Category: குடி அரசு 1933

தோழர் காந்தி

தோழர் காந்தி

  தோழர் காந்தி அவர்கள் இப்போது இருந்துவரும் பட்டினி விரதத்தில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் விஷயமாயும் பாடுபடுவாராம், “போகட்டும் பாவம்”.  இத்தனை நாளைக்குப் பிறகாவது கிறிஸ்தவ தீண்டாதார் விஷயம் அவருடைய ஞாபகத்துக்கு வந்தது பற்றி ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. ஆனால் இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்துடன் போட்டி போடத் தென்னிந் தியப் பார்ப்பனர்களின் சூத்திரக்கயரின் சக்தியேயாகும் என்பதில் மாத்திரம் சிறிதும் ஐயமில்லை. குடி அரசு – செய்திக் குறிப்பு – 07.05.1933  

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அசார்சமாய்                –              ஈடுபாடு காட்டாமல், கவலையற்று அமரிக்கை   –              அமைதி ஆதிக்யம்      –              தலைமை இடை                –              எடை உதாரத்தன்மை       –              பெருங்கொடைத் தன்மை உத்திரணி     –              பஞ்ச பாத்திரக் கரண்டி, தீர்த்தம், எடுத்தற்குரிய சிறுகரண்டி ஐஸ்வர்யம்                 –              செல்வம் கனப்படவில்லை –              இறுமாப்படையவில்லை கியாதி              –              புகழ் கெண்டி            –              கமண்டலம் சிக்ஷித்து       –              தண்டித்து சுயகாரிய சித்திபெற           –              தன் காரியம் கைகூட தர்க்கிக்கப்படுதல்                 –              விவாதித்தல் தற்பித்து        –              பயிற்சி, தகுதியாக்கல் தனிகர்             –              செல்வர் தியங்கும்படி              –              கவலையடையும்படி திரவிய சகாயம்      –              பொருளுதவி நிர்த்தாக்ஷண்யம் –              இரக்கமின்மை...

நாகரீகமென்றால் என்ன?

நாகரீகமென்றால் என்ன?

தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான – முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது. விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன். நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது...

கோவைச் சிறையில் தோழர் ராமசாமி  இந்திய சட்டசபைத் தலைவரின் சந்திப்பு கண்ணம்மாள் ஜாமீனில் விடுதலை

கோவைச் சிறையில் தோழர் ராமசாமி  இந்திய சட்டசபைத் தலைவரின் சந்திப்பு கண்ணம்மாள் ஜாமீனில் விடுதலை

26-12-33 ² அன்று 11 மணிக்கு கோயம்புத்தூர் ஜில்லா மாஜி°டிரேட் தோழர் வெல்° ஐ.சி.ஏ°. முன்பு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சகோதரியும் குடி அரசுப் பத்திரிகையின் பிரசுதாரருமான தோழர் கண்ணம் மாளை ஜாமீனில் விடவேண்டுமென கொடுத்திருந்த மனுவின்பேரில் விவாதம் நடைபெற்றது. தோழர் கண்ணம்மாள் சென்ற வாரம் தோழர் ராமசாமியுடன் கைது செய்யப்பட்ட விவரம் நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜாமீனில் தோழர் கண்ணம்மாளை விடவேண்டுமென்று தோழர் டி.டி. ரத்தினசபாபதி பிள்ளை இன்று கலெக்டர் முன்பு வாதிக்கையில் அக்டோபர் மாதம் 29 தேதி வெளிவந்துள்ள குடி அரசுப் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள கட்டுரைக்கு தோழர் கண்ணம்மாள் நேர் ஜவாப் தாரியல்ல வென்பதாகவும் ³ வியாசமானது வாக்குத்தாரர்களுக்குக் கூறப் பட்ட ஓர் சாதாரண போதனைதான் ஆகும் என்பதாகவும். எனவே அது ராஜ நிந்தனையாகாது என்பதாகவும், இப்போது வியாசத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதோடு எதிரி ஒரு பெண்ணாக இருப்பதை முன்னிட்டும், தேக அசௌகரியத்துடன் இருப்பதை...

தமிழன்பர் மகாநாடு  -ஈ.வெ.கி

தமிழன்பர் மகாநாடு -ஈ.வெ.கி

  சென்னையில் இம்மாதம் 23, 24 களில் கூடிய தமிழன்பர் மகாநாடு ஒரு சுயநலக் கூட்டத்தார்களால் கூட்டப்பட்டு அதன் பலன்களை அச்சுய நலக் கூட்டத்தவர்களுக்கே பயன்படுமாறு உபயோகப்படும்படியான முறை யில் கடத்தப்போவதாக நம் புரட்சியில் பல கட்டுரைகளும், தலையங்கமும் எழுதப்பட்டன. அதைக் கண்டிப்பாய் பகிஷ்கரிக்கும்படி இரண்டு ஜில்லா மகாநாடுகளும், பல சங்கங்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகை களில் வெளிவந்துள்ளன. தென்னாட்டில் தமிழ் கற்று அதில் பாண்டித்யம் பெற்று அன்பு பூண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மலித்திருக்க, தமிழென்றால் வேப்பங்காயெனக் கருதும் சில ஆரியப்பார்ப்பனர்கள் பெருக்காக தங்க ளுக்கு இசைந்த இரண்டொரு தமிழர்களையும், இரண்டொரு மகம்மதியர் களையும், கிறி°தவர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழர் மகாநாடு என்று போடாது தமிழன்பர் மகாநாடு என்று ஓர் மகாநாட்டைக் கூட்ட ஆரம்பித் ததே இம்மகாநாட்டைக் கூட்டியவர்களின் சூழ்ச்சியை விளக்கப் போதிய சான்றாகும். அடுத்தபடியாக அதன் நடவடிக்ககைகளில் அங்கம் பெற்றவர்க ளாகிய புத்தகாலய பிரசார சங்கத்தலைவர், வரவேற்புக்கழகத் தலைவர்...

காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே

காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே

காந்தி பகிஷ்காரக் கிளர்ச்சிகளைப்பற்றி குற்றமாகவும், பரிகாசமாக வும் பாமர ஜனங்களை நினைக்கச் செய்ய, பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுப் பாடாக சூட்சி செய்கின்றன. இதற்கு  ஆதாரமாக அவைகள் எழுதிக்காட்டும் ஒரே ஆதாரம்  என்னவென்றால் காந்தியை சனாதன தர்மிகளும் பகிஷ்கரிக்கிறார்கள். அரசாங்கத்தாரும் பகிஷ்கரிக்கிறார்கள். அதுபோலவேதான் சுயமரியாதைக் காரர்களும் பகிஷ்கரிக்கிறார்கள் என்று பல்லவி ஆரம்பித்து மூன்று பேரை யும் ஒன்றாக்கி இவைகள் ஏதோ சுயநலம் என்றும் வைத்து பிரமாதமான பொதுநலத்துக்கு விரோதமாய் ஏதோ பெரிய அக்கிரமம் செய்கிறார்கள் என்று படும்படியாக எழுதிவருகிறார்கள்.  இதுபரம்பரை வழக்கம்போல் பார்ப்பன தந்திரமே ஒழிய வேறில்லை என்பதை  பார்ப்பனரை அறிந்தவர் கள் யாவரும் அறிவார்கள். ஆங்கிலோ இந்திய சர்க்கார் காந்தி விஜயத்திற்கு அனுகூலமாகச் சகல ஏற்பாடுகளும்  செய்து இருக்கிறார்கள் என்பதை  ஜனங்களுக்குத் தெரியாது என்று கருதி இப்படி எழுதுகின்றனபோலும். சர்க் காரார், சர்க்கார் அதிகாரிகளை மாத்திரம் அதில் கலந்துகொள்ள வேண்டா மென்று சொல்லுகின்றார்களே யொழிய ஜனங்கள் காந்தியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று ...

சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம்  கடற்கரைக் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது               காந்தி-சுயமரியாதைக்காரர் பேட்டி

சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம் கடற்கரைக் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது               காந்தி-சுயமரியாதைக்காரர் பேட்டி

தோழர் காந்தி சென்னைக்கு  விஜயம் செய்ததானது பெரிதும் அலங் கோலத்தில் முடிந்ததாகத்தெரிகிறது. பொது ஜனங்கள் காந்தியை வரவேற்க விரும்பவில்லை என்பதை சந்தேகமற வெளிப்படுத்தி விட்டார்கள். ஆதிதிராவிடர் குடியிருக்கும் பல இடங்களிலும் கருப்புக் கொடிகளும், காந்தி பகிஷ்கார விளம்பரங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. சென்ற 20 ² மாலை சென்னை  கடற்கரையில் காந்தியாரை வரவேற்க கூட்டப்பட்ட கூட்டம் குழப்பத்திலும் கூக்குரலிலுமே முடிந்த தாகத் தெரிகிறது.  அன்று மாலை ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடியிருந்ததாகவும் முதலிலி ருந்தே அமளி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் கூட்டத் தைப்பற்றி பத்திரிகைகளில் காணப்படும் விபரங்களைக் கவனித்தால் காந்தியார் சென்னையில் பட்ட அவதியை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். “தமிழ் நாடு” பத்திரிகையில் அந்தக்கூட்டத்தைப்பற்றி காண்ப்படும் விபரத்தின் சாரம் வருமாறு :- “கூட்டம் குழப்பத்திலும், பெண்கள் குழந்தை கள் துயரத்திலும் முடிந்தது. அனேக பெண்களும் குழந்தைகளும் கூட்டத் தில் மிதிபட்டும் நசுக்குண்டும் காயங்கள் அடைந்ததாகவும், அனேகர் தங்கள்...

தமிழ் அன்பர் மகாநாடு                         அதிகாரிகள் மறுப்பு

தமிழ் அன்பர் மகாநாடு                         அதிகாரிகள் மறுப்பு

தமிழன்பர் மகாநாடு என்ற பார்ப்பனர் சூழ்ச்சி மகாநாட்டு சார்பில் நடைபெறப் போகிற புத்தகக் காட்சியை திறந்து வைப்பதாக வெளியிட்டி ருந்த கல்வி இலாக்கா தலைவர், டைரக்டர் ஆப் பப்பிளிக் இன்°ட்ரஷன் என்னும் அதிகாரியானவர் இப்போது மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் அவருக்கு பதிலாக இராமநாதபுரம் இராஜாவை அந்தக் காட்சியை திறந்து வைக்கக் கேட்டு அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே மிகச்சிறு வயதுள்ளவரான ஒரு பெரியாரைத் தேடிப்பிடித்தது மிக புத்திசாலித்தனமான காரியமென்பதற்காக பாராட் டுகிறோம். புரட்சி – செய்தி விளக்கம் – 17.12.1933  

வடநாட்டில் சுயமரியாதை வெற்றி

வடநாட்டில் சுயமரியாதை வெற்றி

மத்திய மாகாணம், பீரார் ஆகிய இருமாகாணங்களின் தொழிலாளர் கள் விவசாயிகள் கட்சி (கூhந றடிசமநசள யனே ஞநயளயவேள’ ஞயசவல)யென்று சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டி ருக்கிறது. இதன் காரிய நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக பிரபல தொழிற் சங்கத் தலைவர்களும், சோஷியலி°ட் தலைவர்களுமாக பலர் இருக்கின்ற னர். முக்கியமாக குறிப்பிடத்தக்க நாகபுரி தோழர் ஆர்.எ°.ராய்க்கர் எம்.ஏ., எல்.எல்.பி. அவர்களும், அம்ரோதி பி.ஜி.தேஷ்பாண்டே அவர்களும் பெரிதும் இதில் அதிக ஊக்கமெடுத்து உழைக்கின்றார்கள். நமது சுயமரியாதை லட்சியத்தின் வெற்றிக்கு இதுவும் எடுத்துக் காட்டாகும். புரட்சி – செய்தி விளக்கம் – 17.12.1933

ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

  அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர் களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி...

ஜவார்லாலும் பொது உடமையும்

ஜவார்லாலும் பொது உடமையும்

தோழர் ஜவர்லால் அவர்கள் தனது அரசியல் கொள்கையை விளக்கி பிரிட்டீஷ் ஜனங்களுக்குத் தெரியச் செய்வதற்காக ஒரு லண்டன் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் பொதுவுடமைக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக வும், ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் கொள்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும், அத்தகைய பொது வுடமைக் கட்சியைத் தான் சேர்ந்தவரல்லவென்றும் குறிப்பிட்டிருப்பதாக ராய்ட்டர் தந்தி கிடைத்திருக்கிறதாகப் பத்திரிக்கைகளில் காணக் கிடக்கிறது. இது உண்மையானால் தோழர் ஜவார்லாலுக்கு இந்தக் குணம் காந்தியாரின் சாவகாசத்தால் ஏற்பட்ட குணம் என்றுதான் சொல்லவேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாரிடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ் விதத் தந்திர மொழிகள் கூறி இருகட்சியாரையும் ஏமாற்றிப் பெருமை அடைவதை அனுசரித்துவருகிறார். உதாரணமாக “வர்ணாச்சிரமதர்மம் வேண்டும். ஆனால் எனது வர்ணாச்சிரமம் வேறு” என்பார். “ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் எனது ராமன் வேறு” என்பார். “ஜாதிபாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்துவேறு” என்பார்....

இனிப் பலிக்காது                                          சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும்  – சித்திரபுத்திரன்

இனிப் பலிக்காது                                          சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும் – சித்திரபுத்திரன்

  °பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேரி மடங்களுக்கும் ஏமாற்றுக்கூட்டத்திற்கும் யோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிக்கை சேதிகளில் காணலாம். அதாவது °பெயின் தலைநகராகிய மேட்ரிட் நகரில் இருந்து கிரு°த்துவ கோயில்கள் என்னும் சோம்பேரி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங் கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக்கூட்டம் உயி ரோடு ஒரு கட்டிடத் திற்குள் அடைந்து நெருப்பு வைத்துக்கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகின்றது. கோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவைகளாகவோ இருக்குமானால் –கன்னிகா °திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார்களானால்-பணக் காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்ற வர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்த வர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக் கொளுத்தவும்...

ஆ°திகனா? – நா°திகனா?  – சித்திரபுத்திரன்

ஆ°திகனா? – நா°திகனா? – சித்திரபுத்திரன்

  நா°திகன்:- “பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய் விக்க வேண்டும்” என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசிய வாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆ°திகர்களா? நா°திகர்களா? ஆ°திகன்:- ஆ°திகர் என்றால் என்ன? நா:- சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வே°வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள். ஆ:- நா°திகர் என்றால் என்ன? நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே “பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும்” என்ற தேச பக்தர்கள் முதலிய வர்கள் ஆ°திகர்களா? நா°திகர்களா? ஆ:- பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்களுக் கும் ஆ°திக நா°திகத்துக்கும் என்ன சம்பந்தம்? நா:- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க முடியுமா? ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது. நா:- அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ்...

நகர பரிபாலன சபை அமைப்பு

நகர பரிபாலன சபை அமைப்பு

தோழர்களே! இன்று இந்நகர பரிபாலன சபை ஆண்டுவிழாவிற்கு நான் பேச வேண்டுமென்றோ பேசச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றோ சிறிதும் நினைக் கவே இல்லை. இவ்வூர் வாலிபர்கள் பலர் நான் பேசியாக வேண்டுமென்று ஆசைப்படுவ தாகவும், மற்றும் எனது மேல்நாட்டுப் பிரயாணத்திற்குப் பிறகு முதன் முதலாக இங்கு வந்திருப்பதால் எனது பழைய நண்பர்கள் பலர் நான் பேச வேண்டுமென்று விரும்புவதாகவும் முனிசிபல் மானேஜர் அவர்கள் சொல்லி விரும்புவதால் ஏதாவது பேசலாமென்று முன்வந்திருக் கிறேன். ஆனால் இவ்விழா பிரமுகர்களுக்கு நான் ஏதாவது விபரீதமாய் பேசி விடுவேனோ என்கின்ற பயம் அதிகமாய் இருப்பதாகத் தெரிகிறது கண்டு பரிதாபப்படுகிறேன். என்றாலும் நான் பேசுவதில் பலருக்கு அதிருப் தியும், அபிப்பிராயபேதமும் காணப்படுவது மிக சகஜமேயாகும். அபிப்பி ராய பேதங்களுக்கு முக்கிய காரணமென்னவென்றால் நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் பழக்கவழக்கங் களிலும், பழைமைகளிலும் பழங்கால நூல் களிலும் பழங்காலப் பெரியோர்கள் என்பவர்கள் வாக்குகளிலுமே முழு நம்பிக்கைவைத்து தண்டவாளத்தின்மீது ரயில் போவதுபோல்...

