‘காதலர் நாளில்’ மனநல மருத்துவர் சிவபாலன் விளக்கவுரை திருமணத்துக்குப் பிறகு தான் உண்மையில் காதலின் தேவையே தொடங்குகிறது
காதல் குறித்து பெரியார் கூறியது போல் வேறு எந்த தத்துவ சிந்தனையாளர்களும் கூறியது இல்லை. யாரோ ஒருவர் சொல்லிச் சென்றதை கண்முடித்தனமாக பின்பற்றி காதலைப் புனிதப்படுத்துகிறோம். அன்பு, நட்பு தவிர, காதலில் எந்தப் புனிதமும் இல்லை. பிப். 14 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காதலர் நாள் விழாவில் மனநல மருத்துவர் சிவபாலன், காதல் – காதலுக்குப் பிறகான திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச் சினைகள் குறித்த ஆழமான உளவியல் சிக்கல்களை விளக்கினார். அவரது உரை: ஒரு மனநல மருத்துவராக பல நிகழ்வு களில் கலந்து கொண்டிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசியுள்ளேன். அவைகளில் பொதுவாக, மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி? இப்படியான தலைப்புகள் தான் அதிகம் இருக்கும். காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் மத்தியில் பேசுவது ஒரு தனி அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் அப்படியான...