Category: பெரியார் முழக்கம்

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

0

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...

0

கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர்  சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம் அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க! காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க! கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து....

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி 0

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி

அயோத்தியில் ‘ராமன்’ கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பன சக்திகளும், சங்பரிவாரங்களும் பா.ஜ.க. ஆட்சியும், ஏன் துடிக்கின்றன? ‘ராமன்’ மநுதர்மப்படி ஆட்சி நடத்தியதுதான் இதற்குக் காரணம். இதை இறந்துபோன காஞ்சி மூத்த பார்ப்பன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே கூறியுள்ளதை ‘தமிழ் இந்து’ நாளேடு அதன் ஆன்மிகப் பகுதியில் ஜூன் 26, 2014இல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பகுதி இதோ: “ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்யபாரம் நடத்தவில்லை. தன் அபிப்பிராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்வீகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவா ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசா°த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்” – என்கிறார்,...

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி 0

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர்...

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்? 0

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமம் எனப்படும் ளுவயகக ளுநடநஉவiடிn ஊடிஅஅளைளiடிn மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும். இக்குழுமம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்துகிறது. 2006 வரை மண்டல அளவிலேயே இப் பணியமர்த்தும் நடவடிக்கைகளை இக் குழுமம் மேற்கொண்டு வந்தது. (இந்திய அளவில் 7 மண்டலங்களாக இக்குழுமம் செயல்பட்டு வருகிறது ). இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளில் கிடைத்து வந்தது. 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் அகில இந்திய அளவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என கூறியிருந்தாலும்கூட 50 சதவீதப் பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய...

இதுதான் கெயில் நிறுவனம்! 0

இதுதான் கெயில் நிறுவனம்!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத் துக்குக் குழாய் வழியாக கொண்டு சென்ற எரிவாயு வெடித்து, 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதில் மிகுந்த கவனமும் பராமரிப்பும் தேவை. ஆனால், வழமையான அதிகாரிகள் அலட்சியம்தான் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்த்துப் போராடினால் வளர்ச்சியை விரும்பாதவர்கள், வெளிநாட்டுப் பணம் பெறும் தொண்டு நிறுவனங்களால் தூண்டி விடப்படுகிறவர்கள் என்று குற்றம் சாட்டும் ஆட்சிகள், இந்த சாவுக்கு என்ன பதிலை கூறப் போகின்றன? தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பால் இந்த ஆபத்தான திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவு என்பதை இந்த விபத்து உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘கூடங்குளம்’ திட்டத்தை நியாயப்படுத்தும் ஆட்சியும், அதிகார வர்க்கமும் இந்த ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? மவுலிவாக்கம் அவலம்! சென்னை மவுலிவாக்கத்தில் ஏரிக்கரை மீது எழுப்பப்பட்ட 11 அடுக்கு மாடிக்...

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு 0

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு

இராஜபக்சே, கொழும்பில் முன்னின்று நடத்திய நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று நாடு முழுதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. அப்போது சென்னை மயிலாப்பூர், மந்தை வெளியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சலகம் மீது வெடி பொருள் வீசியதாக கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், தமிழக அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஏவியது. 2013, அக்டோபர் 29 ஆம் தேதி கைது செய்யப் பட்ட தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை.அருண் ஆகியோர் வழக்கிற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக 2014, ஜூன் 24 ஆம் தேதி நீதிபதி வி.தனபாலன், எம்.சொக்க லிங்கம் முன்...

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது 0

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது

கழகத்தின் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் மற்றொரு ஊர்தியை வழங்கியுள்ளது. இது கழகத்துக்கான இரண்டாவது ஊர்தி, புதிய ஊர்தியாகும். இது குறித்து ஈரோடு மண்டல செயலாளர் இரா. இளங்கோவன் தந்துள்ள செய்தி: “நமது பிரச்சார உத்திகளை இன்றைய காலத்திற்குகேற்ப மாற்றி அமைத்திட வேண்டிய அவசியமான சூழலில் உள்ளோம். ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமானால் குறைந்தது ரூ..20,000/- வரை தற்போது செலவா கின்றது. நமது தோழர்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினால் மீண்டும் அடுத்தக் கூட்டம் நடத்துவதற்கு 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகின்றது. தோழர்களும் பொருளாதாரப் பற்றாக்குறையால் சோர்ந்து போகின்றனர். வெறுமனே பொதுக் கூட்டம் போட்டு ஒலி பெருக்கி மூலம் மணிக்கணக்கில் பேசினாலும் பொது மக்கள் விரும்பி அக் கூட்டத்தை முழுமையாகக் கேட்பதில்லை. ஆகவே, நமது பிரச்சாரங்களை வீடியோவாக, படங்கள் மூலமாக, சாதி ஒழிப்பு, உலகம் தோன்றிய வரலாறு, உயிர்கள் உருவான வரலாறு, மூடநம்பிக்கை ஒழிப்புப்...

