Category: பெரியார் முழக்கம்

உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது சீரடி சாய்பாபா ‘அற்புத’ மோசடிகள்

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்தி உயிருடன் வா ழ்ந்த காலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போது சில மனிதர்களைப் பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பலமான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக் கூடாது; அவர்...

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு...

மேட்டூர் தோழர் மார்ட்டின்

மேட்டூர் தோழர் மார்ட்டின்

கழகத்துக்கு 25 ஆயிரம் நன்கொடை தலைமைக் கழக செயலாளர் தபசி குமரனிடம் மேட்டூர் கழகத் தோழர் மார்ட்டின் தமது இல்ல மணவிழா மகிழ்வாக கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.25,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 15092016 இதழ்

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24இல் யாழ் நகரில் தமிழர் எழுச்சிப் பேரணி

செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கையை கண்டித்தும் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைக் கோரியும் மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இந்தப் பேரணியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன், கஜேந்திர குமார் தலைமையிலான தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஷ் பிரேம சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம், சர்வ மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் ஒன்றுபட்ட எழுச்சி மீண்டும் ஈழத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழர்களின் ஒருங்கிணைந்த உரிமைப் போராட்டம் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. பெரியார் முழக்கம் 15092016 இதழ்

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

வினாயகன் அரசியலுக்கு எதிராக சென்னை-பொள்ளாச்சியில் பெரியார் கைத்தடி ஊர்வலம்: கைது

மதத்தை அரசியலாக்கி, மதக் கலவரத்தை உருவாக்கி வரும் ‘விநாயகன்’ ஊர்வலங்களை எதிர்த்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்று தான் இந்து முன்னணி நடத்தும் ‘விநாயகன் சிலை’ ஊர்வலமும் நடந்தது. திருவல்லிக் கேணி அய்ஸ்அவுஸ் பகுதி மசூதிக்கு அருகே கழகத் தோழர்கள் திரண்டனர். பெரியார் கைத்தடிகளுடன் ‘விநாயகன் ஊர்வலத்தை அரசியலாக்காதே!’, ‘கலவரம்  உருவாக்கும் விநாயகன் ஊர்வலங்களுக்கு, அரசே அனுமதி அளிக்காதே!’ ‘வீடுகளில் நடக்கும் பக்தி பண்டிகைகளை வீதிக்குக்  கொண்டு வந்து அரசியலாக்காதே!’ என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கி தோழர்கள் முழக்கமிட்டனர். கைத்தடி ஊர்வலத்துக்கு பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு, விழுப்புரம், மேட்டூர், காவலாண்டியூர், குடியாத்தம் பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தின் நோக்கங்களை விளக்கி பால்பிரபாகரன் பேசினார். தோழர்களை காவல்துறை கைது செய்தது. இராயப்பேட்டை பி.எஸ்.என்.எல்....

மணமகள் தேவை

மணமகள் தேவை

மணமகள் தேவை சென்னை ‘பர்னிச்சர்’ நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும், மாதம் ரூ.20,000 ஊதியம் பெறும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 28 வயதுடைய மணமகனுக்கு – மணமகள் தேவை. ஜாதி  தடையில்லை.   தொடர்புக்கு: 9840473704 / 9677294241 பெரியார் முழக்கம் 08092016 இதழ்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடியில் “நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை”ப் பயணம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 27.08.2016 சனிக்கிழமை அன்று மத்தியில் ஆளும் மோடியின் பி.ஜே.பி. அரசால் – கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் தூத்துக்குடி முதல் ஆழ்வார்திருநகரி வரை கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 27.08.2016 காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கிய பரப்புரைப் பயணத்தை ஆதித்தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பொறிஞர். சி. அம்புரோசு, தோழர்.கோ.அ. குமார் ஆகியோரது உரையைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். முன்னதாக  தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பரப்புரைச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரால் மாலை அணி விக்கப்பட்டது....

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை  விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளியாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி – உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை  வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால்...

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க!