“தமிழ் அன்பர்”மகாநாடு

“தமிழ் அன்பர்”மகாநாடு

சென்னையில் நடைபெற இருக்கும் தமிழ் அன்பர் மாகாநாட்டைப் பற்றி இரண்டொரு சுயமரியாதை மகாநாடுகளிலும், பல சுயமரியாதை சங்கங்களிலும் அம்மகாநாடானது பார்ப்பனர்கள் தமிழர் மீது ஆட்சி செலுத்த வும் தமிழ்ப்பண்டிதர்களை அடிமை ஆக்கிக்கொள்ளவும் பார்ப்பன ரல்லாத உபாத்தியார்களை அடக்கிவைக்கவும் பார்ப்பனர்களில் பலருக்கு உத்தியோகமும் வருவாயும் ஏற்படுத்தவும் செய்யப்படும் ஒரு சூழ்ச்சி என்ப தோடு தமிழ் கல்வி என்பதையே தங்கள் இஷ்டப்படி மாணாக்கர்களுக்கு ஊட்டுவதற்கு ஏற்ற தந்திரம் என்றும் பேசி அதை பகிஷ்கரிக்கத் தீர்மானித் திருப்பது யாவரும் அறிந்திருக்கலாம். அந்தப்படியே ஒரு பலமான உணர்ச்சியும் தமிழ் மக்களுக்குள் இருந்து வருவதையும் பார்க்கலாம். ஆனால் இதை அறிந்த பார்ப்பனர்கள், கவர்னர் பிரபு தங்கள் மகா நாட்டை ஆசீர்வதித்திருப்பதாவும், யூனிவர்சிட்டியார் தங்களை ஒப்புக் கொண்டு தங்களுக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தங்களுடன் கலந்திருப்பதாகவும் பிறர் நம்பும்படி எவ்வளவோ தந்திரங்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு பயந்த சிலர் தங்கள் பெயரைக் கொடுத்திருப்பதுடன், சில பத்திரிகைகளும் அந்த...

இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு           காந்தி பகிஷ்காரம்

இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு           காந்தி பகிஷ்காரம்

இராமநாதபுரம் ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு சென்ற வாரம் சிவகங்கையில் வெகு சிறப்பாய் நடந்தேறியிருக்கும் விபரம் மற்ற பக்கங்களில் காணலாம். அவற்றுள் மகாநாட்டுத் தலைவர் தோழர் எ°.ராமநாதன் அவர்கள் “இயக்கக்கொள்கைக்குத்தக்க திட்டங்களை வகுத்துக்கொள்ளவில்லை” என்றும் “காரியத்திற் கடமைகளை உணரவில்லை, வேலை தொடங்க வில்லை” என்றும் கூறியிருப்பதையும், வேறு சிலர், காந்தியவர்கள் வரவை பகிஷ்காரம் செய்த தீர்மானத்தை தவறு என்று கூறி கண்டித்திருப்பதையும்பற்றி சிறிது சமாதானம் கூற வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேம். முதலாவது, தோழர் ராமநாதன் அவர்கள் கூறும் குறைக்குச் சமாதா னம் இயக்கத்திற்கு கொள்கைகளும் திட்டங்களும் வகுக்க என்று ஈரோட்டில் சென்ற வருஷம் டிசம்பர் மாதத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 250 தோழர்கள் வரை விஜயம் செய்து, இரண்டு நாள் தாராள விவகாரத்திற்குப் பிறகு இயக்கத்திற்கென்று ஒரு லக்ஷியமும் ஒரு திட்டமும் வகுக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவார் கள். அந்த லக்ஷியமும் திட்டமும்...

கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு

கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு

கோயமுத்தூர் ஜில்லா மகாநாடு ஈரோட்டில் சென்ற மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற்ற விபரம் மற்ற பக்கங்களில் பார்க்கலாம். மகாநாடு மிக்கச் சிறப்பாகவும், பிரதிநிதி ஜனங்களின் மனதைக் கவரத் தக்கதாகவும் நடை பெற்றிருக்கின்ற தென்பதை அதிலிருந்து உணரலாம். அதோடு இம் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்கள், திறப் பாளர்கள், வரவேற்புத் தலைவர்கள், உருவப் படத் திறப்பாளர்கள் ஆகிய வர்கள் பெரிதும் நமது மகாநாட்டுக்குப் புதிதானவர்களென்றும் காணப் படலாம். சுயமரியாதை மகாநாட்டுக்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்கள் கொச்சி ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் மகாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களில் தலைவர் தோழர் நாயகம்-சிதம்பரம் அம்மாள் அவர்கள் இதற்குமுன் நமது மகாநாடுகளில் கலந்திருந்தாலும் அவர்கள் நமது மகாநாட்டில் தலைமை வகித்தது இதுவே முதல் தடவை. திறப்பாள ராகிய தோழர் பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்கள் சுய மரியாதை உலகத்துக்குப் புதியவர்களேயாவார்கள். உருவப்படத் திறப்புவிழாவுக்கு தலைமை வகிக்கவும், விழா நடத்தவும் வந்த தோழர்கள் னுச.வரதராஜுலு, கல்யாண சுந்தர...

லெனின் – நாகம்மாள்                          உருவப்படத் திறப்புவிழா

லெனின் – நாகம்மாள்                          உருவப்படத் திறப்புவிழா

தோழர்களே! இப்போது நடக்கப்போவது படத் திறப்புவிழா. இதை நடத்திக் கொடுக்கச் சென்னை தோழர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் கல்யாணசுந்திர முதலியாரவர்களையும் கேட்டுக் கொண் டோம். அவ்விரு பெரியார்களும் நமது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இங்கு விஜயம் செய்துள்ளார்கள். நமது இயக்கக் கொள்கைகள் முழுமையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவர்களல்ல. பல விஷயங்களில் நமக்கும் அவர்களுக்கும் பலமான அபிப்பிராய பேதம் உண்டென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைத் தேடிப் போனோம்? அவர்களது விஜயத்தால் நமது கொள்கைகளுக்கும், அபிப்பி ராயங்களுக்கும் ஆதரவும் பலமும் கிடைக்குமென்கின்ற எண்ணத்தி னால்தான். இந்தச் சங்கதிகள் அவர்கள் தெரிந்தே தங்களது ஆதரவும் இவ்வியக்கத்துக்கு இருக்கட்டும் என்கின்ற பெருந்தன்மையான தயாள குணத்துடனேயே இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். எனக்கும் அவர் களுக்கும் சில காலமாய் அபிப்பிராயபேதம் இருந்து வந்தது. அதைப்பற்றி நாங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் வந்திருக்கிறோம். ஆனால் எல்லாம் ஒரே தத்துவத்தின் மீதேயொழிய வேறில்லை. அதாவது மனித சமூகத்துக்கு...

