தலையங்கம் ஆளுநரின் “சண்டித்தனம்”
பாஜக ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அனைவருமே பாஜக அல்லாத ஆட்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடும் சட்ட விரோத செயல்பாடுகளில், கூச்ச நாச்சமின்றி செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ள இந்தியா சர்வதேச பார்வையில் அவமானப்பட்டுக் கிடக்கிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இப்போது பாஜக கூட்டணி கட்சியினராலேயே கடும் கன்டனத்திற்கு உள்ளாகி வருகிறார். நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 7.5 விழுக்காடு, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அதற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஆளுநர். சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பதாகக் கூறுகிறார். நீட் தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநர் தரப்பு விளக்கத்தைக் கேட்டு அவரது செயலாளருக்கு ‘தாக்கீது’ அனுப்பியுள்ளது. வழக்கை விசாரிக்கும் அமர்வில்...