“படத் திறப்பு படையலுக்கு அல்ல; பாடம் கற்க” என்று தோழர் ‘ஏ.ஜி.கே’ வின் முழக்கத்தை முன் வைத்து அவரது படத்திறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 4ஆம் தேதி பகல் 11 மணியளவில் அவரது சொந்த கிராமமான நாகை அந்தணப் பேட்டையில் நடந்தது. முன்னதாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. தோழர் ஏ.ஜி.கே. எனும் அ.கோ. கஸ்தூரிரங்கன் படத்தை தோழர் தியாகு திறந்து வைத்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், தோழர் மணியரசன் மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், முடிவெய்திய தோழர் ‘ஏ.ஜி.கே.’ அர்ப்பணிப்பு, போர்க் குணம், மனித நேயம், போராட்ட வடிவங்கள், கீழத் தஞ்சை மாவட்டத்தில் ஜாதி – பண்ணையடிமை ஆதிக்கத்தை ஒழிப்பதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசினர். ஏ.ஜி.கே. அவர்களின் மகள் வழக்கறிஞர் கல்பனா நன்றி கூறினார். மன்னை காளிதாசு, மயிலாடுதுறை இளையராசா, சாக்கோட்டை...

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சிகள் மீது புகார்கள் குவிகின்றன!

தொலைக் காட்சிகளில் பேய், பில்லி, சூன்யம், திகில், குரங்குக் கதைகள் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்பும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. சிறிதும் சமூகப் பொறுப்பின்றி அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற கொள்கைகளுக்கு எதிராக நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன இந்த தொலைக்காட்சிகள் பற்றி மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1850 புகார்கள் பார்வையாளர்களிடமிருந்து குவிந்துள்ளன. இதில் 1250 புகார்கள் இந்த மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பானவை. மற்றவை ஆபாசம், வன்முறை தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய புகார்கள். இது வரை ஆபாசம், வன்முறை பற்றிய புகார்கள் மட்டுமே அதிகம் குவிந்த நிலை மாறி, இப்போது மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்கள் முதல்முறையாக அதிகரித்துள்ளன. தொலைக்காட்சிகள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக ‘ஒளி பரப்புகள் உள்ளடக்கத்துக்கான புகார் கவுன்சில்’ (பிசிசிசி) என்ற அமைப்பு உள்ளது. மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகம் இந்த புகார்களை மேற்குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ‘பிசிசிசி’...

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

இந்தியாவிலேயே ஜாதிய மோதல்கள் நடப்பதில் இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்து விட்டது. இது தமிழகத்துக்கே அவமானம். தேசிய குற்றப் பதிவு ஆவணம் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) 2015ஆம் ஆண்டுக்கான  அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜாதிய மோதல்கள் நடப்பதில் முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் பீகாரும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் இடம் பிடித்துள்ளன. 2015இல் தமிழகத்தில் 426 ஜாதிய மோதல்கள் நடந்துள்ளன. உயிரிழந்தோர் 578 பேர். உ.பி.யில் நடந்த 724 மோதல்களில் உயிரிழந்தோர் 808;. பீகாரில் 258 மோதல்களில் உயிரிழந்தோர் 403; 2014ஆம் ஆண்டைவிட தமிழகத்தில் ஜாதிய மோதல் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2014இல் நடந்த 211 மோதல்களில் உயிரிழந்தோர் 257 பேர். தமிழர் சமூகத்தில் ஜாதிய வகுப்புவாத வெறியூட்டப்படுவது ஆபத்தானது என்று இது குறித்து ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ்...

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலம் : காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா?

விநாயகர் சிலை ஊர்வலத்தை, குறித்த நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்; இரசாயனம் பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்தின்போது மின் கம்பம் மற்றும் பாலத்தின்மீது மோதி சிலைகளை பாதிப்பு ஏற்படும் என்பதால், உயரமான சிலைகள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் திடீர் கோவில்கள் அமைத்தல் கூடாது. சிலை அமைப்பாளர்களின் பெயர், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்களை காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். அலைபேசியை அணைத்து வைக்காமல் இருக்க வேண்டும். காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க, கீற்று அல்லது துணியால் வேயப்பட்ட கொட்டகையாக இருக்கக் கூடாது. கல்நார் அல்லது இரும்பு தகடு பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கடலில் கரைக்க வேண்டும். ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும்....

மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்

பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும்...

‘பிள்ளையார் சுழி’ வந்த கதை

பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று – அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின் மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும் இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் – முழுமுதற் கடவுள் என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது. அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே, இடையில் வந்த பிள்ளையார் – முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா? அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் – பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு...