கோவை ஜில்லா                                                                          சுயமரியாதை மகாநாடு – பெண்கள்மகாநாடு  சுயமரியாதை மகாநாடு

கோவை ஜில்லா                                                                          சுயமரியாதை மகாநாடு – பெண்கள்மகாநாடு சுயமரியாதை மகாநாடு

தோழர்களே! தோழர் அய்யப்பன் அவர்களை நான் சுமார் 9, 10 வருஷமாய் அறிவேன். வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அறிமுகமானோம். வைக்கம் சத்தியாக்கிரகக் கிளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரண°தர். அவர் இந்துமதப்படியும், மலையாள நாட்டுச் சம்பிரதாயப்படியும் வர்ணாச்சிரமத் தர்மப்படியும் தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு மலையாள தேசம் 30,40 வருஷங்களாகத் தெரியும். வியாபார முறையில் அங்கு சென்று தாமதிப்பதுண்டு. அந்தக் காலத்தில் அய்யப்பன் வகுப்பார் வீதியில் நடந்தால் மோட்டார் கார் ஆரன்கொடுப்பதுபோல் அவர்கள் ஹா, ஹா என்று கத்திக் கொண்டு போக வேண்டும். ஏனெனில் மோட்டார் கார் எப்படி ஜனங்கள் தனது சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஆரன் ஊதித் தான் வருவதை முதலிலேயே தெரிவிக்கிறதோ அதுபோல் ஈழவர் முதலியவர்கள் மற்றவர் கள் தங்கள் அருகாமையில் வந்து தீட்டுப்பட்டு தோஷமடை யாமலிருப்பதற்கு, ஹா, ஹா என்ற கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஆனால் இப்போது தோழர் நாராயணகுரு°வாமி அவர்கள் முயற்சியாலும், அய்யப்பன்...

புரட்சி

புரட்சி

“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும். அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் “புரட்சி”யை புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. நமது முதலாளிவர்க்க ஆக்ஷியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு  அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை” அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்” என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது. ஆதலால் நமது “புரட்சி”யானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவரவேண்டி யதாகிவிட்டது. இதன் காரணமாய் “புரட்சி” எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம். எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம்....

துறையூர் சப் ரிஜி°டிரார் அமுல்

துறையூர் சப் ரிஜி°டிரார் அமுல்

பொதுஜன ஊழியன் தோழர் வி.ஜி.பிச்சை எழுதுகிறார்:- துறையூரில் திரு. சி.எம். சுப்பிரமணிய சா°திரி என்பவர் சப் ரிஜி°ட ரராயிருக்கிறார். அவர் பத்திரம் ரிஜி°ட் செய்யப்போகும் விபரந்தெரியாத பார்ப்பனரல்லாதாருக்கு ரிஜி°டர் விஷயமாக தெரியாத சங்கதிகளை சொல்லிக் கொடுத்தும் உதவி செய்வதற்கு பதிலாக அவர்களை மிரட்டி நஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார். உதாரணமாக சென்ற 10-ந் தேதி பழனியாண்டி முத்திரியன் என்ப வரும், நானும் ஒரு வீட்டுக் கடன் பத்திரம் ரிஜி°டர் செய்ய அவரிடம் போனோம். அவர் மேற்படி பழனியாண்டி முத்திரியனைக் கூப்பிட்டு எந்த ஊர் என்று கேட்க அவர் ஆதனூர் என்று சொன்னாராம். அதற்கு, பத்திரத் தில் உள்ளூர் என்றுதான் இருக்கிறது. ஆதனூர் என்று போடவில்லை என்று அவர் மிரட்ட, பழனியாண்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் போய் உள்ளூர் என்பது ஆதனூரில் ஒரு பாகம் என்றும் அப்படியே சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அவர் அதைக் கேட் காமல் துறையூர் டிவிஷனில் உள்ளூர்...

தமிழ் அன்பர் மகாநாடு

தமிழ் அன்பர் மகாநாடு

தமிழ் அன்பர் மகாநாடு என்பதாக பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவு தேடும் ஒரு மகாநாடு சென்னையில் அடுத்த மாதம் கிரு°தும° வாரத்தில் நடக்கப்போவதாக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டு வரு கின்றன. இம்மகாநாட்டைப் பற்றி சென்றவாரத்திற்கு முந்திய வார இதழில் தோழர் அ. இராகவன் அவர்களால் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றொரு பார்ப்பன சூக்ஷியே” என்னும் தலைப்பின்கீழ் ஒரு நீண்ட வியாசம் எழுதப் பட்டதை “குடி அரசு” வாசகர்கள் படித்திருக்கலாம். ஆனால் அவ் வியாசத்தில் கண்ட இரண்டொரு விஷயங்களை மாத்திரம் நாம் ஆதரிக்க முடியவில்லை. அவற்றுள் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் “இக் கமிட்டிக்கு கடிதம் எழுதி தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும், தைரியமாக அஞ்சாது போரிடும் ஆற்றல்மிக்க தோழர்களான ஈ.வெ.ராமசாமி, நாகர் கோவில் பி.சிதம்பரம், டாக்டர் வரதராஜலு, கா. சுப்பிரமணிபிள்ளை, சாத்தூர் கந்தசாமி முதலியார், சுவாமி வேதாசலம், மதுரை கார்மேகக் கோனார் போன்ற சுமார் 10 பேர்களை சேர்க்கவேண்டும். இன்றேல் அம்மகாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கவேண்டும்” என்று...

நாதர்ஷா படுகொலை  தோழர் அமாநுல்லா கருத்து

நாதர்ஷா படுகொலை தோழர் அமாநுல்லா கருத்து

  தோழர் அமாநுல்லா ஆப்கானி°தான் அரசராயிருந்த காலத்தில் அந்நாட்டு மக்களிடை இருந்துவந்த மூடபழக்கவழக்கங்களை அகற்றி நாட்டை முன்னேற்ற முயன்றார். அது முல்லாக்களுக்கும் வைதீகர்களுக்கும் பிடியாததால் அவர்கள் சதி செய்து அவரை நாட்டைவிட்டு ஓடும்படி செய் தார்கள். அதன்பின் தண்ணீர்க்காரன்மகன் பாட்சா சாக்கோ சிலநாள் அரசைக் கைப்பற்றி அட்டகாசம் செய்தான். பிறகு அவனை தொலைத்து விட்டு மீண்டும் தோழர் அமாநுல்லாவை அமீர் ஆக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு ஜெனரல் நாதர்கான் பாட்சா சாக்கோவின் மீதுபடை எடுத்து சென்று வெற்றி பெற்றதும், அதன் பின் மாஜி அமீரை அழையாமல் தாமே ஆப்கானி°தான் அரசராக முடி சூடிக்கொண்டதும் பத்திரிகை வாசகர்கள் எல்லாருக்கும் ஞாபகமிருக்கலாம். அப்படியிருக்க சென்ற 8-ந் தேதி மாலை 2-45மணிக்கு நாதர்ஷா தமது அரண்மனை அந்தப்புரத்திலிருந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு ஆப்கன் மாணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையைப்பற்றி “ராய்ட்டா” பிரதிநிதி அமாநுல்லாவைக் கண்டு பேசியதில் அவர் கூறியதாவது:- என் சீர்திருத்த முறைகளை கைக்கொண்டு, நான் ஆப்கானி°...

குடி அரசுக்கு நோட்டீ°

குடி அரசுக்கு நோட்டீ°

(1931-ம் வருஷத்திய இந்திய பத்திரிக்கைகள் (அவசர அதிகார) சட்டத்தின் 3-வது பிரிவினுடைய (3-வது) உட்பிரிவின்படி) கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும் 1931ம் வருடத்திய இந்தியபத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டப்பிரிவு களின்படி செக்யூரிட்டி வாங்கப்படாததுமான, “குடி அரசு” என்ற பெய ருள்ள பத்திரி கையின் 1933 ஜுலை 30ம்தேதி இதழிலே 1932ம் வருஷத்திய கிரிமினல் சட்ட திருத்தச்சட்டத்தினால் (ஓஓகுஐ டிக 1932) திருத்தபெற்ற ³ சட்டத்தின் 4வது செக்ஷன், (1) சப்செக்ஷனின் (டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்லீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத் துடன் அனுப்பப் பட்டிருக்கிறது) பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரியவருகிறபடியால் 1931ம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் (ஓஓஐஐஐ டிக 1931) 7-வது செக்ஷனில் (3) சப்செக்ஷனின்படி , ³ பத்திரிகையின் பிரசுரதாரராகிய எ°.இராமசாமி நாயக்கர் மனைவி எ°.ஆர். கண்ணம்மாள், 1933 நவம்பர் 20-ந் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ.1,000 (ஆயிரம் ரூபாய்)...

