மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

வழமையாக கழக நிகழ்வுகளில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டு மேடையிலும் நடந்தது. திருமணத்தை உறுதிமொழி கூறி நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இந்தத் திருமணம் ஜாதி ஆணவம் பேசும் ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் திருமணம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்ணப்பட்டி கிராமம் தங்கவேலு-வெண்ணிலா இணை யரின்மகன் பிரபாகரன்,  ஓமலூர் வட்டம் பண்ணப்பட்டி கிராமம் குணசேரகன், இலட்சுமி இணையரின் மகள் நந்தினி ஆகியோர் மாலை மாற்றி இருவரும் இணைந்து வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றனர்.

2017-12-16-photo-00002072

பெரியார் முழக்கம் 21122017 இதழ்

You may also like...