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை 0

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை

தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா-இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது. கோவையைச் சார்ந்த ஒருவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திட மிருந்து பெற்ற பதிலில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளுக் கிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ நாடாளுமன்ற அனு மதியோ அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே வெறும் வெற்றுத் தாளைக் காட்டி ஒப்பந்தம் என்று மத்திய வெளி யுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் ஏமாற்றி வருகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று காங்கிர° ஆட்சி, நீதிமன்றத்தில் கூறியது. இப்போது பா.ஜ.க. ஆட்சியும் இதே கருத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உறுதிப்படுத்தியுள்ளது....

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அரசு ஊழியர்கள் மீது கடந்தகால குற்றங்களுக்காக நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு இதேபோல் பதவியை இழந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பு கூறி விட்டால், இந்தியாவில் அரசியல் சண்டைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்! அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களான ‘வி.அய்.பி.’களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும். – உள்துறை அமைச்சகம். அவர்கள் ‘வி.அய்.பி.’க்கள்தான் என்பதற்கு இருந்த ஒரே அடையாளத்தையும் இப்படிப் பறித்தால் எப்படி? சீன எல்லைப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டம். – ‘தினமலர்’ செய்தி அதேபோல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எல்லைப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவது பற்றியும் பரிசிலிப்பது நல்லது! பேய், பில்லி, சூன்யம் விரட்டுவதாகக் கூறி திருநெல்வேலி யில் ஒரு முதியவரின் தலையில் 3 அங்குல...

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்! 0

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்!

மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்தி மொழித் திணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் இந்திமொழியை மட்டுமே தனது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவார் என்று முதல் அறிவிப்பு வந்தது. அது அவரது உரிமை. ஆனாலும்கூட குஜராத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், இந்தியை ஏன் பேச்சு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடும்போது, இந்தி மொழிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று மோடி ஆட்சி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தபோது இந்தி பேசும் மாநிலங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்று சமாதானம் கூறினார்கள். ஆங்கிலத்தின் இணைப்பு மொழிக்கான பயன்பாட்டை, படிப்படியாக அகற்றிட வேண்டும் என்பதே இதற்கான உள்நோக்கம் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதே யாகும். இப்போது தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ நாளேட்டில் (8.7.2014) மத்திய இரயில்வே துறை, இந்தி மொழியில் மட்டுமே ஒரு விளம்பரத்தைச் செய்துள்ளது. அந்த விளம்பரம் இரயில்வே...

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்! 0

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்!

துவாரகா பீட பார்ப்பன சங்கராச்சாரி-சுவருப்பானந்தா சரசுவதி, சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வழிபடக் கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், சாய்பாபா பக்தர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். சீரடி சாய்பாபாவை ‘இந்துக்கள்’ தங்கள் கடவுளாக நாடு முழுதும் கோயில் கட்டி வழிபடுவதோடு ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற சேவை களையும் செய்து வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீரடி சாய்பாபா – பிறப்பால் ஒரு முஸ்லீம். ஆனாலும் முஸ்லீம் மதத்தைவிட்டு விலகியவர்; சீரடி சாய்பாபா ஒரு கடவுள் இல்லை என்றும், இந்து கோயில்களில் அவர் படங்களை அகற்ற வேண்டும் என்றும் வாரணாசியில் இந்த சங்கராச்சாரி கூறியவுடன், சங்கராச்சாரி சீடர்கள் வாரணாசி தெருவில் இறங்கி, சாய்பாபாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக சாய்பாபாவை வழிபடும் இந்துக்கள், துவாரகா பீட சங்கராச்சாரி உருவ பொம்மைகளை எரித்தனர். சாய் பாபா பக்தர்கள், சங்கராச்சாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதைக் கண்டித்து பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘சாதுக்கள்’...

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் 0

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக 2014 மே மாதம் 15.5.2014 முதல் 19.5.2014 முடிய 5 நாள்கள் கொடைக் கானலில் 8 முதல் 18 வயது குழந்தைகளுக்கான பழகு மகிழ்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 68 குழந்தைகள் கலந்து கொண்டனர். பதினைந் திற்கும் மேற்பட்ட அறிவியல் மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டு நெறிப்படுத்தினர். 15.5.2014 : தொடக்க நாள் நிகழ்வாக முற்பகல் அறிமுக வகுப்பு நடந்தது. குழந்தைகள் தங்களின் சுய விவரங்களையும், திறமைகள், பலம், பலவீனம் ஆகியன குறித்தும் சுவையாக பகிர்ந்து கொண்டனர். இவ்வகுப்பினை நீலாவதி நெறிப்படுத்தினார். பிற்பகல் படைப் பாற்றல் வகுப்பு நடந்தது. பல்வேறு தலைப்பு களில் கதை, கவிதை, நாடகம், பேச்சு, பாடல், ஓவியம், தனி நபர் நடிப்பு ஆகிய திறமைகளை குழந்தைகள் வெளிப்படுத்தினர். வகுப்பறை வன்முறைகள் குறித்தும், எப்படிப்பட்ட வகுப்பறை, எப்படிப்பட்ட ஆசிரியர், தங்களுக்கு வேண்டும் என்பதும் குழந்தை களால் நடித்துக்...

