20 நாள் பரப்புரைப் பயணம் புதுவையில் நிறைவடைந்தது செப்.11 இல் கிராமம் கிராமமாக பரப்புரை தொடங்குகிறது
திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி – தீண் டாமை – பார்ப்பனியம் – பன்னாட்டு பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக 20 மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் 20 நாட்கள் தொடர்ந்து நடத்திய முதல் கட்டப் பரப்புரை இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் இரண்டாமாண்டு தொடக்க நாளான ஆகஸ்டு 12 இல் புதுவையில் நிறைவு செய்தது. இரண்டாம் கட்டமாக மாவட்டங்களை மய்யமாக்கி கிராமம் கிராமமாக மக்களை சந்திக்கும் அடுத்தக்கட்ட பரப்புரை இயக்கத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுவை நிறைவு விழாவில் அறிவித்தார். புதுவை ஜீவா சதுக்கத்தில் பரப்புரைப் பயண நிறைவு விழா நிகழ்வுகள் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கின. தோழர்கள் உரைகளைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயண நிறைவையொட்டி கழக சார்பில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந் தார். தீர்மானங்கள் விவரம்: ஜாதி அமைப்பு முறை ஒழிவதற்கு ஒரே ஜாதிக்குள் நடக்கும்...
