தவிர வேறு என்ன என்னால் செய்துவிட முடியும்? பயணம் செய்வோம்.

செய்தி

எவிடென்ஸ் கதிர்

evi1 ei2

You may also like...