குடி அரசுக்கு பாணம்  – ஈ.வெ.ரா

குடி அரசுக்கு பாணம் – ஈ.வெ.ரா

  குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எ°.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக் காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜி°டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீ° சார்வு செய்யப்பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச்செய்யாமல் விட்டுவைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டி ருக்கிறோம். முதலாளிவர்க்க ஆக்ஷியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்....

ஈரோடு அர்பன் பாங்கு                           அறிக்கைப் பத்திரக் குறிப்பு

ஈரோடு அர்பன் பாங்கு                           அறிக்கைப் பத்திரக் குறிப்பு

ஈரோடு அர்பன் பாங்கியானது சுமார் 20 வருஷத்துக்கு முன் இவ்வூரில் °தாபிக்கப்பட்ட பொழுது அதற்கு பெரிதும் பார்ப்பனரல்லாத மக்களே பிரயத்தனக் காரராகவும், ஆதரவுக்காரர்களாகவும் இருந்தாலும் அது நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும், ஆதிக்கத்துக்கும் உள்ளாகி பாங்கி சிப்பந்திகளும், நிர்வாகிகளும் பார்ப்பன அக்கிரமமாகவும் பார்ப்பன நன்மைக்கு ஒரு கோட்டையாகவும் வந்து முடிந்ததுடன் மற்ற ஊர்ப் பொதுக்காரியங்களிலும் பார்ப்பன ஆதிக்கத் தைப் புகுத்துவதற்கு பாங்கியின் செல்வாக்கை உபயோகப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் பிறகே சமீப காலத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இதையறிந்து பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிவந்ததின் பயனாய் சிருகச்சிருக பார்ப்பன ஆதிக்கம் குறையத் தலைப்பட்டு இப்போது இந்த இரண்டு வருஷமாய் அப்பாங்கின் நிர்வாகத் தைப் பொருத்தவரை அடியோடு பார்ப்பனரல்லாதார் கைக்கு வந்திருக் கின்றது என்றே சொல்லலாம். இதன் பயனாய் அப்பாங்கின் நல்ல நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை யாய் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்பாலதன்று. பதவி இழக்க நேரிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆளுகளையே...

“கெடுவான் கேடு நினைப்பான்”  – தோழர் ஈ.வெ.இராமசாமி

“கெடுவான் கேடு நினைப்பான்” – தோழர் ஈ.வெ.இராமசாமி

  கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கக்ஷியாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும். எந்தெந்த இரு கக்ஷியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனா வதைத்தவிர வேறு வ°து கிடையாது என்கின்ற முடிவைக்கொண்ட “மெடீ ரியலி°டு” (ஆயவநசயைடளைவ) என்னும் கக்ஷியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வ°து இருக்கிறது என்கின்ற முடிவைக்கொண்ட “°பிரிச்சு வலி°ட்டு” (ளுயீசைவைரயடளைவ) என்னும் கக்ஷியாரும் ஆகிய இரு கக்ஷிக்காரர் களும், அதாவது “நா°திகர்களும்” “ஆ°திகர்களும்” ஆகிய இரு கக்ஷிக் காரர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும். இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோ மென்றால், அன்னியருக்குக் கேடுசெய்யவேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டும்மென்றோ நினைப்பவன் கெட்டுப்போவான் என்பதாகும். இதை ஆ°திகர்கள் எந்த முறையில் ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்கு சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ உண்டு என்றும், அது...

அகில கூட்டுறவாளர்கள் தினம்

அகில கூட்டுறவாளர்கள் தினம்

ரஷ்யாவின் கூட்டுறவு வாழ்க்கை விபரங்கள் ரஷியக் கூட்டுறவு முறை தலைவரவர்களே! தோழர்களே!! எனக்கு இன்று பேச சந்தர்ப்பம் கொடுத்து எனது அபிப்பிராயங்களை எடுத்துச்சொல்ல அனுமதி கொடுத்த தோழர் கணபதி ஐயர் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கடைசியாக பேசவேண்டியவனாக இருக்குமென்று கருதினேன். ஆனால் நான் முதலி லேயே பேச ஏற்பட்டுவிட்டது. ஆனபோதிலும் எனது அபிப்பிராயங்களை சொல்லிவிடுகிறேன். நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜி°ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம் டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் °தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார் கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு பு°தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான்...

சர்.  ஷண்முகம்  வெற்றி

சர்.  ஷண்முகம்  வெற்றி

  தோழர்  சர். ஆர்.கே.  ஷண்முகம்  தேர்தல்  விஷயத்தில்  காங்கிரஸ்காரர்கள்  என்பவர்களும்,  காங்கிரஸ்  பத்திரிகைகள்  என்பவைகளும்  மனதறிந்த  பொய்யை  தைரியமாய்  பேசியும்,  எழுதியும்  வருவதானது  காங்கிரசின்  யோக்கியதையையும்  அதிலுள்ளவர்களின்  நாணையத்தையும்  தெரிந்துகொள்ள  ஒரு  சாதனமாகும். பாக்கி  இருக்கும்  தேர்தல்களில்  தங்களுக்கு  தோல்வி  ஏற்படாமல்  இருப்பதற்காகச்  சில  பொய்கள்  சொல்லலாம்  என்பது  ஒரு  அளவுக்கு  அனுமதிக்கப்பட்டதானாலும்  சத்தியமும்,  நீதியும்  அடிப்படையாகக்  கொண்ட  காங்கிரஸ்  என்பதைச்  சேர்ந்தவர்கள்  என்று  சொல்லிக்  கொள்ளும்  ஜனங்கள்  அந்த  ஒரு  அளவையும்  தாண்டி  மனதறிந்த  பொய்யைப்  பரப்ப  முயற்சிப்பது  என்பது  மிகவும்  வெறுக்கத்  தகுந்த  காரியமேயாகும். நிருபர்கள்  என்கின்ற  பெயரால்  எதையும்  எழுதிக்  கொள்வதற்கு  பத்திரிகை  உலகில்  பழக்கம்  இருந்து  வருகின்றது  என்றாலும்  ஒரு  வாரத்தில்  பொய்யாகப்  போகும்  விஷயங்களைக் கூட  எழுதுவது  என்பது  சீக்கிரத்தில்  பொது  ஜனங்களிடம்  மதிப்பை  இழப்பதற்குத்  தான்  பயன்படுமே  தவிர  காரிய  சித்திக்கு  அனுகூலமாகாதென்றே  சொல்லுவோம். கடசித்  தடவை  நடந்த  சென்னை  சட்டசபைத் ...

எது துவேஷம்?

எது துவேஷம்?

நவம்பர் 1-11-33ந்தேதி வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில் கர்ப்பத்தடை ஆதரிப்புக்கூட்ட நடவடிக்கை வெளியாயிருப்பதில் பார்ப்பனர்கள் பேசியதை விபரமாய் பிரசுரித்துவிட்டு “வரதராஜலு நாயுடு தமிழில் பேசினார்” என்று ஒருவரியில் முடித்து விட்டது. ஆங்கிலத்தில் பேசிய பார்ப்பனர்களின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து விரிவாகப் பிரசுரிப்பதும், தமிழில் பேசிய பார்ப்பனரல்லாதார் பேச்சை ஒரே வரியில் தமிழில் பேசினார் என்று பிரசுரித்திருப்பதையும் கவனித்தால் இந்த பார்ப்பன பத்திரிகையின் துவேஷ மனப்பான்மை நன்கு விளங்குகிறதல் லவா? இங்கிலீஷ் பேச்சுகளையெல்லாம் மொழி பெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜலுவின் தமிழ் பேச்சை பூராவாகப் போடாத தற்குக் காரணம் என்ன? தமிழ் மொழிமீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப் பனரல்லாதார் மீதுள்ள பார்ப்பன துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக. குடி அரசு – செய்திக் குறிப்பு – 05.11.1933      

மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி

மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி

தேசீயத்தின் பேராலும், காங்கிரசின் பேராலும், இதுகாறும் சென்னை மாகாண பார்ப்பன அரசியல் வாதிகள் செய்து வந்த சூழ்ச்சிகளையும் புரட்டு களையும் நாம் அப்போதைக்கப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்பொழுது தோழர் காந்தி முதலியவர்கள் காங்கிரசுக்கு தகனக்கிரியை செய்து பார்ப்பன தேசீயப் புரட்டுக்கு ஆதரவு இல்லாமல் செய்து விட்டதால். ஒரு புதிய ஏற்பாடு செய்யவேண்டிய அவசியம் பட்டம் பதவிகளை நாடும் காங்கிர° அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.எ°. முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர்களால் “காங்கிர° சுயராஜீயக் கட்சி” என்ற பேருடன் ஒரு புதிய கட்சி பழயபடி சென்னையில் °தாபித்திருப்பதாகத் தெரிகிறது. “அடுத்த தேர்தலிலே சட்டசபை °தாபனங்களையும், °தல °தாபனங்களையும் கைப்பற்ற முயற்சி செய்வதும், வெள்ளை அறிக்கையையும், சமூக தீர்ப்பை யும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும், சுயராஜ்யத்துக்காகப் போராடுவதும் இந்தக் கட்சியின் நோக்க” ங்களென்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதை ஊன்றிக் கவனிக்கும் பொழுது இது மக்களுக்கு இப்பொழுது நன்றாய் தெரிந்து போய்...

கர்ப்பத்தடை ஐ

கர்ப்பத்தடை ஐ

கர்ப்பத்தடையைப்பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசுப் பத்திரிகையும் சுமார் 7,8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும், பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து வந்திருக்கின்றன. மேல்நாடுகளிலும் கர்ப்பத்தடையைப்பற்றி சுமார் 70, 80 வருஷ மாகப் பிரசாரம் செய்துவரப்படுவதாகவும் தெரியவருகிறது. தோழர் பெசண்டம்மையார் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே கர்ப்பத்தடைப் பிரசாரத்தில் கலந்திருந்து பிரசாரம் புரிந்ததாகவும், மற்றும் கர்ப்பத்தடை பிரசாரமானது, சட்டவிரோதமானதல்ல என்று வாதாடி கர்ப்பத் தடை பிரசாரத்துக்கு அரசாங்கத்தை அனுமதிக்கும்படி செய்ததாகவும், அவ் வம்மையார் சரித்திரத்திலிருந்தும் விளங்குகின்றது. இவைகள் மாத்திரமல்லாமல் மேல்நாடுகளில் இன்றும் பல தேசங் களில் தனிப்பட்ட நபர்களாலும், சங்கங்களாலும் கர்ப்பத்தடை பிரசாரங் களும், அது சம்மந்தமான பத்திரிகைகளும், புத்தகங்களும் ஏராளமாய் இருந்துவருகின்றன. இவைகளையெல்லாம்விட மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய பல அரசாங் கங்கள் அதற்கென ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரசாரங்கள் செய்தும் வருகின்றன....

பட்டேல் பட்டுவிட்டார்

பட்டேல் பட்டுவிட்டார்

தோழர் வித்தல்பாய்பட்டேல் அவர்கள் 22-10-33-ந்தேதி ஜினிவா வில் காலமாய்விட்டார் என்ற செய்தியைக்கேட்ட இந்தியமக்கள் மிகுதியும் வருத்தமடைவார்கள். பட்டேல் அவர்கள் அரசியல் உலகத்தில் மிக்க புகழப்பெற்றவர் வாக்குவல்லவர், யாவரும் பிரமிக்கத்தக்கபடி விஷயங்களுக்கு வியாக்கி யானம் செய்யும் கூர்மையான புத்திசாதுரியமுமுள்ளவர். பம்பாய் நகரசபைத் தலைவராகவும்  இந்திய சட்டசபைத் தலைவராகவும் இருந்து அவற்றுள் மிக்க கியாதி பெற்றவர். இந்தியாவில் மாத்திரமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் இந்திய அரசியலின் மூலம் புகழ்பெற்ற வர். எப்படிப்பட்ட அரசியல் வாதியும் பட்டேலை எதிர்ப்பதென்றால் மிகவும் பயப்படுவார்கள். தோழர் காந்தியாருக்கு பட்டேலிடம் எப்பொழுதும் சிறிது பயம் உண்டு. ஒரு காலத்தில் பட்டேலின் துடையின்மீது தன் தலை இருக்கும் போது தனது உயிர் போக நேரிட்டால் அதுவே தனக்கு ஒரு பெரிய பாக்கிய மாகும் என்று தோழர் காந்தி பேசி பட்டேலை புகழ்ந்திருக்கிறார். உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்கள் பட்டேலுக்கு இஷ்ட மில்லாத காரியங்களாகும். அதனாலேயே அவர் கடைசிகாலத்தில் பெரிதும்...

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?

இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளை விக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது. அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே-பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே-சிலரை செல்வவான் களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள்-ஏழை மக்கள் ஆகிய வர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய் சேர்ந்து விடு கின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்படவேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ கால மாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர் கள் படிக்கத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால்...

கேள்வியும் – பதிலும்  – சித்திரபுத்திரன்

கேள்வியும் – பதிலும் – சித்திரபுத்திரன்

  கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள். பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள். ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். குடி அரசு – வினா...

தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்

தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்

சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் தோழர் சிங்காரவேலு அவர்களால் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அதற்கு நாம் ஒரு சமாதானம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று சற்று அசதியாக இருந்துவிட்டோம். இதற்குள் மற்றொரு வியாசம் தோழர் பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பட்டு இவ்வாரம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மேற்கண்ட இரண்டு வியாசத்தைப்பற்றியும் இவ்வாரம் நமத பிப்பிராயத்தை எழுதலாம் என்று கருதி இத்தலையங்கம் எழுதுகிறோம். தோழர் சிங்காரவேலுக்கு தோழர் சிங்காரவேலு அவர்களின் வியாசத்தின் கருத்தைச் சுருக்க மாகக் கூறவேண்டுமானால், “சமதர்மவாதி அல்லாதவர்களையும் சம யோசிதமாய் பேசுபவர்களையும், மேல் பூச்சுக்கு அனுகூலமாய் முகம் துடைக்கப் பேசுகின்றவர்களையும் நம் இயக்கத்தோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள இடங்கொடுக்கக் கூடாது” என்பதேயாகும். மேலும், “அப்படிப்பட்டவர்கள் நம் மகாநாடுகளில் தலைமை வகிக்கவிட்டு வருகின்றபடியால் கூட்டத்தில் குழப்பமும், மாச்சரியமும், விறோதமும் ஏற்படுகின்றன” என்பதும் அவரது வியாசத்தின் கருத்தாகும். இந்தக் கருத்துக்கள் சற்றேரக்குறைய திருநெல்வேலி மகாநாட்டு நிகழ்ச்சிகளை சரி...

சி.டி. நாயகம்

சி.டி. நாயகம்

தோழர் சி.டி.நாயகம் அவர்கள் கூட்டுறவு (கோவாப்பரேட்டிவ்) உதவி ரிஜி°ட்ராராக இருந்து அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை யும் ஆக்ஷிகளையும் அறிந்து ஓரளவுக்காவது அவைகளை அகற்ற எவ்வளவோ அவர் முயற்சித்து வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதன் பயனாய் பார்ப்பனர்களாலும் பார்ப்பனக் கூலிகளாலும் அவர் எவ்வளவோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். அப்படிப்பட்ட வீரமும், தீரருமான நாயகம் இப்போது தனது 55-வது வயதில் உத்தியோகத்தைவிட்டு நீங்கி பென்ஷன்பெற்று வாழ்ந்துவரு கிறார். இனி இவரது வாழ்நாள் பெரும்பாலும் பொதுஜன வாழ்விலேயே கழிக்கப் படும் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபனையிராது. தோழர் நாயகம் அவர்களும் அவரது வாழ்க்கைத் துணையாரும் மக்களும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் மனப்பூர்வமாய் ஈடுபட்டு உழைத்து வந்ததும் யாவரும் அறிவர். ஆதலால் தோழர் நாயகம் அவர்கள் உத்தியோகத்திலிருந்து விலகி யது சுயமரியாதை இயக்கத்துக்கு ஒரு பெரும் ஆதரவு என்பதைத் தெரி வித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம்...