தூத்துக்குடியில் கழகம் சமூக நீதி பரப்புரை

27.08.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட தி.வி.க. சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப்பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை விநியோகித்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கினர் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகய்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

தபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை

வழக்கு : உயர்நீதிமன்றம் கெடு மதவெறியர்களால் குறிவைக்கப்பட்டு படுகொலை  செய்யப்பட்டவழக்குகளில் தடயவியல் ஆய்வுக்கான அறிக்கையை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையினரிடமிருந்து 8 வாரங்களுக்குள்ளாக பெற்று நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும் என்று மத்தியப் புலனாய்வுக் குழுவினருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று புனே நகரில் நடைப் பயிற்சியின்போது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பின் நிறுவனரும் பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை முறையாக செயல்பட்டு புலனாய்வு விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டறியவில்லை எனக் கூறி, 2014ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தபோல்கர் சுடப்பட்டதைப்போலவே, மகாராட்டிர மாநிலத்தில் மும்பை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைப் பயிற்சியின்போது சுடப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் 20.2.2015 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோன்றே கருநாடக மாநிலத்தில் 30.8.2015 அன்று ஹம்பி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், பேராசிரியரும் பகுத்தறிவாளருமாகிய எம்.எம்.கல்புர்கி, கருநாடக மாநிலத்தில் மைசூரு தார்வார்ட்...

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது. ஆனால், பெண்கள்...

விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்

விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை...

தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...

ஈழ ஏதிலியர் உரிமை: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 27 08 2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் திராவிடர் விடுதலைகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (இளம் தமிழகம்), பாரதி (த.தே.வி.இ.), அருண பாரதி (த.தே.பே), சேகர் (தொ.மு.இ.), வன்னி அரசு (வி.சி.), இயக்குனர் மு. களஞ்சியம், இயக்குநர் புகழேந்தி மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01092016 இதழ்

விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர்  துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...

இராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு

“செத்த மாடுகளை புதைக்க மாட்டோம்; பிணங்களை எரிக்க மாட்டோம்; சாக்கடைக் குழிக்குள் இறங்க மாட்டோம்” என்று குஜராத்தில் தலித் மக்கள் கிராமம் கிராமமாக நடத்தும் பயணம் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. ஜிக்மேஷ் மேவானி, சுபோத் பார்மர் எனும் இரண்டு தலித் இளைஞர்கள் இந்த புரட்சிக்கு தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். பயணத்தின் அடுத்த கட்டமாக ‘மனு சாஸ்திரம்’ என்ற பார்ப்பனிய கொடூர சட்டத்தை வழங்கிய ‘மனு’வின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் பல்லாயிரம் தலித் மக்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் திரண்டு ‘மனு’வின் உருவத்தை தீயிட்டு எரிக்கிறார்கள். இராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டிட வாயிலில் பார்ப்பன ‘மனு’வின் சிலை நிறுவப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற அலுவலகத்தில் ‘மனு’வின் சிலைக்கு எதிரே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை தலித் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி வரும் ஜிக்மேஷ் மேவானி, லக்னோவில் செய்தியாளர்களிடையே அறிவித்து, பார்ப்பனிய...

அந்த காலத்தில் பார்ப்பனர்களை திருமணத்துக்கு அழைப்பதில்லை

பார்ப்பானை வைத்துத் திருமணம் செய்வதெல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள்தான் பரவிற்று என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – 60, 65 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்து 500 பேர்களுக்கு மேலாக மொய் (அன்பளிப்பு) எழுதினார்கள். அவர்களுக்குத் திருப்பி மொய் எழுதுவதற்கு என்னைத்தான் என் வீட்டிலே அனுப்புவார்கள். அதனால் பல திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எல்லோரும் பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைப்பதில்லை. அப்படி திருமண வீட்டிற்குப் பார்ப்பான் வந்தால் பிச்சை வாங்குவதற்காகத்தான் அங்கு வருவான். அதுவும் உள்ளேகூட அழைப்பதில்லை. வெளியே ஒரு திண்ணையில் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகும்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டனா, பெரிய மனிதர்களாக இருந்தால் ஆளுக்கு 8 அணா, 1 ரூபாய் பிச்சையாய்க் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். கலியாணம் செய்து வைக்கப் பரியாரி (நாவிதன்) தான் வருவான். அவன்தான் மணமக்களை ஆசி கூறி வாழ்த்திச் செல்வான். அப்பொழுதெல்லாம் மணப்பெண்ணுக்கு யார்...

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...