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள் 0

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள்

விழா மேடையில் அய்யா வைத்தி லிங்கம் ஏற்புரையாற்றும்போது, தான் வாழ்ந்துவரும் அழகியநாயகிபுரத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்ததைப் பற்றிக் கூறினார். கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் ஊரான நாட்டுச்சாலை தான் இவரது சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கணபதியும் இவரும் மிக நெருங்கிய நண்பர் களாக இருந்துள்ளனர். அவரது வழிகாட் டலில்தான் இவர் சிங்கப்பூர் சென்றிருக் கிறார். அப்போது கடவுச் சீட்டு எடுக்கும் போது அதிக நாள் பணியாற்றலாம் என்று கூறி, நான்காண்டுகள் வயதைக் குறைத்துக் காட்ட 11-4-1918 என்று தனது பிறந்த நாளை மாற்றிப் பதிந்த கதையையும் இவர் நகைச் சுவை பொங்கக் கூறுவதுண்டு. நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த நிலையில் அவரை பலர் கேலி பேசியதையும், அவமானப்படுத்தியதையும் எடுத்துரைத்தார். ஒரு திருமண வீட்டில் அவரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மொய் எழுதத் தொடங்கியபோது குழந்தைப் பேறு இல்லாதவன் திருமண மொய் எழுதக்கூடாது என்று மொய்...

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை! 0

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை!

உலகின் பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரியது இந்திய தொடர்வண்டித் துறை. ஒவ்வொரு நாளும் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் பயணிக்கும் இந்தத் துறையின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களுக்கான சேவை என்பதுதான். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே மாற்றி வசதிப் படைத்த பணக்காரர்களுக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்குமான துறையாக (ஞசடி சுவைஉh-ஞசடி ழiனேi) மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு மோடி ஆட்சியின் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தில் 6.5 சதவீதமும் உயர்த்திவிட்டார்கள். இப்போது பயணிகள் கட்டணத்தை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் எரிபொருள் விலையோடு இணைத்து விட்டார்கள். இனி, எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பயணிகள் கட்டணங்களும் உயரும். “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது” என்ற ‘வேத’ சுலோகத்தைப்போல் “கட்டண உயர்வு,...

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும்  பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை 0

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும் பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய அமைப்பின் தலைவர் அழகியநாயகபுரம் ப.அ. வைத்தியலிங்கம், அவர் நூறு வயதை நிறைவு செய்துள்ளார். அய்யா வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: நூற்றாண்டு நிறைவு விழா காணும் விழா நாயகர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் அய்யா அழகிய நாயகிபுரம் ப.அ.வைத்திய லிங்கம் அவர்களே! அவரது வாழ்விணையர் காசியம்மாள் அவர்களே! பூரிப்போடும் பெருமிதத்தோடும் இவர் களுடைய நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் அன்பிற்குரிய அம்மா மேகலை அவர்களே! இளையரசி அவர்களே! கோமதிஅவர்களே! அவரது அன்பு மகன் கலைநேசன்அவர்களே! அவர்கள் குடும்பத்தார்களே! இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிற உறவினர்களே! நண்பர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் பெருமிதத்தோடு கலந்து கொண்டிருப் பதற்கான காரணத்தை பலரும் பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். குறிப்பாக, பெரியார்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

நாட்டில் நிதிநிலை மோசமாகி விட்டது; வரி விதிப்பின் மூலம் தான் ஓரளவு சரி செய்ய முடியும். – நிதியமைச்சர் அருண் ஜெட்லி வணிகவரி, வருமான வரி அலு வலகங்களைப்போல் “மோச மான நிதிநிலையை சரிப்படுத் தும் வரி” அலுவலகங்களையும் நிரந்தரமாக தொடங்கிடுங்க…! குற்ற வழக்குகளில் ஆளுநர் களை விசாரிக்கும் உரிமை நீதி மன்றங்களுக்குக் கிடையாது. – ஆளுநர் ஷீலா தீட்சத் ஏன், சுற்றி வளைச்சுப் பேசுறீங்க மேடம்… செய்த ஊழல்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம்தான் கவர்னர் பதவின்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே? நாடாளுமன்றத்தில் விலை வாசி உயர்வு பற்றி நடந்த விவாதத் தின்போது ராகுல் காந்தி தூங்கியதாக பா.ஜ.க. புகார். – செய்தி கூச்சல், குழப்பம் இல்லாம அமைதியாக தூங்குவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் ‘ஜன நாயகத்துக்கு’ நேரம் கிடைக் குதே; அதுக்காக பெருமைப் படுங்க… ட போலி என் கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு பா.ஜ.க. தலைவர் பதவி. -செய்தி அதுக்காக...

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல் 0

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல்

பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரி ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ என்ற பெயரில் செயல்படும் பா.ம.க. ஆதரவு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் பாலு, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதே போல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்பு களும் வராகி என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரிக் கிறது. ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ சார்பில் வழக்கறிஞர் விஜயன் வாதாடுகிறார். பெரியார் முழக்கம் 24072014 இதழ்

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்! 0

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்!