காந்தி ஜயந்தி

காந்தி ஜயந்தி

கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜ°டி°காரர்கள், இந்து, மு°லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிர° °தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான...

தீபாவளி – முட்டாள்தனம்

தீபாவளி – முட்டாள்தனம்

தோழர்களே! தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழி வும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபா வளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கி யர்களுமான கழுகுக் கூட்டமல்லவா? கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூக்ஷிக் காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோக்ஷம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மததர்மமா?  தேசீய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டி ருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும் போல் காணப்படுகின்றன. இந்த செலவுகள் யார்...

முதல் மந்திரி கவனிப்பாரா?

முதல் மந்திரி கவனிப்பாரா?

சமீபத்தில் நடந்த திருப்பத்தூர் தாலூகா மகாநாட்டுக்காக வாணியம் பாடிக்குச் சென்றிருந்ததில் அங்குள்ள முனிசிபல் நிர்வாகம் மிக மோசமாய் இருக்கக்கண்டோம். முனிசிபாலிட்டியில் எப்பொழுதும் இந்து மு°லீம் உணர்ச்சி தகராறு இருப்பதால் அவ்விடத்திய அநேக முக்கிய காரியங் களை சரியாய் கவனிக்கமுடியாமல் போகின்றதாய் தெரிகிறது. ஊர் ரோட்டு கள் மிக சீர்கேடாய் இருக்கிறது. சுகாதாரம் நடுத்தெருவில் ஜலதாரை (கசு மாலத் தண்ணீர்) ஓடுகிறது. ரோட்டின் இரு மருங்கும் கச்கூசாக உபயோகப் படுத்தப்படுகின்றன. வேறு பல உள்துரைப் புகார்கள் இருப்பதாகச் சொல்லப் படுவதைக் கவனிக்காவிட்டாலும், மத உணர்ச்சித் தகராறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் கவனிக்காவிட்டாலும் இதன் பயனாகவே அல்லது வேராலோ நல்ல நிர்வாகம் கெட்டிருக்கிறது என்பது பிரத்தியட்சம். இதுசமயம் அங்கு காலரா பலமாக இருக்கிறது. 100 கேசுக்கு 80 கேசு இறந்து போகின்றது. இந்தக் கொடிய தொத்து வியாதிக்கு எவ்வித முயற்சி எடுத்துக் கொண்டதா கவும் காணப்படவில்லை. சுகாதார அதிகாரிகளைக் காணவே முடியவில்லை. தாலுகா ஜில்லா போர்டாவது...

மதக்கிறுக்கு

மதக்கிறுக்கு

உலகில் மதங்கள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களா யும், தெய்வ சம்மந்தமுடையவர்களாயும், தீர்க்கத் தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங் களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்து போய் விடுமே என்கின்ற பயம் எல்லா மத°தர்களிடமும் இருந்துதான் வரு கின்றது. இந்தக் கருத்திலும், காரியத்திலும் உலகில் இன்னமதம் உயர்வு, இன்னமதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை. சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக் கொண்டு ஆயிரம் ஆளுகளோ, அல்லது இரண்டாயிரம் ஆளுகளையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைக ளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால்...

நமது வருத்தம்  – ஈ.வெ.ரா

நமது வருத்தம் – ஈ.வெ.ரா

  திருநெல்வேலியில் நடந்த தீண்டாமை மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழா சிரியர் தோழர் எ°.சோமசுந்திரபாரதியார் ஆ.ஹ., க்ஷ.டு., அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அம்மகாநாட்டிற்கு வரவேற்பு கழகத்தலைவராக இருக்க திருநெல்வேலி தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இவ்வேண்டுகோளுக்கிணங்க இரு தோழர் களும் தங்கள் கடமைகளை ஆற்ற மகாநாட்டிற்கு வந்திருந்தார்கள். இங்கு ஒரு விஷயம் குறிப்பிடவேண்டியதாகும். அதாவது அவர்கள் இருவரும் காங்கிர° கொள்கையில் பற்றுள்ள வர்கள், ஆ°திகர்கள், காங்கிர° தீண்டாமை விலக்கு (“ஹரிஜன முன் னேற்ற”) வேலை கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் ஆவார்கள். இவற்றை யெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டிய தோழர்கள் அறிந்தே அவர்களை தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அன்றியும் மகாநாட்டில் தோழர் சோமசுந்திரபாரதியாரைத் தலைமைப் பதவிக்கு நான் பிரேரேபிக்கும் போதே தோழர் பாரதியாருக்கும் நமக்கும் விசேஷ அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும், அப்படியிருந் தும் இம் மகாநாட்டிற்கு நாம் அவர்களை...

கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி  தொழிலாளர் மகாநாடு   

கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி  தொழிலாளர் மகாநாடு  

  தோழர்களே! உங்களுடைய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேற்றை எனக் களித்து இந்த சந்தர்ப்பத்தில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்ள வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னைப்பற்றிப் பல தோழர்கள் கவிராயர்கள் போல் புகழ்ந்துகூறிய  தற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாகிலும் அப்புகழ்ச்சி உரை களுக்கு நான் தகுதியுடையவனல்ல என்றும், அப்புகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பாகத்துக்காவது தகுதியுடையவனாக என்னை ஆக்கிக் கொள்வதற்கு அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்னைப்பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பற்றி பிர°தாபித்து அதை நடத்துவித்ததும் அது வெற்றியாய் முடிவு பெற்ற காரணமாய் இருந்ததும் நானேயாவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக்கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாக் கிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும் அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத்தன்மையும், கட்டுப்பாடுமே காரணமாகுமென்று தெரிவித் துக் கொள்ளுகிறேன். நிற்க,...

சங்கராச்சாரிக்கு அவமரியாதையா?  டிப்டி கலைக்டர் தர்பார்

சங்கராச்சாரிக்கு அவமரியாதையா? டிப்டி கலைக்டர் தர்பார்

  சென்ற 22-9-33 வெள்ளிக்கிழமை இரவு தஞ்சையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியைப் பார்க்க அவ்வூர் டிப்டி சூப்ரெண்டெண்டான ஒரு பிராமணரல்லாத கனவான் குடும்ப சமேதராய் சென்றிருந்தார். அது சமயம் சங்கராச்சாரியாரின் முகாமில் நின்று கொண்டிருந்த – தஞ்சை டிவிஷன் ஹெட் குவார்ட்டர் டிப்டி கலைக்டர் அவர்கள் ³யாரை அழைத்து எவ்வாறு மேலே ஷர்ட் போட்டுக்கொண்டு போகலாமென்று வினவினார். அதன் பேரில் இருவர்களுக்கும் சில வாக்கு வாதங்கள் நிகழ்ந்தது. இதுவிஷயமாக தஞ்சையில் பெருத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சங்கராச்சாரியின் முன்பு சட்டை போட்டுக்கொண்டு போகக்கூடாதென்பது பழக்கத்தில் இருப்பதாகவே ஒத்துக்கொண்ட போதிலும், அதை அமுல் நடத்த (நுகேடிசஉந) டிப்டி கலைக்டருக்கு என்ன சம்மந்தமுன்டென்பதும், அதற்கு சங்கராச்சாரிக்கு ஆள் மாகாணம் இல்லையா என்றும், ³ டிப்டி கலைக்டர் அந்த வேலையைத்தானே வகித்துக் கொண்டு சங்கராச்சாரியா லும் அவர் சிப்பந்திகளாலும் செய்ய சாத்தியப்படாததான காரியத்தை தான் தன் அதிகார பதவியை கொண்டு அமுல் நடத்தி, மதத்தைக் காப்பாற்ற செய்யும் சூழ்ச்சி...

