தோழர் காந்தி

 

தோழர் காந்தி அவர்கள் இப்போது இருந்துவரும் பட்டினி விரதத்தில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் விஷயமாயும் பாடுபடுவாராம், “போகட்டும் பாவம்”.  இத்தனை நாளைக்குப் பிறகாவது கிறிஸ்தவ தீண்டாதார் விஷயம் அவருடைய ஞாபகத்துக்கு வந்தது பற்றி ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. ஆனால் இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்துடன் போட்டி போடத் தென்னிந் தியப் பார்ப்பனர்களின் சூத்திரக்கயரின் சக்தியேயாகும் என்பதில் மாத்திரம் சிறிதும் ஐயமில்லை.

குடி அரசுசெய்திக் குறிப்பு – 07.05.1933

 

You may also like...