தலையங்கம் தோழர்களே, தயாராவீர்!
வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் “வைக்கம் போர் முடியவில்லை” எனும் தலைப்பில் ஜாதித் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் சாக்கடை மலகுழிகளை சுத்தம் செய்யும் ஆபத்தான இழிவு வேலைகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. நச்சுக் காற்றில் சிக்கி பல தலித் தோழர்கள் உயிரிழக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி செயல்பட முன் வந்திருப்பதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். மனித கழிவுகளை மனிதர்கள் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட நிலையில் இந்த அவலம் தமிழகத்தில் அதிகம் நடப்பதை முதல்வர் நேர்மையோடு ஒப்புக்கொண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். முதல் கட்டமாக நகர பகுதிகளில் நவீன இயந்திரங்களை அடுத்த நான்கு மாத காலத்துக்குள் முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இனிவரும் காலங்களில் மனிதர்கள் செய்யும்...