‘சமஸ்கிருத வாரம்’ கடைபிடிக்க வேண்டும் என்று மோடி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருப்பது, சி.பி.எஸ்.ஈ. போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும்தான். பல்வேறு அரசியல் கட்சிகள் இதை எதிர்த்திருப்பதோடு, தமிழக முதல்வரும் எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றைத் தவிர, அநேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்தத் திணிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்! சமஸ்கிருதம்  – ஒரு மொழி மட்டுமல்ல; அது, பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடும் ஆகும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி, பார்ப்பனப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்ற கொள்கைப் பார்வையோடு இந்த முயற்சிகளில் இறங்கி யிருப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே ‘சமஸ்கிருதத்தை’ பேசுவதாக 2001 மக்கள் தொகை அறிக்கையில் பதிவு செய்திருப்போர் 14,135 பேர் மட்டுமே. இதுவும்கூட 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 49,736 ஆக இருந்து...

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது 0

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது

தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளான வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உ.பி., பீகார் போன்ற வடமாநிலத்தவர் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழ்நாடு உள்பட தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைகள் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அகில இந்தியத் தேர்வுகளாக மாற்றப்பட்டதுதான் காரணம். இந்தத் தீர்ப்பில்கூட 50 சதவீத இடங்களை மண்டல அளவில் தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தும், நடுவண் ஆட்சி அதை ஏற்காமல், அகில இந்திய அளவிலேயே நடத்தியது. அகில இந்திய தேர்வு முறை காரணமாக – லக்னோ, பாட்னாவிலுள்ள தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளைச் செய்து கையூட்டாக பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பள்ளிகளில் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாட வலியுறுத்தும் மோடி ஆட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு. – செய்தி அதேபோல், கல்யாணம், கரு மாதி, அர்ச்சனை என்று 365 நாள்களும் சமஸ்கிருத நாளா கவே, காதைத் துளைக்கிறதே, அதையும் சேர்த்து இந்த கட்சிகள் எதிர்க்கக் கூடாதா? திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடம்பில் சட்டை இல்லாமல் பூணூலுடன் சாமி தரிசனம் செய்தார். – செய்தி இது ‘ஆன்மிகக் கிளப்’புகளுக் கான ‘டாப்லெஸ்’ (மேலாடை யில்லாத) கலாச்சாரம்; இதில் தலையிடும் அதிகாரம் உச்சநீதி மன்றத் துக்கே கிடையாது. மூச்… ‘மங்கள்யான்’ செயற்கைக் கோள் – திட்டமிட்டப்படி செப் டம்பர் 24இல் செவ்வாய் கிரகத்தை அடையும். – விஞ்ஞானி மயில்சாமி அச்சச்சோ… மங்கள்யானுக்கு செவ்வாய் தோஷம் புடுச்சிடுமே! உடனே பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தாகணும், ஓய்! 298 பேருடன் பறந்த மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? மர்மம் நீடிக்கிறது....

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்? 0

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட் டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்று உண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சில நாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளி யிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்து செய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றை ஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே.கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார். ‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக் கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. கடந்த 08.07.2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி.கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலய பிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட் டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்...

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன் 0

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன்

இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ.நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார் சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர். ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும் வைதீக தர்மமும் படிப்படியாகத் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் வர்ணாசிரம தர்மம் மிக இறுக்கமாகப் பேணப்பட்டது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான கற் கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றின் வெளிப்பா டுகளாக அரசர்களாலும் அவர்களின் குடும்பத்தின ராலும் அரசு அதிகாரிகளாலும் பார்ப்பனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. வடநாட்டிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு சதுர்வேதி மங்கலங்களில் குடிவைக்கப்பட்டனர். அவர்களுக்குக்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும். – ஞான தேசிகன் அப்படியானால் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் அணிகளுடன்கூட கூட்டணி கிடையாதா? தமிழ்நாட்டில் ‘தீண்டாமை’ என்பது எல்லாம் அறவே கிடை யாது. – தந்தி டி.வி.யில் மருத்துவர் இராமதாசு ஓ, அதுக்காகத்தான் ‘திராவிட கட்சிகள்’ தமிழகத்தை நாச மாக்கிவிட்டன என்கிறீர் களா? புரியுது! புரியுது! இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை நடத்த – அய்.நா. நியமித்த குழு இந்தியா வருவதற்கு மோடி ஆட்சி ‘விசா’ மறுப்பு. – செய்தி ஸ்ரீராமபிரான் நடத்திய யுத்தத்துக்குப் பிறகு, இலங்கை யில் எந்தப் போரும் நடந்தது இல்லை. இதுவே எங்க வெளிநாட்டு ‘இந்துத்துவா’ கொள்கை! புரிஞ்சுக்குங்க. ஜாதியமைப்பு மிகச் சிறப்பானது; அதற்கு எதிராக எந்த புகாரும் பழங்காலங் களில் வந்ததே இல்லை. – வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் சுதர்சன் ராவ் மோடிஜி, இப்படி ஒரு ஆசாமியை எந்தக் காட்டி லிருந்து பிடிச்சுட்டு...