ஒரு எச்சரிக்கை

ஒரு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் இன்று தோழர் ஷண்முகத்தின் பதவி மிக்க வயிற்றுக் கடுப்பாய் இருந்து வருகின்றதை நாம் உணர்ந்து வருகின்றோம். இவற்றுள் ஒரு விகடப் பத்திரிகை மிக்கக் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றிப் பல தோழர்கள் நமக்குப் பல வியாசங்கள் எழுதி இருக்கிறார்கள். அவற்றை இப்போது நாம் பிரசுரிக்கவில்லை. தயவு செய்து அப்பத்திரிகை அம்மாதிரி நடந்து கொண்டதற்காக வருந்தாதவரை அந்த வியாசங்களை நாம் பிரசுரித்துத் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். விகடத்துக்கும் விஷமத்துக்கும் குரோதத் தன்மைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட மாட்டாது என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தரும் என் பதை எச்சரிக்கை செய்தே, அந்தச் செய்கையைப் பின்வாங்கிக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளுகிறோம். குடி அரசு – செய்திக் குறிப்பு – 24.09.1933          

பெசண்டம்மையாரின் முடிவு

பெசண்டம்மையாரின் முடிவு

தோழர் அன்னிபெசண்ட் அம்மையார் 20-9-33ந் தேதி மாலை 4-மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மை யாரின் வாழ்வு பெண்மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக் கும் ஓர் அறிவுருத்தல் ஆகும். பெண்கள் “பாபஜென்மம்” என்றும், “பேதமையென்பது மாதர்க் கணிகலம்” என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக்குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள் தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந்துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்கவென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார். தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவியாவார். பாதிரி களின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நா°திகமாக்கி, தெய்வம் இல்லை என்று பிரசாரம் செய்யும்படி செய்தது. பிறகு புருஷனை விட்டுப் பிரிந்தார். பிறகு கர்ப்பத்தடையை யாவருக்கும் பிரசாரம் செய்து வந்தார். கர்ப்பத்தடையை சட்ட சம்மந்தமாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரசாரமும் செய்தார். பின்னர் தனது 32-ம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார்....

ஜவஹர்லால் – காந்தி

ஜவஹர்லால் – காந்தி

தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதியகடிதத்தின் ஆரம்பத்தில், ராஜீய கோரிக்கை என்ன என்பதில் வாசகம் தெளிவாயில்லை என்றும், மக்களை தப்பான வழியில் நடக்கும்படியான பிரசாரம் நடந்து வருகிறதென்றும் ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டு ராஜீய கோரிக்கைகளை தெளிவுபடுத்தும் முறையில் பூரண சுயேட்சை என்று காங்கிர° தீர்மானித்திருப்பதற்கு பொருள், ராணுவம் அன்னியநாட்டு சம்மந்தம் பணம் ஆகியவைகளில் பூரண ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதே என்றும் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு தன்னைப் பொருத்தவரையில் இப்பொழுது அவர் இன்னும் அதிகமாகப் போகவேண்டி இருப்பதாகவும், அந்த நிலைமையையும் தெளிவுபடுத்துவ தாகவும்  சொல்லி, மேல்கண்ட அதிகம் என்பதின் கருத்தை விளக்குகையில் பாமரமக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தவும், அவர்களுக்கு பொருளாதார சௌகரியம் ஏற்படுத்தவும், அவர்கள் சுதந்திரத்தோடு வாழ வும், வேண்டுமானால் இந்தியாவில் அதிகமான உரிமைகளையும், சலுகை களையும், அனுபவித்து வரும் கூட்டத்தார்கள் அவற்றை விட்டுக்கொடுத்தா லொழிய வேறு எவ்வழியிலும் முடியாது என்றும் விசேஷ தனி உரிமையை யும், சலுகை...

கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்

கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாள நாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற் றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை விளக்கவே இதை எழுதுகின்றோம். கொச்சி, திருவாங்கூர் ஆகிய இரு ராஜ்யங்களும் “சுதேச சம° தானங்கள்” ஆகும். இந்த இருநாடும் சுதேச ராஜாக்கள் என்பவர்களால் இந்து மத சம்பிரதாயங்களைப் பிரதானமாய் கருதி ஆட்சிபுரியப் படுவதா கும். ஹிந்து மதத்தை அதன் உண்மைத் தத்துவமான வருணாச்சிரம தரும முறைப்படி ஜாதி வித்தியாசங்களைக் கடுமையாய் அனுஷ்டித்து வந்ததின் பயனாகவே மேல் ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் அந்த இரு நாடுகளிலும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி ஜனங்கள் இந்து மதத்தை விட்டு இந்துக்கள் அல்லாதவர்களாய் விட்டார்கள். அதாவது, அவர்கள் கிறி°த்தவர்களும், இ°லாமானவர்களும், யூதர்களும், புத்தர்களுமாய் இருந்து வருகிறார்கள். பாக்கியுள்ள பகுதியில் அரையே அரைக்கால் வாசிப்பேர்கள் இன்றும் தாழ்ந்த ஜாதி மக்களாய்...

சமதர்ம வெற்றி

சமதர்ம வெற்றி

நாம், சமதர்ம இயக்கத்திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், °தல °தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்றுதீர்மானித்தபொழுது நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நா°திக சு.ம.காரர்களின் இத் திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு °தானத்தையும், எந்த °தல °தாபனத்திலும் அடையமுடியாது என்பதையும் அப்படியடைய முயற்சிக் கும்படி நாம் பகிரங்கமாய் அறை கூவி அழைக்கின்றோம்” என்று எழுதின. ஆனால் அதன் பின், நமது தோழர்களால் பல ஜில்லா போர்டு, தாலுக்காப்போர்டு, முனிசிபால்டி முதலியவைகளில் பல °தானங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சென்ற மாதம் நமது இயக்கப் பிரமுகர் தோழர் பி.சிதம்பரம் திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் அஸம்பிளிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது நமது இயக்கப்பிரமுகர்களில் ஒருவரும்புதுக்கோட்டை பெரும் கலகத்திற்கே காரண பூதரென்று சிலகாலம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவரும் இளைஞரேறுமான தோழர் அட்வகேட் கே. முத்துசாமி வல்லதரசு பி.எ.பி.எல். மறுமுறையும் புதுக்கோட்டை சட்டசபைக்குஅபேட்ச கராக நின்று அதிகப்படியான ஓட்டுகளால் நமது மாற்றலர் தலைகவிழ வெற்றி பெற்றது கண்டு நாம்...

பாராட்டுகிறோம்  “குச்சுக்காரி”கள் தொல்லை ஒழிப்பு

பாராட்டுகிறோம் “குச்சுக்காரி”கள் தொல்லை ஒழிப்பு

  ஈரோட்டில் குச்சுக்காரிகள் தொல்லை என்பதாகவும், விபசாரிகள் தொல்லை என்றும் தலையங்கங்கள் கொண்ட இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் உபதலையங்கங்களாக எழுதி அதைக் குறித்து போலீசாரும், முனிசிபாலிட்டியாரும் முயற்சியெடுத்து “விபசார ஒழிப்பு” சட்டத்தை ஈரோட்டிற்கு அமுலில் வரும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்ட விஷயம் நேயர்களுக்குத் தெரியுமென்றே நினைக்கிறோம். அந்தப்படியே ஈரோடு முனிசிபல் கௌன்சிலில் கௌன்சிலர் தோழர் கேசவலால் அவர்களால் ஒருதீர்மானம் கொண்டுவரப்பட்டு தோழர் ஈ.எ°.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு மற்ற எல்லா கௌன்சிலர்களாலும் ஏகமனதாய் ஆமோதிக்கப்பட்டு சேர்மென் அவர் களுடைய பலமான குறிப்பின்மேல் கவர்ன்மெண்டுக்கு அனுப்பப்பட்ட தில் கவர்ன்மெண்டார் அதை ஏற்று ஈரோட்டிலும், கோயமுத்தூரிலும் இந்தச் சட்டம் அமுலுக்குவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்குவர விளம்பரம் செய்யப் பட்டாய்விட்ட விபரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவிஷயமாய் ஈரோடு முனிசிபல் கௌன்சிலர்களையும், பிரத்தி யேகமாய் தோழர் கேசவலாலையும், சேர்மென் அவர்களையும் பாராட்டு வதுடன் அவர்களுக்கு நமது மனமார்ந்த...