பயணக் குழுவில் பங்கேற்ற தோழர்கள்

“நம்புங்கள் அறிவியலை; நம்பாதீர்கள் சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பட்டியல். திருப்பூர் பயணக் குழு 5 நாள் பங்கேற்றோர் : மணிமொழி – ஆனைமலை, நிர்மல் – கோவை,  திருப்பூர் : முத்துலட்சுமி, சத்தியமூர்த்தி, சங்கீதா, யாழ் இசை, மூர்த்தி, மாப்பிள்ளை சாமி (லெனின்), நீதிராசன், சு. துரைசாமி – திருப்பூர் கழகப் பொருளாளர், கிருஷ்ணன் – கோவை, பார்வதி – நூல்கள் விற்பனைக் குழு, பன்னீர் செல்வம் – சூலூர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோபி. வேலுச்சாமி, காவை. இளவரசன். 4 நாள் பங்கேற்றோர் : கதிர்வேல்-ஆனை மலை 3 நாள் பங்கேற்றோர் : முகில்ராசு (திருப்பூர்), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்) 2 நாள் பங்கேற்றோர் : சண்முகம் (பல்லடம்), கார்த்திகேயன் (பெங்களுர்), ராஜசிங்கம் (திருப்பூர்), தனபால், அகிலன். மயிலாடுதுறை பயணக் குழு 6...

‘ஜோக்கர்’ : சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்

ஜோக்கர் – தமிழ்த் திரைப்பட வரலாற்றில்  புதிய மைல் கல். ராஜு முருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகி யுள்ள இத்திரைப்படம், இன்றைய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார அவலங்களை சமரசமின்றி சாட்டையால் அடிக்கிறது. பயன் கருதாமல் சமுதாயத் தின் மீதான கவலையோடு போராடும் இயக்கங்களுக்கான படம் என்றே கூற வேண்டும். சாதி வெறிக்கு, மதவாதத்துக்கு எதிராகவும் இயற்கை வளச் சுரண்டல் களுக்கு எதிராகவும், மனித உரிமைக் காகவும் எந்த பொருள் வசதியும் இல்லாத இயக்கங்கள் போராடினாலும் சரி, விளக்கக் கூட்டங்களை நடத்தினாலும் சரி, துண்டறிக்கைகளை வழங்கினாலும் சரி, அதை கேலிப் பேசவும், ‘வேறு வேலை இல்லாத கூட்டம்’ என்று அலட்சியப் படுத்தவும் செய்யுமளவுக்கு சமூகத்தின் பொதுப் புத்தி சீழ் பிடித்து கிடக்கிறது. இந்த புறச் சூழல் எதிர்ப்பை புறந்தள்ளி, களத்தில் நிற்கும் இயக்கங்களுக்கு தன்னம்பிக்கையையும் உந்து சக்தியையும் தருகிறது ‘ஜோக்கர்’. அதுவே இப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்ச மாகும். ஜாதி-மத-ஓட்டு...

குஜராத்தில் தலித் மக்களின் புரட்சிக் குரல்! பார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்!

சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம், அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8...

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சிறைவாசிகளின் உரிமைகளை வலியுறுத்தும் கருத்தரங்கம் கடந்த 20ஆம் தேதி சென்னை இக்ஷா அரங்கில் நடைபெற்றது. இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்பாதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ. சவுந்தர்ராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பேசினர். இது குறித்து இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை : அண்ணா பிறந்த நாளின்போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயலாகும். ஆனால், வழக்குக் காரணத்தைக் காட்டி தமிழக அரசு இந்த பழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி...

வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 19.08.2016 மாலை 5:30 மணியளவில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் வருகின்ற 28, 29, 30, 31  தேதிகளில் நடைபெறவுள்ள பரப்புரைப் பயணம், விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வலைதளங் களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. சென்னை மாவட்ட பொறுப் பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25082016 இதழ்

தமிழீழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

ஆகஸ்டு 27இல் சென்னையில் தொடங்குகிறது தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் உரிமைகளுக்காக “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்யப் பட்டார். தலைமைக் குழு உறுப்பினர் களாக பெ. மணியரசன், கோவை கு. இராமகிருட்டிணன் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டமைப்பு சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியில் கூறியதாவது: இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்கு முறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களாகிய நமக்குண்டு என்ற அடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழீழ...

கழகத் தோழர்களே! சமூக செயல் பாட்டாளர்களே! கண்காணியுங்கள்!