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள் 0

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள்

தமிழின உரிமை மீட்பு தொடர் கூட்டங்கள்; அகமணமுறை எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கிராமம்தோறும் வாகனப் பரப்புரைப் பயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் என்று ஒரே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு பகுதிகளில் பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. 50க்கும் மேற்பட்ட கழகச் செயல் வீரர்கள் இந்தத் தொடர் பரப்புரை இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்று களப்பணியாற்றி வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை செயலவைத் தீர்மானங்களை விளக்கும் பரப்புரைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஜூலை 15 – பழனி, ஜூலை 16 – காரைக் குடி, ஜூலை 18 – நெல்லை மாவட்டம், பாவூர் சத்திரத்திலும் நடந்தது. இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் ஜூலை 23 ஆம் தேதி மன்னார்குடியிலும், ஜூலை 24 – மயிலாடுதுறை யிலும், ஜூலை 26 -சின்ன சேலத்திலும் நடந்தது. மூன்றாம் கட்டப் பயணம் 30 ஆம் தேதி...

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்! 0

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் போட்டுத் தந்த துரோகப் பாதையில் வீரியத்துடன் நடைபோடுகிறது, பா.ஜ.க. ஆட்சி. அய்.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்சி மனு போடுகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட மனித உரிமையாளர்கள் குழு இந்தியாவுக்கு வருவதற்கு ‘விசா’ வழங்க மறுத்து விட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவுடன் இணைந்து வெளிப்படையாக செயல்படும் சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வின் ‘செயல் உத்திக் குழு’ தலைவர் பதவிக்கு முடிசூட்டப்பட்டுள்ளார். பதவி கிடைத்தவுடன் இலங்கைக்குப் போய் இராஜபக்சேயையும் அவரது தம்பி, கோத்தபய இராஜபக்சேயையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக வேகம் வேகமாக காய்களை நகர்த்தக் தொடங்கிவிட்டார்....

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த  இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு –  தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி 0

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு – தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் – கோவை செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கிடும் பொதுக் கூட்டங்கள், தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் : ஜூலை 30 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டக் கழக சார்பில் கூடுவாஞ்சேரி அரசு பயணியர் மாளிகையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 4 மணியளவில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக தோழர்களுடன் கலந்து ஆலோசித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட தோழர்களை அறிவித்தார். மாவட்டத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட அமைப்பாளர் தெள் அமிழ்து, துணைத் தலைவர் ராஜ் குமார், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன் வெல்த் போட்டிக்குச் சென்ற இந்திய அதிகாரி ‘செக்ஸ்’ புகாரில் கைது. – செய்தி ‘காமன் வெல்த்’ நாடுகளுக்கான போட்டியை ‘காமன்’ போட்டி யாக நினைத்து விட்டார்போல. சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஊராட்சி களில் இந்து மத வழிபாடுகளைத் தவிர, வேறு மத வழிபாடுகள் நடத்த அரசு தடை. – செய்தி அப்ப…! ‘இந்து ராஜ்யம்’ அமைந்து விட்ட இந்த 60 ஊராட்சிகளிலும் இனி வறுமை இல்லை. வளம் கொழிக்கும் ‘தர்மம்’ செழிக்கும்னு சொல்லுங்க. வகுப்புக் கலவரங்களை ஒடுக்க, 2002இல் குஜராத்தில் மோடி பின்பற்றிய நடைமுறைகளையே நாடு முழுதும் விரிவாக்க வேண்டும். – பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஜி. ரவி இஸ்லாமியர் இனப் படுகொலைக்கு ‘குஜராத் நடைமுறை’ன்னு பெயர் மாற்றம் செஞ்சுட்டீங்களா? திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1800 கிலோ தங்கம் ‘ஸ்டேட் பாங்ங் ஆப் இந்தியா’ வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது. – செய்தி...

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள் 0

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் கோவை செயலவையில் நிறைவேற்றிய தமிழர் உரிமை பறிப்புகள் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கி நாடு முழுதும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பரப்புரைச் செயலாளர், செயலவைத் தலைவர், மாணவரணி பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். முதல்கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி பழனி யிலும், 16 ஆம் தேதி காரைக்குடியிலும், ஜூலை 18 ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத் திலும் நடைபெற்றது. இரண்டாம் சுற்றுப்பயணம் ஜூலை 23இல் மன்னார்குடியிலும், 24 ஆம் தேதி மயிலாடு துறையிலும், ஜூலை 26 ஆம் தேதி சின்ன சேலத்தி லும் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கட்டமாக ஜூலை 30 ஆம் தேதி காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும், ஜூலை 31 ஆம் தேதி சென்னை ஓட்டேரியிலும், ஆக°டு முதல் தேதி வேலூரிலும், ஆக°டு 2 ஆம் தேதி...

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது! 0

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது!

மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன் 6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு...

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம் 0

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்

1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் சமஸ்கிருதம் பேசியோர் 356. அதில் 315 பேர் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது உதாரணம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்  பேசத்  தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை. இது பெரியார் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர்கூட இல்லை. 1981இல் 6106 நபர்களாக இருந்தவர்கள், 1991இல் 49,376 நபர்களாக அதிகரித்து, 2001இல் 14,135 நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, அவ்வப் போது தங்கள் ‘மொழி அடையாளத்தை’ மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது,...