உங்கள் ஊரில் வினாயகன் சிலைகள் அனுமதி பெறப்படாத இடங்களில் வைக்கப்பட் டிருக்கிறதா? உயர்நீதிமன்றம் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு களுக்கு எதிராக ‘பிளாஸ்ட் ஆப் பாரிஸ்’ சுட்ட களிமண்ணால் சிலைகள் செய்யப்பட் டிருக்கிறதா? வாகன விதிகளுக்கு எதிராக சரக்கு வாகனங் களில் ஆட்கள் கொண்டு வரப்படுகிறார்களா? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி அலறி, மாணவ மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் பொது மக்களின் அமைதி யான உறக்கத்துக்கும் ஊறு செய்கின்றார் களா? சட்ட மீறல், விதி மீறல் களை கண்காணியுங்கள்! காமிராக்களில் படம் பிடித்து முகநூலில் பரப்புங்கள்! உள்ளூர் காவல்துறைக்கு புகார் மனுக்களை எழுத்துப் பூர்வமாக வழங்குங்கள்! கவனம்; கவனம்; விரைந்து செயல்படுங்கள்! பெரியார் முழக்கம் 25082016 இதழ்

தூக்கிலிருந்து மீண்ட மக்கள் போராளி – ஏ.ஜி.கே. விடைபெற்றார்

தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் தலைவராக வாழ்ந்த அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கன் புதன்கிழமை (10.8.2016) மாலை முடிவெய்தினார். 60-களில் இன்றைய நாகப்பட்டினமான அன்றைய கீழத்தஞ்சையில் ஏ.ஜி.கே. அசலான மக்கள் தலைவராக இருந்தார். முதலில் திராவிடர் கழகம், பின்பு இடதுசாரி  இயக்கம் என இரண்டின் சாரத்தையும் தன்னுள் ஏந்திய அவர், வெற்றிகரமான  மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தார். அன்றைய கீழத் தஞ்சை முதலாளிகளுக்கு, நிலவுடைமையாளர்களுக்கு  அவர் ஒரு துர்சொப்பனம். ஒடுக்கப்பட்ட மக்களின் கூலி உயர்வுக் காகவும், சுயமரியாதைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிறைய. ஒரு முறை, ஏ.ஜி.கே. தாக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்து மக்கள் கொந்தளித்தனர். அவரைத் தாக்கியதாகச்  சொல்லப்பட்ட முதலாளியின் வீட்டுக்குள் புகுந்து வீட்டை  உடைத்து நொறுக்கினர். அந்த வீட்டிலிருந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த குழந்தை களுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, ஏ.ஜி.கே. மருத்துவமனையில் இருந்தார். காயமடைந்திருந்த அவர் சாகட்டும் என போலீஸார் காத்திருக்க, அதற்குள் அந்தணப்பேட்டையில் அந்தக்...

பரப்புரைப் பயணத்திலிருந்து…

 ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’  என்ற முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பயணம் குறித்த செய்தி தொகுப்பு. சென்னையிலிருந்து புறப்பட்ட பயணக் குழு, ஆகஸ்டு 6ஆம் தேதி தொடக்க விழாவை சென்னை இராயப்பேட்டையில் பொதுக் கூட்டமாக நடத்தி, 7ஆம் தேதி காலை புறப்பட்டது. முதல் நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் நிறைவு செய்து இரண்டாம் நாள் பயணத்தை நெமிலியில் நடத்தி முடித்து, காவேரிப்பாக்கம் வந்தவுடன், ‘இந்து முன்னணி’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல் துறை வேலூர் மாவட்டம் முழுதும் அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறை தடையைத் தொடர்ந்து சென்னை பரப்புரைக்குழுவினரும் வீதி நாடகக் குழு வினரும் சத்திய மங்கலம் பரப்புரைக் குழுவின ரோடு இணைந்து பரப்புரை செய்ய முடி வெடுத்து ஈரோடு பயணமாயினர். சென்னைக் குழுவைச் சேர்ந்த தோழர்களில் ஒரு பிரிவினர் ஆத்தூரில் தங்கி நிறைவு விழா நிகழ்ச்சிக்கான நன்கொடை திரட்டல்;...

பயணம் வெற்றி: மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள் மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க  சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது.  6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள்  திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்  ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை  நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி  நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள்.செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.115.  

சாகடிக்கப்பட்ட 370ஆவது பிரிவு

370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர்  இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு,  அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த  அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேல் மாநில அரசாங்கத்தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிடலாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த  இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை  அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் – காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால்,  370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதாரணமான அதிகாரங்களை மீண்டும்  மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால்...

இளம் பிள்ளை கூட்டத்தில்   ஜாதி வெறியர் காலித்தனம்

இளம் பிள்ளை கூட்டத்தில் ஜாதி வெறியர் காலித்தனம்

19-07-2016 முங்கப்பட்டியிலும் , 23-07-2016 இளம்பிள்ளை அருகேயுள்ள அழகப்பம்பாளையம் புதூரிலும் ‘திராவிடர் விடுதலைக் கழகம் இளம்பிள்ளை’ நடத்திய “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” எனும் தலைப்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் மோகன்ராஜ் வரவேற்புரையாற்ற ரமேசு, சந்திரசேகர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தோப்பூர் கண்ணன், கோபிநாத் சிற்றுரையாற்றினர். தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தி சிறப்புரையாற்றினார். அபுதூர் கூட்டத்தின் இறுதியில் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி ஜாதி வெறியர்கள் பேச்சாளரை நோக்கி குளிர்பான பாட்டிலை வீசி தாக்கினர் இதில் தோழர் மோகன்ராஜ் தலையில் பாட்டில் பலமாக தாக்கியது. தோழர் சிகிச்சை எடுத்து வருகின்றார். ஜாதி வெறியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி மோகன்ராஜ் வேளாண், கல்விக் கடனை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம் பேராவூரணி அருகில் ரெட்ட வயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும், கல்விக் கடனையும் விலக்கிக் கொள்ள வலியுறுத்தி...

‘ஈஷா’ ஜக்கி வாசுதேவ் ‘கிரிமினல்’ பின்னணி

2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ‘ஈஷா’ மய்யத்தின் ஜக்கி வாசுதேவ் உரையாற்ற  அழைக்கப்பட்டதை எதிர்த்து சேலம் நகர பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை – ‘ஜக்கி வாசுதேவ்’  மோசடிகளை கிழித்துக் காட்டுகிறது. இந்த செய்திகள் ‘இலஷ்மி நரசிம்மா’ என்ற மாத இதழில் (15.4.2011)  வெளிவந்துள்ளது. இத் துண்டறிக்கை, “யோக்கியன் வருகிறான்… சொம்பெடுத்து உள்ளே வையுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஈஷா மய்யத்தில் தங்களுடைய இரண்டு மகள்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு  சன்யாசியக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மய்யத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்றும் கோவை வடவள்ளியைச் சார்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் , யார் என்பதை விளக்குகிறது இந்தத் துண்டறிக்கை. “சேலம் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30.9.2011 முதல் 2.10-2011 வரை ஈஷா யோகா என்கிற பெயரில் தியானலிங்கம் என்கிற மதப் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ணமூர்த்தி’...

ஈஷா மையத்தில் குழந்தைகள் சித்திரவதை: அதிர்ச்சித் தகவல்கள்

ஈஷா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறு அன்று ஈஷா யோகாமையம் குழந்தைகளின் சித்தரவதைக் கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனது மகன்களை மீட்டு வந்து விட்டதாகவும், மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில்  இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம்  குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகள்  எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது  மூத்த மகனை ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம்....

என்னை சுய ஜாதிக்குள் அடைத்து விடாதீர்கள்! ‘நான் ஜாதியற்றவன்’ – ப.ரஞ்சித்

பெரியாரை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்று சிலர் வைக்கும் குற்றச் சாட்டை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அம்பேத்கர் குறித்த உரையாடல் எதுவும் இங்கு நிகழவில்லை. இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி. ராஜாவையும் இங்கு யாருக்கும் தெரியாது. ஆனால், பெரியார் தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறிமுகமானவர். யாருக்கும் தெரியாதவர்களை ஒரு போட்டோவாகவாவது  அறிமுகப்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன். அதன் விளைவே  இவர்களின் படங்களை வைத்தது. என் தாத்தா ஒரு  பெரியாரிஸ்ட்தான் . பெரியாரை காண்பிக்கக்கூடாது என்று ஒருபோதும் எண்ணியதில்லை. என் அடுத்த ஸ்கிரிப்டான  ‘சார்பட்டா பரம்பரை’யில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை பெரியாரிஸ்டாகத்தான் எழுதியிருக்கிறேன். படம் வரும்போது தெரியும். எனக்கு பெரியாரைப் பிடிக்கும் என்று எல்லா இடங்களிலும் தொடர்ந்து  சொல்கிறேன். எனக்கு  திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் பெரியார் மீது ஒரு விமர்சனமும் கிடையாது. சரியான வாய்ப்பு வரும் போது இதைப் புரிந்து  கொள்வார்கள் என நம்புகிறேன். சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப்...

நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை!