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி பொதுக் கூட்ட உரிமையை மறுக்கக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 0

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி பொதுக் கூட்ட உரிமையை மறுக்கக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி திராவிடா விடுதலைக் கழகக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து, பொதுக் கூட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுதும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூலை 15இல் தொடங்கி இதுவரை 15 பொதுக் கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக 16 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத் திலிருந்து பொதுக் கூட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் காவல்துறை கூட்டத்துக்கு அனுமதி தராமல் காலதாமதம் செய்து வந்தது. கடைசி நேரத்தில் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்துவிட்டால், கூட்டத்தைத் தடைப்படுத்திவிட லாம் என்று காவல்துறை திட்ட மிட்டது. இதைப் புரிந்து கொண்டு, கழகத் தோழர்கள் எச்சரிக்கையுடன் கூட்டத்துக்கு அனுமதி தருவதை உறுதி செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தனர். கோவை வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், இந்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து கூண்டோடு வெளியேற்றம். – செய்தி சட்டசபைக்குள் இவர்கள் கூண்டுக் குள்தான் வைக்கப்பட்டிருந் தார்களா, சொல்லவேயில்லை! மோடி அலையால்தான் பா.ஜ.க. வெற்றி என்று பா.ஜ.க. கூறுவது தவறு. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆக, பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ கொள்கையை ஏற்று, மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற உண்மையை, இரண்டு பேருமே ஒப்புக் கொள்றீங்க! உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று, 900 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரம் கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்த இரண்டு பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது கோயில் நிர்வாகம். – செய்தி அனைத்துக் கோயில்களும் பண்டரிபுரங்களாக மாறட்டும் என வாழ்த்துவோம்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்த் திருவிழாவை யொட்டி மாவட்ட நிர்வாகம், விழாப் பகுதியில் தற்காலிக டாஸ்மாக் கடை திறப்பு. – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தி அதுல என்னங்க தப்பு? பகவான் பவனி வரும்...

கிடைத்தது பிணை 0

கிடைத்தது பிணை

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நரோடியா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னி. இரண்டு ஆண்டுகாலம்கூட தொடர்ச்சியாக சிறையில் இல்லாத அவரை, இப்போது குஜராத் உயர்நீதிமன்றம், பிணையில் விடுதலை செய்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட் டோருக்கு 25 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு பரோல்கூட கிடைக்காது. 97 முஸ்லிம்களை கொலை செய்தவர்கள் என்றால் பிணையில் விடுதலையே கிடைத்து விடும். இதுவே ‘பாரதத்தின் நீதி’! உலகிலேயே… உ.பி.யில் பா.ஜ.க. ஓட்டு வங்கியை உருவாக்க மோடியால் கட்சிப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டவர் அமீத்ஷா! அவர் கட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. 65 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் படுகாயம டைந்தனர். இதில் சொந்த வீடு, வாசல்களை இழந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம்...

சிங்களக் கூட்டாளி ‘லைக்கா’ 0

சிங்களக் கூட்டாளி ‘லைக்கா’

ஈழத் தமிழர் முதலீட்டில் நடக்கும் ‘லைக்கா’ என்ற தொழில் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழர்களுக்கு குழிப் பறிக்கிறது. நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது வழியாக தமிழ்நாட்டில் தனது மூலதனத்தை முதலிடத் துடிக்கிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத் தீர்மானத்தையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் நசுக்குவதற்கு கொல்லைப்புற வழியாக நுழையும் இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன? முதலாவது: சிங்கள இனவெறி அரசு நடத்திய காமன் வெல்த் மாநாட்டுக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கியது. அதாவது உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் அம்மாநாட்டை புறக் கணிக்கக் கோரி போராட்டங்கள், உண்ணா விரதங்கள் நடத்தி வந்த வேளையில் அதுவும் ஈழத் தழிழர்களாக இருந்துகொண்டு அம்மாநாட்டை பலப்படுத்த அதி உயர்ந்த “கோல் °பான்சர்” செய்துள்ளது “லைக்கா மொபைல்” நிறுவனம். இரண்டாவது: பிரித்தானியாவில் உள்ள சிங்கள அரசின் நிதி உதவியுடன் இயங்கும் புத்த பிக்குகள் நடத்தும்...

தலையங்கம் இவர்கள் செய்த குற்றம் என்ன? 0

தலையங்கம் இவர்கள் செய்த குற்றம் என்ன?

மனித உயிர்கள் இங்கே மலிவானவை; அதுவும் ஜாதியில், பொருளாதாரத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் உயிர் மதிப்பில்லாதவை. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் நடந்திருக்கும் நிகழ்வு ‘மனிதம்’ இந்த சமூகத்தில் மரணித்து விட்டதா என்று கேட்கத் தூண்டுகிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இசக்கி யம்மனின் கோயில் திருவிழாவுக்காக கிராமத் தில் பல ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் கூடியிருக்கிறார்கள். முதல் நாள் இரவு, அந்த ஏழை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கோயில் மைதானத்திலேயே கழிக்க அவர்களின் குழந்தைகள் அதற்கு அருகே கம்பி வேலி அமைக்கப்பட்ட ஒரு மைதானத்தில் விளையாடப் போய் விட்டார்கள். அங்கே நிறுத்தபட்டிருந்த ஒரு கார், இவர்களின் விளையாட்டுக் கருவியானது. கார்கள் – இந்தக் குழந்தைகளின் நிஜ வாழ்க்கையோடு நெருங்க முடியாது. அது அவர்களுக்கு கனவுலக குதூகலம். கடனைத் திருப்பித் தராதவரிடமிருந்து ஒரு வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து, நிறுத்தி வைத்திருந்த கார் அது. முள் வேலியைத் தாண்டிய நான்கு குழந்தைகள். காரைக் கண்ட...

‘புலிப்பார்வை’ படவிழாவில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் 0

‘புலிப்பார்வை’ படவிழாவில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

‘லைக்கா’ நிறுவனம் தயாரிக் கும் ‘புலிப் பார்வை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மாண வர்கள் தாக்கப்பட்டதை திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிக்கிறது. சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம், தமிழ் நாட்டில் மிகப் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பாலச்சந்திரனை விடுதலைப் புலியாகவே சித்தரித்தும், அவருக்கு புலிகள் சீருடை அணிவித் தும் இப்படத்தில் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன், நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். சத்யம் தியேட்டரில் நடந்த விழாவின்போது ஈழத் தமிழர்களுக்காக போராடி வரும் மாணவர் அமைப்பினர், விழாவில் இந்தப் படம் குறித்து தங்களுக்கு சில சந்தேகம் இருப்பதாகக் குரல் எழுப்பினர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான படம் என்று சந்தேகப்படுவதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து விழாவுக்கு...

சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலம்: கழகத் தோழர்கள் போராடி நிறுத்தினர் 0

சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலம்: கழகத் தோழர்கள் போராடி நிறுத்தினர்

சாக்கடைக் குழிக்குள் மனிதர்கள் இறங்கி, சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது நச்சு வாயுவில் சிக்கி, தொழிலாளர்கள் மரணமடைவது சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இழிவும் ஆபத்தும் நிறைந்த வேலைக்கு மனிதர்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமாக ‘தலித்’ தொழிலாளர்கள் இந்த வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சென்i னமயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இதேபோல் சாக்கடைக்குள் இறங்கிய ஜனார்த் என்ற மாநகராட்சி ஊழியர் நச்சு வாயுக்கு 27.8.2013 அன்று பலியானார். மீண்டும் அதே பகுதியில் சாய்பாபா கோயிலருகே கடந்த ஆக°டு 16, 2014 அன்று தொழிலாளர்கள் சாக்கடை குழிக்குள் இறக்கப்பட்டனர். செய்தி அறிந்த மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், மாரிமுத்து, மனோகர் உள்ளிட்டடோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் இழி தொழிலை உடனே நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து 124 ஆவது வட்ட மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்...

உயர்நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு மவுனம் சட்டத்தை மீறும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் 0

உயர்நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு மவுனம் சட்டத்தை மீறும் விநாயகன் சிலை ஊர்வலங்கள்

‘விநாயக சதுர்த்தி’ எனும் மதப் பண்டிகை வீடுகளில் நம்பிக்கையாளர்களால் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த நிலை மாறி, ‘விநாயகன் ஊர்வலம்’ அரசியலாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து ‘இந்து’ மதவெறி அரசியலை ஊதிவிடவும் பயன்படுத்தப்படும் ‘விநாயகன்’ சிலை ஊர்வலங்களுக்கு ‘மத உரிமை’ என்ற போர்வையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ‘சுற்றுச் சூழலை’ பாதிக்கும் விதமாக ‘இராசயனக் கலவையில்’ உருவாக்கப்பட்டு கடல் நீரில் கொண்டுபோய் போட்டு நீரை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் உருவாக்கப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாடு வாரியம், இரசாயன விநாயகன்களுக்கு தடை போட்டுள்ளது. அத்துடன் நகரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் வைக்கப்படுகின்றன. பெரியார் இயக்கங்களின் பகுத்தறிவு – அறிவியல் பரப்புரை களுக்கு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போடும் காவல்துறை ‘விநாயகன்’ அரசியலுக்கு சட்டங்களை மீறி உதவிடுவதுதான் வேடிக்கை. இதில் தமிழக அரசும் உடந்தையாகவே செயல்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் இராமசாமி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தில்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மயிலை கபாலீசுவரன் கோயிலில் பக்தர்கள் பயன் பாட்டுக்காக ஏற்படுத்தப் பட்ட கழிப்பறைகளை கோயில் ஊழியர்கள் மக்களுக்கு அனுமதிக்காமல், தங்கள் கட்டுப்பாட்டி லேயே வைத்துள்ளனர். – ‘தினத்தந்தி’ செய்தி கோயில் கர்ப்பக்கிரகம் – அர்ச்சகப் பார்ப்பனர் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கழிப்பறைகளாவது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல! வேதங்களில் கூறப்படும் ‘சரஸ்வதி’ நதி, பூமிக்கடியில் ஓடிக் கொண் டிருக்கிறதா என்பதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்டறியும். – அமைச்சர் உமாபாரதி நடிகர் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தார்! உமா பாரதி ஆற்றையே தேடு கிறார்! ‘இராமர்’ பாலத்தை இடிக்கா மல், சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்படும். – மத்திய அமைச்சர் கட்காரி இதேபோல, பாபர் மசூதியை இடிக்காம, இராமன் கோயிலைக் கட்டுவோம்னு சொன்னீங்களா? எனக்கே தெரியாமல் என் பெயரில் ‘மேனன்’ பட்டத்தை சேர்த்து விட் டார்கள். என் பெயர், இனி பார்வதிதான். –...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருக: நாத்திகர் பேரணி தீர்மானங்கள் 0