பரப்புரைப் பயணத்தில் கழக சார்பில் மக்களிடம் வழங்கப்படும்  துண்டறிக்கை. இப்படி ஒரு கருத்தை நமது மக்களிடம் சொல்றதுக்கு நாங்க ஊர் ஊராவந்துகிட்டு இருக்கோம். ஏன்? நமது மக்கள் இன்னமும் சில நம்பிக்கைகளை நம்பிகிட்டு குழம்பி தப்பு தப்பான முடிவுகளுக்கு  வந்துடாறங்களே… அப்படிங்குற கவலை தான்! இதைப் படியுங்க… சாமியார்கள் அந்த காலத்துல சாமியார்கள் வீடுவாசலை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுத்துனாங்க. இப்ப சாமியார்கள் சொகுசு கார்ல – கோடி கோடியா பணத்துல புரளுராங்க… மக்கள ஏமாத்திட்டு சிறையில கம்பி எண்ணுற சாமியார்கள் ஏராளம். இதுக்குப் பிறகு இவங்களை நம்பலாமா? நமது சகோதரிகள்  நமது சகோதரிகள் இப்போ கல்லூரிகளுக்குப் போய் நல்லா படிக்குறாங்க… வேலைக்குப் போய் சம்பளம் வாங்குறாங்க… ஸ்கூட்டர், கார் ஓட்டுறாங்க… ஆனால், நமது தாத்தா பாட்டி காலத்துல நமது சகோதரிகளை படிக்கக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாதுன்னு தடுத்து வச்சாங்க… இப்ப கருத்தை மாத்திகிட்டோம்ல… இது தான் அறிவியல். பேய்-பிசாசு பயம் இன்னமும்...

உண்ணாவிரதத்தில் உயிர் நீத்த ‘கோமாதா’க்கள்!

‘வடக்கிருந்து உயிர் நீத்தல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. உணவு உறக்கமின்றி அப்படியே ‘உயிர் விடுதல்’; வேதாந்திகளைக் கேட்டால் இது ‘ஆன்மீகம்’ என்பார்கள். இப்படி உயிர் விடுவோர் மீது தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்று வழக்குகள் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ‘ஒரு நாள் உண்ணாவிரதம்’, ‘அடையாள உண்ணாவிரதம்’ எல்லாம் வந்து விட்டன. ‘சாகும் வரை உண்ணாவிரதம்’கூட அவ்வப்போது நடக்கிறது. அதாவது இரண்டு நாள் கழித்து காவல்துறை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முன்பெல்லாம் வியாழக்கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை என்று வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருப்பது  உண்டு. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விரதம். இப்போது அந்த ‘விரதம்’ புதிய உருமாற்றம் பெற்று விட்டது. அதாவது அந்த நாள்களில் ‘அசைவம்’ சாப்பிடுதல் கூடாது; மற்றபடி சைவ சாப்பாட்டை மூச்சுமுட்ட ஒரு பிடி பிடிக்கலாம். இப்படி சாப்பிடாமல் இருப்பது அகிம்சை போராட்டம் என்கிறார்கள். சொன்னால் கோபிக்கக் கூடாது. உண்மையில்...

பரப்புரை தொடங்கியது

“நம்புங்கள்… அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை”என்ற முழக்கத்தை முன் வைத்து அச்சம் பேக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம், ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அன்று மாலை இலாயிட்ஸ் சாலையில் நடந்ததொடக்க விழா, சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கியது. கழகத் தோழர் பிரகாஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகலவன் (வி.சி.), செல்லப்பா (வி.சி. மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி 45 நிமிடம் மூடநம்பிக்கைகளை தோலுரித்து எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி தமிழ்ச் செல்வி -மூடநம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ரூ.8000-த்துக்கானகாசோலையையும் கழக வெளியீடுகளையும் பரிசாக வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் ஸ்டாலினுக்கு ரூ.4000-த்துக்கான காசோலையை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி சிபியாவுக்கு ரூ.2000-த்துக்கான காசோலையை...