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருக: நாத்திகர் பேரணி தீர்மானங்கள்

23.8.2014 சனிக்கிழமை மேட்டூர் சதுரங்காடியில் கழகத்தின் சார்பாக நடைபெற்ற ‘நாத்திகர் விழா’ பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: • 1989 முதல் மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கத்தை நிறுவி நடத்தி வந்தவரும், மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளியுமான நரேந்திர தபோல்கர் முதலாமாண்டு நினைவு நாள் 20.08.2014 ஆகும். கடந்த ஆண்டு அவர் இறந்த சில நாள்களில் 24.08.2014 அன்று மராட்டிய மாநில ஆளுநர் – பேயோட்டுதல், மந்திரவாதிகளின் செயல்கள், தேள், பாம்பு கடிக்கு பாடம் போடுதல், குட்டிச்சாத்தான், குறளி வித்தை போன்றவற்றை தடைசெய்யும் மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தும் அதைத் தொடர்ந்து 14.12.2013 அன்று மராட்டிய சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் 18.12.2013 அன்று சட்டமாக்கப்பட்டது. தமிழகத்திலோ 1925 முதல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, 1973 டிசம்பர் இறுதி வரை சுற்றிச் சுழன்று, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வீச்சான போராட்டத்தை நடத்ஃதி வந்த பெரியார் மறைந்து 40...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

இந்து ஆலயங்கள், திருமடங்களுக்கு தமிழக அரசும் காவல் துறையும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். – இராமகோபாலன் அப்படின்னா, மத பிரச்சினைகளில் ஆட்சி தலையிடக் கூடாதுன்னு சொல்வீங்களே… அந்தக் கொள்கையை கை விட்டாச்சா? பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். – மருத்துவர் இராமதாசு ஒரு சந்தேகம்…. ஜாதி மாறி திருமணம் செய்யும் பெண் களுக்கும் இது பொருந்துங் களா? சங்கர்ராமன் கொலை வழக்கு: விடுதலையான ஜெயேந்திரனை எதிர்த்து மேல் முறை யீடு இல்லை. – மத்திய அரசு வழக்கறிஞர் அரும்பாடுபட்டு சுவாமிகள் சங்கர்ராமனை ‘மேல் உலகம்’ அனுப்பியிருக்காரு; இதைப் பாராட்டாமல் மேல்முறையீடு செய்வது ‘அதர்மம்’! சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்களை முந்தைய பா.ஜ.க. ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி இரண்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. – உச்ச நீதிமன்றம் அப்பாடா… இனிவரும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் அமளிகள், மைக் உடைப்புகள், ஒத்தி வைப்புகள் எதுவுமே இருக்காது! விநாயகன் சிலைகளை நிறுவுதில் விதிகளை...

தலையங்கம் நாத்திகர் மரபு : நீதிமன்றம் தரும் வெளிச்சம் 0

தலையங்கம் நாத்திகர் மரபு : நீதிமன்றம் தரும் வெளிச்சம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி முடித்த மேட்டூர் நாத்திகர் பேரணிக்கும் வழமைபோல காவல்துறை அனுமதி மறுத்து, உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. வினாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி காவல்துறை கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி தமது ஆணையில் நாத்திக மரபு குறித்து பதிவு செய்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். “ஆத்திகம்-நாத்திகம் இரண்டுமே இந்திய மரபில் ஒன்றுக்கொன்று உதவி வந்திருக்கிறது. இரண்டில் எந்த ஒன்றையும் ஒழிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. இரண்டு கருத்தியல்களும் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும், இரண்டுமே சமூகப் பிணைப்பை வலிமைப்படுத்துவதற்கான இழையோட்டத்தை வழங்கியிருக்கிறது. எனவே இதுபோன்ற ஊர்வலங்களும் (நாத்திகப் பேரணி) சமூக செயல்பாடுகளுக்கான பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது” – என்று நீதிபதி வி.இராம சுப்பிரமணியன் அனுமதிக்கான ஆணையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமூக மாற்றத்துக்கு முரண்பாடுகளுக்கிடையிலான போராட்டத்தை கூர்மையடையச் செய்தல் அவசியம் என்ற கண்ணோட்டத்தோடு உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ‘வேதம்’ ஆரிய பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட காலத்திலிருந்தே வேத...

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி 0

தடை உடைந்தது; திரண்டனர் தோழர்கள் மேட்டூரில் நாத்திகர் பேரணி

மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...