வானியல் அறிவு: அன்றும் இன்றும்

இதுவொரு நுணுக்கமான விஷயம். நமது முன்னோர்கள் வானத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். தினசரி மாறும் காட்சியையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்பு கண்ட காட்சியே மீண்டும் தோன்றுவதையும் அவர்கள் ஆச்சரியத்தோடு நோக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து நாள்காட்டி (calendar) ஒன்றை உருவாக்கவும் அவர்களால் முடிந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஒரு நீள் வட்டப் பாதையில் (Ecliptic) சுற்றி வருகிறது. இதற்கு அது 12 மாதங்களை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கான காலம் 12 மாதங்கள் என்பதை அறிந்திருந்தனர். சந்திரனைப் பொறுத்த  வரை பிரச்சினை இல்லை. இதே  தளத்தில் அதுதான் பூமியைச் சுற்றி வருகிறது. இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் 27 நாட்கள். சூரியனை பூமி சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை ஒட்டியுள்ள ஒரு பகுதியைத்தான் zodiac என்கிறார்கள். ‘இது நாமே கற்பிதம் செய்து கொள்கிற பகுதி’ (lntroducingAstronomy-j.B.Sidgwick ) என்கிறார்கள்...

கோபியில் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோபியில் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பாக மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து 8.7.2016 அன்று  மாலை 5 மணியளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, சிவானந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் நாத்திக ஜோதி, வேணு கோபால், சண்முகப் பிரியன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி (மாவட்ட பொருளாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04082016 இதழ்

விடுதலை இராசேந்திரன் மீதுகாவல்துறை வழக்கு

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மீது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மயிலாடு துறையில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சுமார் ஓராண்டுக்குப் பிறகு காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. “தந்தை பெரியாரை யார், எதற்காக எதிர்க்கிறார்கள்?” என்ற தலைப்பில் அப்பொதுக் கூட்டம் நடந்தது. இரு பிரிவினரிடையே வன்முறையை  தூண்டும் விதமாக பேசியதாக மயிலாடுதுறை காவல்துறை  இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 153 (பி), 504 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இவை பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளாகும். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் துரை. அருண், உயர்நீதிமன்றத்தில் விடுதலை இராசேந்திரன் சார்பாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த 28ஆம் தேதி மனு  விசாரணைக்கு வந்தது. “ஒரு வருடம் கழித்து, இப்போது  வழக்குப் பதிவு செய்வது ஏன்? இந்த பேச்சுக் குறித்து எவரிடமிருந்தும் புகாரும் வரவில்லை. இரு தரப்புக்கிடையே மோதல் உருவாகும் சூழலில்...

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக பேச்சுப் போட்டி, இராயப்பேட்டை வி.எம். தெருவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 24.7.2016 காலை 10 மணிக்கு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார். 􀁏 பெரியாரும் அம்பேத்கரும் ஏன் இன்று தேவை? 􀁏 சமத்துவ மானுடம் அடைவதற்கு அடிப்படை தடையாக இருப்பது ஜாதியா? (அ) மதமா? 􀁏 இன்றைய கல்வி முறையில் உண்மையான நோக்கம் மானுட மேன்மையா? (அ) பொருளியல் மதிப்புகளா? 􀁏 பாலின ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைவது தனி மனித ஒழுக்கச் சிதைவா? (அ) கலாச்சார கட்டமைப்பா? – என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நடுவர்களாக பேராசிரியர் அ. பெரியார், முனைவர் விநாயகம், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் க. ஜெயபிரகாசு, செந்தில் (குனுடு), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), விழுப்புரம் அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 30 கல்லூரி மாணவியர் போட்டியில்...

சேனல் எடமருகுவிடம் தோற்றோடிய பார்ப்பன பண்டிதர்

2012 மார்ச் 5ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மும்பை புற நகர் பகுதியான ‘இர்லா’வில் வேளாங்கண்ணி  மாதா தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் வாயிலில் ஏசு சிலுவையில் அறையப்படும் சிலை ஒன்று உண்டு. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த சிலுவை சிலையில் கால் பகுதியிலிருந்து தண்ணீர் சொட்டு வதை பார்த்தார். உடனே கூட்டத்தைக்  கூட்டி சிலையின் காலடியில் தண்ணீர் வடிகிறது என் கூறினார். அந்தப் பெண் கிறிஸ்துவப் பெண் அல்ல. ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளத் தொடங்கி விட்டது. ‘ஏசு சிலையின்  அற்புதம்’ என்று பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது! (இதே போல் நாடு முழுதும் ஒருநாள் பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. பின்னர் அறிவியல் வழியில் ‘அது அதிசயம் அல்ல’ என்று நிரூபிக்கப்பட்டது. (பால் குடித்த விநாயகர், அதை எப்போது சிறுநீராக வெளியேற்றினார் என்ற பகுத்தறிவாளர் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.) ‘ஏசு சிலையின் காலடியில் தண்ணீர்  சொட்டுகிறது’...

இருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்

பழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலைதூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை...